Latest Posts

Thursday 7 September 2017

திட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.


விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன? பெற்றுக்கொண்டவைகள் என்ன?

விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ளோம் என்பது ஒருபுறமிருந்தாலும், விடுதலைப்பயணத்தின் பலனாக நாம் பல வடுக்களை சுமந்துகொண்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

பல்லாயிரக்கணக்கான உயிர், உடமை இழப்புகளுக்கு அப்பால் பல ஆயிரக்கணக்கான இளம் விதவைகளை விதைத்துச் சென்றுள்ளது இந்த யுத்தம். 

இன்னொருபுறம் தனது அவயவங்களை இழந்த விடுதலை வீரர்கள் பலர் செய்வதறியாது பல இன்னல்களை, அவலங்களை சந்தித்து வருகின்றனர்.

இவ்வாறு நாளாந்த உணவுக்குக்கூட வழியின்றி பல அவலங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் மக்களுக்கு உதவுவதற்கு தனி நபர்களும் சமூக சேவை அமைப்புக்களும் முன்வருவது அதிகரித்து காணப்படுகின்றன.

இங்கு அல்லல்படும் எமது மக்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கோடு வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் உறவுகள் பலர் முன்வந்து சமூக சேவை அமைப்புக்கள் ஊடாக தனிநபர் வாழ்வாதார திட்டங்களுக்கு உதவி வருகின்றனர். நாமும் பலருக்கு உதவியுள்ளோம்.
ஆனாலும் தனிநபர் வாழ்வாதார திட்டங்கள் பயனுள்ளதாக உள்ளதா எனக்கேட்டால் இல்லை என்றே சொல்லவேண்டும். (ஒருசில விதிவிலக்குகளும் உண்டு) சுயதொழிலுக்காக உதவி செய்கின்றபொழுது அவர்களால் அத்தொழிலை தொடர்ந்து கொண்டு நடாத்தாமல் இடைநடுவில் விட்டுச் செல்கின்ற நிலை அதிகம் காணப்படுகின்றது.
இதற்கான காரணங்கள் பல உண்டு.
1. சரியான வாழ்வாதார திட்டத்தை தேர்ந்தெடுக்காமை
2. குறித்த தொழில் தொடர்பில் அனுபவமின்மை
3. சந்தை வாய்ப்பை பயன்படுத்தத்தெரியாமை
4. சரியான திட்டமிடலின்மை
5. மேற்பார்வையின்மை
இவ்வாறு பல காரணங்களை குறிப்பிடலாம்.
இவற்றுக்கும் மேலாக இலவசங்களை எதிர்பார்த்து பழக்கப்பட்ட மக்களும் இல்லாமல் இல்லை. நாம் எதைக்கொடுத்தாலும் அதை வாங்கி அத்தோடு முடித்துக்கொள்வது.
இவ்வாறான தனிநபர் வாழ்வாதாரத்திட்டங்களில் ஈடுபடுபவர்கள் மாற்றுத் திட்டங்கள் பற்றி சிந்திப்பது நல்லது.
உதாரணமாக 100 பேருக்கு தனியான வாழ்வாதாரத்திட்டங்கள் வழங்கப்படுவதாக இருந்தால் அந்த 100 பேருக்கும் வழங்கப்படும் வாழ்வாதார நிதியை பயன்படுத்தி சிறு கைத்தொழில் ஒன்றை ஏற்படுத்தி 50 பேருக்கு வேலைவாய்ப்பை கொடுத்தாலே பயனுள்ளதாக இருக்கும். ஒரு குறித்த பிரதேசத்தில் இனங்காணப்பட்டவர்களை வைத்து ஒரு சமூக மட்ட அமைப்பினை ஏற்படுத்தி அவர்களுக்கூடாகவே இதனை செயற்படுத்தலாம்.
முடிந்தவரை தனிப்பட்ட வாழ்வாதாரத்திட்டங்களை குறைத்து மாற்றுத்திட்டங்களை பற்றி சிந்திப்பது நல்லது.
மாற்றுத்திட்டங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
சந்ரு
read more...

Monday 4 September 2017

மீண்டும் தூசுதட்டப்படுகிறது

நீண்ட நாட்களின் பின்னர் இந்திய நண்பர் ஒருவர் இன்று என்னுடன் பேசினார். முன்னர்போல் ஏன் எழுதுவதில்லை என்று கேட்டார் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய விடயங்கள் பலவற்றை ஞாபகமூட்டினார். அந்த விடயங்களை நானே மறந்துவிட்டேன். மீண்டும் எனது பழைய எழுத்துக்களை எதிர்பார்ப்பதாக கேட்டுக்கொண்டார்.
முன்னர் ஒரு நாளைக்கு 6,7 கட்டுரைகள் எழுதிய காலமும் உண்டு. இப்போது எழுதுவதற்கு சோம்பேறித்தனம் பிடித்துவிட்டது. அதிகமான இந்திய நட்புக்களை தேடித்தந்த காலம்.
பழைய கட்டுரைகளை புரட்டிப் பார்த்தேன் 500 க்கு மேற்பட்ட கட்டுரைகள் இதுவரை எழுதியுள்ளேன். அவற்றில் பல இந்திய சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. ஒரு சில இலங்கை சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன.
அந்த நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க
எனது எழுத்துக்கள் தொடரும். அரசியல் சார்ந்த எழுத்துக்களுக்கு முற்றுப்புள்ளி

read more...

Tuesday 11 October 2016

கேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.


இந்துக்களின் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதத்தின் மகிமையினை கூறும் இறுவட்டு ஒன்றினை எமது கலைஞர்களின் பங்களிப்போடு வெளியிட்டு இருந்தேன்.
பாடல்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தன. அப்பாடல்கள் நீங்களும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

கதைச் சுருக்கம்
திருக்கைலாச மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளையிலே. தேவர்களும், முனிவர்களும் அங்கு சென்று இருவரையும் சுற்றி வந்து வணங்கினர். அந்த வேளையிலே அங்கு வந்த பிரிங்கி முனிவர விகடக் கூத்தொன்றை ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்த பின்னர். உமாதேவியை விலக்கி விட்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கினர். உமாதேவியை அலட்சியம் செய்த முனிவரின் உடலிலிருந்த சக்தியை உமாதேவி எடுத்துக் கொண்டதனால் பிரிங்கி முனிவர் சபையிலே சோர்ந்து வீழ்ந்தார்.

சிவபெருமான் பிருங்கி முனிவரிடம் தடி ஒன்றைக் கொடுத்து அதனை ஊன்று கோலாகக் கொண்டு நடந்து செல்வதற்கு அனுக்கிரகம் செய்தார். இதனால் ஆத்திரமும் அவதானமும் அடைந்த உமாதேவி சிவபெருமானிடம் கோபித்துக் கொண்டு பூவுலகுக்கு வந்தார்.

ஒரு வில்வ மரத்தடியில் உமாதேவி வீற்றிருந்தார். உமாதேவியின் வருகையால் அந்த வனம் புதுப்பொலிவு பெற்றது. அந்த வனத்திலே வசித்த கௌதம முனிவர் திடிரென ஏற்பட்ட மாற்றத்துக்கான மாற்றத்துக்கான காரணத்தை அறிய முற்பட்டபோது. உமாதேவியைக் கண்டு நடந்த சங்கதிகளை அறிந்து கொண்டார்.

புரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமி தொடக்கி இப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரையுள்ள கேதரேசுரர் விரத மகிமை பற்றியும் அதனை அனுஷ்டிக்கும் முறைமை பற்றியும் விளக்கமாகக் கூற அம்மை விரதம் நோற்று அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகினார்.
பதிவிறக்கங்கள்...
read more...

Friday 17 June 2016

உடைக்கப்படும் பேனாக்களும் சிதைக்கப்படும் உணர்வுகளும்

நல்லாட்சியில் நல்லபல விடயங்கள் நடந்தேறினாலும் கருத்துச் சுதந்திரம் ஊடக சுதந்திரம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது . ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுதும் தாக்கப்படுதும் தொடர்ந்தவண்ணமுள்ளன. அரசியல்  வாதிகளும் அரச அதிகாரிகளும் ஊடக சுதந்திரம் பற்றிப் பேசினாலும் சிலருக்கு உதட்டளவில் மட்டுமே ஊடக சுதந்திரம் இருக்கின்றது.


ஊடகவியலாளர் பெரடி கமகே தாக்கப்பட்டதை கண்டித்தும் ஊடகவியலாளர்களை பாதுகாக்ககோரியும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கையெழுத்து போராட்டம் இன்று காந்தி பூங்க முன்னிலையில் இடம்பெற்றது. நீர்கொழும்பு மாநகரசபைக்குள் வைத்து ஊடகவியலாளர் பெரடி கமகே தாக்கப்பட்டார் அவருக்கு நீதி கிடைத்ததா? அவருக்கு சரியான நீதி கிடைக்கவேண்டும். அதற்காக அனைத்து ஊடகவியலாளர்களும் மனிதநேய அமைப்புக்களும் அரசியல்வாதிகளும் குரல்கொடுக்கவேண்டும்.

