Thursday 19 July 2012

முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டபோதும் படுகொலை செய்யப்பட்டபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எங்கே போனார்கள்?

கிழக்கு மாகாணசபை தேர்தலில் யார் முதலமைச்சர்? முஸ்லிம்களும் தமிழர்களும் தாங்கள் முதலமைச்சர் பதவியினைப் பெற வேண்டும் என்று வயூகங்களை வகுத்துக்கொண்டிருக்கும் இக் கால கட்டத்தில் தமிழ் கட்சிகள் சிலவும் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஒரு சில அரசியல்வாதிகளும் தமிழ் முதலமைச்சரை இல்லாமல் செய்வதற்கு பல சதித் திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண விகிதாசாரத்தின் அடிப்படையில் தாம் கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்க முடியாது. முதலமைச்சரை பெற முடியாது எனபது தெரிந்தும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் வரக்கூடாது என்பதற்காகவே போட்டியிடுகின்றனர். தாம் போட்டியிடுவதன் மூலம் தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு தமிழ் முதலமைச்சர் இல்லாமல் போகலாம் என்பது கூட்டமைப்பினருக்கு தெரியும்.

தமிழ் முதலமைச்சர் இல்லாமல் போவதன் மூலம் கிழக்கின் துரித அபிவிருத்திகள் இல்லாமல் போகலாம் என்பது தெரிந்திருந்தும் கூட்டமைப்பினர் இத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை சிதறடித்து கிழக்கின் அபிவிருத்தியை இல்லாமல் செய்யவே போட்டியிடுகின்றனர்.

இப்பொழுதுதான் கூட்டமைப்பினருக்கு முஸ்லிம்கள்மீது அக்கறை வந்திருக்கிறதா? கூட்டமைப்பினர் இதற்கு முன்னர் முஸ்லிம்கள் பல அவலங்களை சந்தித்தபோது எங்கே போனார்கள்? வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோதும், பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது இந்தக் கூட்டமைப்பினர் எங்கே போனார்கள்? அன்று ஏன் முஸ்லிம்கள்மீது அக்கறை வரவில்லை. அன்று வடக்கிலிருந்து விரட்டப்பட்டபோதும் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் புலிகளுடன் பக்கப்பாட்டுப் பாடியவர்களுக்கு முஸ்லிம்கள் பற்றி பேசவோ அக்கறைப்படவோ எந்த அருகதையும் இல்லை.

முஸ்லிம்கள் அவலங்களையும் அழிவுகளையும் சந்தித்தபோது திரும்பிக்கூட பார்க்காமல் கைகொட்டிச் சிரித்தவர்களுக்கு முஸ்லிம்கள் நிம்மதியாக வாழுகின்றபோது அக்கறை வந்திருக்கின்றது. முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வது பிடிக்கவில்லைபோலும். முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பினருடன் கூட்டுச் சேர்வது தொடர்பாக பேசப்படுகின்றது. முஸ்லிம்காங்கிரஸ் கூட்டமைப்பினருடன் கூட்டுச் சேர்வார்களானால் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களுக்கு மிகப்பெரும் வரலாற்றுத் தவறினைச் செய்யும்.

முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்போதும் படுகொலை செய்யப்பட்டபோதும் கைகொட்டிச் சிரித்து வேடிக்கை பார்த்து புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் இக் கூட்டமைப்பினரே.

தொடரும்...
read more...

Monday 16 July 2012

லூசுத்தனமும் முட்டாள்தனமும்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெல்லப்போவது யார்? ஒவ்வொரு கட்சியும் தாங்கள்தான் வெற்றி பெறுவோம், தமக்குத்தான் முதலமைச்சர் பதவி என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். தாங்கள்தான் வெற்றியை தீர்மானிப்பவர்கள் போன்று சொல்லிக்கொண்டிருக்கின்றனர். கிழக்கு மக்கள்தான் யார் முதலமைச்சர் என்பதனை தீர்மானிக்க இருக்கின்றனர்.

மக்கள் மனங்களில் நிறையவே மாற்றங்கள் வந்திருக்கின்றன. தமிழீழம், தமிழன் என்ற உணர்வு அதிகம் கொண்டவர்கள் கிழக்கு மக்கள். அதன் பிரதிபலிப்பே கிழக்குப் போராளிகள் பல வெற்றிச் சமர்களை புரிந்து வீர வரலாறுகளைப் படைத்தனர். அன்று அவர்கள் அறிந்திருக்கவில்லை தமிழீழமென்பது அடைய முடியாத இலக்கு என்பதனை. இலங்கயைில் தமிழீழம் சாத்தியமில்லை என்பதனை.

யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு கிழக்கு மாகாணம் பாரிய அபிவிருத்தியைக் கண்டு மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வரும் இந்த நிலையை நினைத்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். கடந்த காலங்களில் தமிழீழம் எனும் அடைய முடியாத மாயையைக் காட்டி நாம் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். என்பதனை கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். 


 தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் கிழக்கு மக்களை ஏமாற்றி வருவதனையும் மக்கள் நன்கு உணர்ந்துவிட்டனர். அதன் பிரதிபலிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினை கிழக்கு மக்கள் புறக்கணித்து வருகின்றனர். இதனை உணர்ந்த கூட்டமைப்பினர்  மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அப்பட்டமான பல பொய்களை மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றனர்.

உண்மையில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பினர் போட்டியிடுவதற்குக் காரணம் கிழக்கின்மீதோ, கிழக்கு மக்கள்மீதோ  இருக்கின்ற அக்கறை இல்லை. யுத்த்த்தின் கோரப்பிடியில் சிக்குண்டு சின்னாபின்னமாக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் துரித வளர்ச்சியை கண்டு சகித்துக்கொள்ள முடியாமல் இத் துரித அபிவிருத்தியை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கமாகும்.

அண்மையில் சம்பந்தன் அவர்கள் சொல்லியிருந்தார் அரசாங்கத்தோடு சேர்ந்திருக்கின்ற எவரையும் வெல்ல விடமாட்டோம் என்று. இதிலிருந்து தெளிவாகின்றது கிழக்கின் துரித அபிவிருத்தியை இல்லாமல் செய்ய வேண்டும் எனும் கூட்டமைப்பின் நோக்கம். அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இருந்து கிழக்கு முதலமைச்சர் பதவியைப் பெற்று அரசாங்கத்துடன் பல பேரம்பேசல்களுடன் யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு பாரிய அபிவிருத்தியை செய்து மக்கள் மத்தியில் துரிதமாக இடம் பிடித்தவர் பிள்ளையான் அவர்கள்.

