Sunday 29 September 2013

ஒரு பெண் வேசியாகிறாள். 18 +

 காட்சிப் பொருளாக்கப்பட்ட பெண்கள்  

எனும் பதிவின் தொடராகவே இடம் பெறுகின்றது. ஒரு பெண் ஒரு பெண் தன் கணவனைத் தவிர வேறு ஓருத்தருடன் பாலியல் ரீதியில் தொடர்பு வைத்திருந்தால் அவளை வேசி என்று சமூகம் சொல்கின்றது. ஆனால் ஒரு ஆண் எத்தனை பேருடன் தொடர்பு வைத்திருந்தாலும் அவனைப்பற்றி எவரும் கணக்கெடுப்பதில்லை.

 ஒரு பெண் பலருடன் தொடர்பு வைத்துக் கொள்ள பல காரணங்கள் இருக்கின்றன. பலர் இதனை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர். பண்டைய தமிழ்ச்சமூகத்தில் "தாசித் தொழில்" என்று அழைக்கப்பட்டு வந்தது

 பாலியல் தொழில் செய்யும் பெண்ணைத் தமிழில் விலைமகள், வேசி, பொதுமகள், கணிகை, அல்லது விபச்சாரி என அழைக்கப்படுகின்றனர். 




பெண்களைப் பொறுத்தவரையில். தான் விபச்சாரத்துக்கோ அல்லது பல ஆண்களுடனோ பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பலர் இதனை ஒரு தொழிலாகச் செய்கின்றனர். இதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. வறுமை வேலையில்லாப் பிரச்சினை என்று
சொல்லிக் கொண்டே போகலாம்.

இதனை தொழிலாகச் செய்கின்ற விலை மாதர்களை நாடி பல பணம் படைத்தவர்கள் வருகின்றனர். இதன்,முலம் விலை மாதர்கள் அதிகமான வருமானத்தை ஈட்டுவதோடு அதிக வருமானம் பெறும் ஒர தொழிலாகவும் இத் தொழில் இருக்கின்றது.இத் தொழிலைச் செய்பவர்கள் விலை மாதுகள் என்றால் இவர்களை
நாடிச் செல்கின்ற ஆண்களை என்னவென்று சொல்வது.

இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் எல்லோராலும் சொல்லப்படுகின்ற விடயம் சமுக சீர்கேடு அதிகரித்திருக்கின்றன என்ற குற்றச்சாட்டாகும்;. இக் இக் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையானது. நான் பல இடங்களுக்கு சென்று வருகின்ற ஒருவன் பல விடயங்களையும் பல சமுக சீர் கேடுகளையும் கண்முன்னே கண்டிருக்கின்றேன். இந்த சமுக சீர் கேடுக்கான காரணம். உள்நாட்டு யுத்தமும் வேலையின்மையும். வறுமையுமாகும்.

இவை தொடர்பிலே சில விடயங்களையும் சம்பவங்களையும் குறிப்பிட விரும்புகின்றேன். என்னால் நேரடியாக அவதானிக்கப்பட்ட அறியப்பட்ட விடயங்கள் 

-->
இவை ஒரு 20 வயதுடைய பெண் தன்னுடைய கணவனை யுத்தத்தின் போது பறிகொடுத்து விட்டார். அந்த பெண்ணுக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றது. கணவனை இழந்ததும் தனிமைப் படுத்தப்பட்டுவிட்டாள்இ

இவளுக்கு தொழிலும் இல்லை. இன்னொருவனை திருமணம் செய்வதற்கும் சமுகம் இடம் கொடுக்கவில்லை. இவள் வாழ்ககையை எவ்வாறு கொண்டு நடாத்துவது. தன் பிள்ளையை நல்ல நிலைக்கு கொண்டு வருவது. அவள் இன்னொரு திருமணம் செய்ய எத்தணித்தபோது அவளது சமுகம் அதனை
ஏற்றுக் கொள்ளவில்லை.

அவள் வாழ வேண்டிய வயது அவள் திருமணம் செய்து இரண்டு வருடங்கள்தான் கணவனோடு வாழ்ந்திருப்பாள். தான் தனிமைப் படுத்தப் பட்டமை ஒருபுறம் பொருளாதார நிலை ஒருபுறமிருக்க. அவளுக்கு இப்போது வயது 20. காம உணர்ச்சிகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்றது. கணவனோடு இரண்டுவருடங்கள் மட்டுமே வாழ்ந்த இந்த இளம் பெண்ணுக்கு கணவணை இளந்த பின் காம உணர்ச்சி இல்லாமல் போய் விடுமா?

