Saturday 25 August 2012

நம் தலையில் நாமே மண்ணை வாரிப்போட தயாரா?

அன்புக்கினிய தமிழ் உறவுகளே!.... சற்றேனும் சிந்தியுங்கள்….
கிழக்கு மாகாணசபை தேர்தல் இடம்பெற இருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் கிழக்கு தமிழர்களாகிய நாம் சிந்தித்து செயற்படவேண்டியவர்களாக இருக்கின்றோம். கிழக்கு மாகாணசபை தேர்தலிலே போட்டியிடுகின்ற கட்சிகள் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கின்றனவா என்று பார்க்கின்றபோது. வெறுமனே தமது சுயநல அரசியலுக்காகவே பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன.

இம் மாகாணசபை தேர்தலைப் பொறுத்தவரை கிழக்கு தமிழர்களுக்கு மிக முக்கியமான தேர்தலாக அமைய இருக்கின்றன. இத் தேர்தலை தமிழர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டிய தருணமிது. இத் தேர்தலைப் பொறுத்தவரை முதலமைச்சராக வருவது முஸ்லிமா, தமிழனா என்கின்ற கோசங்கள் ஒரு புறமிருக்க கிழக்கிலே இடம்பெற்றுவரும் துரித அபிவிருத்திகள் தொடர்வதா? இல்லையா? என்பதனை தீர்மானிக்கும் ஒரு தேர்தலாகவும், பல சவால்கள் நிறைந்த ஒரு தேர்தலாகவும் அமைய இருக்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் கிழக்கின் இன்றியமையாத முக்கிய தேவை என்ன என்பதனை நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற கொடுர யுத்தத்தின் காரணமாக எமது கிழக்கு மாகாணம் சின்னாபின்னமாக்கப்பட்டன. எமது மக்கள் நிம்மதியற்று வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று எமது பிரதேசங்கள் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. எமது மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். கிழக்கிலே இடம்பெறுகின்ற அபிவிருத்திகள் தொடரவேண்டுமா? இன்றைய எமது நிம்மதியான வாழ்க்கை தொடரவேண்டுமா? அல்லது எமது பிரதேசத்திலே இடம்பெறுகின்ற அபிவிருத்திகள் தொடரவேண்டுமா? இன்று நாம் வாழும் நிம்மதியான வாழ்க்கை தொடரவேண்டுமா என்பதனை கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும்.
கடந்த 30 வருடங்களாக நாம் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றோம் என்பதனை நாம் இன்றுதான் உணர்ந்திருக்கின்றோம். கடந்தகால அரசியல் தலைமைகள் எமது மக்களை ஏமாற்றி தாம் சுயபோகங்களை அனுபவித்து வந்திருக்கின்றனர். கடந்த 60 வருடங்களுக்கு மேற்பட்ட தமிழரசுக் கட்சியின் அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்காக எதனைச் செய்திருக்கின்றனர். ஆனாலும் தாம் சுகபோக வாழ்க்கை வாழ்ந்ததுடன் தமது குடும்பங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கின்றனர்.

தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்காக காலங்காலமாக கூட்டமைப்பினர் சிங்கள பேரினவாதம் என்றும், தமிழீழம் என்று உணர்ச்சி வார்த்தைகளை மக்கள் மத்தியிலே விததைத்து மக்களை உசுப்பேற்றி அரசியல் இலாபம் தேடுகின்றனர். சிங்களப் பேரினவாதம் என்றும், தமிழீழமே எமது மூச்சு என்றும் தமிழீழ பிரகடனம் செய்த அமிர்தலிங்கமோ, அல்லது இன்று இருக்கின்ற சம்பந்தனோ, செல்வராஜாவோ, அரியநேந்திரனோ, யோகேஸ்வரனோ தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கு பற்றினரா? அல்லது தமது பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்துக்கொண்டனரா? தாம் அரசியலில் நிலைத்து நிற்பதற்காகவும் அரசியல் இலாபம் தேடவுமே இவர்களால் தமிழீழம் எனும் கோசங்களும் பிரகடனங்களும் செய்யப்பட்டன. இவர்களின் உணர்ச்சி வார்த்தைகளை நம்பியதன் பயனாக நாம் சந்தித்தது என்ன? பல இலட்சக் கணக்கான உயிர்களையும் உடமைகளையும் இழந்தோம். எமது பிரதேசம் சின்னாபின்னமாக்கப்பட்டன.

