Tuesday 28 September 2010

முதன் முறையாக மட்டக்களப்பில் .

சர்வதேச உல்லாச தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடிக் கடற்கரை உல்லாச கடற்கரையாக உத்தியோக பூர்வமாக உல்லாசத்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வினைச் சிறப்பிற்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்திலே சர்வதேச நிபந்தனைகளுக்கு அமைவாக முதன் முறையாக கல்லடி கடற்கரையில் கடற்கரை உதைப்நதாட்டப் போட்டி இடம் பெற்றது. இப் போட்டியினை உல்லாசத்துறை அமைச்சர் பசில்ராஜபக்ஸ, கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பூ. பிரசாந்தன் அவர்களும் ஆரம்பித்து வைத்தார்கள். கல்லடிக் கடற்கரையினை முதலமைச்சர் சந்திரகாந்தன் அமைச்சர் பசில்ராஜபக்ஸ அவர்களுக்கு சுற்றிக் காட்டுவதனையும் படத்தில் காணலாம்.

img_89291
img_8938
img_8919
img_8920
read more...

எங்கள் தேசத்தில்

கல்லடிக் கடற்கரையில் சிரமதான நிகழ்வு

img_8503சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலே பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. பொருளாதார அபிவிருத்தி மற்றும் உல்வாசத்துறை அமைச்சருமான பசில் ராஜபக்ஸ அவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுதலின் பேரில் இந் நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார். அந் நிகழ்வுகளில் ஓர் அங்கமாக கல்லடி கடற்கரை சிரமதானம் செய்யப்பட்டது. இதில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான  சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு அரம்பித்து வைத்தார்.
img_8527
img_8532
img_8540

உல்லாச தகவல் மையம் கிழக்கு முதல்வரினால் திறந்து வைப்பு.

சர்வதேச உல்லாச தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் நெக்டெப்பினால் அமைக்கப்பட்ட உல்லாச தகவல் மையத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண உல்லாசத்துறை அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் திறந்து வைத்தார். இந் நிகழவிற்கு உல்லாசத்துpறை அமைச்சரும் ஜனாதியின் அலோசகருமான பசில் ராஜபக்ஸ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். அத்தோடு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்,மாகாண ஆளுணர் மொகான் விஜேவிக்ரம, மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெவ்வே, எம்.எஸ்.சுபைர், மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் மேலும் பல அரசியல் பிலபல்யங்களும் கலந்து கொண்டார்கள்.
img_8630
img_86601

உல்லாச கற்கைகள் நிலையம் திறந்து வைப்பு

சர்வதேச உல்லாச தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகான உல்லாசத்துறை அமைச்சினால் ஏறபாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்வுகள் மட்டக்ளப்பில் இடம்பெற்றன. மட்டு பாலமீன்மடுவில் நெக்டெப்பின் நிதியில் அமைக்கப்பட்டுள்ள உல்லாச கற்கைகள் நிலையத்தினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் உல்லாசத்துறை அமைச்சருமான பசில் ராஜபக்ஸ திறந்து வைத்தார். கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண உல்லாசத்துறை அமைச்சருமான சவநேசதுரை சந்திரகாந்தன் அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களுக்கு மட்டக்களபபு மாவட்டத்தின் உல்லாச பிரதேசங்கள் தொடர்பாக விளக்கமளிப்பதனையும் பாலமின்மடு உல்லாச பிரதேசத்தினைச் சுற்றிக் காட்டுவதனையும் தனது அழைப்பினை ஏற்று வருகைதந்த அமைச்சர் அவர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவிப்பதனையும் கிழக்குப் பல்கலைக் கழக விபுலானந்தா அழகில் கற்கைகள் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலைநிகழ்வகளையும் படங்களில் காணலாம். img_8724
img_8821
img_8826
img_8730
img_8869
img_8853
img_8803
read more...

Monday 27 September 2010

நடந்தவை, நல்லவை

சிறுபான்மை மக்களுக்கான குறைந்த பட்ச அதிகாரப் பகிர்வு முறைமை மாகாண சபை - கிழக்கு மாகாண முதலமைச்சர்.

