Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, 23 September 2012

கிழக்குத் தமிழர்களின் தலைவிதியோடு விசப்பரீட்சை வைத்து விளையாடிய துரோகிகள்!

கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டும், முதலமைச்சர் தெரிவு என்ற விடயம் தொடர்ந்தும் இழுபறியாகவே இருந்து வந்தது. மௌனங்கள் கலைக்கப்பட்டு விவாதங்கள் முற்றுப்பெற நேற்றைய தினம் வைக்கப்பட்டது முற்றுப்புள்ளி. இது யார் தலை மேல் விழுந்த இடி? என்பதே ஆராயப்பட வேண்டிய விடயம்.
மூவின மக்களும் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் அதிகப்படியான பெரும்பான்மை கொண்ட இனக்கூட்டமாகவும் பேரிழப்புகளை தாண்டி வந்த சமூகமாகவும் அதிகம் புண்பட்டு நிற்பவர்கள் தமிழர்களே!
அடுத்தபடியான இனவிகிதாசாரத்தில் இருக்கும் முஸ்லீம் சமூகமானது போராட்ட சூழலிலும் தம்மை அபிவிருத்தி, ஆழுமை ரீதியில் வளர்த்துக் கொண்டே விருத்தியடைந்த சமூகமாகும். இவை இரண்டிற்கும் அடுத்ததாகவே சிங்களவர் சமூகம் சிறுபான்மை விகிதாசாரிகளாக கிழக்கில் வாழ்கின்றனர். அந்த வகையில் தமிழீழம் என்ற இலக்கினை நோக்கி நகர்த்தப்பட்டு கடந்த 30 வருடகால ஆயுக்கலாச்சாரத்தினாலும், போலி வேடதாரிகளின் அரசியல் கலாச்சாரத்தினாலும் அதிகம் நொந்து நிற்கின்றவர்கள் கிழக்குத் தமிழர்கள்தான். எனவே கிழக்கின் ஆட்சி அதிகாரத்தில் தமிழர்களுக்கு பெருமளவில் பங்குண்டு எனும் விடயத்தில் யாரும் குற்றம் சொல்ல முடியாது. அந்தவகையில் ஏனைய சமூகத்தினரையும் புறக்கணித்துவிட்டு செயற்படவும் முடியாது. நியாயமாக முதலமைச்சர் என்ற கிழக்கின் அதிகாரம் அடங்கிய பதவியானது தமிழர்களுக்கே கிடைத்திருக்க வேண்டும். அல்லது 2008 இல் தமிழர் சமூகத்திற்கு கிடைத்த கிழக்கு முதலமைச்சர் என்ற அந்தஸ்து தொடர்ந்தும் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு விடயங்களையும் முன்னிறுத்திப் பார்க்கும்போது கிழக்கின் தமிழ் முதலமைச்சர் உருவாக்கத்திலும், தமிழ் முதலமைச்சர் தக்க வைப்பிலும் பங்கெடுக்காது தமது சுயஇலாப அரசியலையும் , பழிவாங்கும் அரசியலையும் மாத்திரம் மனதில் வைத்து செயற்பட்ட வக்கிர மனோநிலை கொண்ட அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் கிழக்குத் தமிழர்களின் தலைவிதியோடு விசப்பரீட்சை வைத்து விளையாடிய துரோகிகளாகவே மக்களால் உணரப்படுகின்றார்கள்.
பெரும்பாலான கிழக்கு வாழ் தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்ததெல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இருந்து ஒரு தமிழ் முதலமைச்சரை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சாத்தியம் அற்ற எண்ணப்பாட்டினை முன்னிறுத்தியே ஆகும். எப்படியிருந்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முதலமைச்சர் என்கின்ற பதவியினை கைப்பற்றவே முடியாது என்பதும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அப்புக்காத்து தலைமைகள் நன்கறிந்த விடயம். ஆனாலும் கிழக்குத் தமிழர்களது அப்பாவித் தனமான மனோநிலையினை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதிலேயே தமது முழுப்பலத்தினையும் பிரயோகித்து யதார்த்தினை உணரவிடமால் செய்து வாக்கு வேட்டை நடாத்தியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே ஆவர். தனித்து ஆட்சி அமைக்க முடியாத தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து கொண்டு ஆதரவினை வழங்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட விடயம்தான். அதேபோன்று மத்திய அரசில் பங்குகொண்டு அமைச்சுப் பதவிகளை வகிக்கும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஒருபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்க முன்வராது என்பது வெளிப்படையாகவே சகலரும் அறிந்த விடயம். கடந்து வந்த அரசியல் வரலாற்றின் பதிவுகள் அனைத்தும் பக்கத்திற்கு பக்கம் நன்கறிந்த கூட்டமைப்பின் அப்புக்காத்து தலைமைகள் இதுதொடர்பில் மிகத்தெளிவிலேயே இருந்தனர்.
ஆனாலும் கிழக்குத் தமிழர்களது வாக்குகளை பெருமளவில் பெறவேண்டுமானால் ஓர் போலியான நம்பிக்கையினை மிகக் கச்சிதமாக உருவாக்கிவிட வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது. அவ்வாறு உருவாக்கப்பட்ட போலித்தயாரிப்புதான் “ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசினை இணைத்துக்கொண்டு ஆட்சியமைப்போம்” என்ற பிரச்சாரப் பொருளாகும். இந்த யுக்தி அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இலாபத்தினை வழங்கியிருந்தும் குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சாத்தியமற்ற இலக்குநோக்கி மக்களை நகர்த்தியது எல்லாம் பிள்ளையானை முதலமைச்சராக வரவிடாமல் தடுக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான அரசியல் நிலைப்பாட்டினை எண்ணத்திற் கொண்டமைதான் என்பது தெட்டத்தெளிவாகின்றது.
பிள்ளையானுக்கு எதிராக போடும் முட்டுக்கட்டைகள் அனைத்தும் கிழக்குத் தமிழர்களது தலைகளிலும் பேரிடியாக விழும் தமிழ் முதலமைச்சர் பறிபோகும் என்று தெரிந்தும் தமிழர் நலன் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சற்றுச் சிறிதேனும் சிந்திக்கவில்லை. அவர்கள் வெற்று ரொக்கட்டான முஸ்லீம் காங்கிரசிற்கு எரிபொருள் தாங்கி பொருத்துவதிலேயே குறியாக இருந்தனர். இவையெல்லாவற்றையும் கடந்து அரசாங்கம் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவியினை கொடுக்க கடுமையான முயற்சிகளை செய்து பல்வேறு விவாதங்களையும் பேரம் பேசுதல்களையும் செய்து கொண்டு வந்தது. ஆனாலும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் கடுமையான நிபந்தனைகள் அரசின் நிலைப்பாட்டினை தளர்த்தத் தொடங்கியது. 07 ஆசனங்களை மாத்திரமே பெற்றுக்கொண்ட கட்சி அரசுடன் அதிகபட்ச அதிகாரங்களைக் கேட்டு தனது பேரம் பேசுதலை மேற்கொள்ளும் விதமாக தனது சக்தியினை மென்மேலும் அதிகரித்துக் கொள்ள வழிவகுத்துக் கொடுத்த பெருமையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினையே சாரும்;. எங்களுடன் இணைந்தால் முஸ்லீம் முதலமைச்சரை உருவாக்கித் தருவோம். எந்த விதமான நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம் என்று பகிரங்க அறிக்கையினை விடுத்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு.
ஏற்கனவே ஆட்சியமைப்பு தொடர்பில் 07 ஆசனங்களுடன் முக்கியத்துவம் பெற்று நின்ற ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசானது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த அறிவிப்பால் மேலும் வலுப்பெற்றுக்கொண்டு அரச தரப்போடு பேசத் தொடங்கியது. இதுவே “சும்மா இருந்த சங்கினை ஊதிக் கெடுத்தான் ஆண்டி” என்ற கதையாகி நின்றது.
இறுதியில் முஸ்லிம் முதலமைச்சர் பதவியினை கொடுத்துத்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. இந்த நெருக்கடி நிலையினை அரசுக்கு ஏற்படுத்த காரணமாய் அமைந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பின், முஸ்லீம் காங்கிரஸ் மீதான மறைமுக உற்சாகமூட்டல்களேயாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லீம் தலைமைகள் அனைத்தும் பல்வேறு திசைகளில் பிரிந்து நின்றன. அரசிற்குள் ரிசாட் அணி, அதாவுல்லா அணி என்ற இரு அணிகள் இருக்க முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இரு வேறுபட்ட கருத்துப் பிளவுகள் உதிர்வுபெற்றன. ஆனாலும் இந்த அனைத்துக் கோடுகளும் வௌ;வேறாக பயணித்தாலும் இதய சுத்தியுடன் ஒரேயொரு மையப்புள்ளியிலேயே இடைவெட்டிக்கொண்டன. இந்த சந்திப்புப் புள்ளிதான் “முஸ்லீம் முதலமைச்சர்” என்ற பெரும் சக்தியாக பரிணமித்தது.
அந்தவகையில் மிகச்சரியான முறையில் சிந்தித்து இறுதிநேர விட்டுக்கொடுப்புகளின் மூலம் ஒரு முஸ்லீம் முதலமைச்சரை உருவாக்கியமையிட்டு முஸ்லீம் தலைமைகளை உளமாற பாராட்டியே ஆகவேண்டும்.
சிங்களவர் எமது உரிமைகளை பறிக்கின்றனர். எமது காணிகளை கையகப்படுத்துகின்றனர் என்றெல்லாம் கூச்சல்களை மட்டுமே வெளிப்படுத்தி வெட்டி வீராப்பு பேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பானது கிழக்கு மாகாண தமிழர்களின் வாழ்வுரிமையினையும் அரசியல் அதிகாரத்தினையும் முஸ்லீம் சமுகத்தினது கைகளில் ஒப்படைத்துவிட்டு ஒளிந்தோடியிருப்பது கிழக்குத் தமிழர்களுக்கு செய்து இருக்கின்ற மிகப்பெரிய துரோகமாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்பி வாக்களித்து வழமைபோல் இம்முறையும் ஏமாந்து நிற்கும் ஒவ்வொரு கிழக்குத் தமிழனும் புத்தியில் உறைக்க சிந்திப்பதெல்லாம் காலம் கடந்த ஞானமேயாகும். கண்கெட்டபின்னர் செய்ய நினைக்கும் சூரிய நமஸ்காரமும், முஸ்லீம் முதலமைச்சர் வருகையின் பின்னரான “பிள்ளையானை கோட்டை விட்டோமே” என்கின்ற உணர்வும் சரிநிகர் சமமாகவே அமையும். இதுமட்டும் உறுதி.
அஸ்வின்மித்ரா
read more...

Thursday, 20 September 2012

முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டபோதும் படுகொலை செய்யப்பட்டபோதும் கூட்டமைப்பினருக்கு வராத அக்கறை முஸ்லிம்கள் மீது இன்று ஏன் வருகிறது

இன்று முஸ்லிம்கள் மீது தமிழ் தேசியக் மூட்டமைப்பினருக்கு என்றுமில்லாத அக்கறை வந்திருக்கின்றது. கிழக்கிலே தமிழ் முதலமைச்சர் ஒருவரை இல்லாமல் செய்ய வேண்டும் என்று சதித்திட்டங்களை செய்த கூட்டமைப்பினரின் கனவு பலித்துவிட்டது. இன்று கிழக்கிலே தமிழ் முதலமைச்சர் ஒருவர் இல்லாமல் செய்யப்பட்டு முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் வந்திருக்கின்றார்.

தமிழ் தேசியக் தமிழ் தேசியக் மூட்டமைப்பு இன்று முஸ்லிம் காங்கிரசை விமர்சித்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரசை விமர்சிக்கவோ முஸ்லிம்கள்மீது அக்கறைப்படவோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு க்கு எந்த அருகதையும் இல்லை.

தேர்தலுக்கு முன்னர் நான் எழுதிய ஒரு பதிவு மீண்டும் 
கிழக்கு மாகாணசபை தேர்தலில் யார் முதலமைச்சர்? முஸ்லிம்களும் தமிழர்களும் தாங்கள் முதலமைச்சர் பதவியினைப் பெற வேண்டும் என்று வயூகங்களை வகுத்துக்கொண்டிருக்கும் இக் கால கட்டத்தில் தமிழ் கட்சிகள் சிலவும் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஒரு சில அரசியல்வாதிகளும் தமிழ் முதலமைச்சரை இல்லாமல் செய்வதற்கு பல சதித் திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண விகிதாசாரத்தின் அடிப்படையில் தாம் கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்க முடியாது. முதலமைச்சரை பெற முடியாது எனபது தெரிந்தும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் வரக்கூடாது என்பதற்காகவே போட்டியிடுகின்றனர். தாம் போட்டியிடுவதன் மூலம் தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு தமிழ் முதலமைச்சர் இல்லாமல் போகலாம் என்பது கூட்டமைப்பினருக்கு தெரியும்.

தமிழ் முதலமைச்சர் இல்லாமல் போவதன் மூலம் கிழக்கின் துரித அபிவிருத்திகள் இல்லாமல் போகலாம் என்பது தெரிந்திருந்தும் கூட்டமைப்பினர் இத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை சிதறடித்து கிழக்கின் அபிவிருத்தியை இல்லாமல் செய்யவே போட்டியிடுகின்றனர்.

இப்பொழுதுதான் கூட்டமைப்பினருக்கு முஸ்லிம்கள்மீது அக்கறை வந்திருக்கிறதா? கூட்டமைப்பினர் இதற்கு முன்னர் முஸ்லிம்கள் பல அவலங்களை சந்தித்தபோது எங்கே போனார்கள்? வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோதும், பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது இந்தக் கூட்டமைப்பினர் எங்கே போனார்கள்? அன்று ஏன் முஸ்லிம்கள்மீது அக்கறை வரவில்லை. அன்று வடக்கிலிருந்து விரட்டப்பட்டபோதும் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் புலிகளுடன் பக்கப்பாட்டுப் பாடியவர்களுக்கு முஸ்லிம்கள் பற்றி பேசவோ அக்கறைப்படவோ எந்த அருகதையும் இல்லை.