இந்த கையெழுத்துப் போராட்டத்தில் பல பொது மக்களும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அவர்கள் கலந்துகொண்ட அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்களின் நலனில் அக்கறையுடன் செயற்படவேண்டும் என்பதே எனது வேண்டுகோள். உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி என்ற நிலை இருக்கக்ககூடாது

அது ஒருபுறமிருக்க மட்டக்களப்பில் கருத்துச் சுதந்திரமும் ஊடக சுதந்திரமும் இருக்கின்றதா? ஊடக சுதந்திரம் பற்றி வாய் கிழிய கிழிய பேசும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஊடக சுதந்திரத்தை மதித்து செயற்படுகின்றனரா? 

மட்டக்களப்பில் அரசியல் வாதிகளும் அரச அதிகாரிகளும் விடுகின்ற தவறுகளையும் ஊழல்களையும் சுட்டிக்காட்டுகின்ற ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுகின்ற பொலிஸ் இல் கொடுத்து மிரட்டப்பட்ட சம்பங்கள் மட்டக்களப்பில் அண்மைக் காலத்தில் இடம்பெற்றிருக்கின்றன. 

அண்மையில் அரச அதிபர் தொடர்பாக செய்தி வெளியிட்டதற்காக ஊடகவியலாளர் எஸ்.நிலாந்தன் அவர்கள் அண்மையில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். 

அதே போன்று நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பற்றி முகப்புத்தகத்தில் எழுதியதற்காக என்னை பொலிஸ் இல் கொடுக்கப்பட்டு பொலிஸ் அழைத்து மிரட்டப்பட்டிருந்தேன். கருத்து சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களையும் பாதுகாக்கவேண்டிய அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களை குழிதோண்டிப் புதைக்க நினைப்பது வேதனை.

மற்றொரு புறத்தில் எமது மட்டக்களப்பு ஊடகவியலாளர்களிடையே ஒற்றுமை இன்மை நிலவுகின்றது. போட்டி பொறாமை காட்டிக்கொடுப்புக்கள் என்று தொடர்கின்றன. ஊடகத்தைப் பொறுத்தவரை போட்டி அதிகம்தான் ஆனாலும் எமது ஊடகவியலாளரிடையே அதையும் தாண்டிவிட்டது.

ஒரு ஊடகியலாளனுக்கு ஒன்று என்றால் அனைவரும் ஒருமித்து குரல்கொடுக்கவேண்டும் ஆனால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளனுக்கு எதிராக ஊடகவியலாளர்களே செயற்படும் நிலை காணப்படுகின்றது.

இந்த நிலை வேண்டும். மட்டு ஊடகவியலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். அனைவரும் ஒருமித்து குரல்கொடுக்கவேண்டும்.
மட்டக்களப்பில் சரியான ஒரு ஊடகக் கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும். 









read more...

Sunday 29 September 2013

ஒரு பெண் வேசியாகிறாள். 18 +

 காட்சிப் பொருளாக்கப்பட்ட பெண்கள்  

எனும் பதிவின் தொடராகவே இடம் பெறுகின்றது. ஒரு பெண் ஒரு பெண் தன் கணவனைத் தவிர வேறு ஓருத்தருடன் பாலியல் ரீதியில் தொடர்பு வைத்திருந்தால் அவளை வேசி என்று சமூகம் சொல்கின்றது. ஆனால் ஒரு ஆண் எத்தனை பேருடன் தொடர்பு வைத்திருந்தாலும் அவனைப்பற்றி எவரும் கணக்கெடுப்பதில்லை.

 ஒரு பெண் பலருடன் தொடர்பு வைத்துக் கொள்ள பல காரணங்கள் இருக்கின்றன. பலர் இதனை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர். பண்டைய தமிழ்ச்சமூகத்தில் "தாசித் தொழில்" என்று அழைக்கப்பட்டு வந்தது

 பாலியல் தொழில் செய்யும் பெண்ணைத் தமிழில் விலைமகள், வேசி, பொதுமகள், கணிகை, அல்லது விபச்சாரி என அழைக்கப்படுகின்றனர். 




பெண்களைப் பொறுத்தவரையில். தான் விபச்சாரத்துக்கோ அல்லது பல ஆண்களுடனோ பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பலர் இதனை ஒரு தொழிலாகச் செய்கின்றனர். இதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. வறுமை வேலையில்லாப் பிரச்சினை என்று
சொல்லிக் கொண்டே போகலாம்.

இதனை தொழிலாகச் செய்கின்ற விலை மாதர்களை நாடி பல பணம் படைத்தவர்கள் வருகின்றனர். இதன்,முலம் விலை மாதர்கள் அதிகமான வருமானத்தை ஈட்டுவதோடு அதிக வருமானம் பெறும் ஒர தொழிலாகவும் இத் தொழில் இருக்கின்றது.இத் தொழிலைச் செய்பவர்கள் விலை மாதுகள் என்றால் இவர்களை
நாடிச் செல்கின்ற ஆண்களை என்னவென்று சொல்வது.

இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் எல்லோராலும் சொல்லப்படுகின்ற விடயம் சமுக சீர்கேடு அதிகரித்திருக்கின்றன என்ற குற்றச்சாட்டாகும்;. இக் இக் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையானது. நான் பல இடங்களுக்கு சென்று வருகின்ற ஒருவன் பல விடயங்களையும் பல சமுக சீர் கேடுகளையும் கண்முன்னே கண்டிருக்கின்றேன். இந்த சமுக சீர் கேடுக்கான காரணம். உள்நாட்டு யுத்தமும் வேலையின்மையும். வறுமையுமாகும்.

இவை தொடர்பிலே சில விடயங்களையும் சம்பவங்களையும் குறிப்பிட விரும்புகின்றேன். என்னால் நேரடியாக அவதானிக்கப்பட்ட அறியப்பட்ட விடயங்கள் 

-->
இவை ஒரு 20 வயதுடைய பெண் தன்னுடைய கணவனை யுத்தத்தின் போது பறிகொடுத்து விட்டார். அந்த பெண்ணுக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றது. கணவனை இழந்ததும் தனிமைப் படுத்தப்பட்டுவிட்டாள்இ

இவளுக்கு தொழிலும் இல்லை. இன்னொருவனை திருமணம் செய்வதற்கும் சமுகம் இடம் கொடுக்கவில்லை. இவள் வாழ்ககையை எவ்வாறு கொண்டு நடாத்துவது. தன் பிள்ளையை நல்ல நிலைக்கு கொண்டு வருவது. அவள் இன்னொரு திருமணம் செய்ய எத்தணித்தபோது அவளது சமுகம் அதனை
ஏற்றுக் கொள்ளவில்லை.

அவள் வாழ வேண்டிய வயது அவள் திருமணம் செய்து இரண்டு வருடங்கள்தான் கணவனோடு வாழ்ந்திருப்பாள். தான் தனிமைப் படுத்தப் பட்டமை ஒருபுறம் பொருளாதார நிலை ஒருபுறமிருக்க. அவளுக்கு இப்போது வயது 20. காம உணர்ச்சிகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்றது. கணவனோடு இரண்டுவருடங்கள் மட்டுமே வாழ்ந்த இந்த இளம் பெண்ணுக்கு கணவணை இளந்த பின் காம உணர்ச்சி இல்லாமல் போய் விடுமா?

இந்தப் பெண்ணின் வாழ்க்கை கணவனை இழந்ததோடு முடிந்துவிட்டதா? ஏன் இந்த சமுகம் இவைகளைப்பற்றி சிந்திப்பதாக இல்லை. இவளை சமுகம் இன்னொரு திருமணம் செய்யவேண்டாம் என்று கட்டப்படுத்தியதன் எதிரொலி இன்று தனிமையில் இருக்கும் அவளது வீட்டுக்கு தினம் ஒரு ஆண் சென்று வருகின்றான்.
இவள் இவ்வாறு செல்லக் காரணம் அவளது சமுகமே.

இவள் மட்டுமல்ல யுத்தத்தின்போது கணவனை இளந்த பல இளம் பெண்களின் நிலை இதுதான். இவர்கள் விலை மாதுகள் அல்ல தன் இளம் வயதிலே கணவனை
இழந்துவிட்டார்கள். தன் காம உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் பல ஆண்களை நாடுகின்றனர். இது சமுக சீரளிவு என்று சொல்லமுடியுமா. கணவன் இறந்ததோடு அவளுக்கு ஆசாபாசங்கள் இருக்கக்கூடாதா?

கணவனை இழந்ததும் பெண்கள் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லும் சமுகம். ஒரு ஆணின் மனைவி இறந்துவிட்டால் உடனடியாக அவனுக்கு மறுமணம் செய்து வைக்கின்றனரே இது எந்த வகையில் நியாயமானது. ஆண்களுக்கு மட்டும்தான் ஆசாபாசங்கள் இருக்கின்றதா?