இந்தப் பெண்ணின் வாழ்க்கை கணவனை இழந்ததோடு முடிந்துவிட்டதா? ஏன் இந்த சமுகம் இவைகளைப்பற்றி சிந்திப்பதாக இல்லை. இவளை சமுகம் இன்னொரு திருமணம் செய்யவேண்டாம் என்று கட்டப்படுத்தியதன் எதிரொலி இன்று தனிமையில் இருக்கும் அவளது வீட்டுக்கு தினம் ஒரு ஆண் சென்று வருகின்றான்.
இவள் இவ்வாறு செல்லக் காரணம் அவளது சமுகமே.

இவள் மட்டுமல்ல யுத்தத்தின்போது கணவனை இளந்த பல இளம் பெண்களின் நிலை இதுதான். இவர்கள் விலை மாதுகள் அல்ல தன் இளம் வயதிலே கணவனை
இழந்துவிட்டார்கள். தன் காம உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் பல ஆண்களை நாடுகின்றனர். இது சமுக சீரளிவு என்று சொல்லமுடியுமா. கணவன் இறந்ததோடு அவளுக்கு ஆசாபாசங்கள் இருக்கக்கூடாதா?

கணவனை இழந்ததும் பெண்கள் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லும் சமுகம். ஒரு ஆணின் மனைவி இறந்துவிட்டால் உடனடியாக அவனுக்கு மறுமணம் செய்து வைக்கின்றனரே இது எந்த வகையில் நியாயமானது. ஆண்களுக்கு மட்டும்தான் ஆசாபாசங்கள் இருக்கின்றதா?

இது ஒரு புறமிருக்க சமுக சீர்கேடு தொடர்பிலே நான் அதிகம் அவதானித்த விடயம் கணவன் வெளிநாட்டிலே இருக்கின்ற பெண்கள் வேறு ஆணுடன்
அல்லது பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர். எல்லா பெண்களும் அவ்வாற இல்லை ஒரு சிலர் இருக்கின்றனர்.

இவர்கள் இவ்வாறு தொடர்பு வைத்திருக்க காரணம் என்ன. பணத்துக்காக இவர்கள் மற்றவர்களுடன் செக்ஸ் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.
தமது காம உணர்ச்சிகளை தர்த்துக் கொள்வதற்காகவே வேறு ஆண்களை நாடுகின்றனர். இங்கே யார் தவறு செய்கின்றனர். தமது மனைவியின்
உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய அவளது கணவன் விடுகின்ற தவறுதான் காரணம்.

நாங்கள் ஒரு பிரதேசத்திலே இரவு 9 மணிக்குப் பின்னர் வீதியில் நிற்பதற்கு பயப்படுவதுண்டு. நிற்பதே இல்லை நின்ற பலர் இராணுவத்தினரால் அடி வாங்கிய சம்பவங்களும்
இடம் பெற்றிருக்கின்றன.

 

அந்த வீதியிலே இருக்கின்ற ஒரு பெண்ணின் கணவன் வெளிநாட்டில் இருக்கின்றார். அவள் இப்போது பலருடன் தொடர்பு. இரவு 9 மணிக்குப்பின் இராணுவத்தினரின் ஆட்சி அவளது வீட்டில் நடக்கும். அவள் அவ் வீட்டில் தனிமையில் இருப்பவள். இவள் வேசியானதற்கு யார் காரணம்? இதே நிலை பல பெண்களுக்கு இது ஒருபுறமிருக்க ஒரு இளம் பெண் அவளுக்கு பொருளாதார சிக்கல் இல்லை குடுப்பநிலை அப்படி. திருமணம் செய்ய வேண்டிய வயது ஆனால் திருமணம் செய்யவில்லை தினம் ஒருத்தனுடன் உல்லாசமாக இருக்கின்றாள். இது இவள் செய்யும் தவறுதான். தன் கணவன் தன்னை திரப்திப் படுத்தவில்லை என்பதற்காக வேறு ஆண்களை நாடுகின்ற பெண்களும் இருக்கின்றனர்.

இவை எல்லாம் ஒரு புறமிருக்கட்டும் ஒரு பெண் இன்னொருவனுடன் தொடர்பு வைத்திரந்தால் அவளை வேசியாகக் காட்டும் சமுதாயம் ஒரு ஆண் எத்தனை பெண்களுடன்

தொடர்பு வைத்திருந்தாலும் அவனைப்பறிறி பேசாதது ஏன்? ஒரு ஆண் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால் அதனை அவனது வீரத்துக்கு ஒப்பிடுபவர்களும் அல்லாமல் இல்லை.


யாவும் உண்மை  சம்பவங்கள்...
தொடரும்...

பின்னிணைப்பு

read more...

