Monday 25 January 2010

விடை பெறும் நேரம்

இதுவரை என்  வலைப்பதிவுக்கு வந்து என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள்.
read more...

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே????...

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே????...


 


நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்????...
read more...

Monday 18 January 2010

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க வேற்றுக்கிரகவாசிகள் வருகை

வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பில் இப்போது பல்வேறு பட்ட தகவல்கள், செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. ஆனாலும் இவைகளை நான் பெரிதாக அலட்டிக்
 கொள்வதில்லை.

நேற்று முன்தினம் இரவு எங்கள் கிராமத்திலே சிறிய மனிதர்கள் சிலரின் நடமாட்டத்தை சிலர் அவதானித்ததாக பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது எந்தவிதமான நம்பிக்கையும் இன்றியே சென்றபோது. சில விடயங்கள் என்னை சிந்திக்க  வைத்துவிட்டன.

சுமார் பத்துக்கும் அதிகமான சிறிய மனிதர்களை அவதானித்ததாக கண்டவர்கள் சொன்னார்கள். அங்கே இருந்த காலடித்தடங்கள் போன்றவற்றைப் பார்க்கும் போது என்னாலும் உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஆனாலும் இது வேற்றுக்கிரக வாசிகளின் காலடித்தடமா  அல்லது வேறு ஏதாவதா என்பதுதான் தெரியவில்லை. எல்லோரும் இதை வேற்றுக்கிரக வாசிகளின் காலடித்தடமாக இருக்கலாம் என்றே சொல்லிக்கொள்கின்றனர்.

அன்றிரவு முழுவதும் வேற்றுக்கிரக வாசிகளை தேடிக்கண்டு பிடிப்பதிலேயே பலர் ஈடுபட்டனர்.

இங்கே எனது முந்திய இடுகையிலே நான் இடுகையிட்ட படங்கள் நான் நேரடியாக சென்று வேற்றுக்கிரகவாசிகளின் காலடித்தடம் என்று நம்பப்படுகின்ற காலடித்தடங்களை புகைப்படம் எடுத்த உண்மைப் படமே.

இது ஒரு நகை சுவைப் பதிவல்ல. வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய செய்திகளை நம்பாத எனக்கு. இந்த சம்பவம் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய தேடலை அதிகரித்திருக்கிறது.

அண்மைக்காலமாக இலங்கையிலே பல இடங்களில் இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இலங்கையைப்  பற்றி வேற்றுக்கிரகவாசிகள் ஆய்வு செய்கின்றனரோ என்று ஏன் நண்பன் என்னிடம் கேட்டான்  . இல்லை ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்க வந்திருக்கின்றார்கள் என்று நான் சொன்னேன்.

உண்மையாகவே வேற்றுக்கிரகவாசிகள் இருக்கின்றனரா? 

காலடித்தடங்களை வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கின்றன.

read more...

மட்டக்களப்பில் வேற்றுக்கிரகவாசிகளின் கைவரிசை

றுமுதல் எங்கள் பிரதேசங்களிலே பரபரப்பாக  பேசப்படுகின்ற விடயம் வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய விடயமே.

 கிழக்கு மாகாணத்திலே பல இடங்களில் வெற்றுக்கிரகவாசிகளின் நடமாட்டத்தை பலர் கண்டதாக பல செய்திகள் வந்தன.  இந்த  செய்திகளில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கவில்லை.

நேற்றைக்கு  முன்தினம் இரவு பத்து மணியளவில் வேற்றுக்கிரக வாசிகள் பலர் எமது கிராமத்தில் உலாவுவதை பலர் கண்டதாக செய்தி பரவ ஆரம்பித்தது.

வெற்றுக்கிரகவாசிகளின் நடமாட்டம் இருந்த இடத்துக்கு சென்றால். அங்கே பல சிறிய காலடித்தடங்கள் இருந்தன. நேரில் கண்டவர்களை விசாரித்தால் பத்துக்கும் மேற்பட்ட சிறிய உருவம் கொண்ட (இரண்டடி இருக்குமாம்) பலரை கண்டிருக்கிறார்கள் நமது மனிதர்களின் நடமாட்டத்தைக் காண மாயமாக மறைந்து விட்டார்களாம்.

மழை அவ்வப்போது பெய்துகொண்டிருந்ததால் ஏன் நண்பன் காலடித்தடங்களை உடனடியாக இரவிலேயே புகைப்படம் எடுத்துவிட்டார்.

இதோ படங்கள் காலடித்தடங்களை வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கின்றன.

read more...

Friday 15 January 2010

நீங்களும் இலவசமாக இணைய வானொலி ஆரம்பிக்கலாம்


இன்று வானொலி என்பது எல்லோரையும் கவர்ந்துவிட்ட ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் இன்றைய உலகில் இணைய வானொலிகளின் வருகை அதிகரித்து வருகின்றது.


சிலர் எனக்கும் ஒரு இணைய வானொலி ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் போதிய பணம் இல்லையே என்று சொல்வார்கள். கவலையை விடுங்கள் நீங்களும் இலவசமாக ஒரு இணைய வானொலி ஆரம்பிக்கலாம்.

இந்த விடயத்தை நான் ஏற்கனவே அறிந்திருந்தாலும் அடிக்கடி நண்பர் சிதறல்கள் ரமேஸ் எப்படி இணைய வானொலி ஆரம்பிக்கலாம் என்று என்னிடம் கேட்டுக்கொண்டே இருப்பார்.

நான் ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருக்கும்போது அவர் இலவச இணைய வானொலி ஆரம்பிப்பது பற்றி பல விடயங்களை அறியத் தந்தார்.

சரி இப்போது விடியோவைப் பாருங்கள் உங்களுக்கும் ஒரு இணைய வானொலியை உருவாக்குங்கள்


read more...

Thursday 14 January 2010

காதலில் உங்கள் குணம் எப்படி இலகுவாக அறியும் வழிகள் உங்களுக்காக


காதலில் உங்கள்  குணம் எப்படி என்று இலகுவாக அறிந்து கொள்ளலாம். நீங்களும் காதலிக்கின்றிர்களா, அல்லது உங்கள் நண்பர்கள் காதலில் என்ன குணம் என்று அறிய ஆவலா? இலகுவாக பிறந்த திகதியை வைத்து அறியலாம்.