அரசாங்கத்தோடு அங்கம் வகித்தால் மட்டுமே கொடிய யுத்த்த்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்பது  எல்லோருக்கும் தெரியும். வெறுமனே வீர வசனங்களைப்பேசி மக்களை உசுப்பேற்றிவிட்டு அரசியல் இலாபம் தேடிக்கொண்டு அரசால் வழங்கப்படும் சுகபொகங்களை பெற்றுக்கொண்டு கூட்டமைப்பினரைப்பொல் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தால் எமது பிரதேசத்தை யார் கட்டியெழுப்புவது என்பதை சிந்திக்காதவர்களாக கூட்டமைப்பினர் இருக்கின்றனர்.

கிழக்கு மக்களுக்காக குரல் கொடுக்க தேர்தலிலே களமிறங்கும் கூட்டமைப்பினருக்குள்ளேயே ஒற்றுமை இல்லை அதற்குள் கிழக்கு மக்களுக்கு விடிவினைப் பெற்றுக் கொடுக்கப்போகின்றனராம். வேட்பாளர்களை தெரிவு செய்வதிலே அவர்களுக்குள் குழப்பம். இவ்வளவு காலமும் எதிர்க்கட்சி அரசியல் நடாத்தி மக்களை அடமானம் வைத்து சுகபொக வாழ்க்கை வாழ்ந்த்து போதாது என்று கிழக்கு மாகாணசபை தேர்தலிலும் மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். மக்கள் இவர்களின் மறு முகங்களை நன்கு உணர்ந்துவிட்டனர் கிழக்கு மக்கள் எப்போதோ அவர்களை தூக்கி எறிந்துவிட்டனர். மக்களின் ஆதரவு தமக்கு இல்லை என்பதனை  நன்கு உணர்ந்துவிட்டனர். கூட்டமைப்பினருக்கு பிரச்சாரம் செய்வதற்குக்கூட கிழக்கு மக்கள் தயாராக இல்லை. வடக்கிலிருந்து வருகின்ற ஒரு குழுவினர் முகாமிட்டு பிரச்சாரம் செய்யப்போகின்றனராம். நாய்க்கு ஏன் போர்த்தேங்காய் கிழக்கை கிழக்காக இருக்க விடுங்கள் நீங்கள் உங்கள் வேலைகளைப் பாருங்கள் எங்கள் மக்கள் யாரை முதலமைச்சராக்குவது என்பதனைத் தீர்மானிக்கட்டும்.

தொடரும்....


read more...

ஆடை இன்றி உல்லாசமாக இன்பம் காண அழைக்கும் அரட்டை இணையத்தளங்கள்



பகுதி 01

ஆடையின்றி இன்பம் காணும் இணைய அரட்டை

இணைய அரட்டையில் ஈடுபடுகின்ற அதிகமான                                     பெண்கள் ஊரினச் சேர்க்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்  அரட்டையில் ஈடுபடும் அதிகமானவர்கள் இளம் வயதானவர்கள் என்பதனால் பின் விழைவுகளைப் பற்றி சிந்திக்காது செயற்படுகின்றனர்.

செக்ஸ் அரட்டையில் ஈடுபடுபவர்கள் இளம் வயதினர் என்றாலும் வயதானவர்களும் இல்லாமல் இல்லை. இதில் அண்பெண் இருபாலாரும் அடங்கும். இவர்களின் இவ்வாறான நடத்தைக்கு சமூகமும் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. அரட்டை இணையத்தளங்களில் அரட்டையில் ஈடுபடுகின்ற அதிகமான வயது அதிகமாக பெண்களின் கணவன்மார் வெளி நாடுகளில் வேலை செய்கின்றனர்.

இவ்வாறான பலருடன் நான் அரட்டை அடித்திருக்கின்றேன் இத் தொடரை எழுத வேண்டும் என்பதற்காக. அவர்களைப் பொறுத்தவரையில் தமது ஏதோ ஒரு வகையில் தமது உடல் இச்சைகளை தீர்த்துக் கொள்ளும் ஒரு இடமாக இவ் அரட்டை இணையத்தளங்களை பயன்படுத்துகின்றனர். திருமணமான பெண்கள்கூட வீடியோ அரட்டையில் தமது முகத்தை காட்டாமல் உடலில் அனைத்துப் பாகங்களையும் காட்டி அரட்டையில் ஈடுபடுகின்றனர். நான் அரட்டை இணையத்தளங்களில் உலா வந்த இரண்டு மாதங்களிலும் பலருடன் நட்பு ரீதியில் பழகி பல விடயங்களை அறிந்து கொண்டேன் அவைகளை இத் தொடரில் வெளியிட இருக்கின்றேன். புகைப்படங்களை வெளியிடவேண்டாம் என்று பல நண்பர்கள் வெண்டிக் கொண்டனர். இப்போதைக்கு அவற்றை வெளியிடவில்லை அவசியம் ஏற்படுகின்றபோது வெளியிடுகின்றேன்.

http://www.hi2world.com/chat/ மற்றும் www.paristamil.com/chat இரண்டிலும் நான் அடிக்கடி அரட்டைக்கு செல்வதுண்டு. (இத் தொடரை எழுதுவதற்காகவே சென்றேன்) பரிஸ்தமிழ் இணைய அரட்டையில் எனும் பெயரில் இரவு 10 மணிக்குப் பின்னர் sujikala எனும் பெயரில் ஒரு பெண் அரட்டைக்கு வருவார். அவர் இலங்கையைச் சேர்ந்தவர். அவருடன் பல நாட்கள் அரட்டை அடித்து அவரிடமிருந்து பல விடயங்களை பெற்றுக் கொண்டேன். அவருடைய வயது 36 இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர் மகளுக்கு 14 வயது மகனுக்கு 12 வயது கணவன் வெளிநாட்டில் 7 வருடங்களாக தொழில் புரிகின்றார். அவர் இணையத்தில் செக்ஸ் அரட்டையில் தினமும் மூழ்கிக் கிடக்கின்றார். அவரிடம் இருந்து நான் அறிந்து கொண்ட பல விடயங்கள் கவலையை ஏற்படுத்தியது.