Sunday 4 August 2013

காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள்...

இது ஒரு நகைச்சுவைப் பதிவு மட்டுமே
இப்போது சில வலையுலக நண்பர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனை பற்றி இந்த பதிவுல தரலாம் என்று இருக்கிறன்.


1. காதலி எங்கே போகின்றார், வருகின்றார் என்ற விடயங்களை காதலியிடம் கேட்கக்கூடாது. நீங்கள் அதிகம் வெளியில் செல்லக்கூடாது.

2. நீங்கள் அதிக நேரம் எவருடனும் தொலை பேசியில் உரையாடக்கஊடாது. ஆனால் காதலி யாருடனும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கதைக்கலாம். நீங்கள் கண்டுகொள்ளக்கூடாது.
3. நீங்கள் உங்கள் பெண் நண்பிகளோடு காதலி இருக்கும்போது கதைப்பதனை தவிர்த்துக்கொள்ளுங்கள். அல்லது முற்றாக நண்பிகளை மறந்து விடுங்கள். உங்கள் காதலி அவரது நண்பர்களோடு பழகுவதற்கு இடமளியுங்கள்.

4. உங்கள் காதலி அழகில்லை என்றாலும் உன்னைப்போல் அழகி உலகிலில்லை என்று புகழ்ந்து பேசுங்கள்.

5. நீங்கள் காதலிக்க ஆரம்பித்ததும் ஆடம்பரங்களை தவிருங்கள். நீங்கள் அழகாக இருந்தால் ஏனைய பெண்கள் உங்களை அபகரித்து விடுவார்கள் என்ற எண்ணம் உங்கள் காதலிக்கு இருக்கும். நீங்கள் ஆடம்பரமாக இருந்தால் உங்களை நோட்டம்விட ஆரம்பித்து விடுவார். சந்தேகப்பட்டு விடக்கஊடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது.

6.உங்கள் காதலிக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ எல்லாவற்றையும். உங்களிடம் பணமில்லை என்றாலும் எங்காவது கடன் பட்டாவது வாங்கிக் கொடுங்கள். ஆனால் உங்களிடம் பணம் இல்லை என்பதனைக் காட்டிக்கொள்ளவேண்டாம்.

7. அதிகமாக இளம் பெண்கள் இருக்கின்ற இடங்களுக்கு போவதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அல்லது காதலிக்குத் தெரியாமல் போய் வாருங்கள்.

8. உங்கள் காதலி பலர் மத்தியிலே இருக்கும்போது உங்கள் காதலியைப் பற்றி அவர்களிடம் புகழ்ந்து பேசுங்கள். (காதலி இல்லாத நேரங்களில் திட்டித்தீர்க்கலாம்)

9.நீங்கள் இதற்கு மூன்னர் வேறு யாரையும் காதலித்திருந்தாலும் உங்கள் காதலியிடம் எனக்கு பெண்களைப் பார்க்கவே பிடிக்காது ஆனால் உன்னை எப்பவும் பார்த்துக் கொண்டே இருக்கணும்போல இருக்கு என்பது போன்ற வசனங்களை அடிக்கடி பேசுங்கள்.


10. இதுதான் முக்கியமான விதி முதலில் ஒரு பெண்ணை காதலிக்கவேண்டும்.
read more...

சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்படும் விதவைகள்

முன்னைய இடுகை ஒன்று மீண்டும்..  

இலங்கையைப் பொறுத்தவரை யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே ஆகும்.  இந்த உள்நாட்டு யுத்தத்தின் மூலம் பல ஆயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாக்கப்பட்டிருக்கின்றனர்.

அவர்களின் நிலை படு மோசமான நிலையிலே இருக்கின்றது. இவர்களிலே அதிகமானவர்கள் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்கள் சிறு வயதிலேயே குடும்ப சுமையினை தாங்கிக் கொள்ளவேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டனர்.

இதில் அதிகமானவர்கள் பின்தங்கிய கிராமப் புரங்களை சேர்ந்தவர்கள் கல்வி அறிவேன்பதும் அவர்களிடம் சரியான முறையில் இல்லை. இதனால் தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றவேண்டிய? கொண்டு நடாத்த வேண்டிய பொறுப்பு இவர்களிடமே இருக்கின்றது.

இதற்காக இவர்கள் கூலி வேலை செய்தல், சுய தொழில்களை மேற்கொள்ளல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். சுய தொழிலைப் பொறுத்தவர். எல்லோராலும் செய்ய முடியாத காரியமாக இருக்கின்றது. போதிய பணவசதி உதவிகளை பெறுவதிலே சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர்.

