Monday 28 November 2011

கிழக்கு மாகாண முதலமைச்சரின் வரவு செலவுத் திட்ட உரை


கௌரவ தவிசாளர் அவர்களே,
கிழக்கு மாகாண சபையின் 2012ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தினை இன்று இச்சபையின் முன் சமர்ப்பிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
கிழக்கு மாகாண சபையானது உத்வேகத்துடன் இயங்க ஆரம்பித்த நாள் முதல் தேசிய கொள்கைகளுடன் இணைந்த வகையில் துறைசார் உபாயங்கள் மற்றும்புதிய இலக்குகளுடன் கூடியஅபிவிருத்தி திட்டங்களுடன் எமது மாகாணமானது பல ஆக்கப+ர்வமான அபிவிருத்திகளை அடைந்து கொண்டிருக்கின்றது. பயனுறுதிமிக்க வழிகாட்டல்களுடன் இம் மாகாணத்தில் அடுத்து வரும் ஆண்டுகளில் பிராந்திய அபிவிருத்தியுடனான உயர் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு ஒருபலமான அடித்தளமும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் இச்சபையில் பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
முன்னேற்றப் போக்கு
இத்தகைய பின்னணியில், இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் கிழக்கு மாகாணத்தின்பங்களிப்பானது கணிசமான அளவில் அதிகரித்து2010 ஆம் ஆண்டில் 5.9 வீதத்தை அடைந்திருந்தது.இதன் மூலம் மாகாண ரீதியில் 7ஆம் இடத்தில் இருந்த எமது மாகாணம் 6ஆம் இடத்திற்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமன்றி 2007 ஆம் ஆண்டு 185,000மில்லியன் ரூபாவாக இருந்த எமது மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2010 ஆம் ஆண்டில் 332,000மில்லியன் ரூபாவாக அதிகரித்திருந்ததுடன் இது எமது மாகாணத்தின் வருடாந்த தனிநபர் வருமானத்தினை 212,000 ரூபாவாக அதிகரிக்கச்செய்திருந்தது என்பதும்குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும்.
இப்பெறுபேறுகளை அடைவதற்கு கௌரவ ஆளுநர், மாகாண சபை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட, பிரதேச மட்ட நிறுவனங்கள் எம்முடன் கைகோர்த்து இயங்கியதுடன் அவர்களின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தனர். மேலும்,எதிர்வரும் ஆண்டுகளிலும் எமது சாதனைப் பயணம் தொடர, இவர்களது ஒத்துழைப்பு என்றென்றும் எமக்கு கிடைக்குமென எதிர்பார்க்கின்றேன்.
கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டம்
“மகிந்த சிந்தனை – எதிர்காலத்திற்கான தொலைநோக்கு”என்ற அபிவிருத்திக் கொள்கையில்குறிப்பிடப்பட்டுள்ள பல்வகைத்தன்மையுடைய சமநிலையான பிராந்திய அபிவிருத்திஎன்பதுடன் எமது மாகாணத்திற்குரித்தான பிரத்தியேக தேவைகள், வளங்கள் ஆற்றல்கள் என்பவை உள்வாங்கப்பட்ட கிழக்கு மாகாண அபிவிருத்திச் செயற்பாடுகள் மேலும் புதுவேகத்துடன் தொடரப்படவுள்ளன.  இந்த வகையில் “மனித விழுமியங்கள், நல்லாட்சி மற்றும் வாழ்க்கைத்தரம் என்வற்றில் மிகச் சிறந்த பிரதேசமாக கிழக்கு மாகாணம் உருவாகும்” என்றதொலை நோக்கினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட கிழக்கு மாகாண அபிவிருத்தித்திட்டம் என்ற ஐந்து ஆண்டு திட்ட ஆவணத்தினை உங்கள் முன்னிலையில் இன்று வெளியிட்டு வைப்பதில் மிகவும் பெருமிதம் அடைகின்றேன்.
இத்திட்டத்தில்; 06 பிரதான அபிவிருத்தித் துறைகளின் கீழ் சுமார் 378,000மில்லியன் ரூபா பெறுமதியான முதலீட்டுத் தேவைகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இவற்றுக்கான நிதியீட்டமானது மத்திய அரசிலிருந்தும், கொடை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமும் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளில்; கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு துறைக்குமான இலக்குகள்  நிர்ணயிக்கப்பட்டு அவற்றினை அடைவதற்கான உபாயங்களும் வரிசைப்படுத்தப்பட்ட கருத்திட்ட சுருக்கங்களும் இதில்உள்ளடக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் ஆண்டுகளில்இவற்றை அடையப்பெறும் வகையில் எமது மாகாண அபிவிருத்திச் செயற்பாடுகள் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.
கிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் அனைவருக்கும் வேண்டிய நன்மைகளை  உறுதிப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளஇத்திட்டங்களுக்கு தேவையான முதலீடுகளை தேடிப்பெறுவதிலும் அவை நல்ல முறையில் அமுலாக்கப்படுவதிலும் இந்த மாகாணசபை ஒன்றிணைந்து செயற்படுவதற்குநாம் உறுதிப+ணுவதுடன் இதனுடன் தொடர்புடைய சகல அபிவிருத்தி பங்குதாரர்களினதுஒத்துழைப்பையும்வேண்டுகின்றேன்.
மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு
2012 ஆம் ஆண்டிற்கென நிதி ஆணைக்குழுவினால் கிழக்கு மாகாண சபைக்கு மீண்டெழும் செலவினங்களிற்கென 11,385 மில்லியன் ரூபாவும்மூலதனச்செலவினங்களிற்கென 1,192 மில்லியன் ரூபாவும் வெளிநாட்டு உள்நாட்டு நிதியளிப்புகளுடனான விசேட கருத்திட்டங்களிற்கென 4,455 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
மீண்டெழும் செலவின ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக, அரச வருமான சேகரிப்பு என்றவகையில் மத்திய அரசாங்க வருமான சேகரிப்பிலிருந்து 1,600 மில்லியன் ரூபாவும் மாகாண சபை வருமான சேகரிப்பிலிருந்து 636 மில்லியன் ரூபாவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறாக மொத்தம் 13,621 மில்லியன் ரூபா மாகாண சபையின்மீண்டெழும் செலவினங்களிற்காக அடுத்த ஆண்டில் பயன்படுத்தப்படும். இதில் 80 வீதமான நிதி மாகாண அரச ஊழியர்களின் சம்பளக்கொடுப்பனவுகளிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்த மூலதனச்செலவினத்தில் 74 மில்லியன் ரூபா கௌரவ மாகாணசபை உறுப்பினர்களின் அபிவிருத்திச்செயற்பாடுகளுக்கு நேரடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 193 மில்லியன் ரூபா மாகாண நிறுவனங்களின் அபிவிருத்திக்கும் சேவை வழங்கல் மேம்பாட்டிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் விசேட கருத்திட்டங்களிற்கு மேலதிகமாக, துறைசார் அபிவிருத்தி என்ற வகையில் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட 925 மில்லியன் ரூபா உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் உற்பத்திதுறைகளிடையேசிறிய நடுத்தர திட்டங்களிற்கென முன்னுரிமை அடிப்படையில் பகிரப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணசபையின் அபிவிருத்தி நிதிப்பாவனையின்போது தேசிய, மாவட்ட, உள்@ர் மட்ட நிறுவனங்களுடன்ஆக்க பூர்வமான தொடர்புகளைப்பேணி, தேவை ஏற்படுமிடத்து அரச துறையுடன் தனியார் துறையையும் இணைத்;து பயன்மிக்க திட்டங்களை செயற்படுத்துவதில்  நாம் கவனம் செலுத்துவோம்.
