Friday 30 November 2012

மட்டக்களப்பு வாவட்ட HNDA பட்டதாரி பயிலுனர்கள் தாம் திணைக்களங்களில் இணைக்கப்படாமை தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் HNDA பட்டதாரிப் பயிலுனர்களை திணைக்களங்களில் இணைத்தக் கொள்ளப்படாமை தொடர்பாக மடமக்களப்பு  HNDA பட்டதாரிகள் கெளரவ ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கம், அரசியல்வாதிகளுக்கும் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருக்கின்றனர். 
அக்கடித்தில் குறிப்பிடப்பட்டள்ள விடயங்கள்..
மட்டக்களப்பு மாவட்ட HNDA பட்டதாரி பயிலுனர்கள் அரச திணைக்களங்களுக்கு உள்வாங்கப்படாமை
மேற்படி விடயம் தொடர்பாக எமது மாவட்டத்தில் சுமார் 115 HNDA பட்டதாரி, பட்டதாரிப் பயிலுனர்களாக கடடமையாற்றி வருகின்றோம். எமக்கு தொடர்ச்சியாக விளைவிக்கப்பட்டு வருகின்ற அநீதிகளை தங்களின் மேலான கவனத்திற்கு இத்தால் கொண்டு வருவதன் மூலம் மன உழைச்சலுடன் கூடிய எமது நிலைக்கு தீர்க்கமான முடிவு கிட்டுமென எதிர்பார்க்கின்றோம்.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 46/90 - 111 சுற்ற நிருபப்படி HNDA  பட்டதாரிகள் B.Com பட்டத்திற்கு சமமான பட்டதாரிகள் என அங்கிகரித்து இதுவரை காலமும் பல நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கிகரிக்கப்பட்ட பட்டம் பெற்றசர்கள் எனும் உரித்துடையவர்களாக இருக்கின்றோம். இருப்பினும் சில அதிகாரிகள் தெளிவின்மை காரணமாக எமது இரண்டு வருட படிப்பினையும் மீதி இரண்டு வருட திணைக்கள பயிற்சியுடனான படிப்பினையும் உதாசினம் செய்வதுபோல் நடந்துகொள்வது மனவருத்தத்தினைத் தருகின்றது. மேலும் எமக்கு இளைக்கப்பட்ட அநீதிகளாக..
01. கணக்கியல் துறைசார் பட்டம் பெற்ற எம்மால் துறைசார் பயிற்சிகள் (பயிலுனர்களாக நியமிக்கப்பட்ட பின்) பெறப்பட்டு திணைக்களங்களுக்கு பெயர்கள் வழங்கப்பட்டிருந்தன தற்போது HNDA பட்டதாரி பயிலுனர் அனைவரின் பெயர்கள் மட்டும் வெட்டப்பட்டு விளம்பரப் பலகைகளில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
02. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் இவ்விடயம் இவ்வாறு இடம்பெற்றுள்ளது. வேறு மாவட்டங்களில் முற்றிலும் முரணாக காணப்படுவதுடன் திணைக்களங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு தெரிவுகளும் இடம்பெற்று எமது சக பட்டதாரிகள் வேறு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
03. குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் (30.11.2012) திணைக்களங்களுக்கான தெரிவுகள் அடங்கிய ஆவணம் தயார் செய்ய வேண்டும் என்பதால் எம்மை வெட்டிய இடங்களுக்கு புதியவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது (நாங்கள் பட்டதாரியாக வெளியேறிய திகதிக்குப் பின்னர் வெளியேறிய பட்டதாரிகளின் பெயர்கள்)
04. கடந்த 28.11.2012 ம் திகதி வெளியாகிய பத்திரிகையில் திணைக்களங்களுக்கள் உள்வாங்கப்படாதவர்கள் வெளி மாவட்டங்களுக்க போக வேண்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் எமது நிலை என்ன? இது திட்டமிட்டு செய்யப்படும் சதியா என வலுப்பெறுகின்றது.
05. இவ்வாறான சூழ்நிலையில் பயிலுனர்களாக கடமை புரியும்போது எமக்கு ஏற்படுகின்ற மன உழைச்சல்கள், தாக்கங்கள் சொல்லி மாள முடியாது. மற்றும் தற்போது  HNDA படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் பயிற்சி நெறியினைத் தொடர்வதா எனும் ஐயப்பாட்டில் இருப்பதுடன் இவ்விடயத்தில் அவதானிப்புடன் இருக்கின்றனர்.
06. தாங்கள் மற்றும் அனைத்து உயர் அதிகாரிகளும் அறிந்த விடயமே HNDA பட்டதாரிகளுக்கு அரச நிதி நடவடிக்கைகள் நிர்வாக நடவடிக்கையில் உள்ள ஈடுபாடுகள், யாராலும் மறுக்கவொ, மறைக்கவோ முடியாது. இதற்கு ஆதாரமாக பல கணக்காய்வாளர்கள், கணக்காளர்களாக, உயர் அதிகாரிகளாக பதவி வகிக்கின்றனர்.
எனவே எமக்கும் ஏனைய மாவட்டத்தில் இடம்பெறும் திணைக்களங்களுக்கான நியமனம்போல் எமது படிப்பிற்கு மதிப்பளித்து நியமனங்கள் வழங்கப்படுவதையும் எதிர்வரும் காலங்களில் பிரச்சினைகள் வராதவண்ணம் நடவடிக்கை எடுக்கும்படியும் தாழ்மையுடன் உருக்கமாக வேண்டி நிற்கின்றோம். 
இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுளள்து.
read more...

Thursday 29 November 2012

மட்டக்களப்பில் தொடரும் பட்டதாரிகள் பிரச்சினையும் அதிகாரிகளின் அட்டுழியங்களும்

 (தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதனால் மீண்டும் பதிவிடுகிறேன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களை திணைக்களங்களுக்கு நியமிப்பது தொடர்பில் பல குளறுபடிகள் இடம்பெற்று வருவதாக பட்டதாரிப் பயிலுனர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இப்போது 1000 க்கு மேற்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இது ஒரு புறமிருக்க பட்டதாரிப் பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட உயர் தேசியக் கணக்கியல் பட்டதாரிகள் (HNDA) புறக்கணிக்கப்பட்டு வருவதாக (HNDA) பட்டதாரிகள் குற்றம் சுமத்துகின்றனர். நியமனம் வழங்கப்பட்டு ஓரிரு தினங்களில் இடை நிறத்தப்பட்டு பின்னர்  நான்கு நாட்களின் பின்னர் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 

இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டதன் பின்னர் வேலையில் இருந்து நிறுத்திய நாட்களுக்குரிய சம்பளம் சில பிரதேச செயலகங்களில் வழங்கப்படவில்லை ஆனால் பல பிரதேச செயலகங்களில் வழங்கப்பட்டுள்ளன. ஒரு பிரதேச செயலகத்திற்கு ஒரு நியதியா? 

அதே போன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் (HNDA) பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படவில்லை. தொடர்ந்து ஏனைய திணைக்களங்களுக்கும் (HNDA) பட்டதாரிகள் பிரதேச செயலகங்களால் அனுப்பப்படவில்லை. ஒரு சில பிரதேச செயலகங்களால் (HNDA) பட்டதாரிகளை தெரிவு செய்து அனுப்பியிருந்தும் திணைக்களங்கள் திணைக்களங்கள் (HNDA) பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள முடியாது என்று திருப்பியனுப்பி இருக்கின்றது.

இவ்விடயங்கள் தொடர்பாக சில அதிகாரிகள் கேட்கின்றனர் (HNDA) பட்டத்துக்கு சமமானதா? சமனானது என்பதற்கான சுற்றறிக்கையை கொண்டு வாருங்கள் என்று சொல்கின்றனர். இவ்விடயங்கள் தெரியாத அதிகாரிகள் இவ்விடயங்களை தெரிந்தாவது வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே நடைபெறுகின்றன. ஏனைய மாவட்டங்களில் (HNDA) பட்டதாரிகள் திணைக்களங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் சில உயர் அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட நலனுக்காக இவ்வாறு செயற்படுவதாக சொல்லப்படுகின்றது.

(HNDA) என்பது நான்கு வருடங்கள் மிகவும் கஸ்ரப்பட்டு படிக்க வேண்டிய ஒரு கற்கைநெறி என்பது இந்த அதிகாரிகளுக்கு எங்கே தெரியப் போகின்றது. கடந்த காலங்களில் (HNDA) பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டதையும் இப்போது வெளி மாவட்டங்களில் (HNDA) பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படுவதனையும் இந்த அதிகாரிகள் தெரியாமலா இருக்கின்றனர்.

(HNDA) பட்டதாரிகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவதற்குரிய ஏற்பர்டுகளாக இது அமையுமாக இருந்தால் இவ் அதிகாரிகளுக்கு எதிராக (HNDA) பட்டதாரிகள் வீதியில் இறங்கி போராடவும் தயங்கப்போவதில்லை. 

மறு புறத்தில் இவ்வாறு (HNDA) பட்டதாரிகள் இழிவாக நடாத்தப்படுகின்ற செயற்பாடுகள் இடம்பெற்று வரும் வேளையில் உயர் தொழில்நுட்ப நிறுவனத்திற்கென பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றது. இக் கட்டடம் தேவையா? இதன் மூலம் எத்தனை மாணவர்களின் எதிர்காலத்தை இல்லாமல் செய்ய திட்டமிடப் படுகின்றதா? 

இப்படி (HNDA) பட்டதாரிகள் இழிவாக நடாத்தப்படுவார்கள் என்று தெரிந்திருந்தால் நான்கு வருடங்களை வீணடித்திருக்க வேண்டிய அவசியமில்லை வேறு கல்வியைத் தொடர்ந்திருக்க முடியும் இவ்விடயம் தொடர்பில் அரசியல்வாதிகள் மெளனம் சாதிப்பது ஏன்?

Syllabus - 1st Year

1st Semester
1. Fundamentals of Financial Accounting
2. Business Mathematics
3. Commercial Awareness
4. Introduction to Computer
5. Business Communication - i
2nd Semester
1. Intermediate Financial Accounting
2. Statistical Analysis for Management
3. Micro and Macro Economics
4. Business Communication - ii
5. Computer Applications

Syllabus - 2nd Year

1st Semester
1. Advanced Financial Accounting
2. Operation Management
3. Principle of Auditing & Taxation
4. Database Management Systems & Data Analysis
5. Business Communication - iii
2nd Semester
1. Cost and Management Accounting
2. Computer Application for Accounting
3. Marketing Management
4. Business Communication - iv
5. Project Management Tools & Programming

Syllabus - 3rd Year

1st Semester
1. Advanced Management Accounting
2. Financial Reporting
3. Business Law
4. Business System - I
2nd Semester
1. Advanced Financial Reporting
2. Corporate Law
3. Organizational Behavior and Human Resources Management
4. Business System - II

Syllabus - 4th Year

1st Semester
1. Financial Management
2. Strategic Management
3. Advanced Taxation
4. Computer based Accounting
2nd Semester
1. Strategic Management Accounting
2. Financial Statement Analysis
3. Strategic Management Financial
4. Advanced Auditing & Assurance

HNDA B.com க்கு சமனானது என்பதனை காட்டும் சுற்றறிக்கை




2008 B COM - Circular 46 1990(e) III from Priyal Kulathilaka

புதிதாக அமைக்கப்படும் கட்டடம்

 பட்டதாரிகள் ஒன்றியம்


read more...