இது ஒரு புறமிருக்க சமுக சீர்கேடு தொடர்பிலே நான் அதிகம் அவதானித்த விடயம் கணவன் வெளிநாட்டிலே இருக்கின்ற பெண்கள் வேறு ஆணுடன்
அல்லது பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர். எல்லா பெண்களும் அவ்வாற இல்லை ஒரு சிலர் இருக்கின்றனர்.

இவர்கள் இவ்வாறு தொடர்பு வைத்திருக்க காரணம் என்ன. பணத்துக்காக இவர்கள் மற்றவர்களுடன் செக்ஸ் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.
தமது காம உணர்ச்சிகளை தர்த்துக் கொள்வதற்காகவே வேறு ஆண்களை நாடுகின்றனர். இங்கே யார் தவறு செய்கின்றனர். தமது மனைவியின்
உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய அவளது கணவன் விடுகின்ற தவறுதான் காரணம்.

நாங்கள் ஒரு பிரதேசத்திலே இரவு 9 மணிக்குப் பின்னர் வீதியில் நிற்பதற்கு பயப்படுவதுண்டு. நிற்பதே இல்லை நின்ற பலர் இராணுவத்தினரால் அடி வாங்கிய சம்பவங்களும்
இடம் பெற்றிருக்கின்றன.

 

அந்த வீதியிலே இருக்கின்ற ஒரு பெண்ணின் கணவன் வெளிநாட்டில் இருக்கின்றார். அவள் இப்போது பலருடன் தொடர்பு. இரவு 9 மணிக்குப்பின் இராணுவத்தினரின் ஆட்சி அவளது வீட்டில் நடக்கும். அவள் அவ் வீட்டில் தனிமையில் இருப்பவள். இவள் வேசியானதற்கு யார் காரணம்? இதே நிலை பல பெண்களுக்கு இது ஒருபுறமிருக்க ஒரு இளம் பெண் அவளுக்கு பொருளாதார சிக்கல் இல்லை குடுப்பநிலை அப்படி. திருமணம் செய்ய வேண்டிய வயது ஆனால் திருமணம் செய்யவில்லை தினம் ஒருத்தனுடன் உல்லாசமாக இருக்கின்றாள். இது இவள் செய்யும் தவறுதான். தன் கணவன் தன்னை திரப்திப் படுத்தவில்லை என்பதற்காக வேறு ஆண்களை நாடுகின்ற பெண்களும் இருக்கின்றனர்.

இவை எல்லாம் ஒரு புறமிருக்கட்டும் ஒரு பெண் இன்னொருவனுடன் தொடர்பு வைத்திரந்தால் அவளை வேசியாகக் காட்டும் சமுதாயம் ஒரு ஆண் எத்தனை பெண்களுடன்

தொடர்பு வைத்திருந்தாலும் அவனைப்பறிறி பேசாதது ஏன்? ஒரு ஆண் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால் அதனை அவனது வீரத்துக்கு ஒப்பிடுபவர்களும் அல்லாமல் இல்லை.


யாவும் உண்மை  சம்பவங்கள்...
தொடரும்...

பின்னிணைப்பு

read more...

Sunday 4 August 2013

காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள்...

இது ஒரு நகைச்சுவைப் பதிவு மட்டுமே
இப்போது சில வலையுலக நண்பர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனை பற்றி இந்த பதிவுல தரலாம் என்று இருக்கிறன்.


1. காதலி எங்கே போகின்றார், வருகின்றார் என்ற விடயங்களை காதலியிடம் கேட்கக்கூடாது. நீங்கள் அதிகம் வெளியில் செல்லக்கூடாது.

2. நீங்கள் அதிக நேரம் எவருடனும் தொலை பேசியில் உரையாடக்கஊடாது. ஆனால் காதலி யாருடனும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கதைக்கலாம். நீங்கள் கண்டுகொள்ளக்கூடாது.
3. நீங்கள் உங்கள் பெண் நண்பிகளோடு காதலி இருக்கும்போது கதைப்பதனை தவிர்த்துக்கொள்ளுங்கள். அல்லது முற்றாக நண்பிகளை மறந்து விடுங்கள். உங்கள் காதலி அவரது நண்பர்களோடு பழகுவதற்கு இடமளியுங்கள்.

4. உங்கள் காதலி அழகில்லை என்றாலும் உன்னைப்போல் அழகி உலகிலில்லை என்று புகழ்ந்து பேசுங்கள்.

5. நீங்கள் காதலிக்க ஆரம்பித்ததும் ஆடம்பரங்களை தவிருங்கள். நீங்கள் அழகாக இருந்தால் ஏனைய பெண்கள் உங்களை அபகரித்து விடுவார்கள் என்ற எண்ணம் உங்கள் காதலிக்கு இருக்கும். நீங்கள் ஆடம்பரமாக இருந்தால் உங்களை நோட்டம்விட ஆரம்பித்து விடுவார். சந்தேகப்பட்டு விடக்கஊடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது.

6.உங்கள் காதலிக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ எல்லாவற்றையும். உங்களிடம் பணமில்லை என்றாலும் எங்காவது கடன் பட்டாவது வாங்கிக் கொடுங்கள். ஆனால் உங்களிடம் பணம் இல்லை என்பதனைக் காட்டிக்கொள்ளவேண்டாம்.

7. அதிகமாக இளம் பெண்கள் இருக்கின்ற இடங்களுக்கு போவதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அல்லது காதலிக்குத் தெரியாமல் போய் வாருங்கள்.

8. உங்கள் காதலி பலர் மத்தியிலே இருக்கும்போது உங்கள் காதலியைப் பற்றி அவர்களிடம் புகழ்ந்து பேசுங்கள். (காதலி இல்லாத நேரங்களில் திட்டித்தீர்க்கலாம்)

9.நீங்கள் இதற்கு மூன்னர் வேறு யாரையும் காதலித்திருந்தாலும் உங்கள் காதலியிடம் எனக்கு பெண்களைப் பார்க்கவே பிடிக்காது ஆனால் உன்னை எப்பவும் பார்த்துக் கொண்டே இருக்கணும்போல இருக்கு என்பது போன்ற வசனங்களை அடிக்கடி பேசுங்கள்.


10. இதுதான் முக்கியமான விதி முதலில் ஒரு பெண்ணை காதலிக்கவேண்டும்.
read more...

சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்படும் விதவைகள்

முன்னைய இடுகை ஒன்று மீண்டும்..  

இலங்கையைப் பொறுத்தவரை யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே ஆகும்.  இந்த உள்நாட்டு யுத்தத்தின் மூலம் பல ஆயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாக்கப்பட்டிருக்கின்றனர்.

அவர்களின் நிலை படு மோசமான நிலையிலே இருக்கின்றது. இவர்களிலே அதிகமானவர்கள் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்கள் சிறு வயதிலேயே குடும்ப சுமையினை தாங்கிக் கொள்ளவேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டனர்.

இதில் அதிகமானவர்கள் பின்தங்கிய கிராமப் புரங்களை சேர்ந்தவர்கள் கல்வி அறிவேன்பதும் அவர்களிடம் சரியான முறையில் இல்லை. இதனால் தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றவேண்டிய? கொண்டு நடாத்த வேண்டிய பொறுப்பு இவர்களிடமே இருக்கின்றது.

இதற்காக இவர்கள் கூலி வேலை செய்தல், சுய தொழில்களை மேற்கொள்ளல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். சுய தொழிலைப் பொறுத்தவர். எல்லோராலும் செய்ய முடியாத காரியமாக இருக்கின்றது. போதிய பணவசதி உதவிகளை பெறுவதிலே சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர்.

கூலி வேலைக்கு செல்பவர்களைப் பொறுத்தவரை தனது பிள்ளைகளை கவனிக்கவேண்டும், வீட்டுவேலைகளை செய்யவேண்டும், கூலி  வேலைக்கு செல்லவேண்டும் என்று பாரிய சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர். அவர்களின் உழைப்புக்கேற்ற கூலி  வழங்கப்படுகின்றதா என்பது வேறு விடயம்.

சிலர் இவ்வாறு கஷ்டப்படுகின்றவர்களை வைத்து அதிகவேளைகளைக் கொடுக்கின்றனர். ஆனால் வேலைக்கேற்ற கூலி வழங்கப் படுவதில்லை. இதை விட்டாள் வேறு வழியில்லை என்று கஷ்டப்பட்டு உழைத்து  வருகின்றனர் பலர்.

இது ஒரு புறமிருக்க இந்த விதவைகளைப் பொறுத்தவரை பலர் இளம் வயதை சேர்ந்தவர்கள்.  வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை இழந்து நிக்கின்றனர். இவர்களின் வாழ்க்கையை வளமானதாக மாற்ற எமது சமுகத்தால் முடியும்.

ஆனால் அவர்களளின் எதிர் காலத்தைப் பற்றி சிந்திக்காத சமூகமாக எமது சமூகம் இருப்பதுதான் கவலைப்படவேண்டிய விடயம். விதவைகளை ஒதுக்கி வைக்கின்ற சமுகமாக எமது சமூகம் இருக்கின்றது.

