Friday 29 June 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள்



கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டிருக்கின்றது. வேட்புமணுத்தாக்கல் செய்வதற்கான திகதியும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் எட்டாம் திகதி தேர்தல் இடம்பெறலாம் என பரவலாக பேசப்படுகின்ற நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

தாங்கள் ஆடசியை அமைப்போம், தங்களுக்குத்தான் முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்றெல்லாம் ஒவ்வொரு கட்சியும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். யார் முதலமைச்சர் என்பதனை மக்கள் தீர்மானிப்பார்கள். யார் கிழக்கு மக்களுக்காக சேவை செய்யக்கூடியவர்கள், சந்தர்ப்பவாத அரசியலை நடாத்துபவர்கள் யார் என்பதனை கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். அரசியல் கட்சிகளோ அல்லது அரசியல்வாதிகளோ பொய்ப்பிரச்சாரங்கள் மூலமாக மீண்டும் கிழக்கு மக்களை ஏமாற்றலாம் என்று நினைப்பார்களானால் அது அவர்களின் முட்டாள்தனமாகும். இன்று கிழக்கு மக்கள் உண்மைகளையும் , யதார்த்தங்களையும் நன்கு உணர்ந்திருக்கின்றனர்.

யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு கிழக்கிலே ஜனநாயகக் கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்ற இன்றைய நிலையில். நடைபெற இருக்கின்ற மாகாணசபைத் தேர்தலிலே போட்டியிடுவதற்கு பலரும் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் நடைபெற இருக்கின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலே களமிறங்க இருக்கின்றனர். இவர்கள் இத் தேர்தலில் களமிறங்குவதன் மூலமாக சாதிக்கப் போவது என்ன? இவர்கள் இத் தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம் என்ன?

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் கொள்கைகள் என்ன என்பதனையே நான் அடிக்கடி கேட்டுக்கொண்டு வருகின்றேன். இதுவரை யாரும் பதில் சொன்னதாகத் தெரியவில்லை. அடிக்கடி கொள்கைகள் மாற்றப்படுவதாகவே நான் உணர்கின்றேன். தமிழீழமே இறுதி மூச்சு, புலிகளே எமது ஏக பிரதிநிதிகள், வடக்கு, கிழக்கு இணைந்ததே எமது தாயகம் என்ற கொள்கைகளும் கோசங்களும் எங்கே போனது?

இன்று கிழக்கு மாகாணத்தில் தனித்த கிழக்கு மாகாணசபையில் போட்டியிட தீர்மானித்திருக்கும் கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கு பிரிந்திருப்பதனை விரும்புகின்றனரா? தமது கொள்கைகளை கைவிட்டனரா? அப்படியானால் நீங்கள் அரசியல் சுயலாபம் தேடுவதற்காகவா வீரவசனங்களைப் பேசி எமது மக்களை சூடேற்றி போராட்டத்திற்கு அனுப்பி பலிக்கடாவாக்கினீர்கள். இன்று நீங்கள் எடுத்திருக்கும் முடிவுகளை அன்று எடுத்திருந்தால் இத்தனை இலட்சக்கணக்கான தமிழ் உறவுகளின் உயிர்களை பலி கொடுத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே.

தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்று கூறும் கூட்டமைப்பினர் இதுவரை தமிழர்களுக்காக என்ன செய்தனர்? தாயக மீட்பு போராட்டம் எனும் போர்வையில் நீங்கள் அரங்கேற்றிய நாடகங்களில் எந்த ஒரு கூட்டமைப்பு அரசியல்வாதியின் குடும்பம் பங்கெடுத்திருக்கின்றதா? எந்த கூட்டமைப்பு அரசியல்வாதியாவது தலை நிமிர்ந்து சொல்லட்டும் பார்க்கலாம்.

அது போகட்டும் முள்ளிவாய்க்கால் படுகொலை என்று இன்று கொக்கரிக்கின்ற கூட்டமைப்பின் ஒரு பாராளுமன்ற ஒறுப்பினராவது முள்ளிவாய்க்காலில் உக்கிர மோதல் நடைபெற்றபோது வாய் திறந்தார்களா? யாராவது ஒருவர் குரல் கொடுத்தாரா? சின்னச்சின்ன விடயங்களுக்கெல்லாம் அறிக்கைவிடும் அறிக்கை மன்னர்கள் அன்று மெளனம் சாதித்தது ஏன்?