மேலும், முன்வைக்கப்படுகின்ற நிதி ஒதுக்கீடுகளினால் மாகாண மக்கள் யாவரினதும் முன்னேற்றத்திற்காக பயனுள்ள தரமான பெறுபேறுகள் அடையப்படுவதை நாம் கூடிய கவனத்துடன் உறுதிசெய்வோம். இது குறிப்பாக மக்களைஆரோக்கியமுள்ளவர்களாக வைத்திருத்தல், அவர்களின் அறிவையும் சிறப்புத்திறமைகளையும் விருத்தி செய்தல், உற்பத்தி தொழில்வாய்ப்பு மற்றும்; வருமானங்களில் அதிகரிப்பை ஏற்படுத்துதல்,பொது வசதிகளை ஏற்படுத்தல் என்பவற்றினூடாக மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துவதை அடிப்படையாக கொண்டமையும்.
சமமான பிராந்திய அபிவிருத்தி நோக்கிய இடைக்கால திட்டம்
பொருளாதார அபிவிருத்தியில் ஒவ்வொரு குடும்பங்களும் சமமான நன்மைகள் பெற்றுக்கொள்வதனை உறுதிப்படுத்துதல் என்ற கொள்கைக்கு அமைவாக எமது மாகாணத்திலும் சமமான அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி பின்தங்கிய பிரதேசங்களில் தனித்துவமான அபிவிருத்தி முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.இதன் கீழ் உற்பத்தி, தொழில் துறைகளை விருத்தி செய்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி பின்தங்கிய பிரதேச மக்களின் வருமானத்தை அதிகரிப்பதனூடாக அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வழியமைக்கப்படுகிறது. வறிய மக்களின் ஆற்றல், பிரதேச பௌதீக வளங்களை நிலைபேறான அபிவிருத்திக்காக சிறப்பாக உபயோகப்படுத்துதல் என்பது இதன் விசேட அம்சமாகும்.
இவ்விசேட நோக்கில், 2012 ஆம் ஆண்டில் 03 மாவட்டங்ளிலும் சகல இனங்களையும் உள்ளடக்கிய வகையில் பொருத்தமான படிமுறைகளின் மூலம் 09 பின்தங்கிய கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு மொத்தமாக 120 மில்லியன் ரூபா பெறுமதியான சிறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
உற்பத்தித்துறை
கிழக்கு மாகாண மொத்த தேசிய உற்பத்தியில் 29 சதவீத பங்களிப்பினை விவசாயத்துறைகொண்டிருக்கின்றது.
இந்நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் 24 வீத பங்களிப்பினை எமது மாகாணம்கொண்டிருப்பதுடன் 2006 ஆம் ஆண்டில் 07 இலட்சம் மெற்ரிக் தொன்னாக இருந்த நெல்லுற்பத்தி 2009ஆம் ஆண்டு 11 இலட்சம் மெற்ரிக் தொன்னாக அதிகரித்தமையை  எமது மாகாணத்தின் சாதனையாக நான் குறிப்பிட விரும்புகின்றேன். எனினும், இவ்வருட ஆரம்பத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவினால் கிழக்கு மாகாண நெற்செய்கை பெரும் பாதிப்புக்குள்ளானது துரதிஸ்டமானதாகும். மேலும் ஏனைய உணவுப் பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில்இம்மாகாணமானது கடந்த காலங்களில் அதிகரித்த உற்பத்தி இலக்குகளை எய்தியுள்ளதையிட்டும் நான் மகிழ்வடைகின்றேன்.
நாட்டின் கால்நடை வளத்தில் 30 வீதத்தினை கொண்டுள்ள எமதுமாகாணம், மொத்த பாலுற்பத்தியில் 17 வீத பங்களிப்பினையும் வழங்குகின்றது. 2006 ஆம் ஆண்டு ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் லீற்றர் ஆக இருந்த நாளாந்த பாலுற்பத்தி 2010 ஆம் ஆண்டில்ஒரு இலட்சத்து எழுபத்து ஏழாயிரம் லீற்றர் ஆக அதிகரித்தது விசேடஅம்சமாகும். மேலும் இக்காலப் பகுதியில் கால்நடைத் துறையைவிருத்தி செய்யும் நோக்கில் புதிதாக 21 கால்நடை வைத்திய நிலையங்கள், 7 பால் பதனிடும் நிலையங்கள், 14 பால் சேகரிப்பு நிலையங்கள் மற்றும் 2 விலங்கு நோய் ஆய்வு நிலையங்கள் கிழக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த 3 ஆண்டுகளில்; நன்னீர் மீன் உற்பத்தியானது அதிகரித்து இத் துறையானது சிறந்த வளர்ச்சியினை எய்தியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நன்னீர் மீன்பிடித்துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிதாக ஓர் மீன்பிடி அபிவிருத்திப்பிரிவு விவசாய அமைச்சில் ஸ்தாபிக்கப்பட்டு  இதன் சேவைகள்3 மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதை இங்குகுறிப்பிடவிரும்புகின்றேன்.
கைத்தொழில் துறையானது அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தின் பிரதான தொழிற்துறையாக விருத்தியடைந்து வருகின்றது. புடவைக்கைத்தொழில், தும்புக் கைத்தொழில் மற்றும் கைப்பணிப் பொருட்கள் உற்பத்தி போன்ற துறைகளில் சந்தைப்படுத்தல் வசதிகள் மேம்படுத்தப்பட்டும் உயர் உற்பத்தி தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டும் வருகின்றன.
உற்பத்தித்துறை அபிவிருத்தியில் கிழக்கு மாகாண சபையானது உயர் தொழில்நுட்ப பயிற்சிகள், இயந்திரமயமாக்கல்,உற்பத்தி; பெருக்கம், விரிவாக்கல் சேவை விஸ்தரிப்பு, உறுதியான உணவுப் பாதுகாப்பு,பெறுமதி சேர்க்கை,சுயதொழில் ஊக்குவிப்பு,உற்பத்தி திறன், முகாமைத்துவ பயிற்சி,அதிகரித்த வருமானம்; என்பவற்றில் அதீத கவனம் செலுத்திவருகின்றது.  இதற்கமைய கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி, விவசாய அபிவிருத்தி,கிராம அபிவிருத்தி மற்றும்; உல்லாச பயண கைத்தொழில் அபிவிருத்தி போன்ற துறைகளில் 2012 ஆம் ஆண்டில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.
இயற்கைப்பசளைப் பாவனை,தரமான உற்பத்தி;, அறுவடைக்குப் பின்னரான சேதங்களை குறைத்தல் போன்றவற்றிற்குஉரிய ஆலோசனைகளுடன் பொருத்தமான நடவடிக்கைகள் எமது நடைமுறை திட்டங்களில் உள்வாங்கப்படும். பயிர்ச்செய்கைக்கு அவசியமான நீர்வசதி போதியளவில் கிடைப்பதை நீர்ப்பாசனத்துறையினூடாக உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் எமக்கு ஏற்படுகிறது என்பதை நான் இங்கு வலியுத்திக்கூறவிரும்புகின்றேன்.
கிராமிய கைத்தொழில்களை இலகுவாக மேற்கொள்ளவும் விசேட கைத்தொழில்கள் சம்பந்தமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பயிற்சிகளை வழங்கவும் பொருத்தமான திட்டங்களை எமது மாகாண சபை எதிர்வரும் ஆண்டுகளில்; நடைமுறைப்படுத்தவுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில், மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்பயிற்சி ஆணைக்குழு கிழக்கு மாகாணசபையுடன் இணைந்து கிழக்கு மாகாணத்திற்கென தொழிற்கல்வி பயிற்சித் திட்டம் (ஏநுவு Pடயn) ஒன்றினை தயார் செய்துள்ளது என்பதை இங்கு கூறுவது பொருத்தமானதென நான் நினைக்கின்றேன்.