இன்று கிழக்கிலே என்ன நடக்கின்றது என்பதனை நாம் சிந்தித்தாக வேண்டும். கிழக்கு மாகாணசபையை பிள்ளையான் அவர்கள் பொறுப்பெற்றதன் பின்னரே கிழக்கு மாகாணம் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. 60 வருடங்களுக்கு மேலான அரசியல் வரலாற்றினைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிள்ளையானின் நான்கு வருட ஆட்சியில் செய்த ஒரு வீத அபிவிருத்தியையாவது செய்திருக்கின்றனரா? அன்று கிழக்கு மாகாணசபை ஒன்று இல்லை என்று சொன்னவர்கள் இன்று கிழக்கிலே இடம்பெறுகின்ற அபிவிருத்திகளை இல்லாமல் செய்யவே பொட்டியிடுகின்றனர்.

இன்று பிள்ளையான் ஆயுதக்கழு என்று கோசமிடும் கூட்டமைப்பு வேட்பாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அவர்களின் கடந்தகால பக்கங்களை புரட்டிப் பாருங்கள் அன்புக்கினிய எம் உறவுகளே. இன்று கூட்டமைப்பினர் வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கின்றவர்கள் அன்று அயுதக் குழுக்களாக இருந்தபோது எமது மக்கள் பட்ட துன்பங்கள் அவலங்கள் எத்தனை எத்தனை கடந்த காலங்களை எண்ணிப் பாருங்கள்.

இன்று கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற ஜனாவாக இருக்கட்டும், பிரசன்னாவாக இருக்கட்டும், துரைரெட்னமாக இருக்கட்டும் இவர்கள் ஆயுதக் குழுக்களை வைத்து எத்தனை கொள்ளைகள் கொலைகளைச் செய்தனர். அவைகளை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். இவர்களின் அயுதக் குழுக்கள் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து எத்தனை ஆயிரம் தமிழர்களை கடத்தினார்கள் கொலை செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.

உறவுகளே சிந்தியுங்கள் எம்மை அன்று ஆட்டிப்படைத்த இவர்கள் மாகாணசபைக்கு சென்றால் எமக்காக என்ன செய்வார்கள் மிண்டும் எம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்வார்கள். எமது இன்றைய தேவை என்ன? நிம்மதியான வாழ்க்கையும், சிதைக்கப்பட்ட எமது தேசத்தின் அபிவிருத்தியுமே. வெறுமனே கூட்டமைப்பின் கபட நாடகங்களையும் உணர்ச்சி வார்த்தைகளை நம்பி மீண்டும் நாம் பலிக்கடாவாக மாறும் சமூகமாக இல்லாமல் உண்மைகளையும் யதார்த்தங்களையும் உணர்ந்து சிறந்த முடியுகளை எடுப்போம்.

பிள்ளையானின் நான்கு வருட மாகாணசபை அட்சியிலே எமது மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் வாழ்கின்றனர். கிழக்கு மாகாணம் துரிதமாக வழர்ச்சி அடைந்திருக்கின்றது. இவை தொடரவேண்டுமாக இருந்தால் நிட்சயமாகவே நாம் பிள்ளையானை மீண்டும் முதலமைச்சராக்க வெண்டிய பொறுப்பு எமக்கிருக்கின்றது.
தொடரும்……….



read more...