தொடரும்.....

read more...

Wednesday 20 June 2012

இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா பட்டிமன்றம் -நேரலை

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அல்கார உற்சவ நிகழ்வுகளின் 4 ம் நாளாகிய இன்று இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா எனும் தலைப்பில் பட்டிமன்றம் இடம்பெற இருக்கின்றது.
இப்பட்டிமன்றத்தை அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் சக்தி சக்தியநாதன் தலைமையில் மாவை சிவநாதன் குழுவினர் இப்போது பேசிக்கொண்டிருக்கின்றனர்

Watch live streaming video from pillayar at livestream.com
read more...

களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா பட்டிமன்றம் -நேரலை

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அல்கார உற்சவ நிகழ்வுகளின் 4 ம் நாளாகிய இன்று இந்துப் பண்பாட்டை அதிகம் பேணுபவர்கள் ஆண்களா பெண்களா எனும் தலைப்பில் பட்டிமன்றம் இடம்பெற இருக்கின்றது.

இப்பட்டிமன்றத்தை அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் சக்தி சக்தியநாதன் தலைமையில் மாவை சிவநாதன் குழுவினர் நடாத்த இருக்கின்றனர்.

இப் பட்டிமண்றம் எமது இணையத்தளத்தில் 8.30 மணியளவில் நேரடியாக ஒளிபரப்பாகும்
pillayar on livestream.com. Broadcast Live Free
read more...

Friday 8 June 2012

இளம் ஜோடி தற்கொலை நடந்தது என்ன? நேரடி ரிப்போர்ட்

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஊடக்களிலும் பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் இளம் ஜோடி தற்கொலை. மட்டக்களப்பு மாவட்டத்தின் வயல் நிறைந்த பசுமை சோலை வவுணதீவு பிரதேசம் அங்கிருந்து ஆயித்திய மலைக்கு செல்லும் பாதையில் முள்ளாமுனை கிராமம் அமைந்துள்ளது அங்குள்ள ஒரு வயல் வாடியிலே இந்த இளம் ஜோடிகள் தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட திக்கோடையை சேர்ந்த அழகதுரை மேகலா (22வயது) எனவும் மற்றவர் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட களுதாவளை 38ஆம் கொலணியை சேர்ந்த அரசரெட்னம் இளங்கோ (34வயது) இவர்களின் சடல்கள் இன்று (07.06.2012) அடக்கம் செய்யப்பட்டன.

இவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம். சடலம் கிடப்பதாக சொல்லப்பட்ட முள்ளாமுனை கிராமத்திற்கு எமது செய்தியாளர்கள் சென்றதுடன் இவர்களின் தற்கொலைக்கான காரணத்தையும் அறிய முற்பட்டது. 

நடந்தவை என்ன?

அழகரெத்தினம் இளங்கோ 38 ம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரின் குடும்பம் தற்போது களுதாவளையில் நிரந்தரமாக வசித்து வருகின்றார்கள். திக்கோடையைச் சேர்ந்தவர் அழகுதுரை மேகலா. இவர்  இளங்கோவின் வீட்டில்  களுதாவளையில் இளங்கோவின் வீட்டில் தங்கி படித்து வந்திருக்கின்றார். அப்போது இளங்கோவிற்கும் மேகலாவிற்கும் காதல் ஏற்பட்டிருக்கின்றது. இவர்களின் காதல் எவராலும் பிரித்து விட முடியாத அளவிற்கு மிக நெருக்கமான காதலாக இருந்தும் பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லாத காரணத்தினால் இவர்களின் காதல் பிரிக்கப்பட்டிருக்கின்றது. காதல் பிரிக்கப்பட்டது என்பதனைவிட இவர்கள் இருவரையும் பிரித்து விட்டனர். ஆனாலும் அவர்களின் காதல் தொடர்ந்தது. 

