Sunday 27 March 2011

புலம் பெயர்ந்தும் உங்களோடு

 புலம்பெயர் பதிவராக பதிவுகளில் சந்திப்பதில் மகிழ்ச்சி...

புதியதொரு நாட்டிலிருந்து பதிவிட ஆரம்பித்திருக்கின்றேன். இப்போது நான் கட்டாரில் இருக்கின்றேன். முடிந்தவரை தொடர்ந்தும் வழமையான எனது பதிவுகள் உங்களை வந்து சேரும்.

தற்போதைக்கு தொடர்ந்து பதிவிட முடியாதபோதும் அடிக்கடி என் பதிவுகள் வந்துசேரும். 

நாட்டிலே இருந்து எழுத நினைத்தும் எழுத முடியாமல்போன பல விடயங்களையும் இன்னும் பல விடயங்களையும் பதிவிட நினைத்திருக்கின்றேன். 

குறிப்பாக வெளிநாட்டு வாழ்க்கையும் அதனோடு சார்ந்த பல விடயங்களும் அடிக்கடி வரும். 

நாட்டில் இருந்து பதிவிட்டபோது சில பதிவர்களோடு முரண்பட்டிருக்கின்றேன். கருத்துமோதல்கள் நட்புக்களையும் இல்லாமல் செய்திருக்கின்றது. 

சிறு வயது முதல் அரசியலில் ஈடுபாடு அதிகம் அரசியல் சார்ந்து என் பதிவுகள் இருந்ததனால் பலர் முரண்பட்டிருக்கின்றனர். அரசியல் பதிவுகளில் இருந்து முற்றாக விலகி இருக்கலாம் என்று நினைத்திருக்கின்றேன்.

முடிந்தவரை நல்ல பதிவுகளோடு அடிக்கடி வருவேன்.

எது எப்படி இருப்பினும் நம் நாடு போல வருமா?...


read more...

Saturday 12 March 2011

மீண்டும்

வணக்கம் நண்பர்களே.....

கட்டாரில் இருந்து என்னுடைய முதல் பதிவு.... விரைவில் உங்களோடு பதிவுகளோடு வருவேன். 

கட்டாரில் இருக்கும் நண்பர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளவும் 

0097430154430

 
read more...