நான் கேட்டேன் ஏன் இப்படி செக்ஸ் அரட்டையை நாடி வருகிறீர்கள் என்று அவர் சொன்ன பதில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இங்கு வந்து ஏனைய ஆண்களோடு சந்தோசமாகப்பேசி பழகி என் இச்சைகளை தீர்த்துக் கொள்கின்றேன் என்று கூறினார்.

தனது உடல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக தனது அக்காவின் மகளுடன் தினமும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார். அக்காவின் மகளின் வயது 17 என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் இணையத்தில் செக்ஸ் அரட்டையில் ஈடுபட்டாலும் தனது கணவனைத்தவிர வேறு எந்த ஆணுடனும் தான் உடலுறவு கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட அவர் தனது வீட்டில் தனது மாமியார் இருப்பதனால் ஆண்கள் வர முடியாது என்றும் குறிப்பிடார்.

நான் வேறு வேறு பெயர்களில் அவருடன் அரட்டை அடித்தேன். அவருடன் அரட்டையில் ஈடுபடும் அனைவருக்கும் அவரது தொலைபேசி இலக்கத்தினை கொடுக்கின்றார். தொலைபேசியில் பேசும்படி சொல்கின்றார். 

இதனையும் பாருங்கள்

லூசுத்தனமும் முட்டாள்தனமும்


தொடரும்
read more...

Friday 13 July 2012

ஆடையின்றி இன்பம் காணும் இணைய அரட்டை



இணையமானது பல்வேறு பட்ட நன்மைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டாலும் அதிகமானவர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அதிகமானவர்கள் இணையத்தினை செக்ஸ்  தேவைகளை பூர்த்தி செய்வதற்காகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தமது காம, செக்ஸ் வக்கிரங்களை தீர்த்துக் கொள்வதற்காக சமூகத்தளங்களையும், அரட்டை இணையத்தளங்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் நான் பல தடவை எழுதி இருந்தாலும். செக்ஸ் அரட்டை தொடர்பாக இன்னும் நிறையவே எழுதவேண்டும். சில தகவல்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்என்பதற்காக செக்ஸ் அரட்டை தொடர்பாக பல விடயங்களை ஆராய முற்பட்டேன் கடந்த மூன்று மாதங்களாக என்னுடைய அதிக நேரங்களை சமூகத்தளங்களிலும் அரட்டை இணையத்தளங்களிலும் செலவிட்டேன். காரணம் இவ்வாறான செக்ஸ் அரட்டை மூலம் பலர் தமது வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மூன்று மாதங்கள் சமூகத்தளங்களிலும், அரட்டை இணையத்தளங்களிலும் அதிக நேரம் செலவிட்டதன் பயனாக இவ்விடயம் தொடர்பாக பல விடயங்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளவேண்டி இருக்கின்றது. காரணம் எமது இளம் சமூகம் எந்தளவிற்கு சீரழிந்து கொண்டிருக்கின்றது என்பதனை மற்றவருக்கும் சொல்லவேண்டியிருக்கின்றது.

உண்மையில் நான் நினைத்தக்கூட பார்க்கவில்லை இந்தளவிற்கு எமது இளம் சமூகம் சீரழிந்து செல்கின்றது என்று. உண்மையில் அரட்டை இணையத்தளங்கள் செக்ஸ் அரட்டைக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.  இவ் அரட்டை இணையத்தளங்களில் பலர் தினமும் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இதில் ஆண்கள் மாத்திரமல்ல அதிகமான பெண்களும் அடங்குகின்றனர். முகத்தை மறைத்து வீடியோ அரட்டைகளில் ஈடுபடுகின்றனர். பல நாட்கள் பழகிய பின்னர் நேரடியாக சந்தித்துக்கூட தமது காம வேட்கையை தீர்த்துக் கொள்கின்றனர்.

சமூகத்தளங்களும் இதற்கு விதிவிலக்கல்ல பலரை நாடி பிடித்தப் பார்த்தேன். அதிகமானவர்கள் இவ்வாறான அரட்டைகளில் ஈடுபடுகின்றனர். இத்தொடரில் எவருடைய தனிப்பட்ட விபரங்களையும் நான் வெளியிடமாட்டேன். எவரும் பயப்பட தேவையில்லை.

அரட்டை இணையத்தளங்களிலே செக்ஸ் அரட்டை அடிப்பவர்கள் அவர்களுக்குள்ளே ஒரு வலையமைப்பை வைத்திருக்கின்றனர். நானும் சில அரட்டை இணையத்தளங்களுக்குள் பிரவேசித்து அவர்களின் தொடர்புகளைப் பெற்றேன். அவர்கள் பற்றிய முழு விபரங்களும் எனக்கு கிடைத்தன. இவ் இணையத்தளங்களிலே 20 - 30 வயதுக்குட்டபட்ட இளம் பெண்கள் அதிகம் ஈடுபடுகின்றனர்.
நீண்டநாட்களுக்கு முன்னர் இவ்விடயங்களை எழுத நினைத்து பல நண்பர்களிடம் இவ்விடயம் பற்றி பேசினேன் சிலர் இவைகளை வெளியிடவேண்டாம் என்று கூறினார்கள். பலர் எழுதும்படி கூறினார்கள். நான் பல ஆதாரங்களையும் புகைப்படங்களையும் இத் தொடரில் வெளியிட இருக்கின்றேன். இது ஒரு விழிப்புணர்வுக்கான பதிவு யாரையும் புண்படத்தும் நோக்கம் இல்லை. எவர் பற்றிய தனிப்பட்ட தகவல்களையும் வெளியிடமாட்டேன்.

ஆனாலும் பல உண்மையான விடயங்களையும் ஆதாரங்களையும் தொடர்ந்து வெளியட இருக்கின்றேன். சில நண்பர்கள் கேட்டார்கள் அது அவரவர் சுதந்திரம் இதில் மற்றவர் தலையிடவேண்டிய அவசியமில்லை என்று எது எப்படி இருப்பினும் எமது கலாசாரத்தை நாம் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இருக்கின்றதல்லவா?