விதவைகள் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளிலே கலந்து கொள்ள கூடாது, இந்த விதவைகளின் கண்களிலே விழிக்கக் கூடாது என்று நினைப்பவர்களும் இருக்கின்றனர்.

பெண்களை மறுமணம் செய்தால் கேலி செய்து தேவையற்ற கதைகளைக் கட்டி விடுகின்ற சமூகம். ஆண்கள் எத்தனை திருமணம் செய்தாலும் போசாதிருப்பது ஏன்?  சில ஆண்களைப் பொறுத்தவரை ஒரு மனைவி இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்வார். இதனை வீரமாக பேசிக்கொள்பவர்களும்  இல்லாமல் இல்லை.

பெண்களோ தன் குடும்பத்தின் கஸ்ர நிலையின் காரணமாகவும், தனது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகாகவும் மறுமணம் செய்தால் வேசி என்றும் இன்னும் பல கதைகளும் சொல்லி அந்த பெண்ணை ஒதுக்கி வைக்கின்றனர். விதவையான பெண் வாழக் கூடாதா?

எங்கள் ஒவ்வொருவருடைய மனங்களும் மாற வேண்டும் விதவைகளின், எமது சமூகத்தின்  எதிர்கால வளமான வாழ்வுக்காக ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
read more...

Sunday 2 June 2013

கடவுள்மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் (படங்கள் இணைப்பு)



மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள்மடத்தில் அமையப்பெற்று செல்லக் கதிர்காமம் என அழைக்கப்படுகின்ற முருகன் ஆலய சிலைகள் அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் அமைந்திருக்கின்ற இவ் ஆலயத்தில் உள்ள அனைத்து சிலைகளும் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக விபரங்கள்
























read more...

காம லீலைகள் அரங்கேறும் களம்

இணையத்தினைப் பொறுத்தவரை நல்ல பல விடயங்களுக்காக பயன்பட்டாலும் தீயபல விடயங்களும் இடம்பெறாமலும் இல்லை. இது ஒவ்வொருவரும் இணையத்தினைப் பயன் படுத்தும் நோக்கத்தினைப் பொறுத்தது.


 இன்று சமூகத்தளங்களின் பயன்பாடு அதிகரித்தவிட்ட இந்த நிலையில். நல்ல பல விடயங்கள் இந்த சமூகத்தளங்கள் மூலமாக நடந்தேறி இருக்கின்றன. பல நல்ல நட்புக்கள் கிடைத்திருக்கின்றன. பல திருமணங்கள் நடந்திருக்கின்றன. பல குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன.

இது ஒரு புறமிருக்க நல்ல விடயங்களுக்கு இந்த சமூகத்தளங்களை பயன்படுத்துவோர் ஒரு புறமிருக்க இன்னொரு புறத்தில் பல காம லீலைகள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன.

இந்த சமூக இணையத்தளங்களில் சிலர் தமது காம வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளும் ஒரு தளமாக பயன் படுத்திக் கொள்கின்றனர். இதில் சாதாரண ஒரு மனிதனில் இருந்து பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் மக்கள் மத்தியிலே நன்மதிப்பைப் பெற்றவர்களும் இல்லாமல் இல்லை.

இந்த சமூகத்தளங்களிலே அரட்டைகளில் ஈடுபடுபவர்கள் தமது காம வேட்கைகளை தீர்த்துக் கொள்ள குரல் வீடியோ அரட்டைகளை நாடுகின்றனர். 

ஒரு நண்பியை இணைத்துக் கொண்டால் அவரோடு சில நாட்கள் சாதாரணமாக உரையாடுவதும் பின்னர் அவர்களை தம் வசப்படத்தி வீடியோ மற்றும் குரல் அரட்டைகளை செய்து வருகின்றனர்.

அதனோடு பலர் நின்று விடுவதில்லை நேரடியாகக்கூட அவர்கள் சந்தித்து தமது காமத்தை தீர்த்துக் கொள்கின்றனர். 

காம உணர்ச்சி என்பது அனைவருக்கும் இருக்கின்றது அவற்றை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பலர் கட்டுப்படுத்த முடியாமல் வரம்பு மீறுபவர்களும் இருக்கின்றனர்.

பெண்களைப் பொறுத்தவரை கட்டுப்படுத்தும் தன்மை அதிகம் என்று நினைக்கின்றேன். இணைய அரட்டையிலே நண்பர்களாக இருக்கின்ற ஒரு ஆணும் பெண்ணும்  பேசுக்கொள்கின்றபோது அந்த அண் பெண்ணிடம் செக்ஸ் கதைகளை கதைக்க முற்படும்போது. அந்தப் பெண் நல்ல நடத்தை உள்ள ஒரு பெண்ணாக இருப்பினும் சந்தர்ப்ப சூழ்நிலையில் அவளும் அதற்கு சம்மதிக்கின்றாள்.

அரட்டையிலே அவள் இருக்கின்ற சூழ்நிலையைப் பொறுத்து அது அமைகின்றது. எப்படிப்பட்ட ஒருவராக இருந்தாலும் ஆசை என்பது வந்துதானாகும். நல்ல நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றபோது நண்பர் கேட்கின்றபோது மறுத்துக் கொள்ள முடியாமல் சம்மதித்தவர்களும் இல்லாமல் இல்லை.

நானும் பல சமூகத்தளங்களிலே பெண் பெயரிலே இருக்கின்றேன். ஏன் என்று கேட்கின்றிங்களா? புலனாய்வு வேலைகள் செய்வதென்றால் நமக்கு றொம்ப பிடிக்குமே அதுதான்.

பல முக்கியமானவர்களை நண்பர்களாக இணைத்திருக்கின்றேன். சமூகத்துக்கு நலலதைச் செய்கின்றேன். நல்லதை எழுதுகின்றேன். என்று சொல்பவர்கள் பலர் என்னுடன் (பெண் பெயருடைய என்னுடன்) நண்பர்களாக இருக்கின்றனர். 

அவர்களா இவர்கள் என்று பல தடவை நான் யோசித்ததுண்டு. அவர்கள் மீதிருந்த நல்லலெண்ணம் இல்லாமல் போய்விட்டது. உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி என்பது போன்று இருக்கின்றது அவர்களின் செயல்.

சில வேளைகளில் அவர்கள் பற்றிய விடயங்களை வெளியிடலாம் என்று நினைப்பதுண்டு. 

அரட்டைக்கென்று இருக்கின்ற சில இணையத்தளங்களிலே நான் அவ்வப்போது வலம் வருவதுண்டு அதுவும் பெண் பெயரிலே. அங்கே நடை பெறுகின்ற விடயங்களை அறியவேண்டும் என்பதற்காக. அந்த அரட்டை இணையத்தளங்களிலே செக்ஸ் அரட்டைக்கு மட்டுமே அதிகமானவர்கள் வருகின்றனர். 

அந்த இணையத்தளங்களில் பெண் பெயரில் சென்றதுமே அங்கே அரட்டையில் இருக்கின்ற எல்லோரும் எங்களுடன் அரட்டைக்கு வருவார்கள் எவரும் நல்ல விடயம் பேசமாட்டார்கள். அவர்கள் போடுகின்ற முதல் வசனம் செக்ஸ் பேச முடியுமா? என்னை பார்க்கப் போறிங்களா? உங்களைப் பார்க்கலாமா?

இந்த அரட்டை இணையத்தளங்களிலே பல ஆண்களும் பெண்களும் செக்ஸ் அரட்டை செய்வதற்கென்றே வருகின்றனர். 

எப்படியெல்லாம் சமூகம் சீரழிகின்றது. சீரளிக்கப்படகின்றது. சமூகத்தை திருத்தவதாக. சமூகத்துக்காக செயற்படுவதாக இருந்து திரைமறைவில் காம லீலைகளில் ஈடுபடுபவர்களே திருந்துங்கள். எமது சமூகம் சீரழிகிறது.

நீ நல்லவனா என்று கேட்க வேண்டாம்.

எம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்வோம் 

இதனையும் பார்க்கலாம்.

இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்

read more...

Saturday 1 June 2013

ஒரு பெண் வேசியாகிறாள். 18 +

 இப்பொழுது இலங்கையில் பாலியல் தொழிலை சட்டரீதியாகக வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றன. பாலியல் தொழில் தொடர்பாக முன்னர் சில இடுகைகள் இட்டிருந்தேன் ஒரு தொடராக அத் தொடரை மீண்டும் இன்றைய கால கட்டத்தில் தொடரலாம் என்று நிகனக்கின்றேன். தொடர்வதற்கிடையில் முன்னைய பதிவினை அப்படியே தருகின்றேன்

 

காட்சிப் பொருளாக்கப்பட்ட பெண்கள்  

எனும் பதிவின் தொடராகவே இடம் பெறுகின்றது. ஒரு பெண் ஒரு பெண் தன் கணவனைத் தவிர வேறு ஓருத்தருடன் பாலியல் ரீதியில் தொடர்பு வைத்திருந்தால் அவளை வேசி என்று சமூகம் சொல்கின்றது. ஆனால் ஒரு ஆண் எத்தனை பேருடன் தொடர்பு வைத்திருந்தாலும் அவனைப்பற்றி எவரும் கணக்கெடுப்பதில்லை.