கூலி வேலைக்கு செல்பவர்களைப் பொறுத்தவரை தனது பிள்ளைகளை கவனிக்கவேண்டும், வீட்டுவேலைகளை செய்யவேண்டும், கூலி  வேலைக்கு செல்லவேண்டும் என்று பாரிய சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர். அவர்களின் உழைப்புக்கேற்ற கூலி  வழங்கப்படுகின்றதா என்பது வேறு விடயம்.

சிலர் இவ்வாறு கஷ்டப்படுகின்றவர்களை வைத்து அதிகவேளைகளைக் கொடுக்கின்றனர். ஆனால் வேலைக்கேற்ற கூலி வழங்கப் படுவதில்லை. இதை விட்டாள் வேறு வழியில்லை என்று கஷ்டப்பட்டு உழைத்து  வருகின்றனர் பலர்.

இது ஒரு புறமிருக்க இந்த விதவைகளைப் பொறுத்தவரை பலர் இளம் வயதை சேர்ந்தவர்கள்.  வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை இழந்து நிக்கின்றனர். இவர்களின் வாழ்க்கையை வளமானதாக மாற்ற எமது சமுகத்தால் முடியும்.

ஆனால் அவர்களளின் எதிர் காலத்தைப் பற்றி சிந்திக்காத சமூகமாக எமது சமூகம் இருப்பதுதான் கவலைப்படவேண்டிய விடயம். விதவைகளை ஒதுக்கி வைக்கின்ற சமுகமாக எமது சமூகம் இருக்கின்றது.

விதவைகள் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளிலே கலந்து கொள்ள கூடாது, இந்த விதவைகளின் கண்களிலே விழிக்கக் கூடாது என்று நினைப்பவர்களும் இருக்கின்றனர்.

பெண்களை மறுமணம் செய்தால் கேலி செய்து தேவையற்ற கதைகளைக் கட்டி விடுகின்ற சமூகம். ஆண்கள் எத்தனை திருமணம் செய்தாலும் போசாதிருப்பது ஏன்?  சில ஆண்களைப் பொறுத்தவரை ஒரு மனைவி இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்வார். இதனை வீரமாக பேசிக்கொள்பவர்களும்  இல்லாமல் இல்லை.

பெண்களோ தன் குடும்பத்தின் கஸ்ர நிலையின் காரணமாகவும், தனது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகாகவும் மறுமணம் செய்தால் வேசி என்றும் இன்னும் பல கதைகளும் சொல்லி அந்த பெண்ணை ஒதுக்கி வைக்கின்றனர். விதவையான பெண் வாழக் கூடாதா?

எங்கள் ஒவ்வொருவருடைய மனங்களும் மாற வேண்டும் விதவைகளின், எமது சமூகத்தின்  எதிர்கால வளமான வாழ்வுக்காக ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
read more...

Sunday 2 June 2013

கடவுள்மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் (படங்கள் இணைப்பு)



மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள்மடத்தில் அமையப்பெற்று செல்லக் கதிர்காமம் என அழைக்கப்படுகின்ற முருகன் ஆலய சிலைகள் அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் அமைந்திருக்கின்ற இவ் ஆலயத்தில் உள்ள அனைத்து சிலைகளும் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக விபரங்கள்
























read more...

காம லீலைகள் அரங்கேறும் களம்

இணையத்தினைப் பொறுத்தவரை நல்ல பல விடயங்களுக்காக பயன்பட்டாலும் தீயபல விடயங்களும் இடம்பெறாமலும் இல்லை. இது ஒவ்வொருவரும் இணையத்தினைப் பயன் படுத்தும் நோக்கத்தினைப் பொறுத்தது.


 இன்று சமூகத்தளங்களின் பயன்பாடு அதிகரித்தவிட்ட இந்த நிலையில். நல்ல பல விடயங்கள் இந்த சமூகத்தளங்கள் மூலமாக நடந்தேறி இருக்கின்றன. பல நல்ல நட்புக்கள் கிடைத்திருக்கின்றன. பல திருமணங்கள் நடந்திருக்கின்றன. பல குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன.

இது ஒரு புறமிருக்க நல்ல விடயங்களுக்கு இந்த சமூகத்தளங்களை பயன்படுத்துவோர் ஒரு புறமிருக்க இன்னொரு புறத்தில் பல காம லீலைகள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன.

இந்த சமூக இணையத்தளங்களில் சிலர் தமது காம வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளும் ஒரு தளமாக பயன் படுத்திக் கொள்கின்றனர். இதில் சாதாரண ஒரு மனிதனில் இருந்து பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் மக்கள் மத்தியிலே நன்மதிப்பைப் பெற்றவர்களும் இல்லாமல் இல்லை.