img_8280அரசியல் அமைப்புக் கற்கைகள் நிறுவனத்தின் அனுசரனையுடன் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான அமைப்பின் ஏற்பாட்டில் 13வது யாப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவது பற்றிய மாகாண செயலமர்வு மட்டக்களப்பு கோப் இன்னில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதம அதியாகக் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு  மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன், சிறுபான்மை மக்களுக்காக கொண்டுவரப்பட்ட குறைந்தபட்ச அதிகாரத் தீர்வு முறைமை இன்று நம் எல்லோராலும் பேசப்படுகின்ற 13வது அரசியல் திருத்தச் சட்டத்தின் கருவில் உருவான மாகாண சபை முறைமைதான். 1987ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வடக்கு கிழக்கிணைந்த மாகாண சபையினால் 13அரசியல் திருத்தச்  சட்டமூலத்தினை அடிப்படையாகக் கொண்டு சுயாதீனமாக இயங்க முடியாது போனது. இதற்கு அப்போதைய ஒரு சில அரசியல்வாதிகள் மற்றும் மறைமுகமாக இருந்து செயற்பட்ட போராட்ட இயக்கங்கள் காரணம் என்று கூறலாம். ஆனால் இன்று இயங்குகின்ற கிழக்கு மாகாண சபை அவ்வாறான ஒன்றல்ல. மிகவும் பல்வேறு வழிகளிலும் அல்லலுற்ற எம் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும். அவர்களுக்கான அதிகாரங்களை குறித்தொதுக்கப்பட்ட சட்டவரையறைகளுக்குள் நின்று கொண்டு பெற்று அதனூடாக சிறப்பாக செயற்பட வேண்டும் என்பதே எமது மக்களின் அவாவாகும். அதனை நிறை வேற்றுவதற்காகத்தான் கிழக்கு மாகாண சபை தற்போது மக்கள் பிரதிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. இம் மாகாண சபைக்கு 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக அளிக்கப்பட்டிருக்கின்ற அதிகாரங்களை முழுமையாக பெறுவற்கு அரசியல் வாதிகள் எனத் தங்களை இனங்காட்டுவோர் கட்டாயம் ஆதரவளிக்க வேண்டும். வெறமனே பேசுவதனால் மாத்திரம் பயன் இல்லை அதனை நடைமுறைப் படுத்துவதற்கான வழிவகைகளைத் தேட வேண்டும். அப்போதுதான் எமது சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை ஓரளவேனும் வென்றெடுக்க முடியும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு கட்சி பேதங்களை மறந்து எமது சிறுபான்மை மக்களுக்களுக்கான குறைந்த பட்சத் தீர்வாக எம் கண் முன்னே இருக்கின்ற மாகாண சபையினை பலப்படுத்த அனைவரும் முன் வரவேண்டும். மாறாக சிறுபான்மை மக்கள் தொடர்பான சட்டத்திருத்தங்களை பாராளுமனறத்தில் வாக்கெடுப்பிற்காக அல்லது பரிசீலனைகளுக்காக  கொண்டுவருகின்ற போது பொறுப்பற்றவர்களைப் போன்று பாராளுமன்ற நடவடிக்கைகளலிருந்து வெளிநடப்புச் செய்வதும் சிலர் விடுமுறைகளில் நிற்பதும் தவிர்க்கப் படவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் பேசுகையில், கடந்த காலங்களில் செயற்பட்ட தமிழ் அரசியல் வாதிகள் போல் இனி மேலும் நாம் காலத்தை வீணடிக்க முடியாது. ஆரம்பத்தில் கொள்கை, கோட்பாடு, உரிமை, சமஸ்டி என்றெல்லாம் பேசியவர்களின் நிலை என்ன? அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்த விடம் அவைகளெல்லாம் எமக்கு கிடைக்காது அவைகளெல்லாம் அசாத்தியமான விடயங்கள் என்று. அப்படி இருந்தும் காலத்தினை வீணடித்த  வரலாறுகள்தான் மிச்சம். ஆனால் இவர்கள் எல்லோரும் கேட்டதற்கு அப்பால் இன்று சிறுபான்மை மக்களுக்காக இந்நாட்டில் இருக்கின்ற அதிகாரப் பகிர்வு முறை என்றால் அது மாகாண சபை முறைமைதான். இது விரும்பியோ விரும்பாமலோ எமக்குக் கிடைத்திருக்கின்றது. அதனைச் சரியாகப் பயன்படுத்துவதற்கும், அதனைப் பலப்படுத்துவதற்குமான வழிவகைகளையே நாம் தேட வேண்டும். எமக்குத் தெரிந்த அத்தோடு இலகுவாக பெறக்;கூடிய விடயங்களைப் பற்றிச் சிந்திக்காமல் இன்றும் அன்று போல் பழைய பாணியில் வேதம் ஓத நினைப்பது வேதனையளிக்கிறது. அவற்றை எல்லாம் விடுத்து தமிழ் மக்களின் அரசியல் காவலர்கள் என்பவர்கள் எம் மக்களுக்கான அதிகாரங்களைப் பெறுவதற்கு சகல வழிகளிலும் முன்வரவேண்டும். அதனை விடுத்து காலங் கடந்த ஞானம் பெற்ற ஞானிகள் போல் திரியாமல் தற்போதைய சுமுகமான சூழ்நிலையில் எமக்கான அதிகாரங்களை நாம் பேசிப் பெறுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இச் செயலமர்விற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர மேயர், உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், ஆலோசகர்கள், அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் அரசியற் துறை சார்நத மாணவர்களும் வருகைதந்திருந்தார்கள்.
img_8279
img_8268
img_8272

நீலப்பனிக்கன் குள விவசாய வீதி பொது மக்களின் பாவனைக்காக  கிழக்கு மாகாண முதலமைச்சரால் (23.09.2010) கையளிக்கப்பட்டது.