உ+ம் 2.2.1969 2+2+1+9+6+9+=29 இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 2+9=11 1+1=2 இதுதான் இவருடைய காதல் எண் {love number}

 லவ் நம்பர் ஒன்று ==>>சின்னம் ==>மான்

பெண்ணுக்குரிய குணம் ==>> வாழ்கையை நுனிக்கரும்பு வரை சுவைத்திட ஆர்வமுள்ளவர் வரப்போகும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்பவர் அப்படிப்பட்டவரை ஆதாரனை செய்யத் தவறமாட்டீர்கள் லட்சியப்போக்கும்,சாதுர்யமும்,நகைச்சுவையும் நிரம்பியவர்

ஆணுக்குரிய குணம் ==>> காதல் கல்யாணத்தில் நிறையத் தோல்வி jgகாண்பீர்கள் ஆனால் நீங்கள் மனைவியிடத்தில் விசுவாசத்தோடும்,பெருந்தன்மையோடும்,நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள் படுக்கையில் மனைவி நல்ல ஒத்துழைப்பை அளிப்பாள் மனைவியின் நடத்தையைக் கலர் கண்ணாடி கொண்டு பார்க்காமல் இருந்தால்,வாழ்க்கை சொர்க்கம்தான் மண்டைகனத்தையும் தவிர்த்தால் எல்லாம் இன்பமயம்

லவ் நம்பர் இரண்டு ==>> சின்னம் ==>> பட்டாம்பூச்சி
பெண் ==>> கணவர் எள் கொண்டு வா என்றால் எண்ணெய் இதோ என்று சொல்லும் சுபாவம் உடையவர்.அடிக்கடி உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டாற்சிணுங்கி நீங்கள் உங்கள் ஒவ்வொரு பணியையும்,உங்கள்அலங்காரத்தையும்,உங்கள் கணவர்{அ} காதலர் வாய் நிறைய மெச்ச வேண்டுமென்று எதிர்பார்பவர் நீங்கள் நல்ல நகைச்சுவை நிரம்பியவர் நீங்கள் இருக்குமிடத்தில் சதாசர்வ காலமும் கலகலப்புத்தான்.

ஆண் ==>> நீங்கள் ஒரு காதல் மன்ன்ன அதோடு உங்கள் காதலியின் முறையீடுகளை அனுதாபத்தோடு கேட்டு, தீர்வு காணத்தவறமாட்டீர்கள் மனைவியின் உடல் சுகத்தைப்பெற சந்திரனைக்கூட கையில் பிடிக்க முயல்வீர்கள்.ஆனாலும் கொஞ்சம் பொறாமைக் குணம் உண்டு.

லவ் நம்பர் மூன்று ==>> சின்னம் ==>>மீன் தின்னி பிராணி}{otter}

பெண் ==>> ஆண்மை நிறைந்தவன்னையே எதிர்பார்பீர்கள்,அழகுகூட இரண்டாம் பட்சம்தான்.நாகரீகத்தை எதிர்பார்பீர்கள்,வீட்டுப் பணியுடன்,வெளிப்பணியையும் திறம்பட வகிக்கக் கூடியவர் உச்சிமீது வானிடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் பாட்டுக்கு இலக்கணம் நீங்களேதான்.

ஆண் ==>> ஓர் உத்தம புருஷனின் கல்யாணகுணங்கள் அத்தனையும் பொருந்தியவர் எல்லோருக்கும் பரிசுகளையும் பண்டங்களையும் வாரி வழங்கும் கர்ணன் எல்லா விஷயங்களையும் பேதமின்றி விளையாட்டாகவே எடுத்துக்கொள்வார் சுவையான பேச்சாளர் பொறாமை என்றால் அது என்ன விலையென்று கேட்பவர்

லவ் நம்பர் நான்கு ==>> சின்னம் ==>> தேனீ

பெண் ==>> உங்களை நேசிப்பவரிடம் விசுவாசமாகவும்,நன்றியுள்ளவராகவும்,அனுசரணையுள்ளவராகவும்,இருப்பீர்கள்.நீங்கள் இருக்குமிடத்தில் கும்மாளமும் வேடிக்கையும் ,சிரிப்புந்தான்.

ஆண் ==>> நீங்கள் உணர்ச்சிவசப்படும் டைப் முன் யோசனையுடையவர் குழந்தைகளையும்,மனைவியையும் அதிகமாக நேசிப்பவர். விசாலமனமும்,பெருந்தன்னையும் நிறைந்தவர்.உங்கள் மனதை பறிகொடுத்தவருக்காக உயிரைக் கூட தியாகம் செய்யத்தயங்காதவர்.பரிபூரண சுதந்திரத்தை வழங்குபவர்.உங்களைக் கணவராக அடைய ரொம்ப கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

லவ் நம்பர் ஐந்து ==>> சின்னம் ==>> குருவி

பெண் ==>> பெண்மை பரிபூரணமாக குடிகொண்டுள்ளவர்.

இவரை மனைவியாக அடையப்போகிறவர்கள் ரொம்பவும் அதிஷரசாலிதான் உலகை ஒரு சுற்றுசுற்றிவர,பேராசை கொண்டவர் யாராவது சுவையாகச் சமைத்து வைத்தால் நாக்கை நொட்டை விட்டுக்கொண்டு சாப்பிடத் தயாராகும் உங்களுக்கு

சமையல்.வீட்டுவேலையெண்றால் எட்டிக்காய்தான் இவளை மனைவியாக அடைந்த நான் சந்தேகமில்லாமல் பாக்கியசாலிதான் என்று உங்கள் கணவர் நினைக்கும் அளவுக்கு நீங்கள் ஐர்க்பாட்.

ஆண்   ==>>  பெண்களிடையே நீங்கள் ரொம்பவும் பாப்புலர் டைப் உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம் உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும்,அளிக்கலாம் ,ஆனந்த்ததையும் அளிக்கலாம் உங்களுக்கு வாழ்கை ஒரு சவால்தான்! .

லவ் நம்பர் ஆறு ==>> சின்னம் ==>> வாத்து

பெண் ==>> குப்பை மேட்டைக்கூட கோவிலாக்கும் கலைநயம் படைத்தவர் என் கணவர்,என் கு்ழந்தைகள்ளாதான் உலகம் என்று வாழ்ந்து காட்டக் கூடிய உண்மையான தாய் நீங்கள் அதது அதனிடத்தில் இருக்க வேண்டுமென்பதில் தீவிரம் காட்டுவீர்கள். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற கொள்கையால் கணவனைத் திக்குமுக்காட வைப்பீர்கள் ஓர் ஆதர்ச மனைவி என்பதற்கு உண்டான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் .