அவ்வேளையில் மேகலாவிற்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். ஆனாலும் திருமணத்தின் பின்னரும் இளங்கோ மேகலா இருவரது காதலும் தொடர்ந்திருக்கின்றது. அடிக்கடி தாம் இருவரும் சந்தித்து இருக்கின்றனர். கால ஓட்டத்தில் மேகலாவின் கணவன் வெளிநாடு சென்றிருக்கின்றார். கணவன் வெளிநாடு சென்ற பின்னர் மேகலாவின் வீட்டுக்கு அடிக்கடி இளங்கோ சென்றுவர ஆரம்பித்து விட்டார். 

வெளிநாட்டில் இருந்த மேகலாவின் கணவன் இதனை அறிந்துவிட்டார். மேகலா தன்னை கல்யாணம் செய்வதற்கு முன்னர் இளங்கோவை காதலித்த விடயம் தற்போதும் காதல் தொடர்வது, அடிக்கடி மேகலாவின் வீட்டிற்கு இளங்கோ சென்று வருகின்ற விடயம் அனைத்தையும் மேகலாவின் கணவன் அறிந்து கொண்டார்.

இதனால் மேகலாவிற்கும் கணவருக்கும் குடும்பதகராறு அடிக்கடி ஆரம்பிக்க ஆரம்பித்து சட்ட ரீதியாக இருவரும் பிரிகின்ற நிலைக்கு சென்றிருக்கின்றனர். இதனை அறிந்த இளங்கோ மேகலாவை தன்னுடன் வரும்படி அழைத்திருக்கின்றார். அதன் பின்னர் மேகலா இளங்கோவின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கின்றார்.

இது இவ்வாறிருக்க சிங்கப்பூரில் வசிக்கும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் களகனகளனயன மூலம் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி இருக்கின்றது. சிங்கப்பூரில் வசிக்கும் இளங்கோவின் புதிய காதலி மாமாங்கப் பிள்ளையார் ஆலய திருவிளாவிற்கு சி்கப்பூரிலிருந்து வந்திருக்கின்றார். அப்போது இளங்கோவும் சிங்கப்பூரிலிருந்து வந்த காதலியும் பதிவுத் திருமணம் செய்திருக்கி்ன்றனர். பதிவுத் திருமணத்தின் பின்னர் சிங்கப்பூர் காதலி சிங்கப்பூர் போய் விட்டார். விரைவில் சிங்கப்பூர் போய் விடுவேன் என்று இளங்கோ தனது நண்பர்களிடம் அடிக்கடி சொல்லி வந்திருக்கின்றார்.

காலம் உருண்டோடிக் கொண்டிருந்தது. இளங்கோ மேகலாவுடன் சந்தோசமாக வாழ்ந்துவரும் வேளை கடந்த 7 நாட்களுக்கு முன்னர் சி்கப்பூரிலிருந்து காதலி மட்டக்களப்புக்கு வந்து இளங்கோவின் வீட்டிற்கு வந்திருக்கின்றார். ஓரிரு நாட்கள் இளங்கோவின் வீட்டில் தங்கியிருக்கிறார். இளங்கோவின் வீட்டவர்களுக்கு சிங்கப்பூர் பெண்ணை  இளங்கோ திருமணம் முடிப்பது விருப்பம். ஆனாலும் இளங்கோவால் மேகலாவை மறக்கவோ மேகலாவை விட்டுப் பிரியவோ முடியவில்லை. 

வீட்டில் பிரச்சினையாகிவிட்டது.  சிங்கப்பூர்  பெண் இளங்கோ வீட்டுக்கு வந்திருப்பதனை மேகலா அறிந்து விட்டார். இதனால் மேகலாவும் குழப்பமடைந்துவிட்டார். தான் மேகலாவை விட்டு பிரிய முடியாமல் போய்விட்டது. மேகலா இளங்கோவின் குடும்பத்தவர்களிடம் சொல்லி இருக்கின்றார் நான் வாழ்வதோ சாவதோ இளங்கோவோடுதான். எங்களைப் பிரிக்க நினைத்தால் நாம் இறந்து விடுவோம் என்று சொல்லி இருக்கின்றார். இளங்கோவும் தனது வீட்டில் தான் சாகப்போவதாக சோல்லி இருக்கின்றார். 