இத்திட்டத்தின்கீழ் கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஆகக் குறைந்தது ஒரு தொழிற்கல்வி நிலையமேனும் அமையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனூடாக பாடசாலை இடை விலகியோருக்கும் தொழிலற்ற இளைஞர் யுவதிகளுக்கும் பொருத்தமான தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி மேற்கொள்ளப்பட்டு அவர்களை தொழிற்சந்தைக்கு தயார் செய்வதோடு புதிய தொழில் முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டு வேலையற்றோர் வீதம் 5மூஇற்குக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலாத்துறை விருத்திக்கு பொருத்தமான வளங்கள் நிறைந்துள்ள எமது மாகாணத்தில் இத்துறையின் தேசிய கொள்கைக்கு அமைவாக எமது மாகாண சபை சாத்தியமானதும் அடையாளங்காணப்பட்ட இடங்களில் சிறிய நடுத்தர உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்களை மாகாண நிதியினூடாகவும் அரச தனியார் துறை ஒத்துழைப்புடனூடாகவும் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். மேலும், சுற்றுலா கைத்தொழில் விருத்திக்கு தேவையான தொழில் தகைமையுடன் கூடிய மனித வளங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்;பட்டு வருகின்றன. அடுத்து வரும் ஆண்டுகளிலும் இத்துறையில் அதிக கவனம் செலுத்துவதுடன் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதும் எமது நோக்கமாகும்.
பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகள்
பாரிய அளவிலான பொருளாதார உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்கள் மத்திய அரச நிறுவனங்களினால் எமது மாகாணத்தையும் உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன. தேசிய கொள்கைக்கு அமைவாகவும் கிழக்கு மாகாணத்தில் நடைமுறையிலுள்ள தேசியத்திட்டங்களுடன் இணைந்த வகையிலும் கிழக்கு மாகாண சபை பல்வேறு உட்கட்டமைப்புத்துறை நிகழ்ச்சித் திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.
2009 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை 218 மில்லியன் ரூபா மாகாண நிதி ஒதுக்கீட்டில் சுமார் 172 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் செப்பனிடப்பட்டுள்ள அதேவேளையில் இவற்றுக்கு மேலதிகமாக வெளிநாட்டு நிதியுதவியுடன்;; 315 கிலோ மீற்றர்நீளமான கிராமிய வீதிகளும் 202 கிலோ மீற்றர்நீளமான மாகாண வீதிகளும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
இக்காலப்பகுதியில் வீடமைப்புக்கென 44 மில்லியன் ரூபா மாகாண நிதி ஒதுக்கீட்டில் 203 வீடுகள்; நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 3 மாவட்டங்களிலும் 443 குடிநீர்க் கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டு கிராமப்புறங்களில்; குடிநீர் தேவைகள் ஓரளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன.
கிராமிய மின்சாரத்திற்கென 21.8 மில்லியன் ரூபா செலவில் 76 சிறிய வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சமூக உட்கட்டமைப்பு வசதிகளும் சேவைகளும்
கிழக்கு மாகாண சபை பதவியேற்ற காலத்தின் பின்னர் பல்வேறு கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகள் எம்மால் முன்னெடுத்து செல்லப்பட்டதன் விளைவாகவும் கிராமப் புறப் பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர், வள பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ததாலும் எமது மாகாணத்தில் பொதுப் பரீட்சை பெறுபேறுகள் படிப்படியாக முன்னேற்றத்தினை அடைந்திருக்கின்றது என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் புதிதாக 04 கல்வி வலயங்கள் ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை 02 கோட்டக்கல்வி அலுவலகங்களும் திறந்துவைக்கப்பட்டன. இக்காலப்பகுதியில் புதிதாக 39 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் இதுவரை இயங்காமலிருந்த 45 பாடசாலைகள் மீள் திறந்துவைக்கப்பட்டன. அத்துடன் 135 பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டன.
கல்வி பெறுபேறுகளை எடுத்து நோக்குமிடத்து இக்காலப்பகுதியில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளிற்கு மேல் பெற்ற மாணவர்களின் வீதமானது முறையே 18, 35, 41 என தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்துள்ளதை இங்கு குறிப்பிடவிரும்புகின்றேன். இவ்வாறே  எமது மாகாணத்தில் க.பொ.த உயர்தர வகுப்பிற்கு தகுதி பெறும் மாணவர்கள் வீதமானது பல்Nறு சவால்களின்மத்தியிலும் 2008 ஆம் ஆண்டில் 40.6மூஇல்  இருந்து 2011 ஆம் ஆண்டு 54.7மூ ஆக வளர்ச்சி அடைந்துள்ளது.
தேசியமட்டத்துடன் ஒப்பிடும்போது மட்டக்களப்பு மத்தி, கல்முனை, அக்கரைப்பற்று, திருகோணமலை, திருக்கோவில் ஆகிய வலயங்களின் கல்வி வளர்ச்சி அண்மைக் காலங்களில் தேசிய மட்ட சராசரியைவிட அதிகமாகக் காணப்படுவதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டவிரும்புகின்றேன். எமது மொத்த மாகாணத்தின் நிலைதேசியமட்டத்துடன் ஒப்பிடும்பொழுது குறைவான நிலையில் இருப்பினும், இம்மாகாணத்தில் கல்வி நிலை படிப்படியாக உயர்ந்து செல்வதால் எதிர்காலத்தில் தேசியமட்ட சராசரியினை நாங்கள் அடையக்கூடியதாக இருக்குமென நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றேன். இத்துடன் பல்கலைக்கழகம் செல்வதற்குத் தகுதியானோர் வீதமானது 60மூ இற்கு மேலாக காணப்படுவதும் ஒரு சிறந்த பெறுபேறாகவே நான் கருதுகின்றேன்.
எமது மாகாணத்தில் பொதுவாக சுகாதார, மனித நல குறிகாட்டிகள் தேசிய மட்டத்துடன் ஒப்பிடும் அளவிற்கு சிறப்பாக காணப்படுகின்றன. சுகாதாரத்துறையில்;; 2008 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்;படுத்தும் பொருட்டு 03 வெளி நோயாளர்கள் பிரிவு கட்டிடங்களும், 26 வைத்திய, சத்திர சிகிச்சை மற்றும் மகப்பேற்று விடுதிகளும் 29 சுகாதார உத்தியோகத்தருக்கான விடுதிகளும், 10 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் புதிதாக கட்டப்பட்டு சிறப்பாக இயங்குவதுடன் மேலும் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கு பாரிய உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இக்காலப்பகுதியில் 35 அம்புலன்ஸ் வண்டிகளும் 48 வெளிக்கள வாகனங்களும் 32 அலுவலக வாகனங்களும் பெற்றுக்கொள்ளப்பட்டு மாகாணத்தில் சுகாதார, மருத்துவ சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதை பெருமையுடன் அறிவிக்கின்றேன். மேலும்; 52 வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப்பிரிவுக்கான மருத்துவ உபகரணங்களும் 27 வைத்தியசாலைகளுக்கு ஆய்வுகூட உபகரணங்களும் மற்றும்; 80 வீதமான சிகிச்சை நிலையங்களிற்கு அத்தியவசிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு எமது மாகாண வைத்தியசேவைகள் சிறப்பான முன்னேற்றத்தினை கண்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக கட்டப்பட்ட 6 வைத்தியசாலைகளுடன் மேலும் 8 வைத்தியசாலைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டதோடு 100 க்கு மேற்பட்ட வைத்திய உத்தியோகத்தர்கள் உட்பட ஏறக்குறைய 700 நியமனங்களும் வழங்கப்பட்டிருந்தன. இக்காலப்பகுதியில் 4 வைத்தியசாலைகள் ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டும் உள்ளன.