ஆண்  ==>> காதல் பவித்திரமானது,பெண்ணை மலரெனக் கையாளும் பாங்குடையவர் உடலைக் காயப்படுத்தக் கூட உங்கள் மனம் இடம் கொடுக்காது. அழகை ஆராதனை செய்யும் அதே சமயத்தில் கவிதைகளையும் எழதித் தள்ளுவீர்கள் மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற வாசகம் உங்களுக்காகவேதான்.

லவ்நம்பர்  ஏழு  ==>> {சின்னம் ==>>ஆந்தை}

பெண்  ==>> உடுப்பது,உண்பது,பேசுவது,காதலிப்பது எல்லாமே ஏனோதானோதான். பணம்,பதவி,பகட்டு எல்லாமே உங்களுக்கு அனாவசியம்தான்....சராசரிப் பெண்ணின் ஆபாசங்களிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கும் ஆபூர்வப்பிறவி நீங்கள் எந்த ஒரு விக்ஷயத்திலும் கட்டுப்பாடற்ற தனிக்காட்டு ராணி நீங்கள் வெளிவேக்ஷம் போடத்தெரியாத வெகுளிடைப் நீங்கள் மற்றவர்களின் கருத்து திணித்தலை ஒதுக்கி தன்னிச்சையாக நீங்கள் செயல்படும்பொழுது அடங்காப்பிடாரி என்ற பட்டத்தைப் பெறுவீர்கள்.

ஆண் ==>>சதாசர்வகாலமும் கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கும் டைப் அதோடு புத்தகமும் கையுமாய் காரணகாரியத்தில் ஆராய்ச்சில் மூழ்கிவிடுவீர்கள். ஒரு பெண் உங்களைக் காதலிக்க நேர்ந்தாலும் அவள் என்னை ஏன் காதலித்தாள்,எந்த அம்சம் பிரதானம் ,எந்த அடிப்படையில் காதலித்தாள் என்ற ஆராய்ச்சியில் மூழ்கி,அனுபவிக்க வேண்டியதையெல்லாம் கைநழுவ விட்டுவிடுவீர்கள்.திருமணவாழ்கை வெற்றியடைவது அதிக்ஷடத்தைப் பொறுத்த்து.

லவ்நம்பர் எட்டு ==>> சின்னம் ==>>எறும்பு

பெண் ==>> களைபொருந்திய,கவர்ச்சி நிரம்பிய முகம் முதல் சந்திப்பில் நீங்கள் திமிர்பிடித்தவர் போல் பழகுவீர்கள்,ஆனால் பழகப்பழகத்தான் நீங்கள் இனியவர் என்று நிரூபிப்பீர்கள். இக்ஷடப்பட்டதை அடையத்தவறமாட்டீர்கள்.அதிகாரமும்,பணமும் உள்ளவரைத் தான் நீங்கள் தேர்தெடுப்பீர்கள் நீங்கள் உணர்ச்சிவசப்படும்பொழுது ஒருவரை இமயமலையின் உச்சியில் கொண்டு உட்காரவும் வைப்பீர்கள். அல்லது அவரை அதலபாதாளத்திலும் தள்ளுவீர்கள்.

ஆண் ==>> காதலுக்காக ,சாம்ராஐயத்தை இழந்த வின்ஸ்டர் கோமகனை உங்களுக்கு ஒப்பிடலாம் நல்ல தாம்பத்தியத்துக்கு நந்தியாக நிற்பது உங்களின் பொறாமைக்குணம்தான் சமூக‌அந்தஸ்திலும், பொருளாதார மட்டத்திலும் உயர்ந்து நிற்கும் நீங்கள் சொர்க்க வாழ்க்கை அடைவீர்கள். வெற்றிகளும்,தோல்விகளும் அடுக்கடுக்காக எதிர்பட்டாலும்,சிறிதும் மனம் தளராமல் லட்சியவாதியாகச் செயல்பட்டு வெற்றியின் சிகரத்தை எட்டிப்பிடித்திடுவீர்கள்.நீங்கள் பிறக்கும்பொழுதே சாமர்தியமும்,புத்திசாலித்தனமும் உங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் நீங்கள் வெற்றித்திருமகனாக விளங்குவதில் வியப்பில்லை.

லவ் நம்பர் ஒன்பது ==>>சின்னம் ==>>கீரிப்பிள்ளை

பெண் ==>> இவளுடன் சேர்ந்து வாழும் வாழ்கைதான் சொர்க்கம் ,என்று துணைவர் கூறும் அளவுக்கு நீங்கள் சலிப்பைத் தராதவர் காதல் உணர்ச்சி மிக அதிகமாக உள்ளவர் பள்ளி நாள் நட்பையும், பள்ளியறை நட்பையும் எப்பொழுதும் நிறுத்திக் கொள்பவர்.

ஆண் ==>>உங்களது ஏகபத்தினி விரதத்துக்கு பங்கம் ஏற்படுத்த அநேக சூழ்ச்சிகள் வீசப்படும் கவனம் தேவை விசுவாமித்திரர்_மேனகையை நினைவில் கொண்டு உங்கள் வாழ்கைத் துணையை எல்லா வகைகளிலும் திருப்தி செய்வீர்கள். எறும்பின் சுறுசுறுப்போடும்,லட்சியத்தோடும்,உறுதியோடும் செயல்பட்டு அடையவேண்டியதெல்லாம் அடைவீர்கள் எந்தப் பணியை ஒப்படைத்தாலும் திறம்பட நிர்வகித்து நல்ல நிர்வாகி என்ற பாராட்டைப் பெறுவீர்கள்.அரசியலில் நுழைந்தால் மக்கள் அபிமானத் தலைவனாக்க கொடிகட்டிப் பறக்கலாம்.

ஆதாரம் _the book of love

நன்றிகள் கலா..
read more...

Wednesday 13 January 2010

காதலிக்கு காதல் கடிதம் எப்படி எழுதலாம். சில பிரபலங்களின் காதல் கடிதங்கள்

அனைத்து நண்பர்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்த்துக்கள்.


சேவை விஸ்தரிப்பு.


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினது பிராந்திய சேவையான பிறை எப். எம் (நான் தற்போது பணியாற்றும் வானொலி)  102 Mhz அலை வரிசையில் மாத்திரமே ஒலித்து வந்தது. ஆனால் தப்போது எப். எம் 97 Mhz அலைவரிசை மூலம் தனது சேவையை நீடித்திருக்கின்றது. எப். எம் 97 Mhz அலை வரிசை மூலம் புத்தளம்,குருநாகல்,வவுனியா,மன்னார்,மட்டக்களப்பு,திருகோணமலை, ஆகிய மாவட்டங்களிலே மிகவும் தெளிவாக நிகழ்சிகளை நேயர்கள் கேட்க முடியும்.