Tuesday 27 November 2012

கல்லறைகளில் புதைக்கப்பட்ட மாவீரர்களின் கனவுகள்


 இன்று தமிழர்களால் பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் மாவீரர்நாள். ஈழம் விடுதலை என்ற கோசங்களுக்கு அப்பால் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீர்களின் கனவுகளையுப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

நாம் ஈழம் விடுதலை என்கின்ற என்கின்ற கோசத்தில் பல ஆயிரக் கணக்கான போராளிகளை இழந்திருக்கின்றோம். அவர்களுக்கு மாவீரர்கள் எனும் பட்டம் மட்டுமே வழங்கியிருக்கின்றோம். அவர்களின் கனவுகள் இலட்சியங்கள் பற்றியும். அவர்களின் குடும்பங்கள் பற்றியும் யாராவது சிந்தித்திருக்கின்றோமா? 

உணர்ச்சி வார்த்தைகளால் உந்தப்பட்டு ஈழம் கிடைக்கும் என்ற கனவோடு தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த அந்த மாவீரர்களின் குடும்பங்கள், மனைவி பிள்ளைகள் இன்று நடுத்தெருவில். மாவீரர்நாளில் வீர வசனங்கள் பேசுகின்றவர்கள் இக் குடும்பங்கள் பற்றி சிந்தித்திருக்கின்றார்களா?

வெறுமனே வீரப் பேச்சுக்களைப் பேசிப் பேசியே உசுப்பேற்றி மாவீர்களாக மடிய வைத்த தமிழ் அரசியல்வாதிகள் யாராவது மாவீரர் குடும்பங்கள் பற்றி சிந்தித்தார்களா?

அன்று வீர மரணமடைந்த அந்த மாவீரர்களின் மனதிலே ஈழம் கிடைக்கும் என்கின்ற உணர்வி விதைக்கப்பட்டிருந்தது. அவர்களின் உயிர் மூச்சு ஈழம் பெறுவதாகவே இருந்தது. தமது மனைவி பிள்ளைகள் குடும்பத்தை மறந்து ஈழம் என்ற இலட்சியத்திற்காகப் போராடினார்கள்.

உண்மையில் மாவீரர்களுக்கு நாம் தலை வணங்க வேண்டும். அவர்கள் இலட்சியத்திற்காக இன்னுயிர்களை மாய்த்தவர்கள். அவர்களின் உயிர் பிரியும்போது ஈழம் மலரும் எனும் கனவோடு அவர்களின் உயிர் பிரிந்திருக்கும். இது ஒரு புறமிருக்க எதற்காகப் போராடுகின்றோம் என்று தெரியாமலே உயிரை மாய்த்த போராளிகள் பலர்.

ஆனால் அவர்கள் உணரவில்லை இலங்கையில் தனி ஈழம், தமிழர்களுக்கான தனி ஒரு நாடு சாத்தியமில்லை இலங்கையில் தமிழீழம் என்பது அடைய முடியாத இலக்கு என்பதை. நான் தனி ஈழத்தை விமர்சிக்கின்றேன் என்று என்னைத் திட்டுவீர்கள். இலங்கையில் தனி ஈழம் அடைய முடியாத இலக்கு என்பதனை பலரும் உணர்ந்திருக்கின்றனர். இலங்கையில் தமிழீழம் என்பது அடைய முடியாத இலக்காகவே இருக்கப் போகின்றது.

ஈழம் மலரும், முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம் என்பதும், அரசியல் சுகபோகங்களக்காக தமிழ் பிரதேசங்களில் மாவீரர் தின சுவரொட்டிகளை ஒட்டுவதும் மீண்டும் தமிழர்களை அழிவுப் பாதை நோக்கி கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.

தமிழர் பிரதேசங்களிளே மாவீரர் தின சுவரொட்டிகளை ஒட்டியிருப்பதனால் என்ன நடக்கப்போகின்றது? சுற்றி வளைப்புக்கள் கைதுகள் இடம்பெறப்போகின்றது. இதனால் சித்திரவதைகளை அனுபவிக்கப் போவது அப்பாவி தமிழ் இளைஞர்களே.

ஏதோ ஒரு வகையில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். மீண்டும் மக்களை உசுப்பேற்றி பலிக்கடாவாக்க யாரும் முயற்சி செய்யாதீர்கள். இன்னும் பல ஆயிரக் கணக்கான மாவீரர்களை உருவாக்கி அவர்களின் னவுகளையும் கல்லறைகளில் புதைக்க நினைக்காதீர்கள்




read more...

Monday 26 November 2012

ஈழத்திலிருந்து சீமானிடம் சில கேள்விகள்

சீமான் அவர்கள் மாவீரர் தினத்தை முன்னிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றார். ஈழத் தமிழருக்காக தனது இன்னயிரைத் தியாகம் செய்யப் போகின்றாராம். இவரின் இக் கூற்றைப் பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகின்றது.

சீமான் அவர்களுக்கு இலங்கை தமிழ் மக்கள் மீது இருக்கின்ற அக்கறை தமழீழம் பெறுவது தொடர்பாக அவரின் ஆதங்கம் என்பவற்றைப் பார்க்கின்றபோது எனக்குள்ளே சில கேள்விகளை நான் அவ்வப்போது கேட்டபதுண்டு.

ஆரம்பகாலங்களின் சீமான் அவர்களின் வீர வசனங்களால், பேச்சுக்களாலும் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன். தமிழர்களுக்கு கூடவே பிறந்த ஒரு குணமிருக்கின்றது. வீரவசனங்களைப் பேசினால் உசப்பேறி விடுவார்கள் உயிரையும் விடத் தயங்கமாட்டார்கள். அதே போன்றுதான் சீமான் அவர்களின் பேச்சில் மயங்கியவன் நான். பின்னர் போகப்போக அவரது பம்மாத்தக்களையும் பகடமணிகளையும் புரிந்துகொண்டேன்.

சீமான் அவர்களுக்கு இலங்கை தமிழ் மக்கள் மீதான அக்கறையும், தமிழீழம் எனும் உயிர் மூச்சும் எப்போது உருவானது. இந்தியாவிலே இருந்து வீர வசனங்களைப்பேசி இலங்கைத் தமிழர்களைச் சூடேற்றி இலங்கை தமிழர்களை அழிக்க நினைக்கும் இந்தச் சீமானுக்கு இப்போதுதான் அக்கறை வந்ததா?

விடுதலைப் போராட்டம் என்பது இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டதல்ல பல தசாப்தங்களையும் பல உயிர்களையும் பலி கொண்டுள்ளது. இவ்வளவு காலமும் இந்தச் சீமான் எங்கே இருந்தார். 

இந்தியாவில் இருந்து வீரம் பேசுவதைவிட களத்திலே நின்று போராடியிருந்தால் தெரிந்திருக்கம் உயிரின் வலி. உண்மையில் தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் நேரடியாக களத்தில் இருந்து போராடி இருக்க வேண்டும்.

வெறுமனே வீர வசனம்பேசி ஈழப் பிரியனாகவும், இலங்கைத் தமிழர் மீது அக்கறை கொண்ட ஒருவராகவும் காட்டிக் கொள்ள நினைப்பதன் மர்மம் என்ன? 

இலங்கைத் தமிழருக்காகவும் ஈழத்துக்காகவும் இன்னுயிரைத் தியாகம் செய்யப் போவதாக அறிக்கை இட்டிருக்கின்றார். புலிகள் களத்தில் நின்று போராடியபோது சீமானுக்கு ஏன் இந்த அக்கறைஅன்று வரவில்லை? குறைந்தபட்சம் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அரங்கேற்றப் பட்டவேளையாவது ஏன் இவருக்கு இன்னுயிரைத் தியாகம் செய்யும் எண்ணம் வரவில்லை?

தனது பெயருக்கும் புகழுக்கும், அரசியலுக்கும் இலங்கை தமிழர்களை பகடைக்காய்களாக சீமான் பயன்படுத்த நினைப்பது வேடிக்கையானது. இலங்கைத் தமிழர்கள் இனிமேலும் இவ்வாறானவர்களை நம்பப்போவதுமில்லை
read more...

Sunday 25 November 2012

வேசிகளும் வேசிகளை நாடும் சமூக அந்தஸ்துள்ளவர்களும்

பாலியல் தொழிலாளர்களை நாம் வேசிகள் என்று ஒதுக்கி வைத்திருக்கின்றோம். யாரும் மரியாதை கொடுப்பதில்லை. இந்த வேசிகளிடம் போய் உல்லாசமாய் அனுபவித்துவிட்டு வருபவர்கள் யார்? எம்மைப் போன்றவர்கள்தான்?  இந்த வேசிகளிடம் போய் வந்து அதனை வீரம்போல் சொல்லிக் கொள்வார்கள் ஆண்கள் பாலியல் தொழிலாளிகளிடம் போய் உல்லாசமாய் இருந்துவிட்டு வருகின்ற ஆண்களையும் ஒதுக்கி வைக்க வேண்டுமே.

பாலியல் தொழிலாளர்களைப் பொறுத்தவரை அதிகமானவர்கள் தானாக இத் தொழிலுக்கு வந்தவர்களல்ல. அவர்களுக்குப் பின்னால் ஒரு கதை சோகக் கதையே இருக்கும். இன்று இலங்கையிலே இருக்கின்ற பாலியல் தொழிலாளர்களில் அதிகமானவர்கள் இளம் யுவதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் நாம் அறிந்தோ அறியாமலோ எமது தமிழ் யுவதிகளும் சிறுமிகளும் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். வறுமை ஒரு புறம் தனது குடும்பத்தை டகொண்டு நடாத்த வேண்டிய குடும்ப சுமை ஒரு புறம் இவர்களை பாலியல் தொழிலுக்கள் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கின்றது.

இலங்கையில் இருக்கின்ற பாலியல் தொழிலாளர்களில் எமது தமிழ் பெண்கள் இத் தொழிலை நாடியதன் காரணம் என்ன? நாட்டில் இடம்பெற்ற கோர யுத்தமும் எமது சமூகமுமே முக்கிய காரணமாகும். 

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக விதவையான தமிழ் பெண்கள் இலட்சத்தைத் தாண்டும் என்று நினைக்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருக்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் இரு குழந்தைகளுக்கு தாயாக குடும்ப சுமைய சுமக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

எமது தமிழ் சமூகம் பெண்கள் மறு மணம் செய்வதை தடுக்கின்றது. ஆனால் ஆண்கள் எத்தனை கல்யாணம் பண்ண விரும்பினாலும் செய்து  கொடுத்து வீரமாக நினைக்கின்றது எமது சமூகம். ஒரு பெண் இறந்து விட்டால் இறந்து ஒரு மாதம் செல்ல முன்னரே தனது மகனுக்கு  பெண் பார்த்து மறு மணம் செய்து வைத்த எத்தனை பெற்றோரைப் பார்த்திருக்கின்றோம்.

ஆனால் ஒரு இளம் பெண் தனது கணவன் இறந்துவிட்டால் தனது குடும்பத்தை கொண்டு நடாத்துவதற்கு இன்னொரு திருமணம் செய்ய நினைத்தால் வேசி என்கின்ற ஒரு பட்டத்தினையும் சூட்டிவிடுகிறது எமது சமூகம்.

அதே போன்று விதவைகளை எந்த ஆணாவது மறுமணம் செய்ய முன்வருகின்றார்களா? (ஓருசில விதிவிலக்கானவர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு நாம் தலைவணங்க வேண்டும்) எவரும் முன் வரமாட்டார்கள் அந்த விதவையிடம் கள்ளக் களவாகப் போய் வரத்தான் விரும்புவார்கள்.

எமது சமூகத்தில் இருக்கின்ற மற்றொரு விடயம் விதவைகளை ஒதுக்கி வைப்பது. மறு மணம் செய்து தமது குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ளவும் விடமாட்டார்கள். குறித்த விதவையை சமூக அந்தஸ்துள்ள ஒருத்தியாக நினைக்கவும்மாட்டார்கள். சமூகத்திலிருந்து ஒது்க்கி வைத்துவிடுவார்கள். இந்த நிலையில் தனது குடும்பத்தை கொண்டு நடாத்துவதற்கு இவ்விதவைப் பெண் என்ன செய்வாள்?