சுதேச மருத்துவத்துறையில் 3 பஞ்சகர்ம வைத்தியசாலைகள், 27 ஆயுர்வேத மத்திய மருந்தகங்கள் கட்டப்பட்டும் சுதேச மருந்து உற்பத்திப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டும் இவற்றிற்கான போதிய ஆளணிகள் வழங்கப்பட்டு; இயங்கி வருகின்றதையும் நான் இங்கு மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகின்றேன்.
மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையிலும் வைத்திய சேவையிலும் ஏற்பட்ட முன்னேற்றமானது மக்களின் சுகாதாரஆரோக்கிய நிலைகளில் கணிசமான முன்னேற்றத்தை காட்டியதுடன் மருத்துவ சிகிச்சைக்காக வெளிமாவட்டங்களிற்கு செல்ல வேண்டிய நிலை மாறி உள்ளுர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்ற சூழ்நிலைகளை அதிகரித்திருந்தது.
சமூக உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் இத்தகைய பின்னணியுடன் மேலும் கிழக்கு மாகாண சபையானது மாகாண மாணவர்களின் கல்வியை உயர்ந்த தரத்திற்கு கொண்டு செல்லவும் ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்கவும் அனாதைகள் ஆதரவற்றோர்களைபராமரிக்கவும் வயதானவர்களின் சமூக பாதுகாப்;பு மற்றும் நலிவுற்றோர் நலன்புரி நடவடிக்கைகள் என்பவற்றிற்கும் பொருத்தமான செயற்திட்டங்களை வடிவமைத்து 2012 இல் அமுலாக்க நடவடிக்கைகளை எடுக்கும்.
விரைவான சமூக பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான திறமைகளையும் தொழில்நுட்ப அறிவையும் கல்வி முறைக்கூடாக நிறுவுதல் என்ற கொள்கைக்கேற்ப மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப கல்வி,மாணவர்களை தொழில் சந்தைக்கு தயார்ப்படுத்தல், ஆசிரியர்களின் ஆற்றல் மற்றும் தரம் என்பவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். அவ்வாறே நோயற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் சுதேச மற்றும்; மேலைத்தேய வைத்தியப் பிரிவுகளினது ஒன்றிணைந்த சேவை வழங்கல், நோய்களிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பளித்து அவர்களின் ஆரோக்கியத்தைப் பேணுதல், விளையாட்டு மற்றும் உடற்;பயிற்சிகள்; என்பவற்றிலும் கவனம் செலுத்தப்படும்.
விசேட செயற்திட்டங்கள்
மாகாண சபை நிதியீட்டத்துடனான நிகழ்ச்சிதிட்டங்களிற்கு புறம்பாக மத்திய அரச நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் பற்றியும் மற்றும் மாகாண சபை நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் வெளிநாட்டு நிதியுதவியுடனான விசேட கருத்திட்டங்கள் பற்றியும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது என நான் நம்;புகின்றேன்.
பல புதிய கருத்திட்டங்கள் எமது பிரதேச சமகால அரசியல் மற்றும் ஜனநாயக சூழ்நிலைகளின் அடிப்படையில் உருவானவையாகும். இவற்றில் பாலங்கள் உட்பட நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, குளங்கள் புனரமைப்புடனான நீர்ப்பாசன திட்டங்கள், நீர்;வழங்கல் போன்ற பாரிய திட்டங்களுடன் மாகாண கிராமிய வீதிகள் அபிவிருத்தி, கிராமிய நீர்வழங்கல்,உள்ளுராட்சி சேவை வழங்கல்; மற்றும் சிறு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாகாண, உள்ளுராட்சி நிறுவனங்களின் சேவைகளை பலப்படுத்தும் தொழில்நுட்ப உதவிகளையும் இங்கு குறிப்பிட்டு கூற விரும்புகின்றேன்.
இவற்றின் பலாபலன்களை கிழக்குமாகாண மக்கள் தற்போது அனுபவித்துக் கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியதொன்றாகும். இவ்வாறே இவ்வாண்டின் ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வீதிகள் குளங்கள் நீர்ப்பாசன கட்டமைப்புக்கள்; என்பவற்றை  புனர்நிர்மாணம் செய்வதனூடாக மக்களின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதை நோக்காக கொண்ட கருத்திட்டம்; விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகின்றேன்.
நல்லாட்சி
இத்திட்டங்கள் தவிர கிழக்கு மாகாணசபையினால் முன்னெடுக்கப்படும் மற்றும் முன்மொழியப்படும்; ஏற்பாடுகளுக்கு செயல்வடிவம் கொடுக்க ஏதுவாக பல்வேறு சட்டமூலங்கள் தயார்  செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் ஏனைய மாகாணங்களில் நடைமுறையிலுள்ள பொருத்தமான சட்டமூலங்களை பெற்று எமது மாகாணத்திற்கு ஏதுவான முறையில் மாற்றியமைக்கும் செயற்பாடுகளும்; மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாகாண வளங்களை அடிப்படையாக கொண்ட பிரதேச அபிவிருத்தி மற்றும் மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் சேவைகள் என்பவற்றை முன்னிறுத்தி மாகாண, உள்ளுராட்சி நிர்வாக கட்டமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு அது மேலும் செயற்திறன் மிக்கதாகவும் உத்வேகமுடையதாகவும் அமைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல இன மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்ற பிரதேசம் எமது கிழக்கு மாகாணம். இன நல்லுறவை மென்மேலும் வளர்த்து கொள்ளும் வகையிலேயே மாகாண சபையின் கொள்கைகள், நடைமுறைகள் அமையும். இவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடு, சமத்துவம் என்பவற்றை எமது சபை உறுதிசெய்யும். நிர்வாக, அபிவிருத்தி நடைமுறைகளின் ஒவ்வொரு கட்டத்திலும் இவற்றை கருத்தில் கொண்டு இக்கொள்கையை சமூகத்தின் அடிமட்டம் வரை எடுத்துச்செல்வதற்கு எல்லோரும் கைகோர்த்து செயற்பட அனைவருக்கும் அன்புடன் அழைப்பு விடுக்கின்றேன்.
கௌரவ தவிசாளர் அவர்களே!
கிழக்கு மாகாண சபைக்கென 2012 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினைக் கொண்டு மீண்டெழும் மற்றும் மூலதன செலவுகளை மேற்கொள்ளும் முகமாக தயாரிக்கப்பட்ட இவ் வரவு செலவுத்திட்ட யோசனைகளை கிழக்கு மாகாண மக்களின் வளர்ச்சியிலும் நலனிலும் கூடிய கவனம் செலுத்தி வெற்றிகரமாகவும் பயனுறுதிமிக்கதாகவும் நிறைவேற்ற கௌரவ உறுப்பினர்களினதும் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் ஒருமுகமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வேண்டிக்கொண்டு இவ்வுரையை செவிமடுத்த தங்கள் எல்லோருக்கும் நன்றி; கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.
நன்றி
வணக்கம்
2012ம் வருடத்திற்கான கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் 23 மேலதிக வாக்குகளால் வெற்றி கண்டது. மீண்டெளும் செலவீனமாக 13521 மில்லியனும் மூலதனச் செலவுகளாக 1671 மில்லியனும் அடங்கலாக 15192 மில்லியன் ருபாய்களுக்கான வரவு செலவுத்திட்டம் 22.11.2011ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனினால் முன்வைக்கப்பட்டது. 25.11.2011ம் திகதி வரை வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றது.