மிக, மிக விரைவில் இணையத்திலும் பவனி வர இருக்கின்றது

பிரபலங்களின் காதல் கடிதங்கள்




காதலர்கள் தங்களுக்குள்ளே கடிதங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கடிதம் எழுதுவார்கள் ஆனால் எனக்கு அனுபவம் இல்லை.

சில பிரபலங்கள் தங்கள் காதலிகளுக்கு அனுப்பிய கடிதங்களை தருகிறேன். காதலர்களே நீங்களும் இப்படி கடிதம் எழுதலாம்.

இதனை எனக்கு அனுப்பி வைத்த சிங்கப்பூர் கலாவுக்கு நன்றிகள்.

01. காதலி பானி பிரானுக்கு ஆங்கிலக் கவிஞர் ஐர்ன்கீட்ஸின் கடிதம்


என் இனிய காதலியே!

உலகத்தில் எந்தப் பொருளுக்கும் உனது காதல் கடித்ததுக்கு உள்ள சக்தி கிடையாது என்றே நினைக்கிறேன். எனது நெஞ்சிலே உனது வடிவம்தான் நிரம்பி நிற்கிறது உனது அதரங்களிலே நான் சுவைப்பது காதல்.உனது நடையழகிலே நான் சொக்கி நிற்கிறேன்.

உன் காதல் கடித்தில் மின்னுகின்ற உன் அழகிய கையெழுத்தையே ஆர்வத்துடன் முத்தமிட்டேன்,இன்புற்றேன்.அதை தேனாகவே கருதிச் சுவைத்தேன். நாம் தனியாக ஒரு நாளை இனிய இன்ப அதிர்ச்சியில் செலவழிப்போம்.

நீ எனக்கு ஓராயிரம் முத்தம் வழங்கி இருக்கின்றாய்,இன்னும் ஒரு முத்தம் தரமாட்டாயா? நீ உனது காதல் கரங்களில் என்னை அணைத்துக் கொள்ளாவிட்டால்,என் தலையில் இடி விழுந்து நான் சிதறிப்போவதே நலம்!

02...மனைவி யென்னிக்கு கார்ல் மார்க்ஸின் கடிதம்;

இவ்வுலகில் பல பெண்கள் உள்ளனர் என்பதும்,அதில் சிலர் அழகாக உள்ளனர் என்பதும் அனைவரும் அறிந்த்தே! ஆனால் முகத்தில் உள்ள ஒவ்வொரு சுருக்கமும்,ஒவ்வொரு மணித்துள்ளியும் என் உள்ளத்தே ஆற்றல் மிக்க இனிய நினைவுகளை எழுப்பக் கூடியனவே,தவிர வேறில்லை.

வேதங்களோ கிறிஸ்துவர்களின் புனர்வாழ்வுத் தத்துவமோ எனக்குத் தேவையில்லை. என் அன்பே! உனக்கும் குழந்தைகளுக்கும் ஆயிரம்,ஆயிரம் முத்தங்கள்.

03....ருசியக் கதாசிரியர் டால்ஸ்டாப் தன் காதலிக்கு........

சோன்யா!

கடந்ந மூன்று வாரங்களாக ஒவ்வொரு நாளும் நான் பேசிவிட வேண்டும் என்று தீர்மானிக்கின்றேன்,நான் ஏன் அதைப் பேசவில்லை; என்ன பேசுவது,எப்படிப் பேசுவது என்பவற்றையெல்லாம் சிந்திக்கின்றேன்.

இந்தக் கடிதத்தை என்னிடமே வைத்துக்கொண்டு,மறு முறையும் எனக்கு பேசத் துணிவில்லை எனில் இதைக் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணுகின்றேன். உண்மையாக்க கூறு நீ எனது மனைவியாக விரும்புகிறாயா? உனது பதில் நெஞ்சின் ஆழத்திலிருந்து வரவேண்டும். தீர்க்கமாக சிந்தித்து விடை கொடு.உன்னை நான் நேசிக்கும் அளவுக்கு நான் கணவன் என்ற முறையில் உன்னால் நேசிக்கப்படாவிட்டால்,அது மிகவும் கொடியது.

04.........நெப்போலியன் தன் காதலி யோசபினுக்கு எழுதிய காதல் கடிதம்

அன்பே!

நேற்று போர்களத்தில் கடுமையான வேலை,கொஞ்சம் கூட ஓய்வில்லை.உணவோ,உறக்கமோ இன்றி ஓரு வாரமாக இருந்தும், நான் சுறுசுறுப்பாக வேலை செய்வது கண்டு எங்கள் குழுவினர் அனைவருமே ஆச்சரியப்பட்டனர்.

அது என்னால் எப்படி சாத்தியப்படுகிறது என்று எல்லோரும் திகைத்தனர். என்ன?.....உனக்கு ஏதாவது புரிகிறதா? நீ எழுதும் கடிதங்கள் என் சட்டைப்
 பையிலேயே இருப்பது வழக்கம் சோர்வு ஏற்படும் போது நான் உன் கடிதங்களை எடுத்துப் படிப்பேன்.

அவ்வளவுதான் சோர்வு பறந்துவிடும் புத்துணர்ச்சி உடலெல்லாம் பரவும்
அப்புறம் பசியாவது தாகமாவது! ஒரு விஷயம் என் துயரங்களைக் கண்டு நீ மனதை அலட்டிக் கொள்ளக்கூடாது.

துன்பம் என் நண்பன் அதை நான் வெறுக்கமாட்டேன்.உலகத்தில் அபார சாதனைகளைச் சாதிப்பதற்காகவே பிறந்த எனக்குத் துன்பந்தான் தூய நண்பன். இன்பம் என் விரோதி.அது என்னைச் சோம்பேறியாக்கி விடும் அதை நான் வெறுக்கின்றேன் இரவில் அதிக நேரம் கண் விழிக்காதே,உடம்பை ஐர்க்கிரதையாக்க கவனித்துக்கொள்.

அன்புள்ள

நெப்போலியன்


05..........கால் மார்க்ஸ் எழுதிய காதல் கடிதம்

கெஐட் பத்திரிகையின் ஆசிரியர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.இப்படி ஒரு பதவியில் அமர்ந்து நிர்வாகம் செய்வதே எனக்குப் பிடிக்காத விஷயம்.இப்படி ஒரு பிடிக்காத விஷயத்தில் நான் ஈடுபட்டதற்குக் காரணம் நீ தான்.என் பிரிவு உன்னை எவ்வளவு தூரம் வாட்டுடுகிறதென்று எனக்குத் தெரியும்.