Tuesday 21 August 2012

கிழக்கில் மக்கள் ஆதரவை இழந்துவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து இருந்து இன்று வரை பல இடங்களில் அடிமேல் அடி வாங்கிய தொடர்  கதையாக மக்கள் ஆதரவை இழந்துவருகின்றது. அண்மையில் சித்தாண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை அடிப்படையாக வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் ஆதரவு இழப்பு எந்த நிலையில் உள்ளது என்பதனை இகக்கட்டுரை ஆராய்கின்றது.
 
கிழக்கு மாகாணத்திலே சித்தாண்டி பிரதேசம் என்றாலே பல சிறப்புக்களைக் கொண்ட ஒரு பிரதேசமாகத் திகழ்கின்றது. உரிமைப்போராட்ட காலத்திலே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள போராளிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை பரிமாற்றம் செய்கின்ற ஒரு மையமாகவும், எந்தவொரு எட்டப்பனும் இல்லாத ஓர் போராட்ட ஆதரவு கிராமமாகவும், உரிமைப்போராட்டத்தில் பலரை ஈந்தளித்த நிலமாகவும் இது சிறப்புப்பெற்றது. தமிழன் என்ற சிந்தனை, தமிழனின் உரிமை போன்ற பல விடயங்களில் ஏனைய தமிழ்ப்பற்றுள்ள கிராமங்களுக்கு நாங்கள் சற்றும் சழைத்தவர்கள் இல்லை என்பதனை நிரூபிக்குமளவிற்கு தமிழின பற்றுள்ள சமூகமே இங்கு வாழ்கின்றது. இத்தகைய தமிழனப் பற்றே காலம் காலமாக அரசியல் ரீதியாகவும், தமிழனுக்கு நன்மை கிடைக்கக்கூடிய  அரசியல் கட்சிகளின் பின்னால் அணிதிரளவும் வழிவகுத்தது. 
 
அந்த வகையில் விடுதலைப்புலிகள் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் அவர்களின் விருப்பு எதுவோ? அதற்கமைவாகவே தமது அரசியல் ரீதியான ஆதரவை கட்சிகளுக்கு வழங்கி வந்தார்கள். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கiயில் இருந்த காலப்பகுதியில் அவர்களின் கட்டளைக்கு ஏற்ப நடந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அனைத்து மக்களும் அணிதிரண்டார்கள். ஆனால் சித்தாண்டி பிரதேச மக்களின் தமிழ்உணர்வோ அல்லது தமிழ்பற்றோ இன்றும்  மாறிவிடவில்லை. மாறாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால் நின்றால்  கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தமிழ் முதலமைச்சரை பெறமுடியாத நிலை ஏற்படும். என்ற தெளிவு ஏற்பட்டு அவர்கள் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால்  இருந்து ஒதுங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.  அதாவது கிழக்கு மண்ணை ஆட்சி செய்யக்;கூடிய தகுதியும், செல்வாக்கும் உடைய ஒரே ஒரு தமிழனான பிள்ளையான் அவர்களை தோற்கடித்து, முஸ்லிம் ஒருவனை முதல்வவராக்கும் சதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதை அறிந்தே மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை விட்டு விலகியிருக்கின்றார்கள். 
 