தொடரும்.....


read more...

Saturday 24 November 2012

மட்டக்களப்பில் சில பட்டதாரிகளை இடை நிறுத்த சதி மேற்கொள்ளப்படுகின்றதா?

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களை திணைக்களங்களுக்கு நியமிப்பது தொடர்பில் பல குளறுபடிகள் இடம்பெற்று வருவதாக பட்டதாரிப் பயிலுனர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இப்போது 1000 க்கு மேற்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இது ஒரு புறமிருக்க பட்டதாரிப் பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட உயர் தேசியக் கணக்கியல் பட்டதாரிகள் (HNDA) புறக்கணிக்கப்பட்டு வருவதாக (HNDA) பட்டதாரிகள் குற்றம் சுமத்துகின்றனர். நியமனம் வழங்கப்பட்டு ஓரிரு தினங்களில் இடை நிறத்தப்பட்டு பின்னர்  நான்கு நாட்களின் பின்னர் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 

இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டதன் பின்னர் வேலையில் இருந்து நிறுத்திய நாட்களுக்குரிய சம்பளம் சில பிரதேச செயலகங்களில் வழங்கப்படவில்லை ஆனால் பல பிரதேச செயலகங்களில் வழங்கப்பட்டுள்ளன. ஒரு பிரதேச செயலகத்திற்கு ஒரு நியதியா? 

அதே போன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் (HNDA) பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படவில்லை. தொடர்ந்து ஏனைய திணைக்களங்களுக்கும் (HNDA) பட்டதாரிகள் பிரதேச செயலகங்களால் அனுப்பப்படவில்லை. ஒரு சில பிரதேச செயலகங்களால் (HNDA) பட்டதாரிகளை தெரிவு செய்து அனுப்பியிருந்தும் திணைக்களங்கள் திணைக்களங்கள் (HNDA) பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள முடியாது என்று திருப்பியனுப்பி இருக்கின்றது.

இவ்விடயங்கள் தொடர்பாக சில அதிகாரிகள் கேட்கின்றனர் (HNDA) பட்டத்துக்கு சமமானதா? சமனானது என்பதற்கான சுற்றறிக்கையை கொண்டு வாருங்கள் என்று சொல்கின்றனர். இவ்விடயங்கள் தெரியாத அதிகாரிகள் இவ்விடயங்களை தெரிந்தாவது வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே நடைபெறுகின்றன. ஏனைய மாவட்டங்களில் (HNDA) பட்டதாரிகள் திணைக்களங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் சில உயர் அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட நலனுக்காக இவ்வாறு செயற்படுவதாக சொல்லப்படுகின்றது.

(HNDA) என்பது நான்கு வருடங்கள் மிகவும் கஸ்ரப்பட்டு படிக்க வேண்டிய ஒரு கற்கைநெறி என்பது இந்த அதிகாரிகளுக்கு எங்கே தெரியப் போகின்றது. கடந்த காலங்களில் (HNDA) பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டதையும் இப்போது வெளி மாவட்டங்களில் (HNDA) பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படுவதனையும் இந்த அதிகாரிகள் தெரியாமலா இருக்கின்றனர்.

(HNDA) பட்டதாரிகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவதற்குரிய ஏற்பர்டுகளாக இது அமையுமாக இருந்தால் இவ் அதிகாரிகளுக்கு எதிராக (HNDA) பட்டதாரிகள் வீதியில் இறங்கி போராடவும் தயங்கப்போவதில்லை. 

மறு புறத்தில் இவ்வாறு (HNDA) பட்டதாரிகள் இழிவாக நடாத்தப்படுகின்ற செயற்பாடுகள் இடம்பெற்று வரும் வேளையில் உயர் தொழில்நுட்ப நிறுவனத்திற்கென பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றது. இக் கட்டடம் தேவையா? இதன் மூலம் எத்தனை மாணவர்களின் எதிர்காலத்தை இல்லாமல் செய்ய திட்டமிடப் படுகின்றதா? 

இப்படி (HNDA) பட்டதாரிகள் இழிவாக நடாத்தப்படுவார்கள் என்று தெரிந்திருந்தால் நான்கு வருடங்களை வீணடித்திருக்க வேண்டிய அவசியமில்லை வேறு கல்வியைத் தொடர்ந்திருக்க முடியும் இவ்விடயம் தொடர்பில் அரசியல்வாதிகள் மெளனம் சாதிப்பது ஏன்?

Syllabus - 1st Year

1st Semester
1. Fundamentals of Financial Accounting
2. Business Mathematics
3. Commercial Awareness
4. Introduction to Computer
5. Business Communication - i
2nd Semester
1. Intermediate Financial Accounting
2. Statistical Analysis for Management
3. Micro and Macro Economics
4. Business Communication - ii
5. Computer Applications

Syllabus - 2nd Year

1st Semester
1. Advanced Financial Accounting
2. Operation Management
3. Principle of Auditing & Taxation
4. Database Management Systems & Data Analysis
5. Business Communication - iii
2nd Semester
1. Cost and Management Accounting
2. Computer Application for Accounting
3. Marketing Management
4. Business Communication - iv
5. Project Management Tools & Programming

Syllabus - 3rd Year

1st Semester
1. Advanced Management Accounting
2. Financial Reporting
3. Business Law
4. Business System - I
2nd Semester
1. Advanced Financial Reporting
2. Corporate Law
3. Organizational Behavior and Human Resources Management
4. Business System - II

Syllabus - 4th Year

1st Semester
1. Financial Management
2. Strategic Management
3. Advanced Taxation
4. Computer based Accounting
2nd Semester
1. Strategic Management Accounting
2. Financial Statement Analysis
3. Strategic Management Financial
4. Advanced Auditing & Assurance

HNDA B.com க்கு சமனானது என்பதனை காட்டும் சுற்றறிக்கை




2008 B COM - Circular 46 1990(e) III from Priyal Kulathilaka

புதிதாக அமைக்கப்படும் கட்டடம்

 பட்டதாரிகள் ஒன்றியம்


யோகராசா சந்திரகுமார் 
பாதிக்கப்ட்ட HNDA பட்டதாரி
(முன்னாள் HNDA மாணவர் ஒன்றிய செயலாளர்) 
read more...

Friday 23 November 2012

பாலியல் தொழிலாளர்களும் வெங்காயங்களும்

இலங்கையில் பாலியல் தொழிலும் சட்டரீதியாக்கப்பட வேண்டும் என்று கருத்து  கருத்து முன்வைக்கப்பட்டது. அக்கருத்தினை முன்வைக்கப்பட்டதும் பாலியல் தொழிலாளர்களுக்கு சட்ட அந்தஸ்து வழங்குவதா இல்லையா என்பதற்கு அப்பால் இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சமூக ஆர்வலர் சர்மிளா அவர்களுக்கு எதிராக ஒரு சாரார் போர்க்கொடி தூக்கியிருப்பதுடன் வண்முறையையும் பிரயோகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.


சர்மிளா அவர்களால் நடாத்தப்படுகின்ற பாலர்பாடசாலை தீயிட்டு எரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. உண்மையில் சர்மிளா என்ன தவறு செய்தார். அவர் தன்னுடைய பேட்டியில் முஸ்லிம்கள் பாலியல்தொழில் செய்ய வேண்டும் என்றா குறிப்பிட்டிருக்கின்றார். அவர் ஒரு சமூக ஆர்வலர். பாலியர் தொழிலாளர் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் உண்மையின் யதார்த்தங்களை தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு அல்லது முஸ்லிம் பெண்களுக்கு இன்னொரு சமூகத்தின் யதார்த்த உண்மை நிலைகளைப் பற்றி கருத்துச் சொல்ல கருத்துச் சுதந்திரம் இல்லையா? 

இஸ்லாம் பாலியல் தொழிலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது சரி. ஆனால் பாலியல் தொழிலாளர்கள் தொடர்பில் ஒரு சமூக ஆர்வலரான பெண் கருத்துச் சொல்வதை அடக்கி ஒடுக்க நினைப்பது பெண்கள் மீதான கருத்து சுதந்திரத்தை நசுக்கவதாக அமைந்திருப்பதுடன் இது ஒரு பெண் அடிமைத் தனத்தின் வெளிப்பாடாகும்.

இன்று சமூகத் தளங்களில் கண்மூடித்தனமாக சிலர் கருத்துரைத்து வருகின்றனர். சர்மிளாவை கொலை செய்யவேண்டும் என்றகூட சிலர் கருத்துரைத்திருக்கின்றனர். இப்படிச் சொல்பவர்கள் தங்களுக்கள்ளே தாங்களோ நாம் உத்தமர்களா எனும் கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு சமூகத்தைப் பற்றி யாதார்த்தங்களைப் பேசிய சர்மிளா தண்டிக்கப்பட வேண்டுமாக இருந்தால் பலரை கல்லால் எறிந்தே கொலை செய்திருக்க வேண்டும். 

அப்படியானால் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் மட்டக்களப்பு  பேருந்து நிலையத்தில் கையடக்கத் தொலைபேசி நடாத்தும் கடை எனும் பேரில் விபச்சாரம் நடாத்தி கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டு கடையும் சீல் வைக்கப்பட்டது. அப்படியானால் காத்தான்குடியைச் சேர்ந்த அந்த கடை உரிமையாளருக்கு எப்பவே மரணதண்டைன வழங்கியிருக்க வேண்டும்.

விபச்சாரம் நடாத்திய ஒரு ஆண் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் விபச்சாரம் செய்யும் பெண்கள் தொடர்பாக தமது கருத்தினைத் தெரிவித்த ஒரு பெண்ணுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது பெண் அடக்குமுறைக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் எதிரான உச்சக்கட்ட வெளிப்பாடாகும்.

இன்று சர்மிளாவை அடக்கி வைத்தால் எதிர் காலத்தில் எந்தப் பெண்ணும் துணிந்து தனது கருத்துக்களை முன்வைக்க மாட்டார்கள் சர்மிளாவிற்கு வந்த நிலை தனக்கம் வரும் என்று. 

எல்லோரும் நாம் சரியாகத்தான் நடக்கின்றோமோ? கொலை கொள்ளைகளையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன். ஆனால் கொலை கொள்ளை இடம்பெறவில்லையா? அமேரிக்காவில் இஸ்லாத்துக்கு எதிராக திரைப்படம் வெளியிட்டால் இலங்கையில் பஸ்ஸில் போகும் அப்பாவி மக்களுக்கு கல்லால் எறியுங்கள் என்று இஸ்லாத்தில் எங்கே சொல்லப்பட்டிருக்கின்றது. முதலில் இவ்வாறு கல்லால் எறிபவர்களை தடுத்து நிறுத்திவிட்டு சமூக சிந்தனையாளர்களின் குரல்களை நசுக்க நினைப்பதை பற்றி சிந்தியுங்கள். இவ்வாறான செயற்பாடுகள் இஸ்லாமியர்கள் தீவிரவாதப் போக்குடையவர்களாகச் சித்தரிக்கின்றது.


ஒரு பெண் வேசியாகிறாள். 18 +

பாலியல் தொழிலாளர்களும் சர்மிளா மீதான நியாயமற்ற குற்றச்சாட்டுக்களும்


தொடரும்...


read more...

Wednesday 21 November 2012

பாலியல் தொழிலாளர்களும் சர்மிளா மீதான நியாயமற்ற குற்றச்சாட்டுக்களும்


பாலியல் தொழிலை சட்டரீதியாக்குவதா இல்லையா என்பதற்கு அப்பால் இன்று சமூக ஆய்வாளரும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியுமான சர்மிளா செய்யத் அவர்கள் BBC க்கு பாலியல் தொழில் தொடர்பில்  வழங்கிய பேட்டியின் காரணமாக முஸ்லிம்களும் முஸ்லிம் சமூக அமைப்புக்களும் போர்க்கொடி தூக்கியுள்ளன.

