சந்ருவின் பக்கம்

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு
  • Posts RSS
  • Comments RSS
சந்ருவின் பக்கம் உங்களை அன்போடு அழைக்கிறது.

வியாழன், 26 நவம்பர், 2009

என்னைக் கதை சொல்ல சொன்னால்....

Author: சந்ரு | Posted at: 12:50 AM | Filed Under: இலங்கை, தொடர் பதிவு, பதிவுலகம் | 25 கருத்துரைகள்
சுசி அக்கா நான் பதிவெழுத வந்த கதையினை சொல்லும்படி தொடர் பதிவுக்கு அழைத்திருக்கின்றார். அவருக்கு முதலில் நன்றிகள்.

இணைய இணைப்பு இருந்தும் எனக்கு வலைப்பதிவுகள் பற்றி அவ்வளவாகத் தெரியாத காலம். என் பொழுதுகள் அதிகம் இணையத்தில்தான். புதிய விடயங்களை அறிந்து கொள்வதிலும் உள்நாட்டு, உலக நடப்பு விவாகாரங்களையும் அறிந்து கொள்வதோடு அவ்வப்போது அரட்டை அடிக்காமலும் விடுவதில்லை (அரட்டையில் பல கதைகளே இருக்கிறது)

துணிவும், தன்னம்பிக்கையும், தமிழ் பற்றும்  என்னோடு கூடப் பிறந்தது என்றுதான் சொல்ல வேண்டும். என்னில் எனக்கு மட்டுமல்ல என் நண்பர்களுக்கே என்னிடம்  பிடிக்காத விடயம் நான் அநீதிகளை யாராக இருந்தாலும்  தட்டிக் கேட்பதுதான். இதனால் பல பிரஷ்சினைகளுக்கும் முகம் கொடுத்ததுண்டு.

மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள், அவலங்களை வெளி உலகுக்கு கொண்டு செல்லவேண்டும், அநீதிகளை  வெளி உலகுக்கு கொண்டு செல்லவேண்டும் என்கின்ற ஆதங்கம் அதிகம். இதனால் நான் ஒரு பத்திரிகையாளராக வரவேண்டும் என்ற எண்ணம் என்னுள்ளே இருந்தது ஆனால் என் நண்பர்களும் என் குடும்பத்தாரும் தடுத்துவிட்டனர்.

இருந்தாலும் நான் ஒரு இணையத்தளத்தினை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இணையத்தளத்தினை உருவாக்குவதட்குரிய வேலைகளை செய்து கொண்டிருக்கும்போதுதான் நண்பர் பிரபா என்னிடம் வலைப்பதிவு பற்றி சொன்னார். பிரபாவுக்கு நன்றிகள்.

அந்தவேளையில் பிரபா வலைப்பதிவினை உருவாக்கி இருந்தார் அவருக்கும் வலைப்பதிவு பற்றிய போதிய அறிவு இருக்கவில்லை. அவர் வலைப்பதிவு பற்றி சொல்லிய அன்றிரவே வலைப்பதிவை உருவாக்கிவிட்டேன் ஆனால் எனக்கு தமிழிலே தட்டச்சு செய்யத் தெரியாது. அவற்றைக் கற்பதற்கே இரண்டு வாரங்கள் சென்றுவிட்டன.

பின்னர் http://www.google.co.in/transliterate/indic/Tamil முலமாக தட்டச்சு செய்யக் கற்றுக்கொண்டேன் (இன்றும் அதனைத்தான் பயன்படுத்துகின்றேன்) அப்போது எனக்கு அவ்வளவாக வலைப்பதிவுகளை தெரியாது. கருத்துரையிடுதல் எதுவுமே  தெரியாது. அப்போது பிரபா மூலம்  லோஷன் அண்ணாவின் வலைப்பதிவு முகவரியை அறிய முடிந்தது. அப்போது அதிக நேரம் அவரது வலைப்பதிவிலேதான் செலவு செய்தேன். எவ்வாறு பதிவிடுதல். போன்ற விடயங்களை அவரது வலைப்பதிவு மூலமாகத்தான் அறிந்து கொண்டேன். நான் அடிக்கடி லோஷன் அண்ணாவைப் பற்றி சொல்வதனால் தவறான  கண்ணோட்டத்தில் எவரும் பார்க்கவேண்டாம். நாம் நல்ல மனிதர் ஒருவரை பின்பற்றும்போது நாங்கள் எங்களை வளர்த்துக்கொள்ள முடியும். பதிவுலகில் அவரது வலைப்பதிவும், அவர்  எனக்கிடுகின்ற கருத்துரைகளும் என்ன வளர்த்துக்கொள்ள உதவியது.

நான் பதிவுலகுக்கு வந்து தமிழர் கலை, கலாசாரங்களையும், தமிழ்மொழி பற்றியும், எமது மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளையும், அவலங்களையும் பதிவிட வேண்டும் என்று பதிவுலகுக்கு வந்தேன். சில விடயங்களை பதிவிட முடியாது இருக்கின்றபோது கவலைதான். நகைசுவை , சினிமா மற்றும் விளையாட்டு பதிவுகளை தவிர்த்து வந்தபோதும் அவற்றையும் பதிவிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. காரணம் எல்லோரையும் என் பதிவுப் பக்கம் திசை திருப்ப வேண்டும் என்ற எண்ணமே. அவ்வப்போது ஒரு சில நகைசுவை பதிவுகளை இடுகையிட்டபோது. சில நண்பர்களை இழக்கவேண்டி ஏற்பட்டது.

ஆரம்பத்திலே வைத்திருந்த எனது பதிவு தொலைந்துவிட்டது. இப்போது புதிய வலைப்பதிவிலே இருக்கிறேன். ஆரம்ப காலங்களிலே திரட்டிகளில் இணைப்பது பற்றி எதுவுமே தெரியாது. இரண்டு மாதங்களின் பின் திரட்டிகளில் வாக்களிப்பதற்கான வாக்களிப்பு பட்டையை என் வலைப்பதிவிலே இணைத்துவிட்டேன். அவ்வளவுதான். ஒரு மாதம் வரைக்கும் பதிவுகளை இணைப்பது பற்றித் தெரியாது. பின்னர் எல்லாவற்றையும் ஓரளவு கற்றுக் கொண்டேன்.

ஆரம்ப காலங்களிலே நான் பல வலைப்பதிவுகளுக்கு சென்றாலும் கருத்துரையிடுவதில்லை. ஆனால் தானாகவே எனது வலைப்பதிவுக்கு வந்து பல நண்பர்கள் ஊக்கப்படுத்தினார்கள். அவர்களிலே பிரபா, சிந்து, கலை, சசி, சக்கரை சுரேஷ், காயத்திரி போன்றோர் என்னை ஊக்கப்படுத்தி இருக்கின்றனர். அவர்களுக்கு எனது நன்றிகள்.

நான் புதிய வலைப்பதிவுக்கு வந்தபோது நிறையவே நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் சொல்வதென்றால் தொடர் பதிவே இட வேண்டும். அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள். இருந்தபோது ஒருவருக்கு நான் நன்றி சொல்லவேண்டும். இவரிடம் வலைப்பதிவு இல்லை என்னை ஆரம்ப காலம் முதல் எனக்கு கருத்துரைகள் மூலம் ஊக்கப்படுத்திவரும் கலா அவர்களுக்கு நன்றிகள். இவர் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் நான் விடுகின்ற சின்ன பிழைகளை கூட சுட்டிக்காட்டி திருத்துகின்ற ஒருவர். இவர் என் இடுகைகளிலே ஒரு எழுத்துக்குட பிழையாக இருக்கக் கூடாது என்று நினைப்பவர்.

எனக்கு இணையத்தளம், பிளாக்கர் தொடர்பான எந்த விதமான அறிவுமே இல்லை. (பொதுவாக தொழிநுட்பமே தெரியாது) இவைகளை அறிய வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அப்போது எந்த ஒரு தொழிநுட்ப பதிவுகளையும் விட்டு வைக்கவில்லை அனைத்தையும் தேடிப்படிப்பதுண்டு.

இதற்காக நான் தினமும் தமிழிஸ் திரட்டியின் தொழிநுட்ப பதிவுகளைப் பார்த்து வருகின்றேன். அப்பதிவுகளுக்கு சென்று அந்தப் பதிவரால் இடுகையிட்ட அத்தனை இடுகைகளையும் பார்ப்பதுண்டு அதனால் நிறையவே என்னை வளர்த்துக்கொள்ள முடிந்தது.

ஆரம்ப காலங்களிலே எனது வலைப்பதிவிலே பின்தொடர்வோர் கட்ஜெட் இருக்கவில்லை. இவற்றை இணைக்கவேண்டும் என்று இணைப்பதற்கான வழிகளை பல நாள் முயற்சியின் பயனாக தேடலின் மூலம் ஒரு வலைப்பதிவிலே கண்டுபிடித்துவிட்டேன். புதிய பதிவார்கள் பயன்பெற வேண்டும் என்று எவ்வாறு அந்த கட்ஜெட் எவ்வாறு இணைப்பது என்று ஒரு பதிவுமிட்டேன்.

இதுதான் அந்தப் பதிவு..

புதிய வலைப்பதிவர்கள் தமது வலைப்பதிவில் followers வசதியை பெறுவது எப்படி.

அதே போன்றுதான் எனக்கும் கூகிள் விளம்பரங்களை எனது வலைப்பதிவுக்கு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கூகிள் விளம்பரங்களுக்காக பதிவு செய்தேன் இன்னும் கிடைக்கவில்லை. அப்போதுதான் அறிந்தேன் ஆங்கிலப் பதிவுகளுக்கு உடனடியாக கூகிள் விளம்பரங்கள் கிடைப்பதாக அறிந்தேன். எனக்கு ஆங்கிலப் பதிவுகள் எழுதுமளவுக்கு அறிவு இல்லை என்பதனால் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். ஒரு எண்ணம் தோன்றியது ஆங்கில பதிவு ஆரம்பிக்கலாம் என்று. ஆரம்பித்துவிட்டேன் சினிமா நடிகர், நடிகைகளின் படங்களை இடுகையிட்டேன். நிறையவே பார்வையாளர்கள் வந்தார்கள் கூகிள் விளம்பரத்துக்கு பதிவு செய்தேன் அடுத்த நாளே அனுமதி கிடைத்தது. அந்த அந்த கணக்கு மூலம் எனது இந்த வலைப்பதிவிலே கூகிள் விளம்பரங்களை போட்டிருக்கிறேன்.

கூகிள் விளம்பரங்களை பெற விரும்பும் பதிவர்கள் இலகுவாக இந்த முறை மூலம் கூகிள் விளம்பரங்களை பெற முடியும் நான் இதுவரை நான்கு வலைப்பதிவுகளுக்கு கூகிள் விளம்பரம் பெற்றிருக்கிறேன் இந்த முறை மூலம். பதிவு செய்து அடுத்த நாளே அனுமதி கிடைத்துவிடும். பின்னர் எமது தமிழ் வலைப்பதிவுகளில் பயன்படுத்த முடியும்.

பதிவுலகிலே சில விடயங்கள் என்னை கவலையடைய வைத்ததுண்டு. நான் எவரையும் ஒரு போதும் தனிப்பட்ட ரீதியில் தாக்கி பதிவிட்டதில்லை என் கருத்துக்களை சொல்கின்றேன். யார் ஏற்றுக்கொள்ளக் கூடிய விமர்சனங்களை முன் வைத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் சில பெயர் குறிப்பிடாதவர்கள் தேவையற்ற விதத்திலும், தகாத வார்த்தைகளாலும் கருத்துரை இடுகின்றனர்.


சில மிரட்டல்கள் என்று இன்னும் பல விடயங்களை சொல்லலாம். இந்த தாக்குதல்களால் இன்னும் எழுத வேண்டும் எண்ணமே வந்தது.

இந்த பதிவுலகிலே உலகெங்குமிருந்து பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர் அவர்களுக்கு எனது நன்றிகள். எழுத்துத் துறையிலே இன்னும் நான் வளரவேண்டும் என்று நினைக்கின்றேன். இன்னும் என்னை வளர்த்துக்கொள்வேன். நல்ல விடயங்களை பதிவிடவேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது என்றும் நண்பர்களின் ஆதரவும் இருக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.


இந்த தொடர் பதிவினை தொடர்வதற்கு நான் யாரையும் அழைக்கவில்லை. பலர் பதிவிட்டு விட்டார்கள். தொடர விரும்பும் யாரும் தொடரலாம்.
Continue Reading...

புதன், 25 நவம்பர், 2009

இன்றைய சிறுவர்களின் கல்வி நிலைதான் என்ன?

Author: சந்ரு | Posted at: 1:26 AM | Filed Under: இலங்கை, கல்வி, சிறுவர்கள் | 7 கருத்துரைகள்
எனது ஆரம்பகாலப் பதிவொன்று மீண்டும் பதிவாகிறது...


இந்தப்பதிவு மூலமாகவும் சிறுவர்கள் பற்றியே பேசப்போகின்றேன். என்னடா இவன் சிறுவர்கள் பற்றியே பேசிக்கொண்டு இருக்கின்றான் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. எமது சிறுவர்கள் பல்வேறு வழிகளிலே பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.அவர்களைப் பற்றிவும் அவர்களின் எதிர்காலம் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் எமது சிறுவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகுகின்ற வீதம் அதிகமாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளிலேதான் இந்நிலை அதிகமாகக் காணப்படுகின்றது

நாட்டில் இடம் பெற்ற உள்நாட்டு யுத்தம் முக்கிய காரணம் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதற்கில்லை. இதைத்தவிர இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.


ஆறாம் ஏழாம் தரங்களிலே கல்வி கற்கின்ற சிறுவர்களே அதிகமாக பாடசாலையை விட்டு இடை விலகிச் செல்கின்றனர். இதன் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்த பொழுது ஆறாம், ஏழாம் தரங்களுக்கு வருகின்றபோதே அவர்களுக்கு சமுகத்தை பற்றிய உணர்வு தோன்றுகின்றது. அவர்கள் ஆறாம்,ஏழாம் தரங்களை அடையும் வரை அவர்கள் தாங்கள் எழுத வாசிக்க தெரியாமல் இருக்கின்றோமே படிக்கவேண்டுமே என்று சிந்திக்காமல் விளையாட்டுத்தனமாக இருந்து விடுகின்றனர்.

இவர்கள் சமுகத்தை பற்றிய உணர்வு வருகின்ற போது. தாங்கள் எழுத வாசிக்க தெரியாமல் இருக்கின்றோமே, என்ற ஒரு சிந்தனை தோன்றுகின்றது. இவர்கள் பாடசாலையை விட்டு விலக நினைக்கின்றார்கள். காரணம் வகுப்பிலே இருக்கின்ற சக மாணவர்கள் தங்களை கேலியாக பார்ப்பார்கள், தாங்கள் கேலி நிலைக்கு சென்று விட்டோமே என்ற ஒரு மனப் பாண்மை தோன்றுகின்றது. இதனால் படிப்படியாக பாடசாலையை விட்டு இடை விலகுகின்றனர்.

இவ்வாறு இடை விளகுகின்றவர்களின் நிலை .கேள்விக்குறியாகின்றது இவர்கள் பல்வேறு பட்ட பிரட்சனைகளை எதிர் நோக்குகின்றனர். இது ஒரு புறமிருக்க. இவர்கள் இவ்வாறு இடை விலகுவதை தவிர்ப்பதற்குரிய வழிகளை ஆராய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.


இவ்வாறு இடை விளகுபவர்களின் வீதம் கிராமப்புரங்களிலேதான் அதிகமாகக் காணப்படுகின்றன. இவர்களை பற்றி ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது. இவர்களது பெற்றோரும் கல்வியிலே பின் தங்கி இருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. இவர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியிலே அக்கறை செலுத்தாதவர்களாக இருக்கின்றனர். முதலிலே இப்படியான பெற்றோருக்கு சிறுவர்களின் கல்வியின் அவசியம் பற்றி. பல விழிப்புணர்வுக் கருத்தரங்கு போன்ற பல்வேறு செயற்பாடுகளை செயட்படுத்த வேண்டி இருக்கின்றது.

அத்தோடு நாங்கள் உடனடியாக இடைவிலகிய சிறுவர்களை பாடசாலையில் சேர்த்துக் கொள்வதனால் அவர்கள் மீண்டும் இடை விலகக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுக்கின்றன. முதலிலே இவர்களை தனிப்பட்ட ரீதியிலே அணுகி இவர்களை எழுத வாசிக்க பழக்க வேண்டும். பல சிறுவர்கள் நன்றாக படிக்கக்கூடியவர்கள் இன்று பாடசாலையை விட்டு இடை விலகியவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கண்டறியப்பட்டு இன்று கல்வியிலே முன்னிலையில் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை தனிப்பட்ட ரீதியிலே எழுத வாசிக்க பழக்கிய பின்னர் அவர்களை பாடசாலையில் சேர்க்கின்ற போது அவர்களது மனதிலே இருந்த படிக்கத் தெரியாதவர்கள் என்ற குற்ற உணர்வு நீங்குகின்றது. கல்வியிலே முன்னிலைக்கு வரக்கூடிய சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றன. இதில் பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்கள் தொடர்பாக பல்வேறு செயத் திட்டங்களை மேற்கொண்டு வரும் களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியம் வெற்றியும் கண்டுள்ளது. பல இடை விலகிய மாணவர்களின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களை பாடசாலைகளிலே மீண்டும் சேர்த்து இன்று கல்வியிலே நல்ல நிலையில் இருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.