கடந்த 14.08.2012 அன்று சித்தாண்டியின் முருகன் ஆலய முன்றலில் பெரும் எடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்; ஒன்று ஒழங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தமிழர்விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன, செல்வம் அடைக்கலநாதன்,சுரேஸபிரேம சந்திரன, மாவை சேனாதி உள்ளிட்ட பெருமளவிலான வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிரசாரத்திற்கென வந்திறங்கியிருந்தார்கள். குறிப்பாக 17 சொகுசு வாகனங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் வெளிமாவட்டஙகளிலிருந்து வந்திறங்கினர். தலா ஒவ்வொரு வாகனங்களுக்குள்ளும் 12 பேர் சகிதம் மொத்தமாக 204 பேர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் வெளிமாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டனர். ஆனால் அங்கு சித்தாண்டி பிரதேசத்தில் தேர்தலுக்காக ஒன்று கூடிய மக்கள் என்றால் மிகமிகக் குறைவு. அதாவது சுமார் 20 இற்கும் குறைந்த மக்களே அவர்களுடைய பிரசாரத்தில் சித்தாண்டி பிரசேத வாசிகள் என்று சொல்பவர்கள் அமர்ந்திருந்தார்கள. இவர்கள் கூட மறுநாள் இடம்பெற இருக்கும் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வகளுக்காக வந்தவர்களும், மாலைப்பொழுதில் மரங்களின் கீழ் உட்கார்ந்து கதைத்துக்கொண்டிருக்கும் வயோதிபர்களுமேயாகும். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் மிகவும் அதிக செல்வாக்கைப் பெற்றிருந்த சித்தாண்டி பிரதேசத்தில் தமது செல்வாக்கை முற்றாகவே இழந்ததை எடுத்துக் காட்டுகின்றது. உண்மையில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வெறுப்பதற்கு காரணமே கிழக்கு வாழ் தமிழர்களின் தமிழ் தலைமைத்துவத்தை அகற்றி முஸ்லிம் தலைமைத்துவதற்கு வழிவகுப்பதற்கு போடப்பட்டுள்ள சதிகளை அறிந்ததேயாகும். 
 
இவற்றை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இத்தேர்தலில் பிரசாரத்தில் மக்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்ற காரணத்தினாலேயே தமது வாகனங்களில் ஆதரவாளர்களை வெளிமாவட்டங்களில் இருந்தெல்லாம் சுமார் 200 பேர் வரையிலான ஆதரவாளர்களை அழைத்து வந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இங்குள்ள மக்கள் தம்மீது நம்பிக்கை இழந்து விட்டர்கள் . சிலவேளைகளில் தமது பிரசாரங்களிலே குழப்பங்களை ஏற்படுத்துவார்கள் என்ற பீதியின் காரணமாகவே முன்கூட்டியே பாதுகாப்புக்கூட அரசதரப்பிலிருந்து பெற்றிருந்தார்கள். குறிப்பாக 300 இற்கும் மேற்பட்ட காவல்துறையினர், 50 இற்கும் மேற்பட்ட புலனாய்வு அதிகாரிகள், கலகம் அடங்கும் பிரிவு மற்றும் தீயணைப்ப படை போன்ற பல பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு காணக்கூடியதாகவிருந்தது. உண்மையில் தமிழர்கள் தமது கட்சியை நேசிக்கின்றார்கள், தமக்கு ஆதரவு இருக்கிறது என்றால் ஏன் இத்தனை பாதுகாப்புக்கள் போடவேண்டும். தமது மக்கள் தம்மீது அதிருப்தியுற்றுள்ளார்கள் சிலவேளைகளில் தமக்கு அவர்களால் ஆபத்து நிகழலாம் என்ற தோரணையிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமது பிரசாரக்கூட்டத்திற்கு இத்தகைய முன்பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தமை  தெட்டத்ததெளிவாகப் புலப்படுகின்றது.
 
அரசியல் பிரசாரத்திற்காகவும், மக்களிடத்தில் அனுதாபம் தேடுவதற்காகவும் தமது வாகனங்களையும். தமது அலுவலகங்களையும் தாமே சேதமாக்கிவிட்டு பொலிசில் முறைப்படுவதும் மேடைகளில் உளரித்திரிவதையும் அண்மை;காலத்தில் செய்து வருகின்றார்கள். 
சித்தாணடிபிரதேசத்திலே இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மற்றும் பாரிய குழுவினர் வருகை தந்திருந்தும் மக்கள் அதனைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சதிச்செயலை மக்கள் அறிந்து தெளிவுபெபற்றுள்ளார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவதுடன், கிழக்கு மண்ணில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மண்ணைக் கவ்வ இருப்பதையும் எடுத்து விளக்குகின்றது.
 