வாழ்கை நடத்துவதற்கு ஏற்ற பொருளாதாரச் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்ட பிறகுதான் உன்னை மணப்பதென்பது என் தீர்மானம்.என்பது உனக்குத் தெரியும். உன்னை மணக்க வேண்டும் என்ற நினைவு பலமாக உந்தியதால் தான் கெஐட் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். என் பொருட்டு பல இன்னல்களை அனுபவிக்கின்றாய் எனக் கேள்விப் பட்டேன்.வருத்தப்படவில்லை,மகிழ்ச்சி அடைந்தேன்.இதுதான் உண்மை வாழ்க்கை.பிறர் பரிகாசம் செய்கிறார்களே என்று அஞ்சாதே,உன் மனதை உறுதிப்படுத்திக் கொள்.

உன் நினைவில் இருக்கும்

காரல் மார்க்ஸ்

06.........மாக்ஸிம் கார்க்கியின் காதல் கடிதம்

அன்புள்ள ஓல்கா!

உனக்கு கடிதம் எழுதவேண்டும் என்ற ஆசை என் மனத்தில் எழும்போது கூடவே கொஞ்சம் வேதனையும் எழுகிறது,உனக்குப் படிக்கத் தெரியாது. என் அன்புக் கடிதத்தைப்புரிந்து கொள்ள நீ வேறுயாருடைய உதவியாவது நாடவேண்டும் இந்தத் தடங்கலின் காரணமாக என் இதய உணர்ச்சிகளை அடக்கிக் கடிதம் எழுதவேண்டியிருக்கிறது உனக்கு இயற்கையாகவே அமைந்துள்ள அழகுமாதிரி கல்வியும் இருக்கக்கூடாதா,என்று என் மனம் ஏங்குகிறது.ஆனால் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. என்னிடம் கல்வி இருக்கிறது,உன்னிடம் அழகு இருக்கிறது இரண்டும் ஒன்று சேர்ந்தால் அதுவே ஓர் ஒப்பற்ற சக்தியாகத் திகழும்.உன் நீலநிறக் கண்களில் வீசும் இன்ப ஒளி கல்வியை விட உயர்ந்த்து என்பது என் கருத்து.

அன்புள்ள

கார்க்கி

07.........மார்சல் டிலெக்லூர் எழுதிய காதல் கடிதம்

ஆண் ஆனாலும் சரி பெண் ஆனாலும் சரி காதல் கடிதம் எழுதுவது சாதாரண விஷயம் ஆனால் உலகிலுள்ள எந்தக் காதல் கடிதமும் மார்ஷல் டிலக்லூர் என்பவர் தமது காதலிக்குஎழுதிய கடிதத்துக்கு இணையாகாது. மார்ஷல்டிலெக்லூர் ஒரு பெர்ஷிய ஓவியர்.1875ம் ஆண்டில் இவர் உலகிலேயே மிகப் பெரிய காதல் கடிதத்தை எழுதினார்.

அந்தக் கடிதத்தை நீங்கள் படித்துமுடிக்க வெகு காலமாகும். அவ்வளவு பெரிய அந்தக் கடிதத்தில் இருக்கும் மொத்த வார்த்தைகள் எவ்வளவு தெரியுமா?56,25,000 அதாவது இவ்வளவு வார்த்தைகளில்70 நாவல்கள் எழுதிமுடித்து விடலாம்.

இந்தக் கடிதத்தை எழுத ஒரு குமஸ்தாவை சம்பளம் கொடுத்து வைத்திருந்தார். மாலிக்டி வில்லடோ என்ற மங்கைக்காகத்தான் இந்தக் காதல் கடிதம் எழுதப்பட்டது. நான் உன்னைக் காதலிக்கிறேன் என்ற மூன்று வார்த்தையை மட்டும் 18,75,000 இடங்களில் குறிப்பிட்டுள்ளார். மிகவும் வேடிக்கையான காதல் கடிதம்தான்.
read more...

Tuesday 12 January 2010

பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி சில ஆலோசனைகள்.


ஆண்களுக்குத்தான் அதிகமாக ஆலோசனைகள் வழங்குகிறேன் ஆனால் பெண்களுக்கும் நல்ல ஆலோசனை தரவேண்டும் என்று பல பெண்கள் வேண்டிக்கொண்டனர். சில நன்பிகளோ என்னோடு பேசுவதே இல்லை அவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

இன்று சில (பல) பெண்கள் ( பெண்கள் என்னை திட்டவேண்டாம் எல்லோரும் இல்லை என்று சொல்ல்கிறேன்). ஆண்களை ஏதோ ஒரு வகையில் தன் பின்னால் அலைய வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சில அப்பாவி ஆண்கள் நாய் போல் அலைந்து. கடைசியில் எல்லாம் இழந்து, எல்லாம் புரிந்து..... என்னவோ எல்லாம் நடக்குது...

சில பெண்கள் தங்கள் நண்பிகளிடம் கேட்டுக்கொள்வார்கள் "அடப்பாவி எப்படிடி இப்படி உன்னாலமட்டும் இப்படி ஆண்களை உன் பின்னால அலைய வைக்க முடியும் என்று" அது பெரிய வேலை இல்லை தங்களால் முடியவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

பெண்கள் ஆண்களை தன் பின்னால் அலைய வைப்பது எப்படி

01 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.

02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.

03 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக  இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை... அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.

04 .  நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள்.

05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.

06 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது  ஹாய்  மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள்.

07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள்.

08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று  கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.

09. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம்.

10 . இதுதான் முக்கியமானது....  எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

இது ஒரு  நகைச்சுவை பதிவு மட்டுமே....


சில தவிர்க்க முடியாத காரணங்களால் எனது வழமையான, சீரியசான பதிவுகளை நான் எழுதமாட்டேன். சில காலத்துக்கு அதிகமாக நகைசுவைப் பதிவுகளே வரும்.



சில காலமாக நான் நண்பர்கள் எவருக்கும் கருத்துரையிடுவதில்லை. ஆனாலும் அத்தனை பதிவுகளையும் பார்த்து வருகிறேன். விரைவில் கருத்துரைகளோடு சந்திப்பேன்.
read more...

நாளைய தலைவர்களுக்காக நாம்

இன்று எமது சிறார்கள் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. உறவுகளை இழந்த சிறார்கள் ஒருபுறம். பாடசாலையை இடை நடுவிலே கை விட்ட சிறார்கள் ஒருபுறம்,  குடும்ப சுமையைபோக்க  தொழிலாளர்களாக்கப்பட்ட  சிறார்கள் மறுபுறம் என்று நாளைய எமது தலைவர்களின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது.