இன்னும் பல காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். காரணங்களையும் தடுப்பதற்குரிய வழிவகை என்ன?... அவ்வப்போது உங்களுக்காக வந்து சேரும்.


படங்கள் பல இணையத் தளங்களிலிருந்து பெறப்பட்டவை.

Continue Reading...

செவ்வாய், 24 நவம்பர், 2009

நமக்காக நாம். மீண்டும் சந்திப்போம்.

Author: சந்ரு | Posted at: 8:16 AM | Filed Under: இலங்கை, பதிவர் சந்திப்பு | 10 கருத்துரைகள்

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு


இலங்கைப் பதிவார்கள் அனைவரும் ஆவலோடு எதிர் பார்த்துக்கொண்டிருந்த பதிவர் சந்திப்பு - 2 எதிர்வரும் 13 ம் திகதி தேசிய கலை இலக்கியப் பேரவை, (வெள்ளவத்தை) இடம்பெற இருக்கின்றது. இச் சந்திப்பிலே பல விடயங்கள் இடம்பெற இருக்கின்றன. இலங்கையின் அனைத்து தமிழ் வலைப் பதிவர்களும் அன்றைய தினம் ஒன்றாக சந்திப்போம்.

சந்திப்பு தொடர்பான விபரங்களை தருகின்றேன்....

இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)

காலம் : டிசம்பர் 13 (தமிழ் கார்த்திகை 27) , மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை ( 13-12-2009 )

நிகழ்ச்சி நிரல்

• அறிமுகவுரை
• புதிய பதிவர்கள் அறிமுகம்
• கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல்
• கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள்
• சிற்றுண்டியும் சில பாடல்களும்
• கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது?
• கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்
• பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
• உங்களுக்குள் உரையாடுங்கள்

பதிவர்கள் தங்கள் வருகையை  அமைப்புக்குழுவினரில் ஒருவருக்கு தொலைபேசியோ, நேரிலோ அல்லது ஏதோ ஒரு வழியிலோ தெரிவித்தால் நலம்பெறும்.

எம்மால் எமக்காக நடாத்தப்படும் இந்தச் சந்திப்பை சிறப்பாக நடாத்த பதிவர்கள் குறைந்தது நூறு ரூபாய்களாவது கொடுத்து சிறப்பாக நடாத்துங்கள்.

இந்தப் பதிவர்சந்திப்பு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.

அதன் சுட்டி http://livestream.com/srilankatamilbloggers
இம்முறை அமைப்புக் குழுவினர்

கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு மயூரன்

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.
Continue Reading...

திங்கள், 23 நவம்பர், 2009

இவர் பின்னால் ஒரு கூட்டமே இருக்கு

Author: சந்ரு | Posted at: 10:00 AM | Filed Under: இலங்கை, சாகித்திய விருது, லோஷன் | 48 கருத்துரைகள்


இன்று வலைப் பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்தபோது. நண்பர் வந்தியின் வலைப் பதிவைப் பார்த்ததும் மனதிலே மிகவும் சந்தோசமாக இருந்தது. நான் அதிகம் நேசிக்கின்ற லோஷன் அண்ணாவுக்கு சாகித்திய விருது கிடைக்கப்போகின்றது என்ற சந்தோசமான செய்தியை நண்பர் வந்தியின் வலைப்பதிவு முலமாக அறிந்து  கொண்டேன். லோஷன் அண்ணாவைப் பற்றி நீண்ட நாட்களாக பதிவிட வேண்டும் என்ற ஆவலோடு இருந்த நான் இன்று அவரைப் பற்றி சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நான் சிறு வயதிலிருந்தே (என் நினைவு தெரிந்த நாள்முதல்) வானொலிக்கு அடிமையான ஒருவன். அன்று முதல் இன்றுவரை பல ஒலிபரப்பாளர்களால் அறிவிப்புத் துறைக்கு  ஈர்க்கப்பட்டவன். அதன் பயனாக இன்று நானும் ஒரு ஒலிபரப்பாளன்.

நான் ஒலிபரப்புத் துறைக்கு ஈர்க்கப்படுவதட்கு முதல் காரணமாக இருந்தவர் கே. எஸ். ராஜாவாக இருந்தாலும். நான்  ஒலிபரப்புத் துறைக்கு போக வேண்டும் என்று அதிக ஆசையை என்னுள்ளே வளர்ப்பதற்கு காரணமானது லோஷன் அண்ணாவின் அறிவிப்புத்தான்.


எப்பொழுதும் என் கையில் ஒரு சிறிய வானொலி பெட்டி  இருக்கும் சாப்பிடும் போதும்,படிக்கும்போது, எங்கேயாவது போவதென்றாலும் கையிலே அந்த வானொலிப்பெட்டி இருக்கும். அந்தளவுக்கு   வானொலிமீது காதல் கொண்டவன். சுனாமி வந்தபோது நான் எடுத்துக்கொண்டு ஓடிய ஒரு பொருள் வானொலிப் பெட்டி மட்டுமே.

நான் சிறு வயது முதல் இலங்கை ஒலிபரப்புக்  கூட்டுத்தாபன நிகழ்சிகளை கேட்டு வருவேன்.  தனியார் வானொலிகள் வந்தபோதும் ஒரு போதும்  என்ன நிகழ்சிகள் தனியார் வாநோளிகளிலே போகின்றது என்று கூட ஒரு போதும் பார்த்ததில்லை.

ஒருநாள் காலையில் எதிர் பாராத விதமாக வானொலியைக் கிறுக்கிக் கொண்டிருக்கும்போது சக்தி வானொலி என்னை அறியாமலேயே பிடிபட்டது. அப்போது எப்படி நிகழ்சி போகிறது என்று 5 நிமிடம் பார்ப்போம் என்று இருந்த எனக்கு மாற்றுவதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை. ஒரு போதும்  என்னால் அறியப்படாத ஒரு குரல் மிகவும் சிறப்பான முறையிலே நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதை பார்த்ததும் தொடர்ந்து அவரது நிகழ்சிகளை கேட்கவேண்டும் என்ற ஆவல் என்னுள்ளே வந்தது. தொடர்ந்து சக்தியின் நிகழ்சிகளை கேட்க ஆரம்பமானேன்.

அவரால் நிகழ்சிகள் தொகுத்து வழங்கப்படும் விதம். வழங்கப்படும் தகவல்கள், குரல் எல்லாமே என்னை கவர்ந்து விட்டன. ஆனாலும் நான் பாடசாலைக்கு செல்வதால் அவரது காலை நேர நிகழ்சிகளை கேட்க முடியவில்லையே என்ற கவலைதான். அப்போது என்னுள்ளே ஒரு எண்ணம் தோன்றியது. ஒளிப்பதிவு செய்யக்கூடிய ஒரு வானொலிப் பெட்டியை வாங்கினால் நான் இல்லாத நேரம் வீட்டில் உள்ளவர்களால் நிகழ்சிகளை ஒலிப்பதிவு செய்ய முடியும்  நான் வந்து கேட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. செயலிலும் இறங்கிவிட்டேன்.

நிகழ்சிகளை நேரடியாக கேட்க முடியாவிட்டாலும் ஒலிப்பதிவு செய்து கேட்பதிலே சந்தோசம் இருந்தது.  அவரால் சக்தி வானொலியிலே செய்யப்பட்ட வணக்கம் தாயகம், ஆனந்த இரவு போன்ற நிகழ்சிகள் இன்றும் என்னால் மறக்க முடியாத நிகழ்சிகளே. என்னை பிரமிக்க வைத்த அமாவாசை இரவு நிகழ்சி என்றும் என்னால் மறக்க முடியாது. ஒரு பேய் பங்களாவுக்குள்ளே ஒரு அமாவாசை இரவிலே ஆய்வு செய்ய புறப்பட்ட குழுவின் துணிச்சலை பார்த்து வியந்ததோடு இப்போது நினைக்கும்போதும் அவர்கள் அத்தனை பேரினதும்  திறமைகளையும் பாராட்டவேண்டும்.

அப்போது எதிர்பாராதவிதமாக எனக்கு கிடைத்த ஏமாற்றம் லோஷன் அண்ணா சூரியன் வானொலிக்கு மாற்றம் பெற்று சென்றதுதான். காரணம் கிழக்கு மாகாணத்திலே சூரியன் ஒலிபரப்பாவதில்லை என்பதுதான். இருந்தாலும் சில காலத்தின் பின் சூரியன் கிழக்கிலே ஒலிக்க ஆரம்பித்ததும் மட்டற்ற மகிழ்சி அடைந்தேன்.

அவரால் சூரியனிலே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பிலே நிகழ்சிகள் வழங்கப்படும் பொது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அதிலும் குறிப்பாக வெள்ளிக் கிழமைகளிலே இலக்கிய நாள்  நிகழ்சி என்னை மிகவும் கவர்ந்தது. பல நிகழ்சிகள் நேரடியாக கேட்க முடியவில்லை. ஒலிப்பதிவு செய்தே கேட்டு வந்தேன்.

இன்று பல அறிவிப்பாளர்கள் தங்களை மற்றவர்களிடம் வெளிக்காட்டிக் கொள்ளவும் தாங்களே பெரியவர்கள் என்று அகங்காரத்தோடு இருக்கும்போது லோஷன் அண்ணாவோ தான் ஒரு பிரபலமான அறிவிப்பாளன் என்று இல்லாமல் எல்லோருடனும் சமமாக மதிக்கின்ற நிலைதான் அவரை இன்றும் பல புகழோடு நிலைத்திருப்பதட்கு காரணமாகும்.

இவர் தனக்கு  கீழ்வேலை செய்கின்றவர்களையும் சமமாக மதிக்கின்ற பண்பினைக் கொண்டவர். ஒலிபரப்புத் துறை போட்டி நிறைந்த இந்த   சூழலிலே ஒலிபரப்புபரப்பு நுட்பங்களை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்க எவரும் விரும்பமாட்டார்கள் ஆனால் இவரோ பலரின் வளர்ச்சிக்கு பல ஒலிபரப்பு நுட்பங்களை சொல்லிக்கொடுத்து வருகின்றார். பல ஒலிபரப்பாளர்களை உருவாக்கி இருக்கின்றார்.

எந்த ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டாலும், என்ன கேள்வியை கேட்டாலும் அது தொடர்பான அனைத்து விபரங்களையும் உடனே சொல்லுகின்ற விதம் எப்படி இவரால் முடிகின்றது என்று இன்றும் நான் யோசித்துப் பார்ப்பதுண்டு.

யாராக இருந்தாலும் திறமையானவர்களை பாராட்டுகின்ற நல்ல குணமும், விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும்  நல்ல மனப்பாண்மையும் இவர் எல்லோராலும் விரும்பப்படுவதட்குரிய காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். யாராக இருந்தாலும் சரியான விமர்சனங்களாக இருந்தால் ஏற்றுக் கொள்ளும்  இவரது கொள்கை என்னை மிகவும் கவர்ந்தது.

அதேபோன்று பல வலைப்பதிவர்களை உருவாக்கி இருக்கின்றார். நான் கூட இவரது வலைப்பதிவைப் பார்த்துத்தான் எப்படி எழுதலாம் என்ற விடயங்களை அறிந்து கொண்டேன்.

இன்னும் இவரைப் பற்றி பல விடயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு சிறந்த ஒலிபரப்பாளன். சிறந்த வலைப்பதிவர். ஒரு சிறந்த மனிதர் என்று மொத்தத்தில்  சொல்லிவிடலாம்.

இவருக்கு நாளை சாகித்திய விருது கிடைப்பது எனக்கு மட்டற்ற மகிழ்சியை தருகின்றது. இந்த விருது மட்டுமல்ல இன்னும் பல விருதுகளை பல துறைகளிலும் பெற வேண்டும் என்று வாழ்த்துவதோடு இறைவனையும் பிராத்திக்கின்றேன்.


மற்றும் நாளை சாகித்திய விருதினைப் பெறும் எமது வலைப்பதிவர் மேமன் கவி உட்பட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
Continue Reading...

ஞாயிறு, 22 நவம்பர், 2009

இப்படியெல்லாம் நடக்கிறது..

Author: சந்ரு | Posted at: 9:29 AM | Filed Under: இலங்கை, செய்திகள் | 15 கருத்துரைகள்
திருந்தாத திருட்டுப் பதிவார்கள்...


 என் வலைப்பதிவிலே நான் இடுகையிட்டு சில மணி நேரத்திலே அப்படியே வேறொரு வலைப்பதிவிலே திருடிப்போடப்படுகின்றன. அவரிடம் பல தடவை அப்படி செய்யவேண்டாம் என்று சொல்லியும் எந்த பயனும் இல்லை இன்னும்   திருட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்த பதிவுத்திருட்டு தொடர்பிலே எனக்கு இருக்கும் சந்தேகத்தை உங்களிடம் கேட்கிறேன். பதிவை திருடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா? அதற்கு ஏதாவது நடை முறைகள் இருக்கின்றதா? (நான் சட்ட நடவடிக்கை எடுக்க இல்லை அறிந்து கொள்வதற்காக கேட்கிறேன்)

என்னடா இவர் பெரிய பதிவு போடுறாரு திருடுறவங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று யோசிக்காதிங்க   அப்படியெல்லாம் ஒன்றும்  இல்லை. இன்று பதிவார்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சனை என்பதனால் இது தொடர்பான விபரங்களை அறிந்து கொண்டால் பிரயோசனமாக இருக்கும்  என்றுதான்.

திருட்டுப் பதிவார்கள் மிது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா? இது தொடர்பிலே ஏதாவது பிரமாணங்கள் இருக்கிறதா? உங்கள் கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்.

இப்படியும் அதிகாரிகள்....

சிறுவர்களின் கல்வி நடவடிக்கையிலே பல்வேறு செயத்திட்டன்களை மேற்கொண்டு வரும் ஒரு சமுக சேவை அமைப்பு ஒரு பாராளுமன்ற உறுப்பினரிடம். அவர்களின் செயத்திட்டங்களுக்காக சில உதவிகள் பல பல தடவைகள் கேட்டதன் பயனாக அந்த பாராளுமன்ற உறுப்பினர் இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு கணணி உபகரணம் வாங்குவதற்கு  வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்கியிருந்தார்.

இந்த சமுக சேவை அமைப்பானது. வறிய, பின்தங்கிய மாணவர்களுக்கு உதவி செய்தல், பாடசாலையை விட்டு மாணவர்கள் இடை விலகுதல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு இடை விலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலையில் சேர்த்தல் போன்ற பல செயற்பாடுகளிலே இடுபட்டு வருகின்றது. அத்தோடு தினமும் 300 மாணவர்களுக்கு இரவு நேர வகுப்புக்களையும் நடாத்தி வருகின்றது. இவை அத்தனைக்குரிய செலவையும் அந்த அமைப்பின் உறுப்பினர்களே செய்து வருகின்றனர். இந்த விடயங்கள் அனைத்தையும் அறிந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர். ஒதுக்கிய நிதி வெறும் 80000 ரூபாதான் . இந்த அமைப்பின் மாதாந்த செலவு அதைவிட அதிகம்.

இது இவ்வாறிருக்க பாராளுமன்ற உறுப்பினரால் பணம் ஒதுக்கப்பட்டு இரண்டரை மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் பிரதேச செயலக அதிகாரிகள் கணணி இயந்திரம் வாங்கித் தருவதாக இல்லை. திங்கட்கிழமை வாருங்கள், திங்கட்கிழமை போனால் புதன்கிழமை வாருங்கள் என்று ஏமாற்றி வருகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினரால் பணம் வழங்கப்பட்டு இரண்டரை மாதமாகியும் இன்னும் கணணி உபகரணம் வாங்கி கொடுக்கப்படாததன் காரணம் என்ன? இதிலே சில சுத்து மாத்துக்கள் இருப்பதுபோன்று தோன்றுகின்றது.

வீதி அபிவிருத்தியும் சுருங்கும் வீதிகளும்.

இன்று மகிந்த சிந்தனைத் திட்டத்தில் பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் முன்னெடுத்து வரப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே துரிதமாக வீதி அபிவிருத்தி இடம் பெற்று வருகின்றன.

உள் வீதிகள் கொங்கிரீட் வீதிகளாக மாறி வருகின்றன. நல்ல விடயமாக இருந்தாலும். இந்த வீதிகள் 10 அடி அகலத்திலே போடப்படுகின்றன. ஆரம்பத்தில் இந்த வீதிகள் 20 அடிக்கும் மேல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 20 அடி அகலமான வீதி 10 அடியாகக் குறைக்கப்படுகின்றது. இதனால் வாகனங்கள் பிரயாணம் செய்வதிலே பல சிக்கல்கள் இருக்கின்றன.