- ஆராவாணன்
read more...

Monday 20 August 2012

கிழக்கின் பெருந்தலைவர் நல்லையா


1815ம் ஆண்டு கண்டி இராச்சியத்தை ஆங்கிலேயர் கைப்பற்றியதோடு முழு இலங்கையும் காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டது.  அன்றிலிருந்து சுமார் 100 வருட காலம் இலங்கையர்கள் தமது சொந்த அரசியல் பிரதிநிதிகளை கொண்டிருக்கும் வாய்ப்பை இழந்திருந்தார்கள்.
இந்த நிலையில் முதன் முதலாக மாற்றம் ஏற்படுவதற்கு காரணமாய் அமைந்தது 1910ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட குறு மக்கலம் சீர்திருத்த முயற்சி ஆகும். அதன் ஊடாக இலங்கையில் முதன் முதலாக இலங்கை பிரதிநிதிகளை உள்ளடக்கிய சட்டசபை ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த சட்டசபைக்குள் நுழையும் வாய்ப்பை படித்த இலங்கையர்களின் பிரதிநிதி எனும் வகையில் பொன் இராமநாதன் தனதாக்கிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து 1921ல் மனிங் சீர்திருத்தம் ஏற்படுத்திய சட்டசபை விரிவாக்க நடவடிக்கைகள் மூலம் பல தமிழர்கள் சட்டசபையில் இடம் பிடித்தனர். இந்த சட்டசபை நுழைவில் இருந்து பல அரசியல் தலைவர்கள் தமிழர்கள் மத்தியில் இருந்து உருவாகத் தொடங்கினர்.
ஆனால் கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒரு தமிழருக்கேனும் இந்த சட்டசபை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தான் 1931 ஆம் ஆண்டு டொனமூர் யாப்பு ஏற்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் அரசாங்கசபை உருவாக்கப்பட்டது. இந்த அரசாங்க சபைக்கு பிரதேச ரீதியாகவும் சில ஒதுக்கீடுகள் நடந்தன. அதனடிப்படையில் கிழக்கு மாகாணத்திலிருந்து 02 அரசியல் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டார்கள். அதில் ஒருவராக மட்டக்களப்புத் தெற்கு தொகுதியில் இருந்து ஏ.ஓ. கனகரெட்ணமும் அதனைத் தொடர்ந்து வி.நல்லையா அவர்கள் தெரிவானார்.
விபுலானந்தரின் நெருங்கிய நண்பராக இருந்த வி.நல்லையா சிறந்த கல்விமானாகவும், சமூகசேவையாளராகவும் செயற்பட்டார். சட்டசபையின் விவாதங்களின் போதெல்லாம் கிழக்கு மாகாண மக்களின் நலன் சார்ந்து அவரது குரல் எப்போதும் தனித்துவமாகவே ஒலிக்கும். ஒரு பட்டதாரியாக கல்லூரி அதிபராக இருந்து சட்டசபைக்குள் நுழைந்த நல்லையா மாஸ்டரின் திறமையை சிங்கள அரசியல் தலைவர்கள் பெருமதிப்புடன் அணுகினார். அதன் காரணமாக சட்டசபை கல்வியமைச்சுக் குழுவிலும் இடம்பெற வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. 1944ம் ஆண்டு டபிள்யு, டபிள்யு கன்னங்கரா அவர்களினால் கொண்டுவரப்பட்ட இலவசக் கல்வி மசோதாவை சட்ட சபையில் எதிர்ப்பதில் ஜீ.ஜீ. போன்னம்பாலம், மகாதேவா,சிறிபத்மநாதா போன்ற வடபுலத் தலைவர்கள் உறுதியாக இருந்தனர். ஆனால் இலவசக் கல்வி திட்டமானது கல்வி வளர்ச்சியில் பின்தங்கி இருந்த கிழக்கு மாகாண பிரதேசங்களுக்கு அவசியமானது எனக் கூறி அதனை ஆதரித்து குரல் கொடுத்தவர் அமரர் நல்லையா அவர்களாவார்.