இந்த சமூகத்தளங்களிலே அரட்டைகளில் ஈடுபடுபவர்கள் தமது காம வேட்கைகளை தீர்த்துக் கொள்ள குரல் வீடியோ அரட்டைகளை நாடுகின்றனர். 

ஒரு நண்பியை இணைத்துக் கொண்டால் அவரோடு சில நாட்கள் சாதாரணமாக உரையாடுவதும் பின்னர் அவர்களை தம் வசப்படத்தி வீடியோ மற்றும் குரல் அரட்டைகளை செய்து வருகின்றனர்.

அதனோடு பலர் நின்று விடுவதில்லை நேரடியாகக்கூட அவர்கள் சந்தித்து தமது காமத்தை தீர்த்துக் கொள்கின்றனர். 

காம உணர்ச்சி என்பது அனைவருக்கும் இருக்கின்றது அவற்றை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பலர் கட்டுப்படுத்த முடியாமல் வரம்பு மீறுபவர்களும் இருக்கின்றனர்.

பெண்களைப் பொறுத்தவரை கட்டுப்படுத்தும் தன்மை அதிகம் என்று நினைக்கின்றேன். இணைய அரட்டையிலே நண்பர்களாக இருக்கின்ற ஒரு ஆணும் பெண்ணும்  பேசுக்கொள்கின்றபோது அந்த அண் பெண்ணிடம் செக்ஸ் கதைகளை கதைக்க முற்படும்போது. அந்தப் பெண் நல்ல நடத்தை உள்ள ஒரு பெண்ணாக இருப்பினும் சந்தர்ப்ப சூழ்நிலையில் அவளும் அதற்கு சம்மதிக்கின்றாள்.

அரட்டையிலே அவள் இருக்கின்ற சூழ்நிலையைப் பொறுத்து அது அமைகின்றது. எப்படிப்பட்ட ஒருவராக இருந்தாலும் ஆசை என்பது வந்துதானாகும். நல்ல நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றபோது நண்பர் கேட்கின்றபோது மறுத்துக் கொள்ள முடியாமல் சம்மதித்தவர்களும் இல்லாமல் இல்லை.

நானும் பல சமூகத்தளங்களிலே பெண் பெயரிலே இருக்கின்றேன். ஏன் என்று கேட்கின்றிங்களா? புலனாய்வு வேலைகள் செய்வதென்றால் நமக்கு றொம்ப பிடிக்குமே அதுதான்.

பல முக்கியமானவர்களை நண்பர்களாக இணைத்திருக்கின்றேன். சமூகத்துக்கு நலலதைச் செய்கின்றேன். நல்லதை எழுதுகின்றேன். என்று சொல்பவர்கள் பலர் என்னுடன் (பெண் பெயருடைய என்னுடன்) நண்பர்களாக இருக்கின்றனர். 

அவர்களா இவர்கள் என்று பல தடவை நான் யோசித்ததுண்டு. அவர்கள் மீதிருந்த நல்லலெண்ணம் இல்லாமல் போய்விட்டது. உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி என்பது போன்று இருக்கின்றது அவர்களின் செயல்.

சில வேளைகளில் அவர்கள் பற்றிய விடயங்களை வெளியிடலாம் என்று நினைப்பதுண்டு. 

அரட்டைக்கென்று இருக்கின்ற சில இணையத்தளங்களிலே நான் அவ்வப்போது வலம் வருவதுண்டு அதுவும் பெண் பெயரிலே. அங்கே நடை பெறுகின்ற விடயங்களை அறியவேண்டும் என்பதற்காக. அந்த அரட்டை இணையத்தளங்களிலே செக்ஸ் அரட்டைக்கு மட்டுமே அதிகமானவர்கள் வருகின்றனர். 

அந்த இணையத்தளங்களில் பெண் பெயரில் சென்றதுமே அங்கே அரட்டையில் இருக்கின்ற எல்லோரும் எங்களுடன் அரட்டைக்கு வருவார்கள் எவரும் நல்ல விடயம் பேசமாட்டார்கள். அவர்கள் போடுகின்ற முதல் வசனம் செக்ஸ் பேச முடியுமா? என்னை பார்க்கப் போறிங்களா? உங்களைப் பார்க்கலாமா?

இந்த அரட்டை இணையத்தளங்களிலே பல ஆண்களும் பெண்களும் செக்ஸ் அரட்டை செய்வதற்கென்றே வருகின்றனர். 