திருகோணமலை நீலப்பனிக்கன் குள விவசாய வீதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் இன்று பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது



மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் கட்டிடத்திற்கான அடிக்கல் குச்சவெளியில் முதலமைச்சரால் (23.09.2010) நடப்பட்டது.

img_7936-copy

மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் கட்டிடத்திற்கான அடிக்கல் திருகோணமலையின் குச்சவெளியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் நடப்பட்டது. இந்நிகழ்வில் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை, தவிசாளர் பாயீஸ், ஆரியவதி ஆகியோரும் குச்சவெளி பிரதேச செயலாளர் தவிசாளர் தௌபிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பாரம்பரிய கலை இலக்கியங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை எம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். – கிழக்கு முதல்வர்.

img_78272

மட்டக்களப்பு மாவட்ட செயலக கலாசார அலுவலகம் நடாத்திய மக்கள் கலை இலக்கிய விழா  (22.09.2010) மட் மகாஜன கல்லூரி மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சு. அருமைநாயகம் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், ஒவ்வொரு சமுகத்தவர்களுக்கும் ஒவ்வொரு பாரம்பரிய கலை இலக்கிய பண்பாடு கலாசாரம் என குறித்தொதுக்கப்பட்டிருக்கிறது. அதனை அவர்கள் சரியாக பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவர்களையே சார்ந்தது.


மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், கலை இலக்கியங்கள் என்பது மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்திருப்பது. விசேடமாக குறிப்பிட்ட சில கலைகளுக்கு மட்டக்களப்பு பெயர் போனது. கடந்த கால அசாதாரண சூழல் மற்றும் தற்போதைய நவீன யுகம் இவற்றிற்கிடையில் கலை இலக்கியங்கள் பாதுகாப்பதென்பது சவாலன விடயம்தான். இருந்த போதும் நகர்ப்புறங்களிலும் கிராமப் புறங்களிலும் இவ்வாறான கலை இலக்கிய நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டும். அத்தோடு இது சார்நத பல போட்டிகளை நடாத்தி பரிசில்கள் வழங்க வேண்டும். அவ்வாறே மக்களுக்கும் இதன் முக்கியத்தவத்தையும் எமது பாரம்பரியங்கள் கலாசாரங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். இதற்காக கிழக்கு மாகாண சபையுடன் இனைந்து அதிகாரிகள் மற்றும் கலைஞர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.


இந் நிகழ்வில் மட்டக்களப்பிற்கே உரித்தான பல கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், மூத்த பல கஞைர்கள், கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் யூ. கே. வெலிக்கல, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா நெடுஞ்செலியன், கலாசார உத்தியோகஸ்த்தர் மலர்ச்செல்வன் அகியோரும் கலந்து கொண்டார்கள்.



ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் திருக்கோவில் கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவி மாலவன் சுபதா அகில இலங்கை ரீதியில் முதலிடம்.

தற்போது வெளியாகியுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறு அடிப்படையில் அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்தைச் சேர்ந்த தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மாலவன் சுபதா தமிழ் மொழி மூலத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் 193 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் அகில இலங்கை ரீதியில் பன்னிபிட்டிய தர்மபால வித்தியாலயத்தைச் சேர்ந்த சனூஜ கல்ஹாசன் 196 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பின் முன்னாள் எம். பி. கிழக்கு முதல்வருக்கு புகழாரம்.

img_78022மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரை கிழக்கு மாகாண முதலமைச்சரின் சேவை நலனைப் பாராட்டி முதல்வர் சந்திரகாந்தனுக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தார். இன்று(22.09.2010) மட்டக்களப்பில் அவரது வீட்டில் முதலமைச்சர் சநத்திரகாந்தனைச் சந்தித்து பேசுகையில், கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கான கட்சி என்ற அடிப்படையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சி பல சேவைகளைப் புரிந்து வருவதாகவும் மக்களின் நலனில் அக்கறை கொள்கின்ற ஓர் கட்சியாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்நது தமது ஆதரவு த.ம.வி.பு கட்சிக்கு இருப்பதாகவும் மேலும் பல சேவைகளை எமது மக்களுக்காக ஆற்ற வேண்டி இருப்பதாகவும் அதற்கு த.ம.வி.பு கட்சியயுடனான உறவு வலுச்சேர்க்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

read more...

Tuesday 21 September 2010

முன்னாள் புலிப்போராளிகளும் கிழக்கு முதல்வரும்

புனர்வாழ்வளிக்கப்பட்டு தற்போது வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் இருக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தொழிற்பயிற்சி உபகரணங்களை வழங்கி வைத்தார்.


முதலமைச்சரின் விடேச நிதியொதுக்கீட்டிலிருந்து சுமார் பத்து இலட்சம் ரூபாய் இதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர், இப்புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலையாகின்ற போது அனைவரும் ஒரு தொழிலில் சிறப்புத் தேர்ச்சி உடையவர்களாக திகழ வேண்டும். அதற்கேற்றால் போல் பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அத்தோடு அதற்கான முதற்கட்டமகவே இதனை நான் பார்க்கின்றேன். நீங்கள் விடுதலை பெற்றுச் செல்கின்ற போது இயல்பு வாழ்க்ககை;கு திரும்ப வேண்டும். கடந்த காலங்களில் தோன்றிய கசப்பான சம்பவங்களை மறந்து, நாங்கள் அனைவரும் எமது குடும்பம, எமது தொழில், எமது வருமானம் என நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். மேலும் தேவையற்ற விதண்டா வாதங்களைப் பேசி இனியும் நாம் நாட்களைக் கடத்தக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.