தொடரும்...

read more...

Monday 9 July 2012

கிழக்கு மாகாணசபைக்காக நாக்கை தொங்கவிட்டு நாயாய் அலையும் கூட்டம்



கிழக்கு மாகாணத்தின் இன  விகிதாசாரம் தெரியாமல் கிழக்கு மாகாணசபையினை நாமே கைப்பற்றுவோம், முதலமைச்சர் பதவி எமக்குத்தான் என்றெல்லாம். கூட்டமைப்பினர் தம்பட்டமடிப்பது சிறு பிள்ளைத்தனமானது. கிழக்கு மாகாணத்தில் ஒரு சமூகம் மாத்திரம் மாகாணசபை ஆட்சியை அமைக்க முடியுமா இல்லையா என்பதனைக்கூட அறியாத கூட்டமைப்பினர் கிழக்கு மக்களுக்கு என்ன செய்யப்போகின்றனர்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை மூவின மக்களும் வாழ்ந்து வரும் ஒரு பிரதேசம், கிழக்கு மாகாணத்தின் அரசியல் நிலைமைகளை எடுத்துப் பார்க்கின்றபோது கிழக்கு மாகாணத்தின் இன விகிதாசாரம் கிழக்கு மாகாண அரசியலை தீர்மானிப்பதிலே பெரும் பங்கு வகிக்கின்றது. தனித்து ஒரு சமூகத்தினால் அட்சி அமைக்க முடியாத இன விகிதாசாரம் கிழக்கு மாகாணத்திலே இருக்கின்றது.

இன்று கூட்டமைப்பினர் சொல்வதுபோது தமிழர்கள் மட்டும் ஆட்சியமைக்க முடியுமா? வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு பேசிக்கொண்டிருக்கின்றனர். தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான விகிதாசார வேறுபாடு ஒருசில வீதங்களே. முஸ்லிம்கள் உச்ச அளவில் வாக்களிப்பார்கள் குறிப்பாக 80-90 வீதம் வாக்களிப்பார்கள். ஆனால் தமிழர்களோ 50-60 வீதம் வாக்களிப்பார்கள். இது கடந்தகால புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. தொடரும் பகுதிகளில் புள்ளிவிபரங்களை இணைக்கிகின்றேன். மறு புறத்தில் இத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்களிப்பு வீதம் இன்னும் அதிகரிக்கலாம். காரணம் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக பெற வேண்டும் என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக இருக்கின்றனர்.

கிழக்கின் இன விகிதாசாரமோ வாக்களிப்பு வீதங்களோ அரசியல் நிலைமைகளோ தெரியாமல் எங்களுக்குத்தான் முதலமைச்சர் கிடைக்கும் என்று கூட்டமைப்பினர் சொல்வதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. அவர்களின் ஒரே நோக்கம் தமிழ் முதலமைச்சரை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதாகும். அதுவும் குறிப்பாக பிள்ளையானை அரசியலில் இருந்து துரத்தவேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்கம்.

இன்று கிழக்கிலே ஒரு பாரிய அரசியல் சக்தியாக பிள்ளையானும் அவரது கட்சியும் உருவெடுத்துவிட்டது. இனிமேலும் பிள்ளையானை விட்டுவைத்தால் கிழக்கிலே தாம் அரசியல் நடாத்த முடியாது. கிழக்கு மாகாணம் பாரிய அபிவிருத்தி கண்டு வருகின்றது. கிழக்கு மக்கள் பிள்ளையான் பின்னால் அணி திரள்கின்றனர். என்பதை எல்லாம் பார்க்கின்றபோது கூட்டமைப்பினருக்கு என்றுமில்லாத ஒரு அச்சமும் நடுக்கமும் பிடித்துவிட்டது.

பூசாரியை வைத்து பூசை முடித்து சில சதித் திட்டங்களைத் தீட்டி கிழக்கு மாகாணத்தில் தமிழ் முதலமைச்சரை இல்லாமல் செய்ய முயற்சிக்கினறனர். பாவம் இவர்கள் கிழக்கு மக்கள் உண்மைகளையும் யதார்த்தங்களையும் உணர்ந்துவிட்டனர். கூட்டமைப்பினரை தூக்கி எறிந்துவிட்டனர் என்பதை அறிந்தும் தாம் தோல்லி அடைவோம் என்று தெரிந்தும் ஆசாமியும் அவரது அடிவருடிகளும் முதலமைச்சர் பதவி ஆசையோடு நாக்கை தொங்ஙவிட்டு நாயாய் அலைகிறார்கள்.

காரணம் பல தசாப்த அரசியல் நடத்திய கூட்டமைப்பினருக்கு எப்படி அரசியல் செய்வது என்பது தெரியாது. பிள்ளையான் நடாத்திய அரசியலைப் பார்த்து தாமும் பிள்ளையானைப் போன்று கிழக்கு மாகாணசபையை ஆட்சி செய்து பார்ப்போம் என்ற ஆசைதான்

தொடரும்...
read more...

Thursday 5 July 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள் - கொக்கரிப்பு -04

கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலையும் மக்களின் அரசியல் மீதான அக்கறை பற்றியும் இந்தத் தொடரில் ஆராயலாம் என நினைக்கின்றேன். அண்மைக் காலமாக கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அரசியலிலும் வெறுப்புக் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இதனால் தேர்தல்களில் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தனர். மறு புறத்தில் தமது அரசியல் இஸ்திரத் தன்மையினைப் பேணுவதிலும் தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதிலும் தமது வாக்குப் பலத்தினை முஸ்லிம் மக்கள் பயன்படுத்தத் தவறியதில்லை.

இவ்வாறு தமிழ் மக்கள் அரசியலில் நாட்டமற்றுச் சென்றமைக்கான முக்கிய காரணம் கடந்தகால அரசியல்வாதிகள் மக்களை திட்டமிட்டு ஏமாற்றியிருக்கின்றனர். என்பதனை மக்கள் நன்கு உணர்ந்ததன் வெளிப்பாடே மக்கள் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தனர். தேர்தல் காலங்களில் வருவார்கள் ஆயிரம் பொய்களையும் உணர்ச்சி வார்த்தைகளையும் மக்கள் மத்தியில் விதைத்தவிட்டு மக்கள் ஓட்டுப் போட்டதும் தெரிவு செய்யப்பட்டபின் அந்த மக்களையும் அவர்களின் அவலங்களையும் மறந்து அரசாங்கம் வழங்கும் சலுகைகளைப் பெற்று சுயபோக வாழ்க்கை வாழ்ந்து வருவார்கள்.