எப்படியெல்லாம் சமூகம் சீரழிகின்றது. சீரளிக்கப்படகின்றது. சமூகத்தை திருத்தவதாக. சமூகத்துக்காக செயற்படுவதாக இருந்து திரைமறைவில் காம லீலைகளில் ஈடுபடுபவர்களே திருந்துங்கள். எமது சமூகம் சீரழிகிறது.

நீ நல்லவனா என்று கேட்க வேண்டாம்.

எம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்வோம் 

இதனையும் பார்க்கலாம்.

இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்

read more...

Saturday 1 June 2013

ஒரு பெண் வேசியாகிறாள். 18 +

 இப்பொழுது இலங்கையில் பாலியல் தொழிலை சட்டரீதியாகக வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றன. பாலியல் தொழில் தொடர்பாக முன்னர் சில இடுகைகள் இட்டிருந்தேன் ஒரு தொடராக அத் தொடரை மீண்டும் இன்றைய கால கட்டத்தில் தொடரலாம் என்று நிகனக்கின்றேன். தொடர்வதற்கிடையில் முன்னைய பதிவினை அப்படியே தருகின்றேன்

 

காட்சிப் பொருளாக்கப்பட்ட பெண்கள்  

எனும் பதிவின் தொடராகவே இடம் பெறுகின்றது. ஒரு பெண் ஒரு பெண் தன் கணவனைத் தவிர வேறு ஓருத்தருடன் பாலியல் ரீதியில் தொடர்பு வைத்திருந்தால் அவளை வேசி என்று சமூகம் சொல்கின்றது. ஆனால் ஒரு ஆண் எத்தனை பேருடன் தொடர்பு வைத்திருந்தாலும் அவனைப்பற்றி எவரும் கணக்கெடுப்பதில்லை.

 ஒரு பெண் பலருடன் தொடர்பு வைத்துக் கொள்ள பல காரணங்கள் இருக்கின்றன. பலர் இதனை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர். பண்டைய தமிழ்ச்சமூகத்தில் "தாசித் தொழில்" என்று அழைக்கப்பட்டு வந்தது

 பாலியல் தொழில் செய்யும் பெண்ணைத் தமிழில் விலைமகள், வேசி, பொதுமகள், கணிகை, அல்லது விபச்சாரி என அழைக்கப்படுகின்றனர். 




பெண்களைப் பொறுத்தவரையில். தான் விபச்சாரத்துக்கோ அல்லது பல ஆண்களுடனோ பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பலர் இதனை ஒரு தொழிலாகச் செய்கின்றனர். இதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. வறுமை வேலையில்லாப் பிரச்சினை என்று
சொல்லிக் கொண்டே போகலாம்.

இதனை தொழிலாகச் செய்கின்ற விலை மாதர்களை நாடி பல பணம் படைத்தவர்கள் வருகின்றனர். இதன்,முலம் விலை மாதர்கள் அதிகமான வருமானத்தை ஈட்டுவதோடு அதிக வருமானம் பெறும் ஒர தொழிலாகவும் இத் தொழில் இருக்கின்றது.இத் தொழிலைச் செய்பவர்கள் விலை மாதுகள் என்றால் இவர்களை
நாடிச் செல்கின்ற ஆண்களை என்னவென்று சொல்வது.

இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் எல்லோராலும் சொல்லப்படுகின்ற விடயம் சமுக சீர்கேடு அதிகரித்திருக்கின்றன என்ற குற்றச்சாட்டாகும்;. இக் இக் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையானது. நான் பல இடங்களுக்கு சென்று வருகின்ற ஒருவன் பல விடயங்களையும் பல சமுக சீர் கேடுகளையும் கண்முன்னே கண்டிருக்கின்றேன். இந்த சமுக சீர் கேடுக்கான காரணம். உள்நாட்டு யுத்தமும் வேலையின்மையும். வறுமையுமாகும்.

இவை தொடர்பிலே சில விடயங்களையும் சம்பவங்களையும் குறிப்பிட விரும்புகின்றேன். என்னால் நேரடியாக அவதானிக்கப்பட்ட அறியப்பட்ட விடயங்கள் 

-->
இவை ஒரு 20 வயதுடைய பெண் தன்னுடைய கணவனை யுத்தத்தின் போது பறிகொடுத்து விட்டார். அந்த பெண்ணுக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றது. கணவனை இழந்ததும் தனிமைப் படுத்தப்பட்டுவிட்டாள்இ

இவளுக்கு தொழிலும் இல்லை. இன்னொருவனை திருமணம் செய்வதற்கும் சமுகம் இடம் கொடுக்கவில்லை. இவள் வாழ்ககையை எவ்வாறு கொண்டு நடாத்துவது. தன் பிள்ளையை நல்ல நிலைக்கு கொண்டு வருவது. அவள் இன்னொரு திருமணம் செய்ய எத்தணித்தபோது அவளது சமுகம் அதனை
ஏற்றுக் கொள்ளவில்லை.