தொடர்ந்து அவர் பேசுகையில், விடுதலைப் போராட்டம் ஏன் ஆரம்பிக்கப்பட்டது எனபதற்கு அப்பால் அதனால் எற்பட்ட தாக்கங்களே அதிகமாக எமக்குப் புலப்படுகின்றது. எனவே கடந்த காலங்களில் நாம் அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ அச்சூழ்நிலையில் சிக்கித் தவிர்த்தோம். ஆனால் இன்று அவ்வாறல்ல புதுமையான ஓர்; சிந்தனை உதயமாகி எமது மனங்களிலே விரோதப் பாங்கு மறைந்து அனனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. இதனை நாம் சரியாகப் பயன்படுத்தி எமது தனியாள் வருமானங்களை அதிகரித்து மென்மேலும் நாம் சிறப்பபுப்பெற உழைக்கவேண்டும். ஒரு மனிதன் எந்தவொரு தொழிலும் இல்லாமல் இருக்கின்ற போதுதான் அவனது சிந்தனை தவறான வழியில் செல்கின்றது. எனவே அனைவரும் உங்களது திறமைக்கும் ஆற்றலுக்கும்; ஏற்றால் போல் தொழில்களைத் தேர்ந்தெடுத்து, அதனைச்சிறப்பாக செய்து உங்களது இயல்பு வாழ்க்கையினைத் தொடர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.


இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், புனர்வாழ்வுகளின் பொறுப்பதிகாரி கேணல் எஸ்.கே.ஜி.என்.பி.எகலமல்பே, கிழக்கு பிராந்திய புனர்வாழ்வுகளின் ஒருங்கிணைப்பு அதிகாரி கேணல் அபேயவர்த்தன, வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாம் பொறுப்பதிகாரி மேஜர் காமினி ரத்;நாயக்க மற்றும் முதலமைச்சர் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் கௌரிதரன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.









read more...

Monday 13 September 2010

தமிழை கொலை செய்து வாழ்ந்து வரும் தமிழ் சினிமா

இன்று பல்வேறு வழிகளிலே தமிழ்மொழி கொலைசெய்யப்பட்டு வருகின்றது. இன்று எங்கு பார்த்தாலும் தமிழ் மொழியோடு தேவையற்ற விதத்திலே வேற்று மொழியினைக் கலந்து தமிழ் மொழியின் இனிமையினையும், தமிழ் மொழியின் சிறப்பினையும் குழி தோண்டிப் புதைக்கின்றனர்.


தமிழ் மொழியினை கொலை செய்வதிலே இன்று திரையுலகம்கூட விட்டு வைக்கவில்லை. திரையுலகத்தைப் பொறுத்தவரை பல வழிகளிலே எமது தமிழ் மொழியினை வளர்க்க முடியும். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? தமிழ் மொழியை வளர்ப்பதற்குப் பதிலாக எப்படி எல்லாம் தமிழ் மொழியினை கொலை செய்ய முடியுமோ அப்படி எல்லாம் கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.


திரையுலகம் சார்ந்த எல்லோரையும் குற்றம் சொல்லவில்லை. தமிழ் மொழியை வளர்ப்போரும் திரையுலகத்திலே இருக்கின்றார்கள். இருந்தாலும் இன்று திரைப்படங்களிலே பல்வேறு வழிகளிலே தமிழ்மொழி கொலை செய்யப்படுகின்றது.


அன்றைய திரைப்படங்களிலே தமிழ் மொழி இன்றுபோல் கொலை செய்யப்பட்டதா இல்லையே? இன்று என்ன செய்கின்றார்கள்.


இன்றைய தமிழ் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் எமது கலாசாரத்துக்கு போருத்தமிலாத குடும்பத்தோடு பார்க்க முடியாத திரைப்படங்களே அதிகம் எனலாம். அதனை விட்டுவிடுவோம். திரைப்படங்களிலே தமிழ் மொழியிலே எத்தனை வீதம் பேசுகின்றார்கள் என்பதனை பார்த்திருக்கின்றீர்களா. ஏன் நாங்கள் தேவையற்ற முறையிலே வேற்று மொழிகளை பயன்படுத்துவதனை தவிர்த்து எமது தாய் மொழி தமிழினை பயன் படுத்துவதிலே என்ன தவறிருக்கின்றது.


இன்று வருகின்ற பாடல்களிலே என்ன செய்திருக்கின்றார்கள் அவர்கள் என்ன மொழியிலே பாடல்கள் எழுதியிருக்கின்றார்கள் என்பதே புரிந்து கொள்ள முடியாமலிருக்கின்றது. ஏன் தமிழ் பாடலிலே வேற்று மொழிகளை கலக்கின்றார்கள் தமிழ் மொழியிலே அழகான சொற்கள் இல்லையா? எத்தனை சொற்கள் இருக்கின்றன. இந்தக் கவிஞர்களுக்கு தமிழ் சொற்களுக்கு பஞ்சமா அல்லது தமிழ் மொழி தெரியாதவர்களா?


தமிழ் மொழியிலே பாடல் எழுதத் தெரியவில்லை என்றால் இவர்களுக்கு எதற்கு தமிழ் கவிஞர்கள் எனும் பட்டம். இவர்களுக்குத் இவர்களுக்குத் தெரிந்த வேற்று மொழிகளிலே பாடல்களை எழுதலாமல்லவா? ஏன் தமிழ் மொழியை கொலை செய்து தமிழ் மொழியின் சிறப்பை இல்லாதொழிக்க நினைக்கின்றனர்.