 ஒரு பெண் பலருடன் தொடர்பு வைத்துக் கொள்ள பல காரணங்கள் இருக்கின்றன. பலர் இதனை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர். பண்டைய தமிழ்ச்சமூகத்தில் "தாசித் தொழில்" என்று அழைக்கப்பட்டு வந்தது

 பாலியல் தொழில் செய்யும் பெண்ணைத் தமிழில் விலைமகள், வேசி, பொதுமகள், கணிகை, அல்லது விபச்சாரி என அழைக்கப்படுகின்றனர். 




பெண்களைப் பொறுத்தவரையில். தான் விபச்சாரத்துக்கோ அல்லது பல ஆண்களுடனோ பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பலர் இதனை ஒரு தொழிலாகச் செய்கின்றனர். இதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. வறுமை வேலையில்லாப் பிரச்சினை என்று
சொல்லிக் கொண்டே போகலாம்.

இதனை தொழிலாகச் செய்கின்ற விலை மாதர்களை நாடி பல பணம் படைத்தவர்கள் வருகின்றனர். இதன்,முலம் விலை மாதர்கள் அதிகமான வருமானத்தை ஈட்டுவதோடு அதிக வருமானம் பெறும் ஒர தொழிலாகவும் இத் தொழில் இருக்கின்றது.இத் தொழிலைச் செய்பவர்கள் விலை மாதுகள் என்றால் இவர்களை
நாடிச் செல்கின்ற ஆண்களை என்னவென்று சொல்வது.

இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் எல்லோராலும் சொல்லப்படுகின்ற விடயம் சமுக சீர்கேடு அதிகரித்திருக்கின்றன என்ற குற்றச்சாட்டாகும்;. இக் இக் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையானது. நான் பல இடங்களுக்கு சென்று வருகின்ற ஒருவன் பல விடயங்களையும் பல சமுக சீர் கேடுகளையும் கண்முன்னே கண்டிருக்கின்றேன். இந்த சமுக சீர் கேடுக்கான காரணம். உள்நாட்டு யுத்தமும் வேலையின்மையும். வறுமையுமாகும்.

இவை தொடர்பிலே சில விடயங்களையும் சம்பவங்களையும் குறிப்பிட விரும்புகின்றேன். என்னால் நேரடியாக அவதானிக்கப்பட்ட அறியப்பட்ட விடயங்கள் 

-->
இவை ஒரு 20 வயதுடைய பெண் தன்னுடைய கணவனை யுத்தத்தின் போது பறிகொடுத்து விட்டார். அந்த பெண்ணுக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றது. கணவனை இழந்ததும் தனிமைப் படுத்தப்பட்டுவிட்டாள்இ

இவளுக்கு தொழிலும் இல்லை. இன்னொருவனை திருமணம் செய்வதற்கும் சமுகம் இடம் கொடுக்கவில்லை. இவள் வாழ்ககையை எவ்வாறு கொண்டு நடாத்துவது. தன் பிள்ளையை நல்ல நிலைக்கு கொண்டு வருவது. அவள் இன்னொரு திருமணம் செய்ய எத்தணித்தபோது அவளது சமுகம் அதனை
ஏற்றுக் கொள்ளவில்லை.

அவள் வாழ வேண்டிய வயது அவள் திருமணம் செய்து இரண்டு வருடங்கள்தான் கணவனோடு வாழ்ந்திருப்பாள். தான் தனிமைப் படுத்தப் பட்டமை ஒருபுறம் பொருளாதார நிலை ஒருபுறமிருக்க. அவளுக்கு இப்போது வயது 20. காம உணர்ச்சிகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்றது. கணவனோடு இரண்டுவருடங்கள் மட்டுமே வாழ்ந்த இந்த இளம் பெண்ணுக்கு கணவணை இளந்த பின் காம உணர்ச்சி இல்லாமல் போய் விடுமா?

இந்தப் பெண்ணின் வாழ்க்கை கணவனை இழந்ததோடு முடிந்துவிட்டதா? ஏன் இந்த சமுகம் இவைகளைப்பற்றி சிந்திப்பதாக இல்லை. இவளை சமுகம் இன்னொரு திருமணம் செய்யவேண்டாம் என்று கட்டப்படுத்தியதன் எதிரொலி இன்று தனிமையில் இருக்கும் அவளது வீட்டுக்கு தினம் ஒரு ஆண் சென்று வருகின்றான்.
இவள் இவ்வாறு செல்லக் காரணம் அவளது சமுகமே.

இவள் மட்டுமல்ல யுத்தத்தின்போது கணவனை இளந்த பல இளம் பெண்களின் நிலை இதுதான். இவர்கள் விலை மாதுகள் அல்ல தன் இளம் வயதிலே கணவனை
இழந்துவிட்டார்கள். தன் காம உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் பல ஆண்களை நாடுகின்றனர். இது சமுக சீரளிவு என்று சொல்லமுடியுமா. கணவன் இறந்ததோடு அவளுக்கு ஆசாபாசங்கள் இருக்கக்கூடாதா?

கணவனை இழந்ததும் பெண்கள் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லும் சமுகம். ஒரு ஆணின் மனைவி இறந்துவிட்டால் உடனடியாக அவனுக்கு மறுமணம் செய்து வைக்கின்றனரே இது எந்த வகையில் நியாயமானது. ஆண்களுக்கு மட்டும்தான் ஆசாபாசங்கள் இருக்கின்றதா?

இது ஒரு புறமிருக்க சமுக சீர்கேடு தொடர்பிலே நான் அதிகம் அவதானித்த விடயம் கணவன் வெளிநாட்டிலே இருக்கின்ற பெண்கள் வேறு ஆணுடன்
அல்லது பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர். எல்லா பெண்களும் அவ்வாற இல்லை ஒரு சிலர் இருக்கின்றனர்.

இவர்கள் இவ்வாறு தொடர்பு வைத்திருக்க காரணம் என்ன. பணத்துக்காக இவர்கள் மற்றவர்களுடன் செக்ஸ் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.
தமது காம உணர்ச்சிகளை தர்த்துக் கொள்வதற்காகவே வேறு ஆண்களை நாடுகின்றனர். இங்கே யார் தவறு செய்கின்றனர். தமது மனைவியின்
உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய அவளது கணவன் விடுகின்ற தவறுதான் காரணம்.

நாங்கள் ஒரு பிரதேசத்திலே இரவு 9 மணிக்குப் பின்னர் வீதியில் நிற்பதற்கு பயப்படுவதுண்டு. நிற்பதே இல்லை நின்ற பலர் இராணுவத்தினரால் அடி வாங்கிய சம்பவங்களும்
இடம் பெற்றிருக்கின்றன.

 

அந்த வீதியிலே இருக்கின்ற ஒரு பெண்ணின் கணவன் வெளிநாட்டில் இருக்கின்றார். அவள் இப்போது பலருடன் தொடர்பு. இரவு 9 மணிக்குப்பின் இராணுவத்தினரின் ஆட்சி அவளது வீட்டில் நடக்கும். அவள் அவ் வீட்டில் தனிமையில் இருப்பவள். இவள் வேசியானதற்கு யார் காரணம்? இதே நிலை பல பெண்களுக்கு இது ஒருபுறமிருக்க ஒரு இளம் பெண் அவளுக்கு பொருளாதார சிக்கல் இல்லை குடுப்பநிலை அப்படி. திருமணம் செய்ய வேண்டிய வயது ஆனால் திருமணம் செய்யவில்லை தினம் ஒருத்தனுடன் உல்லாசமாக இருக்கின்றாள். இது இவள் செய்யும் தவறுதான். தன் கணவன் தன்னை திரப்திப் படுத்தவில்லை என்பதற்காக வேறு ஆண்களை நாடுகின்ற பெண்களும் இருக்கின்றனர்.

இவை எல்லாம் ஒரு புறமிருக்கட்டும் ஒரு பெண் இன்னொருவனுடன் தொடர்பு வைத்திரந்தால் அவளை வேசியாகக் காட்டும் சமுதாயம் ஒரு ஆண் எத்தனை பெண்களுடன்

தொடர்பு வைத்திருந்தாலும் அவனைப்பறிறி பேசாதது ஏன்? ஒரு ஆண் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால் அதனை அவனது வீரத்துக்கு ஒப்பிடுபவர்களும் அல்லாமல் இல்லை.


யாவும் உண்மை  சம்பவங்கள்...
தொடரும்...

பின்னிணைப்பு

read more...

Saturday 19 January 2013

உப்புச் சிறட்டைக்குள் மூக்கைப் புதைத்து சாக வேண்டிய தமிழ் அறிவிப்பாளர்கள்

வணக்கம் அன்பு நண்பர்களே. நலமா மிக நீண்ட இடைவேளைக்குப் பின்னர் புதிய ஆண்டில் பதிவுப்பக்கம் வந்திருக்கின்றேன். முகப்புத்தகத்தில் ஒரு நண்பரால் பகிரப்பட்ட ஒரு வீடியோ இந்தப் பதிவினை என்னை எழுதத்தூண்டியது.