என்னைப் பொறுத்தவரை சர்மிளா அவர்கள் வழங்கிய பேட்டியில் எந்தவிதமான தவறும் இல்லை. சர்மிளா அவர்கள் சமூக ஆய்வாளராகவும்  சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாகவுமே தமது கருத்தினை தெரிவித்திருக்கின்றார். பின்னர் தனது கருத்து தொடர்பில் எழுந்த எதிர்ப்புக்களின் பின்னர் சரியான விளக்கத்தினையும் கொடுத்திருக்கின்றார்.

விபசாரம் இஸ்லாத்தில் வன்மையாக எச்சரிக்கப்பட்டதும் ஹராமாக்கப்பட்டதும் என்பது உண்மைதான் ஆனால் இங்கே சர்மிளா அவர்கள் தனது தனிப்பட்ட கருத்தை சொல்லவில்லை. இலங்கையில் இருக்கின்ற உண்மையாகன யதார்த்தங்களை சொல்லி இருக்கின்றார். இங்கே அவரை முஸ்லிம் பெண் என்ற ரீதியில் பேட்டி எடுக்கப்படவில்லை சமூக ஆய்வாளரும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும் என்கின்ற ரீதியிலே தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்தே அவரது கருத்துக்கள் கேட்கப்பட்டன.

ஒரு சமூக ஆய்வாளரும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளருமாக இருக்கின்ற ஒருவர் சமூக ரீதியான கருத்துக்களை தெரிவிக்கும்போது தமது மதம், இனம் என்பவற்றிற்கு அப்பால் ஒட்டுமொத்த சமூகத்தின் யதார்த்தத்தையும் உண்மை நிலைகளையும் வெளியிட வேண்டும் அதனடிப்படையிலே சர்மிளா அவர்கள் உண்மையின் யதார்த்தங்களை தனது கருத்தினை தெரிவித்திருக்கின்றார்.




இங்கே இருக்கின்ற அதிகமான பாலியல் தொழிலாளர்கள் தாமாக பாலியல் தொழிலுக்கு வரவில்லை. அவளை சுற்றி இருக்கின்ற சமூகமே அவளை பாலியல் தொழிலாளியாக மாற்றியது. (காரணங்கள் முன்னைய பதிவில் விளக்கமாக இருக்கின்றது)


இன்று வறுமையின் காரணமாக விபச்சாரத் தொழிலுக்கு வந்தவர்களே அதிகம் அவர்கள் சமூகத்தால் வேசி என்று ஓரம் கட்டப்பட்டு சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கின்றாள். பாலியல் தொழில் செய்யும் பெண்ணை வேசி என்று ஒதுக்கி வைக்கின்றனர். ஆனால் அந்த வேசியுடன் உறவுகொண்டுவிட்டு வருபவனை வீரனாக வீட்டிற்குள் வைத்திருக்கம் சமூகம். இதில் வேடிக்கை உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள்தான் (எல்லோருமல்ல) பாலியல் தொழிலாளர்களை அதிகம் நாடுவதாக சொல்லப்படுகின்றது.


இங்கேயும்

தொடரும்....
read more...

Tuesday 20 November 2012

ஒரு பெண் வேசியாகிறாள். 18 +

 இப்பொழுது இலங்கையில் பாலியல் தொழிலை சட்டரீதியாகக வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றன. பாலியல் தொழில் தொடர்பாக முன்னர் சில இடுகைகள் இட்டிருந்தேன் ஒரு தொடராக அத் தொடரை மீண்டும் இன்றைய கால கட்டத்தில் தொடரலாம் என்று நிகனக்கின்றேன். தொடர்வதற்கிடையில் முன்னைய பதிவினை அப்படியே தருகின்றேன்

 

காட்சிப் பொருளாக்கப்பட்ட பெண்கள்  

எனும் பதிவின் தொடராகவே இடம் பெறுகின்றது. ஒரு பெண் ஒரு பெண் தன் கணவனைத் தவிர வேறு ஓருத்தருடன் பாலியல் ரீதியில் தொடர்பு வைத்திருந்தால் அவளை வேசி என்று சமூகம் சொல்கின்றது. ஆனால் ஒரு ஆண் எத்தனை பேருடன் தொடர்பு வைத்திருந்தாலும் அவனைப்பற்றி எவரும் கணக்கெடுப்பதில்லை.

 ஒரு பெண் பலருடன் தொடர்பு வைத்துக் கொள்ள பல காரணங்கள் இருக்கின்றன. பலர் இதனை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர். பண்டைய தமிழ்ச்சமூகத்தில் "தாசித் தொழில்" என்று அழைக்கப்பட்டு வந்தது

 பாலியல் தொழில் செய்யும் பெண்ணைத் தமிழில் விலைமகள், வேசி, பொதுமகள், கணிகை, அல்லது விபச்சாரி என அழைக்கப்படுகின்றனர். 




பெண்களைப் பொறுத்தவரையில். தான் விபச்சாரத்துக்கோ அல்லது பல ஆண்களுடனோ பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பலர் இதனை ஒரு தொழிலாகச் செய்கின்றனர். இதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. வறுமை வேலையில்லாப் பிரச்சினை என்று
சொல்லிக் கொண்டே போகலாம்.

இதனை தொழிலாகச் செய்கின்ற விலை மாதர்களை நாடி பல பணம் படைத்தவர்கள் வருகின்றனர். இதன்,முலம் விலை மாதர்கள் அதிகமான வருமானத்தை ஈட்டுவதோடு அதிக வருமானம் பெறும் ஒர தொழிலாகவும் இத் தொழில் இருக்கின்றது.இத் தொழிலைச் செய்பவர்கள் விலை மாதுகள் என்றால் இவர்களை
நாடிச் செல்கின்ற ஆண்களை என்னவென்று சொல்வது.

இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் எல்லோராலும் சொல்லப்படுகின்ற விடயம் சமுக சீர்கேடு அதிகரித்திருக்கின்றன என்ற குற்றச்சாட்டாகும்;. இக் இக் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையானது. நான் பல இடங்களுக்கு சென்று வருகின்ற ஒருவன் பல விடயங்களையும் பல சமுக சீர் கேடுகளையும் கண்முன்னே கண்டிருக்கின்றேன். இந்த சமுக சீர் கேடுக்கான காரணம். உள்நாட்டு யுத்தமும் வேலையின்மையும். வறுமையுமாகும்.

இவை தொடர்பிலே சில விடயங்களையும் சம்பவங்களையும் குறிப்பிட விரும்புகின்றேன். என்னால் நேரடியாக அவதானிக்கப்பட்ட அறியப்பட்ட விடயங்கள் 


இவை ஒரு 20 வயதுடைய பெண் தன்னுடைய கணவனை யுத்தத்தின் போது பறிகொடுத்து விட்டார். அந்த பெண்ணுக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றது. கணவனை இழந்ததும் தனிமைப் படுத்தப்பட்டுவிட்டாள்இ

இவளுக்கு தொழிலும் இல்லை. இன்னொருவனை திருமணம் செய்வதற்கும் சமுகம் இடம் கொடுக்கவில்லை. இவள் வாழ்ககையை எவ்வாறு கொண்டு நடாத்துவது. தன் பிள்ளையை நல்ல நிலைக்கு கொண்டு வருவது. அவள் இன்னொரு திருமணம் செய்ய எத்தணித்தபோது அவளது சமுகம் அதனை
ஏற்றுக் கொள்ளவில்லை.

அவள் வாழ வேண்டிய வயது அவள் திருமணம் செய்து இரண்டு வருடங்கள்தான் கணவனோடு வாழ்ந்திருப்பாள். தான் தனிமைப் படுத்தப் பட்டமை ஒருபுறம் பொருளாதார நிலை ஒருபுறமிருக்க. அவளுக்கு இப்போது வயது 20. காம உணர்ச்சிகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்றது. கணவனோடு இரண்டுவருடங்கள் மட்டுமே வாழ்ந்த இந்த இளம் பெண்ணுக்கு கணவணை இளந்த பின் காம உணர்ச்சி இல்லாமல் போய் விடுமா?

இந்தப் பெண்ணின் வாழ்க்கை கணவனை இழந்ததோடு முடிந்துவிட்டதா? ஏன் இந்த சமுகம் இவைகளைப்பற்றி சிந்திப்பதாக இல்லை. இவளை சமுகம் இன்னொரு திருமணம் செய்யவேண்டாம் என்று கட்டப்படுத்தியதன் எதிரொலி இன்று தனிமையில் இருக்கும் அவளது வீட்டுக்கு தினம் ஒரு ஆண் சென்று வருகின்றான்.
இவள் இவ்வாறு செல்லக் காரணம் அவளது சமுகமே.

இவள் மட்டுமல்ல யுத்தத்தின்போது கணவனை இளந்த பல இளம் பெண்களின் நிலை இதுதான். இவர்கள் விலை மாதுகள் அல்ல தன் இளம் வயதிலே கணவனை
இழந்துவிட்டார்கள். தன் காம உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் பல ஆண்களை நாடுகின்றனர். இது சமுக சீரளிவு என்று சொல்லமுடியுமா. கணவன் இறந்ததோடு அவளுக்கு ஆசாபாசங்கள் இருக்கக்கூடாதா?

கணவனை இழந்ததும் பெண்கள் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லும் சமுகம். ஒரு ஆணின் மனைவி இறந்துவிட்டால் உடனடியாக அவனுக்கு மறுமணம் செய்து வைக்கின்றனரே இது எந்த வகையில் நியாயமானது. ஆண்களுக்கு மட்டும்தான் ஆசாபாசங்கள் இருக்கின்றதா?

இது ஒரு புறமிருக்க சமுக சீர்கேடு தொடர்பிலே நான் அதிகம் அவதானித்த விடயம் கணவன் வெளிநாட்டிலே இருக்கின்ற பெண்கள் வேறு ஆணுடன்
அல்லது பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர். எல்லா பெண்களும் அவ்வாற இல்லை ஒரு சிலர் இருக்கின்றனர்.

இவர்கள் இவ்வாறு தொடர்பு வைத்திருக்க காரணம் என்ன. பணத்துக்காக இவர்கள் மற்றவர்களுடன் செக்ஸ் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.
தமது காம உணர்ச்சிகளை தர்த்துக் கொள்வதற்காகவே வேறு ஆண்களை நாடுகின்றனர். இங்கே யார் தவறு செய்கின்றனர். தமது மனைவியின்
உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய அவளது கணவன் விடுகின்ற தவறுதான் காரணம்.

நாங்கள் ஒரு பிரதேசத்திலே இரவு 9 மணிக்குப் பின்னர் வீதியில் நிற்பதற்கு பயப்படுவதுண்டு. நிற்பதே இல்லை நின்ற பலர் இராணுவத்தினரால் அடி வாங்கிய சம்பவங்களும்
இடம் பெற்றிருக்கின்றன.

 

அந்த வீதியிலே இருக்கின்ற ஒரு பெண்ணின் கணவன் வெளிநாட்டில் இருக்கின்றார். அவள் இப்போது பலருடன் தொடர்பு. இரவு 9 மணிக்குப்பின் இராணுவத்தினரின் ஆட்சி அவளது வீட்டில் நடக்கும். அவள் அவ் வீட்டில் தனிமையில் இருப்பவள். இவள் வேசியானதற்கு யார் காரணம்? இதே நிலை பல பெண்களுக்கு இது ஒருபுறமிருக்க ஒரு இளம் பெண் அவளுக்கு பொருளாதார சிக்கல் இல்லை குடுப்பநிலை அப்படி. திருமணம் செய்ய வேண்டிய வயது ஆனால் திருமணம் செய்யவில்லை தினம் ஒருத்தனுடன் உல்லாசமாக இருக்கின்றாள். இது இவள் செய்யும் தவறுதான். தன் கணவன் தன்னை திரப்திப் படுத்தவில்லை என்பதற்காக வேறு ஆண்களை நாடுகின்ற பெண்களும் இருக்கின்றனர்.