2011ம் வருடத்துடன் ஒப்பீகையில் 13492 மில்லியன் ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
2012ம் வருடத்தில் இது 15192 மில்லியனாக அதிகரித்ததன் மூலம் சுமார் 1700 மில்லியன் இவ் வருடம் அதிகரித்துள்ளது. காலை 9.30 மணி தொடக்கம் சில தினங்களில் இரவு 10.30 மணிவரை தொடர்ந்த விவாதங்களின் பின் அனைத்து அமைச்சுக்களின் பாதீடுகளும் வெற்றியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வரவு செலவுத் திட்டத்தின் முடிவில் உரை நிகழ்த்திய கிழக்கு முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கிழக்கு மக்களின் திடமான வலுவாக்கத்திற்கு முதலாவது மாகாணசபை என்றவகையில் கடந்த 3 ½ வருடங்கள் எதிர்க்கட்சி ஆளும் கட்சி என்ற வேற்றுமை இன்றி சேவையாற்றியது போல் இவ் வருடம் இன்றும் சிறப்பாக சேவையாற்றுவோம் என வேண்டுகோள்விடுத்தார்.



ஆளும் கட்சியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளும் ஆதரவாக வாக்களித்ததுடன் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களும் EPRLF கட்சியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
read more...

Monday 21 November 2011

தமிழ் மக்களை ஏமாற்றுபவர்களின் அம்பலமாகும் போலி வேசங்கள் (வீடியோ இணைப்பு)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிழக்கு மாகாண முதலமைச்சரின் புகழ் பாடுகின்றார் பாருங்கள். இவரின் கொள்கைகள் என்ன?

read more...

தமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் சிக்குண்ட கிழக்கு மாகாணம். பகுதி - 5

தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழ் தலைமைகளினால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். உணர்ச்சி வார்த்தைகளை மக்கள் தமிழ் மத்தியிலே விதைத்து தமிழ் மக்களின் அவலங்களிலும், கண்ணீரிலும் அரசியல் நடாத்திக் கொண்டிருப்பவர்கள் இனிமேலாவது மக்கள் நலன் நோக்கி சிந்திப்பார்களா? தொடர்ந்தும் தமிழ் மக்களின் அவலங்களில் குளிர்காய நினைக்கின்றனரா?
தமிழ் மக்களின் இன்றைய தேவை என்ன என்பதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டும். முப்பது வருடகால யுத்தத்தில் சின்னாபின்னமாக்கப்பட்ட எமது பிரதேசத்தின் அபிவிருத்தி நோக்கியும், தமிழர்களின் உரிமை, சுயநிர்ணயம் தொடர்பில் சாத்தியமான தீர்வுத்திட்டங்கள் நோக்கியும் தமிழ் தலைமைகள் சிந்திக்க வேண்டும். அதை விடுத்து தமது இருப்பினை நிலை நாட்டுவதற்காக வீர வசனம் பேசி மக்களை உசுப்பேற்றி தொடர்ந்தும் தமிழர்களை அழிக்க நினைக்கும் கைங்கரியங்களை உரியவர்கள் நிறுத்த வேண்டும்.
கடந்த அறுபது ஆண்டுகளாக தமிழர்களை உசுப்பேற்றி, உசுப்பேற்றியே தமிழர்களை கொன்றழித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் தமிழர்களின் கண்ணீரிலும், அவலங்களிலும் அரசியல் நடாத்த நினைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் இன்றைய நிலைப்பாடு என்ன? கொள்கைகள் என்ன? தமிழ் மக்களுக்காக என்ன தீர்வுத் திட்டங்களை முன் வைக்கின்றனர். இவர்களிடம் நிரந்தரமான, உறுதியான கொள்கைகள் இல்லை. இன்று ஒரு கொள்கை நாளை ஒரு கொள்கை. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒவ்வொரு கொள்ளை? தமிழ் மக்கள் தொடர்பில் எந்த விதமான தீர்வுத் திட்டங்களும் இல்லை. எதிலும் வெளிப்படை இல்லை.
அண்மையில் அனைவராலும் பேசப்பட்ட விடயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அமேரிக்க, கனடா விஜயம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களும், தமிழீழ ஆதரவாளர்களும், புலம்பெயர் தமிழர்களும் தமிழ் ஊடகங்களும் கூட்டமைப்பினரின் அமேரிக்க, கனடா விஜயத்தினை தமிழீழம் கிடைத்துவிடும் என்பதுபோல் பெரிதாக பிரச்சாரம் செய்தனர். அமேரிக்காவிற்கு எதற்காகச் சென்றனர். யார், யாருடன் பேச்சுவார்த்தை நடாத்தினர், இவர்களின் இந்த விஜயத்தின் மூலம் என்ன தீர்வு கிடைத்திருக்கின்றது? அமேரிக்காவிலும், கனடாவிலும் என்ன நடந்தது?
கூட்டமைப்பினரை அமேரிக்க அரசாங்கமோ, கனடா அரசாங்கமோ தானாக பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை. கூட்டமைப்பினர் அமேரிக்காவிற்கு செல்வதற்கு கோரிக்கை விடுத்தனர். அதனால் அவர்கள் அழைக்கப்பட்டனர். நாம் ஒருவரின் வீட்டுக்கு செல்வதற்கு அந்த வீட்டுக்காரரிடம் உங்கள் வீட்டுக்கு வரப்போகின்றோம் என்று சொன்னால் வீட்டுக்காரர் வரவேண்டாம் என்று சொல்லமாட்டார். அதுதான் இங்கேயும் நடந்திருக்கின்றது. இவ்வாறுதான் அமேரிக்கா இவர்களை அமைத்தது. இதனை அமேரிக்க இராஜதந்திர வட்டாரங்களே தெரிவித்தன.
அமேரிக்காவில் யார், யாரைச் சந்திக்கப்போகிறோம் எந்தெந்த விடயங்களைப்பற்றி பேசப்போகின்றோம் என்ற ஒரு திட்டங்கள்கூட அவர்களிடம் இருக்கவில்லை. அமேரிக்காவிற்குச் சென்ற கூட்டமைப்பினர் யார், யாருடன் பேசினர். எதைப்பற்றிப் பேசினர் என்ன தீர்வுகள் எட்டப்பட்டன போன்ற விடயங்களை இதுவரை மக்களிடம் தெரியப்படுத்தாமை ஏன்? கனடாவிற்குச் சென்றவர்கள் கனடாவில் என்ன செய்தனர் யார், யாரைச் சந்தித்தனர்? அவர்களின் இரு நாட்டு விஜயத்தின் மூலம் எட்டப்பட்ட தீர்வுதான் என்ன?
கூட்டமைப்பினரின் இவ்விஜயம் தமிழர்களின் உரிமைக்காக இரு நாட்டு தலைமைகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்கத்துடன் அமைந்த ஒன்றல்ல. அமேரிக்கா, கனடா போன்ற நாடுகளிலே புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர். இவர்கள் தமிழீழ ஆதரவாளர்கள் மட்டுமல்லாது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளர்களும்கூட. புலம்பெயர் தமிழர்கள் யுத்தத்தால் அழிவடைந்த தமிழர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக கூட்டமைப்பினருக்கு பாரிய தொகைப்பணங்களை வழங்கி வருகின்றனர். அத்துடன் கூட்டமைப்பினரின் சொந்தங்கள், உறவினர்கள் இவ்வாறான நாடுகளிலே இருக்கின்றனர்.
இரு நாடுகளிலும் இருக்கின்ற தமது ஆதரவாளர்களை சந்தித்து தமது இருப்பினை நிலை நிறுத்திக் கொள்ளவும். பெருந்தொகைப் பணங்களை சுருட்டிக் கொள்ளவும், தமது குடும்ப உறவுகளுடன் உறவாடவும், மீண்டும் தமிழர்களை ஏமாறும் சமூகமாகவும் நிலை நிறுத்தவுமே இவர்களின் விஜயம் அமைந்திருந்தது.