எப்போதாவது மக்களை சந்தித்தால் உணர்ச்சி வார்த்தைகளைக்கூறி மக்களை சூடேற்றி பலிக்கடாவாக்குவது பாராளுமன்றம் சென்று எதிர்க் கட்சி ஆசனங்களிலே அமர்ந்திருந்து பாராளுமன்றக் கதிரைகளைச் சூடேற்றியதைத் தவிர மக்களுக்கு கடந்தகால தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்தனர்? ஆனால் முஸ்லிம் மக்களும் அரசியல்வாதிகளும் அரசியல் யதார்த்தங்களை நன்கு உணர்ந்து செயற்பட்டு அரசாங்கத்தில் அங்கம் அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்று அரசாங்கத்துடன் பேரம்பேசி தமது அரசியல் இஸ்திரத் தன்மையினைப்பேணி தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்து வருகின்றனர்.

இந்த மாகாணசபைத் தேர்தலிலும் கிழக்கிலே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெறவேண்டும் என்பதில் முஸ்லிம் மக்களும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் முனைப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடாது என்பதற்காக கூட்டமைப்பினரும் அவர்களுடன் சார்ந்த ஒரு சிலரும் சில சதித் திட்டங்களை செய்து வருகின்றனர்.

இன்று கிழக்கிலே ஒரு கட்சி உதயமாகி யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட கிழக்கை துரிதமாக அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்கின்றது. கிழக்கு மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர் என்பதனை உணர்ந்த கூட்டமைப்பினர் இவைகளை இல்லாமல் செய்யவே கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்திருக்கின்றனர்.

இன்று கிழக்கிலே பிள்ளையான் முதலமைச்சராக பதவியேற்றதன் பின்னர் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்று கிழக்கு மாகாணம் துரிதமாக வளர்ச்சியடைந்து வருவதை எவராலும் மறுக்கவும் முடியாது இடம்பெற்ற அபிவிருத்திகளை மறைக்கவும் முடியாது. யாரால் இவ்வாறான அபிவிருத்திகள் சாத்தியமாகின யார் மக்களுக்காக சேவை செய்கின்றனர் என்பதனை கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்துவிட்டனர். இதன் காரணமாகவே தமிழரசுக் கட்சியினரின் தேசிய மாநாட்டை புறக்கணித்தனர். அவர்களின் மாநாடு மட்டக்களப்பில் படு தோல்வியில் முடிவடைந்தது. இதனை பார்க்கவும் (தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு வெற்றியா? தோல்வியா? http://www.shanthru.com/2012/05/blog-post_28.html) கூட்டமைப்பினர் மாhகாணசபையை தாம் கைப்பற்றுவோம் முதலமைச்சர் பதவி தமக்குத்தான் என்று கொக்கரித்துத் திரிகின்றனர். இவர்கள் எல்லாம் படித்த முட்டாள்காளா? கிழக்கு மாகாணத்தில் இன விகிதாசாரம் தெரியாமலா இவ்வாறு பிதற்றுகின்றனர். தமிழர்கள் மாத்திரம் வாக்களித்து ஆட்சியமைக்க முடியுமா? இவர்கள் நாங்கள்தான் முதலமைச்சர் பதவியை பெறுவோம் என்;று சொல்வது சிறு பிள்ளைத் தனமாக இருக்கின்றது...

தொடரும்.....
read more...

பட்டதாரிகளின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள்

மட்டக்களப்பில் HNDA பட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்து HNDA பட்டதாரிகள் விசனம்

கடந்த மாதம் 29ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்றிருந்த பட்டதாரிகளுக்கு பட்டதாரிப் பயிலுனர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இதன்போது HNDA பட்டதாரிகளுக்கும் பட்டதாரிப் பயிலுனர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இதனடிப்படையில் மட்டக்களப்பு கச்சேரியிலும், பிரதேச செயலகங்களிலும் பட்டதாரிகள் பயிற்சிக்காக இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவ் நியமனக் கடிதத்தினை மட்டக்களப்பு அரச அதிபர் திருமதி P.S.M.சார்ள்ஸ் அவர்கள் கையொப்பமிட்டு வழங்கியிருக்கின்றார். ஆனால் இன்று மட்டக்களப்பு அரச அதிபரினால் பிரதேச  செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடித்தில் HNDA பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனங்கள் நிறுத்தப்பட இருப்பதனால். HNDA பட்டதாரிப் பயிலுனர்களை பயிற்சியல் இணைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட HNDA பட்டதாரிகள் இவ்விடயம் தொடர்பில் குழப்பமடைந்திருக்கின்றனர். காரணம் மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகம் உட்பட ஒருசில பிரதேசசெயலகங்களில் HNDA பட்டதாரிகளை நாளை முதல் வேலைக்கு வரவேண்டாம் என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேச செயலகங்களில் HNDA பட்டதாரிகளை வேலைக்கு வரவேண்டாம் என்ற கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. பிரதேச செயலகங்களுக்கு வெவ்வேறு சட்டதிட்டங்களா?

HNDA கற்கை நெறியும் பல்கலைக் கழக பட்டங்களுக்கு சமமானது என்கின்ற சுற்று நிருபம் அரசினால் வெளியிடப்பட்டு கடந்த காலங்களில் HNDA பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. HNDA பெறுமதி வாய்ந்த ஒரு கற்கைநெறி என பலராலும் பேசப்படுகின்ற இக் கற்கை நெறிக்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து இக் கற்கை நெறியை நான்கு வருடங்கள்  பயின்று தொடர்ந்து வேலை வாய்ப்பில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.

ஆனாலும் இந்தப் பட்டதாரிப் பயிலுனர் நியமனத்தில் HNDA பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவது ஏன்? நான்கு வருடங்கள் கஸ்ரப்பட்டு படித்து பட்டம் பெற்றது இதற்குத்தானா? அரசாங்கம் ஏமாற்ற நினைக்கின்றதா? இதற்கு முன்னர்  HNDA பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டு  இப்போது புறக்கணிக்கப்படுவது ஏன்? பல்கலைக்கழக பட்டங்களுக்கு சமமான கற்கைநெறி என்ற சுற்று நிருபம் எங்கே போனது. அரசாங்கம் ஏன் ஏமாற்ற நினைக்கின்றதா?