அவள் வாழ வேண்டிய வயது அவள் திருமணம் செய்து இரண்டு வருடங்கள்தான் கணவனோடு வாழ்ந்திருப்பாள். தான் தனிமைப் படுத்தப் பட்டமை ஒருபுறம் பொருளாதார நிலை ஒருபுறமிருக்க. அவளுக்கு இப்போது வயது 20. காம உணர்ச்சிகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்றது. கணவனோடு இரண்டுவருடங்கள் மட்டுமே வாழ்ந்த இந்த இளம் பெண்ணுக்கு கணவணை இளந்த பின் காம உணர்ச்சி இல்லாமல் போய் விடுமா?

இந்தப் பெண்ணின் வாழ்க்கை கணவனை இழந்ததோடு முடிந்துவிட்டதா? ஏன் இந்த சமுகம் இவைகளைப்பற்றி சிந்திப்பதாக இல்லை. இவளை சமுகம் இன்னொரு திருமணம் செய்யவேண்டாம் என்று கட்டப்படுத்தியதன் எதிரொலி இன்று தனிமையில் இருக்கும் அவளது வீட்டுக்கு தினம் ஒரு ஆண் சென்று வருகின்றான்.
இவள் இவ்வாறு செல்லக் காரணம் அவளது சமுகமே.

இவள் மட்டுமல்ல யுத்தத்தின்போது கணவனை இளந்த பல இளம் பெண்களின் நிலை இதுதான். இவர்கள் விலை மாதுகள் அல்ல தன் இளம் வயதிலே கணவனை
இழந்துவிட்டார்கள். தன் காம உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் பல ஆண்களை நாடுகின்றனர். இது சமுக சீரளிவு என்று சொல்லமுடியுமா. கணவன் இறந்ததோடு அவளுக்கு ஆசாபாசங்கள் இருக்கக்கூடாதா?

கணவனை இழந்ததும் பெண்கள் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லும் சமுகம். ஒரு ஆணின் மனைவி இறந்துவிட்டால் உடனடியாக அவனுக்கு மறுமணம் செய்து வைக்கின்றனரே இது எந்த வகையில் நியாயமானது. ஆண்களுக்கு மட்டும்தான் ஆசாபாசங்கள் இருக்கின்றதா?

இது ஒரு புறமிருக்க சமுக சீர்கேடு தொடர்பிலே நான் அதிகம் அவதானித்த விடயம் கணவன் வெளிநாட்டிலே இருக்கின்ற பெண்கள் வேறு ஆணுடன்
அல்லது பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர். எல்லா பெண்களும் அவ்வாற இல்லை ஒரு சிலர் இருக்கின்றனர்.

இவர்கள் இவ்வாறு தொடர்பு வைத்திருக்க காரணம் என்ன. பணத்துக்காக இவர்கள் மற்றவர்களுடன் செக்ஸ் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.
தமது காம உணர்ச்சிகளை தர்த்துக் கொள்வதற்காகவே வேறு ஆண்களை நாடுகின்றனர். இங்கே யார் தவறு செய்கின்றனர். தமது மனைவியின்
உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய அவளது கணவன் விடுகின்ற தவறுதான் காரணம்.

நாங்கள் ஒரு பிரதேசத்திலே இரவு 9 மணிக்குப் பின்னர் வீதியில் நிற்பதற்கு பயப்படுவதுண்டு. நிற்பதே இல்லை நின்ற பலர் இராணுவத்தினரால் அடி வாங்கிய சம்பவங்களும்
இடம் பெற்றிருக்கின்றன.

 

அந்த வீதியிலே இருக்கின்ற ஒரு பெண்ணின் கணவன் வெளிநாட்டில் இருக்கின்றார். அவள் இப்போது பலருடன் தொடர்பு. இரவு 9 மணிக்குப்பின் இராணுவத்தினரின் ஆட்சி அவளது வீட்டில் நடக்கும். அவள் அவ் வீட்டில் தனிமையில் இருப்பவள். இவள் வேசியானதற்கு யார் காரணம்? இதே நிலை பல பெண்களுக்கு இது ஒருபுறமிருக்க ஒரு இளம் பெண் அவளுக்கு பொருளாதார சிக்கல் இல்லை குடுப்பநிலை அப்படி. திருமணம் செய்ய வேண்டிய வயது ஆனால் திருமணம் செய்யவில்லை தினம் ஒருத்தனுடன் உல்லாசமாக இருக்கின்றாள். இது இவள் செய்யும் தவறுதான். தன் கணவன் தன்னை திரப்திப் படுத்தவில்லை என்பதற்காக வேறு ஆண்களை நாடுகின்ற பெண்களும் இருக்கின்றனர்.