முஸ்லிம்கள் அவலங்களையும் அழிவுகளையும் சந்தித்தபோது திரும்பிக்கூட பார்க்காமல் கைகொட்டிச் சிரித்தவர்களுக்கு முஸ்லிம்கள் நிம்மதியாக வாழுகின்றபோது அக்கறை வந்திருக்கின்றது. முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வது பிடிக்கவில்லைபோலும். முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பினருடன் கூட்டுச் சேர்வது தொடர்பாக பேசப்படுகின்றது. முஸ்லிம்காங்கிரஸ் கூட்டமைப்பினருடன் கூட்டுச் சேர்வார்களானால் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களுக்கு மிகப்பெரும் வரலாற்றுத் தவறினைச் செய்யும்.

முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்போதும் படுகொலை செய்யப்பட்டபோதும் கைகொட்டிச் சிரித்து வேடிக்கை பார்த்து புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் இக் கூட்டமைப்பினரே.


read more...

Saturday, 25 August 2012

நம் தலையில் நாமே மண்ணை வாரிப்போட தயாரா?

அன்புக்கினிய தமிழ் உறவுகளே!.... சற்றேனும் சிந்தியுங்கள்….
கிழக்கு மாகாணசபை தேர்தல் இடம்பெற இருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் கிழக்கு தமிழர்களாகிய நாம் சிந்தித்து செயற்படவேண்டியவர்களாக இருக்கின்றோம். கிழக்கு மாகாணசபை தேர்தலிலே போட்டியிடுகின்ற கட்சிகள் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கின்றனவா என்று பார்க்கின்றபோது. வெறுமனே தமது சுயநல அரசியலுக்காகவே பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன.

இம் மாகாணசபை தேர்தலைப் பொறுத்தவரை கிழக்கு தமிழர்களுக்கு மிக முக்கியமான தேர்தலாக அமைய இருக்கின்றன. இத் தேர்தலை தமிழர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டிய தருணமிது. இத் தேர்தலைப் பொறுத்தவரை முதலமைச்சராக வருவது முஸ்லிமா, தமிழனா என்கின்ற கோசங்கள் ஒரு புறமிருக்க கிழக்கிலே இடம்பெற்றுவரும் துரித அபிவிருத்திகள் தொடர்வதா? இல்லையா? என்பதனை தீர்மானிக்கும் ஒரு தேர்தலாகவும், பல சவால்கள் நிறைந்த ஒரு தேர்தலாகவும் அமைய இருக்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் கிழக்கின் இன்றியமையாத முக்கிய தேவை என்ன என்பதனை நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற கொடுர யுத்தத்தின் காரணமாக எமது கிழக்கு மாகாணம் சின்னாபின்னமாக்கப்பட்டன. எமது மக்கள் நிம்மதியற்று வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று எமது பிரதேசங்கள் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. எமது மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். கிழக்கிலே இடம்பெறுகின்ற அபிவிருத்திகள் தொடரவேண்டுமா? இன்றைய எமது நிம்மதியான வாழ்க்கை தொடரவேண்டுமா? அல்லது எமது பிரதேசத்திலே இடம்பெறுகின்ற அபிவிருத்திகள் தொடரவேண்டுமா? இன்று நாம் வாழும் நிம்மதியான வாழ்க்கை தொடரவேண்டுமா என்பதனை கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும்.
கடந்த 30 வருடங்களாக நாம் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றோம் என்பதனை நாம் இன்றுதான் உணர்ந்திருக்கின்றோம். கடந்தகால அரசியல் தலைமைகள் எமது மக்களை ஏமாற்றி தாம் சுயபோகங்களை அனுபவித்து வந்திருக்கின்றனர். கடந்த 60 வருடங்களுக்கு மேற்பட்ட தமிழரசுக் கட்சியின் அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்காக எதனைச் செய்திருக்கின்றனர். ஆனாலும் தாம் சுகபோக வாழ்க்கை வாழ்ந்ததுடன் தமது குடும்பங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கின்றனர்.

தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்காக காலங்காலமாக கூட்டமைப்பினர் சிங்கள பேரினவாதம் என்றும், தமிழீழம் என்று உணர்ச்சி வார்த்தைகளை மக்கள் மத்தியிலே விததைத்து மக்களை உசுப்பேற்றி அரசியல் இலாபம் தேடுகின்றனர். சிங்களப் பேரினவாதம் என்றும், தமிழீழமே எமது மூச்சு என்றும் தமிழீழ பிரகடனம் செய்த அமிர்தலிங்கமோ, அல்லது இன்று இருக்கின்ற சம்பந்தனோ, செல்வராஜாவோ, அரியநேந்திரனோ, யோகேஸ்வரனோ தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கு பற்றினரா? அல்லது தமது பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்துக்கொண்டனரா? தாம் அரசியலில் நிலைத்து நிற்பதற்காகவும் அரசியல் இலாபம் தேடவுமே இவர்களால் தமிழீழம் எனும் கோசங்களும் பிரகடனங்களும் செய்யப்பட்டன. இவர்களின் உணர்ச்சி வார்த்தைகளை நம்பியதன் பயனாக நாம் சந்தித்தது என்ன? பல இலட்சக் கணக்கான உயிர்களையும் உடமைகளையும் இழந்தோம். எமது பிரதேசம் சின்னாபின்னமாக்கப்பட்டன.

இன்று கிழக்கிலே என்ன நடக்கின்றது என்பதனை நாம் சிந்தித்தாக வேண்டும். கிழக்கு மாகாணசபையை பிள்ளையான் அவர்கள் பொறுப்பெற்றதன் பின்னரே கிழக்கு மாகாணம் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. 60 வருடங்களுக்கு மேலான அரசியல் வரலாற்றினைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிள்ளையானின் நான்கு வருட ஆட்சியில் செய்த ஒரு வீத அபிவிருத்தியையாவது செய்திருக்கின்றனரா? அன்று கிழக்கு மாகாணசபை ஒன்று இல்லை என்று சொன்னவர்கள் இன்று கிழக்கிலே இடம்பெறுகின்ற அபிவிருத்திகளை இல்லாமல் செய்யவே பொட்டியிடுகின்றனர்.

இன்று பிள்ளையான் ஆயுதக்கழு என்று கோசமிடும் கூட்டமைப்பு வேட்பாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அவர்களின் கடந்தகால பக்கங்களை புரட்டிப் பாருங்கள் அன்புக்கினிய எம் உறவுகளே. இன்று கூட்டமைப்பினர் வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கின்றவர்கள் அன்று அயுதக் குழுக்களாக இருந்தபோது எமது மக்கள் பட்ட துன்பங்கள் அவலங்கள் எத்தனை எத்தனை கடந்த காலங்களை எண்ணிப் பாருங்கள்.

இன்று கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற ஜனாவாக இருக்கட்டும், பிரசன்னாவாக இருக்கட்டும், துரைரெட்னமாக இருக்கட்டும் இவர்கள் ஆயுதக் குழுக்களை வைத்து எத்தனை கொள்ளைகள் கொலைகளைச் செய்தனர். அவைகளை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். இவர்களின் அயுதக் குழுக்கள் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து எத்தனை ஆயிரம் தமிழர்களை கடத்தினார்கள் கொலை செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.

உறவுகளே சிந்தியுங்கள் எம்மை அன்று ஆட்டிப்படைத்த இவர்கள் மாகாணசபைக்கு சென்றால் எமக்காக என்ன செய்வார்கள் மிண்டும் எம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்வார்கள். எமது இன்றைய தேவை என்ன? நிம்மதியான வாழ்க்கையும், சிதைக்கப்பட்ட எமது தேசத்தின் அபிவிருத்தியுமே. வெறுமனே கூட்டமைப்பின் கபட நாடகங்களையும் உணர்ச்சி வார்த்தைகளை நம்பி மீண்டும் நாம் பலிக்கடாவாக மாறும் சமூகமாக இல்லாமல் உண்மைகளையும் யதார்த்தங்களையும் உணர்ந்து சிறந்த முடியுகளை எடுப்போம்.

பிள்ளையானின் நான்கு வருட மாகாணசபை அட்சியிலே எமது மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் வாழ்கின்றனர். கிழக்கு மாகாணம் துரிதமாக வழர்ச்சி அடைந்திருக்கின்றது. இவை தொடரவேண்டுமாக இருந்தால் நிட்சயமாகவே நாம் பிள்ளையானை மீண்டும் முதலமைச்சராக்க வெண்டிய பொறுப்பு எமக்கிருக்கின்றது.
தொடரும்……….



read more...

Tuesday, 21 August 2012

கிழக்கில் மக்கள் ஆதரவை இழந்துவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து இருந்து இன்று வரை பல இடங்களில் அடிமேல் அடி வாங்கிய தொடர்  கதையாக மக்கள் ஆதரவை இழந்துவருகின்றது. அண்மையில் சித்தாண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை அடிப்படையாக வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் ஆதரவு இழப்பு எந்த நிலையில் உள்ளது என்பதனை இகக்கட்டுரை ஆராய்கின்றது.
 
கிழக்கு மாகாணத்திலே சித்தாண்டி பிரதேசம் என்றாலே பல சிறப்புக்களைக் கொண்ட ஒரு பிரதேசமாகத் திகழ்கின்றது. உரிமைப்போராட்ட காலத்திலே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள போராளிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை பரிமாற்றம் செய்கின்ற ஒரு மையமாகவும், எந்தவொரு எட்டப்பனும் இல்லாத ஓர் போராட்ட ஆதரவு கிராமமாகவும், உரிமைப்போராட்டத்தில் பலரை ஈந்தளித்த நிலமாகவும் இது சிறப்புப்பெற்றது. தமிழன் என்ற சிந்தனை, தமிழனின் உரிமை போன்ற பல விடயங்களில் ஏனைய தமிழ்ப்பற்றுள்ள கிராமங்களுக்கு நாங்கள் சற்றும் சழைத்தவர்கள் இல்லை என்பதனை நிரூபிக்குமளவிற்கு தமிழின பற்றுள்ள சமூகமே இங்கு வாழ்கின்றது. இத்தகைய தமிழனப் பற்றே காலம் காலமாக அரசியல் ரீதியாகவும், தமிழனுக்கு நன்மை கிடைக்கக்கூடிய  அரசியல் கட்சிகளின் பின்னால் அணிதிரளவும் வழிவகுத்தது. 
 
அந்த வகையில் விடுதலைப்புலிகள் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் அவர்களின் விருப்பு எதுவோ? அதற்கமைவாகவே தமது அரசியல் ரீதியான ஆதரவை கட்சிகளுக்கு வழங்கி வந்தார்கள். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கiயில் இருந்த காலப்பகுதியில் அவர்களின் கட்டளைக்கு ஏற்ப நடந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அனைத்து மக்களும் அணிதிரண்டார்கள். ஆனால் சித்தாண்டி பிரதேச மக்களின் தமிழ்உணர்வோ அல்லது தமிழ்பற்றோ இன்றும்  மாறிவிடவில்லை. மாறாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால் நின்றால்  கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தமிழ் முதலமைச்சரை பெறமுடியாத நிலை ஏற்படும். என்ற தெளிவு ஏற்பட்டு அவர்கள் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால்  இருந்து ஒதுங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.  அதாவது கிழக்கு மண்ணை ஆட்சி செய்யக்;கூடிய தகுதியும், செல்வாக்கும் உடைய ஒரே ஒரு தமிழனான பிள்ளையான் அவர்களை தோற்கடித்து, முஸ்லிம் ஒருவனை முதல்வவராக்கும் சதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதை அறிந்தே மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை விட்டு விலகியிருக்கின்றார்கள். 
 
கடந்த 14.08.2012 அன்று சித்தாண்டியின் முருகன் ஆலய முன்றலில் பெரும் எடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்; ஒன்று ஒழங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தமிழர்விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன, செல்வம் அடைக்கலநாதன்,சுரேஸபிரேம சந்திரன, மாவை சேனாதி உள்ளிட்ட பெருமளவிலான வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிரசாரத்திற்கென வந்திறங்கியிருந்தார்கள். குறிப்பாக 17 சொகுசு வாகனங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் வெளிமாவட்டஙகளிலிருந்து வந்திறங்கினர். தலா ஒவ்வொரு வாகனங்களுக்குள்ளும் 12 பேர் சகிதம் மொத்தமாக 204 பேர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் வெளிமாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டனர். ஆனால் அங்கு சித்தாண்டி பிரதேசத்தில் தேர்தலுக்காக ஒன்று கூடிய மக்கள் என்றால் மிகமிகக் குறைவு. அதாவது சுமார் 20 இற்கும் குறைந்த மக்களே அவர்களுடைய பிரசாரத்தில் சித்தாண்டி பிரசேத வாசிகள் என்று சொல்பவர்கள் அமர்ந்திருந்தார்கள. இவர்கள் கூட மறுநாள் இடம்பெற இருக்கும் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வகளுக்காக வந்தவர்களும், மாலைப்பொழுதில் மரங்களின் கீழ் உட்கார்ந்து கதைத்துக்கொண்டிருக்கும் வயோதிபர்களுமேயாகும். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் மிகவும் அதிக செல்வாக்கைப் பெற்றிருந்த சித்தாண்டி பிரதேசத்தில் தமது செல்வாக்கை முற்றாகவே இழந்ததை எடுத்துக் காட்டுகின்றது. உண்மையில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வெறுப்பதற்கு காரணமே கிழக்கு வாழ் தமிழர்களின் தமிழ் தலைமைத்துவத்தை அகற்றி முஸ்லிம் தலைமைத்துவதற்கு வழிவகுப்பதற்கு போடப்பட்டுள்ள சதிகளை அறிந்ததேயாகும். 
 