நான் வாழ்ந்த பிரதேசம் மின்சாரமே இல்லாத ஒரு பகுதி. எப்பொழுதும் என்னுடன் பற்றறியில் இயங்கும் ஒரு வானொலி இருக்கும் அது 24 மணித்தியாலமும் வேலை செய்துகொண்டே இருக்கும். நான் படிக்கும்போதுஅதுவும் என் அருகிலிருந்து படித்துக்கொண்டே இருக்கும். 

நான் சிறு வயது முதல் சிற்றலைவரிசையில் (SW) பல தமிழ் வானொலி நிலையங்களைச் செவிமடுப்பதுண்டு. சிங்கப்பூர் வானொலிக்கழகம் ஒலி 96.8 ஒவ்வொரு இரவிலும் கேட்பதுண்டு (இப்போதும் அடிக்கடி இணையத்தில் கேட்பதுண்டு) மிகவும் சிறப்பான நிகழ்ச்சிகள் நான் நினைக்கின்றேன் சில நிகழ்சிகளுக்கு வித்திட்டவர்கள் இவர்கள்தான்.

1997 க்கு முன்னர் சிங்கப்பூர் வானொலிக்கழகம் ஒலி 96.8 ல் ஒலிபரப்பான நிகழ்சிகளை ஒத்த நிகழ்ச்சிகளை பின்நாளில் பல வானொலிகளில் அவதானித்தேன். நானும் அறிவிப்பாளராக வரவேண்டும் என்ற ஆசைய தூண்யது சிங்கப்பூர் வானொலியே.

அதே போன்று அடிக்கடி மலேசிய வானொலியையும் கேட்டிதுண்டு. சிறப்பான நிகழ்சிகள். 

அதே போன்று குறித்த ஒரு நேரத்தில் சீன வானொலியை திருப்பி விடுவேன். சீனர்களால் செய்யப்படுகின்ற தமிழ் சேவையினை பார்த்து வியந்திருக்கின்றேன். உண்மையிலேயே அவர்கள் தமிழ் பேசுகின்ற விதம் கேட்பதற்கு அருமையாக இருக்கும். அன்று கலையரசி என்கின்ற அறிவிப்பாளர்மீது நான் கோப்பட்டிருக்கின்றேன். 

ஏன் கஸ்ரப்பட்டு தமிழ் பேசுகிறாள் ஒரு தமிழச்சியாக இருந்து என்று. இப்பொழுதுதான் அறிகிறேன் அவர் ஒரு சீனப்பெண் என்பதனை. 

நாம் வெட்கித்தலை குனியவேண்டி இருக்கின்றது. எவ்வளவு அழகாக தமிழ் பேசுகின்றார் இந்தச் சீனப்பெண். தமிழ் மொழியை வளர்க்க எவ்வாறு கஸ்ரப்படுகின்றார். ஆனால் கேடுகெட்ட எமது தமிழ் அறிவிப்பாளர்கள் தமிழை கொலை செய்கின்றார்கள். 

கீழே இருக்கின்ற வீடியோவைப் பார்த்தாவது திருந்துவார்களா? தமிழ்மொழிக் கொலைஞர்கள்
read more...

Friday 30 November 2012

மட்டக்களப்பு வாவட்ட HNDA பட்டதாரி பயிலுனர்கள் தாம் திணைக்களங்களில் இணைக்கப்படாமை தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் HNDA பட்டதாரிப் பயிலுனர்களை திணைக்களங்களில் இணைத்தக் கொள்ளப்படாமை தொடர்பாக மடமக்களப்பு  HNDA பட்டதாரிகள் கெளரவ ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கம், அரசியல்வாதிகளுக்கும் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருக்கின்றனர். 
அக்கடித்தில் குறிப்பிடப்பட்டள்ள விடயங்கள்..
மட்டக்களப்பு மாவட்ட HNDA பட்டதாரி பயிலுனர்கள் அரச திணைக்களங்களுக்கு உள்வாங்கப்படாமை
மேற்படி விடயம் தொடர்பாக எமது மாவட்டத்தில் சுமார் 115 HNDA பட்டதாரி, பட்டதாரிப் பயிலுனர்களாக கடடமையாற்றி வருகின்றோம். எமக்கு தொடர்ச்சியாக விளைவிக்கப்பட்டு வருகின்ற அநீதிகளை தங்களின் மேலான கவனத்திற்கு இத்தால் கொண்டு வருவதன் மூலம் மன உழைச்சலுடன் கூடிய எமது நிலைக்கு தீர்க்கமான முடிவு கிட்டுமென எதிர்பார்க்கின்றோம்.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 46/90 - 111 சுற்ற நிருபப்படி HNDA  பட்டதாரிகள் B.Com பட்டத்திற்கு சமமான பட்டதாரிகள் என அங்கிகரித்து இதுவரை காலமும் பல நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கிகரிக்கப்பட்ட பட்டம் பெற்றசர்கள் எனும் உரித்துடையவர்களாக இருக்கின்றோம். இருப்பினும் சில அதிகாரிகள் தெளிவின்மை காரணமாக எமது இரண்டு வருட படிப்பினையும் மீதி இரண்டு வருட திணைக்கள பயிற்சியுடனான படிப்பினையும் உதாசினம் செய்வதுபோல் நடந்துகொள்வது மனவருத்தத்தினைத் தருகின்றது. மேலும் எமக்கு இளைக்கப்பட்ட அநீதிகளாக..
01. கணக்கியல் துறைசார் பட்டம் பெற்ற எம்மால் துறைசார் பயிற்சிகள் (பயிலுனர்களாக நியமிக்கப்பட்ட பின்) பெறப்பட்டு திணைக்களங்களுக்கு பெயர்கள் வழங்கப்பட்டிருந்தன தற்போது HNDA பட்டதாரி பயிலுனர் அனைவரின் பெயர்கள் மட்டும் வெட்டப்பட்டு விளம்பரப் பலகைகளில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
02. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் இவ்விடயம் இவ்வாறு இடம்பெற்றுள்ளது. வேறு மாவட்டங்களில் முற்றிலும் முரணாக காணப்படுவதுடன் திணைக்களங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு தெரிவுகளும் இடம்பெற்று எமது சக பட்டதாரிகள் வேறு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
03. குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் (30.11.2012) திணைக்களங்களுக்கான தெரிவுகள் அடங்கிய ஆவணம் தயார் செய்ய வேண்டும் என்பதால் எம்மை வெட்டிய இடங்களுக்கு புதியவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது (நாங்கள் பட்டதாரியாக வெளியேறிய திகதிக்குப் பின்னர் வெளியேறிய பட்டதாரிகளின் பெயர்கள்)
04. கடந்த 28.11.2012 ம் திகதி வெளியாகிய பத்திரிகையில் திணைக்களங்களுக்கள் உள்வாங்கப்படாதவர்கள் வெளி மாவட்டங்களுக்க போக வேண்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் எமது நிலை என்ன? இது திட்டமிட்டு செய்யப்படும் சதியா என வலுப்பெறுகின்றது.
05. இவ்வாறான சூழ்நிலையில் பயிலுனர்களாக கடமை புரியும்போது எமக்கு ஏற்படுகின்ற மன உழைச்சல்கள், தாக்கங்கள் சொல்லி மாள முடியாது. மற்றும் தற்போது  HNDA படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் பயிற்சி நெறியினைத் தொடர்வதா எனும் ஐயப்பாட்டில் இருப்பதுடன் இவ்விடயத்தில் அவதானிப்புடன் இருக்கின்றனர்.
06. தாங்கள் மற்றும் அனைத்து உயர் அதிகாரிகளும் அறிந்த விடயமே HNDA பட்டதாரிகளுக்கு அரச நிதி நடவடிக்கைகள் நிர்வாக நடவடிக்கையில் உள்ள ஈடுபாடுகள், யாராலும் மறுக்கவொ, மறைக்கவோ முடியாது. இதற்கு ஆதாரமாக பல கணக்காய்வாளர்கள், கணக்காளர்களாக, உயர் அதிகாரிகளாக பதவி வகிக்கின்றனர்.
எனவே எமக்கும் ஏனைய மாவட்டத்தில் இடம்பெறும் திணைக்களங்களுக்கான நியமனம்போல் எமது படிப்பிற்கு மதிப்பளித்து நியமனங்கள் வழங்கப்படுவதையும் எதிர்வரும் காலங்களில் பிரச்சினைகள் வராதவண்ணம் நடவடிக்கை எடுக்கும்படியும் தாழ்மையுடன் உருக்கமாக வேண்டி நிற்கின்றோம். 
இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுளள்து.
read more...