இவை ஒரு புறமிருக்க நியமனம் வழங்கும்போது இவை பற்றி ஏன் இவர்கள் சிந்திக்கவில்லை. நியமனத்தை அரச அதிபர் சார்ள்ஸ் அவர்கள்தான் கையொப்பமிட்டு அன்று வழங்கினார். இன்று இரண்டு நாட்கள் வேலைக்கு சென்றபின்னர் வேலையிலிருந்து நீக்கியிருக்கின்றார். இது மனித உரிமை மீறலில்லையா?

 நியமனம் வழங்கப்பட்டபோது 2400 பட்டதாரிகளுக்கு முன்னிலையில் HNDA பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்பட்டது. இரண்டு நாட்கள் வேலைக்கு சென்றபின்னர். எந்தவித காரணங்களும் சுட்டிக்காட்டப்படாமல் நியமனத்தை இரத்துச்  செய்வது மனித உரிமை மீறலில்லையா? இவ்வாறான செயற்பாடுகளினால் எத்தனை பேரின் மனநிலை பாதிக்கும் எத்தனைபேர் தற்கொலைக்குக்கூட செல்லக்கூடிய நிலையில் இருப்பார்கள் என்பதனை இவர்கள் அறியாமலா வாழ்க்கையில் விளையாடுகின்றனர். 
read more...

Wednesday 4 July 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள் - கொக்கரிப்பு 03

கடந்த பதிவில் குறித்த நண்பர் விதண்டாவாதமான கருத்துக்களை தெரிவித்திருந்தார் அவருக்கு இப்பதிவிலே சில கருத்துக்களைத் தருகின்றேன். முதலில் நீ்ங்கள் உண்மைகளையும், நிஜங்களையும் அறிந்து கொள்ளுங்கள் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி அடையவில்லை என்பது முட்டாள்தனமானது.

யாழ்ப்பாண மக்களிடம் பிரதேச வாதம் இல்லை என்று சொல்வது உங்கள் அறியாமை நான் பல யாழ்ப்பாண நண்பர்களுடன் பழகி இருக்கின்றேன் அவர்களே இதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றர்.

கருணா எதற்காகப் பிரிந்தார் அவரது தற்போதைய நடவடிக்கைகள் என்ன என்பது வேறு விடயம். அவரின் நடடிக்கைகள் தொடர்பில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் கருணா பிரிந்து வந்தபோது அவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையே.
அடுத்து பிள்ளையான் சொத்து சேர்ப்பதாகச் சொல்லி இருக்கின்றீர்களே எங்கே சொத்துச் சேர்த்திருக்கின்றார் என்பதனை பட்டியலிடுங்கள் கண்ணை மூடிக்கொண்டு கதைப்பதை விட்டுவிட்டு. எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு அப்பட்டமான பொய்களைக் கதைக்கலாம். ஆனாலும் உண்மைகள் உறங்குவதில்லை. போராளியாக இருந்த பிள்ளையான் இன்று ஒரு ஜனநாயக அரசியல் பாதையில் வந்திருக்கின்றார். அவருக்கும் ஆசா பாசங்கள் இருக்கின்றன அவர் நகைகள் போடக்கூடாது என்பது உங்கள் முட்டாள்தனம். புலிகள் அமைப்பில் இருந்த போராளிகள் இன்று நகைகள் அணியவில்லையா? புலிகளின் நடவடிக்கைகள் தவறானவை என்று பிரிந்து வந்த பிள்ளையான் எதற்கு புலிகளின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். எதற்காக நகை அணியக்கூடாது.

அரசால் வழங்கப்படுகின்ற சலுகைகளை கூட்டமைப்பினர் பெறுகின்றனர் என்பதற்கு ஆதாரம் என்னிடம் கேட்பதற்கு முன்னர் உங்கள் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுப் பாருங்கள். அரியநேந்திரன் அவர்கள் அரசிடம் இருந்து மூன்று வேலைவாய்ப்புக்களைப் பெற்று மனைவிக்கும், மச்சாளுக்கும், மகளுக்கும் கொடுத்திருக்கின்றார். இதை அரியநேந்திரனிடம் கேட்டுப் பாருங்கள்.

மிக அண்மையில் நடந்த சம்பவம் செல்வராஜா அவர்கள் ஒரு அமைச்சரைச் சந்திக்க முந்திரிப்பருப்பு தயிர் போன்றவற்றை கொண்டு சென்றிருக்கின்றார். எதற்காகத் தெரியுமா? குடிநீர் இல்லாமல் கஸ்ரப்படுகின்ற துறைநீலாவணை மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக வந்த திட்டத்தினை தடுத்து தனது கிராமமான கல்லாற்றுக்கு அத் திட்டத்தினை மாற்றி கேட்டிருக்கின்றார் குறித்த அமைச்சரிடம். இது மாத்திரமல்ல தமது உறவினர்களுக்கு அரசிடமிருந்து அரசிடமிருந்து பல உதவிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார். அண்மையில்கூட அரசாங்கத்தின் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்களே கூட்டமைப்பினர்.

எல்லைப் புறங்களை பாதுகாக்கவும் எல்லைப்புற கோவில்களை புனரமைக்குவும் பிள்ளையான் அவர்கள் பெருந்தொகையை ஒதுக்கி இருக்கின்றார். கூட்டமைப்பினர் விகாரை கட்டுகிறார்கள், காணி பிடிக்கின்றார்கள் என்று அறிக்கைகள் மூலம் கொக்கரிப்பார்கள் அதை வைத்து அரசியல் நடத்துவார்கள் ஆனால் பிள்ளையான் எதையும் செயலில் காட்டிவிடுவார். முஸ்லிம்களால் பிடிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்கள் எத்தனை காப்பாற்றப் பட்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

விகாரைகள் கட்டப்படுகின்றன என்று சொல்லும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன். சிங்களப் பிரதேசங்களிலே தமிழர்கள் கோவில்கள் கட்டவில்லையா? சிங்களவர்கள் செறிந்து வாழும் கொழும்பிலோ தமிழர்கள் எத்தனை பெரிய கோவில்களைக் கட்டியிருக்கின்றனர். உங்களை சங்கள மக்கள் தடுத்து நிறுத்தியிருக்கலாம்தானே?