இந்த நிலை நாம் மாற்றி அமைக்க வேண்டும். எமது நாளைய தலைவர்களுக்காக, நாளைய சந்ததிக்காக சிந்திப்போம்.... எங்களால் முடிந்தவற்றை செய்வோம்....

மேலதிக விபரங்கள்...
read more...

Monday 11 January 2010

நம்மவர்கள் எங்களோடு......

 நான் அதிகமாக கவிதைகளை இரசிப்பவன். அண்மையில் ஒரு வலைப்பதிவு என் கண்ணிலே பட்டது. மிகவும் அழகான கவிதைகளோடு அந்த வலைப்பதிவு...

இவர் இலங்கையை சேர்ந்த ஒரு பெண் பதிவர் ஆனால் அவர் இப்போது கனடாவில் இருக்கிறார்.

இவரது கவிதைகள் அனைத்துமே என்னைக் கவர்ந்துவிட்டன. நீங்களும் அவரது வலைப்பதிவுக்கு போய் வரலாம்.

ஈழமகளின் "கவிமழை" ஈழத்தில் பொழிகிறது.
அவரது வலைப்பதிவிலிருந்து ஒரு கவிதை...

கண்ணீரைத் தாங்குமா - இதயம்

 கண்ணீரைத் தாங்குமா - இதயம்
கண்ணீரைத் தாங்குமா.
விண்மீன்கள் சிரிக்கிறது - உலகே
வேடிக்கை பார்க்கிறது.

தமிழ் மண்ணின் மணம்
மறந்து போனதம்மா...
எம் உதிரத்தின் மணம்
எம்மில் வீசுதம்மா....!

சோலைவனம் எங்கள் தேசம்
பாலைவனம் ஆனதிப்போ...
பாசவனம் எங்கள் வாசம்
சுடுகாடாய்ப் போனதிப்போ...!

தந்தை தாயின் உறவு
சொல்லப் பிள்ளை இல்லையம்மா...
பிள்ளை உள்ள வீட்டில்
சொந்தம் எதுவும் இல்லையம்மா....!

தென்றல்வீசும் எங்கள் தேசம்
சோகமயம் ஆனதிப்போ...
செந்தமிழ் எங்கள் வேதம்
செவ்வினால் எம்முயிர் போகுமிப்போ...!

கடற்கரைக் காற்றில் வரும்
பேரின்பம் இன்றில்லையம்மா...
கல்லுரிகள் கண்ட கனவு
கரைந்து புதைகுழியில் போனதம்மா....!


நீதி மறவா எங்கள் தேசம்
நேர்மையில்லா சிங்கள அரசு ஆளுதிப்போ...
சாதி.. மதம் ஒன்றே எங்கள் தேசம்
பௌத்த மதமாய் மாறுதிப்போ...!

அவரது காதல் கவிதைகளிலே எனக்கு பிடித்த சில வரிகள்.

பெண்ணே...! உன்னைப் பார்க்கும் போது

பேசத் துடிக்கும் வார்த்தைகள்
மெளனமாகி விடுகின்றது.

பெண்ணே....!
உன்னை விட்டு விலகும் போது
உணர்ச்சியற்ற கால்களாய்ப்
போகின்றது

பெண்ணே....
உன்னை நினைக்கும் போது
கவிமழையாய்ப் பொழிகிறது
என் இதயத்தில்.

பெண்ணே....
உன்னை கனவில் அணைக்கும் போது கூட‌
பூக்களாய் நினைத்து பூஜை அறையில்
பூட்டி வைக்க விரும்புகின்றேன்.

பெண்ணே....
உனைப் பார்த்து வரைந்த போது
என் உயிர் கொடுத்து
உயிர் ஓவியமாய் மாற்றிவிட்டேன்.

பெண்ணே....
உன்னை நினைத்து மரணித்த போது
என்னை ஆழமாய் விரும்பினாய்.
நான் ஆவியாய் அலைகின்றேன்.

பெண்ணே....
மறு ஜென்மம் மலரும் போது
நான் நீயாகவும்... நீ... நானாகவும்
அப்போ புரியும் என் காதல் வலி.

நீங்களும் அவரது வலைப்பதிவுகளுக்கு சென்று வரலாம். அவரது திறமைக்கு உற்சாகம் வழங்குவோம்

http://www.eelamakal.blogspot.com/
read more...

Wednesday 6 January 2010

அலைகிறது என் இதயம்


அன்று நான் கேட்காமலே
உன் இதயத்தை என்னிடம்
தந்துவிட்டாய்  - என்
இதயத்தையும் திருடிவிட்டாய்...

இன்று என் இதயத்தை
தூக்கி எறிந்துவிட்டாய்
இன்னும் என்னிடம்
 வந்து சேரவில்லை
என் இதயம் -உன்னை
சுற்றியே அலைகிறது
உன்னோடு வாழ்வதற்கு...

 என்னிடம் இருக்கும் -உன்
இதயத்தை தட்டிப் பறிக்க
நினைக்கின்றாய் - ஏன்
இன்னொருவன் - உன்
கண்களால் கைது
செய்யப்பட்டு விட்டானா?...

உன் இதயம்
என்னிடமே இருக்கட்டும்
அவனும் என்னைப்போல்
அவஸ்த்தைப்பட வேண்டாம்.

************************************

என் வாழ்க்கை
மதுவோடுதான்
போகிறது - அன்று
என் காதலி
மதுவோடு வாழ்க்கை
வசந்தமானது -அவள்
கை விட்டதால் - இன்று
 மது கிண்ணத்தோடு
என் வாழ்க்கை

வாரம் ஒரு வலை உலா..

உறு பசி

இன்றைய வலைப்பதிவு அறிமுகத்திலே இலங்கையிலே இருந்து பதிவிடுகின்ற பெண்பதிவர் தர்ஷாயணீ (உறு பசி) அவர்களின் பதிவுகள் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இவரது உறு பசி எனும் வலைப்பதிவிலே கவிதைகள், தமிழ் மொழியோடு, தமிழ் இலக்கியத்தோடு சார்ந்த பல இடுகைகளை  தந்து வருகின்றார்.  தமிழ் மொழியின்பால் தனக்கு இருக்கின்ற பற்றினை இவரது பதிவிலே காணமுடிகின்றது.

அத்தோடு, சமகால நிகழ்வுகள், நகைசுவை சார்ந்த பதிவுகள், சமூகம் சார்ந்த கட்டுரைகள் என்று பலதரப்பட்ட விடயங்களை பகிர்ந்து வருகின்றார்.

