Sunday 22 May 2011

ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு தமிழ் அரசியல்வாதிகள் கண்டனமா? ஆதரவா? தமிழ் தலைவர்களை மிரட்டும் மகிந்த அரசு


முதலமைச்சரின் வளாகத்தினுள் முறைகேடாக நுழைந்த இராணுவத்தினர் அங்கு அத்துமீறி செயற்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு மட்டக்களப்பில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் புளியந்தீவு பிரிவு அமைப்பாளரின் படுகொலையில்  சம்பந்தப்படுத்தி கிழக்குமாகாண சபை உறுப்பினரான பிரதீப்  கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் நேற்று முதலமைச்சர் வளாகத்தை நோக்கிய இராணுவத்தினரின் அத்துமீறல் இடம்பெற்றுள்ளது. சட்டம் ஒழுங்குகளுக்கு உட்பட்டு இந்த செயற்பாடுகள் இடம்பெறவில்லை. முன்னறிவித்தல் இன்றியும் பொலிசார் துணையின்றியும் எதேச்சதிகாரப் போக்கில் இடம்பெற்ற இராணுவத்தினரின் செயற்பாடு குறித்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் சந்திரகாந்தன் மீதும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மீதும் கடந்தகாலங்களில் அவ்வப்போது அரசு கொண்டிருக்கும்  அதிருப்தியின் வெளிப்பாடாகவே இச்சம்பவங்களை அவதானிக்கலாம்.

முதலமைச்சர் சந்திரகாந்தன் பதவியேற்ற நாள் முதல் அரசுடன் இணைந்து செயற்பட்டாலும் அவ்வப்போது அரசுடனான முரண்பாடுகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் அவர் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக பதவி ஏற்ற போது மக்கள் அவர் மீது பாரிய நம்பிக்கை கொண்டிருந்தனர். 30 வருட போராட்டத்தின் பின்னர் கிடைத்திருக்கக் கூடிய மாகாண சபையைக்கொண்டு தமிழ் மக்களின் அபிலாசைகளை ஓரளவுக்காவது ப+ர்த்திசெய்யவேண்டிய பாரிய பொறுப்பும் அவர் மீது சுமத்தப்பட்டது.

 அதன் பிரதிபலிப்பாக 13 வது சட்டத்திருத்தத்தின் ஊடாக மாகாணசபைகளுக்க வழங்கப்பட்டுள்ள காணி பொலிசு அதிகாரங்களை கிழக்கு மாகாணசபைக்கு வழங்கும்படி அவர் அரசிடம் அடிக்கடி கோரினார். அந்தவேளையில் கருணா அம்மானை வைத்துக்கொண்டு அரசாங்கம் அவரது கோரிக்கைகளை அவசியம் அற்றவை என்று பகிரங்கமாக அறிக்கைவிட்டது. அதுமட்டுமன்றி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரும் முதலமைச்சரின் வலது கரமாகவும் இருந்து வந்த நந்தகோபனும் கொலைசெய்யப்பட்டார். அக்கொலை நடந்த இடத்திற்கு ஓரிரு நிமிடங்களில் விரைந்த முதலமைச்சர் தடயங்களை ஆராய்ந்துவிட்டு அவ்விடத்தில் இருந்தே ‘இது புலிகளால் செய்யப்பட்ட கொலை அல்ல’ என்று பத்திரிகைகளுக்கு தெரிவித்தார்.

 இப்பகிரங்க அறிவிப்பானது தன்னைநோக்கியே முதலமைச்சரின் சுட்டுவிரல் நீட்டப்படுகின்றது என்பதை அரசினை நன்றாக உணரச் செய்தது. அரசாங்கத்தின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு முதலமைச்சர் பதவியில் இருந்த போதிலும் மக்களின் அபிலாசைகள் என்று வருகின்றபோதோ சரி பிழை நடக்கின்ற போதோ அரசியல் சுளிவு நெளிவுகள் பற்றி அக்கறைப்படாமல் எதையும் நேர்மையாக முன்வைக்கும் சந்திரகாந்தனின் அரசியல்பாணி அரசாங்கத்தரப்பினருக்க உவப்பளிக்கவில்லை.