இவை எல்லாம் ஒரு புறமிருக்கட்டும் ஒரு பெண் இன்னொருவனுடன் தொடர்பு வைத்திரந்தால் அவளை வேசியாகக் காட்டும் சமுதாயம் ஒரு ஆண் எத்தனை பெண்களுடன்


பின்னிணைப்பு


பகுதி 2

இங்கேயும் 
read more...

Sunday 11 November 2012

மட்டக்களப்பில் தொடரும் தற்கொலைகளின் மர்மம்



கிழக்கு மாகாணத்தில் தற்போது தற்கொலைகள் அதிகரித்தவண்ணமிருக்கின்றன. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல தற்கொலைகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு தற்கொலை செய்பவர்களில் அதிகமானவர்கள் இளம் வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தற்கொலை செய்வதற்குரிய காரணங்கள் என்ன? இவ்வாறு தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற தற்கொலைகளையும் தற்கொலை முயற்சிகளையும் எவ்வாறு தடுக்கலாம் என்று நாம் சிந்திக்கவேண்டியிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை பல வழிகளிலும் மரணங்கள் அதிகரித்திருக்கின்ற நிலை காணப்படுகின்றது. புற்றுநோய் மற்றும் புதிய புதிய நோய்களினால் அதிகமானவர்கள் இறக்கின்ற நிலமை காணப்படுகின்றது. இதற்கு மரக்கறிகள் நஞ்சூட்டப்படுவதும் ஒரு காரணமாக இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இதில் உண்மையும் இருக்கின்றது. இவ்விடயம் தொடர்பில் தனி ஒரு பதிவிடுகிறேன்.

மட்டக்களப்பில் தற்கொலை செய்து கொண்ட பலரைப் பார்க்கின்றபோது சின்ன சின்ன விடயங்களுக்கு தற்கொலை செய்தவர்களே அதிகம். சிறிய ஒரு விடயத்தைக்கூட தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்தவர்கள் ஒரு புறமிருக்க தங்களுக்கு ஏதோ ஒரு வகையில் மனத்தாக்கங்கள் வருகின்றபோது. அவர்களுக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லை என்பதனாலும் தற்கொலைக்கு நாடிச் செல்கின்றனர்.

இன்றைய கால கட்டத்தில் தாய் தந்தையர் குழந்தைகளோடு பிள்ளைகளோடு ஒரு ஐந்து நிமிடம் கதைக்கக்கூட நேரம் இல்லாது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் இடைவெளி அதிகமாக இருக்கின்றது.

பிள்ளைகளைப் பொறுத்தவரை தங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து ஆறுதல் அடைகின்ற நிலை இல்லாமல் போகின்றது. இதனால் பலர் தற்கொலையை நாடிச் செல்கின்றனர்.

அதேபோன்று யுத்தம் விட்டுச் சென்ற எச்சங்களாகவும் இந்த தற்கொலைகள் இடம்பெறுகின்றன. குடும்பசுமை காரணமாகவும் இளம் பெண்கள் தற்கொலையை நாடிச் செல்கின்றநிலை காணப்படுகின்றது. இவ்வாறான நிலைகள் மாற்றப்பட வேண்டும்.

அரசியல்வாதிகள் வீரவசனம்பேசுவதை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற விதவைகளின் வாழ்வாதாரம் தொடர்பில் சிந்திக்கவேண்டம். மட்டக்களப்பிலே இருக்கின்ற விதவைகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டாலே மட்டக்களப்பில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுவிடலாம்.

அதே போன்று முடிந்தவரை பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான நெருக்கத்தினை அதிகரிப்பதன் மூலமும் இளம் வயதினர் தற்கொலை செய்வதிலிருந்து தவிர்த்துகொள்ள முடியும்.

தற்கொலை புள்ளி விபரங்கள் தகவல்களோடு மற்றுமொரு பதிவு இட இருக்கின்றேன்...
read more...

Monday 5 November 2012

யார் யாரோ நண்பன் என்று.....

நீண்ட நாட்களாகவே வலைப்பதிவில் எழுதவில்லை. நேரம் கிடைப்பதில்லை என்று பொய் சொல்லவும் விரும்பவில்லை. உண்மையைச் சொல்லப் போனால் பதிவு எழுதும் நிலையில் மனநிலை இல்லை என்பதுதான் உண்மை. பல தடவை எழுத நினைத்தும் எழுத மனம் விடுவதில்லை.

மிகவும் கஸ்ரப்பட்டு வளர்ந்தவன், ஏழைகளின் கஸ்ரத்தையும் எதிர் நோக்கும் பிரச்சினைகளையும் நன்கு உணர்ந்தவன் நான் அதனால் ஏனோ தெரியவில்லை சிறு வயது முதல் சமூகம் சார்ந்தே சிந்திக்க தொடங்கிவிட்டேன். அதனால் இன்று நான் நடுத்தெருவில் நிக்கவேண்டிய நிலையில் என்றுதான் சொல்லவேண்டும்.

சமூகம், சமூகம் பொதுப்பணி என்று ஒவ்வொரு நிமிடமும் சிந்தித்த நான் என்னைப்பற்றி ஒரு நிமிடம்கூட சிந்திக்கவில்லை. என்னுடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன எனது எதிர்காலத்திற்காக நான் என்ன செய்யவேண்டும் என்றுகூட ஒரு நாள்கூட சிந்திக்கவில்லை. 

என் தந்தை எனது பத்து வயதில் இறந்ததும் குடும்ப சுமையை நானே சுமக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். பல கஸ்ரத்தின் மத்தியில் வாழ்க்கையை கொண்டு சென்றநான் ஒரு நாள்கூட எனது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காததன் விளைவை இன்று உணர்கின்றேன்.

சிறு வயது முதல் விவசாயம் செய்து கொண்டு படித்தநான் நான் எதிர்காலத்தில் எப்படி இருக்கவேண்டும் என்று என்னிடம் ஒரு திட்டம் இருக்கவில்லை. அதன் பலன் இன்று தெரிகின்றது. என்னடா இவன் உளறுகின்றான் என்று நினைக்கின்றீர்களா உண்மையில் இது ஒரு உளறல்தான்.

என்னுடைய நண்பர்கள் அடிக்கடி சொல்வார்கள் நீ சமூகம் சமூகம் என்று இரு உன்னைப்பற்றி சிந்திக்காதே என்று அவர்களின் கதைகளை நான் கேட்டதில்லை. அடிக்கடி என்னிடம் சிதறல்கள் றமேஸ் சொல்வார் சந்ரு நீங்கள் உங்களையும் உங்கள் எதிர்காலத்தையும் பற்றி சிந்தியுங்கள் என்று அவர் அன்று அவ்வாறு சொல்கின்றபோதெல்லாம் அவரோடு நான் கோபப்பட்டிருக்கின்றேன். அவருடன் சண்டைகூட பிடித்திருக்கின்றேன். அன்று உணராவிட்டாலும் இன்று உணர்கிறேன்.

என்னுடைய காலங்கள் சமூகம், நண்பர்கள் என்று அவர்களுக்காகவே வாழ்ந்த காலமாக உருண்டோடிவிட்டது. இன்று என்னைச்சூழ பல பிரச்சினைகள். யார் யாரோ நண்பன் என்று ஏமாந்து நிற்கும் நேரமிது. யாரெல்லாம் என்னோடு உயிர் நண்பர்களாக இருப்பார்கள் என நினைத்தேனோ அவர்கள் இன்று எனக்கு குழி பறிக்கும் நிலையில். 

அண்மைக் காலத்தில் பல ஏமாற்றங்கள். பலரை நம்பி அளவுக்கு அதிகமாக ஏமாந்துவிட்டேன். காரணம் இதுவரை எனக்காக நான் வாழ்ந்ததில்லை எனக்காக நான் சிந்திக்கவுமில்லை. என் எதிர்காலத்திற்காக நான் எதனையும் செய்யவுமில்லை. (03.12.2012) என் வாழ்க்கையின் கரிநாள் என்னால் ஒருபோதும் மறக்க முடியாதநாள். 

இப்போதுதான் என் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கின்றேன் என்னால் அடுத்தகட்ட நடவடிக்கை நோக்கி செல்ல முடியாத நிலை. கையில் 10 ரூபா காசு கூட இல்லாத நிலை....

read more...

Tuesday 30 October 2012

கேதார கௌரிவிரதப் பாடல்கள்


விரதங்களிலே சிறப்புமிக்க விரதம் கேதார கௌரி விரதமாகும். இக் கேதார கௌரி விரதத்தினைப் பற்றிய பாடல்கள் மிக மிகக் குறைவு. அதனைக் கருத்தில் கொண்டு என்னால் வெளியிடப்பட்ட கேதார விரதத்தின் மகிமைகளைக் கூறுகின்ற பாடல்களை உங்களுக்காகத் தருகின்றேன்.

அதற்கு முன்னர் கௌரி விரதக் காலங்களில் காலையில் எனது பாடல்களை ஒவ்வொரு வருடமும் ஒலிபரப்பிவரும் சூரியன் FM க்கு நன்றிகள். இப்பொழுதும் ஒவ்வொரு நாளும் காலையில் ஒலிபரப்புகின்றனர்.

பதிவிறக்கங்கள்...

பாடல் 5 

இப்பாடல்கள் தினமும் காலையில் சூரியன் FM ல் ஒலிபரப்பாகின்றன
read more...

Thursday 25 October 2012

கேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.


இந்துக்களின் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதத்தின் மகிமையினை கூறும் இறுவட்டு ஒன்றினை எமது கலைஞர்களின் பங்களிப்போடு வெளியிட்டு இருந்தேன்.
பாடல்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தன. அப்பாடல்கள் நீங்களும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

கதைச் சுருக்கம்
திருக்கைலாச மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளையிலே. தேவர்களும், முனிவர்களும் அங்கு சென்று இருவரையும் சுற்றி வந்து வணங்கினர். அந்த வேளையிலே அங்கு வந்த பிரிங்கி முனிவர விகடக் கூத்தொன்றை ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்த பின்னர். உமாதேவியை விலக்கி விட்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கினர். உமாதேவியை அலட்சியம் செய்த முனிவரின் உடலிலிருந்த சக்தியை உமாதேவி எடுத்துக் கொண்டதனால் பிரிங்கி முனிவர் சபையிலே சோர்ந்து வீழ்ந்தார்.

சிவபெருமான் பிருங்கி முனிவரிடம் தடி ஒன்றைக் கொடுத்து அதனை ஊன்று கோலாகக் கொண்டு நடந்து செல்வதற்கு அனுக்கிரகம் செய்தார். இதனால் ஆத்திரமும் அவதானமும் அடைந்த உமாதேவி சிவபெருமானிடம் கோபித்துக் கொண்டு பூவுலகுக்கு வந்தார்.

ஒரு வில்வ மரத்தடியில் உமாதேவி வீற்றிருந்தார். உமாதேவியின் வருகையால் அந்த வனம் புதுப்பொலிவு பெற்றது. அந்த வனத்திலே வசித்த கௌதம முனிவர் திடிரென ஏற்பட்ட மாற்றத்துக்கான மாற்றத்துக்கான காரணத்தை அறிய முற்பட்டபோது. உமாதேவியைக் கண்டு நடந்த சங்கதிகளை அறிந்து கொண்டார்.

புரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமி தொடக்கி இப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரையுள்ள கேதரேசுரர் விரத மகிமை பற்றியும் அதனை அனுஷ்டிக்கும் முறைமை பற்றியும் விளக்கமாகக் கூற அம்மை விரதம் நோற்று அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகினார்.
பதிவிறக்கங்கள்...
read more...