இவர்களால் எத்தனை இலக்கியப் பாடல்கள் கொச்சைப் படுத்தப்பட்டிருக்கின்றன. எத்தனை இலக்கியப் பாடல்களை தமது பாடல்களிலே புகுத்தி எமது தமிழ் மொழியினை கொச்சைப் படுத்தியிருக்கின்றனர்.எத்தனை தேவாரங்களை கொச்சைப் படுத்தியிருக்கின்றனர். வேறொரு மொழியிலே இவ்வாறு செய்ய அந்த மொழியினை சார்ந்தவர்கள் விடுவார்களா?


இவர்களால் தமிழிலே பாடல்களை எழுதுவதற்கு என்ன. தமிழ் மொழியிலே சொற்களுக்கு பஞ்சமா? அல்லது இவர்களுக்கு தமிழ்மொழி தெரியாதா? தமிழ் மொழியிலே பாடல் எழுதத் தெரியாதவர்கள் எதற்கு தமிழ் கவிஞர்கள் என்று தங்களை சொல்லவேண்டும். தமக்கு தெரிந்த மொழிகளிலே எழுதலாமே. எங்கள் தமிழ்மொழியை ஏன் சாகடிக்கவேண்டும்.


இன்று இரசிகர்கள் இதனைத்தான் விரும்புகிறார்கள் என்று சொல்லப்போகின்றார்களா? இரசிகர்கள் விரும்புவதை விட அவர்களால் திணிக்கப்படுகிறது. இரசிகர்களை பழக்கப்படுத்தி விட்டது யார்? இவர்களால் திணிக்கப்பட்டபோது ஆரம்பத்திலே சகித்துக் கொண்டு கேட்க ஆரம்பித்தனர். பின்னர் தங்களை பழக்கப் படுத்திக்கொண்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.


அன்று வேற்று மொழிக் கலப்பிலாத பாடல்கள் வெளிவரவில்லையா? அந்தப் பாடல்கள் இன்றும் மக்கள் மனதிலே இடம்பிடித்திருக்கின்றன. ஆனால் இன்றைய பாடல்கள் எவ்வளவு காலம் நிலைத்திருக்கின்றன? சினிமாப் பாடல்கள் இன்று தமிழ் மொழியினைக் கொலை செய்வதனை ஒரு தொடர் பதிவே எழுத முடியும்.


தமிழ் மொழியினை வளர்ப்பதற்காக தமிழ் மொழியிலே திரைப்படங்களின் பெயர்களை வைத்தால் வரி விலக்கு..... சரி திரைப்படங்களிலே தமிழ் மொழியும் எமது இலக்கியங்களும் கொலை செய்யப்படுவதை என்னவென்றே பார்க்காது. வேற்று மொழியிலே பெயர் வைப்பதை தடை செய்வதிலே என்ன இருக்கிறது? திரைப்படமே ஒட்டு மொத்தத்தில் தமிழ் மொழியை கொலை செய்கிறது.திரைப்பட பெயரினை தமிழில் வைத்து தமிழை கொலை செய்யும் திரைப்படங்களை என்ன செய்வது.


தமிழ் மொழி பற்றிப் பேசுகின்றவர்கள் திரைப்படப்பாடல்களும், திரைப்படமும் தமிழை கொலை செய்வதை பற்றி சிந்தித்திருக்கின்றார்களா?


இன்று தமிழ் மொழியை வளர்க்கின்ற திரையுலகம் சார்ந்தோரும். திரைப்படங்களும் இல்லாமல் இல்லை. தமிழ் மொழியினை கொலை செய்கின்றவர்கள் எமது மொழியின் வளர்ச்சிக்காக தமிழ் மொழியினை தமது பாடல்களிலே கொலை செய்வதனையாவது நிறுத்தி தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக நல்ல பாடல்களைத் தருவார்களா?
read more...

எவ்வளவோ எதிர்பார்ப்போடு வாக்களித்த தமிழ் மக்களுக்கு இந்தத் தமிழ் கூட்டமைப்பு செய்யும் பரிகாராம் என்ன?

கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சினால் மட்டக்களப்பு மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு களுதாவளை மகாவித்தியாலயத்தில் இன்று ( 07.09.2010)இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்நது குறிப்பிடுகையில், தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடாத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நாம் இல்லாதொழிக்க வேண்டும். இவர்களால் எம் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைத்ததும் இல்லை இனிமேலும் கிடைக்கப் போவதுமில்லை. எனவே மக்கள் இந்தத் தருணத்தில் சிந்தித்துச் செயற்பட வேணடும்.