இவற்றை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இத்தேர்தலில் பிரசாரத்தில் மக்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்ற காரணத்தினாலேயே தமது வாகனங்களில் ஆதரவாளர்களை வெளிமாவட்டங்களில் இருந்தெல்லாம் சுமார் 200 பேர் வரையிலான ஆதரவாளர்களை அழைத்து வந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இங்குள்ள மக்கள் தம்மீது நம்பிக்கை இழந்து விட்டர்கள் . சிலவேளைகளில் தமது பிரசாரங்களிலே குழப்பங்களை ஏற்படுத்துவார்கள் என்ற பீதியின் காரணமாகவே முன்கூட்டியே பாதுகாப்புக்கூட அரசதரப்பிலிருந்து பெற்றிருந்தார்கள். குறிப்பாக 300 இற்கும் மேற்பட்ட காவல்துறையினர், 50 இற்கும் மேற்பட்ட புலனாய்வு அதிகாரிகள், கலகம் அடங்கும் பிரிவு மற்றும் தீயணைப்ப படை போன்ற பல பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு காணக்கூடியதாகவிருந்தது. உண்மையில் தமிழர்கள் தமது கட்சியை நேசிக்கின்றார்கள், தமக்கு ஆதரவு இருக்கிறது என்றால் ஏன் இத்தனை பாதுகாப்புக்கள் போடவேண்டும். தமது மக்கள் தம்மீது அதிருப்தியுற்றுள்ளார்கள் சிலவேளைகளில் தமக்கு அவர்களால் ஆபத்து நிகழலாம் என்ற தோரணையிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமது பிரசாரக்கூட்டத்திற்கு இத்தகைய முன்பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தமை  தெட்டத்ததெளிவாகப் புலப்படுகின்றது.
 
அரசியல் பிரசாரத்திற்காகவும், மக்களிடத்தில் அனுதாபம் தேடுவதற்காகவும் தமது வாகனங்களையும். தமது அலுவலகங்களையும் தாமே சேதமாக்கிவிட்டு பொலிசில் முறைப்படுவதும் மேடைகளில் உளரித்திரிவதையும் அண்மை;காலத்தில் செய்து வருகின்றார்கள். 
சித்தாணடிபிரதேசத்திலே இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மற்றும் பாரிய குழுவினர் வருகை தந்திருந்தும் மக்கள் அதனைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சதிச்செயலை மக்கள் அறிந்து தெளிவுபெபற்றுள்ளார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவதுடன், கிழக்கு மண்ணில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மண்ணைக் கவ்வ இருப்பதையும் எடுத்து விளக்குகின்றது.
 
- ஆராவாணன்
read more...

Thursday, 19 July 2012

முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டபோதும் படுகொலை செய்யப்பட்டபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எங்கே போனார்கள்?

கிழக்கு மாகாணசபை தேர்தலில் யார் முதலமைச்சர்? முஸ்லிம்களும் தமிழர்களும் தாங்கள் முதலமைச்சர் பதவியினைப் பெற வேண்டும் என்று வயூகங்களை வகுத்துக்கொண்டிருக்கும் இக் கால கட்டத்தில் தமிழ் கட்சிகள் சிலவும் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஒரு சில அரசியல்வாதிகளும் தமிழ் முதலமைச்சரை இல்லாமல் செய்வதற்கு பல சதித் திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண விகிதாசாரத்தின் அடிப்படையில் தாம் கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்க முடியாது. முதலமைச்சரை பெற முடியாது எனபது தெரிந்தும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் வரக்கூடாது என்பதற்காகவே போட்டியிடுகின்றனர். தாம் போட்டியிடுவதன் மூலம் தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு தமிழ் முதலமைச்சர் இல்லாமல் போகலாம் என்பது கூட்டமைப்பினருக்கு தெரியும்.

தமிழ் முதலமைச்சர் இல்லாமல் போவதன் மூலம் கிழக்கின் துரித அபிவிருத்திகள் இல்லாமல் போகலாம் என்பது தெரிந்திருந்தும் கூட்டமைப்பினர் இத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை சிதறடித்து கிழக்கின் அபிவிருத்தியை இல்லாமல் செய்யவே போட்டியிடுகின்றனர்.

இப்பொழுதுதான் கூட்டமைப்பினருக்கு முஸ்லிம்கள்மீது அக்கறை வந்திருக்கிறதா? கூட்டமைப்பினர் இதற்கு முன்னர் முஸ்லிம்கள் பல அவலங்களை சந்தித்தபோது எங்கே போனார்கள்? வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோதும், பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது இந்தக் கூட்டமைப்பினர் எங்கே போனார்கள்? அன்று ஏன் முஸ்லிம்கள்மீது அக்கறை வரவில்லை. அன்று வடக்கிலிருந்து விரட்டப்பட்டபோதும் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் புலிகளுடன் பக்கப்பாட்டுப் பாடியவர்களுக்கு முஸ்லிம்கள் பற்றி பேசவோ அக்கறைப்படவோ எந்த அருகதையும் இல்லை.

முஸ்லிம்கள் அவலங்களையும் அழிவுகளையும் சந்தித்தபோது திரும்பிக்கூட பார்க்காமல் கைகொட்டிச் சிரித்தவர்களுக்கு முஸ்லிம்கள் நிம்மதியாக வாழுகின்றபோது அக்கறை வந்திருக்கின்றது. முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வது பிடிக்கவில்லைபோலும். முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பினருடன் கூட்டுச் சேர்வது தொடர்பாக பேசப்படுகின்றது. முஸ்லிம்காங்கிரஸ் கூட்டமைப்பினருடன் கூட்டுச் சேர்வார்களானால் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களுக்கு மிகப்பெரும் வரலாற்றுத் தவறினைச் செய்யும்.

முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்போதும் படுகொலை செய்யப்பட்டபோதும் கைகொட்டிச் சிரித்து வேடிக்கை பார்த்து புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் இக் கூட்டமைப்பினரே.

தொடரும்...
read more...

Monday, 16 July 2012

லூசுத்தனமும் முட்டாள்தனமும்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெல்லப்போவது யார்? ஒவ்வொரு கட்சியும் தாங்கள்தான் வெற்றி பெறுவோம், தமக்குத்தான் முதலமைச்சர் பதவி என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். தாங்கள்தான் வெற்றியை தீர்மானிப்பவர்கள் போன்று சொல்லிக்கொண்டிருக்கின்றனர். கிழக்கு மக்கள்தான் யார் முதலமைச்சர் என்பதனை தீர்மானிக்க இருக்கின்றனர்.

மக்கள் மனங்களில் நிறையவே மாற்றங்கள் வந்திருக்கின்றன. தமிழீழம், தமிழன் என்ற உணர்வு அதிகம் கொண்டவர்கள் கிழக்கு மக்கள். அதன் பிரதிபலிப்பே கிழக்குப் போராளிகள் பல வெற்றிச் சமர்களை புரிந்து வீர வரலாறுகளைப் படைத்தனர். அன்று அவர்கள் அறிந்திருக்கவில்லை தமிழீழமென்பது அடைய முடியாத இலக்கு என்பதனை. இலங்கயைில் தமிழீழம் சாத்தியமில்லை என்பதனை.

யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு கிழக்கு மாகாணம் பாரிய அபிவிருத்தியைக் கண்டு மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வரும் இந்த நிலையை நினைத்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். கடந்த காலங்களில் தமிழீழம் எனும் அடைய முடியாத மாயையைக் காட்டி நாம் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். என்பதனை கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். 


 தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் கிழக்கு மக்களை ஏமாற்றி வருவதனையும் மக்கள் நன்கு உணர்ந்துவிட்டனர். அதன் பிரதிபலிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினை கிழக்கு மக்கள் புறக்கணித்து வருகின்றனர். இதனை உணர்ந்த கூட்டமைப்பினர்  மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அப்பட்டமான பல பொய்களை மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றனர்.

உண்மையில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பினர் போட்டியிடுவதற்குக் காரணம் கிழக்கின்மீதோ, கிழக்கு மக்கள்மீதோ  இருக்கின்ற அக்கறை இல்லை. யுத்த்த்தின் கோரப்பிடியில் சிக்குண்டு சின்னாபின்னமாக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் துரித வளர்ச்சியை கண்டு சகித்துக்கொள்ள முடியாமல் இத் துரித அபிவிருத்தியை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கமாகும்.

அண்மையில் சம்பந்தன் அவர்கள் சொல்லியிருந்தார் அரசாங்கத்தோடு சேர்ந்திருக்கின்ற எவரையும் வெல்ல விடமாட்டோம் என்று. இதிலிருந்து தெளிவாகின்றது கிழக்கின் துரித அபிவிருத்தியை இல்லாமல் செய்ய வேண்டும் எனும் கூட்டமைப்பின் நோக்கம். அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இருந்து கிழக்கு முதலமைச்சர் பதவியைப் பெற்று அரசாங்கத்துடன் பல பேரம்பேசல்களுடன் யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு பாரிய அபிவிருத்தியை செய்து மக்கள் மத்தியில் துரிதமாக இடம் பிடித்தவர் பிள்ளையான் அவர்கள்.

அரசாங்கத்தோடு அங்கம் வகித்தால் மட்டுமே கொடிய யுத்த்த்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்பது  எல்லோருக்கும் தெரியும். வெறுமனே வீர வசனங்களைப்பேசி மக்களை உசுப்பேற்றிவிட்டு அரசியல் இலாபம் தேடிக்கொண்டு அரசால் வழங்கப்படும் சுகபொகங்களை பெற்றுக்கொண்டு கூட்டமைப்பினரைப்பொல் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தால் எமது பிரதேசத்தை யார் கட்டியெழுப்புவது என்பதை சிந்திக்காதவர்களாக கூட்டமைப்பினர் இருக்கின்றனர்.

கிழக்கு மக்களுக்காக குரல் கொடுக்க தேர்தலிலே களமிறங்கும் கூட்டமைப்பினருக்குள்ளேயே ஒற்றுமை இல்லை அதற்குள் கிழக்கு மக்களுக்கு விடிவினைப் பெற்றுக் கொடுக்கப்போகின்றனராம். வேட்பாளர்களை தெரிவு செய்வதிலே அவர்களுக்குள் குழப்பம். இவ்வளவு காலமும் எதிர்க்கட்சி அரசியல் நடாத்தி மக்களை அடமானம் வைத்து சுகபொக வாழ்க்கை வாழ்ந்த்து போதாது என்று கிழக்கு மாகாணசபை தேர்தலிலும் மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். மக்கள் இவர்களின் மறு முகங்களை நன்கு உணர்ந்துவிட்டனர் கிழக்கு மக்கள் எப்போதோ அவர்களை தூக்கி எறிந்துவிட்டனர். மக்களின் ஆதரவு தமக்கு இல்லை என்பதனை  நன்கு உணர்ந்துவிட்டனர். கூட்டமைப்பினருக்கு பிரச்சாரம் செய்வதற்குக்கூட கிழக்கு மக்கள் தயாராக இல்லை. வடக்கிலிருந்து வருகின்ற ஒரு குழுவினர் முகாமிட்டு பிரச்சாரம் செய்யப்போகின்றனராம். நாய்க்கு ஏன் போர்த்தேங்காய் கிழக்கை கிழக்காக இருக்க விடுங்கள் நீங்கள் உங்கள் வேலைகளைப் பாருங்கள் எங்கள் மக்கள் யாரை முதலமைச்சராக்குவது என்பதனைத் தீர்மானிக்கட்டும்.

தொடரும்....


read more...

Monday, 9 July 2012

கிழக்கு மாகாணசபைக்காக நாக்கை தொங்கவிட்டு நாயாய் அலையும் கூட்டம்



கிழக்கு மாகாணத்தின் இன  விகிதாசாரம் தெரியாமல் கிழக்கு மாகாணசபையினை நாமே கைப்பற்றுவோம், முதலமைச்சர் பதவி எமக்குத்தான் என்றெல்லாம். கூட்டமைப்பினர் தம்பட்டமடிப்பது சிறு பிள்ளைத்தனமானது. கிழக்கு மாகாணத்தில் ஒரு சமூகம் மாத்திரம் மாகாணசபை ஆட்சியை அமைக்க முடியுமா இல்லையா என்பதனைக்கூட அறியாத கூட்டமைப்பினர் கிழக்கு மக்களுக்கு என்ன செய்யப்போகின்றனர்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை மூவின மக்களும் வாழ்ந்து வரும் ஒரு பிரதேசம், கிழக்கு மாகாணத்தின் அரசியல் நிலைமைகளை எடுத்துப் பார்க்கின்றபோது கிழக்கு மாகாணத்தின் இன விகிதாசாரம் கிழக்கு மாகாண அரசியலை தீர்மானிப்பதிலே பெரும் பங்கு வகிக்கின்றது. தனித்து ஒரு சமூகத்தினால் அட்சி அமைக்க முடியாத இன விகிதாசாரம் கிழக்கு மாகாணத்திலே இருக்கின்றது.

இன்று கூட்டமைப்பினர் சொல்வதுபோது தமிழர்கள் மட்டும் ஆட்சியமைக்க முடியுமா? வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு பேசிக்கொண்டிருக்கின்றனர். தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான விகிதாசார வேறுபாடு ஒருசில வீதங்களே. முஸ்லிம்கள் உச்ச அளவில் வாக்களிப்பார்கள் குறிப்பாக 80-90 வீதம் வாக்களிப்பார்கள். ஆனால் தமிழர்களோ 50-60 வீதம் வாக்களிப்பார்கள். இது கடந்தகால புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. தொடரும் பகுதிகளில் புள்ளிவிபரங்களை இணைக்கிகின்றேன். மறு புறத்தில் இத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்களிப்பு வீதம் இன்னும் அதிகரிக்கலாம். காரணம் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக பெற வேண்டும் என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக இருக்கின்றனர்.