இரண்டு வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்வது, எதிரெதிராக வரும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை என்பன ஏற்படுகின்றன. இது தொடர்பிலே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துவது நல்லதே.


இங்கேயும் போகலாம்..

பேசாத பிள்ளைகளை பேச வைப்பவர்
Continue Reading...

வெள்ளி, 20 நவம்பர், 2009

திருந்துவார்களா இவர்கள்

Author: சந்ரு | Posted at: 6:07 AM | Filed Under: இலங்கை, ஏமாற்று, பணம் | 44 கருத்துரைகள்

மனிதன் இன்று எப்படி எப்படி எல்லாம் உழைக்கக் கற்றிருக்கின்றான். இன்று வேலையில்லையென்று பலர் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் சிலர் மிகவும் சுலபமான முறையிலே. உடலை வருத்தாது இருந்த இடத்திலே இருந்து ஒரு சில நிமிடங்களிலே நிறையவே பணம் உழைக்கின்ற சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்.


இவ்வாறு சுலபமா பணம் சம்பாதிக்க பல வழிகள் இருக்கின்றன. அண்மையிலே எனது நண்பர் ஒருவருக்கு உடனடியாக பணம் தேவைப் பட்டது. அவரிடம் எந்தவிதமான பணமும் இல்லை. அவரிடம் இருந்ததங்க நகைகள் வங்கியிலே அடகு வைக்கப்பட்டிருந்தது.


அந்த நகைகளது பெறுமதியிலிருந்து மிகவும் குறைந்த பெறுமதிக்கே அடகு வைக்கப்பட்டிருந்தது. அப்போது நண்பர் வங்கியிலே இருக்கின்ற நகைகளை எடுத்து மீண்டும் பெரிய தொகைக்கு அடகு வைக்கலாம் என்று சொன்னார். என்னிடமோ அவரிடமோ எந்த பணமும் இல்லை. நான் அவரிடம் கேட்டேன் பணம் இல்லாமல் போகிறோம் பணத்துக்கு என்ன செய்வது என்று நீ வா அதற்கு வழி இருக்கிறது என்று சொன்னார். நானும் சரி என்று சொல்லிவிட்டு அவரோடு சென்றேன்.

இருவரும் வங்கிக்கு சென்றோம். நண்பர் வங்கியிலே நின்ற வாடிக்கையாளர் ஒருவரை சந்தித்து ஏதோ பேசினார். அவர் உடனே தன்னிடம் இருந்தா பணத்தில் நண்பருக்கு தேவைப்பட்ட பணத்தைக் கொடுத்தார். div align="justify">நண்பனோ நகையினை எடுத்து மீண்டும் அடகு வைத்துவிட்டு வந்து நண்பருக்கு பணம் கொடுத்த நபருக்கு பணம் கொடுக்கும் போதுதான் அறிந்தேன் இவர் வட்டிக்கு பணம் கொடுப்பவர் என்று.


சரி எவ்வளவு வட்டி கொடுத்தாய் என்று கேட்டேன் நண்பர் சொன்ன பதில் என்னால் நம்ப முடியவில்லை. ஒரு இலட்சம் ரூபாவுக்கு ஒரு மணித்தியாலம் இரண்டாயிரம் ரூபாய் என்று சொன்னார்.


இது வங்கியில் மட்டுமல்ல சந்தைகளில்கூட நடப்பதாக பின்னர்தான் அறிந்து கொண்டேன். எப்படியெல்லாம் உழைக்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க இன்னொரு புறத்திலே வட்டிக்கு பணம் கொடுப்போரால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவது ஏழைக்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் அதிகமாக பணக்காரர்களாகவே இருக்கின்றனர். ஏழைகளுக்கு பணம் தேவைப்படும்போது உடனடியாக இவர்களை நாடுகின்றனர். அப்போது வட்டிக்கு பணம் உடனடியாக வழங்கப் படுவதில்லை. வட்டிக்கு பணம் பெறுபவரின் காணி, வீடு என்பன அடமானம் வைத்தே வழங்கப்படுகின்றது. அத்தோடு ஒருவருடத்துக்குள் பணம் வழங்கப்படவில்லை எனில் பிணையாக வழங்கப்பட்ட சொத்துக்கள். வட்டிக்கு பணம் கொடுப்பவருக்கே சொந்தமாக்கப்படும் என்று எழுதி வாங்கிக்கொள்ளப்படுகின்றது.

பலர் கடனை உரிய காலத்தில் செலுத்த முடியாமல் தமது சொத்துக்களை இழந்திருக்கின்றனர். வட்டிக்கு பணம் கொடுப்போரால் ஏழைகளின் சொத்துக்கள் அபகரிக்கப்படுகின்றன. இவர்களுக்கு கடன் வழங்கப்படுகின்ற வட்டி வீதமும் அதிகம். இதனாம் ஏழைகள் உழைக்கின்ற பணத்தினை வட்டிக்காகவே செலவு செய்கின்றனர்.


திருந்துவார்களா இவர்கள்.
Continue Reading...

புதன், 18 நவம்பர், 2009

தமிழ் மொழியை கொலை செய்து வளர்ந்து வரும் தமிழ் சினிமா.

Author: சந்ரு | Posted at: 8:56 PM | Filed Under: சினிமா, தமிழ்மொழி | 34 கருத்துரைகள்
இன்று பல்வேறு வழிகளிலே தமிழ்மொழி கொலைசெய்யப்பட்டு வருகின்றது. இன்று எங்கு பார்த்தாலும் தமிழ் மொழியோடு தேவையற்ற விதத்திலே வேற்று மொழியினைக் கலந்து தமிழ் மொழியின் இனிமையினையும், தமிழ் மொழியின் சிறப்பினையும் குழி தோண்டிப் புதைக்கின்றனர்.

தமிழ் மொழியினை கொலை செய்வதிலே இன்று திரையுலகம்கூட விட்டு வைக்கவில்லை. திரையுலகத்தைப் பொறுத்தவரை பல வழிகளிலே எமது தமிழ் மொழியினை வளர்க்க முடியும். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? தமிழ் மொழியை வளர்ப்பதற்குப் பதிலாக எப்படி எல்லாம் தமிழ் மொழியினை கொலை செய்ய முடியுமோ அப்படி எல்லாம் கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

திரையுலகம் சார்ந்த எல்லோரையும் குற்றம் சொல்லவில்லை. தமிழ் மொழியை வளர்ப்போரும் திரையுலகத்திலே இருக்கின்றார்கள். இருந்தாலும் இன்று திரைப்படங்களிலே பல்வேறு வழிகளிலே தமிழ்மொழி கொலை செய்யப்படுகின்றது.

அன்றைய திரைப்படங்களிலே தமிழ் மொழி இன்றுபோல் கொலை செய்யப்பட்டதா இல்லையே? இன்று என்ன செய்கின்றார்கள்.

இன்றைய தமிழ் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் எமது கலாசாரத்துக்கு போருத்தமிலாத குடும்பத்தோடு பார்க்க முடியாத திரைப்படங்களே அதிகம் எனலாம். அதனை விட்டுவிடுவோம். திரைப்படங்களிலே தமிழ் மொழியிலே எத்தனை வீதம் பேசுகின்றார்கள் என்பதனை பார்த்திருக்கின்றீர்களா. ஏன் நாங்கள் தேவையற்ற முறையிலே வேற்று மொழிகளை பயன்படுத்துவதனை தவிர்த்து எமது தாய் மொழி தமிழினை பயன் படுத்துவதிலே என்ன தவறிருக்கின்றது.

இன்று வருகின்ற பாடல்களிலே என்ன செய்திருக்கின்றார்கள் அவர்கள் என்ன மொழியிலே பாடல்கள் எழுதியிருக்கின்றார்கள் என்பதே புரிந்து கொள்ள முடியாமலிருக்கின்றது. ஏன் தமிழ் பாடலிலே வேற்று மொழிகளை கலக்கின்றார்கள் தமிழ் மொழியிலே அழகான சொற்கள் இல்லையா? எத்தனை சொற்கள் இருக்கின்றன. இந்தக் கவிஞர்களுக்கு தமிழ் சொற்களுக்கு பஞ்சமா அல்லது தமிழ் மொழி தெரியாதவர்களா?

தமிழ் மொழியிலே பாடல் எழுதத் தெரியவில்லை என்றால் இவர்களுக்கு எதற்கு தமிழ் கவிஞர்கள் எனும் பட்டம். இவர்களுக்குத் இவர்களுக்குத் தெரிந்த வேற்று மொழிகளிலே பாடல்களை எழுதலாமல்லவா? ஏன் தமிழ் மொழியை கொலை செய்து தமிழ் மொழியின் சிறப்பை இல்லாதொழிக்க நினைக்கின்றனர்.


இவர்களால் எத்தனை இலக்கியப் பாடல்கள் கொச்சைப் படுத்தப்பட்டிருக்கின்றன. எத்தனை இலக்கியப் பாடல்களை தமது பாடல்களிலே புகுத்தி எமது தமிழ் மொழியினை கொச்சைப் படுத்தியிருக்கின்றனர்.எத்தனை தேவாரங்களை கொச்சைப் படுத்தியிருக்கின்றனர். வேறொரு மொழியிலே இவ்வாறு செய்ய அந்த மொழியினை சார்ந்தவர்கள் விடுவார்களா?

இவர்களால் தமிழிலே பாடல்களை எழுதுவதற்கு என்ன. தமிழ் மொழியிலே சொற்களுக்கு பஞ்சமா? அல்லது இவர்களுக்கு தமிழ்மொழி தெரியாதா? தமிழ் மொழியிலே பாடல் எழுதத் தெரியாதவர்கள் எதற்கு தமிழ் கவிஞர்கள் என்று தங்களை சொல்லவேண்டும். தமக்கு தெரிந்த மொழிகளிலே எழுதலாமே. எங்கள் தமிழ்மொழியை ஏன் சாகடிக்கவேண்டும்.

இன்று இரசிகர்கள் இதனைத்தான் விரும்புகிறார்கள் என்று சொல்லப்போகின்றார்களா? இரசிகர்கள் விரும்புவதை விட அவர்களால் திணிக்கப்படுகிறது. இரசிகர்களை பழக்கப்படுத்தி விட்டது யார்? இவர்களால் திணிக்கப்பட்டபோது ஆரம்பத்திலே சகித்துக் கொண்டு கேட்க ஆரம்பித்தனர். பின்னர் தங்களை பழக்கப் படுத்திக்கொண்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.

அன்று வேற்று மொழிக் கலப்பிலாத பாடல்கள் வெளிவரவில்லையா? அந்தப் பாடல்கள் இன்றும் மக்கள் மனதிலே இடம்பிடித்திருக்கின்றன. ஆனால் இன்றைய பாடல்கள் எவ்வளவு காலம் நிலைத்திருக்கின்றன? சினிமாப் பாடல்கள் இன்று தமிழ் மொழியினைக் கொலை செய்வதனை ஒரு தொடர் பதிவே எழுத முடியும்.

தமிழ் மொழியினை வளர்ப்பதற்காக தமிழ் மொழியிலே திரைப்படங்களின் பெயர்களை வைத்தால் வரி விலக்கு..... சரி திரைப்படங்களிலே தமிழ் மொழியும் எமது இலக்கியங்களும் கொலை செய்யப்படுவதை என்னவென்றே பார்க்காது. வேற்று மொழியிலே பெயர் வைப்பதை தடை செய்வதிலே என்ன இருக்கிறது? திரைப்படமே ஒட்டு மொத்தத்தில் தமிழ் மொழியை கொலை செய்கிறது.திரைப்பட பெயரினை தமிழில் வைத்து தமிழை கொலை செய்யும் திரைப்படங்களை என்ன செய்வது.

தமிழ் மொழி பற்றிப் பேசுகின்றவர்கள் திரைப்படப்பாடல்களும், திரைப்படமும் தமிழை கொலை செய்வதை பற்றி சிந்தித்திருக்கின்றார்களா?

இன்று தமிழ் மொழியை வளர்க்கின்ற திரையுலகம் சார்ந்தோரும். திரைப்படங்களும் இல்லாமல் இல்லை. தமிழ் மொழியினை கொலை செய்கின்றவர்கள் எமது மொழியின் வளர்ச்சிக்காக தமிழ் மொழியினை தமது பாடல்களிலே கொலை செய்வதனையாவது நிறுத்தி தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக நல்ல பாடல்களைத் தருவார்களா?
Continue Reading...

மகிந்த ராஜபக்ஷ அவர்களும் ஆயிரம் ரூபாவும்

Author: சந்ரு | Posted at: 4:50 PM | Filed Under: அரசியல், இலங்கை, நாணயம் | 13 கருத்துரைகள்
இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்திலே வெளியிடப்பட்ட 1000 ரூபா நாணயத்தாளின் தோற்றமே இது.
இந்த நாணயத்தாள் சொல்வது என்ன?

Continue Reading...

வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில்

Author: சந்ரு | Posted at: 12:42 AM | Filed Under: இலங்கை, வானொலி. கே.எஸ்.ராஜா | 25 கருத்துரைகள்
சில நாட்களாக என்னுள்ளே சில இனம் புரியாத கற்பனைகளும், கவலைகளும். இன்று நடப்பவைகளை எல்லாம் யோசித்து பார்க்கும்போது என்னடா உலகம் என்று எண்ணத் தோன்றுகின்றது. எழுத நினைப்பவை ஏராளம். ஆனால் எழுத முடியவில்லை. என் சுதந்திரம்தான் பர்றிக்கப்பட்டதென்றால். என் கருத்துச் சுதந்திரத்தையும் பறிக்க நினைப்பதா? ஏன் இந்த நாட்டில், இந்த உலகில் ஏன் பிறந்தோம் என்றே எண்ணத் தோன்றியது.

பல விடயங்கள் பதிவிட இருந்தாலும் மனம் இடம் கொடுக்காதபடியால். இணையத்திலே ஒரு சுற்று சுற்றிவந்தபோது நான் தேடிக்கொண்டிருந்த விடயங்களை கண்டுகொள்ளமுடிந்தது. அளவற்ற சந்தோசமடைந்தேன் அவற்றை உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன்.

என்னை அறிவிப்புத் துறைக்கு வருவதகு தூண்டுகோலாக இருந்தவரும், என்றும் நான் நேசிக்கின்ற, மறைந்தும் மறையாது மக்கள் மனங்களிலே இன்றும் நிலைத்திருக்கின்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளராக இருந்து அறிவிப்புத் துறைக்கே பெருமை சேர்த்த மறைந்த அறிவிப்பாளர் கே.எஸ். ராஜா பற்றிய பல்வேறுபட்ட தகவல்களை அறிந்து கொள்ளமுடிந்தது அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.


ஒரு நல்ல ரசிகனே நல்ல அறிவிப்பாளனாக இருக்கமுடியும். நான் அறிவிப்பாளனாக இருந்தாலும் கூட நான் அறிவிப்பாளன் என்பதனை வெளிக்காட்ட விரும்புவதில்லை. நல்ல ரசிகன். நல்ல நிகழ்சிகளை படைக்கின்ற எந்த அறிவிப்பாளராக இருந்தாலும் அவர்களின் ரசிகனாகிவிடுவேன். அதனால் என்னை நிறையவே வளர்த்துக்கொள்ள முடிந்தது.

எனது சிறிய வயதுமுதல் வானொலியோடு கட்டிப்போட்டவர் கே.எஸ் .ராஜா அவர்கள். நான் பிறந்து வளர்ந்தது பின்தங்கிய ஒரு பிரதேசம் மின்சார வசதிகூட இல்லை (அங்கே இன்றும் மின்சார வசதி இல்லை நான் இப்போ வேறு இடத்தில் இருக்கிறேன் ) உலர் மின்கலம் மூலம் இயங்கும் வானொலியில்தான் நிகழ்சிகளைக் கேட்பதுண்டு.

சிறு வயதிலே நான் எப்போது வானொலியோடுதான் இருப்பேன் படிக்கும்போதும் பக்கத்திலே வானொலிப்பெட்டி இருக்கும் ( இன்றும் அப்படித்தான்) அன்று கே.எஸ் ராஜா அவர்களால் உமாவின் வினோதவேளை நிகழ்சியினை தொகுத்து வழங்கிய விதமும் அவரின் குரலும் என்றும் என்னுள்ளே ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

நான் மிகவும் சிறு வயதாக இருக்கும்போது அவர் அறிவிப்பாளராக இருந்ததனால் என்னால் அவரது நிகழ்சிகளை முற்று முழுதாக கேட்க முடியவில்லையே என்று கவலைப் படுவதுண்டு. இன்று அவர் எங்களோடு இருந்திருந்தால் நான் இன்னும் எவ்வளவோ வளந்திருப்பேன்.

அவரிடம் நாங்கள் நிறையவே படித்திருக்கலாம். அவர் நிகழ்சிகளை செய்கின்ற விதம், அவரது உச்சாகமான அறிவிப்பு, விளம்பரங்கள் வாசிக்கும் விதம் என்று எல்லாவற்றிலுமே அவருக்கென்று ஒரு தனி இடம் இருக்கின்றது.
இன்று தமிழை வளர்க்கின்றோம் என்று தமிழ் மொழியை கொலை செய்பவர்கள் அவரின் அறிவிப்புக்களை கேட்கவேண்டும்.

அவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். நான் இன்று பல விடயங்களை இணையத்திலே அறிந்துகொள்ள முடிந்தது கே.எஸ்.ராஜா அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் அவரால் செய்யப்பட்ட உமாவின் வினோதவேளை போட்டி நிகழ்சிகள், விளம்பரங்கள், அவரால் செய்யப்பட்ட இசை நிகழ்சிகள் என்று எல்லாமே ஒலி வடிவத்திலே இருக்கின்றது. அவற்ற்றை நீங்களும் கேட்டு மகிழலாம். தரவிறக்கிக் கொள்ளலாம்.

இன்று அந்த ஒலிவடிவங்களைக் கேட்கின்றபோது நேரடியாகவே கே.எஸ்.ராஜாவே என் முன்னால் நின்று பேசுவது போன்று ஒரு உணர்வும் சந்தோசமாகவும் இருந்தது.

1. கே.எஸ். ராஜாவால் செய்யப்பட்ட நிகழ்சிகள்

2.கே.எஸ்.ராஜாவின் விளம்பரங்கள்.

3.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கே.ஜே. ஜேசுதாஸின் இசை நிகழ்சியினை கே.எஸ். ராஜா தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்கிய உச்சாகமான அறிவிப்பு நிறைந்த நிகழ்சியின் ஒலி வடிவம்

4.கே.எஸ்.ராஜா அவர்களுக்கு ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் வழங்கிய அஞ்சலி

இன்னும் பல்வேறுபட்ட விடயங்களையும் அறிந்துகொண்டேன் . கே.எஸ். ராஜாவைப் பற்றி நீங்களும் அறிந்து கொள்வதோடு அவரது குரல்களை மீண்டும் கேட்டு மகிழ இங்கே செல்லுங்கள்.
'அறிவிப்பாளர் அரசர்' கே.எஸ்.ராஜா
நன்றி: யாழ் சுதாகர்
Continue Reading...

திங்கள், 16 நவம்பர், 2009

காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள்...

Author: சந்ரு | Posted at: 12:40 AM | Filed Under: நகைச்சுவை, நண்பர்கள், பெண்கள் | 46 கருத்துரைகள்

யாரும் என்னை திட்ட நினைத்திடாதிங்க இது ஒரு நகைச்சுவைப் பதிவு.


இப்போது சில வலையுலக நண்பர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனை பற்றி இந்த பதிவுல தரலாம் என்று இருக்கிறன்.


என்ன நம்ம பிரபல பதிவர் ஒருவருக்கு விரைவில் திருமணம் என்று லோஷன் அண்ணா ஒரு பதிவு போட்டதுமே நம்ம இளம் சிங்கங்கள் உசாராகிட்டாங்க. நாங்களும் கல்யாணம் முடிக்கணும் இன்று ஒரு சிலர் அவங்களின்ர அம்மா அப்பாவ கஷ்டப்படுத்திக்கொண்டு இருப்பதாக பதிவர் கோபியால் நடாத்தப்படும் பம்மாத்து FM வானொலியில செய்தி போனது.


சரி என்று நிலமைய ஆராஞ்சி பார்த்தா பல பதிவர்கள் பல சிக்கல்களை எதிர் நோக்குவதை அறிய முடிந்தது. என்ன ஒரு காதலி காதலனோடு எப்பவும் அன்பா இருக்கணும் என்றால் , காதலிக்கு காதலன் மீது பிடிக்கும் விடயங்கள் என்ன என்று அறிய முடியாதிருப்பதாகவும், தான் விரைவிலே காதலில் விழக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் நண்பர் கோபி சொன்னார். சொன்னதோடு மட்டுமல்லாமல். காதலிகளுக்கு காதலன் மீது என்ன விடயங்கள் பிடிக்கும் என்று ஒரு ஆய்வு செய்து தரும்படி கேட்டுக்கொண்டார்.


அவரின் பரிதாபம் தாங்க முடியாமல் சுபாங்கன் தலைமையிலே எமது குழு ஆராச்சிகளை மேற்கொண்டது. ஆராச்சியின் முடிவுகளின்படி. காதலன் மீது காதலிகளுக்கு என்ன விடயங்கள் பிடிக்கும் என்ற விபரங்கள் இதோ.

1. காதலி எங்கே போகின்றார், வருகின்றார் என்ற விடயங்களை காதலியிடம் கேட்கக்கூடாது. நீங்கள் அதிகம் வெளியில் செல்லக்கூடாது.


2. நீங்கள் அதிக நேரம் எவருடனும் தொலை பேசியில் உரையாடக்கஊடாது. ஆனால் காதலி யாருடனும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கதைக்கலாம். நீங்கள் கண்டுகொள்ளக்கூடாது.

3. நீங்கள் உங்கள் பெண் நண்பிகளோடு காதலி இருக்கும்போது கதைப்பதனை தவிர்த்துக்கொள்ளுங்கள். அல்லது முற்றாக நண்பிகளை மறந்து விடுங்கள். உங்கள் காதலி அவரது நண்பர்களோடு பழகுவதற்கு இடமளியுங்கள்.


4. உங்கள் காதலி அழகில்லை என்றாலும் உன்னைப்போல் அழகி உலகிலில்லை என்று புகழ்ந்து பேசுங்கள்.


5. நீங்கள் காதலிக்க ஆரம்பித்ததும் ஆடம்பரங்களை தவிருங்கள். நீங்கள் அழகாக இருந்தால் ஏனைய பெண்கள் உங்களை அபகரித்து விடுவார்கள் என்ற எண்ணம் உங்கள் காதலிக்கு இருக்கும். நீங்கள் ஆடம்பரமாக இருந்தால் உங்களை நோட்டம்விட ஆரம்பித்து விடுவார். சந்தேகப்பட்டு விடக்கஊடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது.


6.உங்கள் காதலிக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ எல்லாவற்றையும். உங்களிடம் பணமில்லை என்றாலும் எங்காவது கடன் பட்டாவது வாங்கிக் கொடுங்கள். ஆனால் உங்களிடம் பணம் இல்லை என்பதனைக் காட்டிக்கொள்ளவேண்டாம்.


7. அதிகமாக இளம் பெண்கள் இருக்கின்ற இடங்களுக்கு போவதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அல்லது காதலிக்குத் தெரியாமல் போய் வாருங்கள்.


8. உங்கள் காதலி பலர் மத்தியிலே இருக்கும்போது உங்கள் காதலியைப் பற்றி அவர்களிடம் புகழ்ந்து பேசுங்கள். (காதலி இல்லாத நேரங்களில் திட்டித்தீர்க்கலாம்)


9.நீங்கள் இதற்கு மூன்னர் வேறு யாரையும் காதலித்திருந்தாலும் உங்கள் காதலியிடம் எனக்கு பெண்களைப் பார்க்கவே பிடிக்காது ஆனால் உன்னை எப்பவும் பார்த்துக் கொண்டே இருக்கணும்போல இருக்கு என்பது போன்ற வசனங்களை அடிக்கடி பேசுங்கள்.



10. இதுதான் முக்கியமான விதி முதலில் ஒரு பெண்ணை காதலிக்கவேண்டும்.

Continue Reading...

வெள்ளி, 13 நவம்பர், 2009

இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்

Author: சந்ரு | Posted at: 10:30 PM | Filed Under: அரட்டை, இணையம், ஏமாற்று, பெண்கள் | 51 கருத்துரைகள்

இன்று இணையத்திலே பலரையும் கட்டிப்போட்ட்டிருக்கின்ற ஒன்றுதான் இணைய அரட்டை. இந்த அரட்டைகள் மூலம் நல்ல பல சம்பவங்கள் இடம்பெறுவதோடு. சில சுத்துமாத்து வேலைகளும் இடம் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

இன்று பல சமுகத்தளங்கள் இருக்கின்றன. அதன் மூலம் பலர் தமது நண்பர்கள் வட்டத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். இதன் மூலம் காதல், திருமணம், வியாபாரம் என்று நல்ல பல விடயங்கள் நடை பெற்றாலும் இன்று பலர் இணைய அரட்டையே வாழ்க்கை என்று தினமும் அரட்டையிலேயே தமது காலத்தை வீணடித்துக்கொண்டு இருக்கின்றனர்.
இங்கே அரட்டை அடிப்போர் பலர் தமது உண்மையான விபரங்களை விடுத்து பொய்யான தகவல்களைத்தான் பகிர்ந்து கொள்கின்றனர் என்பது வேறு விடயம். சில ஆண்கள் பெண்களின் பெயரிலே அரட்டை அடித்து பல சுத்துமாத்து வேலைகள் செயவோருமுண்டு.

சிலர் இந்த அரட்டைகளைப் பயன் படுத்தி நிறையவே சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர். இதிலே சில பெண்கள் ஆண்களை காதலிப்பதாக நடித்து அவர்களிடமிருந்து பணங்களை பெற்று பின்னர் ஏமாற்றி வருகின்ற சம்பவங்களும் நடந்துகொண்டு வருகின்றன.

நான் இணையத்திலே உலாவ வந்த ஆரம்பத்திலே வலைப்பதிவுகள் பற்றி எல்லாம் தெரியாது. நண்பர்கள் மூலமாக சில சமுக வலையமைப்புகள் பற்றி அறிந்தேன். அவ்வப்போது அந்த இணையத்தளங்களிலே அரட்டையோடு என்பொழுது போகும்.

இத் தளங்களிலே அதிகமாக ஆண்கள் என்றால் பெண் நண்பர்களை வைத்துக் கொள்வார்கள். பெண்கள் ஆண் நண்பர்களை வைத்துக் கொள்வார்கள். ( ஈநேன்று தெரியவில்லை தெரிந்தவங்கள் சொல்லுங்கள்) ஆனால் நான் ஆண், பெண் என்று பாகுபாடின்றி எல்லா நண்பர்களையும் இணைத்துக்கொண்டேன். ஆனால் என்னிடம் இருக்கின்ற ஒரு கெட்ட குணம் எல்லோரையும் நம்பிவிடுவது.

இந்த அரட்டையிலே இருக்கின்ற பொய் நண்பர்களையும் இவர்களின் சுத்துமாத்துக்களையும் அறிந்தபோது அரட்டைப் பக்கமே போவதில்லை. அவ்வப்போது போய் என்ன என்ன நடக்கிறது என்று பார்த்துவருவதுமுண்டு.

இப்போ சொல்ல வந்த விடயத்துக்கு வருகிறேன். அரட்டை மூலம் எனக்கு பல நண்பர்கள் கிடைத்தனர். ( நான் நண்பனின் கதை என்று சொன்னால் நம்பவா போறிங்க அதுதான் எனக்கு என்று ஆரம்பிக்கிறேன்) இதிலே சில வெளிநாட்டு நண்பிகள் நெருக்கமானார்கள். அதிலே ஒரு நண்பி எப்போதும் இணைய இணைப்பிலே இருப்பார். எப்போதும் என்னோடு அரட்டை அடித்துக்கொண்டே இருப்பார்.

இவரது நண்பர் வட்டத்திலே பல ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கின்றனர். எவரும் பெண்கள் இல்லை. மிகவும் அழகானவர், என்னுடைய வலைப்பதிவை பார்த்து கருத்துக்களைச் சொல்வார். அடிக்கடி என்னைப் பற்றி புகழ ஆரம்பித்துவிட்டார். பின்னர் என்னைக் காதலிப்பதாக அடிக்கடி சொல்வார். நான் இப்போத்துதான் பச்சிளம் பாலகன் என்பதனால் முடியாது என்று சொல்லிவிட்டேன்.

இக்கால கட்டத்திலே இவரது நட்புவட்டத்திலே இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த மத்திய கிழக்கு நாடொன்றிலே இருக்கின்ற ஒரு நண்பரை நான் எனது நட்பு வட்டத்திலே இணைத்துக் கொண்டேன். அந்த நண்பரும் என்னோடு நல்ல நெருக்கமான நண்பரானார்.

அடிக்கடி என்னோடு பேசும் ஒரு நண்பராக மாறிவிட்டார். அப்போது அந்த நண்பர் என்னிடம் நான் குறிப்பிட்ட அந்த பெண் தன்னை இரண்டு வருடங்களாகக் காதலிப்பதாகவும் மாதாமாதம் அந்த பெண்ணுக்கு தான் பணம் அனுப்புவதாகவும் சொன்னார். நான் அவரிடம் எதுவும் சொல்லவில்லை

மறுபுறத்திலே அந்தப்பெண் என்னிடம் விருப்பம் கேட்டு என்னை விடுவதாக இல்லை. அடிக்கடி அவசரமாக பணம் தேவைப்படுகின்றது. என்றெல்லாம் பேசுவார் நான் காதில் கேட்காதது போன்று இருந்து விடுவேன்.

இவர் நிறையப்பேரை ஏமாற்றி வருகின்றார் என்பது மட்டு எனக்கு புரிந்துகொள்ள முடிந்தது. இவரை பற்றி ஆராய வேண்டு மென்று நினைத்தேன் இவரது நண்பர் வட்டத்திலே இருக்கின்ற பலரை என் நண்பர் வட்டத்திலே இணைத்தேன். அப்போது பலரை இந்தப் பெண் காதலிப்பதாக அறியக் கிடைத்தது. நான் எவரிடமும் இந்தப்பெண் பற்றிய விடயங்களை சொல்லவில்லை.

அவர் தனக்கொரு வலைப்பதிவு உருவாக்கித்தரும்படி அடிக்கடி என்னிடம் கேட்பதுண்டு. நான் உங்கள் மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் என்பவற்றை தாருங்கள் என்று கேட்டு வங்கிக் கொண்டேன். வலைப்பதிவு உருவாக்கியக் கொடுப்பது என் நோக்கமல்ல இவரது ஏமாற்று வேலைகளை அறிய வேண்டும் என்பதே என் எண்ணம்.

உடனடியாக நான் அவரது மின்னஞ்சலை பார்த்தபோது பலரிடமிருந்து நிறையவே பணம் பெற்றிருப்பது அறிய வந்தது. அவர் பலரை காதலிப்பதாக நடித்துக்கொண்டிருக்கின்றார். பலர் இவருக்கு மாதாந்தம் பணம் அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். என்பதும் தெரிய வந்தது.


உடனடியாக நான் மத்திய கிழக்கிலே இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த நண்பருடன் தொடர்புகொண்டு விபரங்களைச் சொன்னேன் அவர் நம்பவே இல்லை. அவரால் அவள் மீதான காதலிலிருந்து வெளியே வர முடியவில்லை.

அந்த நண்பரைப் பற்றி நினைக்கும்போது இன்றும் நான் கவலைப் படுவதுண்டு. அவரது குடும்பம் சாதாரண ஏழைக் குடும்பம். தந்தை இறந்துவிட்டார். தாய், இரு தங்கைகள் அவர்களைப் பார்க்கின்ற பொறுப்பு இவரிடமே. இவர் செய்தவை தனது வருமானத்தில் அரை வாசியை அந்தப் பெண்ணுக்கும் அரை வாசியை தாய்க்கு அனுப்புவதும். இன்று அந்தப் பெண்ணின் தொடர்பு இல்லாமல் போய்விட்டதாகவும் அந்தப் பெண்ணால் நிறையவே இழந்திருப்பதாகவும் கூறினார்.

இவர் மாத்திரமல்ல இன்று பல இளைஞர்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். பல சமுக இணையத்தளங்களிலே பல பெண்கள் காதல் எனும் போர்வையில் இளைஞர்களை சிக்கவைத்து பணம் பறித்துக்கொண்டிருக்கின்றனர். இணையத்திலே அரட்டை அடிப்பவர்கள் நிதானமாக சிந்தித்து செயற்படுவது நல்லதே.


சம்பவங்கள் உண்மை..... நீயா அவன் என்று கேட்கவேண்டாம். நான் அவனில்லை.

Continue Reading...

வியாழன், 12 நவம்பர், 2009

நாளைய தீர்ப்பு முதல் வேட்டைக்காரன் வரை... இளைய தளபதி விஜய்

Author: சந்ரு | Posted at: 6:22 AM | Filed Under: சினிமா, விஜய் | 49 கருத்துரைகள்


இதுவரை சினிமா பற்றி பதிவிடவில்லை. இனி சினிமாப் பதிவுகளும் அடிக்கடி போடுவோமே என்று ஒரு எண்ணம் வந்தது. சினிமா பற்றி எழுதினால் நிறைய ஹிட்ஸ் கிடைக்குமாம் என்று சொல்கிறார்களே என்று வேறொரு சினிமாத் தகவலை பதிவிட நினைத்தபோது ஏன் நம்ம இளைய தளபதியைப் பற்றியே எனது முதல் சினிமா இடுகையைப் போடுவோமே என்ற ஒரு எண்ணம் வந்தது.
22.06.1974 ல் பிறந்த விஜய் தனது சிறுவயதிலேயே தனது தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய பல படங்களிலே நடித்திருக்கின்றார். இவரது இயற் பெயர் ஜோசப் விஜய் சந்திரசேகர் என்பதாகும். ஏறத்தாள தனது பத்துப்படங்களுக்குப் பின்னர் தனது இடத்தினைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றார் என்று சொல்லலாம்


சிறு வயதிலே நடிக்கத் தொடங்கினாலும் நாளைய தீர்ப்பு எனும் திரைப்படத்திலே கதாநாயகனாக அறிமுகமாகினார். இன்று தனது 50 வது படத்தினை எட்டிப்பிடித்துக்கொண்டிருக்கின்றார். தனது தந்தை எஸ். ஏ. சந்திரசேகரின் இயக்கத்திலே பல திரைப்படங்களை நடித்திருக்கின்ற்றார்

இன்று அரசியலில் ஈடுபடுவது பற்றிப்பேசப்படுகின்றது அரசியலில் இறங்கினால் அவர் தற்போது வைத்திருக்கின்ற பல இரசிகர்களை இழப்பதோடு, அவர் சினிமாவிலே நிலைத்திருக்க முடியாத நிலையும் தோன்றலாம்.