இவை எல்லாம் ஒரு புறமிருக்கட்டும் ஒரு பெண் இன்னொருவனுடன் தொடர்பு வைத்திரந்தால் அவளை வேசியாகக் காட்டும் சமுதாயம் ஒரு ஆண் எத்தனை பெண்களுடன்

தொடர்பு வைத்திருந்தாலும் அவனைப்பறிறி பேசாதது ஏன்? ஒரு ஆண் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால் அதனை அவனது வீரத்துக்கு ஒப்பிடுபவர்களும் அல்லாமல் இல்லை.


யாவும் உண்மை  சம்பவங்கள்...
தொடரும்...

பின்னிணைப்பு

read more...

Saturday 19 January 2013

உப்புச் சிறட்டைக்குள் மூக்கைப் புதைத்து சாக வேண்டிய தமிழ் அறிவிப்பாளர்கள்

வணக்கம் அன்பு நண்பர்களே. நலமா மிக நீண்ட இடைவேளைக்குப் பின்னர் புதிய ஆண்டில் பதிவுப்பக்கம் வந்திருக்கின்றேன். முகப்புத்தகத்தில் ஒரு நண்பரால் பகிரப்பட்ட ஒரு வீடியோ இந்தப் பதிவினை என்னை எழுதத்தூண்டியது.

நான் வாழ்ந்த பிரதேசம் மின்சாரமே இல்லாத ஒரு பகுதி. எப்பொழுதும் என்னுடன் பற்றறியில் இயங்கும் ஒரு வானொலி இருக்கும் அது 24 மணித்தியாலமும் வேலை செய்துகொண்டே இருக்கும். நான் படிக்கும்போதுஅதுவும் என் அருகிலிருந்து படித்துக்கொண்டே இருக்கும். 

நான் சிறு வயது முதல் சிற்றலைவரிசையில் (SW) பல தமிழ் வானொலி நிலையங்களைச் செவிமடுப்பதுண்டு. சிங்கப்பூர் வானொலிக்கழகம் ஒலி 96.8 ஒவ்வொரு இரவிலும் கேட்பதுண்டு (இப்போதும் அடிக்கடி இணையத்தில் கேட்பதுண்டு) மிகவும் சிறப்பான நிகழ்ச்சிகள் நான் நினைக்கின்றேன் சில நிகழ்சிகளுக்கு வித்திட்டவர்கள் இவர்கள்தான்.

1997 க்கு முன்னர் சிங்கப்பூர் வானொலிக்கழகம் ஒலி 96.8 ல் ஒலிபரப்பான நிகழ்சிகளை ஒத்த நிகழ்ச்சிகளை பின்நாளில் பல வானொலிகளில் அவதானித்தேன். நானும் அறிவிப்பாளராக வரவேண்டும் என்ற ஆசைய தூண்யது சிங்கப்பூர் வானொலியே.

அதே போன்று அடிக்கடி மலேசிய வானொலியையும் கேட்டிதுண்டு. சிறப்பான நிகழ்சிகள். 

அதே போன்று குறித்த ஒரு நேரத்தில் சீன வானொலியை திருப்பி விடுவேன். சீனர்களால் செய்யப்படுகின்ற தமிழ் சேவையினை பார்த்து வியந்திருக்கின்றேன். உண்மையிலேயே அவர்கள் தமிழ் பேசுகின்ற விதம் கேட்பதற்கு அருமையாக இருக்கும். அன்று கலையரசி என்கின்ற அறிவிப்பாளர்மீது நான் கோப்பட்டிருக்கின்றேன். 

ஏன் கஸ்ரப்பட்டு தமிழ் பேசுகிறாள் ஒரு தமிழச்சியாக இருந்து என்று. இப்பொழுதுதான் அறிகிறேன் அவர் ஒரு சீனப்பெண் என்பதனை. 

நாம் வெட்கித்தலை குனியவேண்டி இருக்கின்றது. எவ்வளவு அழகாக தமிழ் பேசுகின்றார் இந்தச் சீனப்பெண். தமிழ் மொழியை வளர்க்க எவ்வாறு கஸ்ரப்படுகின்றார். ஆனால் கேடுகெட்ட எமது தமிழ் அறிவிப்பாளர்கள் தமிழை கொலை செய்கின்றார்கள். 

கீழே இருக்கின்ற வீடியோவைப் பார்த்தாவது திருந்துவார்களா? தமிழ்மொழிக் கொலைஞர்கள்
read more...