கிழக்கின் இன விகிதாசாரமோ வாக்களிப்பு வீதங்களோ அரசியல் நிலைமைகளோ தெரியாமல் எங்களுக்குத்தான் முதலமைச்சர் கிடைக்கும் என்று கூட்டமைப்பினர் சொல்வதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. அவர்களின் ஒரே நோக்கம் தமிழ் முதலமைச்சரை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதாகும். அதுவும் குறிப்பாக பிள்ளையானை அரசியலில் இருந்து துரத்தவேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்கம்.

இன்று கிழக்கிலே ஒரு பாரிய அரசியல் சக்தியாக பிள்ளையானும் அவரது கட்சியும் உருவெடுத்துவிட்டது. இனிமேலும் பிள்ளையானை விட்டுவைத்தால் கிழக்கிலே தாம் அரசியல் நடாத்த முடியாது. கிழக்கு மாகாணம் பாரிய அபிவிருத்தி கண்டு வருகின்றது. கிழக்கு மக்கள் பிள்ளையான் பின்னால் அணி திரள்கின்றனர். என்பதை எல்லாம் பார்க்கின்றபோது கூட்டமைப்பினருக்கு என்றுமில்லாத ஒரு அச்சமும் நடுக்கமும் பிடித்துவிட்டது.

பூசாரியை வைத்து பூசை முடித்து சில சதித் திட்டங்களைத் தீட்டி கிழக்கு மாகாணத்தில் தமிழ் முதலமைச்சரை இல்லாமல் செய்ய முயற்சிக்கினறனர். பாவம் இவர்கள் கிழக்கு மக்கள் உண்மைகளையும் யதார்த்தங்களையும் உணர்ந்துவிட்டனர். கூட்டமைப்பினரை தூக்கி எறிந்துவிட்டனர் என்பதை அறிந்தும் தாம் தோல்லி அடைவோம் என்று தெரிந்தும் ஆசாமியும் அவரது அடிவருடிகளும் முதலமைச்சர் பதவி ஆசையோடு நாக்கை தொங்ஙவிட்டு நாயாய் அலைகிறார்கள்.

காரணம் பல தசாப்த அரசியல் நடத்திய கூட்டமைப்பினருக்கு எப்படி அரசியல் செய்வது என்பது தெரியாது. பிள்ளையான் நடாத்திய அரசியலைப் பார்த்து தாமும் பிள்ளையானைப் போன்று கிழக்கு மாகாணசபையை ஆட்சி செய்து பார்ப்போம் என்ற ஆசைதான்

தொடரும்...
read more...

Thursday, 5 July 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள் - கொக்கரிப்பு -04

கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலையும் மக்களின் அரசியல் மீதான அக்கறை பற்றியும் இந்தத் தொடரில் ஆராயலாம் என நினைக்கின்றேன். அண்மைக் காலமாக கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அரசியலிலும் வெறுப்புக் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இதனால் தேர்தல்களில் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தனர். மறு புறத்தில் தமது அரசியல் இஸ்திரத் தன்மையினைப் பேணுவதிலும் தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதிலும் தமது வாக்குப் பலத்தினை முஸ்லிம் மக்கள் பயன்படுத்தத் தவறியதில்லை.

இவ்வாறு தமிழ் மக்கள் அரசியலில் நாட்டமற்றுச் சென்றமைக்கான முக்கிய காரணம் கடந்தகால அரசியல்வாதிகள் மக்களை திட்டமிட்டு ஏமாற்றியிருக்கின்றனர். என்பதனை மக்கள் நன்கு உணர்ந்ததன் வெளிப்பாடே மக்கள் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தனர். தேர்தல் காலங்களில் வருவார்கள் ஆயிரம் பொய்களையும் உணர்ச்சி வார்த்தைகளையும் மக்கள் மத்தியில் விதைத்தவிட்டு மக்கள் ஓட்டுப் போட்டதும் தெரிவு செய்யப்பட்டபின் அந்த மக்களையும் அவர்களின் அவலங்களையும் மறந்து அரசாங்கம் வழங்கும் சலுகைகளைப் பெற்று சுயபோக வாழ்க்கை வாழ்ந்து வருவார்கள்.

எப்போதாவது மக்களை சந்தித்தால் உணர்ச்சி வார்த்தைகளைக்கூறி மக்களை சூடேற்றி பலிக்கடாவாக்குவது பாராளுமன்றம் சென்று எதிர்க் கட்சி ஆசனங்களிலே அமர்ந்திருந்து பாராளுமன்றக் கதிரைகளைச் சூடேற்றியதைத் தவிர மக்களுக்கு கடந்தகால தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்தனர்? ஆனால் முஸ்லிம் மக்களும் அரசியல்வாதிகளும் அரசியல் யதார்த்தங்களை நன்கு உணர்ந்து செயற்பட்டு அரசாங்கத்தில் அங்கம் அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்று அரசாங்கத்துடன் பேரம்பேசி தமது அரசியல் இஸ்திரத் தன்மையினைப்பேணி தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்து வருகின்றனர்.

இந்த மாகாணசபைத் தேர்தலிலும் கிழக்கிலே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெறவேண்டும் என்பதில் முஸ்லிம் மக்களும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் முனைப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடாது என்பதற்காக கூட்டமைப்பினரும் அவர்களுடன் சார்ந்த ஒரு சிலரும் சில சதித் திட்டங்களை செய்து வருகின்றனர்.

இன்று கிழக்கிலே ஒரு கட்சி உதயமாகி யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட கிழக்கை துரிதமாக அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்கின்றது. கிழக்கு மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர் என்பதனை உணர்ந்த கூட்டமைப்பினர் இவைகளை இல்லாமல் செய்யவே கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்திருக்கின்றனர்.

இன்று கிழக்கிலே பிள்ளையான் முதலமைச்சராக பதவியேற்றதன் பின்னர் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்று கிழக்கு மாகாணம் துரிதமாக வளர்ச்சியடைந்து வருவதை எவராலும் மறுக்கவும் முடியாது இடம்பெற்ற அபிவிருத்திகளை மறைக்கவும் முடியாது. யாரால் இவ்வாறான அபிவிருத்திகள் சாத்தியமாகின யார் மக்களுக்காக சேவை செய்கின்றனர் என்பதனை கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்துவிட்டனர். இதன் காரணமாகவே தமிழரசுக் கட்சியினரின் தேசிய மாநாட்டை புறக்கணித்தனர். அவர்களின் மாநாடு மட்டக்களப்பில் படு தோல்வியில் முடிவடைந்தது. இதனை பார்க்கவும் (தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு வெற்றியா? தோல்வியா? http://www.shanthru.com/2012/05/blog-post_28.html) கூட்டமைப்பினர் மாhகாணசபையை தாம் கைப்பற்றுவோம் முதலமைச்சர் பதவி தமக்குத்தான் என்று கொக்கரித்துத் திரிகின்றனர். இவர்கள் எல்லாம் படித்த முட்டாள்காளா? கிழக்கு மாகாணத்தில் இன விகிதாசாரம் தெரியாமலா இவ்வாறு பிதற்றுகின்றனர். தமிழர்கள் மாத்திரம் வாக்களித்து ஆட்சியமைக்க முடியுமா? இவர்கள் நாங்கள்தான் முதலமைச்சர் பதவியை பெறுவோம் என்;று சொல்வது சிறு பிள்ளைத் தனமாக இருக்கின்றது...

தொடரும்.....
read more...

Wednesday, 4 July 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள் - கொக்கரிப்பு 03

கடந்த பதிவில் குறித்த நண்பர் விதண்டாவாதமான கருத்துக்களை தெரிவித்திருந்தார் அவருக்கு இப்பதிவிலே சில கருத்துக்களைத் தருகின்றேன். முதலில் நீ்ங்கள் உண்மைகளையும், நிஜங்களையும் அறிந்து கொள்ளுங்கள் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி அடையவில்லை என்பது முட்டாள்தனமானது.

யாழ்ப்பாண மக்களிடம் பிரதேச வாதம் இல்லை என்று சொல்வது உங்கள் அறியாமை நான் பல யாழ்ப்பாண நண்பர்களுடன் பழகி இருக்கின்றேன் அவர்களே இதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றர்.

கருணா எதற்காகப் பிரிந்தார் அவரது தற்போதைய நடவடிக்கைகள் என்ன என்பது வேறு விடயம். அவரின் நடடிக்கைகள் தொடர்பில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் கருணா பிரிந்து வந்தபோது அவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையே.
அடுத்து பிள்ளையான் சொத்து சேர்ப்பதாகச் சொல்லி இருக்கின்றீர்களே எங்கே சொத்துச் சேர்த்திருக்கின்றார் என்பதனை பட்டியலிடுங்கள் கண்ணை மூடிக்கொண்டு கதைப்பதை விட்டுவிட்டு. எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு அப்பட்டமான பொய்களைக் கதைக்கலாம். ஆனாலும் உண்மைகள் உறங்குவதில்லை. போராளியாக இருந்த பிள்ளையான் இன்று ஒரு ஜனநாயக அரசியல் பாதையில் வந்திருக்கின்றார். அவருக்கும் ஆசா பாசங்கள் இருக்கின்றன அவர் நகைகள் போடக்கூடாது என்பது உங்கள் முட்டாள்தனம். புலிகள் அமைப்பில் இருந்த போராளிகள் இன்று நகைகள் அணியவில்லையா? புலிகளின் நடவடிக்கைகள் தவறானவை என்று பிரிந்து வந்த பிள்ளையான் எதற்கு புலிகளின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். எதற்காக நகை அணியக்கூடாது.

அரசால் வழங்கப்படுகின்ற சலுகைகளை கூட்டமைப்பினர் பெறுகின்றனர் என்பதற்கு ஆதாரம் என்னிடம் கேட்பதற்கு முன்னர் உங்கள் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுப் பாருங்கள். அரியநேந்திரன் அவர்கள் அரசிடம் இருந்து மூன்று வேலைவாய்ப்புக்களைப் பெற்று மனைவிக்கும், மச்சாளுக்கும், மகளுக்கும் கொடுத்திருக்கின்றார். இதை அரியநேந்திரனிடம் கேட்டுப் பாருங்கள்.

மிக அண்மையில் நடந்த சம்பவம் செல்வராஜா அவர்கள் ஒரு அமைச்சரைச் சந்திக்க முந்திரிப்பருப்பு தயிர் போன்றவற்றை கொண்டு சென்றிருக்கின்றார். எதற்காகத் தெரியுமா? குடிநீர் இல்லாமல் கஸ்ரப்படுகின்ற துறைநீலாவணை மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக வந்த திட்டத்தினை தடுத்து தனது கிராமமான கல்லாற்றுக்கு அத் திட்டத்தினை மாற்றி கேட்டிருக்கின்றார் குறித்த அமைச்சரிடம். இது மாத்திரமல்ல தமது உறவினர்களுக்கு அரசிடமிருந்து அரசிடமிருந்து பல உதவிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார். அண்மையில்கூட அரசாங்கத்தின் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்களே கூட்டமைப்பினர்.

எல்லைப் புறங்களை பாதுகாக்கவும் எல்லைப்புற கோவில்களை புனரமைக்குவும் பிள்ளையான் அவர்கள் பெருந்தொகையை ஒதுக்கி இருக்கின்றார். கூட்டமைப்பினர் விகாரை கட்டுகிறார்கள், காணி பிடிக்கின்றார்கள் என்று அறிக்கைகள் மூலம் கொக்கரிப்பார்கள் அதை வைத்து அரசியல் நடத்துவார்கள் ஆனால் பிள்ளையான் எதையும் செயலில் காட்டிவிடுவார். முஸ்லிம்களால் பிடிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்கள் எத்தனை காப்பாற்றப் பட்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

விகாரைகள் கட்டப்படுகின்றன என்று சொல்லும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன். சிங்களப் பிரதேசங்களிலே தமிழர்கள் கோவில்கள் கட்டவில்லையா? சிங்களவர்கள் செறிந்து வாழும் கொழும்பிலோ தமிழர்கள் எத்தனை பெரிய கோவில்களைக் கட்டியிருக்கின்றனர். உங்களை சங்கள மக்கள் தடுத்து நிறுத்தியிருக்கலாம்தானே?

பிள்ளையான் குழு கொள்ளையிட்டதாகச் சொல்கின்றீர்களோ நீங்கள் பத்திரிகைகள்கூட பார்ப்பதில்லைபோலும் வங்கிக் கொள்ளை உட்பட அனைத்துக் கொள்ளையுடனும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் எவரும் பிள்ளையான்குழு அல்ல. இதுகூட தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு பேசுகின்றீர்கள்.

அப்பட்டமான பொய்களை சொல்ல நினைக்காதீர்கள் கொலை கொள்ளைகள் தொடர்பாக UN REPORT இருப்பதாகச் சொல்லும் நீங்கள் அதனை வெளியிடுங்கள். பிள்ளையான்குழு எந்த ஒரு புலனாய்வு அமைப்புடனும் சேர்ந்து செயற்படவில்லை. ஆட்களை கடத்தவும் இல்லை கொள்ளை இடவும் இல்லை. அவர்கள் ஆயுதம் ஏந்திய காலமும் இருந்தது. வன்னிப்புலிகள் வந்து பிள்ளையானின் ஆட்களை சுட்டுவிட்டுப்போக பிள்ளையான் குழுவினர் கையைக்கட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்றா சொல்கின்றீர்கள்.