அதேபோன்று கிழக்கு மாகாணத்தின் கவர்ணர் தனது அதிகார எல்லைகளை தாண்டி மாகாணசபை விடயங்களில் தலையிடுவதையும் முதலமைச்சர் பலமுறை பகிரங்கப்படுத்தி வந்திருக்கின்றார். இது போன்ற முரண்பாடுகளுடனேயே கிழக்குமாகாண சபை கடந்த மூன்று வருடகாலமாக இயங்கிவருகின்றது. இருக்கின்ற அதிகாரங்களைக் கொண்டு 30 வருடகால யுத்தத்தால் அல்லலுற்ற மக்களுக்கு எதையாவது செய்யமுடிகின்றது என்ற குறைந்தபட்ச திருப்தியுடன் முதலமைச்சர் காலம்கடத்தி வந்திருக்கின்றார்.

 அதேவேளை கிழக்குமாகாண சபையில் இயற்றப்பட்டுவருகின்ற நியதிச்சட்டங்களும் தீர்மானங்களும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த அதிகாரப்பகிர்வுக்கான சட்டவலுகொண்ட அத்திவாரத்தை உருவாக்கிவருகின்றன என்கின்ற உண்மையை அதிகாரப்பகிர்வுக்கு எதிரானவர்கள் வரவேற்கப்போவதில்லை. இந்தநிலை தொடர்வதனை விரும்பாத அரச தரப்பு அவ்வப்போது முதலமைச்சருக்கு முடிந்தவரையான நெருக்கடிகளையும் கொடுத்துக்கொண்டே வருகின்றது.

 பல நியதிச் சட்டங்களுக்கான ஒப்புதல் கையொப்பங்களை வழங்குவதை கவர்ணர் இழுத்தடித்துக்கொண்டு வருகின்றார். முதலமைச்சரதும் அவர் கட்சி பிரமுகர்களதும் பாதுகாப்புகளை அவ்வப்போது வாபஷ்  வாங்கிய நிகழ்வுகளும் இடம்பெறற்று வந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சவை ஆதரித்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் செயற்பட்ட போதிலும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப்போட்டியிட எடுக்கப்பட்ட முடிவு அரசு தரப்பினருக்கு பெரும் கோபத்தை உண்டுபண்ணியது.

 தாம் அரசுடன் இணைந்து செயற்படுகின்ற போதிலும் சுதந்திரமானவர்கள் என்று தமது கட்சியின் தனித்துவத்தை விட்டுக்கொடுக்காத ஒரு போக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளிடம் காணப்படுகின்றது. கொழும்பில் இருக்கின்ற தமிழ் தலைவர்களை போன்று தலையாட்டிப் பொம்மைகளாக அல்லாது “கௌரவமான பங்காளிகளாக” கிழக்கு மகாண மண்ணில் இருந்துகொண்டு நேர்மையாக அரசியல் செய்துவருவது முதலமைச்சர் சந்திரகாந்தனின் பாணியாகும். அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளுராட்சி மன்ற திருத்தச்சட்டத்தினை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னரேயே மாகாணசபைகளினூடாக நிறைவேற்றி பாராளுமன்றத்திற்கு கொண்டுசெல்கின்ற அரசினுடைய உத்தி கிழக்குமாகாண சபை ஒன்றினது ஒப்புதல் இன்மை காரணமாக தடுக்கப்பட்டது. சிறுபான்மை இனங்களுக்கு எதிர்காலத்தில் பாரிய ஆபத்தை விளைவிக்கக்கூடிய இச்சட்டத்தை நிறைவேற்றாமல் கிழக்கு மாகாணசபை காலங்கடத்தியது.