அமேரிக்கா, கனடா போன்ற நாடுகள் தம்மை அமைத்து பேச்சுவார்த்தை நடாத்துவது போன்ற மாயையை ஏற்படுத்தி மக்களை தங்கள் பக்கம் திசை திருப்பும் ஒரு முயற்சியாகவே அமைந்திருந்தது இந்த விஜயம். இவ்விஜயத்தை பெரிது படுத்தி ஊடகங்கள் கருத்துக்களை வெளியிட்டதனால் இவ்விஜயத்தின் மூலம் தமிழர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று பலர் நினைத்தனர். தமிழீழம் கிடைத்து விடும் என்று நினைத்தவர்களும் உண்டு. அந்தளவிற்கு இவர்களின் அமேரிக்க, கனடா விடயம் மிகைப்படுத்தப்பட்டிருந்தன. அன்று பக்கம் பக்கமாக எழுதிய, செய்திகளை வெளியிட்ட தமிழ் ஊடகங்கள். இவர்களின் விஜயத்தின் மூலம் எட்டப்பட்ட விடயங்களை வெளியிடாமல் இருப்பது தொடர்பாக கேள்விகளை கேட்காமல் இருப்பது ஏன்? இவ் ஊடகங்களும் கூட்டமைப்பினருடன் சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்ல நினைக்கின்றனரா?
தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சினைகள் இல்லை என்றால் கூட்டமைப்பினரால் அரசியல் நடாத்த முடியாது. அதே போன்று தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சினை இருந்தால்தான் ஊடகங்களால் பிழைப்பு நடாத்த முடியும். உணர்ச்சி வார்த்தைகளை முன் வைக்கின்றபோது தமிழன் எதனையும், நம்பும் அளவிற்கு மட்டுமல்ல எதனையும் செய்யும் அளவிற்கு தமிழன் பழக்கப்பட்டுவிட்டான்.தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், தமிழ் ஊடகங்களும் இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். கூட்டமைப்பினரும், தமிழ் ஊடகங்களும் தமிழன், தமிழர் உரிமை, தமிழீழம், தமிழிPழம் என்று பேசிப்பேசியே தமிழர்களை உசுப்பேற்றி, உணர்ச்சிவசப்படுத்தி தமிழர்களை குழப்பமடையச் செய்து தமது இருப்பை நிலை நிறுத்திக் கொள்கின்றனர்.
இவர்களின் இவ் விஜயத்தின்போது கனடாவில் என்ன நடந்தது. நட்சத்திர ஹோட்டலில் பாரிய விருந்துபசாரம் இடம்பெற்றது. இதற்கு புலம்பெயர் தமிழர்கள் பலர் எதிர்ப்புக்களை தெரிவித்திருந்தனர். இவ் விருந்துபசாரத்துக்கு பாரிய தொகைப்பணம் விரயமாக்கப்பட்டிருந்தது. இன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது தமிழ் பிரதேசங்களிலே ஒரு வேளை உணவு இல்லாமல் எத்தனையோ பேர் தவிக்கின்றனர். அங்கே செலவு செய்த பெருந்தொகைப் பணத்தை உணவின்றி வாடும் எமது மக்களின் பசியைப் போக்கியிருக்கலாமல்லவா? இவ்வாறான விருந்துபசாரங்கள் தேவையா? விருந்துபசாரத்துக்காகவும், நட்சத்திர விடுதிகளில் கும்மாளம் அடிக்கவுமா கனடாவிற்குச் சென்றனர். கனடாவிற்குச் சென்ற கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு சினிமா நட்சத்திரங்கள் வரவேற்கப்படுவதுபோல் வரவேற்கப்பட்டனர். இவர்கள் சினிமா நட்சத்திரங்களா? மக்கள் பிரதிநிதிகளா? இவர்கள் அரசியலுக்கு வராமல் சினிமாவிற்கு வந்திருக்கலாம். இவர்களை சினிமா நட்சத்திரங்களை வரவேற்பதுபோல் வரவேற்கப்பட்டமையினை புலம்பெயர் தமிழர்கள் பலர் விமர்சித்திருந்தனர்.
இந்த வெளிநாட்டு விஜயம் ஒருபுறமிருக்க விஜயத்தை நிறைவு செய்து இலங்கை வந்த கூட்டமைப்பினரின் நிலைப்பாடு என்ன? அவர்களின் நிலைப்பாட்டையாவது மக்களுக்கு தெளிவு படுத்துவார்களா? உண்மையிலேயே கூட்டமைப்பினர் கொள்கை இல்லாக் கூத்தாடிகள் போன்றுதான் செயற்படுகின்றனர். ஒரு புறத்திலே அரசாங்கத்துக்கு எதிராக உண்ணாவிரதம் போன்ற எதிர் நடவடிக்கைகளிலே ஈடுபட்டு வருகின்றனர். மறு புறத்திலே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே அரசுடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளில் பேசப்பட்ட விடயங்கள், எட்டப்பட்ட விடயங்கள் தொடர்பாக மக்களுக்கு இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை. மீண்டும் அரசுடன் பேச்சுவார்த்தைகளில் கூட்டமைப்பினர் ஈடுபடுகின்றனர். கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தங்களை செய்கின்றார்களா?
இன்று இலங்கையின் பாராளுமன்றத்திலே ஜனாதிபதியினால் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் நடவடிக்கைகளை நன்கு அவதானித்திருந்தால் சில விடயங்களை உணர்ந்திருக்க முடியும். வழமையாக வரவு, செலவுத்திட்டத்தை எதிர்ப்பவர்கள், அல்லது பகிஸ்கரிப்பவர்கள் இன்றைய வரவு செலவுத்திட்டத்தில் அமைதியாக இருந்தனர். அதற்காக ஜனாதிபதி நன்றிகளையும் தெரிவித்தார். அத்துடன் நிதி அமைச்சரினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேனீர் உபசாரத்திலும் கலந்து கொண்டனர்.