இளங்கோவும் மேகலாவும் சாவதாக பல திட்டங்களோடு முடிவெடுத்திருக்கின்றனர். இளங்கோ தனது பெயரில் வங்கியில் இருந்த பணத்தினை தனது தம்பியின் பெயரில் மாற்றியிருப்பதாக அறிய முடிகி்றது. 

அது மாத்திரமல்ல தான் எடுப்பது முட்டாள்தனமான முடிவு என்பதனையும் இளங்கோ அறியாமல் இல்லை. தனக்கு தானே மரண அறிவித்தல் ஒன்றினையும் மூன்று பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றினையும் எழுதி வைத்திருக்கின்றார். அக்கடிதத்தை தனது மரணச் சடங்கின்போது ஒலி பெருக்கியில் எல்லோருக்கும் வாசித்து காட்டும்படியும் குறிப்பிட்டிருக்கின்றார்.

அக் கடிதத்தில் தான் வாழ்ந்த 34 வருடகாலத்தில் சாதி மத இன பேதங்களை மறந்து தன்னோடு பழகிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்திருப்பதோடு தான் எடுக்கும் இந்த முடிவு முட்டாள்தனமான ஒரு முடிவாகும் என்றும் இவ்வாறான முடிவுகளை எவரும் எடுக்க வேண்டாம் என்றும் தான் எடுக்கும் இந்த முடிவு முட்டாள் தனமான முடிவு என்பதை தான் அறிந்திருந்தும் தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இந்த முடிவை எடுப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இளங்கோவிற்கும் மேகலாவிற்கும் காதல் ஏற்பட்டபோது பெற்றோர் அவர்களின் காதலிற்கு எதிரிகளாக இல்லாமல் இருந்திருந்தால் இளங்கோ மேகலா இருவரும் சந்தோசமாக வாழ்ந்திருப்பார்கள். இன்று இளம் வயதில் இரு உயிர்களையும் பறி கொடுக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. பெற்றோர்களோ சிந்தியுங்கள்.....

இளங்கோ தனது கையால் எழுதிய கடிதத்தினை வெளியிட இருந்தோம் அவரது உறவினர்கள் அவற்றை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதனால் நாம் அவற்றை வெளியிடவில்லை.

இளங்கோ ,மேகலா இருவரினதும் ஆத்மா சாந்தியடைய நாமும் பிராத்திக்கின்றோம்.



நன்றிகள் www.makkalinkural.com
read more...

Saturday 2 June 2012

தமிழீழ ஆதரவாளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக போர்க்கொடி

தமிழீழமே எமது மூச்சு என்றிருந்த தமிழரசுக் கட்சியினரின் அண்மைக்கால செயற்பாடுகள் மற்றும் தமிழரசுக் கட்சியினரின் 14வது தேசிய மாநாடு என்பன தமிழீழ ஆதரவாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன. இவ்விடயம் குறித்த செய்தியினை அப்படியே தருகிறேன்.


விடுதலைப் புலிகளையும், போராட்டத்தையும் களங்கப்படுத்திய தமிழரசுக் கட்சியின் மாநாடு!

"விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியும் மறைவும் எமக்கு உணர்த்தி நிற்பது என்னவெனில் - எவ்வளவுதான் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் எவ்வளவுதான் தர்மத்தின் பாற்பட்டதாக இருந்தாலும் தமிழர்கள் இந்தத் தீவில் வன்முறை அரசியல் செய்வது நடைமுறைச் சாத்தியமானதாக என்றைக்குமே இருக்கப் போவதில்லை என்பதாகும், அத்தோடு இராணுவ பலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உலக ஓட்டத்திற்கு ஒத்திசைவு இல்லாத அரசியல் கோட்பாட்டின் ஊடாகக் கட்டி எழுப்பப்படும் எந்த ஒரு போராட்டமும் நின்று நிலைக் காது என்பதுமாகும். இவ்வாறு தனது மாநாட்டு கொள்கை விளக்க உரையில் தெரிவித்துள்ளார்". சம்மந்தர் அவர்கள் அவர் மேலும் தெரிவிக்கையில்...