மேலும் தொடர்நது பேசுகையில் எவ்வளவோ எதிர்பார்ப்போடு வாக்களித்த எமது தமிழ் மக்களுக்கு இந்தத் தமிழ் கூட்டமைப்பு செய்யும் பரிகாராம் என்ன? எதுவுமே இல்லை. காலங்காலமாக எம் மக்களை ஏமாற்றியே அரசியல் நடாத்தி இருந்திருக்கின்றார்கள். தற்போது ஏமாற்றிக் னெகாண்டே அரசியல் நடாத்துகின்றார்கள். உதாரணமாகச் சொல்லப் போனால் பத்திரிகைகளில் பேட்டி வழங்குவது. அதாவது அத்து மீறிய குடியேற்றம் செய்கிறது அரசு அதற்கு உடந்தையாக செயற்படுகிறது கிழக்கு மாகாண சபை என்று மக்களை திசை திருப்புவது. நான் இவர்களிடம் கேட்கின்றேன் கிழக்கில் எத்தனை அத்து மீறிய சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கு கிழக்கு மாகாண சபை எங்கே எப்போது அங்கிகாரம் வழங்கி இருக்கிறது. முடியுமானால் சொல்லட்டும். முதலில் அத்து மீறிய குடியேற்றம் என்பதன் வரைவிலக்கணத்தை இவர்கள் புரிந்து கொண்டு பேச வேண்டும். எது தொடர்பிலும் பூரணமான தரவுகள் இல்லாமல் வெறுமனே பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பதும் அத்தோடு அநாமதய இணையத் தளங்களுக்குச் செவ்வியளிப்பதுமாக இவர்களது வாழ்நாள் கழிகின்றது.


மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் எத்தனை அபிவிருத்தித் திட்டங்களைச் செய்திருக்கின்றார்கள் என்று நான் கேடட்கின்றேன். நிச்சயமாகச் சொல்லமுடியும் எதுவும் இல்லை என்று. தமிழ் தேசிய கூட்மைப்பின் தலைவரான சம்பந்தன் அவர்கள் இன்னும் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியினைச் செலவு செய்யவில்லை. காரணம் அவர் நாட்டில் இருப்பதேயில்லை. மட்டக்ளப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு எம்.பி கோயில்களில் பூஜை செய்து திரிகின்றார்.

அத்தோடு இருக்கும் இடம் எல்லாம் கோயில் கட்ட நிதி சேர்க்கின்றார். போதாமல் புலம்பெயர் தமிழ்களிடம் நிதி சேகரித்து கோயில் கட்டப் பாடுபடுகின்றார். பாருங்கள் மக்களே நன்றாகச் சிந்தியுங்கள் கோயில் என்பது எமது மக்களின் நிதியைக் கொண்டே எம்மால் கட்ட முடியும்.

இவர் வெளிநாட்டிற்குச் சென்று கோயில் கட்ட நிதி சேகரிக்கின்றார். மக்களுக்கு எத்தனையோ அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றது அதனைத் தீர்பதற்கு வழிகளைத் தேடாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டு அரசியல் லாபம் தேடுகின்றார்கள். இவர்களுக்கு எதிர்வருகின்ற காலங்களில் மக்கள் சரியான பாடத்தினைப் புகட்டி இவர்களை ஓரங்கட்ட வேண்டும் அப்போதுதான் எமது தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கம் என மிகவும் காரசாரமாக முதலமைச்சரது பேச்சு அமைந்திருந்ததது.
read more...

Saturday 11 September 2010

காதலில் உங்கள் குணம் எப்படி

காதலில் உங்கள்  குணம் எப்படி என்று இலகுவாக அறிந்து கொள்ளலாம். நீங்களும் காதலிக்கின்றிர்களா, அல்லது உங்கள் நண்பர்கள் காதலில் என்ன குணம் என்று அறிய ஆவலா? இலகுவாக பிறந்த திகதியை வைத்து அறியலாம்.

உ+ம் 2.2.1969 2+2+1+9+6+9+=29 இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 2+9=11 1+1=2 இதுதான் இவருடைய காதல் எண் {love number}

 லவ் நம்பர் ஒன்று ==>>சின்னம் ==>மான்

பெண்ணுக்குரிய குணம் ==>> வாழ்கையை நுனிக்கரும்பு வரை சுவைத்திட ஆர்வமுள்ளவர் வரப்போகும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்பவர் அப்படிப்பட்டவரை ஆதாரனை செய்யத் தவறமாட்டீர்கள் லட்சியப்போக்கும்,சாதுர்யமும்,நகைச்சுவையும் நிரம்பியவர்

ஆணுக்குரிய குணம் ==>> காதல் கல்யாணத்தில் நிறையத் தோல்வி jgகாண்பீர்கள் ஆனால் நீங்கள் மனைவியிடத்தில் விசுவாசத்தோடும்,பெருந்தன்மையோடும்,நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள் படுக்கையில் மனைவி நல்ல ஒத்துழைப்பை அளிப்பாள் மனைவியின் நடத்தையைக் கலர் கண்ணாடி கொண்டு பார்க்காமல் இருந்தால்,வாழ்க்கை சொர்க்கம்தான் மண்டைகனத்தையும் தவிர்த்தால் எல்லாம் இன்பமயம்

லவ் நம்பர் இரண்டு ==>> சின்னம் ==>> பட்டாம்பூச்சி
பெண் ==>> கணவர் எள் கொண்டு வா என்றால் எண்ணெய் இதோ என்று சொல்லும் சுபாவம் உடையவர்.அடிக்கடி உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டாற்சிணுங்கி நீங்கள் உங்கள் ஒவ்வொரு பணியையும்,உங்கள்அலங்காரத்தையும்,உங்கள் கணவர்{அ} காதலர் வாய் நிறைய மெச்ச வேண்டுமென்று எதிர்பார்பவர் நீங்கள் நல்ல நகைச்சுவை நிரம்பியவர் நீங்கள் இருக்குமிடத்தில் சதாசர்வ காலமும் கலகலப்புத்தான்.