வெருகல் படுகொலை கிட்டத்தட்ட 150 போராளிகள் கொடுரமாக வன்னிப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களில் அதிகமான பெண் போராளிகளும் அடங்குவர். முந்திய பதிவிலே கொடுரமான சித்திரவதை என்று நான் சொன்னது பாலியல் ரீதியான சித்திரவதைகளைத்தான். அது மட்டுமல்ல அந்தக்கால கட்டத்தில் வன்னியிலே இருந்த மட்டக்களப்பு போராளிகளை கொடுரமாகச் சித்திரவதைப் படுத்திய விடயம் உங்களுக்குத் தெரியுமா?

நான் ஒரு ஊடகம் சார்ந்தவன் வாகரைப் பிரதேசத்திலே புலிகள் அமைப்பிலே இருந்த 200 க்கு மேற்பட்ட போராளிகளை பேட்டி கண்டிருக்கின்றேன் அவர்களில் அதிகமானவர்கள் பெண் போராளிகள். கருணா பிரிந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் கடுமையான சித்தரவதைகள் செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஒரு பெண் போராளியின் கால்களைக்கூட முறித்திருந்தார்கள்.

பிள்ளையான் அரசோடு சேர்ந்திருப்பதாக குற்றம்சாட்டுகிறீர்கள். எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காக அரசுடன் சேர்ந்திருக்கும் அதேவேளை அரசுக்கு எதிராகவும் செயற்பட தயங்குவதுமில்லை. அண்மையில் நாடு, நகர சட்டமூலம் வந்தபோது அதனை எதிர்த்தவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணசபை என்பதனை எவராலும் மறுக்க முடியாது. இவ்வாறு பல விடயங்கள் பின்னர் அவைகளை விரிவாக தருகின்றேன்.

படுகொலைகளை பட்டியலிடும் நீங்கள் கிழக்கிலே கொல்லப்பட்ட புத்திஜீவிகளையும், கிழக்குப் போராளிகளையும் ஏன் பட்டியலிடவில்லை. அரியநேந்திரனிடம் கேளுங்கள் அவர் யாரை கொலை செய்துவிட்டு பாராளுமன்றம் வந்தார் என்பதனை.

தொடரும்.....




read more...

Tuesday, 3 July 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள் - கொக்கரிப்பு 02

முந்திய என்னுடைய பதிவிற்கு ஒரு நண்பர் நீண்ட ஒரு கருத்துரையினை விட்டுச் சென்றார் அவருக்கு பதிலாகவே இந்த பகுதி இடம்பெறுகின்றது.

உங்கள் கருத்துக்கள் அடிமட்ட முட்டாள்தனமாக இருக்கின்றது. வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு பிள்ளையான் கொலை செய்தான் கடத்தினான் கப்பம் பெற்றான் என்றெல்லாம் சொல்வது உங்களைப்போன்ற யாழ்ப்பாண மேலாதிக்கவாதிகளின் கொள்ளை. கொலைகளை தடுத்து நிறுத்தி கிழக்கில் உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்திய பெருமை பிள்ளையானையே சாரும்.

வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு கொலை செய்தான் கொள்ளையடித்தான் என்று குற்றம்சாட்டாதீர்கள் ஆதாரங்களோடு உண்மைகளைச் சொல்லுங்கள்.

கிழக்கு மாகாண புத்திஜீவிகளைக் கொன்றொழழித்தது யார் என்பதனை மறந்துவிட்டீர்களா? இராஜன் சத்தியமூர்த்தி உட்பட எத்தனையோ புத்தியீவிகளை கொன்றொழித்தவர்கள் யார்? கிழக்கிலே புத்திஜீவிகள் கொன்றொழிக்கப்படுகின்றபோது இந்தக் கூட்டமைப்பினர் மெளனம் சாதித்தது ஏன்? சாவது கிழக்குத் தமிழன் என்பதனாலா?

புலிகளிலிருந்து கருணா பிரிந்து வந்தபோது. பல வெற்றிச் சமர்களைப் படைத்து உங்களையும் வடக்கையும் காப்பாற்றிய காவல் காத்த கிழக்குப் போராளிகளை கொன்றொழித்தவர்கள்யார்? கிழக்குப் பொராளிகள் பிரிந்து வந்தபோது வெருகலிலே சகோதரப் படுகொலைகளை மேற்கொண்டு 150க்கு மேற்பட்ட போராளிகளை கொன்றொழித்தவர்கள் யார்? இதிலே வெட்கித் தலை குனியவேண்டிய விடயம் உங்களோடு சேர்ந்து போராடிய பெண் போராளிகளை வெருகலில் கதறக்கதற சித்திரவதை செய்து கொன்று குவித்தீர்கள். உங்களுக்காக பல வெற்றிச் சமர்களை புரிந்தவர்களுக்கு நீங்கள் செய்த கைமாறு இதுதானா?

ஒன்று இரண்டல்ல பல நூற்றுக்கணக்கான புத்திஜீவிகளும் நூற்றுக்கணக்கான போராளிகளும் கிழக்கிலே கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அப்போது எங்கே போனார்கள் இந்தக் கூட்டமைப்பினர்?

இதுவரை கிழக்கு மக்களுக்காக இந்தக் கூட்டமைப்பினர் என்ன செய்திருக்கின்றனர்? தாம் சொத்துச் சேர்த்தனர், அரசாங்கத்திடம் சலுகைகளைப் பெற்று அனுபவித்து வருகின்றனர். கூட்டமைப்பு அரசியல்வாதிகள் சொத்துச் சேர்க்கவில்லையா? அரசாங்கத்திடமிருந்து சலுகைகளைப் பெறவில்லையா? அமைச்சர்களோடு சேர்ந்து கொஞ்சிக் குலாவுவது பிள்ளைகள் உறவினர்களுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெறுவது இவை எல்லாம் கூட்டமைப்பினர் செய்யலாம்.

ஆனால் 30 வருடங்களாக யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட கிழக்கினை அபிவிருத்தி செய்ய பிள்ளையான் அரசுடன் பேரம்பேசினால் துரோகம் என்கின்றீர்கள் எங்கே இருக்கின்றது உங்கள் நீதி நியாயம்?

எங்கேயோ இருந்துகொண்டு பிள்ளையான் கொள்ளையடிக்கின்றான் சொத்துச் சேர்க்கின்றான் என்று சொல்வது உங்கள் முட்டாள்தனம். முதலில் கிழக்கின் தற்போதைய நிலைமைகளையும் உண்மைகளையும் யதார்த்தங்களையும் உணர்ந்துகொள்ளுங்கள்.

கிழக்கிலே தற்போது என்ன நடடக்கின்றது யார் மக்களுக்காக சேவை சேய்கின்றார் என்பதனை மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். இனிமேலும் கிழக்கு மக்களை எவராலும் ஏமாற்ற முடியாது. இன்று கிழக்கு மாகாணம் துரித கதியில் அபிவிருத்தி நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. இவை யாரால் சாத்தியமானது என்பது கிழக்கு மக்களுக்கு தெரியும். கிழக்கு மக்களை இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள். கிழக்கை கிழக்காகவே இருக்க விடுங்கள்.


தொடரும்...
read more...

Monday, 28 May 2012

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு வெற்றியா? தோல்வியா?


பிள்ளையானின் பின்னால் ஒன்று பட்ட மட்டக்களப்பு மக்கள்

தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு 25, 26, 27ம் திகதிகளில் மட்டக்களப்பில் இடம் பெற்று முடிந்திருக்கின்றன. இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்ததா அல்லது தோல்வியில் முடிவடைந்ததா என்பதனை ஆராய்வதற்கு முன்னர் இம் மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னரும் இறுதி வரையும் நடைபெற்ற சில சம்பவங்களையும், விடயங்களையும் நாம் ஆராய வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மட்டக்களப்பில் இடம்பெற இருக்கின்றது எனும் செய்தி வெளியாகிய நாள்முதல் இம் மாநாட்டுக்கு மட்டக்களப்பில் பாரிய எதிர்ப்பு இருந்தது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. இன்று சில இணையத்தளங்கள் பிள்ளையான் குழுவினர் மாநாட்டை குழப்ப சதி செய்தனர் என்று குறிப்பிட்டு இருக்கின்றன. இது முற்று முழுதான உண்மையல்ல என்பதனை மட்டக்களப்பு மக்கள் அறிவர்.

உண்மையில் இன்றைய கால கட்டத்தில் மட்டக்களப்பு மக்கள் மத்தியிலே முதலமைச்சர் பிள்ளையான் மீது நம்பிக்கையும் ஒரு பற்றும் இருக்கின்றது. காரணம் அவரது அயராத உழைப்பும் கிழக்கின் துரித அபிவிருத்தியுமாகும். இன்று எந்த ஒரு விழா மட்டக்களப்பில் இடம்பெற்றாலும் முதலமைச்சரை பிரதம அதிதியாக அழைத்து விடுவார்கள். அவர் மீது மக்களுக்கு நம்பிக்கையும் மதிப்பும் இருக்கின்றது.

மறு புறத்திலே கிழக்கில் ஒரு தனித்துவ கட்சி இருக்கின்றபோதுதான் கிழக்கை துரிதமாக அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்பதனையும் மக்கள் உணர்ந்திருக்கின்றனர். இது ஒரு புறமிருக்க  கூட்டமைப்பினரின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பாக பாரிய அதிருத்தியில் மட்டக்களப்பு மக்கள் இருந்தனர்.  பல அமைப்புக்கள் இம் மாநாட்டினை புறக்கணிக்கும்படி அழைப்பு விடுத்திருந்ததுடன் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு கறுப்பு கொடி போராட்டத்தினையும் நடாத்தி இருந்தனர். 

தமிழரசுக் கட்சியினர் தமது மாநாட்டை தேவநாயகம் மண்டபத்திலே நடாத்துவதற்கு  ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.  மட்டக்களப்பு மக்களின் ஆதரவு தமக்கு இல்லை என்பதனை படிப்படியாக உணர்ந்து கொண்ட தமிழரசுக் கட்சியினர். மாற்று வழிகளிலே தமக்கு ஆதரவு தேடவும் முன் வந்திருந்தனர்.

தமிழரசுக் கட்சியின் மாநாடு இடம்பெற இருந்த தேவநாயகம் மண்டபம் தீப்பிடித்து மேடைப்பகுதி எரிந்தது. இது மாநாட்டைக் குழப்ப சிலர் சதி செய்வதாக கூட்டமைப்பினர் கூறினர். சின்னச்சின்ன விடயங்களுக்கெல்லாம். பெரிதுபடுத்தி அறிக்கைகளைவிடும் கூட்டமைப்பினர் இத் தீப்பிடித்த விடயத்தினை சாதாரண விடயமாக மட்டுமே எடுத்துக் கொண்டு சிலர் சதி செய்கின்றனர் என்று பிரச்சாரம் செய்தனர். 

மட்டக்களப்பில் தமக்கு ஆதரவு இல்லை என்பதனை உணர்ந்த கூட்டமைப்பினர். ஆதரவு தேடுவதற்கு தாம் மேற்கொண்ட யுக்தியே மண்டபத்தின் மேடைப்பகுதி எரிப்பு. இது கூட்டமைப்பினர் திட்டமிட்டு செய்த செயலாகும்.

உடனடியாக மாநாடு இடம்பெறும் இடம் மட்டக்களப்பு ஊறணி அமேரிக்கன் மிஷன் மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. 27ம் திகதி மாநாடு இடம்பெற்றது. இம் மாநாடு வெற்றியா? தோல்வியா? பாரிய வெற்றியாக கூட்டமைப்பினர் மார் தட்டிக் கொள்கின்றனர். 
உண்மையில் வெற்றியா? அமேரிக்க மிஷன் மண்டபத்தில் 300ர-400 பேர்தான் இருக்க முடியும். இம் மாநாட்டுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு பஸ்களிலும், திருகோணமலையிலிருந்து இரண்டு பஸ்களிலும், அம்பாறையிலிருந்து ஒரு பஸ்ஸிலும் கொழும்பிலிருந்தும் மலையகத்திலிருந்தும் ஆதரவாளர்கள் வந்திருந்தனர். 

யாழ்ப்பாணம் , திருகோணமலை, அம்பாறை மாவட்ட்ளிலிருந்து வருகை தந்தவர்கள் ஒரு பஸ்ஸில் 50 பேர் வீதம் பார்த்தால் 250 பேர். தனிப்பட்ட வாகன்களிலும் பலர் மூன்று மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்திருந்தனர். அதனைவிட கொழும்பு மற்றும் மலையகத்திலிருந்தும் ஆதரவாளர்கள் வருகை தந்திருந்தனர். அதனைவிட கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் 50 மேற்பட்டவர்கள். 

மொத்தமாக மண்டபத்தில் 300-400 பேர் மட்டுமே இருக்க முடியும் மேலே சொன்ன கணக்கின்படி பார்த்தாலே மண்டபம் நிநை்துவிடும். ஆனாலும் மாநாட்டை குழப்ப வந்ததாக  கூட்டமைப்பினர் கூறும் மண்டபத்திற்குள்ளே சர்ச்சையை ஏற்படுத்தியவர்கள் 50 க்கு மேற்பட்டவர்கள். இவை அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கின்றபோது மாநாட்டுக்கு மட்டக்களப்பிலிருந்து சென்றவர்கள் 50 க்கும் குறைவானவர்களே எனது களுதாவளைக் கிராமத்தினைச் சேர்ந்தவர்தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை களுதாவளைக் கிராமத்திலிருந்து மாநாட்டுக்கு சென்றவர்கள் இரண்டு பேர் மட்டுமே. கனகசபை மற்றும் இன்னொருவர். இந்த மாநாட்டின் உப தலைவரான கனகசபை தனது சொந்தக்காரர்களைக்கூட மாநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு களுதாவளையில் இருந்து சென்றவர்கள் 374 பேர். இவர்களை யாரும் வற்புறுத்தி அழைக்கவில்லை தாமாகவே மாநாட்டுக்கு வந்தவர்கள்.