அவர் 1992 நாளைய தீர்ப்பில் கதாநாயகனாக அறிமுகமானதில் இருந்து இன்றுவரை நடித்த திரைப்படங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

19992 - நாளைய தீர்ப்பு
துணை நடிகை - கீர்த்தனா
இயக்கம் -எஸ். ஏ. சந்திரசேகர்

1993 - செந்தூரப்பாண்டி
துணை நடிகை - யுவராணி
இயக்கம் -எஸ். ஏ. சந்திரசேகர்

1994 - ரசிகன்
துணை நடிகை - சங்கவி
இயக்கம் - எஸ். ஏ. சந்திரசேகர்

1994 - தேவா
துணை நடிகை - சுவாதி
இயக்கம் - எஸ். ஏ. சந்திரசேகர்

1995 - ராஜாவின் பார்வையிலே
துணை நடிகர், நடிகை - இந்திரஜா, அஜித்
இயக்கம் - ஜானகி சௌந்தர்

1995 - விஷ்ணு
துணை நடிகை - சங்கவி
இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்

1995 - சந்திரலேகா
துணை நடிகை, நடிகர் - வனிதா விஜய்குமார்
இயக்கம் - நம்பிராஜன்

1996 - கோயம்புத்தூர் மாப்ளே
துணை நடிகை - சங்கவி
இயக்கம் - சி. ரெங்கனாதன்

1996 - பூவே உனக்காக
துணை நடிகை -சங்கீதா, அஞ்சு அரவிந்த்
இயக்கம் - விக்ரமன்

1996 - வசந்த வாசல்
துணை நடிகை - சுவாதி
இயக்கம் - M. R. சசுதேவன்

1996 - மாண்புமிகு மாணவன்
துணை நடிகை - கீர்த்தனா
இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்

1996 - செல்வா
துணை நடிகை - சுவாதி
இயக்கம் - ஏ. வெங்கடேசன்

1997 - காலமெல்லாம் காத்திருப்பேன்
துணை நடிகை - டிம்ப்பல்
இயக்கம் - ஆர். சுந்தர்ராஜன்

1997 - லவ் டுடே
துணை நடிகை - சுவலட்சுமி
இயக்கம் -பாலசேகரன்

1997 - ஒன்ஸ் மோர்
துணை நடிகை- சிம்ரன்
இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்
இத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் முக்கிய வேடமேற்று நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது

1997 - நேருக்கு நேர்
துணை நடிகர், நடிகை - சூர்யா, சிம்ரன், கௌசல்யா
இயக்கம் - வசந்த்

1997- காதலுக்கு மரியாதை
துணை நடிகை - சாலினி
இயக்கம் - பாசில்

1998 - நினைத்தேன் வந்தாய்
துணை நடிகைகள் - தேவயானி, ரம்பா
இயக்கம் - கே. செல்வபாரதி

1998 - பிரியமுடன்
துணை நடிகை - கௌசல்யா
இயக்கம் - வின்சென்ட் செல்வா

1998 - நிலாவே வா
துணை நடிகை - சுவலட்சுமி
இயக்கம் - ஏ. வெங்கடேசன்

1999 - துள்ளாத மனமும் துள்ளும்
துணை நடிகை - சிம்ரன்
இயக்கம் - S. எழில்

1999 - என்றென்றும் காதல்
துணை நடிகை - ரம்பா
இயக்கம் - மனோஜ்

1999 - நெஞ்சினிலே
துணை நடிகை -இசா கோபிகர்
இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்

1999 - மின்சாரக் கண்ணா
துணை நடிகை - ரம்பா
இயக்கம் - கே. எஸ். ரவிக்குமார்

2000 - கண்ணுக்குள் நிலவு
துணை நடிகை - சாலினி
இயக்கம் - பாசில்

2000 - குஷி
துணை நடிகைகள் - ஜோதிகா, சில்பா செட்டி
இயக்கம் - எஸ். ஜே. சூர்யா

2000 - பிரியமனவளே
துணை நடிகை - சிம்ரன்
இயக்கம் - கே. செல்வபாரதி

2001 - பிரெண்ட்ஸ்
துணை நடிகை, நடிகர் - தேவயானி ,சூர்யா
இயக்கம் - சித்திக்

2001 - பத்ரி
துணை நடிகைகள் - பூமிகா, மோனல்
இயக்கம் - அருண் பிரசாத்

2001 - ஷாஜகான்
துணை நடிகைகள் - ரிச்சா பல்லோடு, மீனா
இயக்கம் - ரவி

2002 - தமிழன்
துணை நடிகை - பிரியங்கா சோப்ரா
இயக்கம் - ஏ. மஜீத்

2002 - யூத்
துணை நடிகைகள் - சந்தியா, சிம்ரன்
இயக்கம் - வின்சென்ட்

2002 - பகவதி
துணை நடிகை - ரீமா சென்
இயக்கம் - ஏ. வெங்கடேஷ்

2003 - வசீகரா
துணை நடிகை - சினேகா
இயக்கம் - கே. செல்வபாரதி

2003 - புதிய கீதை
துணை நடிகைகள் - மீரா ஜாஸ்மின், அமிஷா பட்டேல்
இயக்கம் - கே. பி. ஜெகன்

2003 - திருமலை
துணை நடிகை - ஜோதிகா
இயக்கம் - ரமணா

2004 - உதயா
துணை நடிகை - சிம்ரன்
இயக்கம் - அழகம் பெருமாள்

2004 - கில்லி
துணை நடிகை - திரிஷா
இயக்கம் - தரணி

2004 - மதுர
துணை நடிகைகள் - சோனியா அகர்வால், ரக்ஷிதா, தேஜாஸ்ரீ
இயக்கம் - ஆர். மாதேஷ்

2005 - திருப்பாச்சி
துணை நடிகைகள் - திரிஷா, மல்லிகா
இயக்கம் - பேரரசு

2005 - சச்சின்
துணை நடிகைகள் - ஜெனிலியா, பிபாசா பாசு, Linda Arsenio
இயக்கம் - ஜான் மகேந்திரன்

2005 - சுக்கிரன்
துணை நடிகைகள் - ரவி கிருஷ்ணா, நடாஷா, ரம்பா
இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்

2005 - சிவகாசி
துணை நடிகைகள் - அசின், நயன்தாரா
இயக்கம் - பேரரசு

2006 - ஆதி
துணை நடிகை - திரிஷா
இயக்கம் - ரமணா

2007 - போக்கிரி
துணை நடிகைகள் - அசின், முமைத் கான்
இயக்கம் - பிரபு தேவா

2007 -அழகிய தமிழ் மகன்
துணை நடிகைகள் - சிரேயா, நமிதா
இயக்கம் -பரதன்

2008 - குருவி
துணை நடிகைகள் - திரிஷா
இயக்கம் - தரணி

2009 - வில்லு
துணை நடிகை - நயன்தாரா
இயக்கம் - பிரபு தேவா

2009 - வேட்டைக்காரன்
Continue Reading...

புதன், 11 நவம்பர், 2009

கேள்விக்கென்ன பதில்

Author: சந்ரு | Posted at: 4:51 AM | Filed Under: தொடர்பதிவு, வலையுலகம் | 24 கருத்துரைகள்
நண்பர்கள் சுபாங்கன் மற்றும் ஸ்டார்ஜன் இருவரும் என்னை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கின்றனர். ஸ்டார்ஜன் அழைத்து ஒரு ஒரு மாதத்துக்கு மேலாகின்றது.


விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.

தமிழுக்கே முதலிடம்

அன்புக்குரியவர்கள்: அம்மா, தங்கைகள்,

ஆசைக்குரியவர்: எனக்காகக் காத்திருப்பவள் (எங்கேயோ இருப்பாள்தானே)

இலவசமாய் கிடைப்பது: தாயின் அன்பு

ஈதலில் சிறந்தது: வலது கை கொடுப்பதை இடது கை அறியாதது

உலகத்தில் பயப்படுவது: கடவுளுக்கு மட்டுமே.

ஊமை கண்ட கனவு: பேசுவதாய்

எப்போதும் உடனிருப்பது: துணிவும், தன்னம்பிக்கையும்

ஏன் இந்த பதிவு: நண்பர்களின் அன்பினால்

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: கல்வி, செல்வம், வீரம்

ஒரு ரகசியம்: இரகசியமாகவே இருக்கட்டுமே. (சொன்னால் அது இரகசியமாகாதே.)

ஓசையில் பிடித்தது: ஒரு நதிக்கரையில் இருக்கும்போது அங்கே வருகின்ற அந்த அருவியின், இயற்கையின் இனிய ஓசை

ஔவை மொழி ஒன்று: அறம் செய்ய விரும்பு.

(அ)ஃறிணையில் பிடித்தது: நிறையவே இருக்கிறது.


1. A – Avatar (Blogger) Name / Original Name : யோகராஜா சந்திரகுமார்
2. B – Best friend? : இல்லாமல் இருக்குமா?
3. C – Cake or Pie? : Cake ரொம்பப்பிடிக்கும்.

4. D – Drink of choice : அடிக்கடி ஏதாவது அருந்துவதுண்டு (அப்படியான பாணங்கள் அல்ல, நான் ரொம்ப நல்லவன்)

5. E – Essential item you use every day? : என்ன பணம்தான் (பணத்தால் எதையும் செய்யலாமல்லவா)

6. F – Favorite color ? : நீலம்

7. G – Gummy Bears Or Worms : இது வேண்டாம்

8. H – Hometown? : மட்டக்களப்பு

9. I – Indulgence? : சொல்லாதே யாரும் கேட்டால்.

10. J – January or February? : இரண்டுமே இல்லை நவம்பர் பிடிக்கும்

11. K – Kids & their name : இன்னும் திருமணமாகவில்லை

12. L – Life is incomplete without : சமுகத்துக்கு ஏதாவது நல்லதை செய்யவேண்டும்.

13. M – Marriage date? இன்னும் இல்லை. பிறந்தது 23. 03

14. N – Number of siblings : எல்லையற்றது...

15. O – Oranges or Apples : இரண்டுமே


16. P – Phobias/Fears? : சொல்லமாட்டேன்

17. Q – Quote for today? : வாழ்ந்து பார்க்க வேண்டும் மனிதனாக

18. R – Reason to smile? :உலகம் போகிற போக்கைப் பார்த்தால் சிரிப்பு வருது.

19. S – Season? : வசந்த காலம்..


20. T – Tag 4 People? : யோகா , தர்சாஜனி ,முனைவர் கல்பனா சேக்கிழார் , சுபானு

21. U – Unknown fact about me? : நீங்களே சொல்லுங்க

22. V – Vegetable you don't like? : பசிவந்தால் எதுவானாலும் சாப்பிடலாம்.

23. W – Worst habit? : அப்படியே விட்டுவிடுகிறேன்.


24. X – X-rays you've had? : இல்லை

25. Y – Your favorite food? : எதுவானாலும் நாவுக்கு சுவையாய் இருந்தால் ஒரு பிடி பிடிக்கலாம்.

26. Z – Zodiac sign? : இது எல்லாம் இரகசியம் வந்தி சோதிடருக்கு தெரிந்தால் ராசி மாற்றங்களை பதிவிட்டுவிடுவார்.

Continue Reading...

செவ்வாய், 10 நவம்பர், 2009

இப்படியும் பேசலாம்

Author: சந்ரு | Posted at: 5:48 AM | Filed Under: இலங்கை, கிராமம், தமிழ்மொழி, பேச்சுத்தமிழ் | 47 கருத்துரைகள்
ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு வகையான பேச்சு வழக்குச் சொற்கள் இருக்கின்றன. அந்தச் சொற்கள் அந்தந்தப் பிரதேசங்களுக்கு பெருமை சேர்ப்பதாகவும் இனிமையான சொற்களாகவும் இருப்பதோடு, ஒருவர் பேசுகின்ற விதத்தினை வைத்து அவர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.



இந்தப் பேச்சுவழக்குச் சொற்கள் இன்றைய நாகரீக மாற்றத்தின் காரணமாக மறைந்து வருகின்றன. இச் சொற்கள் எமது பிரதேசத்துக்குப் பெருமை சேர்ப்பதனால் நாம் பாதுகாக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம். இன்றைய சமுகம் வட்டார வழக்குச் சொற்களை புறக்கணித்து வருகின்றனர். இச் சொற்கள் கொச்சைத் தமிழ் சொற்கள் என்று சொல்வோருமுண்டு. ஆனால் நல்ல பல தமிழ் சொற்கள் வட்டார வழக்குச் சொற்களிலே இருக்கின்றன இச் சொற்களை அழிவின் விளிம்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்.


யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம் என்று ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஒவ்வொரு வகையான வட்டார வழக்குச் சொற்கள் இருக்கின்றன. இப்பதிவிலே மட்டக்களப்பிலே பயன்படுத்தப்படுகின்ற சில சொற்களைத் தருகின்றேன்.


பிறகு - பிறகு என்பது பின்னர் என்பதனைக் குறிக்கின்றது. பின்னர் எனும் சொல்லுக்கு பதிலாக யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலே வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.


மறுகா - மறுகா என்பது பின்னர் பிறகு எனும் சொற்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகின்றன.


ஒண்ணா - ஒண்ணா எனும் சொல்லானது பல இடங்களிலே வெவ்வேறு சந்தர்ப்பங்களிலே பயன்படுத்தப்படுகின்றன. ஒண்ணா எனும் சொல்லானது முடியாது, இயலாது என்ற சொற்களுக்குப் பதிலாக பயன்படுத்தப்படுகின்றன. ஒண்ணா எனும் சொல்லானது பயன்படுத்தப்படும் சந்தர்ப்பத்தைப் பொறுத்து பொருள் வேருபடுத்தமுடியும்.


கால அல்லது காலை - என் வீட்டில் ஒருவர் வந்து சந்ரு இருக்கிறாரா என்று ஒருவர் கேட்டால் காலைக்குள் போயிற்றார் என்று பதில் கிடைக்கும். வேறு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தலை சுற்றும். இங்கு காலை என்பது விவசாயம் செய்கின்ற தோட்டத்தைக் குறிப்பதாகும். மட்டக்களப்பு மாவட்டத்திலே விவசாயம் செய்கின்ற பிரதேசங்களிலே பரவலாக இச் சொல் பயன்படுத்தப்படுகின்றது.


அங்கிட்டு, இங்கிட்டு, அங்கால, இங்கால - அங்கிட்டு இங்கிட்டு, அங்கால, இங்கால எனும் சொற்கள் அந்தப்பக்கம் இந்தப் பக்கம் எனும் சொற்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகின்றன.


சுறுக்கா - விரைவாக எனும் சொல்லுக்குப் பதிலாக சுறுக்கா எனும் சொல் பயன்படுத்தப்படுகின்றது.


இன்னும் பல சொற்கள் இருக்கின்றன அவ்வப்போது அச் சொற்களும் உங்களை வந்து சேரும்
உங்கள் பிரதேசங்களிலே பயன்படுத்தப்படும் சொற்களையும் பின்னூட்டமிடுங்கள் எல்லோரும் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்


இதனையும் பாருங்கள்

பேச்சுத் தமிழுக்கு இனிமை சேர்க்கும் "கா"


சிந்திக்க




மனிதனை மனிதன் இல்லாதொழிக்க இந்த கண்டு பிடிப்புத் தேவையா?



படங்களுக்கு நன்றி சசி
Continue Reading...

திங்கள், 9 நவம்பர், 2009

இவர்கள்தான் அவர்கள்

Author: சந்ரு | Posted at: 12:00 AM | Filed Under: இலங்கை, தொடர்பதிவு, பதிவுலகம், பிறந்தநாள், வந்தி | 44 கருத்துரைகள்
பதிவுலக நண்பர் வந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கின்றார். அவர் இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துவோம்


நண்பர் அக்பர் (சிநேகிதன்) என்னை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கின்றார். சிநேகிதனுக்கு நன்றிகள்.