தொடரும்....

read more...

கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜாவும் பேச்சுவார்த்தையில் (படம் இணைப்பு)

 கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா (நவம்) இருவரும் என்ன பேசி இருப்பார்கள் நீங்களே சொல்லுங்கள், அண்மைக் காலத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுகின்ற நிலமை காணப்பட்டது. கிழக்கு மாகாண முதலமைச்சர் அண்மைக்காலத்தில் மேடைகளில் கூட்டமைப்பினரின் கொள்கைகள் என்ன? தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பினர் என்ன தீர்வுத் திட்டத்தினை முன்வைக்கின்றனர் கூட்டமைப்பினரின் நிலைப்பாடுகள் தொடர்பில் பல கேள்விகளை கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது 

read more...

Wednesday 16 November 2011

மட்டக்களப்பில் அறிவிப்பாளர் பயிற்சி நெறி

ஒலிபரப்புத்துறை பலராலும் விரும்பப்படுகின்ற போட்டி நிறைந்த ஒரு துறையாகும். இத்துறையில் பிரகாசிப்பதற்கு முறையான பயிற்சியும் வழிகாட்டல்களும் அவசியமாகும். அறிவிப்பாளராக வேண்டும் என்ற கனவோடு இருக்கின்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இளுஞர் யுவதிகளின் கனவுகளை நனவாக்க இலங்கை இளைஞர் அபிவிருத்தி ஒன்றியத்தினர் முன்வந்திருக்கின்றனர்.
மட்டக்களப்பிலே அறிவிப்பாளர் பயிற்சி நெறியினை நடாத்துவதற்கு முன்வந்திருக்கின்றனர். இப் பயிற்சி நெறியில் ஒலிபரப்புத்துறை சார்ந்த பலர் விரிவுரைகளை நடாத்த இருக்கின்றனர். இப் பயிற்சி நெறியை பூர்த்தி செய்பவர்களை ஒலிபரப்புத் துறையில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவும் இருக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அறிவிப்பாளர் பயிற்சி நெறிக்காக பலர் கொழும்புக்கு சென்று பெருந்தொகைப்பணத்தை செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பயிற்சி நெறியை தொடர விரும்புபவர்கள் 0771589843 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்துகொள்ள முடியும்
read more...

Saturday 5 November 2011

தமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் சிக்குண்ட கிழக்கு மாகாணம். பகுதி - 4

அன்றுதொட்டு இன்றுவரை கிழக்கு மக்கள் தமிழ் தலைமைகளினால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வந்த சரித்திரங்கள் இருக்கின்றன. இவ்வாறு கிழக்கு மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவதற்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் பக்க பலமாக இருந்து வருகின்றனர். அந்தக் காரியத்தைத்தான் இன்று கிழக்கிலே இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்கு வால் பிடிப்பவர்களும் செய்துகொண்டிருக்கின்றனர்.
இன்று மட்டக்களப்பிலே இருந்து தெரிவான மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவதற்கு உறுதுணையாக இருப்பது கவலைப்படவேண்டிய விடயம். கிழக்கு மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்பதனையும் தமது தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ந்தும் தம்மையும், கிழக்கு மக்களையும் ஏமாற்றி வருகின்றது என்பதனை இந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் அறியாமலோ அல்லது உணராமலும்இல்லை. ஆனாலும் தாம் அரசியல் இலாபம் தேடவும், சொத்துச் சேர்க்கவும் பொம்மைகள் போன்று சம்பந்தனோ அல்லது அவரைச் சார்ந்தவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையசைத்துக் கொண்டிருக்கின்றனர்.
உண்மை நிலைமைகளைச் சொன்னால் வெளிநாடுகளிலே இருக்கின்ற புலம்பெயர் தமிழர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொடுக்கின்ற பல மில்லியன் கணக்கான பணங்களை தாம் இழந்துவிடுவோம். தாம் அரசியல் நடாத்த மூடியாது அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவார்கள் என்பதனை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் தமிழ் மக்களை எவ்வாறெல்லாம் குழப்பமடையச் செய்து மீண்டும் மக்களை உசுப்பேற்றி யுத்தத்தை நோக்கி திசைதிருப்பி தமிழர்களின் பிரச்சினையில் குளிர்காய நினைக்கின்றதோ அவற்றுக்கெல்லாம்பக்கப்பாட்டுப் பாடிக்கொண்டிருக்கின்றனர் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும்.
யுத்தத்தின் பின்னர் கிழக்கு மாகாணசபை உருவாக்கத்தின் பின்னர் கிழக்கு மாகாணம் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது. இந்த அபிவிருத்திகளை சம்பந்தன் போன்றவர்கள் இல்லாமல் செய்யவேண்டும் என்பதில் அக்கறையாக இருக்கின்றனர். கிழக்கின் அபிவிருத்தி என்பது அவர்களுக்கு பிடிக்காத விடயம். கிழக்கு மாகாண முதலமைச்சர் எதைச் செய்தாலும் பிழை பிடித்துக் கொண்டிருக்கின்ற மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கும் எந்த அருகதையும் இல்லை. கிழக்கு மாகாண முதலமைச்சர் பல அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக முன்னெடுத்து கிழக்கு மாகாணத்தை அபிவிருத்திப்பாதை நோக்கி கொண்டு செல்கின்றார்.

தொடர்ந்து வாசிக்க இங்கே 
read more...