கறுப்புக் கொடிகள் கட்டியது துண்டுப் பிரசுர்கள் வெளியிட்டது பிள்ளையான் குழுவினர் என்று யோகேஸ்வரன் சொல்கின்றார். அப்படியானால் மட்டக்களப்பு மக்கள் ஏன் மாநாட்டுக்கு வரவில்லை. மாநாட்டை புறக்கணித்தனர். பிள்ளையான் சொல்வதனை கேட்கின்றனர். பிள்ளையானின் பக்கம் மட்டக்களப்பு மக்கள் நிக்கின்றார்கள் அல்லவா?

இந்த மாநாடு தோல்லியா வெற்றியா என்பதனை மட்டக்களப்பு மக்கள் புறக்கணித்ததனை வைத்தே தீர்மானிக்கலாம். இம் மாநாடு மட்டக்களப்பு மக்கள் கூட்டமைப்பினரை தூக்கி எறிந்துவிட்டனர் பிள்ளையானின் பின்னால் ஒன்று பட்டுவிட்டனர் என்பதனை பறை சாற்றுகின்றன. 
இறுதியாக யோகேஸ்வரனிடம் ஒரு கேள்வி உங்கள் ஊரிலிருந்து எத்தனைபேர் மாநாட்டுக்கு வந்திருந்தனர்  என்று சொல்ல முடியுமா?

read more...

Wednesday, 23 May 2012

யார் இந்த இராஜதுரை பகுதி -02

அடுத்துவந்த 1956 ஆம் ஆண்டு தேர்தலுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் தமிழரசுக்கட்சியை போட்டியிட வைப்பதிலும் இராஜதுரை மும்முரமாக உழைத்தார். கல்குடாவில் மாணிக்கவாசகரும், பட்டிருப்பில் இராஜமாணிக்கமும் இராஜதுரையால் தமிழரசுக்கட்சிக்காக உள்வாங்கப்பட்டனர். மட்டக்களப்புத் தொகுதியில் தானே முன்வந்து போட்டியிட துணிந்தார்.
பகுத்தறிவு இயக்கம், மட்டக்களப்பு முற்போக்கு வாலிபர் சங்கம், வரியிறுப்பாளர்கள் சங்கம், இலக்கியம், எழுத்துலகம் என்று விரிந்துகிடந்த தனது ஆற்றல்களையும் அனுபவங்களையும் தமிழரசுக்கட்சிக்காக தாரைவார்த்தவர் இராஜதுரையாகும். தமிழரசுக்கட்சியால் வளர்ந்தவர்கள் பலர் உண்டு. இன்றும் தமிழரசுக்கட்சியின் பெயரை உச்சாடனம் செய்வது ஒன்றே பதவி சுகத்தை தக்கவைப்பதற்கான அரசியல் மந்திரமாக பலருக்கு இருக்கின்றது. (இந்த பட்டியல் இரா.துரைரெட்ணம் வரை நீண்டு செல்கிறது) இராஜதுரை விடயத்தில் இந்த சூத்திரம் தலைகீழானது. இராஜதுரை தமிழரசுக்கட்சியால் வளர்ந்தார் என்பதைவிட இராஜதுரையால்தான் தமிழரசுக்கட்சி வளர்ந்தது என்பதே சாலப்பொருத்தமும் சத்தியமுமாகும். 1956 ஆம் ஆண்டு தேர்தலில் மட்டக்களப்பு தொகுதியின் இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்டுக்காசு இழக்கவைத்து அபார வெற்றியீட்டினார் இராஜதுரை. அன்று தொடங்கி ஆறு தேர்தல்களில் தொடர்ச்சியாக ஒரே தொகுதியில் வெற்றியீட்டிய தமிழ் தலைவர்கள் இராஜதுரையை தவிர வேறு யாருமிலர்.
தமிழர்களுடன் முஷ்லிம்களும் இணைந்து வாழும் மட்டக்களப்பு தொகுதியில் தன்னால் தோற்றகடிக்கப்பட்ட சின்னலெவ்வை அவர்கள் பதவியை இழந்ததன் ஊடாக முஷ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டதென்பதை இராஜதுரை உணர்ந்துகொண்டார். அதன் அடிப்படையில் முஷ்லிகளின் பிரதிநிதித்துவத்தை தொடர்ச்சியாக உறுதிப்படுத்திக்கொள்ள மட்டக்களப்பு தொகுதியை இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கும் முயற்சியில் இராஜதுரை இறங்கினார். தேர்தல் ஆணையாளர் தல்கொட பட்டியா முன்னிலையில் சாட்சியம் அளித்து மட்டக்களப்பில் இரட்டை அங்கத்துவ தொகுதியின் அவசியம் பற்றி விளக்கிக் கூறினார்.
அதன்பலனாகவே மட்டக்களப்பு தொகுதியானது இரட்டை அங்கத்துவ தொகுதியாக்கப்பட்டமையும் தொடர்ச்சியாக முஷ்லிம்களின் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படவும் ஏதுவாயிற்று.
1956 ஆம் ஆண்டு முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான போது மட்டக்களப்பு நகரின் கூலித்தொழிலாளர்களும், நகரசுத்தித் தொழிலாளர்களும் உரிய வசிப்பிடம் இன்றி அல்லலுற்றதை கண்ணுற்றார். புகையிரத நிலையத்தை அண்டிய முடிக்குரிய காணிகள் அனைத்தையும் காடுவெட்டி குடிசைகள் அமைக்கத் தூண்டினார். அதற்காக அரசஅதிகாரிகளால் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டார். தனது பாராளுமன்றப் பதவியை பயன்படுத்தி பாராளுமன்றில் தொழிலாளர்களின் காணிப்பிரச்சனையை எழுப்பியதின் ஊடாக அன்றைய காணிஅமைச்சர் சி.பி.டி.சில்வாவைக் கொண்டு அவர்களுக்கு காணி உறுதி வழங்கச்செய்தார். அந்த குடியேற்றப்பிரதேசங்களை இன்று இருதயபுரம் எனும் பெரும் பிரதேசமாக எழுந்துநிற்கின்றது.
கடல் கடந்த நாடுகளில் நிறுவப்பட்ட முதலாவது காந்திசிலையை மட்டக்களப்பு மாநகரில் இராஜதுரையே திறந்துவைத்தார். அண்மையில் மட்டக்களப்பு நகரில் உடைக்கப்பட்ட மகாத்மாகாந்தியின் சிலையே அதுவாகும்.

1960 ஆம் ஆண்டுவரை சிறுநகரசபையாக இருந்துவந்த மட்டக்களப்பை பெருநகரமாக மாற்ற இராஜதுரை அவர்கள் பெருமுயற்சி எடுத்தார். மட்டக்களப்பின் புறநகர் பகுதியாக இருந்துவந்த கல்லடி கிராமசபைக்குட்பட்ட கிராமங்களை மட்டக்களப்பு நகருடன் இணைத்து மாநகரசபையாக மாற்றினார். மட்டக்களப்பு மாநகர சபைக்கு முன்னே வெறிச்சோடிக்கிடந்த முற்றவெளி மைதானத்தை புனநிர்மானம் செய்து ஷ்ரேடியங்கள் அமைத்து மட்டக்களப்பின் விளையாட்டுத்திறனை தேசிய அளவில் பரிணமிக்கச் செய்த அருட்தந்தை வெபர் அவர்களின் பெயரை அந்த ஷ்ரேடியத்துக்கு சூட்டி மகிழ்ந்தார்.
1961 ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியில் முதற்தடவையாக மே தினக்கூட்டம் ஒன்றை மட்டக்களப்பில் நடத்தி சாதனை படைத்தவர் இராஜதுரை. வைரமுத்து என்கின்ற ஒரு சாதாரண தொழிலாளியை அம்மேதின ஊர்வலத்திற்கு தலைமை ஏற்கச்செய்து தமிழரசுக்கட்சியின் பாரம்பரிய மேட்டுக்குடிப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றார். அதுமட்டுமன்றி தமிழரசுக்கட்சியின் சார்பிலான அந்த மே தினக்கூட்டத்தை கம்ய+னிசக்கட்சிக்காக மட்டக்களப்பில் அயராது பாடுபட்டுக்கொண்டிருந்த கிரு~;ணகுட்டியை கௌரவிக்கும் விழாவாக மாற்றினார். மட்டக்களப்பு மக்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளையாற்றி தொடர்ச்சியாக பாடுபட்டுவந்த இராஜதுரைக்கு உரிய கௌரவம் கட்சியில் வழங்கப்படவில்லை. தந்தை செல்வா இறந்தபின்னர் தலைமைப் பொறுப்புக்கு தகுதியாக இருந்த இராஜதுரை திட்டமிட்டவகையில் கட்சியால் ஒதுக்கப்படத் தொடங்கினார். கட்சியின் உருவாக்க காலத்தில் இருந்து தந்தை செல்வாவின் வலதுகையாக செயற்பட்டுவந்த இராஜதுரை அவர்கட்கு தந்தையின் மறைவை அடுத்து தலைமைப்பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த உரிமை மறுக்கப்பட்டது மட்டுமல்ல அவரை கட்சியில் இருந்து நீக்கிவிடுவதற்கான சதிகள் மெதுமெதுவாக பின்னப்பட்டன.

1977 ஆம் ஆண்டு தேர்தலையொட்டி கட்சியில் அவருக்கு தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பை மறுப்பதற்கு கூட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. கட்சிக்காக இராஜதுரையால் வளர்த்தெடுக்கப்பட்ட காத்தமுத்து சிவானந்தன் எனும் இளைஞனுக்கு பதவியாசை ஊட்டி மட்டக்களப்பு தொகுதியில் இராஜதுரையை போட்டியிடாமல் தடுக்கும் முயற்சி அமிர்தலிங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இராஜதுரையை தன் அரசியல் குருவாகவே எண்ணிவளர்ந்த காசி ஆனந்தன் மட்டக்களப்பு தொகுதியில் “நான் களையெடுக்கப்போகின்றேன்” என்று கட்சிப்பத்திரிகையான சுதந்திரனில் அறிக்கை விட்டார். கட்சிக்குள்ளேயே இரண்டு பேர் மட்டக்களப்பு தொகுதியில் ஒரே நேரத்தில் போட்டியிட சதி தீட்டப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த இராஜதுரை கட்சித்தலைமையை அணுகியபோது அதனை தேர்தல் நியமனக் குழு பார்த்துக்கொள்ளும் என்று அமிர்தலிங்கம் பதிலளித்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வேளை வந்தபோது 1952 ஆம் ஆண்டில் இருந்து 1970 ஆம் ஆண்டுவரை கட்சியின் தேர்தல் நியமனக் குழு உறுப்பினராக இருந்து வந்த இராஜதுரை அப்பதவியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் தலைமை ஒருதலைப்பட்சமாக அறிவித்தது. இது இராஜதுரைக்கு விழுந்த முதுலாவது அடியாகும். அதுமட்டுமல்ல தொடர்ச்சியாக ஐந்து தேர்தல்களில் (இருபது ஆண்டுகள்) வெற்றியீட்டிய இராஜதுரையை தேர்தல் நியமனக் குழுவின் முன்னர் நேர்முகப்பரிட்சைக்கு ஆஜராகுமாறு அழைத்து அவமானப்படுத்தினார் அமிர்தலிங்கம். அந்த நேர்முகப்பரிட்சைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் செல்லக்கூடாது என்றும் ஆதரவாளர்கள் இராஜதுரையை வேண்டிக்கொண்டனர். ஆனபோதிலும் கட்சி ஒழுங்கும், கட்சியின் நன்மையையும் கருதி தேர்தல் நியமனக்குழு முன்னர் ஒரு புதுமுக வேட்பாளரைப்போன்று இராஜதுரை ஆஜராகினார். அங்கு மட்டக்களப்பு தொகுதிக்கு புதிய வேட்பாளர்கள் எவரையும் போடவேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்பதற்கான காரணங்களை எடுத்துச் சொன்னதோடு இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் ஒரு பிரதிநிதித்துவம் தொடர்ச்சியாக முஷ்லிம்களுக்குரியதாகவே இருந்துவரும் நிலையில் தமிழரசுக்கட்சி சார்பில் இரண்டு வேட்பாளர்கள் களத்தில் நிற்பதுவும் முஷ்லிம்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை மறுக்கும் செயலாகும் என்றும் விளக்கிக் கூறினார். அவரது எந்த விளக்கங்களும் தேர்தல் நியமனக்குழுவின் தலைமை நீதிபதியாக இருந்த அமிர்தலிங்கத்திடம் எடுபடவில்லை. இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இராஜதுரையையும், தமிழரசுக்கட்சியில் காசி ஆனந்தனையும் நிறுத்த கட்சி முடிவுசெய்தது. வடக்கு கிழக்கின் அனைத்து தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியாக பரிணமித்து சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழரசுக்கட்சியினர் மட்டக்களப்பில் மட்டும் மேலதிகமாக தமிழரசுக்கட்சியை இராஜதுரைக்கு போட்டியாக களமிறக்கினர். சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் தமிழரசுக்கட்சியின் சின்னமாக இருந்துவந்த வீட்டுச்சின்னம் காசி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டமை, புதிய சின்னத்தில் போட்டியிட நேர்ந்த இராஜதுரையின் ஆதரவாளர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

