Monday 14 June 2010

விஜய் இலங்கை தமிழரை வைத்து அரசியல் நடாத்துவாரா?


இந்தியாவைப் பொறுத்தவரை சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவது சாதாரணமாகிவிட்ட ஒன்று. அதே போன்றுதான் இலங்கைத் தமிழர்களை வைத்து அரசியல் நடத்தலாம் என்பதும் இந்திய அரசியல்வாதிகள் நமக்கு கற்றுத் தந்த பாடங்கள்.

பல காலமாக விஜய்  - சீமான்  இருவரும் சேர்ந்து ஒரு படம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட விடயம் இப்போது உறுதியாகி இருக்கின்றது. விஜய் காவல்க்காரன் படத்தில் நடித்து வருகின்றார். சீமான் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு குரல் கொடுப்பதாக சொல்லிக்கொண்டு அரசியலிலே தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இது இவ்வாறிருக்க சீமான் விஜயின் படத்தை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றார்.

இந்திய அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களை வைத்தே தமது அரசியல் நாடகங்களை நடாத்தி அரசியலில் நிலைத்து இருக்கக் கற்றுக்கொண்டு விட்டனர். இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுப்பது போன்று நடித்துக் கொண்டிருப்பார்கள், தமிழீழம் என்றெல்லாம் ஏதோ வீர வசனங்கள் எல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் தமிழர்கள் இக்கட்டான நிலையில் இருக்கின்றபோது அவர்களது காதுகள் செவிடாகிவிடும், கண்கள் குருடாகிவிடும், எதையும் அறியாதவர்களாக இருப்பார்கள்.

சீமான் அன்று இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும்போதே நான் நினைத்ததுதான் இது சீமானின் அரசியலுக்கான பலமான அத்திபாரம் இடப்படுகிறது என்று அது இன்று உண்மையாகி இருக்கின்றது. எல்லா அரசியல்வாதிகளும் போலல்லாமல் உண்மையான தமிழ் உணர்வாளராக இருப்பாரா சீமான்???????

மறுபுறத்திலே விஜய் அரசியலுக்கு வருகின்ற கதை இருக்கின்றது. விஜய் அரசியலுக்கு வருகின்றபோது ஏனைய அரசியல்வாதிகள் போன்று இலங்கைத் தமிழர்களை வைத்து அரசியல் நடாத்த கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அரசியலில் நிலைத்திருக்க முடியும்.

விஜய் அரசியலுக்கு வருகின்றபோது தனது இரசிகர்கள் பலரை இழக்கவேண்டி வரும். அவரது திரைத்துறையும் பாதிக்கப்படலாம்.

விஜய் - சீமான் இணைந்திருப்பது இருவரது அரசியல் எதிர் காலத்துக்கு இன்னும் பலம் சேர்க்கும் என்று நம்பலாம்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

5 comments: on "விஜய் இலங்கை தமிழரை வைத்து அரசியல் நடாத்துவாரா?"

Anonymous said...

நீங்கள் கூறுவது உண்மை தான். நடிகர் விவேக் ஒப்ராய்யை பாருங்கள் யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவுகிறார். அவர்களை மகிழ்விக்கிறார். ஆனால் சீமான் இலங்கை தமிழர்களை மேலும் துன்பத்துக்குள் தள்ளவே முயற்சிக்கின்றார்.

AkashSankar said...

எந்த துறை என்பது முக்கியமல்ல என்ன செய்வார்கள் என்பதே முக்கியம்... பொறுத்திருந்து பார்போம்...

Admin said...

//பெயரில்லா கூறியது...
நீங்கள் கூறுவது உண்மை தான். நடிகர் விவேக் ஒப்ராய்யை பாருங்கள் யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவுகிறார். அவர்களை மகிழ்விக்கிறார். ஆனால் சீமான் இலங்கை தமிழர்களை மேலும் துன்பத்துக்குள் தள்ளவே முயற்சிக்கின்றார்.//

உங்கள் கருத்துக்களில் 100 % உண்மை இருக்கிறது. கருத்துக்களுக்கு நன்றிகள்.

Admin said...

// ராசராசசோழன் கூறியது...
எந்த துறை என்பது முக்கியமல்ல என்ன செய்வார்கள் என்பதே முக்கியம்... பொறுத்திருந்து பார்போம்...//

ம்.. பொறுத்திருந்து பார்ப்போம்... இலங்கைத் தமிழர்களை வைத்து அரசியல் நடாத்தாமல் விட்டால் போதும்.

jasmin said...

நல்லது அனால் இந்த செய்தியில் இலங்கை பிரச்சனையை வைத்து இந்தியாவில் அரசியலில் நிலைத்து இருப்பதாக சொல்ல பட்டுள்ளது அது முற்றிலும் தவறானது நடந்த இந்திய தர்தலில் இலங்கைக்காக பேசியவர்களே சகலத்தையும் இழந்தது தரியாதா சீமானுக்கலாம் வேலை இலை இலங்கை தமிழர்களை துன்பபடுத்துவதை விட விவேக் ஒபேறாய் மாதிரி உதவி செய்வார்களா???? முடியாது அதுதான் தமிழன்

Post a Comment