நீண்ட நாட்களின் பின்னர் இந்திய நண்பர் ஒருவர் இன்று என்னுடன் பேசினார். முன்னர்போல் ஏன் எழுதுவதில்லை என்று கேட்டார் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய விடயங்கள் பலவற்றை ஞாபகமூட்டினார். அந்த விடயங்களை நானே மறந்துவிட்டேன். மீண்டும் எனது பழைய எழுத்துக்களை எதிர்பார்ப்பதாக கேட்டுக்கொண்டார்.
முன்னர் ஒரு நாளைக்கு 6,7 கட்டுரைகள் எழுதிய காலமும் உண்டு. இப்போது எழுதுவதற்கு சோம்பேறித்தனம் பிடித்துவிட்டது. அதிகமான இந்திய நட்புக்களை தேடித்தந்த காலம்.
பழைய கட்டுரைகளை புரட்டிப் பார்த்தேன் 500 க்கு மேற்பட்ட கட்டுரைகள் இதுவரை எழுதியுள்ளேன். அவற்றில் பல இந்திய சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. ஒரு சில இலங்கை சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன.
அந்த நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க
எனது எழுத்துக்கள் தொடரும். அரசியல் சார்ந்த எழுத்துக்களுக்கு முற்றுப்புள்ளி
0 comments: on "மீண்டும் தூசுதட்டப்படுகிறது"
Post a Comment