 இவ்வாறாக மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் விட்டுக்கொடுக்காத சமரசம் செய்யாத ஒரு அரசியல் சக்தியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எதிர்காலத்தில் வளர்ச்சியடைவதை விரும்பாதவர்கள் பலர் உண்டு. அண்மையில் கூட ஐ.நாடுகளால் வெளியிடப்பட்ட தருஷ்மன் அறிக்கையை முன்வைத்து இலங்கையின் அனைத்து அரசியல் தரப்பினரும் கண்டனமா? ஆதரவா? என்று கன்னை பிரித்து நிற்கின்றார்கள். ஆனால்  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளோ முதலமைச்சரோ இது பற்றி ஒற்றை வரியில் கருத்துக்கூறுவதை தவிர்த்து வந்துள்ளனர். முரளிதரன், டக்ளஷ் தேவானந்தா, நோயல் நடேசன், அலவி மௌலானா என்று ஐ.நா. அறிக்கைக்கு எதிராக கண்டனக்கணைகளை அள்ளிவீசி வருகின்ற நிலையில் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சரிடமிருந்தோ, மாகாண சபையிடம் இருந்தோ இதுபோன்ற கண்டன அறிக்கை ஏதும் வெளிவராமை அரசுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த வாரம் கிழக்கு மாகாணசபை அமர்வின்போது ஐ.நா. அறிக்கைக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கொழும்பு மட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டது.

 யாருடைய எதிர்பார்ப்புகளுக்காகவும் கிழக்குமாகாணசபை இயங்கமுடியாது என்பதையும் மக்களினுடைய எதிர்பார்ப்பு ஒன்றே மாகாணசபையின் செயற்பாடுகளை தீர்மானிக்கும் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாத சக்திகள் கிழக்குமாகாண சபைக்கும் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கும் எதிரான சதி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்று மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் பரவலாக மக்கள் பேசிக்கொள்கின்றனர்.


இப்பொழுது இடம்பெற்று வருகின்ற கொலைகளும், அதையொட்டிய கைதுகளும், விசாரணைகளும், இராணுவத்தினரின் அத்துமீறல்களும் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு எதிராக அதிகார உயர்மட்டங்களால் தீட்டப்படும் சதிகளே ஆகும்
read more...

Sunday 15 May 2011

இப்போ எந்த உலகத்தில் ஐயா இருக்கிறீங்க கலைஞருக்கு ஒரு கடிதம்

முந்திய பதிவில் பதிவை இணைப்பதிலும் ஓட்டு படையிலும் பிரசினை இருக்கின்றது அதனால் அதன் சுட்டியை மீண்டும் இணைக்கிறேன் 

read more...

இப்போ எந்த உலகத்தில் ஐயா இருக்கிறீங்க கலைஞருக்கு ஒரு கடிதம்


தேர்தல் நடந்து முடிந்து இருக்கின்றது அம்மா ஆட்சிக்கு வந்திருக்கின்றார். தமிழக அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை இலங்கை தமிழர்களையும் இலங்கையின் இனப்பிரட்சினையையும் வைத்து அரசியல் நடாத்த நினைப்பவர்கள். 

யார் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசியல்வாதிகளால் எதுவும் கிடைக்கப்போவதில்லை.

இலங்கைத் தமிழர்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவிக்கின்றபோது கண்டும் கானாதவர்கள்போல் இருக்கின்ற தமிழக அரசியல்வாதிகள் தேர்தல் நெருங்குகின்றபோது இலங்கை தமிழர்களை தமது துருப்பு சீட்டாக பயன்படுத்துவது யாவரும் அறிந்ததுதான்.

இலங்கையின் இறுதிக் கட்டப்போரின்போது உலகமே தமிழருக்காக குரல்கொடுத்தபோது தமது இனம் படுகொலை செய்யப்படுவதையே காணாததுபோல் இருந்த தமிழக அரசியல்வாதிகள் அன்று இறுதி யுத்தத்தின்போது தமிழனுக்காக குரல்கொடுக்காத தமிழக அரசியல்வாதிகள் இன்று இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிடுவது சிரிக்கத் தோன்றுகின்றது.

இன்று குரல் கொடுப்பவர்கள் அன்று தமிழன் யுத்த முனையில் சிக்கித் தவிக்கும்போது குரல் கொடுத்திருக்கலாம்தானே.

 கலைஞருக்கு மக்கள் சரியான தீர்ப்பை வழங்கி இருக்கின்றனர். இருந்தபோதும் ஆட்சிக்கு வந்திருக்கின்ற அம்மாவினாலும் இலங்கை தமிழர்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. இதற்கு அவரது கடந்தகால நடவடிக்கைகள் சாட்சி...


