Thursday 5 July 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள் - கொக்கரிப்பு -04

கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலையும் மக்களின் அரசியல் மீதான அக்கறை பற்றியும் இந்தத் தொடரில் ஆராயலாம் என நினைக்கின்றேன். அண்மைக் காலமாக கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அரசியலிலும் வெறுப்புக் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இதனால் தேர்தல்களில் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தனர். மறு புறத்தில் தமது அரசியல் இஸ்திரத் தன்மையினைப் பேணுவதிலும் தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதிலும் தமது வாக்குப் பலத்தினை முஸ்லிம் மக்கள் பயன்படுத்தத் தவறியதில்லை.

இவ்வாறு தமிழ் மக்கள் அரசியலில் நாட்டமற்றுச் சென்றமைக்கான முக்கிய காரணம் கடந்தகால அரசியல்வாதிகள் மக்களை திட்டமிட்டு ஏமாற்றியிருக்கின்றனர். என்பதனை மக்கள் நன்கு உணர்ந்ததன் வெளிப்பாடே மக்கள் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தனர். தேர்தல் காலங்களில் வருவார்கள் ஆயிரம் பொய்களையும் உணர்ச்சி வார்த்தைகளையும் மக்கள் மத்தியில் விதைத்தவிட்டு மக்கள் ஓட்டுப் போட்டதும் தெரிவு செய்யப்பட்டபின் அந்த மக்களையும் அவர்களின் அவலங்களையும் மறந்து அரசாங்கம் வழங்கும் சலுகைகளைப் பெற்று சுயபோக வாழ்க்கை வாழ்ந்து வருவார்கள்.

எப்போதாவது மக்களை சந்தித்தால் உணர்ச்சி வார்த்தைகளைக்கூறி மக்களை சூடேற்றி பலிக்கடாவாக்குவது பாராளுமன்றம் சென்று எதிர்க் கட்சி ஆசனங்களிலே அமர்ந்திருந்து பாராளுமன்றக் கதிரைகளைச் சூடேற்றியதைத் தவிர மக்களுக்கு கடந்தகால தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்தனர்? ஆனால் முஸ்லிம் மக்களும் அரசியல்வாதிகளும் அரசியல் யதார்த்தங்களை நன்கு உணர்ந்து செயற்பட்டு அரசாங்கத்தில் அங்கம் அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்று அரசாங்கத்துடன் பேரம்பேசி தமது அரசியல் இஸ்திரத் தன்மையினைப்பேணி தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்து வருகின்றனர்.

இந்த மாகாணசபைத் தேர்தலிலும் கிழக்கிலே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெறவேண்டும் என்பதில் முஸ்லிம் மக்களும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் முனைப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடாது என்பதற்காக கூட்டமைப்பினரும் அவர்களுடன் சார்ந்த ஒரு சிலரும் சில சதித் திட்டங்களை செய்து வருகின்றனர்.

இன்று கிழக்கிலே ஒரு கட்சி உதயமாகி யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட கிழக்கை துரிதமாக அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்கின்றது. கிழக்கு மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர் என்பதனை உணர்ந்த கூட்டமைப்பினர் இவைகளை இல்லாமல் செய்யவே கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்திருக்கின்றனர்.

இன்று கிழக்கிலே பிள்ளையான் முதலமைச்சராக பதவியேற்றதன் பின்னர் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்று கிழக்கு மாகாணம் துரிதமாக வளர்ச்சியடைந்து வருவதை எவராலும் மறுக்கவும் முடியாது இடம்பெற்ற அபிவிருத்திகளை மறைக்கவும் முடியாது. யாரால் இவ்வாறான அபிவிருத்திகள் சாத்தியமாகின யார் மக்களுக்காக சேவை செய்கின்றனர் என்பதனை கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்துவிட்டனர். இதன் காரணமாகவே தமிழரசுக் கட்சியினரின் தேசிய மாநாட்டை புறக்கணித்தனர். அவர்களின் மாநாடு மட்டக்களப்பில் படு தோல்வியில் முடிவடைந்தது. இதனை பார்க்கவும் (தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு வெற்றியா? தோல்வியா? http://www.shanthru.com/2012/05/blog-post_28.html) கூட்டமைப்பினர் மாhகாணசபையை தாம் கைப்பற்றுவோம் முதலமைச்சர் பதவி தமக்குத்தான் என்று கொக்கரித்துத் திரிகின்றனர். இவர்கள் எல்லாம் படித்த முட்டாள்காளா? கிழக்கு மாகாணத்தில் இன விகிதாசாரம் தெரியாமலா இவ்வாறு பிதற்றுகின்றனர். தமிழர்கள் மாத்திரம் வாக்களித்து ஆட்சியமைக்க முடியுமா? இவர்கள் நாங்கள்தான் முதலமைச்சர் பதவியை பெறுவோம் என்;று சொல்வது சிறு பிள்ளைத் தனமாக இருக்கின்றது...

தொடரும்.....

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள் - கொக்கரிப்பு -04"

Post a Comment