1 . அர‌சிய‌ல் த‌லைவ‌ர்

பிடித்தவர் : இன்னும் எவரும் இல்லை - சுய நலமின்றி மக்களுக்காக சேவை செய்தவர்கள் இல்லை

பிடிக்காதவர் : கருணாநிதி - தமிழுக்காக, தமிழருக்காக என்று சொல்லிலே தமிழனை ஏமாற்றி அரசியல் நடத்துவது


2 . எழுத்தாள‌ர்

பிடித்தவர் : சுஜாதா
பிடிக்காதவர் : தலைக்கனம் பிடித்தவ எழுத்தாளர்களை


3. க‌விஞ‌ர்

பிடித்தவர்: பா.விஜய் இவரது பாடல்கள் பல என்னைப் பாதித்ததுண்டு.
பிடிக்காதவர் : அதிகம் இரட்டை அர்த்தங்களோடும், வேற்றுமொழி கலந்தும் பாடல்களை எழுதுவோரை


4. பாடகர்

பிடித்தவர் : ஹரிஹரன்
பிடிக்காதவர் : சந்ரு


5. பாடகி

பிடித்தவர் : சித்ரா
பிடிக்காதவர் : தமிழை தமிலாய் படுபவர்களை


6. இய‌க்குன‌ர்

பிடித்தவர் : சீமான் - இயக்கிக்கொண்டிருப்பதனால் (எதனை என்று கேட்கவேண்டாம்)

பிடிக்காதவர் : தமிழ் படங்களை தமிழ் படமாக தராதவர்களை


7. நடிகர்

பிடித்தவர் : யாரு நம்ம விஜய்தான்

பிடிக்காதவர் : நடிக்கத் தெரியாதவர்கள்


8. நடிகை

பிடித்தவர் : த்ரிஷா

பிடிக்காதவர் : நயன்தாரா (பொறாமைதான்)

9. விளையாட்டு

பிடித்தது :உதைபந்தாட்டம்

பிடிக்காதது : எதுவுமில்லை


10. பேச்சாளர்



பிடித்தவர் :இருக்கிறார்கள் சொன்னால் பிரச்சனை

பிடிக்காதவர்: தங்களைப் பற்றி அதிகம் பேசுபவர்கள்


இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க .

நான் அழைப்பது.....


பிறந்தநாள் பரிசு பெறுவதற்காக

1. வந்தி


2. கீர்த்தி

3. க.கோபி கிருஷ்ணா.

4. சுபாங்கன்

5. மேனகாசத்தியா

Continue Reading...

ஞாயிறு, 8 நவம்பர், 2009

கொம்பு முளைத்த பதிவர்கள் யார்?

Author: சந்ரு | Posted at: 1:10 PM | Filed Under: அனானிகள், இலங்கை, பதிவர்கள் | 25 கருத்துரைகள்
இன்று நாளுக்கு நாள் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பல துறை சார்ந்தவர்கள் வலைப்பதிவுகளிலே பதிவிடுகின்றனர். நல்ல பல விடயங்கள் பதிவிடப்படுகின்றன. இருந்தபோதும் சிலர் எல்லோரும் வலைப்பதிவு வைத்திருக்கின்றார்களே நாங்களும் வைத்திருப்போமே என்று வலைப்பதிவை ஆரம்பிக்கின்றனர். பதிவிடுவதற்கு எதுவும் இல்லை அவர்களிடம் என்ன செய்வது இன்னொருவரின் பதிவினை திருடி பதிவிடுகின்றனர்.

என் வலைப்பதிவு வித்தியாசமான முறையிலே திருடப்படுகின்றது. நான் பதிவிட்டு சில நிமிடங்களிலே எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இன்னோர் வலைப்பதிவிலே பதிவிடப்படுகின்றது. இதிலே விசேசம் என்னவென்றால் என் பதிவு மட்டுமே பதிவிடப்படுகின்றன. என் இடுகைகள் அத்தனையும் நான் பதிவிட்டு சிறிது நேரத்திலே அந்த வலைப்பதிவிலே பதிவிடப்படுகின்றன.

இது ஒருபுறமிருக்க இன்னும் சிலரோ ஒரு சிலரை தாக்குவதற்காகவே வலைப்பதிவுகளை ஆரம்பித்திருக்கின்றனர். போலியான பெயரிலே சிலர் வலைப்பதிவுகளை வைத்துக்கொண்டு ஒரு பதிவரைப் பற்றி தேவையற்ற விதத்திலே, நாகரிகமற்ற முறையிலே பதிவிடுதல், நாகரிகமற்ற முறையிலே கெட்ட வார்த்தைகளால் பின்னூட்டமிடல் போன்ற செயல்களிலே ஈடுபடுவதட்காகவே சிலர் வலைப்பதிவுகளை ஆரம்பித்திருக்கின்றார்கள்.

இன்று இலங்கைப் பதிவர்களைப் பொறுத்தவரை இவர்களில் தொல்லையும் அதிகரித்திருக்கின்றது. இலங்கைப் பதிவர்களுக்கு அனானிகளின் தொல்லையோடு சேர்த்து இன்னுமோர் தலையிடி இந்த போலிப் பதிவர்கள்தான். இவர்கள் நாகரிகமற்ற முறையிலே பதிவர்களைத் தாக்கி பதிவிடுகின்றனர், பின்னூட்டமிடுகின்றனர்.

இந்த போலிப் பதிவர்களின் தொல்லை வேறு நாடுகளிலே எப்படி என்று தெரியவில்லை. இலங்கையைப் பொறுத்தவரை இலங்கைப் பதிவர்களைத் தாக்கவே ஒரு சில போலிப் பதிவர்கள் புறப்பட்டிருக்கின்றனர். தங்களது பதிவுகளிலே ஒரு பதிவரைப் பற்றி தவறான முறையிலே எழுதுதல் தேவையற்ற பட்டங்களை அந்தப் பதிவருக்குச் சூட்டுதல் என்று அவர்களின் அட்டகாசம் தொடர்கின்றன.

பதிவர்கள் என்றால் பெரிய கொம்போ என்று கேட்டு சில போலிப்பதிவர்கள் பதிவர்கள் பதிவிட்டிருந்தனர். இன்று நல்ல பதிவுகளைத் தருகின்ற பலர் இருக்கின்றனர், பல துறைசார்ந்த பதிவுகளைத் தருகின்றனர். இவர்கள் எவரும் வேலையின்றி வீட்டிலே இருப்பவர்களல்ல. இன்று எல்லோரது பார்வையும் பதிவர்கள் பக்கம் திரும்பியிருக்கின்ற இந்த காலகட்டத்தில் இப்படியான போலிப் பதிவர்களால் நல்ல பதிவுகளைத் தருகின்ற பல பதிவர்கள் தாக்கப்படுகின்றனர். இந்நிலை மாறவேண்டும் போலிப் பதிவர்கள் உணர்ந்து திருந்தவேண்டும்.
Continue Reading...

சனி, 7 நவம்பர், 2009

தமிழர்களாலேயே பறிபோகும் தமிழர் உரிமைகள்

Author: சந்ரு | Posted at: 6:09 PM | Filed Under: அரசியல், இலங்கை | 12 கருத்துரைகள்
இன்று தமிழர்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர், பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர், அவர்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன, பறிக்கப்படுகின்றன, இதற்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் இந்த நிலைக்கு தமிழர்கள் சென்றமைக்கு தமிழர்களும் முக்கிய காரணம் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

தமிழர்கள் பற்றி பல வரலாறுகளைப் பார்த்திருக்கின்றோம். அன்றுமுதல் இன்றுவரை நடப்பதென்ன? தமிழருக்கான தீர்வுகள் கிடைக்கப்போகிறது என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, ஏதோ ஒரு வகையில் ஒரு சிலரின் சூழ்சிகளால் எல்லாவற்றையும் இழக்கின்றோம்.

இதற்கு முக்கிய காரணம் என்ன. தமிழர்களிடையே ஒற்றுமையில்லை. நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் என்றோ எமது உரிமைகளைப் பெற்றிருக்க முடியும். எப்பொழுதாவது நம் தலைவர்கள் ஒன்றுபட்டிருக்கின்றனரா? சிலவேளைகளில் ஒன்று படுகின்றனர் தேர்தல்கள் வரும்பொழுது மட்டுமே. அதுவும் ஒருசிலர் ஒதுங்கிக் கொள்வர்.

தேர்தல்கள் வரும்பொழுது மட்டும் சிலர் ஒற்றுமை பற்றிப் பேசுவர். ஒன்றுபடுவர். தேர்தல் முடிந்ததும் எல்லாமே முடிந்துவிடும். சரியான கொள்கை இருக்கின்றதா? இன்றொரு கொள்கை நாளை ஒரு கொள்கை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கொள்கை. எல்லாமே தாம் அரசியலிலே நிலைத்திருப்பதட்கான கொள்கைகள்தான். இவர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு தமிழர்களுக்கென ஒரு கொள்கையை வகுத்தால் என்ன?

இன்று நேற்றல்ல அன்றுமுதல் பலர் தமிழர்களை பல கூறுகளாக பிரித்து அதிலே அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருக்கின்றனர். அதற்கு நம்மவர்களும் இடம்கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர்.

காலம், காலமாக நடந்து வருகின்ற விடயம்தான் நாம் எல்லோரும் எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கப்போகிறது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்போம். ஆனால் வேறு விதத்திலே சூழ்சிகள் நடைபெற்று நம் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தவிடுபொடியாகிவிடும்.

என்றாவது நம் தலைவர்கள் ஒன்றுபட்டிருக்கின்றனரா? ஒருவர் கொள்கைக்கு எதிராக இன்னொருவர் கொள்கை. எப்போது மற்றவரை வீழ்த்தலாம் என்று பல சதித்திட்டங்கள். நாம் எத்தனை கல்விமான்களை, புத்திஜீவிகளை இழந்திருக்கின்றோம். ஒரு தலைவருக்கு ஆதரவாக இருக்கின்ற ஒருவரை மற்றவர் கொலை செய்வது, மிரட்டுவது என்று சந்தர்ப்பவாத அரசியல் நடாத்திக்கொண்டிருக்கின்றோம்.

இன்று தமிழர்கள் பற்றியும், தமிழர் உரிமைகள் பற்றிபேசுவோரை ஒரு சிலர் புலி எனும் போர்வைக்குள் அடக்கி மாட்டிவிட்டு புதினம் பார்த்துக்கொண்டிருக்கிறது. மற்றும் சிலரோ தங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டுவோரை "போட்டுத்தள்ளுவோம்" என்று செயலில் இருக்கின்றனர். இதனால் எத்தனை புத்திஜீவிகளை, உறவுகளை இழந்திருக்கின்றோம்.

இன்று தவறுகளைச் சுட்டிக்காட்டிய எத்தனை ஊடகவியலாளர்களை இழந்திருக்கின்றோம். சிலர் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலே தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்றனர், தமிழர் உரிமைகள் பற்றிப் பேசுகின்றனர். பலர் ஏன் வம்பில் மாட்டிக்கொள்ள என்று ஒதுங்கிவிடுகின்றனர்.

இன்று வலைப்பதிவர்களுக்கும் அதே நிலைதான். தமிழர்கள் பற்றியோ தமிழர் உரிமைகள் பற்றியோ பதிவிடுகின்றபோது. பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. ஏன் இந்த நிலை தமிழர்கள் தமது பிரச்சனைகள் பற்றிப் பேசவே உரிமையில்லையா? இன்று வலைப்பதிவர்களுக்கு தமிழர்கள் பற்றியோ தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை பதிவிடத் தெரியாமல் இல்லை. அவர்கள் தானாகவே வம்பில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை.

இன்று இந்த அச்சுறுத்தல்களை செய்துகொண்டிருப்பவர்களில் பலர் தமிழர்களே ஏன் இந்த நிலை இதனால் பாதிக்கப்படப் போவது எமது சமுகமே. சந்தர்ப்பவாத அரசியலைவிடுங்கள் எமது சமூகத்துக்காக குரல் கொடுங்கள்.

இன்று பலரும் தேர்தலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பல தமிழ் அரசியல் தலைவர்களுட்பட புதியவர்கள் பலரு அரசியலிலே குதிப்பதற்கு இப்போது ஆயத்தங்களைச் செய்து வருகின்றனர். முன்னைய எமது தலைவர்கள் விட்ட தவறுகளை இனிவருகின்ற இளம் அரசியல் தலைவர்களாவது செய்யாது தமிழ் மக்களுக்காக ஒன்று படுவார்களா?
Continue Reading...

வெள்ளி, 6 நவம்பர், 2009

நீங்கள் எந்த உலகத்தில் இருந்தீர்கள் - கலைஞருக்கு ஒரு கடிதம்

Author: சந்ரு | Posted at: 6:23 PM | Filed Under: இலங்கை, கடிதம், கலைஞர் | 30 கருத்துரைகள்
வணக்கம் ஐயா....


நலம்தானே..... நலமாக இருப்பிர்கள் என்று நம்புகின்றேன்.....

உங்களை நான் அறிந்த நாள் முதல் எனக்குப் பிடித்த முதன்மையான மனிதர்களில் ஒருவராக நினைத்துவந்தேன். இருந்தும் இன்று இலங்கைத் தமிழர்கள் மீதான உங்களின் பாராமுகமும், நடவடிக்கைகளுக்கும் உங்கள் மீதிருக்கின்ற எனது நல்ல அபிப்பிராயங்களை தவிடுபொடியாக்கிவிட்டன.


உங்களின் தமிழ் பற்றே எனக்கு உங்களைப் பிடிப்பதற்குக் காரணம். ஆனால் இன்று பார்க்கின்றபோது உங்களிடம் உண்மையான தமிழ் பற்று இருக்கின்றதா? அல்லது உங்களின் இருப்புக்கான தமிழ் பற்றா என்றெல்லாம் எண்ணத் தோன்றுகின்றது.

உங்கள் தமிழ் பற்று உண்மையானதெனில் பாராட்டப்படவேண்டியதுதான். இருந்தாலும் சில விடயங்களிலே நீங்கள் பாராமுகம் காட்டியிருப்பது வேதனையளிக்கின்றது.

இலங்கையிலே இருக்கின்ற தமிழ் மக்கள் பல காலங்களாக பல அடக்கு முறைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகிவருகின்றனர். இது நீங்கள அறியாமல் இல்லை. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக அவ்வப்போது நீங்கள் குரல் கொடுத்தமைக்கு நன்றிகள். இதனை எமது பிரதேசத்திலே குரைத்துவரும் நாய்க்கு தேங்காய்க் கட்டி போடுவது என்று சொல்வார்கள். இலங்கைத் தமிழர்கள் உங்களை நம்பி கையேந்துகின்றபோது உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று ஏதாவது செய்து இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி விடுவிர்கள்.

இலங்கை தமிழ் மக்கள் படுகின்ற இன்னல்களை நீங்கள் அறியாதவர் இல்லை இதுவரை நீங்கள் இலங்கைத் தமிழர்கள் தொடர்பிலே காத்திரமான என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றீர்கள்.

எமது மக்களின் குரல்கள் நசுக்கப்பட்டு எமது மக்கள் மரணத்தின் பிடியிலே சிக்கித் தவித்தபோது எமது மக்கள் மட்டுமன்றி உலகத் தமிழர்களே உங்களை நம்பியிருந்தனர். உங்கள் மூலமாக, இந்திய மூலமாக தமிழர்களின் இறுதி மரண ஓலங்கள் நிறுத்தப்படுமென்று. அன்றைய நாட்களில் எம் மக்கள் பட்ட,சந்தித்த அவலங்களைப் பார்த்து உலக மக்களே கண்ணீர் வடித்தனர். நீங்கள் என்ன செய்தீர்கள்?

அன்றைய நாட்களில் உங்கள் காதுகள் செவிடானதா? கண்கள் பார்வை இழந்ததா? அல்லது வேறு உலகத்திலே இருந்தீர்களா? எம் தமிழினம் அழிந்துகொண்டிருக்கும்போது பாராமுகமாக இருந்துவிட்டு தமிழ் மொழியை வளர்ப்பதுபற்றிப் பேசுவது சிரிக்கத் தோன்றுகின்றது.


தமிழ் மொழியை வளர்ப்பதுபற்றிப் பேசுவது சிரிக்கத் தோன்றுகின்றது. தமிழை வளர்ப்பதற்கு முன்னர் தமிழைப் பேசுகின்ற மக்கள் அழிக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் அம்மக்களால் தமிழ்மொழி தானாகவே வளர்க்கப்படும்.

செம்மொழி மாநாடு பற்றிப் பேசுகின்றீர்கள் இன்றைய காலத்தில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று அறியாத தலைவராக இருக்கின்றிர்களா நீங்கள்? இன்றைய தேவை தமிழை வளர்ப்பதனைவிட தமிழ் மொழியை வளர்க்கின்ற தமிழர்கள் அழிக்கப்படுவதை நிறுத்துவதே. அத் தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பதே.

தமிழர்களே அழிந்து போகும்போது தமிழ் மொழியை வளர்த்து என்ன பயன்? முதலில் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் அத் தமிழர்களால் தமிழ்மொழி வளர்க்கப்படும்.

இலங்கைத் தமிழர்கள் பல இன்னல்களை அனுபவித்தபோது, அவர்களின் மரண ஓலங்கள் உலகெங்கும் சென்றடைந்தபோது உங்கள் காதுகளுக்கும் வந்திருக்கும்.