ஆண் ==>> நீங்கள் ஒரு காதல் மன்ன்ன அதோடு உங்கள் காதலியின் முறையீடுகளை அனுதாபத்தோடு கேட்டு, தீர்வு காணத்தவறமாட்டீர்கள் மனைவியின் உடல் சுகத்தைப்பெற சந்திரனைக்கூட கையில் பிடிக்க முயல்வீர்கள்.ஆனாலும் கொஞ்சம் பொறாமைக் குணம் உண்டு.

லவ் நம்பர் மூன்று ==>> சின்னம் ==>>மீன் தின்னி பிராணி}{otter}

பெண் ==>> ஆண்மை நிறைந்தவன்னையே எதிர்பார்பீர்கள்,அழகுகூட இரண்டாம் பட்சம்தான்.நாகரீகத்தை எதிர்பார்பீர்கள்,வீட்டுப் பணியுடன்,வெளிப்பணியையும் திறம்பட வகிக்கக் கூடியவர் உச்சிமீது வானிடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் பாட்டுக்கு இலக்கணம் நீங்களேதான்.

ஆண் ==>> ஓர் உத்தம புருஷனின் கல்யாணகுணங்கள் அத்தனையும் பொருந்தியவர் எல்லோருக்கும் பரிசுகளையும் பண்டங்களையும் வாரி வழங்கும் கர்ணன் எல்லா விஷயங்களையும் பேதமின்றி விளையாட்டாகவே எடுத்துக்கொள்வார் சுவையான பேச்சாளர் பொறாமை என்றால் அது என்ன விலையென்று கேட்பவர்

லவ் நம்பர் நான்கு ==>> சின்னம் ==>> தேனீ

பெண் ==>> உங்களை நேசிப்பவரிடம் விசுவாசமாகவும்,நன்றியுள்ளவராகவும்,அனுசரணையுள்ளவராகவும்,இருப்பீர்கள்.நீங்கள் இருக்குமிடத்தில் கும்மாளமும் வேடிக்கையும் ,சிரிப்புந்தான்.

ஆண் ==>> நீங்கள் உணர்ச்சிவசப்படும் டைப் முன் யோசனையுடையவர் குழந்தைகளையும்,மனைவியையும் அதிகமாக நேசிப்பவர். விசாலமனமும்,பெருந்தன்னையும் நிறைந்தவர்.உங்கள் மனதை பறிகொடுத்தவருக்காக உயிரைக் கூட தியாகம் செய்யத்தயங்காதவர்.பரிபூரண சுதந்திரத்தை வழங்குபவர்.உங்களைக் கணவராக அடைய ரொம்ப கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

லவ் நம்பர் ஐந்து ==>> சின்னம் ==>> குருவி

பெண் ==>> பெண்மை பரிபூரணமாக குடிகொண்டுள்ளவர்.

இவரை மனைவியாக அடையப்போகிறவர்கள் ரொம்பவும் அதிஷரசாலிதான் உலகை ஒரு சுற்றுசுற்றிவர,பேராசை கொண்டவர் யாராவது சுவையாகச் சமைத்து வைத்தால் நாக்கை நொட்டை விட்டுக்கொண்டு சாப்பிடத் தயாராகும் உங்களுக்கு

சமையல்.வீட்டுவேலையெண்றால் எட்டிக்காய்தான் இவளை மனைவியாக அடைந்த நான் சந்தேகமில்லாமல் பாக்கியசாலிதான் என்று உங்கள் கணவர் நினைக்கும் அளவுக்கு நீங்கள் ஐர்க்பாட்.

ஆண்   ==>>  பெண்களிடையே நீங்கள் ரொம்பவும் பாப்புலர் டைப் உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம் உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும்,அளிக்கலாம் ,ஆனந்த்ததையும் அளிக்கலாம் உங்களுக்கு வாழ்கை ஒரு சவால்தான்! .

லவ் நம்பர் ஆறு ==>> சின்னம் ==>> வாத்து

பெண் ==>> குப்பை மேட்டைக்கூட கோவிலாக்கும் கலைநயம் படைத்தவர் என் கணவர்,என் கு்ழந்தைகள்ளாதான் உலகம் என்று வாழ்ந்து காட்டக் கூடிய உண்மையான தாய் நீங்கள் அதது அதனிடத்தில் இருக்க வேண்டுமென்பதில் தீவிரம் காட்டுவீர்கள். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற கொள்கையால் கணவனைத் திக்குமுக்காட வைப்பீர்கள் ஓர் ஆதர்ச மனைவி என்பதற்கு உண்டான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் .

ஆண்  ==>> காதல் பவித்திரமானது,பெண்ணை மலரெனக் கையாளும் பாங்குடையவர் உடலைக் காயப்படுத்தக் கூட உங்கள் மனம் இடம் கொடுக்காது. அழகை ஆராதனை செய்யும் அதே சமயத்தில் கவிதைகளையும் எழதித் தள்ளுவீர்கள் மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற வாசகம் உங்களுக்காகவேதான்.