Thursday 4 October 2012

மதச் சண்டை போடும் மதம் பிடித்தவர்களே சண்டையை நிறுத்துங்கள்


இது என்னுடைய 500வது பதிவு

மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் வலைப்பதிவுகளை கடந்த 10 நாட்களாக வலம் வந்தேன். பதிவுலகத்தில் என்ன நடக்கின்றது என்பதனை அறிந்துவிட்டத்தான் எனது 500 வது பதிவை எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் 10 நாட்களும் பதிவுலகை வலம் வந்தேன். நீண்ட நாட்களாக அரசியல் தவிர்ந்த ஏனைய பதிவுகளை எழுதவில்லை என்பதனால் நிறைய விடயங்களை எழுதவேண்டும் எதனை எழுதுவது என்ற திண்டாட்டமும் இருந்தது.

வலைப்பதிவுகளைப் பார்க்கின்றபோது எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன். மதச் சண்டைகள் ஓய்ந்தபாடில்லை மதத்துக்காகச் சண்டை மதச்சண்டை நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது.. இதில் வேடிக்கை என்னவென்றால் அன்று கிழக்கிலே தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகள் பற்றியும் தமிழ் பெண்களை முஜஸ்லிம் இளைஞர்கள் காம இச்சைகளை தீர்த்துக் கொள்ள பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆதாரங்களுடன் எழுதியிருந்தேன் அவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிராக நான் எழுதியதற்கு முதன் முதலில் போர்க்கொடி து+க்கியவர்களே இன்று இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளுக்கு  எதிராக மதச் சண்டை செய்கின்றனர்.

மதங்கள் புனிதமானவைவதான் ஆனால் சில மத வெறியர்கள் மதத்தைவைத்து மதவெறி பிடித்து அலைகின்றனர் என்பதே உண்மை. 

இதில் இஸ்லாம் மட்டுமல்ல அனைத்து மதத்திலும் மதவாதிகள் இருக்கின்றனர். ஆனாலும் இஸ்லாத்தில் மத தீவிரவாதிகள் அதிகம் என்றுதான் என்னுள் தோன்றுகின்றது. அமேரிக்காவில் இஸ்லாத்திற்கு எதிராக ஒரு திரைப்படம் வெளியிடப்படுகின்றது என்றால். எதற்காக இலங்கையில் வீதியால் செல்லும் வாகனங்களுக்கு கல்லெறிய வேண்டும். ஒருவருக்கு மத சுதந்திரம் இருக்கலாம் ஆனால் அது இன்னொருவரின் மூக்கில் கை வைக்கும் அளவிற்கு இருக்கக்கூடாது.

வலைப்பதிவில் எழுதுவதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன அவற்றை எழுதலாம் வெறுமனே மத வெறியர்கள் போல் சண்டை பிடிப்பதை விட்டுவிடுங்கள். ஒருசிலர் மதத்தை வைத்து வலைப்பதிவில் சண்டை பிடிப்பது நல்ல விடயமல்ல. பல இணையத்தளங்கள் மதம் சார்ந்து எழுதுகின்றன அவை இவ்வாறு சண்டை பிடிப்பதாகத் தெரியவில்லை. ஒருசில இஸ்லாமிய நண்பர்கள் இஸ்லாமிய மதம் சார்ந்து எழுதுகின்றோம் என்று ஏனைய மதங்களையும் சாடுவது தவறானது. 

இந்து மதம் பற்றி பலர் எழுதுகின்றனர் அவர்கள் இஸ்லாத்தை சாடுகிறார்களா? இல்லையே. நான் இந்து மதத்தை அதிகம் நெசிப்பவன் என்னாலும் இந்து மதத்தை முன்னிலைப்படுத்தி ஏனைய மதங்களை சாடி எழுத முடியும் ஆனாலும் ஏனைய மதங்களையும் நேசிக்கின்றேன். 

மதத்தை வைத்து வலைப்பதிவுலகில் சண்டை பிடிப்பவர்கள் மதச் சண்டைகளை நிறுத்துங்கள் 
read more...

Sunday 23 September 2012

கிழக்குத் தமிழர்களின் தலைவிதியோடு விசப்பரீட்சை வைத்து விளையாடிய துரோகிகள்!

கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டும், முதலமைச்சர் தெரிவு என்ற விடயம் தொடர்ந்தும் இழுபறியாகவே இருந்து வந்தது. மௌனங்கள் கலைக்கப்பட்டு விவாதங்கள் முற்றுப்பெற நேற்றைய தினம் வைக்கப்பட்டது முற்றுப்புள்ளி. இது யார் தலை மேல் விழுந்த இடி? என்பதே ஆராயப்பட வேண்டிய விடயம்.
மூவின மக்களும் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் அதிகப்படியான பெரும்பான்மை கொண்ட இனக்கூட்டமாகவும் பேரிழப்புகளை தாண்டி வந்த சமூகமாகவும் அதிகம் புண்பட்டு நிற்பவர்கள் தமிழர்களே!
அடுத்தபடியான இனவிகிதாசாரத்தில் இருக்கும் முஸ்லீம் சமூகமானது போராட்ட சூழலிலும் தம்மை அபிவிருத்தி, ஆழுமை ரீதியில் வளர்த்துக் கொண்டே விருத்தியடைந்த சமூகமாகும். இவை இரண்டிற்கும் அடுத்ததாகவே சிங்களவர் சமூகம் சிறுபான்மை விகிதாசாரிகளாக கிழக்கில் வாழ்கின்றனர். அந்த வகையில் தமிழீழம் என்ற இலக்கினை நோக்கி நகர்த்தப்பட்டு கடந்த 30 வருடகால ஆயுக்கலாச்சாரத்தினாலும், போலி வேடதாரிகளின் அரசியல் கலாச்சாரத்தினாலும் அதிகம் நொந்து நிற்கின்றவர்கள் கிழக்குத் தமிழர்கள்தான். எனவே கிழக்கின் ஆட்சி அதிகாரத்தில் தமிழர்களுக்கு பெருமளவில் பங்குண்டு எனும் விடயத்தில் யாரும் குற்றம் சொல்ல முடியாது. அந்தவகையில் ஏனைய சமூகத்தினரையும் புறக்கணித்துவிட்டு செயற்படவும் முடியாது. நியாயமாக முதலமைச்சர் என்ற கிழக்கின் அதிகாரம் அடங்கிய பதவியானது தமிழர்களுக்கே கிடைத்திருக்க வேண்டும். அல்லது 2008 இல் தமிழர் சமூகத்திற்கு கிடைத்த கிழக்கு முதலமைச்சர் என்ற அந்தஸ்து தொடர்ந்தும் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு விடயங்களையும் முன்னிறுத்திப் பார்க்கும்போது கிழக்கின் தமிழ் முதலமைச்சர் உருவாக்கத்திலும், தமிழ் முதலமைச்சர் தக்க வைப்பிலும் பங்கெடுக்காது தமது சுயஇலாப அரசியலையும் , பழிவாங்கும் அரசியலையும் மாத்திரம் மனதில் வைத்து செயற்பட்ட வக்கிர மனோநிலை கொண்ட அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் கிழக்குத் தமிழர்களின் தலைவிதியோடு விசப்பரீட்சை வைத்து விளையாடிய துரோகிகளாகவே மக்களால் உணரப்படுகின்றார்கள்.
பெரும்பாலான கிழக்கு வாழ் தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்ததெல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இருந்து ஒரு தமிழ் முதலமைச்சரை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சாத்தியம் அற்ற எண்ணப்பாட்டினை முன்னிறுத்தியே ஆகும். எப்படியிருந்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முதலமைச்சர் என்கின்ற பதவியினை கைப்பற்றவே முடியாது என்பதும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அப்புக்காத்து தலைமைகள் நன்கறிந்த விடயம். ஆனாலும் கிழக்குத் தமிழர்களது அப்பாவித் தனமான மனோநிலையினை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதிலேயே தமது முழுப்பலத்தினையும் பிரயோகித்து யதார்த்தினை உணரவிடமால் செய்து வாக்கு வேட்டை நடாத்தியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே ஆவர். தனித்து ஆட்சி அமைக்க முடியாத தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து கொண்டு ஆதரவினை வழங்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட விடயம்தான். அதேபோன்று மத்திய அரசில் பங்குகொண்டு அமைச்சுப் பதவிகளை வகிக்கும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஒருபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்க முன்வராது என்பது வெளிப்படையாகவே சகலரும் அறிந்த விடயம். கடந்து வந்த அரசியல் வரலாற்றின் பதிவுகள் அனைத்தும் பக்கத்திற்கு பக்கம் நன்கறிந்த கூட்டமைப்பின் அப்புக்காத்து தலைமைகள் இதுதொடர்பில் மிகத்தெளிவிலேயே இருந்தனர்.
ஆனாலும் கிழக்குத் தமிழர்களது வாக்குகளை பெருமளவில் பெறவேண்டுமானால் ஓர் போலியான நம்பிக்கையினை மிகக் கச்சிதமாக உருவாக்கிவிட வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது. அவ்வாறு உருவாக்கப்பட்ட போலித்தயாரிப்புதான் “ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசினை இணைத்துக்கொண்டு ஆட்சியமைப்போம்” என்ற பிரச்சாரப் பொருளாகும். இந்த யுக்தி அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இலாபத்தினை வழங்கியிருந்தும் குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சாத்தியமற்ற இலக்குநோக்கி மக்களை நகர்த்தியது எல்லாம் பிள்ளையானை முதலமைச்சராக வரவிடாமல் தடுக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான அரசியல் நிலைப்பாட்டினை எண்ணத்திற் கொண்டமைதான் என்பது தெட்டத்தெளிவாகின்றது.
பிள்ளையானுக்கு எதிராக போடும் முட்டுக்கட்டைகள் அனைத்தும் கிழக்குத் தமிழர்களது தலைகளிலும் பேரிடியாக விழும் தமிழ் முதலமைச்சர் பறிபோகும் என்று தெரிந்தும் தமிழர் நலன் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சற்றுச் சிறிதேனும் சிந்திக்கவில்லை. அவர்கள் வெற்று ரொக்கட்டான முஸ்லீம் காங்கிரசிற்கு எரிபொருள் தாங்கி பொருத்துவதிலேயே குறியாக இருந்தனர். இவையெல்லாவற்றையும் கடந்து அரசாங்கம் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவியினை கொடுக்க கடுமையான முயற்சிகளை செய்து பல்வேறு விவாதங்களையும் பேரம் பேசுதல்களையும் செய்து கொண்டு வந்தது. ஆனாலும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் கடுமையான நிபந்தனைகள் அரசின் நிலைப்பாட்டினை தளர்த்தத் தொடங்கியது. 07 ஆசனங்களை மாத்திரமே பெற்றுக்கொண்ட கட்சி அரசுடன் அதிகபட்ச அதிகாரங்களைக் கேட்டு தனது பேரம் பேசுதலை மேற்கொள்ளும் விதமாக தனது சக்தியினை மென்மேலும் அதிகரித்துக் கொள்ள வழிவகுத்துக் கொடுத்த பெருமையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினையே சாரும்;. எங்களுடன் இணைந்தால் முஸ்லீம் முதலமைச்சரை உருவாக்கித் தருவோம். எந்த விதமான நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம் என்று பகிரங்க அறிக்கையினை விடுத்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு.
ஏற்கனவே ஆட்சியமைப்பு தொடர்பில் 07 ஆசனங்களுடன் முக்கியத்துவம் பெற்று நின்ற ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசானது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த அறிவிப்பால் மேலும் வலுப்பெற்றுக்கொண்டு அரச தரப்போடு பேசத் தொடங்கியது. இதுவே “சும்மா இருந்த சங்கினை ஊதிக் கெடுத்தான் ஆண்டி” என்ற கதையாகி நின்றது.
இறுதியில் முஸ்லிம் முதலமைச்சர் பதவியினை கொடுத்துத்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. இந்த நெருக்கடி நிலையினை அரசுக்கு ஏற்படுத்த காரணமாய் அமைந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பின், முஸ்லீம் காங்கிரஸ் மீதான மறைமுக உற்சாகமூட்டல்களேயாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லீம் தலைமைகள் அனைத்தும் பல்வேறு திசைகளில் பிரிந்து நின்றன. அரசிற்குள் ரிசாட் அணி, அதாவுல்லா அணி என்ற இரு அணிகள் இருக்க முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இரு வேறுபட்ட கருத்துப் பிளவுகள் உதிர்வுபெற்றன. ஆனாலும் இந்த அனைத்துக் கோடுகளும் வௌ;வேறாக பயணித்தாலும் இதய சுத்தியுடன் ஒரேயொரு மையப்புள்ளியிலேயே இடைவெட்டிக்கொண்டன. இந்த சந்திப்புப் புள்ளிதான் “முஸ்லீம் முதலமைச்சர்” என்ற பெரும் சக்தியாக பரிணமித்தது.
அந்தவகையில் மிகச்சரியான முறையில் சிந்தித்து இறுதிநேர விட்டுக்கொடுப்புகளின் மூலம் ஒரு முஸ்லீம் முதலமைச்சரை உருவாக்கியமையிட்டு முஸ்லீம் தலைமைகளை உளமாற பாராட்டியே ஆகவேண்டும்.
சிங்களவர் எமது உரிமைகளை பறிக்கின்றனர். எமது காணிகளை கையகப்படுத்துகின்றனர் என்றெல்லாம் கூச்சல்களை மட்டுமே வெளிப்படுத்தி வெட்டி வீராப்பு பேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பானது கிழக்கு மாகாண தமிழர்களின் வாழ்வுரிமையினையும் அரசியல் அதிகாரத்தினையும் முஸ்லீம் சமுகத்தினது கைகளில் ஒப்படைத்துவிட்டு ஒளிந்தோடியிருப்பது கிழக்குத் தமிழர்களுக்கு செய்து இருக்கின்ற மிகப்பெரிய துரோகமாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்பி வாக்களித்து வழமைபோல் இம்முறையும் ஏமாந்து நிற்கும் ஒவ்வொரு கிழக்குத் தமிழனும் புத்தியில் உறைக்க சிந்திப்பதெல்லாம் காலம் கடந்த ஞானமேயாகும். கண்கெட்டபின்னர் செய்ய நினைக்கும் சூரிய நமஸ்காரமும், முஸ்லீம் முதலமைச்சர் வருகையின் பின்னரான “பிள்ளையானை கோட்டை விட்டோமே” என்கின்ற உணர்வும் சரிநிகர் சமமாகவே அமையும். இதுமட்டும் உறுதி.
அஸ்வின்மித்ரா
read more...