1947ம் ஆண்டு இடம் பெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறை அறிமுகமானபோது நல்லையா மாஸ்டர் அவர்கள் கல்குடா தொகுதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
இந்த வேளையில் தான் ஜீ.ஜீ.பொன்னம்பலமும் டி.எஸ்.சேனநாயக்கா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். வடக்கின் பெருந்தலைவராக உருவாகியிருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்திற்கு நிகராக கிழக்கு மாகாணத்தின் தனித்துவங்களை பறை சாற்றும் வல்லமை கொண்ட தலைவராக நல்லையா மிளிர்ந்தார்.
நல்லையா உள்ளவரை வடகிழக்கு தமிழர்களின் பெருந் தலைவர் என்ற அந்தஸ்தினை ஜீ.ஜீ.ஆல் கைப்பற்ற முடியவில்லை. கிழக்கு மாகாணத்தில் கால் பதிக்கவென ஜீ.ஜீ எடுத்த பகீரதப்பிரயத்தனங்கள் படுதோல்வியிலேயே முடிவுற்றன.
இலங்கை சுதந்திரமடைந்த போது வடக்கில் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையும் பரந்தனில் இரசாயனத் தொழிற்சாலையும் நிறுவப்பட்டது. அவ் வேளை கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி கிழக்கு மாகாணத்திலும் ஒரு தொழிற்சாலை நிறுவ வேண்டுமென நல்லையாவின் குரல் ஓங்கி ஒலித்தது. இதற்காக மேற்கொண்ட அயராத முயற்சி காரணமாகவே வாழைச்சேனை காகித ஆலை நிறுவப்பட்டது.
அதே போன்று இலங்கையில் அவ்வேளைகளில் காணப்பட்ட உதவி நன்கொடை வெறும் பாடசாலைகளே தரம் உயர்ந்தனவாக இருந்தன. அவற்றிற்கு நிகராக மூன்று மத்திய பாடசாலைகளை உருவாக்க அரசாங்கம் முயன்ற போது அதில் ஒன்று தமிழ்ப் பிரதேசங்களை மையப் படுத்தி நிறுவப்பட வேண்டுமென குரல் கொடுத்தவர் நல்லையா மாஸ்டர் ஆவார். அதனடிப்படையில் அந்த மத்திய மகா வித்தியாலயத்தை கற்குடா தொகுதியிலுள்ள வந்தாறுமூலையில் அரசு நிறுவியது. தமிழ்  பிரதேசத்திற்கென ஒதுக்கப்பட்ட அந்த மத்திய மகா வித்தியாலயத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவ வேண்டுமென யாழ்ப்பாணத்து அரசியல் வாதிகள் குரலெழுப்பிய போது பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் ஏற்ப்பட்டன.
வடமாகாணத்தின் கல்வி நிலை, கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலை, இருக்கின்ற வளங்கள், பாடசாலைகள் போன்றவற்றினை ஒப்பிட்டு பாராளுமன்றில் நல்லையா மாஸ்டர் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அவரது அயராத முயற்சியின் காரணமாகவே இன்று கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு அத்திவாரமாய் அமைந்த வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் உருவாக்கப்பட்டது.