அப்போது மெளனம் சாதித்த நீங்கள் இன்று தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பியதன் நோக்கம்தான் என்ன? இன்று எத்தனை தமிழர்கள் மீதமிருக்கின்றார்கள் என்று பார்ப்பதற்காகவா? அல்லது இன்னும் எத்தனை தமிழர்கள் அவலங்களை எதிர்நோக்கக் காத்திருக்கின்றார்கள் என்பதனை அறியவா?

அவர்களின் வருகையின் நோக்கம் என்னால் புரியமுடியவில்லை. எம் மக்கள் அகதி முகாங்கலிலே படுகின்ற அவலங்களை பார்வையிடவா வந்தனர், நாடு சுற்றிப் பார்க்கவா வந்தனர், பொன்னாடை போர்த்தவா வந்தனர்? அல்லது எதற்காக வந்தனர்? என்ன செய்தனர்? அவர்கள் வந்து என்ன நடவடிக்கைகளை எடுத்தனர்?

தமிழ் மொழியை வளர்க்கவேண்டும் என்று சிந்திக்கும் நீங்கள் தமிழர்கள் அழிக்கப்படுவதனையும், தமிழர்களின் உரிமைக்காகவும் குரல்கொடுப்பதோடு இலங்கைத் தமிழர்கள் தொடர்வில் அதிக அக்கறை செலுத்துங்கள் என்றும் பணிவாக வேண்டிக் கொள்கின்றேன்.

அன்புடன்...
சந்ரு
Continue Reading...

வியாழன், 5 நவம்பர், 2009

எல்லோராலும் அவதானிக்கப்படும் இலங்கைப் பதிவர்கள்

Author: சந்ரு | Posted at: 10:26 AM | Filed Under: இருக்கிறம், இலங்கை, பதிவுலகம் | 15 கருத்துரைகள்
கடந்த இரண்டாம் திகதி இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வலைப்பதிவர்களுக்கும், அச்சு, இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்குமிடயிலான சந்திப்பினைப் பற்றி பலரும் பதிவிட்டுவிட்டார்கள் நான் இன்றுதான் மட்டக்களப்புக்கு வந்து சேர்ந்திருக்கின்றேன்.



இன்று விவாதத்துக்குள்ளாகி இருக்கின்ற இந்தச் சந்திப்பானது, பதிவர் சந்திப்பு அல்ல இருக்கிறம் சஞ்சிகை ஏற்பாடு செய்திருக்கின்ற பதிவர்களுக்கும் அச்சு இலத்திரனியல் ஊடகவியலாலருக்குமிடயிலா சந்திப்பு என்றுதான் வந்தி தெளிவாகப் பதிவிட்டு இருந்தார். நானும் அவ்வாறே பதிவிட்டிருக்கின்றேன். பலரும் புரிந்துகொண்ட விதம் வேறாகிவிட்டது.



வந்தி என்னோடு தொலைபேசியில் பேசும்போது இது ஒரு ஒன்றுகூடலாகத்தான் அமைய இருக்கின்றது என்ற விபரங்களையும் சொல்லி இருந்தார்.

இருந்தாலும் எனக்கு எதிர்பார்ப்புக்கள் அதிகமாகவே இருந்தன. காரணம் நான் எமது முதலாவது வலைப்பதிவர் சந்திப்புக்கு போகாததுதான். நான் இதுவரை சந்திக்காத எனது வலையுலக நண்பர்களை சந்திக்கப்போகின்றேனே என்ற சந்தோசம் ஒரு பக்கம்.

எப்போ அந்த 3 மணி வருதில்லையே என்ற எதிர்பார்ப்புவேறு. அடிக்கடி வந்தி, மற்றும் சதிஷ் இருவருக்கும் தொலைபேசியில் அழைப்பெடுத்து எத்தனை மணிக்கு வருகிறீர்கள் என்று கேட்டுக்கொள்வேன். நான் இரண்டு மணிக்கு முன்னரே போய்விட்டேன். நான்தான் முதலில் சென்ற வலைப்பதிவர் என்று நினைக்கின்றேன்.

ஒருசில பதிவர்கள் வர ஆரம்பித்துவிட்டனர். அப்போது ஒரு பதிவரிடம் நீங்கள்தானே யோகா என்று கேட்டேன். அவர் நான் இல்லை என்று பக்கத்திலே இருந்தவரைக் காட்டினார். யோகாவின் புகைப்படத்துக்கும் நேரில் பார்ப்பதுக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தமைதான் காரணம். யோகா மட்டுமல்ல என்னும் இருக்கிறார்கள் பலர்.

என்னை நான் அறிமுகப்படுத்தியபோது அவனா நீ, நீயா அவன் என்ற கேள்விக்குறிகள், ஆச்சரியக் குறிகள் என்று வர ஆரம்பித்துவிட்டன.

பதிவுகளைப் பார்த்து ஒவ்வொருவரும் எப்படி, எப்படி இருப்பார்கள் என்று நான் கற்பனை பண்ணி இருந்ததற்கும் நேரில் பார்த்தபோது அந்தப் பதிவுக்கு சொந்தக்காரர் இவரா என்று ஆச்சரியப்பட வைத்தது.


நான் எப்போதும் வந்தி என்றுதான் சொல்வேன். இப்போ வந்தி அண்ணா என்று சொல்ல நினைத்திருக்கின்றேன். எல்லோரும் வந்தியை (............) என்று சொல்வார்கள் நான் அப்படிச் சொல்லமாட்டேன். கனககோபி வயசில தம்பிதான் ஆனா உருவத்தைப் பார்த்தா தாத்தா என்று சொல்ல தோன்றுது. சுபாங்கன் எல்லோருக்கும் தம்பியாக இருக்கலாம்.

பல நண்பர்களை நேரில் சந்தித்து பேசிய சந்தோசம். மற்றும்படி எல்லோருமே நடந்தவிடயங்களை பதிவிட்டு விவாதித்தும் விட்டனர் நானும் அவற்றை பேசுவது பொருத்தமற்றது.

இந்த ஒனறுகூடலின்போதும், அதன் பின்னரும் இடம்பெறுகின்ற கருத்து மோதல்களின் பின்னர் எனக்குள் எழுந்த சந்தேகங்களை உங்களிடம் முன்வைக்கின்றேன்.

ஊடகவியலாலர்களையும், வலைப்பதிவர்களையும் இணைக்கும் ஒரு சந்திப்பாக சிலர் குறிப்பிடுகின்றனர். ஊடகவியலாளர்கள் வேறு வலைப்பதிவர்கள்வேறா? (பல வலைப்பதிவர்கள் ஊடகவியலாளர்கள் என்பது வேறு விடயம்) வலைப்பதிவர்கள் ஊடகவியலாளர்களுக்குள் அடக்கமுடியாதா?


நாம் அச்சு, இலத்திரனியல் ஊடகமென்று சொல்கின்றோம். இணையம், ஊடகம் இல்லையா? வலைப்பதிவு ஊடகமில்லையா? நாம் ஏன் வலைப்பதிவர்களை ஊடகங்களிலிருந்து தனியாக்க நினைக்கின்றோம். இங்கே ஊடகம் என்பதன் வரையறை என்ன?

இன்று இலங்கை வலைப்பதிவர்களை இலங்கையில் மட்டுமல்ல பலரும் கவனித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது இந்த ஒன்றுகூடல்மூலம் புலனாகின்றது எமது ஒவ்வொரு நகர்வுகளையும் பலர் கவனித்துக்கொண்டிருக்கின்றனர்.

விரைவிலே எமது இரண்டாவது பதிவர் சந்திப்பு இடம்பெறவேண்டும் என்பதே எனது அவா எப்போ, எங்கே அடுத்த சந்திப்பு என்பதே பலரது கேள்வியும். என்னைப் பொறுத்தவரை அதிகமான பதிவர்கள் கொழும்பிலே இருப்பதால் கொழும்பிலே ஏற்பாடு செய்வது நல்லது. நான் எங்கே ஏற்பாடு செய்தாலும் வருவதற்கும் தயார்.

சில நண்பர்கள் அடுத்த சந்திப்புக்கான நடவடிக்கையிலே இறங்கியிருப்பதாக அறியமுடிகின்றது அவர்களோடு கைகோர்ப்போம்.
Continue Reading...

சனி, 31 அக்டோபர், 2009

எங்கள் சந்திப்பு நேரடி ஒலி, ஒளிபரப்பு.... பார்க்க மறந்திடாதிங்க.

Author: சந்ரு | Posted at: 8:42 PM | Filed Under: இருக்கிறம், இலங்கை, ஊடகம், சந்திப்பு, வலைப்பதிவர் | 4 கருத்துரைகள்
இருக்கிறம் சஞ்சிகை ஏற்பாடு செய்திருக்கின்ற வலைப்பதிவர்களுக்கும், அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்குமிடையிலான சந்திப்பு நாளை பிற்பகல் மூன்று மணிக்கு இடம்பெற இருப்பது அனைவரும் அறிந்ததே.



இந்தச் சந்திப்பானது நேரடியாக ஒலி, ஒளிபரப்புச் செய்யப்பட இருக்கின்றன. இதன் மூலம் பார்வையாளர்களும் தமது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடியும்.


நேரடி ஒளிபரப்புக்கான சுட்டி இதோ


http://www.livestream.com/srilankatamilbloggers


இருக்கிறம் அலுவலகத்துக்கு வருவதற்கான வரைபடம்


Continue Reading...

எவரும் மறந்திடவேண்டாம்.

Author: சந்ரு | Posted at: 2:01 AM | Filed Under: இருக்கிறம், இலங்கை, ஊடகம், சந்திப்பு, வலைப்பதிவர் | 6 கருத்துரைகள்

என்ன நண்பர்களே இருக்கிறம் சஞ்சிகையின் அச்சு, இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்புக்கு வருவதற்கு தயாராகிவிட்டீர்களா? நாட்களை எண்ணிக்கொண்டிருந்த நான் இப்போது மணித்தியாலங்களை எண்ணிக்கொண்டு இருக்கின்றேன்.

முதலாவது பதிவர் சந்திப்புக்கு போகவில்லையே என்ற கவலை இன்னும் போகவில்லை அதுதான் இந்த எதிர்பார்ப்பு. இந்தச் சந்திப்பிலே வலைப்பதிவினூடாக கருத்துக்களை பரிமாறிக்கொண்ட நண்பர்களை நேரடியாக சந்திக்கப்போகின்றேனே என்ற சந்தோசத்தில் இருக்கின்றேன்.

இருக்கிறம் நிர்வாகத்தால் அனுப்பப்பட்ட மின்னஞ்சலிலே சில விடயங்களும், இருக்கிறம் சஞ்சிகை நிறுவனத்தைச் சென்றடைவதற்கான வரைபடமும் அனுப்பப்பட்டிருக்கின்றன. அந்த மின்னஞ்சலிலே குறிப்பிடப்பட்டிருக்கின்ற விடயங்களையும், இருக்கிறம் சஞ்சிகை நிறுவனத்தை சென்றடைவதற்கான வரைபடத்தினையும் தருகின்றேன்.

இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் அச்சுவலைச் சந்திப்புக்கு தமது வருகையை உறுதிப்படுத்திய வலைப்பதிவர்களுக்கு எமது நன்றிகள். வருகையை உறுதிப்படுத்திய அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் இருக்கிறம் அலுவலகத்துக்கு வருவதற்கான வரைவுப்படமொன்றை இங்கே தந்திருக் கின்றோம். இதில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்க பஸ்களில் வந்து சேரலாம்.


முக்கிய குறிப்பு: இரவு 10 மணியுடன் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு பொளத்தாலோக மாவத்தையின் வீதி மூடப்படுவதால் மாலை 3 மணியிலி ருந்து இரவு 8 மணிவரையுமே எமது நிகழ்ச்சிக்கான ஒழுங்கு வரையறுக்கப்பட்டுள்ளது என்பதையும். உங்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகளை நீங்களே மேற்கொள்ள வேண்டுமென்பதையும் அறியத் தருகின்றோம்.




மேலதிக விபரங்களுக்கு.

"IRUKIRAM"
Ego Publication House (Pvt) Ltd
03, Torington Avenue, Colombo -07
T.P - 0113150836
Fax : 011 2585190
Email : irukiram@gmail.com
Website: www.irukkiram.tk

சரி எல்லோரும் மறந்திடாம வந்திடுங்க... நல்ல பல விடயங்கள் இச் சந்திப்பிலே இடம்பெற இருப்பதாக அறியக்கூடியதாக இருக்கின்றது.
Continue Reading...

வியாழன், 29 அக்டோபர், 2009

இலங்கையின் தமிழ் ஊடகங்களும் வலைப்பதிவர்களும்.

Author: சந்ரு | Posted at: 11:31 PM | Filed Under: இலங்கை, ஊடகம், தமிழ்மொழி | 18 கருத்துரைகள்
இன்று இலங்கையைப் பொறுத்தவரை வலைப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் வலைப்பதிவர்கள் தொடர்பாக ஊடகங்களின் பங்களிப்பும் அதிகரித்துவருகின்றது. அத்தோடு பலரும் இன்று வலைப்பதிவர்கள் பக்கம் பார்வையினைச் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.


இலங்கையின் முதலாவது வலைப்பதிவர் சந்திப்பின் பின்னரே வலைப்பதிவர்கள் பக்கம் எல்லோரது பார்வையும் திரும்பியது என்று சொல்லலாம். முதலாவது வலைப்பதிவர் சந்திப்பின்பின் பல நல்ல விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன. சந்திப்பின் பின்னர் எதனைச் சாதித்தனர் என்று ஒரு சிலர் கேட்பது இலங்கைப் பதிவர்களின் வளர்ச்சியினைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்களின் பொறாமையின் உச்சகட்ட வெளிப்பாடுதான்.

இலங்கையின் வலைப்பதிவர்களைப் பொறுத்தவரை பல துறை சார்ந்தவர்கள் இருக்கின்றனர். அவர்கள நல்ல பல விடயங்களைப் பதிவிடுகின்றனர். அந்தப் பதிவுகள் இணைய வசதியினைக் கொண்ட சிலரையே சென்றடைகின்றன. அப்பதிவுகள் எல்லோரையும் சென்றடைய வேண்டுமானால் ஊடகங்களின் பங்கு அவசியமாகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை இலத்திரனியல், அச்சு ஊடகங்களைச் சேர்ந்த பலர் வலைப்பதிவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கிடையே ஒரு நட்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அச்சு ஊடகங்களைப் போறுத்தவரை இன்று பதிவர்கள் பக்கம் தமது பார்வையினை அதிகரித்து இருக்கின்றனர்.

இன்று இலங்கையிலே இருக்கின்ற சில சஞ்சிகைகளும், பத்திரிக்கைகளும் பதிவர்களின் பதிவுகளை, ஆக்கங்களை பிரசுரிப்பதோடு பதிவர்களையும் அவர்களது வலைப்பதிவுகளைப் பற்றியும் அறிமுகம் செய்து வருகின்றன. இதன் மூலம் பதிவர்களுக்கு இன்னும் பல விடயங்களை பதிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது. பதிவர்கள் உச்சாகப்படுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக இருக்கிறம் சஞ்சிகை அவர்களது ஒவ்வொரு சந்சிகயிலும் பதிவர்களின் பதிவுகளை, ஆக்கங்களை முன்னுரிமை கொடுத்து பிரசுரித்து வருவதோடு ஊடகந்கலுக்கும் பதிவர்களுக்குமிடையே மேலும் ஒரு நெருக்கமான உறவினை ஏற்படுத்தும் வண்ணம் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்கும் பதிவர்களுக்குமிடையே ஒரு சந்திப்பினை எதிர்வரும் திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருக்கின்றனர். இது வலைப்பதிவர்களுக்கு நல்ல பயனுள்ள விடயமாக அமைய இருக்கின்றது. (இதனைகூட சிலர் கிண்டல் செய்திருப்பது அவர்களின் அறியாமைதான்)

அத்தோடு தினக்குரல் பத்திரிகை பதிவர்களுக்கென ஞாயிறு தினக்குரலிலே ஒரு பக்கம் ஒதுக்கியிருப்பதோடு பதிவர்களது பதிவுகளையும், பதிவர்களைப் பற்றியும் அறிமுகம் செய்து வருகின்றது. மெட்ரோ நியூஸ் பத்திரிகைகூட பதிவர்களுக்கு முன்னுரிமை கொடுத்துவருகின்றன.


எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் சந்திப்புக்கு பின்னர் ஏனைய அச்சு ஊடகங்களும் பதிவர்களது பதிவுகளுக்கு, பதிவுகளுக்கு, ஆற்றல்களுக்கு இடங்கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

இலத்திரனியல் ஊடகங்களைப் பொறுத்தவரை இலங்கையிலே இருக்கின்ற அரச, தனியார் ஊடகங்களைச் சேர்ந்த பல ஒளி, ஒலிபரப்பாளர்கள் வலைப்பதிவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கிடையே ஒரு நட்புறவுகூட இருக்கின்றன. வலைப்பதிவர்கள் தொடர்பில் இவர்களும் தமது ஊடகங்கள் மூலமாக தங்களால் முடிந்தவற்றைச் செய்துகொண்டு இருக்கின்றனர்.