Thursday 20 September 2012

முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டபோதும் படுகொலை செய்யப்பட்டபோதும் கூட்டமைப்பினருக்கு வராத அக்கறை முஸ்லிம்கள் மீது இன்று ஏன் வருகிறது

இன்று முஸ்லிம்கள் மீது தமிழ் தேசியக் மூட்டமைப்பினருக்கு என்றுமில்லாத அக்கறை வந்திருக்கின்றது. கிழக்கிலே தமிழ் முதலமைச்சர் ஒருவரை இல்லாமல் செய்ய வேண்டும் என்று சதித்திட்டங்களை செய்த கூட்டமைப்பினரின் கனவு பலித்துவிட்டது. இன்று கிழக்கிலே தமிழ் முதலமைச்சர் ஒருவர் இல்லாமல் செய்யப்பட்டு முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் வந்திருக்கின்றார்.

தமிழ் தேசியக் தமிழ் தேசியக் மூட்டமைப்பு இன்று முஸ்லிம் காங்கிரசை விமர்சித்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரசை விமர்சிக்கவோ முஸ்லிம்கள்மீது அக்கறைப்படவோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு க்கு எந்த அருகதையும் இல்லை.

தேர்தலுக்கு முன்னர் நான் எழுதிய ஒரு பதிவு மீண்டும் 
கிழக்கு மாகாணசபை தேர்தலில் யார் முதலமைச்சர்? முஸ்லிம்களும் தமிழர்களும் தாங்கள் முதலமைச்சர் பதவியினைப் பெற வேண்டும் என்று வயூகங்களை வகுத்துக்கொண்டிருக்கும் இக் கால கட்டத்தில் தமிழ் கட்சிகள் சிலவும் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஒரு சில அரசியல்வாதிகளும் தமிழ் முதலமைச்சரை இல்லாமல் செய்வதற்கு பல சதித் திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண விகிதாசாரத்தின் அடிப்படையில் தாம் கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்க முடியாது. முதலமைச்சரை பெற முடியாது எனபது தெரிந்தும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் வரக்கூடாது என்பதற்காகவே போட்டியிடுகின்றனர். தாம் போட்டியிடுவதன் மூலம் தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு தமிழ் முதலமைச்சர் இல்லாமல் போகலாம் என்பது கூட்டமைப்பினருக்கு தெரியும்.

தமிழ் முதலமைச்சர் இல்லாமல் போவதன் மூலம் கிழக்கின் துரித அபிவிருத்திகள் இல்லாமல் போகலாம் என்பது தெரிந்திருந்தும் கூட்டமைப்பினர் இத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை சிதறடித்து கிழக்கின் அபிவிருத்தியை இல்லாமல் செய்யவே போட்டியிடுகின்றனர்.

இப்பொழுதுதான் கூட்டமைப்பினருக்கு முஸ்லிம்கள்மீது அக்கறை வந்திருக்கிறதா? கூட்டமைப்பினர் இதற்கு முன்னர் முஸ்லிம்கள் பல அவலங்களை சந்தித்தபோது எங்கே போனார்கள்? வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோதும், பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது இந்தக் கூட்டமைப்பினர் எங்கே போனார்கள்? அன்று ஏன் முஸ்லிம்கள்மீது அக்கறை வரவில்லை. அன்று வடக்கிலிருந்து விரட்டப்பட்டபோதும் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் புலிகளுடன் பக்கப்பாட்டுப் பாடியவர்களுக்கு முஸ்லிம்கள் பற்றி பேசவோ அக்கறைப்படவோ எந்த அருகதையும் இல்லை.

முஸ்லிம்கள் அவலங்களையும் அழிவுகளையும் சந்தித்தபோது திரும்பிக்கூட பார்க்காமல் கைகொட்டிச் சிரித்தவர்களுக்கு முஸ்லிம்கள் நிம்மதியாக வாழுகின்றபோது அக்கறை வந்திருக்கின்றது. முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வது பிடிக்கவில்லைபோலும். முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பினருடன் கூட்டுச் சேர்வது தொடர்பாக பேசப்படுகின்றது. முஸ்லிம்காங்கிரஸ் கூட்டமைப்பினருடன் கூட்டுச் சேர்வார்களானால் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களுக்கு மிகப்பெரும் வரலாற்றுத் தவறினைச் செய்யும்.

முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்போதும் படுகொலை செய்யப்பட்டபோதும் கைகொட்டிச் சிரித்து வேடிக்கை பார்த்து புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் இக் கூட்டமைப்பினரே.


read more...

Wednesday 19 September 2012

மீண்டும் வந்துவிட்டேன்


மிக நீண்ட நாட்களின் பின்னர் இன்று வலைப்பதிவுகள் பக்கம் உலா வந்தேன் வலைப்பதிவுலகிலும் பாரிய மாற்றங்கள் பல புதியவர்கள் வலைப்பதிவுக்கு வந்திருக்கின்றனர். வலைப்பதிவு சண்டைகள் தொடர்வதாக உணர்கின்றேன். இன்று முதல் தொடர்ந்து எழுதவேண்டும். என்று யோசித்தேன் நிறையவே எழுதவேண்டி இருக்கின்றது. எதனை முதலில் எழுதுவதென்று யோசித்தக் கொண்டிருக்கின்றேன். நான் மீண்டும் எழுத வருவது சிலருக்கு கசப்பாக இருக்கலாம் ஆனாலும் பலருக்குஇனிப்பாக இருக்கும். தொடர்ந்தும் சமூகத்தின் பிரச்சினைகளை சார்ந்ததாக எனது பதிவுகள் வரும்



read more...

Saturday 25 August 2012

நம் தலையில் நாமே மண்ணை வாரிப்போட தயாரா?

அன்புக்கினிய தமிழ் உறவுகளே!.... சற்றேனும் சிந்தியுங்கள்….
கிழக்கு மாகாணசபை தேர்தல் இடம்பெற இருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் கிழக்கு தமிழர்களாகிய நாம் சிந்தித்து செயற்படவேண்டியவர்களாக இருக்கின்றோம். கிழக்கு மாகாணசபை தேர்தலிலே போட்டியிடுகின்ற கட்சிகள் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கின்றனவா என்று பார்க்கின்றபோது. வெறுமனே தமது சுயநல அரசியலுக்காகவே பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன.

இம் மாகாணசபை தேர்தலைப் பொறுத்தவரை கிழக்கு தமிழர்களுக்கு மிக முக்கியமான தேர்தலாக அமைய இருக்கின்றன. இத் தேர்தலை தமிழர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டிய தருணமிது. இத் தேர்தலைப் பொறுத்தவரை முதலமைச்சராக வருவது முஸ்லிமா, தமிழனா என்கின்ற கோசங்கள் ஒரு புறமிருக்க கிழக்கிலே இடம்பெற்றுவரும் துரித அபிவிருத்திகள் தொடர்வதா? இல்லையா? என்பதனை தீர்மானிக்கும் ஒரு தேர்தலாகவும், பல சவால்கள் நிறைந்த ஒரு தேர்தலாகவும் அமைய இருக்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் கிழக்கின் இன்றியமையாத முக்கிய தேவை என்ன என்பதனை நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற கொடுர யுத்தத்தின் காரணமாக எமது கிழக்கு மாகாணம் சின்னாபின்னமாக்கப்பட்டன. எமது மக்கள் நிம்மதியற்று வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று எமது பிரதேசங்கள் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. எமது மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். கிழக்கிலே இடம்பெறுகின்ற அபிவிருத்திகள் தொடரவேண்டுமா? இன்றைய எமது நிம்மதியான வாழ்க்கை தொடரவேண்டுமா? அல்லது எமது பிரதேசத்திலே இடம்பெறுகின்ற அபிவிருத்திகள் தொடரவேண்டுமா? இன்று நாம் வாழும் நிம்மதியான வாழ்க்கை தொடரவேண்டுமா என்பதனை கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும்.
கடந்த 30 வருடங்களாக நாம் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றோம் என்பதனை நாம் இன்றுதான் உணர்ந்திருக்கின்றோம். கடந்தகால அரசியல் தலைமைகள் எமது மக்களை ஏமாற்றி தாம் சுயபோகங்களை அனுபவித்து வந்திருக்கின்றனர். கடந்த 60 வருடங்களுக்கு மேற்பட்ட தமிழரசுக் கட்சியின் அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்காக எதனைச் செய்திருக்கின்றனர். ஆனாலும் தாம் சுகபோக வாழ்க்கை வாழ்ந்ததுடன் தமது குடும்பங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கின்றனர்.

தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்காக காலங்காலமாக கூட்டமைப்பினர் சிங்கள பேரினவாதம் என்றும், தமிழீழம் என்று உணர்ச்சி வார்த்தைகளை மக்கள் மத்தியிலே விததைத்து மக்களை உசுப்பேற்றி அரசியல் இலாபம் தேடுகின்றனர். சிங்களப் பேரினவாதம் என்றும், தமிழீழமே எமது மூச்சு என்றும் தமிழீழ பிரகடனம் செய்த அமிர்தலிங்கமோ, அல்லது இன்று இருக்கின்ற சம்பந்தனோ, செல்வராஜாவோ, அரியநேந்திரனோ, யோகேஸ்வரனோ தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கு பற்றினரா? அல்லது தமது பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்துக்கொண்டனரா? தாம் அரசியலில் நிலைத்து நிற்பதற்காகவும் அரசியல் இலாபம் தேடவுமே இவர்களால் தமிழீழம் எனும் கோசங்களும் பிரகடனங்களும் செய்யப்பட்டன. இவர்களின் உணர்ச்சி வார்த்தைகளை நம்பியதன் பயனாக நாம் சந்தித்தது என்ன? பல இலட்சக் கணக்கான உயிர்களையும் உடமைகளையும் இழந்தோம். எமது பிரதேசம் சின்னாபின்னமாக்கப்பட்டன.

இன்று கிழக்கிலே என்ன நடக்கின்றது என்பதனை நாம் சிந்தித்தாக வேண்டும். கிழக்கு மாகாணசபையை பிள்ளையான் அவர்கள் பொறுப்பெற்றதன் பின்னரே கிழக்கு மாகாணம் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. 60 வருடங்களுக்கு மேலான அரசியல் வரலாற்றினைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிள்ளையானின் நான்கு வருட ஆட்சியில் செய்த ஒரு வீத அபிவிருத்தியையாவது செய்திருக்கின்றனரா? அன்று கிழக்கு மாகாணசபை ஒன்று இல்லை என்று சொன்னவர்கள் இன்று கிழக்கிலே இடம்பெறுகின்ற அபிவிருத்திகளை இல்லாமல் செய்யவே பொட்டியிடுகின்றனர்.

இன்று பிள்ளையான் ஆயுதக்கழு என்று கோசமிடும் கூட்டமைப்பு வேட்பாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அவர்களின் கடந்தகால பக்கங்களை புரட்டிப் பாருங்கள் அன்புக்கினிய எம் உறவுகளே. இன்று கூட்டமைப்பினர் வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கின்றவர்கள் அன்று அயுதக் குழுக்களாக இருந்தபோது எமது மக்கள் பட்ட துன்பங்கள் அவலங்கள் எத்தனை எத்தனை கடந்த காலங்களை எண்ணிப் பாருங்கள்.

இன்று கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற ஜனாவாக இருக்கட்டும், பிரசன்னாவாக இருக்கட்டும், துரைரெட்னமாக இருக்கட்டும் இவர்கள் ஆயுதக் குழுக்களை வைத்து எத்தனை கொள்ளைகள் கொலைகளைச் செய்தனர். அவைகளை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். இவர்களின் அயுதக் குழுக்கள் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து எத்தனை ஆயிரம் தமிழர்களை கடத்தினார்கள் கொலை செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.

உறவுகளே சிந்தியுங்கள் எம்மை அன்று ஆட்டிப்படைத்த இவர்கள் மாகாணசபைக்கு சென்றால் எமக்காக என்ன செய்வார்கள் மிண்டும் எம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்வார்கள். எமது இன்றைய தேவை என்ன? நிம்மதியான வாழ்க்கையும், சிதைக்கப்பட்ட எமது தேசத்தின் அபிவிருத்தியுமே. வெறுமனே கூட்டமைப்பின் கபட நாடகங்களையும் உணர்ச்சி வார்த்தைகளை நம்பி மீண்டும் நாம் பலிக்கடாவாக மாறும் சமூகமாக இல்லாமல் உண்மைகளையும் யதார்த்தங்களையும் உணர்ந்து சிறந்த முடியுகளை எடுப்போம்.

பிள்ளையானின் நான்கு வருட மாகாணசபை அட்சியிலே எமது மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் வாழ்கின்றனர். கிழக்கு மாகாணம் துரிதமாக வழர்ச்சி அடைந்திருக்கின்றது. இவை தொடரவேண்டுமாக இருந்தால் நிட்சயமாகவே நாம் பிள்ளையானை மீண்டும் முதலமைச்சராக்க வெண்டிய பொறுப்பு எமக்கிருக்கின்றது.
தொடரும்……….



read more...

Tuesday 21 August 2012

கிழக்கில் மக்கள் ஆதரவை இழந்துவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து இருந்து இன்று வரை பல இடங்களில் அடிமேல் அடி வாங்கிய தொடர்  கதையாக மக்கள் ஆதரவை இழந்துவருகின்றது. அண்மையில் சித்தாண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை அடிப்படையாக வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் ஆதரவு இழப்பு எந்த நிலையில் உள்ளது என்பதனை இகக்கட்டுரை ஆராய்கின்றது.
 
கிழக்கு மாகாணத்திலே சித்தாண்டி பிரதேசம் என்றாலே பல சிறப்புக்களைக் கொண்ட ஒரு பிரதேசமாகத் திகழ்கின்றது. உரிமைப்போராட்ட காலத்திலே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள போராளிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை பரிமாற்றம் செய்கின்ற ஒரு மையமாகவும், எந்தவொரு எட்டப்பனும் இல்லாத ஓர் போராட்ட ஆதரவு கிராமமாகவும், உரிமைப்போராட்டத்தில் பலரை ஈந்தளித்த நிலமாகவும் இது சிறப்புப்பெற்றது. தமிழன் என்ற சிந்தனை, தமிழனின் உரிமை போன்ற பல விடயங்களில் ஏனைய தமிழ்ப்பற்றுள்ள கிராமங்களுக்கு நாங்கள் சற்றும் சழைத்தவர்கள் இல்லை என்பதனை நிரூபிக்குமளவிற்கு தமிழின பற்றுள்ள சமூகமே இங்கு வாழ்கின்றது. இத்தகைய தமிழனப் பற்றே காலம் காலமாக அரசியல் ரீதியாகவும், தமிழனுக்கு நன்மை கிடைக்கக்கூடிய  அரசியல் கட்சிகளின் பின்னால் அணிதிரளவும் வழிவகுத்தது. 
 
அந்த வகையில் விடுதலைப்புலிகள் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் அவர்களின் விருப்பு எதுவோ? அதற்கமைவாகவே தமது அரசியல் ரீதியான ஆதரவை கட்சிகளுக்கு வழங்கி வந்தார்கள். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கiயில் இருந்த காலப்பகுதியில் அவர்களின் கட்டளைக்கு ஏற்ப நடந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அனைத்து மக்களும் அணிதிரண்டார்கள். ஆனால் சித்தாண்டி பிரதேச மக்களின் தமிழ்உணர்வோ அல்லது தமிழ்பற்றோ இன்றும்  மாறிவிடவில்லை. மாறாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால் நின்றால்  கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தமிழ் முதலமைச்சரை பெறமுடியாத நிலை ஏற்படும். என்ற தெளிவு ஏற்பட்டு அவர்கள் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால்  இருந்து ஒதுங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.  அதாவது கிழக்கு மண்ணை ஆட்சி செய்யக்;கூடிய தகுதியும், செல்வாக்கும் உடைய ஒரே ஒரு தமிழனான பிள்ளையான் அவர்களை தோற்கடித்து, முஸ்லிம் ஒருவனை முதல்வவராக்கும் சதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதை அறிந்தே மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை விட்டு விலகியிருக்கின்றார்கள். 
 
கடந்த 14.08.2012 அன்று சித்தாண்டியின் முருகன் ஆலய முன்றலில் பெரும் எடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்; ஒன்று ஒழங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தமிழர்விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன, செல்வம் அடைக்கலநாதன்,சுரேஸபிரேம சந்திரன, மாவை சேனாதி உள்ளிட்ட பெருமளவிலான வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிரசாரத்திற்கென வந்திறங்கியிருந்தார்கள். குறிப்பாக 17 சொகுசு வாகனங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் வெளிமாவட்டஙகளிலிருந்து வந்திறங்கினர். தலா ஒவ்வொரு வாகனங்களுக்குள்ளும் 12 பேர் சகிதம் மொத்தமாக 204 பேர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் வெளிமாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டனர். ஆனால் அங்கு சித்தாண்டி பிரதேசத்தில் தேர்தலுக்காக ஒன்று கூடிய மக்கள் என்றால் மிகமிகக் குறைவு. அதாவது சுமார் 20 இற்கும் குறைந்த மக்களே அவர்களுடைய பிரசாரத்தில் சித்தாண்டி பிரசேத வாசிகள் என்று சொல்பவர்கள் அமர்ந்திருந்தார்கள. இவர்கள் கூட மறுநாள் இடம்பெற இருக்கும் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வகளுக்காக வந்தவர்களும், மாலைப்பொழுதில் மரங்களின் கீழ் உட்கார்ந்து கதைத்துக்கொண்டிருக்கும் வயோதிபர்களுமேயாகும். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் மிகவும் அதிக செல்வாக்கைப் பெற்றிருந்த சித்தாண்டி பிரதேசத்தில் தமது செல்வாக்கை முற்றாகவே இழந்ததை எடுத்துக் காட்டுகின்றது. உண்மையில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வெறுப்பதற்கு காரணமே கிழக்கு வாழ் தமிழர்களின் தமிழ் தலைமைத்துவத்தை அகற்றி முஸ்லிம் தலைமைத்துவதற்கு வழிவகுப்பதற்கு போடப்பட்டுள்ள சதிகளை அறிந்ததேயாகும். 
 
இவற்றை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இத்தேர்தலில் பிரசாரத்தில் மக்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்ற காரணத்தினாலேயே தமது வாகனங்களில் ஆதரவாளர்களை வெளிமாவட்டங்களில் இருந்தெல்லாம் சுமார் 200 பேர் வரையிலான ஆதரவாளர்களை அழைத்து வந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இங்குள்ள மக்கள் தம்மீது நம்பிக்கை இழந்து விட்டர்கள் . சிலவேளைகளில் தமது பிரசாரங்களிலே குழப்பங்களை ஏற்படுத்துவார்கள் என்ற பீதியின் காரணமாகவே முன்கூட்டியே பாதுகாப்புக்கூட அரசதரப்பிலிருந்து பெற்றிருந்தார்கள். குறிப்பாக 300 இற்கும் மேற்பட்ட காவல்துறையினர், 50 இற்கும் மேற்பட்ட புலனாய்வு அதிகாரிகள், கலகம் அடங்கும் பிரிவு மற்றும் தீயணைப்ப படை போன்ற பல பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு காணக்கூடியதாகவிருந்தது. உண்மையில் தமிழர்கள் தமது கட்சியை நேசிக்கின்றார்கள், தமக்கு ஆதரவு இருக்கிறது என்றால் ஏன் இத்தனை பாதுகாப்புக்கள் போடவேண்டும். தமது மக்கள் தம்மீது அதிருப்தியுற்றுள்ளார்கள் சிலவேளைகளில் தமக்கு அவர்களால் ஆபத்து நிகழலாம் என்ற தோரணையிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமது பிரசாரக்கூட்டத்திற்கு இத்தகைய முன்பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தமை  தெட்டத்ததெளிவாகப் புலப்படுகின்றது.
 
அரசியல் பிரசாரத்திற்காகவும், மக்களிடத்தில் அனுதாபம் தேடுவதற்காகவும் தமது வாகனங்களையும். தமது அலுவலகங்களையும் தாமே சேதமாக்கிவிட்டு பொலிசில் முறைப்படுவதும் மேடைகளில் உளரித்திரிவதையும் அண்மை;காலத்தில் செய்து வருகின்றார்கள். 
சித்தாணடிபிரதேசத்திலே இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மற்றும் பாரிய குழுவினர் வருகை தந்திருந்தும் மக்கள் அதனைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சதிச்செயலை மக்கள் அறிந்து தெளிவுபெபற்றுள்ளார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவதுடன், கிழக்கு மண்ணில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மண்ணைக் கவ்வ இருப்பதையும் எடுத்து விளக்குகின்றது.
 
- ஆராவாணன்
read more...