வாழைச்சேனை பிரதேசத்திலிருக்கின்ற இயற்கை வளங்களை ஆதாரமாகக் கொண்டு வாழைச்சேனை பெரு நகரத் திட்டமொன்றினை அமைக்க நல்லையா அவர்கள் எண்ணங் கொண்டிருந்தார். காகிதஆலை, மத்திய மகாவித்தியாலயம் போன்றவற்றோடு இணைத்து பாசிக்குடா சுற்றுலாமையம், கற்குடா துறைமுகம் என்பவற்றை அபிவிருத்தி செய்வதனூடாக வாழைச்சேனையை கல்வி,சமூக,பொருளாதார ரீதியில் கிழக்கு மாகாணத்தின் பெருமையாக உருவாக்க அவர் கனவு கண்டார்.
அது மட்டுமன்றி மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலை, கோட்டமுனை மகாவித்தியாலயம் போன்ற வற்றினை அமைத்ததனூடாக மட்டக்களப்பின் கல்வியியல் வரலாற்றில் பெருந் திருப்ப மொன்றினை அவர் நிகழ்த்தினார்.
கல்விசார் துறை மட்டுமன்றி கிழக்கு மாகாண மக்களின் சமூக,பொருளாதார,பத்திரிகை துறையென்று சகல துறைகளையும் முன்னேற்ற அவர் பாடுபட்டார். இரா.பத்மநாதன், ளு.P.சிவநாயகம் போன்ற எழுத்தாளர்களையும் இலங்கையின் பத்திரிக்கைத் துறையில் பெரும் ஆளுமைகளாக வளர்த்தெடுத்ததில் அவரது பங்கு அளப்பரியதாக இருந்தது.
தமிழ் கலை கலாச்சார பாரம்பரிய அடையாளங்களை பாதுகாக்கும் முயற்சியில் பிராமணிய அடையாளங்களை தமிழர்களிடையே திணித்து வந்த ஆறுமுக நாவலரின் செயற்பாடுகளை அம்பலப் படுத்துவதில் வாழைச்சேனை பிரதேசத்தில் மையங் கொண்டிருந்த நாவலர் எதிர்ப்பியக்கம் உருவாவதற்கு நல்லையா மாஸ்டர் அவர்களின் செயற்பாடுகளும் ஆதாரமாய் அமைந்தன.
உதவி அமைச்சராகவும் சிறிது காலம் அமைச்சராகவும் பதவி வகித்த நல்லையா அவர்களை தாழ்ப்புணர்ச்சி காரணமாக டட்லியின் அமைச்சரiவிலிருந்து ஒதுக்கி விடுவதில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் வெற்றி பெற்றமையானது கிழக்கு மாகாண மக்களுக்குச் செய்யப்பட்ட மிகப் பெரிய துரோகமாகும்.
செனட் சபையிலும் 1947ம், 1952ஆம் ஆண்டுத் தேர்தல்களில் வெற்றியீட்டி பணியாற்றிய நல்லையா மாஸ்டர் அவர்கள் தனது இறுதிக் காலங்களில் உருவாக்கிய “கிழக்கு மக்களின் முன்னணி” என்ற அமைப்பினை வெற்றி கரமாக வளர்த்தெடுக்க முடியவில்லை 1956ம் ஆண்டு தேர்தலிலே தனிச் சிங்களச் சட்டமென்பது முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் மொழி உணர்வுகள் மக்களை ஆட்கொண்டது. தமிழ் மொழி உணர்வுகளைக் கிளறி தமிழரசுக் கட்சியினர் எழுப்பிய இனவாதக் கோசங்கள் கிழக்கு மாகாண மக்களின் தனிப் பெருந் தலைவனாய் நிமிர்ந்து நின்ற நல்லையா மாஸ்டர் அவர்களை தோல்வி காணச் செய்தது.
தமிழரசுக் கட்சியினரால் பரப்பப்பட்ட நல்லையா மாஸ்டருக்கு எதிரான அரசாங்கத்தின் கைக்கூலி பிரச்;சாரம் கிழக்கு மாகாண மக்களை ஆட்கொண்டது.
ஆனாலும் கிழக்கு மாகாண மக்களுக்கும் மண்ணுக்கும் நல்லையா மாஸ்டர் அவர்கள் ஆற்றிய பணியினை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து யாரும் மறைத்துவிட முடியாது.

read more...