பிள்ளையான் குழு கொள்ளையிட்டதாகச் சொல்கின்றீர்களோ நீங்கள் பத்திரிகைகள்கூட பார்ப்பதில்லைபோலும் வங்கிக் கொள்ளை உட்பட அனைத்துக் கொள்ளையுடனும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் எவரும் பிள்ளையான்குழு அல்ல. இதுகூட தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு பேசுகின்றீர்கள்.

அப்பட்டமான பொய்களை சொல்ல நினைக்காதீர்கள் கொலை கொள்ளைகள் தொடர்பாக UN REPORT இருப்பதாகச் சொல்லும் நீங்கள் அதனை வெளியிடுங்கள். பிள்ளையான்குழு எந்த ஒரு புலனாய்வு அமைப்புடனும் சேர்ந்து செயற்படவில்லை. ஆட்களை கடத்தவும் இல்லை கொள்ளை இடவும் இல்லை. அவர்கள் ஆயுதம் ஏந்திய காலமும் இருந்தது. வன்னிப்புலிகள் வந்து பிள்ளையானின் ஆட்களை சுட்டுவிட்டுப்போக பிள்ளையான் குழுவினர் கையைக்கட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்றா சொல்கின்றீர்கள்.

வெருகல் படுகொலை கிட்டத்தட்ட 150 போராளிகள் கொடுரமாக வன்னிப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களில் அதிகமான பெண் போராளிகளும் அடங்குவர். முந்திய பதிவிலே கொடுரமான சித்திரவதை என்று நான் சொன்னது பாலியல் ரீதியான சித்திரவதைகளைத்தான். அது மட்டுமல்ல அந்தக்கால கட்டத்தில் வன்னியிலே இருந்த மட்டக்களப்பு போராளிகளை கொடுரமாகச் சித்திரவதைப் படுத்திய விடயம் உங்களுக்குத் தெரியுமா?

நான் ஒரு ஊடகம் சார்ந்தவன் வாகரைப் பிரதேசத்திலே புலிகள் அமைப்பிலே இருந்த 200 க்கு மேற்பட்ட போராளிகளை பேட்டி கண்டிருக்கின்றேன் அவர்களில் அதிகமானவர்கள் பெண் போராளிகள். கருணா பிரிந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் கடுமையான சித்தரவதைகள் செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஒரு பெண் போராளியின் கால்களைக்கூட முறித்திருந்தார்கள்.

பிள்ளையான் அரசோடு சேர்ந்திருப்பதாக குற்றம்சாட்டுகிறீர்கள். எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காக அரசுடன் சேர்ந்திருக்கும் அதேவேளை அரசுக்கு எதிராகவும் செயற்பட தயங்குவதுமில்லை. அண்மையில் நாடு, நகர சட்டமூலம் வந்தபோது அதனை எதிர்த்தவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணசபை என்பதனை எவராலும் மறுக்க முடியாது. இவ்வாறு பல விடயங்கள் பின்னர் அவைகளை விரிவாக தருகின்றேன்.

படுகொலைகளை பட்டியலிடும் நீங்கள் கிழக்கிலே கொல்லப்பட்ட புத்திஜீவிகளையும், கிழக்குப் போராளிகளையும் ஏன் பட்டியலிடவில்லை. அரியநேந்திரனிடம் கேளுங்கள் அவர் யாரை கொலை செய்துவிட்டு பாராளுமன்றம் வந்தார் என்பதனை.

தொடரும்.....




read more...

Tuesday 3 July 2012

குடித்துவிட்டு கும்மாளமிடும் தமிழ் பெண்கள்



மேலே இருக்கின்ற படத்தினை மூஞ்சிப் புத்தகத்தில் ஒரு நண்பர் இணைத்திருந்தார். பலரும் பெண்களை குற்றம்சாட்டி கருத்திட்டிருந்தனர். பெண்கள் மது அருந்துதல் தவறா? எனக்குள் பல சந்தேகங்கள். பொதுவாகவே மது அருந்துவது தவறுதான் என்னிடமும் இல்லை. மது அருந்துபவர்களை மது அருந்துவதை தடுப்பதே என் எண்ணம்.

ஆனாலும் இப் படத்திற்கு போடப்பட்டிருக்கின்ற கருத்துக்களை வைத்தே இப்பதிவினை எழுதுகின்றேன். பெண்களை குட்டிச் சுவராக்க எங்களில் சில சமூகங்கள் நினைப்பதுண்டு. பெண்களை இரண்டாம் பட்சமாகவும் ஆண்களை முன்னிலைப்படுத்தியும் வருவதுண்டு. ஆண்கள் எதனைச் செய்தாலும் வீரனாகப் பார்க்கும் சமூகம் பெண்கள் எதனைச் செய்தாலும் தவறாக தூற்றுகின்றனர்.

ஒரு ஆணிண் மனைவி இறந்தால் மறு கணமே அவனுக்கு மறுமணம் செய்து வைக்க நினைக்கும் சமூகம் பெண்ணை மட்டும் மறுமணம் செய்ய விடுவதில்லை. விதவை எனும் மகுடம் சூட்டி வேடிக்கை பார்க்கின்றது. இவ்வாறு பல விடயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆண்களும் பெண்களும் சரிசமம் என்று சொல்லும் நாம் ஏன் பெண்களை வேறு படுத்தி பார்ப்பதுண்டு. பெண்களுக்கும் ஆசா பாசங்கள் இருக்கத்தானே செய்யும். பெண்கள் மட்டும் தமது ஆசாபாசங்களை ஏன் துறக்க வேண்டும். இந்தப் பெண்கள் மது அருந்துகிறார்கள் இது தவறா? ஒட்டு மொத்தத்தில் மது அருந்துவது தவறுதான் ஆனால் பெண்கள் மது அருந்துவதனை தவறு என்று ஒரு பக்க சார்பாக வாதிடுவது தவறு என நினைக்கினி்றேன்.