தேர்தல் நெருங்கிய வேளைகளில் இராஜதுரையின் தேர்தல் மேடைகளில் உரையாற்ற எந்தவொரு கட்சி முக்கியஷ்தர்களும் முன்வரவில்லை. ஈழவேந்தன், கோவை மகேசன், மாவை சேனாதிராஜா போன்றோர் மட்டக்களப்பில் களமிறக்கப்பட்டு காசி ஆனந்தனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். அவர்களது விசமத்தனமான பேச்சுகளும் கட்சிப்பத்திரிகையான ‘சுதந்திரனில்’ இராஜதுரைக்கு எதிராக வெளிப்படையாகவே எழுதிய பண்புகெட்ட எழுத்துகளும் அளவற்றன. பட்டிருப்பு தொகுதியிலும் கல்குடா தொகுதியிலும் உதயசூரியனை ஒளிரச் செய்யுங்கள் என்று பேசிய கட்சித் தலைவர்கள் அதே வாயால் மட்டக்களப்பு தொகுதியில் உதயசூரியனை உதிக்காமல் செய்யுங்கள் என்று பேசினர். 1977 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரே கட்சிக்குள்ளேயே இராஜதுரைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அவமானங்களுக்கும் குத்துவெட்டுகளுக்கும் நிகர்த்த பிறிதொன்று இலங்கை வரலாற்றில் எங்கேனும் நிகழ்ந்ததில்லை.
1977 ஆம் ஆண்டு தேர்தலில் இராஜதுரைக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட இந்த சதி மட்டக்களப்பு மக்களால் தோற்கடிக்கப்பட்டது. வழமைபோலவே அந்தத் தேர்தலிலும் இராஜதுரை அமோக வெற்றியீட்டினார். வெற்றியின் பின்னர் தேர்தலில் நடந்த கழுத்தறுப்புகளை எல்லாம் மறந்துவிட முயன்று கட்சியில் தொடர்ந்து பணியாற்ற அவர் சித்தம் கொண்டேயிருந்தார். அதன் காரணமாகவே பட்டிருப்பு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்த ப+.கணேசலிங்கத்தின் வீட்டில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு வருமாறு விடப்பட்ட அழைப்பை ஏற்று அங்கு சென்றார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போன்று அங்கு சமரச முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை. செயற்குழுக்கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் கூட்டம் இடம்பெற்ற வீட்டைச்சுற்றி திட்டமிடப்பட்ட வகையில் குவிக்கப்பட்டிருந்த கட்சித் தொண்டர்களால் இராஜதுரை கேவலப்படுத்தப்பட்டார். அன்று மாலை பாட்டாளிபுரத்தில் இடம்பெற்ற கட்சியின் நன்றி நவிலல் பொதுகூட்டத்தில் இராஜதுரைக்கு பேச சந்தர்பம் மறுக்கப்பட்டது. தேர்தலில் தோற்ற காசி ஆனந்தன் முன்னணி பேச்சாளராக திகழ்ந்தார். மேடையிலே வீற்றிருந்த அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் செய்த சதியே அதுவாகும். தமிழரசுக்கட்சியின் தூணாக இருந்து கட்சியை வளர்த்தெடுத்த இராஜதுரைக்கு மட்டக்களப்பு மண்ணிலேயே பேசும் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டமை அவமானத்திலும் அவமானமாகும்.
இந்த நேரத்தில்தான் 1978 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தையே அழித்தொழித்த ‘சூறாவளி” வீசியது. வரலாறு காணாத பேரழிவுக்கு இலக்காகி நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துகிடக்க, பதினைந்து அடிகளுக்கு மேல் எழுந்த கடல்கொந்தளிப்பு பல கிராமங்களை தடைமட்டமாக்கிவிட, 14 லட்சம் தென்னைமரங்கள் வீழ்ந்துகிடக்க, வீதிகள் எங்கும் உடைந்து மறிபட்டு சிதிலமடைந்து சீரழிந்த நிலையில் அவ்வழிவுகளை பார்வையிட பிரதமர் பிறேமதாசா மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார். மக்கள் முன்னிலையில் மட்டக்களப்பின் அழிவுநிலையை எடுத்துச் சொல்லவேண்டிய பொறுப்பும் அவசரமும் மட்டக்களப்பு பாராளுமன்ற பிரதிநிதி எனும் வகையில் இராஜதுரைக்கு இருந்தது. அந்தவகையில் இராஜதுரை பிரதமர் பிறேமதாசாவை சந்தித்து மட்டக்களப்பின் அழிவுநிலையை எடுத்தியம்பினார்.

மட்டக்களப்பின் பரிதாபநிலையை ஆதரவற்றுக்கிடந்த மக்களுக்கான அவசரத் தேவைகளை பிரதமரிடம் எடுத்துக்கூறியது மன்னிக்க முடியாத குற்றம் என்று கட்சியின் மேலிடம் குற்றம் சுமத்தியது. இதற்கான விளக்கம் கோரி உடனடியாக பதிலிறுக்குமாறு கட்சி மேலிடம் இராஜதுரைக்கு நெருக்கடி கொடுத்தது. அந்த வேளையில் யாழ்ப்பாணம் செல்வதோ கட்சியினுடனான சமரச முயற்சிகளில் ஈடுபடுவதற்கோ கால அவகாசம் இருக்கவில்லை. மட்டக்களப்பு மண் அழிந்துகிடக்க உடனடியாக யாழ்ப்பாணம் செல்லமுடியாத நிலை முப்பது நாட்கள் அவகாசம் கேட்டு கட்சி மேலிடத்திற்கு கடிதம் எழுதினார் இராஜதுரை. முப்பது வருடங்கள் கட்சி வளர்த்தவனுக்கு தன் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான பழி பற்றி சுயவிளக்கம் சொல்ல முப்பது நாட்கள் அவகாசம் மறுக்கப்பட்டது. இன்னிலையில் கட்சித் தலைமையினால் தனக்கு எதிராக இழைக்கப்பட்டு வந்த அலட்சியங்கள், அநீதிகள், உபத்திரவங்கள், உத்தரிப்புகள், கழுத்தறுப்புகள் அனைத்துக்கும் முடிவாக கட்சியை விட்டே விலகிவிடுவதென்ற முடிவுக்கு இராஜதுரை வந்தார். தனது அரசியல் லாபத்திற்காக நாளொரு கட்சிதேடி அலைந்தவர் அல்ல இராஜதுரை. யாழ்ப்பாணத்து மேட்டுக்குடி அரசியல் மட்டக்களப்பானை எப்படியெல்லாம் அலைகழிக்கும் என்கின்ற பாடங்களை வருடக்கணக்கில் அனுபவித்த பின்னரே தமிழரசுக்கட்சி அரசியலை விட்டுத்தொலைக்க அவர் முடிவெடுத்தார். தர்மத்தின் ஆவேசம் அது.

யாழ் மேட்டுக்குடி அரசியலில் மொத்த வடிவமாகிவிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து அவர் தன்னை விலக்கிக்கொண்டார். சூறாவழி காரணமாக நிர்கதியாக கிடந்த மட்டக்களப்பு மக்களின் துயர்துடைக்க அரசாங்கத்தில் இணைவதா? அன்றில் அரசியலை விட்டே ஒதுங்கிவிடுவதா? என்கின்ற கேள்வியில் சிக்கித் தவித்தார். தமது ஆதரவாளர்களினதும் மட்டக்களப்பு புத்திஜீகளினதும் ஆலோசனையின் பேரில் அரசியலில் இருந்து ஒதுங்குவதில்லை எனும் முடிவுக்கு வந்தார். அரசாங்கத்தில் இணைய முன்வந்தபோது அரசாங்கம் அவருக்கு அமைச்சுபதவி வழங்கி கௌரவித்தது. பிரதேச அபிவிருத்தி, இந்துசமய கலாசார தமிழ்மொழி அமூலாக்கல் அமைச்சு எனும் புதிய அமைச்சு ஒன்றை உருவாக்கி வடக்கு கிழக்கு மக்களின் பல அரசியல் கோரிக்கைகளை தீர்க்க அவருக்கு சந்தர்ப்பத்தைக் கொடுத்தது. இலங்கையில் முதன் முதலாக இரண்டு மாகாணங்களை விசேடமாக குறிப்பிட்டு அப்பிரதேசத்திற்கான அபிவிருத்தி செய்வதை நோக்காகக் கொண்டு பிரதேச அபிவிருத்தி அமைச்சு உருவாக்கப்பட்டது. இதனூடாக கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வேலைவாய்ப்பு …. போன்ற அனைத்து துறைகளிலும் வடகிழக்கில் அபிவிருத்தி மேற்கொள்ள இவ்வமைச்சுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல, கொழும்பு பல்கலைக்கழகத்திலும் தமிழ் பேராசிரியராய், இராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட தமிழ் கலைச்சொல் அகராதி கழகங்கள் அனைத்துக்குமான பொதுத்தலைவராய், 2000 ஆண்டுகால தமிழ் இசையை மீட்டெடுத்து யாழ் நூல் ஆக்கித்தந்த இசைமுனியாய் வாழ்ந்த தமிழ் இலக்கியப் பேரூலகின் ஒரே முத்தமிழ் வித்தகன் விபுலானந்தனின் ஒப்பற்ற சாதனைகளை பிரதேசநலம் பேணும் தமிழ் அறிவுலகம் பேரூவகை கொண்டு அணுக மறுத்து வந்தபோது இராஜதுரை தமது அமைச்சு பதவி உதவியுடன் விபுலானந்தருக்கு பெரும் கௌரவம் அளித்தார்.
விபுலானந்தா இசைநடனக்கல்லூரி என்கின்ற பென்னம்பெரு மையத்தினை அமைத்து அப்பெருமானரின் பெயரை நீக்கமற நிலைக்கச்செய்தார். அந்த இசைநடனக் கல்லூரியே இன்று கிழக்கு பல்கலைக்கழத்தின் நுண்கலைத்துறையாக பரிணமித்துள்ளது. அதுமட்டுமன்றி இலங்கை அரசைக்கொண்டே (1979 ஆம் ஆண்டு) அப்பெருமகனாருக்கு நினைவு முத்திரை வெளியிடச்செய்தார். மட்டக்களப்பு நகரின் மீன்பாடும் வாவியை அழகுபடுத்தும் பெரும்திட்டத்தை ஆரம்பித்தார். விபுலானந்தருக்குரிய மணிமண்டபத்தை அமைத்தது மட்டுமல்ல, யாழ்ப்பாண மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு நாவலர் மணிமண்டபத்தை அமைத்தது இந்த இராஜதுரையேயாகும்.
இராஜதுரை தமிழ் மொழி அமுலாக்க அமைச்சராக இருந்த காலத்திலேயே இலங்கையில் தமிழ் மொழி அரசகரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசகருமமொழிச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி 12 வது சட்டதிருத்தத்தை உருவாக்கியதினூடாக தமிழ் மொழிக்கும் சம அந்தஷ்து வழங்கப்பட்டது. இதனை வரலாற்றில் திட்டமிட்டு அனைவரும் மறைத்துக்கொண்டிருக்கின்றார்கள். சட்டமேதைகள் நிறைந்த தமிழரசுக்கட்சியினரால் வாதப்பிரதிவாதங்களை எழுப்ப முடிந்ததே தவிர எதையும் சாதிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் மொழிக்கு அரசகருமமொழி அந்தஷ்து வழங்கப்பட்டது இந்த இராஜதுரையால் நிகழ்த்தப்பட்ட சாதனையேயாகும். அமைச்சராக இருப்பது துரோகமாய் இருந்தால் அதுவரை காலமும் தமிழ் தலைவர்கள் யாரும் அரசுடன் இணைந்து அமைச்சராய் இருக்கவில்லையா? 1947 இல் ஜி.ஜி.பொன்னம்பலம் அமைச்சராகி பத்து லட்சம் மலையகமக்களின் வாக்குரிமைகளைப் பறிக்க அரசுக்கு துணைபோனாரே, அவரை துரோகி என்று வரலாற்று ஆசிரியர் யாரும் குறிப்பிடுவதில்லையே?
1965 இல் ஐம்பதுக்கு ஐம்பது பெற்றுத்தருகிறேன் என்று அதே ஜி.ஜி.பொன்னம்பலமும் சம~;டி ஒன்றே தீர்வாகும் என்று தமிழரசுக்கட்சியும் கன்னை பிரித்து நின்று தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டு டட்லி சேனநாயக்காவின் அரசாங்கத்தில் பதவிகளுக்காக சங்கமமானது துரோகமில்லையா? தமிழரசுக்கட்சியினரை சமாளிக்க பட்டிருப்பு இராசமாணிக்கத்திற்கு அமைச்சர் பதவியை வழங்குகிறோம் என்று ஆசை காட்டிவிட்டு தமிழரசுக்கட்சியின் கொழும்பு புறோக்கறான திருச்செல்வத்திற்கு அமைச்சுபதவியை வழங்கியது செல்வநாயகம் செய்த நம்பிக்கைத்துரோகம் இல்லையா? தமது பங்கிற்கு ஜி.ஜி.பொன்னம்பலம் வாங்கிய உபசபாநாயகர் பதவியை பெற்றுக்கொண்ட சிவசிதம்பரத்தை துரோகி என்று யாரும் சொல்வதில்லையே?

இராஜதுரை யாழ் மேட்டுக்குடி தமிழரசுக்கட்சியினால் வஞ்சிக்கப்பட்டு ஆறாத ரணங்களை நெஞ்சிலே சுமந்துகொண்டு அரசாங்கத்தில் இணைந்தது மட்டும் எப்படிக் குற்றமாகும்?
read more...

Thursday, 17 May 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் இரகசிய முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பா.அரியநேந்திரன் - பின்னனியில் சில திரைமறைவு சக்திகள்.

தமி;ழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திரு.பாக்கியசெல்வம் அரியநேந்திரன், புலம்பெயர்ந்தவர்களால் நடாத்தப்பட்டுவரும் இணையத்தளமான – தினக்கதிருக்கு தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இவ்வறிக்கையை வெளியிடுகின்றது.
 