எது எப்படி இருப்பினும் அன்று தமிழனுக்காக தனது இனத்துக்காக குரல் கொடுக்காத தமிழக அரசியல்வாதிகள் இன்று இலங்கை அரசுக்கு எதிராக குரல்கொடுப்பதட்கு அருகதை அற்றவர்களே.

அன்று கலைஞருக்கு நான் எழுதிய கடிதம் மீண்டும் தருகிறேன். காலத்துக்கு பொருத்தமாக இருப்பதனால். 


வணக்கம் ஐயா....




நலம்தானே..... நலமாக இருப்பிர்கள் என்று நம்புகின்றேன்.....


உங்களை நான் அறிந்த நாள் முதல் எனக்குப் பிடித்த முதன்மையான மனிதர்களில் ஒருவராக நினைத்துவந்தேன். இருந்தும் இன்று இலங்கைத் தமிழர்கள் மீதான உங்களின் பாராமுகமும், நடவடிக்கைகளுக்கும் உங்கள் மீதிருக்கின்ற எனது நல்ல அபிப்பிராயங்களை தவிடுபொடியாக்கிவிட்டன.




உங்களின் தமிழ் பற்றே எனக்கு உங்களைப் பிடிப்பதற்குக் காரணம். ஆனால் இன்று பார்க்கின்றபோது உங்களிடம் உண்மையான தமிழ் பற்று இருக்கின்றதா? அல்லது உங்களின் இருப்புக்கான தமிழ் பற்றா என்றெல்லாம் எண்ணத் தோன்றுகின்றது. 
உங்கள் தமிழ் பற்று உண்மையானதெனில் பாராட்டப்படவேண்டியதுதான். இருந்தாலும் சில விடயங்களிலே நீங்கள் பாராமுகம் காட்டியிருப்பது வேதனையளிக்கின்றது.
இலங்கையிலே இருக்கின்ற தமிழ் மக்கள் பல காலங்களாக பல அடக்கு முறைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகிவருகின்றனர். இது நீங்கள அறியாமல் இல்லை. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக அவ்வப்போது நீங்கள் குரல் கொடுத்தமைக்கு நன்றிகள். இதனை எமது பிரதேசத்திலே குரைத்துவரும் நாய்க்கு தேங்காய்க் கட்டி போடுவது என்று சொல்வார்கள். இலங்கைத் தமிழர்கள் உங்களை நம்பி கையேந்துகின்றபோது உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று ஏதாவது செய்து இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி விடுவிர்கள்.



இலங்கை தமிழ் மக்கள் படுகின்ற இன்னல்களை நீங்கள் அறியாதவர் இல்லை இதுவரை நீங்கள் இலங்கைத் தமிழர்கள் தொடர்பிலே காத்திரமான என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றீர்கள். 
எமது மக்களின் குரல்கள் நசுக்கப்பட்டு எமது மக்கள் மரணத்தின் பிடியிலே சிக்கித் தவித்தபோது எமது மக்கள் மட்டுமன்றி உலகத் தமிழர்களே உங்களை நம்பியிருந்தனர். உங்கள் மூலமாக, இந்திய மூலமாக தமிழர்களின் இறுதி மரண ஓலங்கள் நிறுத்தப்படுமென்று. அன்றைய நாட்களில் எம் மக்கள் பட்ட,சந்தித்த அவலங்களைப் பார்த்து உலக மக்களே கண்ணீர் வடித்தனர். நீங்கள் என்ன செய்தீர்கள்? 
அன்றைய நாட்களில் உங்கள் காதுகள் செவிடானதா? கண்கள் பார்வை இழந்ததா? அல்லது வேறு உலகத்திலே இருந்தீர்களா? எம் தமிழினம் அழிந்துகொண்டிருக்கும்போது பாராமுகமாக இருந்துவிட்டு தமிழ் மொழியை வளர்ப்பதுபற்றிப் பேசுவது சிரிக்கத் தோன்றுகின்றது. 


தமிழ் மொழியை வளர்ப்பதுபற்றிப் பேசுவது சிரிக்கத் தோன்றுகின்றது. தமிழை வளர்ப்பதற்கு முன்னர் தமிழைப் பேசுகின்ற மக்கள் அழிக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் அம்மக்களால் தமிழ்மொழி தானாகவே வளர்க்கப்படும்.