பெண்களுக்கும் கலாசார பண்பாடுகள் இருக்கின்றன என்று சொல்ல வருகின்றீர்களா? ஏன் ஆண்களுக்கு இல்லையா? குடித்துவிட்டு சமூகத்தை சீரழித்து தமது கலாசார பண்பாடுகளை காற்றில் பறக்கவிட்ட குடிகார ஆண்களே அதிகம். மானத்தைக்கூட காற்றில் பறக்கவிட்டு நிர்வாணமாக வீடுவந்த குடிகாரர்கள் எத்தனைபேர்.

ஆனால் குடித்தாலும் இவ்வாறான நடவடிக்கைகள் குறைவு. சந்தர்ப்ப சூழ்நிலைகளில் குடிக்கலாம் ஆனால் குடியே வாழ்க்கை என்று இருப்பவர்கள் பலர் ஆண்களே. பெண்கள் குடிப்பதற்கு அவர்களின் சமூகமே காரணம். இன்று எத்தனை குடும்பங்கள் பிள்ளை, குட்டி குடும்பத்தோடு குடித்து கும்மாளமிடுகின்றனர்.

ஒட்டுமொத்தத்தில் குடிப்பது தவறுதான் என்றாலும் பெண்கள் குடித்தால் பெரிதா தவறென்று குற்றம்சாட்டுவது சரியா?
read more...

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள் - கொக்கரிப்பு 02

முந்திய என்னுடைய பதிவிற்கு ஒரு நண்பர் நீண்ட ஒரு கருத்துரையினை விட்டுச் சென்றார் அவருக்கு பதிலாகவே இந்த பகுதி இடம்பெறுகின்றது.

உங்கள் கருத்துக்கள் அடிமட்ட முட்டாள்தனமாக இருக்கின்றது. வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு பிள்ளையான் கொலை செய்தான் கடத்தினான் கப்பம் பெற்றான் என்றெல்லாம் சொல்வது உங்களைப்போன்ற யாழ்ப்பாண மேலாதிக்கவாதிகளின் கொள்ளை. கொலைகளை தடுத்து நிறுத்தி கிழக்கில் உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்திய பெருமை பிள்ளையானையே சாரும்.

வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு கொலை செய்தான் கொள்ளையடித்தான் என்று குற்றம்சாட்டாதீர்கள் ஆதாரங்களோடு உண்மைகளைச் சொல்லுங்கள்.

கிழக்கு மாகாண புத்திஜீவிகளைக் கொன்றொழழித்தது யார் என்பதனை மறந்துவிட்டீர்களா? இராஜன் சத்தியமூர்த்தி உட்பட எத்தனையோ புத்தியீவிகளை கொன்றொழித்தவர்கள் யார்? கிழக்கிலே புத்திஜீவிகள் கொன்றொழிக்கப்படுகின்றபோது இந்தக் கூட்டமைப்பினர் மெளனம் சாதித்தது ஏன்? சாவது கிழக்குத் தமிழன் என்பதனாலா?

புலிகளிலிருந்து கருணா பிரிந்து வந்தபோது. பல வெற்றிச் சமர்களைப் படைத்து உங்களையும் வடக்கையும் காப்பாற்றிய காவல் காத்த கிழக்குப் போராளிகளை கொன்றொழித்தவர்கள்யார்? கிழக்குப் பொராளிகள் பிரிந்து வந்தபோது வெருகலிலே சகோதரப் படுகொலைகளை மேற்கொண்டு 150க்கு மேற்பட்ட போராளிகளை கொன்றொழித்தவர்கள் யார்? இதிலே வெட்கித் தலை குனியவேண்டிய விடயம் உங்களோடு சேர்ந்து போராடிய பெண் போராளிகளை வெருகலில் கதறக்கதற சித்திரவதை செய்து கொன்று குவித்தீர்கள். உங்களுக்காக பல வெற்றிச் சமர்களை புரிந்தவர்களுக்கு நீங்கள் செய்த கைமாறு இதுதானா?

ஒன்று இரண்டல்ல பல நூற்றுக்கணக்கான புத்திஜீவிகளும் நூற்றுக்கணக்கான போராளிகளும் கிழக்கிலே கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அப்போது எங்கே போனார்கள் இந்தக் கூட்டமைப்பினர்?

இதுவரை கிழக்கு மக்களுக்காக இந்தக் கூட்டமைப்பினர் என்ன செய்திருக்கின்றனர்? தாம் சொத்துச் சேர்த்தனர், அரசாங்கத்திடம் சலுகைகளைப் பெற்று அனுபவித்து வருகின்றனர். கூட்டமைப்பு அரசியல்வாதிகள் சொத்துச் சேர்க்கவில்லையா? அரசாங்கத்திடமிருந்து சலுகைகளைப் பெறவில்லையா? அமைச்சர்களோடு சேர்ந்து கொஞ்சிக் குலாவுவது பிள்ளைகள் உறவினர்களுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெறுவது இவை எல்லாம் கூட்டமைப்பினர் செய்யலாம்.

ஆனால் 30 வருடங்களாக யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட கிழக்கினை அபிவிருத்தி செய்ய பிள்ளையான் அரசுடன் பேரம்பேசினால் துரோகம் என்கின்றீர்கள் எங்கே இருக்கின்றது உங்கள் நீதி நியாயம்?

எங்கேயோ இருந்துகொண்டு பிள்ளையான் கொள்ளையடிக்கின்றான் சொத்துச் சேர்க்கின்றான் என்று சொல்வது உங்கள் முட்டாள்தனம். முதலில் கிழக்கின் தற்போதைய நிலைமைகளையும் உண்மைகளையும் யதார்த்தங்களையும் உணர்ந்துகொள்ளுங்கள்.

கிழக்கிலே தற்போது என்ன நடடக்கின்றது யார் மக்களுக்காக சேவை சேய்கின்றார் என்பதனை மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். இனிமேலும் கிழக்கு மக்களை எவராலும் ஏமாற்ற முடியாது. இன்று கிழக்கு மாகாணம் துரித கதியில் அபிவிருத்தி நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. இவை யாரால் சாத்தியமானது என்பது கிழக்கு மக்களுக்கு தெரியும். கிழக்கு மக்களை இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள். கிழக்கை கிழக்காகவே இருக்க விடுங்கள்.


தொடரும்...
read more...