"தத்தமது தேச நலன்களை மட்டுமே மையப்படுத்தி உலக ஒழுங்கை வகுத்துச் செல்லும் உலகப் பெரும் சக்திகளின் சூட்சுமங்களைப் புரிந்து அதற்கேற்ப மட்டுமே நாங்கள் இனி காய்களை நகர்த்திச் செல்ல வேண்டும் என்பதுதான் - கடந்த 60 ஆண்டு காலப் போராட்டம் குறிப்பாக கடந்த 30 ஆண்டு கால வன்முறை வடிவிலான ஆயுதப் போராட்டம் எமக்குக் கற்பித்துச் சென்றிருக்கும் வரலாற்றுப் பாடம். என்று தனது உரையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வன்முறை கலந்த போராட்டம்" என்று விமர்சித்துள்ளார் தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்மந்தன். விடுதலைப் புலிகள் தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்..



"நீண்ட ஆயுதப் போராட்டமும், அது நடத்தப்பட்ட விதமும் - எமது மக்களுக்கு இழப்பையும் அழிவையும் களைப்பையும் சலிப் பையும் ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் போர் முடிந்ததன் பின்னான நிகழ்வுகள் எமது மக்களுக்கு விரக்தியையும் சினத்தையும் சீற்றத்தையுமே கொடுத்தபடி உள்ளன என்பதை இந்த உலகம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்".


"விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியும் மறைவும் எமக்கு உணர்த்தி நிற்பது என்னவெனில் - எவ்வளவுதான் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் எவ்வளவுதான் தர்மத்தின் பாற்பட்டதாக இருந்தாலும் தமிழர்கள் இந்தத் தீவில் வன்முறை அரசியல் செய்வது நடைமுறைச் சாத்தியமானதாக என்றைக்குமே இருக்கப் போவதில்லை என்பதாகும், அத்தோடு இராணுவ பலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உலக ஓட்டத்திற்கு ஒத்திசைவு இல்லாத அரசியல் கோட்பாட்டின் ஊடாகக் கட்டி எழுப்பப்படும் எந்த ஒரு போராட்டமும் நின்று நிலைக் காது என்பதுமாகும். அந்த வகையில் தான் - அனைத்துலகப் பரிமாணங்களுடன் பிறந்திருக்கின்ற தற்போதைய புதிய சூழலில் அந்தச் சூழலுக்கு ஏற்ற வகையான நெகிழ்வுத் தன்மைகளுடன் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடனும் பக்கபலத்துடனும் எமது உரிமைப் போராட்டத்தை நகர்த்திச் செல்லும் புதிய வழிமுறைகளை நாம் கையாளத் தொடங்கியுள்ளோம்". என்று தனது பாணியில் சர்வாதிகாரிபோல் தெரிவித்துள்ளார்.



"எவ்விதமாக ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் எமது கட்சிக்கு வரலாறு ஓர் அரசியல் பிறப்பைத் தந்ததோ அதே விதமாகவே பத்தாண்டுகளுக்கு முன்னர் எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் இருந்த அன்றைய காலச் சூழலுக்கு இசைவாக வரலாறு எமது கட்சிக்கு ஒரு புதிய அரசியற் பாத்திரத்தையும் தந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற குடையின் கீழ் கொள்கை ரீதியாக ஒன்றிணைந்த தமிழ் அரசியல் கட்சிகளைத் தலைமையேற்று வழி நடத்தும் பாத்திரமே அது. அந்தத் தலைமைப் பாத்திரம் என்பது கூட எமது கட்சியின் வரலாறு பாரம்பரியம் தனித்துவம் என்பவற்றின் அடிப்படையிலிருந்துதான் வந்தது. அந்தப் புதிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியே இன்றுவரை விளங்கி வருகின்றது, அவ்வாறே அது என்றும் விளங்கி வரும்".  என்றும் சம்மந்தர் தெரிவித்துள்ளார்.


"ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான தற்போதைய சூழலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆகிய நாம்தான் தமிழ் மக்களின் முதன் மைப் பிரதிநிதிகள். முற்றுமுழுதான சிறீலங்காப் படை மயமாக்கத்தின் கீழ் சிறீலங்கா அரசாங்கத்தின் முழுமையான ஆளுகையின் கீழ் பலவிதமான அழுத்தங்களுக்கு மத்தியிலும் - துணிவுடனும் உறுதியு டனும் தெளிவுடனும் - வாக்களித்த தமிழ் மக்களால் சுதந்திரமாகத் தேந்தெடுக்கப்பட்ட தனிப் பெரும் கட்சி எமது கட்சி. அந்த வகையில் இப்போது - நாம்தான் தமிழர்களின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகள். எவ்விதமான ஆயுதப் பின்னணிகளும் அற்ற - வன்முறைப் போராட்ட வடிவங்களை என்றைக்கும் நிராகரித்த - நீண்ட ஜனநாயகப் பண்பு களைத் தன்னகத்தே கொண்ட - நடைமுறைச் சாத்தியமான தீர்வுத் திட்டங்களையே எப்போதும் முன்வைத்த - இலங்கைத் தமிழரசுக் கட்சியான எமக்குத்தான்; - அதிகூடிய இராஜீய அங்கீகாரமும் அனைத்துலக சமூகத்தால் வழங்கப்படுகின்றது. இந்த இராஜீய அங்கீகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஏற்புடையதாகவும் உரித்துடையதாகவும் கூட பரிணமித்துள்ளது". என்றும் சம்மந்தர் தனதுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவை.


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு விட்டதாகவும், ஒரு தோற்றப்பாட்டை உருவாக முனைகிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாத இடத்தில் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித் துவப்படுத்தும் நோக்கில் இவர்களில் செயற்பாடுகள் நகர்வதை அவதானிக்க முடிகிறது. தமிழர்களின் ஒன்றுபட்ட சக்தியாக உருவாக்கப்பட்டு தமிழர்கள் அனைவராலும் பெரும் நம்பிக்கையுடன் வரவேற்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பேசுபொருளாக வைத்துக்கொண்டு, தமிழரசுக் கட்சியை வளர்க்கவே இவர்கள் முனைகின்ற விடையம் சம்மந்தர் அவர்களின் மாநாட்டு உரையின் ஊடாக தெளிவாக அம்பலமாகியுள்ளது.


இவரின் உரையினை ஆராய்ந்து பார்க்கும் பொழுது தமிழரசுக் கட்சியின் தலைமைகளும் இந்தியாவுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்க துனைபோயிருப்பார்களா? என்றும் சந்தேகம் கொள்ளவும் வைக்கிறது.


இவர்களின் இந்த திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூடமைப்புக்கான தலைமைப் பதவி சுழற்சி முறையில் தெரிவு செய்யப்பட வேண்டும். அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பகாலத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து, பின்னர் சம்மந்தர் குழுவினால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைக்கப்பட வேண்டும். இவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பதின் ஊடாக சம்மந்தர் அவர்கள் தான் ஒரு தமிழ்த் தேசியப் பற்றாளன் என்பதையும், தானொரு ஜனநாயகவாதி என்பதையும் நிரூபிக்க வேண்டும்.


ஐயா பெரியவர்களே! இன்றைய சூழலில் அனைவரும் ஒவ்வெரு கருத்துக்களுடன் தமிழர்களுக்கான தீர்வாக சிங்களம் போடுவதை பெற்றுக்கொள்ள முனைகிறார்கள். அந்தவகையில்தான் ஐயா சம்மந்தர் அவர்களும் "அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு" என்றும், "ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஉரிமை"என்றும் கூறிக்கொண்டு 40 ஆயிரத்திற்கும் அதிகமான மாவீரர்களின் மாபெரும் தியாகங்களின் ஊடாக கண்ணியமான முறையில் தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளுடன் கட்டி வளர்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தமிழரசுக் கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு ஒன்றில் மனச்சாட்சியின்றி திட்டமிட்ட வகையில் களங்கப்படுத்தியுள்ளார்.

நன்றிகள் - இணையம்
read more...