Thursday 29 November 2012

மட்டக்களப்பில் தொடரும் பட்டதாரிகள் பிரச்சினையும் அதிகாரிகளின் அட்டுழியங்களும்

 (தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதனால் மீண்டும் பதிவிடுகிறேன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களை திணைக்களங்களுக்கு நியமிப்பது தொடர்பில் பல குளறுபடிகள் இடம்பெற்று வருவதாக பட்டதாரிப் பயிலுனர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இப்போது 1000 க்கு மேற்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இது ஒரு புறமிருக்க பட்டதாரிப் பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட உயர் தேசியக் கணக்கியல் பட்டதாரிகள் (HNDA) புறக்கணிக்கப்பட்டு வருவதாக (HNDA) பட்டதாரிகள் குற்றம் சுமத்துகின்றனர். நியமனம் வழங்கப்பட்டு ஓரிரு தினங்களில் இடை நிறத்தப்பட்டு பின்னர்  நான்கு நாட்களின் பின்னர் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 

இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டதன் பின்னர் வேலையில் இருந்து நிறுத்திய நாட்களுக்குரிய சம்பளம் சில பிரதேச செயலகங்களில் வழங்கப்படவில்லை ஆனால் பல பிரதேச செயலகங்களில் வழங்கப்பட்டுள்ளன. ஒரு பிரதேச செயலகத்திற்கு ஒரு நியதியா? 

அதே போன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் (HNDA) பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படவில்லை. தொடர்ந்து ஏனைய திணைக்களங்களுக்கும் (HNDA) பட்டதாரிகள் பிரதேச செயலகங்களால் அனுப்பப்படவில்லை. ஒரு சில பிரதேச செயலகங்களால் (HNDA) பட்டதாரிகளை தெரிவு செய்து அனுப்பியிருந்தும் திணைக்களங்கள் திணைக்களங்கள் (HNDA) பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள முடியாது என்று திருப்பியனுப்பி இருக்கின்றது.

இவ்விடயங்கள் தொடர்பாக சில அதிகாரிகள் கேட்கின்றனர் (HNDA) பட்டத்துக்கு சமமானதா? சமனானது என்பதற்கான சுற்றறிக்கையை கொண்டு வாருங்கள் என்று சொல்கின்றனர். இவ்விடயங்கள் தெரியாத அதிகாரிகள் இவ்விடயங்களை தெரிந்தாவது வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே நடைபெறுகின்றன. ஏனைய மாவட்டங்களில் (HNDA) பட்டதாரிகள் திணைக்களங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் சில உயர் அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட நலனுக்காக இவ்வாறு செயற்படுவதாக சொல்லப்படுகின்றது.

(HNDA) என்பது நான்கு வருடங்கள் மிகவும் கஸ்ரப்பட்டு படிக்க வேண்டிய ஒரு கற்கைநெறி என்பது இந்த அதிகாரிகளுக்கு எங்கே தெரியப் போகின்றது. கடந்த காலங்களில் (HNDA) பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டதையும் இப்போது வெளி மாவட்டங்களில் (HNDA) பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படுவதனையும் இந்த அதிகாரிகள் தெரியாமலா இருக்கின்றனர்.

(HNDA) பட்டதாரிகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவதற்குரிய ஏற்பர்டுகளாக இது அமையுமாக இருந்தால் இவ் அதிகாரிகளுக்கு எதிராக (HNDA) பட்டதாரிகள் வீதியில் இறங்கி போராடவும் தயங்கப்போவதில்லை. 

மறு புறத்தில் இவ்வாறு (HNDA) பட்டதாரிகள் இழிவாக நடாத்தப்படுகின்ற செயற்பாடுகள் இடம்பெற்று வரும் வேளையில் உயர் தொழில்நுட்ப நிறுவனத்திற்கென பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றது. இக் கட்டடம் தேவையா? இதன் மூலம் எத்தனை மாணவர்களின் எதிர்காலத்தை இல்லாமல் செய்ய திட்டமிடப் படுகின்றதா? 

இப்படி (HNDA) பட்டதாரிகள் இழிவாக நடாத்தப்படுவார்கள் என்று தெரிந்திருந்தால் நான்கு வருடங்களை வீணடித்திருக்க வேண்டிய அவசியமில்லை வேறு கல்வியைத் தொடர்ந்திருக்க முடியும் இவ்விடயம் தொடர்பில் அரசியல்வாதிகள் மெளனம் சாதிப்பது ஏன்?

Syllabus - 1st Year

1st Semester
1. Fundamentals of Financial Accounting
2. Business Mathematics
3. Commercial Awareness
4. Introduction to Computer
5. Business Communication - i
2nd Semester
1. Intermediate Financial Accounting
2. Statistical Analysis for Management
3. Micro and Macro Economics
4. Business Communication - ii
5. Computer Applications

Syllabus - 2nd Year

1st Semester
1. Advanced Financial Accounting
2. Operation Management
3. Principle of Auditing & Taxation
4. Database Management Systems & Data Analysis
5. Business Communication - iii
2nd Semester
1. Cost and Management Accounting
2. Computer Application for Accounting
3. Marketing Management
4. Business Communication - iv
5. Project Management Tools & Programming

Syllabus - 3rd Year

1st Semester
1. Advanced Management Accounting
2. Financial Reporting
3. Business Law
4. Business System - I
2nd Semester
1. Advanced Financial Reporting
2. Corporate Law
3. Organizational Behavior and Human Resources Management
4. Business System - II

Syllabus - 4th Year

1st Semester
1. Financial Management
2. Strategic Management
3. Advanced Taxation
4. Computer based Accounting
2nd Semester
1. Strategic Management Accounting
2. Financial Statement Analysis
3. Strategic Management Financial
4. Advanced Auditing & Assurance

HNDA B.com க்கு சமனானது என்பதனை காட்டும் சுற்றறிக்கை




2008 B COM - Circular 46 1990(e) III from Priyal Kulathilaka

புதிதாக அமைக்கப்படும் கட்டடம்

 பட்டதாரிகள் ஒன்றியம்


read more...

Tuesday 27 November 2012

கல்லறைகளில் புதைக்கப்பட்ட மாவீரர்களின் கனவுகள்


 இன்று தமிழர்களால் பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் மாவீரர்நாள். ஈழம் விடுதலை என்ற கோசங்களுக்கு அப்பால் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீர்களின் கனவுகளையுப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

நாம் ஈழம் விடுதலை என்கின்ற என்கின்ற கோசத்தில் பல ஆயிரக் கணக்கான போராளிகளை இழந்திருக்கின்றோம். அவர்களுக்கு மாவீரர்கள் எனும் பட்டம் மட்டுமே வழங்கியிருக்கின்றோம். அவர்களின் கனவுகள் இலட்சியங்கள் பற்றியும். அவர்களின் குடும்பங்கள் பற்றியும் யாராவது சிந்தித்திருக்கின்றோமா? 

உணர்ச்சி வார்த்தைகளால் உந்தப்பட்டு ஈழம் கிடைக்கும் என்ற கனவோடு தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த அந்த மாவீரர்களின் குடும்பங்கள், மனைவி பிள்ளைகள் இன்று நடுத்தெருவில். மாவீரர்நாளில் வீர வசனங்கள் பேசுகின்றவர்கள் இக் குடும்பங்கள் பற்றி சிந்தித்திருக்கின்றார்களா?

வெறுமனே வீரப் பேச்சுக்களைப் பேசிப் பேசியே உசுப்பேற்றி மாவீர்களாக மடிய வைத்த தமிழ் அரசியல்வாதிகள் யாராவது மாவீரர் குடும்பங்கள் பற்றி சிந்தித்தார்களா?

அன்று வீர மரணமடைந்த அந்த மாவீரர்களின் மனதிலே ஈழம் கிடைக்கும் என்கின்ற உணர்வி விதைக்கப்பட்டிருந்தது. அவர்களின் உயிர் மூச்சு ஈழம் பெறுவதாகவே இருந்தது. தமது மனைவி பிள்ளைகள் குடும்பத்தை மறந்து ஈழம் என்ற இலட்சியத்திற்காகப் போராடினார்கள்.

உண்மையில் மாவீரர்களுக்கு நாம் தலை வணங்க வேண்டும். அவர்கள் இலட்சியத்திற்காக இன்னுயிர்களை மாய்த்தவர்கள். அவர்களின் உயிர் பிரியும்போது ஈழம் மலரும் எனும் கனவோடு அவர்களின் உயிர் பிரிந்திருக்கும். இது ஒரு புறமிருக்க எதற்காகப் போராடுகின்றோம் என்று தெரியாமலே உயிரை மாய்த்த போராளிகள் பலர்.

ஆனால் அவர்கள் உணரவில்லை இலங்கையில் தனி ஈழம், தமிழர்களுக்கான தனி ஒரு நாடு சாத்தியமில்லை இலங்கையில் தமிழீழம் என்பது அடைய முடியாத இலக்கு என்பதை. நான் தனி ஈழத்தை விமர்சிக்கின்றேன் என்று என்னைத் திட்டுவீர்கள். இலங்கையில் தனி ஈழம் அடைய முடியாத இலக்கு என்பதனை பலரும் உணர்ந்திருக்கின்றனர். இலங்கையில் தமிழீழம் என்பது அடைய முடியாத இலக்காகவே இருக்கப் போகின்றது.