இன்று இலங்கையிலே இருக்கின்ற சில இலத்திரனியல் ஊடகங்கள் பல தவறுகளைச் செய்து கொண்டிருக்கின்றன. தமிழ் மொழியை வளர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு தமிழ் மொழியினை கொலை செய்துகொண்டு இருக்கின்றன. இதனை பலரும் உரிய நிறுவனங்களுக்கு எடுத்துக்கூறியும் அவர்கள் தாங்கள் செய்வதுதான் சரி எனும் அளவுக்கு அவர்களின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன.

அச்சு ஊடகங்களும்கூட அவ்வப்போது இதனைச் சுட்டிக்காட்டியபோதும் குறிப்பிட்ட ஊடகங்கள் தவறுகளை திருத்துவதாக இல்லை. சில வலைப்பதிவர்கள் இவற்றினைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தனர். நானும் பல இடுகைகள் மூலம் இவர்களது பிழைகளைச் சுட்டிக்காட்டினேன். காரணம் குறிப்பிட்ட ஊடகங்கனைச் சேர்ந்தவர்கள் வலைப்பதிவர்களாக இருக்கின்றனர் அவர்களாலாவது குறிப்பிட்ட ஊடகங்கள் விடுகின்ற பிழைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு திருத்தப்படலாம் என்ற எண்ணமே.

எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை அந்த ஊடகங்கள் தாங்கள் செய்வதே சரி என்று தமது வேலையினைச் செய்துகொண்டிருக்கின்றது. இலங்கையினைப் பொறுத்தவரை மிரட்டல்களுக்குக் குறைவில்லை. அவ்வப்போது வலைப்பதிவர்களுக்கு மிரட்டல்கள் வருவதுண்டு (எனக்கு பல தடவை) அண்மையிலே ஒரு அனானியால் எனக்கு ஒரு மிரட்டல் வந்திருந்தது ஒரு குறிப்பிட்ட இலத்திரனியல் ஊடகத்தைப் பற்றி எழுதவேண்டாம் எழுதினால் நடப்பது வேறு என்று மிரட்டப்பட்டிருக்கின்றது. இந்த மிரட்டல் எனக்கு மட்டும்தான் என்று நினைத்தேன் ஆனால் இலத்திரனியல் ஊடகங்களைப் பற்றி பதிவிட்ட அனைவருக்கும் இந்த மிரட்டல் கிடைத்திருப்பதாக பின்னர்தான் அறிந்தேன்.

பதிவர்களால் சுட்டிக்காட்டப்படுகின்ற குறிப்பிட்ட ஊடகங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்ட குற்றம் சுமத்தப்பட்ட ஊடகங்கள் தங்கள் மீது தவறு இல்லை என்றால் தங்கள் கருத்துக்களை சொல்லலாமல்லவா? அல்லது தங்கள்மீது தவறு என்றால் அதனைத் திருத்திக்கொள்ளலாமல்லவா?

தவறுகள் சுட்டிக்காட்டப்படும்போது தமது தவறுகளை ஏற்றுக்கொள்ளும் ஒளி, ஒலிபரப்பாளர்கள் ஒரு, சிலரே இருப்பதாக தென்படுகின்றது. ஒரு சிலரின் குற்றச் சாட்டு ஊடகங்கள் பற்றி எழுதும் பதிவர்கள் பக்கம் சார்ந்து எழுதுவதாகவும் ஒரு நிறுவனத்தை சாடுவதாகவும், ஒரு நிறுவனம் சார்ந்து இருப்பதாகவும். இந்த குற்றச்சாட்டு தவறானது. அத்தனை இலத்திரனியல் ஊடகங்களும் விடுகின்ற தவறுகளும் சுட்டிக்காட்டப்படுகின்றன.

இங்கே லோஷன் போன்றோர் தங்களது நிறுவனங்களது குறைகளைச் சுட்டிக்காட்டியபோது சரியான விமர்சனமாக இருந்தால் ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்கின்றனர். அல்லது தமது பக்க நியாயங்களைச் சொல்கின்றனர். இதனை பக்கம் சார்ந்து இருக்கின்றோம் என்று சொல்வது தவறானது.

ஏனைய ஊடகங்கள் சார்ந்தோர் தமது பக்க நியாயங்களைச் சொல்லலாம். தாம் விடுகின்ற தவறுகளை திருத்திக்கொள்ளாது அல்லது தமிழ் மொழியினை கொலை செய்கின்ற ஊடகங்கள் விடுகின்ற தவறுகளை வலைப்பதிவர்கள் அவ்வப்போது சுட்டிக்காட்டுவதில் தவறில்லை.

இலங்கையின் ஊடகங்களுக்கும் வலைப்பதிவர்களுக்குமிடையில் நல்ல உறவு இருக்கவேண்டும்.

எனது இப்பதிவினையும் பார்க்கலாம்.

தொலைக்காட்சிகள் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றனவா?
ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா..
தமிழ் மொழியை வளர்ப்பது யார்? தமிழ் மொழியை கொலை செய்வது யார்?..
தமிழ் மொழி தமிழ் மொழியாகவே இருக்கிறதா...
தமிழ்க் கொலை
வந்தவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்...


Continue Reading...

புதன், 28 அக்டோபர், 2009

கிராமியத் தெய்வ வழிபாடும் மூட நம்பிக்கைகளும்

Author: சந்ரு | Posted at: 10:28 PM | Filed Under: இலங்கை, கடவுள், கிராமம், மூட நம்பிக்கை | 48 கருத்துரைகள்
கடவுள் இருக்கின்றார் என்பதனை 100 % நம்புபவன் நான் ஆனாலும் சில மூட நம்பிக்கைகள் இந்துக்களிடையே இருக்கின்றது. அந்த மூட நம்பிக்கைகள் தகர்த்தெறியப்படவேண்டும். என்பதே என் அவா.


இந்த மூட நம்பிக்கைகள் இந்து சமயத்தின் மீதும், கடவுளின்மீதும் இருக்கின்ற நம்பிக்கையினை இல்லாமல் செய்பவையாக இருக்கின்றன. இந்த மூட நம்பிக்கைகள் பொதுவாக கிராமியத் தெய்வ வழிபாட்டிலே அதிகமாகக் காணப்படுகின்றன.


அண்மையிலே ஒரு ஆலயத்திலே இடம்பெற்ற சில சம்பவங்களை இடுகையிடுகின்றேன். இந்தச் சம்பவங்கள் பலரது விமர்சனத்துக்கும் உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ஆலயம் ஒரு காளி ஆலயம். பல வருடங்கள் பழமையான ஆலயம். பல சிறப்புக்களை உடைய ஆலயம். அண்மையிலே ஆலயமானது சிறப்பான முறையிலே ஆலயம் புனரமைக்கப்பட்டு. கும்பாபிசேகம் இடம்பெற்றதோடு கடந்த வருடம் முதல் தெய்வம் ஆடி கட்டுச் சொல்லுகின்ற முறையும் ஆரம்பிக்கப்பட்டது.


இந்த சடங்கினைச் செய்வதற்கு வேறு கிராமங்களிலே இருந்து பூசாரிமார் வரவளைக்கப்பட்டனர். அவர்கள் நடந்துகொண்ட விதம் மக்களிடம் இருக்கின்ற கடவுள் நம்பிக்கையினை இல்லாமல் செய்யும் ஒன்றாகவே இருந்தது.


இந்த ஆலயத்திலே பலர் தெய்வம் ஆடினார். பலரை அழைத்து கட்டுச் சொன்னனர். ஆனால் நல்ல விடயங்கள் எதுவும் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை. அங்கே சொல்லப்பட்ட விடயங்கள். பலரது எதிர்ப்பினையும் சம்பாதிக்க வேண்டியிருந்தது.


நான் பல ஆலயங்களிலே பார்த்திருக்கின்றேன் சில நிமிடங்களே தெய்வம் ஆடுவார்கள் ஆனால் இந்த ஆலயத்திலே பல மணித்தியாலங்களாக தெய்வம் ஆடப்பட்டது. அங்கே வந்த பக்தர்கள் பலரை அழைத்து தெய்வம் ஆடியவர்களால் சொல்லப்பட்ட விடயங்கள்.


1. எதிர்வரும் வருடம் ஆலயத்திலே சடங்கு நடப்பதற்கு முன்னர் குறிப்பிட்ட பணத்தினை ஆலயத்துக்கு செலுத்தவேண்டும், அல்லது குறிப்பிடுகின்ற வேலைகளை செய்து கொடுக்கவேண்டும். அப்போதுதான் நீங்கள் நினைக்கும் எந்தக் காரியமும் வெற்றியடையும் இல்லையேல் கடவுளின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்று சொல்லப்பட்டது.



இது கடவுளே இலஞ்சம் வாங்குவது போன்று இருக்கின்றது. கடவுளுக்கு நாம் ஒன்றைக் கொடுத்தால்தால் கடவுள் எமக்கு வரமருளுவார் என்றால் எதற்கு அந்தக் கடவுளை வணங்கவேண்டும்.


நாம் நேர்கடன் வைப்பது நாம் நினைப்பதனை கடவுள் நிறைவேற்றிவிட்டார். அவர் நிறைவேற்றியதட்காக நாம் செய்யும் கைமாறாகும். அதனை இங்கே வேறு முறையில் பயன்படுத்த நினைத்துவிட்டனர்.

2. ஒரு இளைஞர் அழைக்கப்பட்டார் அவரிடம் சொல்லப்பட்ட விடயம் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. எந்த ஒரு நண்பரோடும் கதைக்கக் கூடாது. என்று அம்மன் மீது சத்தியம் செய்து வாங்கப்பட்டது. அவர் நண்பர்களோடு கதைக்கின்றபோது அவரது படிப்பு தடைப்பட்டு விடும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அவர் படிப்பினை நிறுத்தி பல வருடங்களாகிவிட்டது.



இங்கு அவரை நண்பர்களோடு பழகவேண்டாம் என்று சத்தியம் வாங்குவது பொருத்தமானதா? அவர் இதனால் தனிமைப் படுத்தப்படும்போது அவரது எதிர்கால நிலை என்ன?


3. ஒரு மீன் வியாபாரியின் மனைவி அழைக்கப்பட்டு உங்கள் கணவன் மீன் விற்பனை செய்வதனால் ஆலயத்துக்கு வரக்கூடாது என்று சொல்லப்பட்டது .



இது சரியானதா? இன்று மீன் சாப்பிட்டுவிட்டே ஆலயத்துக்கு செல்வோர் இருக்கின்றனர். மீன் விற்பனை செய்வோர் ஆலயத்துக்கு வரக்கூடாது என்று எங்கே சொல்லப்பட்டிருக்கின்றது? ஆனால் இந்த பூசாரிமார் ஆலய நிகழ்வுகள் இல்லாத நாட்களில் மீன் சாப்பிடுவதாகவும், மது அருந்துவதாகவும் பின்னர் அறிந்துகொண்டேன்.

4. ஒருவர் மது அறிந்துவிட்டு ஆலயத்துக்கு வந்திருந்தார். மது அருந்திவிட்டு ஆலயத்துக்கு வரக்கூடாது என்று தெய்வம் ஆடிய ஒருவர் மோசமான முறையிலே அடித்து தாக்கினார்.



இது நாகரிகமான முறையா? அங்கே தெய்வத்துக்கு மதுக்கொடுத்தல் எனும் போர்வையில் சாராயம் கொடுக்கப்பட்டது. கடவுளே மது அருந்தும்போது ஒரு பக்தன் மது அருந்திவிட்டு வந்தது தவறு என்று அடிப்பது சரியா?


5. இக் கிராமத்திலே ஒரு பகுதியிலே தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கின்றனர். சுவாமி கிராமத்தின் வீதிகளிலே வலம் வருகின்றபோது ஆலய நிர்வாகத்தினரும் இன்னும் சிலரும் இந்த தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கும் பிரதேசத்துக்கு சுவாமியைக் கொண்டு செல்வதற்கு மறுத்துவிட்டனர்.



இங்கே கடவுள் சாதி பார்ககின்றாரா? அல்லது கிராமத்தினை இரண்டாகப் பார்க்கின்றனரா? சாதி என்பது கடவுளால் உருவாக்கப்பட்டதல்ல செய்யும் தொழிலை வைத்தே மனிதனால் உருவாக்கப்பட்டதே சாதி. இன்னும் நாம் சாதி பார்த்துக்கொண்டிருப்பது நல்ல விடயமல்ல.


6. இங்கே கட்டுச் சொல்வதற்கு தெய்வம் ஆடுபவர்களால் அழைக்கப்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் இளம் பெண்களாகவே இருந்தனர். தெய்வம் ஆடியவர்களும் இளம் வாலிபர்கள்தான்.



இங்கே பலரும் கேட்ட கேள்வி ஏன் ஆண்களை அழைக்க முடியாதா. தெய்வம் இளம் பெண்களுக்கு மட்டுமா அருள் கொடுக்கும்.


7. அங்கே மக்கள் இவர்களையே கடவுளாக மதிக்கப்பட்டனர். அங்கே ஆலயத்திலே இருந்த கடவுளை மக்கள் வணங்கியதனைவிட இவர்களை வணங்கியதே அதிகமாக இருந்தது. பலர் கால்களிலே விழுந்து வணங்கினர். இவர்களைத் தொட்டு கண்களிலே ஒற்றிக் கொண்டனர். ஏன் இந்த மூட நம்பிக்கை?

இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன...


நான் கேட்பது இந்த ஆலயம் ஆகம விதிப்படி அமைந்தது. முறைப்படி குருவாகப் படித்து தீட்சைபெற்று பல வருடங்களாக பூசை செய்து வருகின்ற ஒரு குருக்களுக்கு காட்சி கொடுக்காத கடவுள் இந்த மந்திரவாதிகளுக்கு காட்சி கொடுத்தாரா? அவர்களோடு மட்டும்தான் பேசுவாரா? ஏன் இந்தப் பூசாரிகள், மந்திரவாதிகள் மக்களையும் கடவுளையும் ஏமாற்றுகின்றனர்


ஏன் இவர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கின்றனர். இவர்களை ஏன் சிலர் முன்னிலைப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர்.


கடவுள் நம்பிக்கை இல்லாதவன் அல்ல கடவுளை 100% நம்புபவன் ஆனாலும் மூட நம்பிக்கையையும், மனிதக் கடவுளர்களையும் துரத்த நினைப்பவன்.



இன்னும் பல பல மூட நம்பிக்கைகள் இந்துக்களிடையே இருக்கின்றன அவ்வப்போது உங்களை வந்து சேரும்.

இதனையும் பாருங்கள்
மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துகின்றார்களா?
கடவுளின் பெயரால் கொடுமைகள்.
கடவுள் நேற்று முளைத்த காளானா...
Continue Reading...

திங்கள், 26 அக்டோபர், 2009

அந்தரங்கம் என்றால் என்ன?

Author: சந்ரு | Posted at: 11:38 PM | Filed Under: அந்தரங்கம், சதீஸ், லோஷன் | 18 கருத்துரைகள்
எப்பொழுதோ எழுத நினைத்தது நேரம் இடம் கொடுக்காததால் இன்று இடுகையாக வருகின்றது.


அண்மையிலே நண்பர் சதீஸ் லோஷனுடன் அந்தரங்கம். பகுதி- 1 எனும் தலைப்பிலே ஒரு பதிவிட்டிருந்தார். இப்பதிவிலே ஒலி, ஒளிபரப்பாளரும், வலைப்பதிவருமாகிய லோஷன் அவர்களை பேட்டி கண்டு இருந்தார் சதீஸ். இதிலே லோஷன் தன்னைப் பற்றிய பல விடயங்களைப் சொல்லி இருந்தார்.

இந்த இடுகைக்கு சில அனானிகள் திட்டித் தீர்த்து இருந்தனர். தலைப்பு தவறானது என்றும் வேறு அர்த்தத்தினைக் கொடுப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். அவர்கள் அந்தரங்கம் என்பதனை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர் என்பதனை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எல்லோரும் ஆவலோடு எதிர் பார்த்த லோஷன் பற்றிய தொடர் பதிவு இன்னும் வரவில்லை.

அந்தரங்கம் என்பது என்ன? இந்த இடத்திலே பயன் படுத்தப்பட்டது சரியா? தவறா? என்னைப் பொறுத்தவரை இதனை தீர்மானிக்க வேண்டியது சதீஸ், மற்றும் லோஷன் இருவருமே இதில் நாம் அந்தரங்கம் எனும் சொல் பயன்படுத்த முடியாது என்று சொல்ல முடியாது.

அந்தரங்கம் என்பது வெளியிடப்படாத, வெளிவராத தகவல்களாக அமையலாம். இது எந்தத் தகவலாகவும் அமையலாம். அந்தரங்கம் எனும்போது நாம் தவறான எண்ணத்தோடு நோக்குவது தவறானது. நல்ல பல விடயங்கள் இதுவரை வெளியிடப்படாத விடயங்கள் வெளியிடப்பட்டிருக்கலாமல்லவா? இங்கே அந்தரங்கம் என்பது லோஷனால் இதுவரை வெளியிடப்படாத விடயங்கள் இந்த பேட்டியிலே வெளியிடப்பட்டிருக்கலாம். அது எந்த விடயமாகவும் அமையலாம்.

அப்பதிவுக்கு பின்னூட்டமிட்டிருப்