தனது செய்தியில், திரு அரியநேந்திரன் -  எமது அமைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு அங்கமாக இணைத்துக் கொள்வதை ஆட்சேபித்திருப்பதுடன், இதனை மீறி நாம் இணைத்துக் கொள்ளப்பட்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்திருக்கின்றார். மேலும் அரியநேந்திரன், எமது அமைப்பை இராணுவத்துடன் தொடர்புபடுத்தி உண்மைக்கு மாறான ஒரு அபிப்பிராயத்தையும் மக்கள் மயப்படுத்த முற்பட்டிருக்கின்றார். அவர் எமது அமைப்பு தொடர்பில் குறிப்பிட்டிருக்கும் அனைத்து விடயங்களும் அடிப்படையற்றவை.
 
சமீபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஐவரோதயம் சம்பந்தன் அவர்களின் தலைமையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் ஓர் ஆரோக்கியமான சந்திப்பு இடம்பெற்றிருந்த சூழலில், உருத்திரண்டு வரும் ஒற்றுமைக்கான சூழலை சீர்குலைக்கும் வகையில், அரியநேந்திரன் திட்டமிட்டு இத்தகையதொரு செய்தியை வெளியிட்டிருக்கின்றார். இதனை நாம் வன்மையாக கண்டிப்பதுடன், இவ்வாறான சீர் குலைவு நடவடிக்கைகள் குறித்து மக்களை விழிப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். 
 
தமிழ் மக்களுடைய விடுதலைக்கான போராட்டத்தில் பங்குகொண்ட எந்தவொரு அமைப்போ அல்லது கட்சிகளோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. அந்தவகையில், நாம் கடந்தகாலம் குறித்த ஆரோக்கியமான விமர்சனங்களை எப்போதுமே வரவேற்று வந்திருக்கிறோம். ஆனால் இரண்டாம்தரமான வார்த்தை பிரயோகங்கள் மூலம், எமது அமைப்பை கொச்சைப்படுத்த முற்படும்போது அது குறித்து நாம் அமைதியாக இருக்க முடியாது. இந்த அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனின் அரசியல் நம்பகத்தன்மை குறித்தும், அவரது சமீபகால தீய உள்நோக்கம் கருதிய செயற்பாடுகள் குறித்தும் சில உண்மைகளை மக்கள்முன் வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாம் ஆளாகியுள்ளோம்.
 
நாம் கடந்த காலத்தில், விடுதலைப்புலிகளின் அணுகுமுறைகளையும், அவர்களால் திணிக்கப்பட்ட ஏகப்பிரதிநிதித்துவ அரசியலையும் எதிர்த்து வந்திருக்கிறோம். இது அனைவரும் அறிந்த உண்மை. கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் எமது அமைப்பின் உறுப்பினர்களை கொல்லும் நோக்கத்துடன் எதிர்கொண்ட போது, எமது உறுப்பினர்களும் தங்களை தற்பாதுகாத்துக் கொள்வதற்காக புலிகளின் உறுப்பினர்களை எதிர்கொண்டிருக்கின்றனர். இதுவும் அனைவரும் அறிந்த உண்மை. இவற்றை நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மறைக்க முயன்றதும் இல்லை. அப்படி மறைத்து அரசியல் செய்ய வேண்டிய எந்தவொரு அவசியமும் எமக்கில்லை. நாம் அப்போது மட்டுமல்ல, இப்போதும் எந்தவொரு ஏகப்பிரதிநிதித்துவ அரசியல் வாதங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏகப்பிரதிநிதித்துவ வாதம் என்பது ஒரு சமூதாயத்தின் பன்முகத் தன்மையை மறுக்கும் ஒரு ஜனநாயக விரோத செயலாகும்.
 
ஒரு கொள்கைநெறியால் வழிநடத்தப்பட்ட அரசியல் இயக்கம் என்ற வகையில் எம்மால் எம்மை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியும். ஆனால் எம் மீதான அவதூறுகளை பரப்ப முற்படும் அரியநேந்திரனால் அது முடியாது.
 
பாக்கியசெல்வம் அரியநேந்திரனின் அரசியல் நம்பகத்தன்மை எத்தகையது?
 
தொழில் ரீதியாக மிருக வைத்தியரின் உதவியாளரான(மிருக சினைப்படுத்தும் அலுவலர்), திரு.அரியநேந்திரன், அடிப்படையில் ஓரு ஜக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளராவார். அன்று மட்டக்களப்பில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த தினக்கதிர் என்னும் செய்தி பத்திரிகையில் ஒரு செய்திசேகரிப்பாளராக இவரும் இணைந்து கொண்டார். மிருகவைத்திய உதவியாளர்(மிருக சினைப்படுத்தும் அலுவலர்), செய்தியாளர் என்னும் இரு முகங்களுடனும் சமூகத்துடன் ஊடாடிய அரியநேந்திரன், அப்போது விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த கௌசல்யனுடன் இருந்த உறவுமுறையைப் பயன்படுத்தி புலிகளின் விசுவாசியாக தன்னை உருமாற்றிக் கொண்டார். புலிகளின் தொடர்பு ஜக்கிய தேசியக் கட்சியின் அரியநேந்திரனை, தமிழ் தேசியவாதியாக காட்டிக்கொள்ள உதவியது.
 
2004 இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் புலிகளின் மட்டக்களப்புக்கான வேட்பாளர்கள் பட்டியலில் கௌசல்யனூடாக இடம்பிடித்துக் கொண்ட அரியநேந்திரனால்  தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. அன்று புலிகள் இயக்கத்தில் கருணாவின் பிரிவால் ஏற்பட்டிருந்த குழப்பநிலையை சாதுரியமாக பாவித்து அப்போது வெற்றிபெற்றிருந்த சிறந்த சமூக சேவையாளரான கிங்ஸ்லி ராசநாயகத்தை பதவியில் இருந்து விலக்குவதன் மூலம் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வருவதற்கான சதி முயற்சியை அரியநேந்திரன் எடுத்தார். கௌசல்யனின் ஊடாக கிங்ஸ்லி ராசநாயகத்தை இராஜினாமா செய்யுமாறு அரியநேந்திரன் தூண்டியிருந்தார். ஆனால் ராசநாயகம் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்றவகையில் புலிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்திருக்கவில்லை. இதன் விளைவாக ஒக்டோபர் 14-2004 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி ராசநாயகம் படுகொலை செய்யப்பட்டு அவரது இடம் அரியநேந்திரனுக்கு வழங்கப்பட்டது. கிங்ஸ்லியின் கொலைக் குருதியால் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் தனது பட்டாபிசேகத்தை நிறைவு செய்து கொண்டார்.
 
விடுதலைப் புலிகளிலிருந்து கருணா பிரிந்தபோது, கருணாவின் பிளவை நியாயப்படு;த்தி அரியநேந்திரன் செயற்படலானார். ராஐன் சத்தியமூர்;த்தி, ஜெயானந்த மூர்;த்தி, சிவராம் ஆகியோருடன் இணைந்து கருணாவின் செயற்பாட்டை பிரதேசவாதம் பேசி நியாயப்படுத்தினார். ஜக்கிய தேசியக் கட்சியில் இருந்து தமிழ்  தேசியத்திற்கு தாவிய அரியநேந்திரன் இறுதியில் மட்டக்களப்பு வாதத்திற்கு தாவினார். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மை மீளவும் ஸ்திரப்படுத்திய பின்பு அரியநேந்திரன் தடாலடியாக கருணாவிற்கு எதிராக திரும்பியதுடன், புலிகளின் ஆதரவாளனாகவும் தன்னை காட்டிக் கொண்டார். ஒருவேளை கருணாவின் கை மட்டக்களப்பில் ஓங்கியிருந்திருந்தால், இன்;றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் கருணாவின் விசுவாசியாக இயங்கியிருப்பார். இத்தகைய சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொண்டு வரும் அரியநேந்திரன் என்பவரே, எமது அமைப்பின் நம்பகத் தன்மை பற்றி பேசியிருக்கிறார்.  
 
அரியநேந்திரன் இவ்வாறு செயற்படுவதன் பின்னணி என்ன?
                                            
சமீபகாலமாக அரியநேந்திரன் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் தன் மீதான கவனஈர்ப்பை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார். இதன் தொடர்ச்சியாகவே தற்போது மட்டக்களப்பு தமிழசுக் கட்சியை மீறி, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் எமது அமைப்பை இணைத்துக் கொண்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்றும் எச்சரிக்கை ஒன்றை விட்டிருக்கின்றார். இதன் மூலம், தன்னை மட்டக்களப்புக்கான தமிழரசுக் கட்சியின் தலைவராக காண்பிக்க முயன்றிருக்கிறார். இந்த இடத்தில் கருணாவின் மட்டக்களப்பு அரசியலை ஆதரித்து புலிகளை உடைக்கத் துணைபோனது போன்று, மட்டக்களப்புக்கான தமிழசுக் கட்சியின் தலைமையாக காட்டி, தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க முற்படுகின்றார். நாம் மேலே குறிப்பிட்ட பாக்கியசெல்வம் அரியநேந்திரனின் தீய உள்நோக்கம் இதுவே ஆகும். சூழ்ச்சியாலும் சதியாலும் நாடாளுமன்ற கதிரையில் அமர்ந்த அரியம், தன்னை மட்டக்களப்பின் ஏகதலைவனாக காட்டிக்கொண்டு தனது பதவி-பட்டங்களுக்கு இடைய+று வந்துவிடக்கூடாதென்ற  முன்னெச்சரிக்கையுடன் தமிழ் மக்களின் ஒற்றுமையையும், கட்சிகளின் கூட்டினையும் சவாலுக்கு உட்படுத்துகின்றார். அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூட்டத்தின்போது கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை பல தடவைகள் துரோகி என விளித்துப் பேசியதும் கூட்டமைப்பை சிதைக்கும் முயற்சியின் ஒரு அங்கம் என்பதில் சந்தேகமில்லை.
 
இலங்கைக்குள் ஒரு நியாயமான அரசியல் தீர்வுக்கான முயற்சியில் தமிழ் மக்களாலும், சர்வதேசத்தாலும் தலைவராக அங்கீகரிகப்பட்டிக்கும் திரு. இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் எடுத்துவரும் முயற்சிகளை சீர்குலைக்கும் வகையில், இலங்கைக்குள்ளும் வெளியிலிருந்தும் சில தீய சக்திகள் மிகவும் நுட்பமாக செயற்பட்டுவருவதாகவே எமது அமைப்பு திட்டவட்டமாக நம்புகிறது. அத்தகையதொரு சக்தியின் ஏவலாளியாக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அரியநேந்திரன் செயற்பட்டு வருகின்றாரா என்னும் சந்தேகம் வலுக்கின்றது.
 
இதன் மூலம் அத்தகைய சக்திகள் இரண்டு விடயங்களை எதிர்பார்க்கின்றன…
 
1.    இன்றைய இக்கட்டானதொரு அரசியல் சூழலில், தமிழ் மக்களின் அரசியல் சக்தியாகவும், மக்களின் ஒன்றுபட்ட குரலாகவும் செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைபபில் இருந்து ஒரு சில கட்சிகளை வெளியேற்றுவதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதற்கான அரசியல் கட்டமைப்புசார் பலத்தை சிதைப்பது.
2.    ஜக்கியப்பட்ட இலங்கைக்குள் நியாயமான தீர்வு என்னும் இலக்கில் முன்னேறி வரும் இராசம்பந்தருக்கு உள்ளுக்குள்ளும் வெளியிலும் நெருக்கடிகளை கொடுப்பதன் மூலம் அவரின் மீது ஒருவகை உளவியல் தாக்குதலை தொடுப்பதன் மூலம் அவரை அரசியலில் இருந்து ஒரங்கட்டுவது. 
 
இந்த இரண்டு விடயங்களையும் மேற்கோள்ளும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் களமிறங்கியிருக்கின்றார். இது போன்ற செயற்பாடுகளை எமது அமைப்பு வன்மையாக எதிர்த்து நிற்கும் என்பதை நாம் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம். இது போன்று எத்தகைய அவதூறுப் பிரச்சாரங்களை அரியநேந்திரன் போன்றவர்கள் மேற்கொண்டாலும், எமது அமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது மக்களை மேலும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் எந்தவொரு செயற்பாடுகளையும் அனுமதிக்கப் போவதில்லை என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
 
 
ரி. பாலசிங்கம்,
மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்,
15.05.2012.

read more...

Wednesday, 16 May 2012

வடக்கு அரசியல்வாதிகள் கிழக்கிற்கு வந்தால் கறுப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் - மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு 
People Organization for Change

அண்மையில் வடக்கில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவு தினத்திற்கு கிழக்கு மக்களால் சொல்லின் செல்வர் என போற்றப்படுகின்ற இராஜதுரை அழைக்கப்பட்டு சிவாஜிலிங்கம் அவர்களால் கறுப்புக்கொடி காட்டப்பட்டு மட்டக்களப்பான் துரோகி என்றும், சக்கிலியன் என்றும் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டார்.

இவ் விடயம் இடம்பெற்று வாரங்கள் கடந்துவிட்ட இன்றைய நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சிவாஜிலி்ங்கம் அவர்களின் இச் செயற்பாடு தொடர்பில் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை. கூட்டமைப்பினர் இவ்வாறு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமை சிவாஜிலி்கத்தின் கூற்றை ஆதரிப்பது போன்று அமைந்திருக்கின்றது.

ஆகவே மட்டக்களப்பான் மடையன் என்றும் சக்கிலியன் என்றும் கூறிய சிவாஜிலிங்கத்துக்கு எந்தவித நடவடிக்கையும் எடு்காமல் அவரின் கூற்றை ஆதரிக்கும் கூட்டமைப்பின் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராவது மட்டக்களப்புக்கு வருவார்களானால் அவர்களுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டத்தினை முன்னெடுப்பதோடு மக்கள் அவர்களுக்கெதிராக வீதியில் இறங்கிப் போராடுவார்கள்

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு 
கிழக்கிலங்கை
15.05.2012
read more...