செம்மொழி மாநாடு பற்றிப் பேசுகின்றீர்கள் இன்றைய காலத்தில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று அறியாத தலைவராக இருக்கின்றிர்களா நீங்கள்? இன்றைய தேவை தமிழை வளர்ப்பதனைவிட தமிழ் மொழியை வளர்க்கின்ற தமிழர்கள் அழிக்கப்படுவதை நிறுத்துவதே. அத் தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பதே.



தமிழர்களே அழிந்து போகும்போது தமிழ் மொழியை வளர்த்து என்ன பயன்? முதலில் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் அத் தமிழர்களால் தமிழ்மொழி வளர்க்கப்படும். 
இலங்கைத் தமிழர்கள் பல இன்னல்களை அனுபவித்தபோது, அவர்களின் மரண ஓலங்கள் உலகெங்கும் சென்றடைந்தபோது உங்கள் காதுகளுக்கும் வந்திருக்கும்.



அப்போது மெளனம் சாதித்த நீங்கள் இன்று தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பியதன் நோக்கம்தான் என்ன? இன்று எத்தனை தமிழர்கள் மீதமிருக்கின்றார்கள் என்று பார்ப்பதற்காகவா? அல்லது இன்னும் எத்தனை தமிழர்கள் அவலங்களை எதிர்நோக்கக் காத்திருக்கின்றார்கள் என்பதனை அறியவா? 



அவர்களின் வருகையின் நோக்கம் என்னால் புரியமுடியவில்லை. எம் மக்கள் அகதி முகாங்கலிலே படுகின்ற அவலங்களை பார்வையிடவா வந்தனர், நாடு சுற்றிப் பார்க்கவா வந்தனர், பொன்னாடை போர்த்தவா வந்தனர்? அல்லது எதற்காக வந்தனர்? என்ன செய்தனர்? அவர்கள் வந்து என்ன நடவடிக்கைகளை எடுத்தனர்? 



தமிழ் மொழியை வளர்க்கவேண்டும் என்று சிந்திக்கும் நீங்கள் தமிழர்கள் அழிக்கப்படுவதனையும், தமிழர்களின் உரிமைக்காகவும் குரல்கொடுப்பதோடு இலங்கைத் தமிழர்கள் தொடர்வில் அதிக அக்கறை செலுத்துங்கள் என்றும் பணிவாக வேண்டிக் கொள்கின்றேன்.



அன்புடன்...
சந்ரு
read more...

Wednesday 4 May 2011

பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி..

முன்னைய பதிவொன்று மீண்டும் பதிவாகிறது


ஆண்களுக்குத்தான் அதிகமாக ஆலோசனைகள் வழங்குகிறேன் ஆனால் பெண்களுக்கும் நல்ல ஆலோசனை தரவேண்டும் என்று பல பெண்கள் வேண்டிக்கொண்டனர். சில நன்பிகளோ என்னோடு பேசுவதே இல்லை அவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

இன்று சில (பல) பெண்கள் ( பெண்கள் என்னை திட்டவேண்டாம் எல்லோரும் இல்லை என்று சொல்ல்கிறேன்). ஆண்களை ஏதோ ஒரு வகையில் தன் பின்னால் அலைய வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சில அப்பாவி ஆண்கள் நாய் போல் அலைந்து. கடைசியில் எல்லாம் இழந்து, எல்லாம் புரிந்து..... என்னவோ எல்லாம் நடக்குது...

சில பெண்கள் தங்கள் நண்பிகளிடம் கேட்டுக்கொள்வார்கள் "அடப்பாவி எப்படிடி இப்படி உன்னாலமட்டும் இப்படி ஆண்களை உன் பின்னால அலைய வைக்க முடியும் என்று" அது பெரிய வேலை இல்லை தங்களால் முடியவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

பெண்கள் ஆண்களை தன் பின்னால் அலைய வைப்பது எப்படி

01 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.

02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.

03 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக  இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை... அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.

04 .  நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள்.

05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.

06 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது  ஹாய்  மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள்.

07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள்.

08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று  கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.

09. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம்.

10 . இதுதான் முக்கியமானது....  எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

இது ஒரு  நகைச்சுவை பதிவு மட்டுமே....


read more...