எனக்கு அவரது பதிவுகள் அனைத்தும் பிடித்திருந்தாலும். எனக்கு மிகவும் பிடித்த சமகாலத்துக்கு பொருத்தமான கவிதை  ஒன்றை தருகிறேன்.

புத்தம்...

புத்தனை
போதையில் சந்தித்தேன்.
இன்று அவனிடம் எதுவுமில்லை
ஒரு ,காவியையும் ,
சதக் காகாசுகளையும் தவிர.


காலத்தின்அழுகிய நாற்றத்தால்
போதியில் சந்திக்க
வேண்டிய அவனை ..............................

பொம்மைகளின் யாசகர்கள் பற்றியும்,
வானம் வழுக்கி விழுந்த தடம் பற்றியுமாய்
அவன் பதில்கள் இருக்கவில்லை.
'வாசவதத்தை' பற்றியும்,
தீண்டப்ப டாத, வீணை பற்றியுமாய் இருந்தது....

புனையப்படாத ஓவியத்திலிருந்து வரும்
அவனின் பௌர்ணமி,
பெருத்துப் போன பெருச்சாளி போன்றிருந்தது....!
அவனுக்கும் தெளிவில்லை ,
எனக்கும், தெளிவில்லை.....
காவிக்கும் , கர்த்தாவுக்குமான உட்கிடக்கையில்...........

அரச மரத்துஅணில் சொன்னது,
இவன் நெடுகாலமாய் இங்குதான் கிடக்கிறான்.....
வேலையத்த பயல்!
மௌனத்தின் காற்று வெளி -
படபடத்தது....


அவனுக்கு மூல வியாதி வரக்கூடாமைக்கு வேண்டி -
மீண்டு வந்தேன்.
அவன் சீடன் சொன்னான்,
நானும் புத்தனாகி விட்ட கதை.....


திரும்பிப் பார்த்தேன்...........,,
அவன் அமர்ந்திருந்த இடம் -
சவக் கிடந்க்காய் கிடந்தது...


புத்தத்துக்கு பின்னாலும் ,
சரணத்துக்கு பின்னாலும் 'ஆமி'
தான் நின்றார்கள்.

அனைத்து பதிவுகளையும்  உறு பசி வலைப்பதிவுக்கு சென்று பாருங்கள்.
http://urupasi.blogspot.com/
read more...

Sunday 3 January 2010

திருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில வழிகள்.


சின்ன வயசில  படிக்கும்போது ஓடிவிளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா எனும் பாரதியின் பாடலைக்கேட்டே.... ஓடி, ஓடி விளையாடிய நம்ம கோபி இப்போ இந்தபோபாடல் மட்டுமல் ஓடி... ஓடி... விளையாடு என்று எந்தப்பாடல் வந்தாலே ஓடி ஒழிந்து கொள்கிறார்.

பச்சிளம் பாலகன் என்று இருந்த இவர் இப்போ சந்தோசம்.... சந்தோசம்... வாழ்க்கையின்.... என்றும், ஒரு தேவதை வந்து விட்டாள் என்னைத் தேடியே.... என்றும் பாடிக்கொண்டு திரிகின்றார். காரணம் அவருக்கு பெண் பார்க்கப்பட்டு விட்டதாக நம்பத்தகாத வதந்திகள் தெரிவிக்கின்றன.

இருந்தாலும் கோபி வாழ்வே மாயம்... இந்த வாழ்வே மாயம்...  என்று இன்னும் சில நாட்களில் பாடாமல் இருந்தால் சரிதான்.

இது ஒரு புறமிருக்க சுபாங்கனின் வயிறு பத்தி எரிகிறதாம். கோபிக்கே பெண் கிடைத்துவிட்டாள் என் அழகுக்கும், அறிவுக்கும் எந்தப் பெண்ணும் பார்க்கிறாளே இல்லை என்று புலம்பிக்கொண்டு இருக்கின்றார்.

இதனை அறிந்த வந்தி சுபாங்கனை சந்தித்து ஆறுதல் சொல்லி இருக்கிறார். நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்னைப் போன்றவர்களைப் பார்த்து மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கின்றார்.

இந்தக் கதை இப்படியே போய்க்கொண்டிருக்க திருமனத்துக்குள் காலடி எடுத்து வைக்க இருக்கும் கோபிக்காக சில ஆலோசனைகள். ஆனாலும் விரைவில் திருமணத்துக்காக தேவதைகளை தேடிக்கொண்டிருக்கும் புல்லட், ஆதிரை, வந்தி, சுபாங்கன், யோகா (தேவதைகளே இவர்கள் மீது உங்கள் கடைக்கண் பார்வை படட்டுமே)  ஆகியோருக்கும் பயன் பயன்படும்.

திருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில வழிகள்.

01. உங்களுக்கு திருமணம் நடந்த விடயத்தை திருமண நாள் அன்றோடு மறந்து விடுங்கள், உங்களுக்கு திருமணம் நடந்து விட்டது என்று தெரியாதவர்களுக்கு திருமணம் நடந்த விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம்.

02 . மனைவி பிள்ளைகளோடு வெளியில் செல்வதை தவிருங்கள்.

03. நீங்கள் எப்போதும் திருமணமாகாத இளம் நண்பர்களோடு மட்டுமே பழகுங்கள். அப்போது மற்றவர்கள் உங்களையும் திருமணமாகாத ஒருவர் என்று நினைத்து விடுவார்கள்.

04. எப்போதும் நாகரிகமான ஆடைகளை அணியுங்கள் அடிக்கடி இளம் பெண்கள்  அதிகம் நடமாடும் இடங்களுக்கு சென்று உங்கள் வழமையான சில்மிசங்களை செய்யுங்கள்.

05. இளம் பெண்களுக்கு உதவிகள் தேவைப்படும்போது அந்தப் பெண்கள் உங்களிடம் உதவி கேட்காமலேயே நீங்களாகவே சென்று உதவி செய்யுங்கள். அப்போது அந்தப் பெண்ணின் மனதிலே இலகுவில் இடம் பிடிக்கலாம்.

06. சில காலம் குழந்தை பெறுவதை தவிர்க்க வேண்டும். காரணம் பிள்ளைகளின் தொல்லை அதிகமாகும் அப்போது வெளியில் நீங்கள் கல்யாணமானவர் என்பது தெரிய வரலாம். அப்போது இளம் பெண்கள் உங்களை கண்டாலே ஓடி விடுவார்கள்.