லவ்நம்பர்  ஏழு  ==>> {சின்னம் ==>>ஆந்தை}

பெண்  ==>> உடுப்பது,உண்பது,பேசுவது,காதலிப்பது எல்லாமே ஏனோதானோதான். பணம்,பதவி,பகட்டு எல்லாமே உங்களுக்கு அனாவசியம்தான்....சராசரிப் பெண்ணின் ஆபாசங்களிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கும் ஆபூர்வப்பிறவி நீங்கள் எந்த ஒரு விக்ஷயத்திலும் கட்டுப்பாடற்ற தனிக்காட்டு ராணி நீங்கள் வெளிவேக்ஷம் போடத்தெரியாத வெகுளிடைப் நீங்கள் மற்றவர்களின் கருத்து திணித்தலை ஒதுக்கி தன்னிச்சையாக நீங்கள் செயல்படும்பொழுது அடங்காப்பிடாரி என்ற பட்டத்தைப் பெறுவீர்கள்.

ஆண் ==>>சதாசர்வகாலமும் கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கும் டைப் அதோடு புத்தகமும் கையுமாய் காரணகாரியத்தில் ஆராய்ச்சில் மூழ்கிவிடுவீர்கள். ஒரு பெண் உங்களைக் காதலிக்க நேர்ந்தாலும் அவள் என்னை ஏன் காதலித்தாள்,எந்த அம்சம் பிரதானம் ,எந்த அடிப்படையில் காதலித்தாள் என்ற ஆராய்ச்சியில் மூழ்கி,அனுபவிக்க வேண்டியதையெல்லாம் கைநழுவ விட்டுவிடுவீர்கள்.திருமணவாழ்கை வெற்றியடைவது அதிக்ஷடத்தைப் பொறுத்த்து.

லவ்நம்பர் எட்டு ==>> சின்னம் ==>>எறும்பு

பெண் ==>> களைபொருந்திய,கவர்ச்சி நிரம்பிய முகம் முதல் சந்திப்பில் நீங்கள் திமிர்பிடித்தவர் போல் பழகுவீர்கள்,ஆனால் பழகப்பழகத்தான் நீங்கள் இனியவர் என்று நிரூபிப்பீர்கள். இக்ஷடப்பட்டதை அடையத்தவறமாட்டீர்கள்.அதிகாரமும்,பணமும் உள்ளவரைத் தான் நீங்கள் தேர்தெடுப்பீர்கள் நீங்கள் உணர்ச்சிவசப்படும்பொழுது ஒருவரை இமயமலையின் உச்சியில் கொண்டு உட்காரவும் வைப்பீர்கள். அல்லது அவரை அதலபாதாளத்திலும் தள்ளுவீர்கள்.

ஆண் ==>> காதலுக்காக ,சாம்ராஐயத்தை இழந்த வின்ஸ்டர் கோமகனை உங்களுக்கு ஒப்பிடலாம் நல்ல தாம்பத்தியத்துக்கு நந்தியாக நிற்பது உங்களின் பொறாமைக்குணம்தான் சமூக‌அந்தஸ்திலும், பொருளாதார மட்டத்திலும் உயர்ந்து நிற்கும் நீங்கள் சொர்க்க வாழ்க்கை அடைவீர்கள். வெற்றிகளும்,தோல்விகளும் அடுக்கடுக்காக எதிர்பட்டாலும்,சிறிதும் மனம் தளராமல் லட்சியவாதியாகச் செயல்பட்டு வெற்றியின் சிகரத்தை எட்டிப்பிடித்திடுவீர்கள்.நீங்கள் பிறக்கும்பொழுதே சாமர்தியமும்,புத்திசாலித்தனமும் உங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் நீங்கள் வெற்றித்திருமகனாக விளங்குவதில் வியப்பில்லை.

லவ் நம்பர் ஒன்பது ==>>சின்னம் ==>>கீரிப்பிள்ளை

பெண் ==>> இவளுடன் சேர்ந்து வாழும் வாழ்கைதான் சொர்க்கம் ,என்று துணைவர் கூறும் அளவுக்கு நீங்கள் சலிப்பைத் தராதவர் காதல் உணர்ச்சி மிக அதிகமாக உள்ளவர் பள்ளி நாள் நட்பையும், பள்ளியறை நட்பையும் எப்பொழுதும் நிறுத்திக் கொள்பவர்.

ஆண் ==>>உங்களது ஏகபத்தினி விரதத்துக்கு பங்கம் ஏற்படுத்த அநேக சூழ்ச்சிகள் வீசப்படும் கவனம் தேவை விசுவாமித்திரர்_மேனகையை நினைவில் கொண்டு உங்கள் வாழ்கைத் துணையை எல்லா வகைகளிலும் திருப்தி செய்வீர்கள். எறும்பின் சுறுசுறுப்போடும்,லட்சியத்தோடும்,உறுதியோடும் செயல்பட்டு அடையவேண்டியதெல்லாம் அடைவீர்கள் எந்தப் பணியை ஒப்படைத்தாலும் திறம்பட நிர்வகித்து நல்ல நிர்வாகி என்ற பாராட்டைப் பெறுவீர்கள்.அரசியலில் நுழைந்தால் மக்கள் அபிமானத் தலைவனாக்க கொடிகட்டிப் பறக்கலாம்.

ஆதாரம் _the book of love

நன்றிகள் கலா..
read more...