ஈழம் மலரும், முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம் என்பதும், அரசியல் சுகபோகங்களக்காக தமிழ் பிரதேசங்களில் மாவீரர் தின சுவரொட்டிகளை ஒட்டுவதும் மீண்டும் தமிழர்களை அழிவுப் பாதை நோக்கி கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.

தமிழர் பிரதேசங்களிளே மாவீரர் தின சுவரொட்டிகளை ஒட்டியிருப்பதனால் என்ன நடக்கப்போகின்றது? சுற்றி வளைப்புக்கள் கைதுகள் இடம்பெறப்போகின்றது. இதனால் சித்திரவதைகளை அனுபவிக்கப் போவது அப்பாவி தமிழ் இளைஞர்களே.

ஏதோ ஒரு வகையில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். மீண்டும் மக்களை உசுப்பேற்றி பலிக்கடாவாக்க யாரும் முயற்சி செய்யாதீர்கள். இன்னும் பல ஆயிரக் கணக்கான மாவீரர்களை உருவாக்கி அவர்களின் னவுகளையும் கல்லறைகளில் புதைக்க நினைக்காதீர்கள்




read more...

Monday 26 November 2012

ஈழத்திலிருந்து சீமானிடம் சில கேள்விகள்

சீமான் அவர்கள் மாவீரர் தினத்தை முன்னிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றார். ஈழத் தமிழருக்காக தனது இன்னயிரைத் தியாகம் செய்யப் போகின்றாராம். இவரின் இக் கூற்றைப் பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகின்றது.

சீமான் அவர்களுக்கு இலங்கை தமிழ் மக்கள் மீது இருக்கின்ற அக்கறை தமழீழம் பெறுவது தொடர்பாக அவரின் ஆதங்கம் என்பவற்றைப் பார்க்கின்றபோது எனக்குள்ளே சில கேள்விகளை நான் அவ்வப்போது கேட்டபதுண்டு.

ஆரம்பகாலங்களின் சீமான் அவர்களின் வீர வசனங்களால், பேச்சுக்களாலும் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன். தமிழர்களுக்கு கூடவே பிறந்த ஒரு குணமிருக்கின்றது. வீரவசனங்களைப் பேசினால் உசப்பேறி விடுவார்கள் உயிரையும் விடத் தயங்கமாட்டார்கள். அதே போன்றுதான் சீமான் அவர்களின் பேச்சில் மயங்கியவன் நான். பின்னர் போகப்போக அவரது பம்மாத்தக்களையும் பகடமணிகளையும் புரிந்துகொண்டேன்.

சீமான் அவர்களுக்கு இலங்கை தமிழ் மக்கள் மீதான அக்கறையும், தமிழீழம் எனும் உயிர் மூச்சும் எப்போது உருவானது. இந்தியாவிலே இருந்து வீர வசனங்களைப்பேசி இலங்கைத் தமிழர்களைச் சூடேற்றி இலங்கை தமிழர்களை அழிக்க நினைக்கும் இந்தச் சீமானுக்கு இப்போதுதான் அக்கறை வந்ததா?

விடுதலைப் போராட்டம் என்பது இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டதல்ல பல தசாப்தங்களையும் பல உயிர்களையும் பலி கொண்டுள்ளது. இவ்வளவு காலமும் இந்தச் சீமான் எங்கே இருந்தார். 

இந்தியாவில் இருந்து வீரம் பேசுவதைவிட களத்திலே நின்று போராடியிருந்தால் தெரிந்திருக்கம் உயிரின் வலி. உண்மையில் தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் நேரடியாக களத்தில் இருந்து போராடி இருக்க வேண்டும்.

வெறுமனே வீர வசனம்பேசி ஈழப் பிரியனாகவும், இலங்கைத் தமிழர் மீது அக்கறை கொண்ட ஒருவராகவும் காட்டிக் கொள்ள நினைப்பதன் மர்மம் என்ன? 

இலங்கைத் தமிழருக்காகவும் ஈழத்துக்காகவும் இன்னுயிரைத் தியாகம் செய்யப் போவதாக அறிக்கை இட்டிருக்கின்றார். புலிகள் களத்தில் நின்று போராடியபோது சீமானுக்கு ஏன் இந்த அக்கறைஅன்று வரவில்லை? குறைந்தபட்சம் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அரங்கேற்றப் பட்டவேளையாவது ஏன் இவருக்கு இன்னுயிரைத் தியாகம் செய்யும் எண்ணம் வரவில்லை?

தனது பெயருக்கும் புகழுக்கும், அரசியலுக்கும் இலங்கை தமிழர்களை பகடைக்காய்களாக சீமான் பயன்படுத்த நினைப்பது வேடிக்கையானது. இலங்கைத் தமிழர்கள் இனிமேலும் இவ்வாறானவர்களை நம்பப்போவதுமில்லை
read more...

Sunday 25 November 2012

வேசிகளும் வேசிகளை நாடும் சமூக அந்தஸ்துள்ளவர்களும்

பாலியல் தொழிலாளர்களை நாம் வேசிகள் என்று ஒதுக்கி வைத்திருக்கின்றோம். யாரும் மரியாதை கொடுப்பதில்லை. இந்த வேசிகளிடம் போய் உல்லாசமாய் அனுபவித்துவிட்டு வருபவர்கள் யார்? எம்மைப் போன்றவர்கள்தான்?  இந்த வேசிகளிடம் போய் வந்து அதனை வீரம்போல் சொல்லிக் கொள்வார்கள் ஆண்கள் பாலியல் தொழிலாளிகளிடம் போய் உல்லாசமாய் இருந்துவிட்டு வருகின்ற ஆண்களையும் ஒதுக்கி வைக்க வேண்டுமே.

பாலியல் தொழிலாளர்களைப் பொறுத்தவரை அதிகமானவர்கள் தானாக இத் தொழிலுக்கு வந்தவர்களல்ல. அவர்களுக்குப் பின்னால் ஒரு கதை சோகக் கதையே இருக்கும். இன்று இலங்கையிலே இருக்கின்ற பாலியல் தொழிலாளர்களில் அதிகமானவர்கள் இளம் யுவதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் நாம் அறிந்தோ அறியாமலோ எமது தமிழ் யுவதிகளும் சிறுமிகளும் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். வறுமை ஒரு புறம் தனது குடும்பத்தை டகொண்டு நடாத்த வேண்டிய குடும்ப சுமை ஒரு புறம் இவர்களை பாலியல் தொழிலுக்கள் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கின்றது.

இலங்கையில் இருக்கின்ற பாலியல் தொழிலாளர்களில் எமது தமிழ் பெண்கள் இத் தொழிலை நாடியதன் காரணம் என்ன? நாட்டில் இடம்பெற்ற கோர யுத்தமும் எமது சமூகமுமே முக்கிய காரணமாகும். 

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக விதவையான தமிழ் பெண்கள் இலட்சத்தைத் தாண்டும் என்று நினைக்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருக்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் இரு குழந்தைகளுக்கு தாயாக குடும்ப சுமைய சுமக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

எமது தமிழ் சமூகம் பெண்கள் மறு மணம் செய்வதை தடுக்கின்றது. ஆனால் ஆண்கள் எத்தனை கல்யாணம் பண்ண விரும்பினாலும் செய்து  கொடுத்து வீரமாக நினைக்கின்றது எமது சமூகம். ஒரு பெண் இறந்து விட்டால் இறந்து ஒரு மாதம் செல்ல முன்னரே தனது மகனுக்கு  பெண் பார்த்து மறு மணம் செய்து வைத்த எத்தனை பெற்றோரைப் பார்த்திருக்கின்றோம்.

ஆனால் ஒரு இளம் பெண் தனது கணவன் இறந்துவிட்டால் தனது குடும்பத்தை கொண்டு நடாத்துவதற்கு இன்னொரு திருமணம் செய்ய நினைத்தால் வேசி என்கின்ற ஒரு பட்டத்தினையும் சூட்டிவிடுகிறது எமது சமூகம்.

அதே போன்று விதவைகளை எந்த ஆணாவது மறுமணம் செய்ய முன்வருகின்றார்களா? (ஓருசில விதிவிலக்கானவர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு நாம் தலைவணங்க வேண்டும்) எவரும் முன் வரமாட்டார்கள் அந்த விதவையிடம் கள்ளக் களவாகப் போய் வரத்தான் விரும்புவார்கள்.

எமது சமூகத்தில் இருக்கின்ற மற்றொரு விடயம் விதவைகளை ஒதுக்கி வைப்பது. மறு மணம் செய்து தமது குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ளவும் விடமாட்டார்கள். குறித்த விதவையை சமூக அந்தஸ்துள்ள ஒருத்தியாக நினைக்கவும்மாட்டார்கள். சமூகத்திலிருந்து ஒது்க்கி வைத்துவிடுவார்கள். இந்த நிலையில் தனது குடும்பத்தை கொண்டு நடாத்துவதற்கு இவ்விதவைப் பெண் என்ன செய்வாள்?

தொடரும்.....


read more...