07. உங்கள் மனைவி வெளியில் சென்று வருவதற்கு ஒரு காரினையும் (மகிழுந்து) ஒரு சாரதியையும் ஏற்பாடு செய்து வையுங்கள். ( உங்கள் மனைவியை அந்த சாரதி ஏற்பாடு செய்தால் நான் பொறுப்பல்ல)

08. மூஞ்சி   புத்தகத்தில் (face book) அதிகம், பெண் நண்பிகளை தேடிக்கொள்ளுங்கள்.அல்லது அதிகம் பெண் நண்பிகளை வைத்திருக்கின்ற ஆதிரை போன்றோரையும், அதிகம் பெண் நண்பிகளை சேர்க்க துடிக்கும் சந்ரு போன்றோரின் ஆலோசனைகளைப் பெறுங்கள்.

09. திருமண, பிறந்தநாள் போன்ற விசேட நிகழ்வுகளுக்கு மனைவியுடன் செல்வதை தவிர்த்து தனியாக செல்லுங்கள். ஏல்லும்போது கம்பிரமான தோற்றத்தோடு செல்லுங்கள். அங்கேயும் பல இளம் பெண்களை கவர முடியும்.

10. இதுதான் மிக முக்கியமான ஒன்று ஏற்கனவே திருமணமான மூத்த பதிவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று அவர்களது அனுபவத்துடன் கூடிய ஆலோசனைகளை பெறுங்கள்.

இந்த பதிவுக்கான கருப்பொருளை எனக்கு வழங்கிய பதிவு வந்தி அண்ணாவின் பதிவுதான் அங்கேயும் சென்று  பாருங்கள்.

கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 1

கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 2

இது நகை சுவைப் பதிவு மட்டுமே...
read more...

Friday 1 January 2010

புது வருடத்திலாவது விடிவு கிடைக்குமா?



இன்று புதிய வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். இந்த புதுவருடம் அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த ஆண்டு  பலருக்கு நல்லதொரு ஆண்டாக அமையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். என்னைப் பொறுத்தவரை கடந்த ஆண்டின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கின்றபோது என்  வாழ்க்கையிலே என்னை அதிகம் சங்கடப்படவைத்த ஒரு ஆண்டாக இருக்கின்றது.

தமிழர்களைப் பொறுத்தவரை கடந்த ஆண்டை மறக்கவே முடியாது அந்தளவுக்கு தமிழர்களின் உயிர்களையும், உடமைகளையும் பறித்து தமிழர்களின்  கண்ணீரிலே சந்தோசம் கண்ட ஆண்டு 2009. தமிழர் மனங்களிலே மாறாத வடுக்களை உருவாக்கிய ஆண்டு.

எது எப்படி இருப்பினும் இந்த புதுவருடத்தில் கடந்த காலத்தில் நடந்த அந்த மாறாத வடுக்களை ஒரு கெட்ட கனவாக மறப்போம். புதிய ஒரு நாளில் புதிய சிந்தனைகளோடு நம்பிக்கையோடு நம் வாழ்க்கையை அமைப்போம்.

இன்று ஆரவாரமாக நாம் புது வருடத்தினைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். நாம் ஒவ்வொரு விசேட பண்டிகைகளையும் மிகவும் சிறப்பான முறையிலே ஒவ்வொருவரு ஒவ்வொரு விதமாக கொண்டாடுவோம். எத்தனையோ ஆடம்பரங்கள் , தேவையற்ற செலவுகள் செய்கின்றோம்.

 ஆனாலும் இன்று தாய், தந்தை, சொந்தங்களை இழந்த பல சிறுவர்கள் எத்தனையோ சிறுவர் இல்லங்களிலே அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். ஏனைய சிறுவர்கள் இவ்வாறான விசேட தினங்களிலே புத்தாடை அணிந்து வான வேடிக்கைகளோடு ஆடிப்பாடி விளையாடும் போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதனை நாம் ஒரு நாளாவது எண்ணிப் பார்த்திருக்கின்றோமா?

நாம் இந்த விசேட பண்டிகைகள், தினங்களிலே அனாவசியமாக, ஆடம் பரங்கள் மூலம்   வீண் செலவுகள் செய்வதனை விடுத்து அந்த பணத்தை கொண்டு சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து அன்றைய நாளை அவர்களோடு நம் பொழுதைப் போக்கலமால்லவா?  இதனால் அந்த சிறுவர்களின் மனதிலே ஒரு சந்தோச உயணர்வு தோன்றுமல்லவா?

நாம் எத்தனை பேர் இந்த சிறுவர்களைப் பற்றி சிந்திக்கின்றோம். அவர்கள் குறிப்பிட்ட சிறுவர் இல்லங்களிலே நல்ல முறையிலே நடாத்தப்பட்டாலும் அவர்கள் மனதிலே தான் ஒரு அனாதை என்கின்ற, தன்னால் மற்றவர்களைப்போல் சந்தோசமாக இருக்க முடியவில்லையே என்ற ஒரு கவலை இருக்கும்.

இன்று இலங்கையின் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை எத்தனையோ சிறுவர் இல்லங்கள்  இருக்கின்றன. இந்த சிறுவர் இல்லங்களிலே ஆண் சிறார்கள் மட்டுமல்ல பெண் பிள்ளைகளும் பலர் இருக்கின்றார்கள். அந்த பெண் பிள்ளைகளின் எதிர் காலம் பற்றி யாராவது சிந்தித்திருக்கின்றோமா?

இன்று பெரிய வசதியான குடும்பத்திலே பிறந்த சில பெண் பிள்ளைகளின் வாழ்க்கையே சீதனம், வரதட்சனை, அது, இது என்று திண்டாட்டமாக இருக்கின்றது. இப்படி அவர்களுக்கு இந்த நிலை என்றால் அனைத்தையும் இழந்து சிறுவர் இல்லமே தஞ்சமென்று இருக்கின்ற சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற அந்த பெண் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி அமைய இருக்கின்றது. இன்று அழகு, அந்தஸ்து பெரிய இடமென்று எல்லோரும் பெரிய இடம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பெண் பிள்ளைகளின் எதிர் காலத்துக்காக சிந்திப்போம்.

சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற சிறுவர்கள் நன்கு படிக்கக் கூடியவர்களாக இருந்தாலும் அவர்களின் மனதில் இருக்கின்ற கவலையின் காரணமாக படிக்கத்தான் முடியுமா?

நாம் இன்று நம் சிறுவர்களின் கல்வி வளர்சியிலே பின்தள்ளப் படுகின்றபோது நாளைய நம் சமுகத்தின் கல்வி நிலைதான் என்ன?

இன்றைய நம் சிறுவர்களே நாளைய நம் தலைவர்கள் அவர்களின் எதிர் காலத்துக்காக நாம் ஒவ்வொருவரும் சிந்திப்போம்.
read more...