Friday 17 July 2009

இரட்டிப்பு மகிழ்ச்சி

நான் எனது ஐம்பதாவது பதிவினை எட்டிப்பிடிக்கலாம் என்று பதிவுகளை இட்டு வருகின்றேன். விரைவில் எனது ஐம்பதாவது பதிவினை சந்திக்கக் காத்திருக்கும் வேளையிலே ஒரு சந்தோசமான செய்தி கிடைத்தது. அது வேறு ஒன்றுமில்லை. எனக்கும் பட்டாம் பூச்சி விருது கிடைத்ததுதான்.

எனக்கு இந்தப்பட்டாம் பூச்சி விருது கிடைத்ததிலே இரட்டிப்பு மகிழ்ச்சி. நான் மிகவும் மதிக்கின்ற, தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியிலே தனது பங்களிப்பை வழங்கிவரும் முனைவர் இரா. குணசீலன் அவர்களினால் எனக்கு இந்த பட்டாம் பூச்சி விருது கிடைத்திருக்கின்றது. அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு. அவரின் தமிழ் இலக்கியப்பணி தொடர வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் பதிவுலகுக்கு வந்து நானும் ஒரு பதிவர் என்பதற்கு எனக்குக் கிடைத்த முதலாவது அங்கிகாரம் இது என்று நான் நினைக்கிறேன். இந்த வேளையில் என்னை பதிவுலகிற்கு அறிமுகப்படுத்திய நண்பர் பிரபாவுக்கும் நன்றி கூறுவதோடு. எனக்கு உற்சாகமளித்த ஏனைய வலையுலக நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.

எனக்குக் கிடைத்த இந்தப் பட்டாம் பூச்சி விருதினை நானும் ஐவருக்கு கொடுக்கவேண்டுமே.

1. லோஷன் (லோஷனின் களம்) நான் இவரது ரசிகன் என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவருடைய பதிவுகள் பலதுறை சார்ந்ததாக இருப்பதோடு உடனுக்குடன் செய்திகளை பதிவிடுவதிலே வல்லவர். அதிலும் விளையாட்டுச் செய்திகள் என்றால் முந்திக்கொண்டு பதிவிடுபவர்.

2. சுபாங்கன் (ஐந்தறைப்பெட்டி) இவரும் பல துறை சார்ந்த பதிவுகளோடு வலம் வருபவர். தொழினுட்ப தகவல்களை பதிவிடுவதிலே சிறந்தவர்.

3. ஹேமா (வானம் வெளித்த பின்னும்) இவரும் பல கருத்தாழமிக்க சிந்திக்க தூண்டுகின்ற பல கவிதைகளை தந்து வரும் ஒருவர்.

4. சுசி (யாவரும் நலம்) இவரும் பலதுறை சார்ந்ததாக தனது வலைப்பதிவினை முன்னெடுத்து வருகின்றார். இவரது பதிவுகளிலே சிந்தனையை தூண்டக்கூடியதாக பல விடயங்களை நகைச்சுவையாக குறிப்பிட்டு இருப்பார்.

5. sshathies இவர் அண்மையில்தான் எனக்கு அறிமுகமானாலும் இவர் விளையாட்டு, சினிமா, கட்டுரைகள்,தொழினுட்பம் என்று பலதுறைகளிலும் பதிவிட்டு வரும் ஒருவர்.

இவர்கள் ஐவருக்கும் நான் பட்டாம் பூச்சி விருது கொடுப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

34 comments: on "இரட்டிப்பு மகிழ்ச்சி"

நிலவன் said...

இலங்கை பதிவர்களுக்கு தனிக்களம் அமைக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டு வரும் “நிலாமுற்றம்” சிறப்பு திரட்டியில் உங்கள் பதிவுகளும் இடம்பெறுகின்றன.

தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்

“நிலாமுற்றம்”
http://www.nilamuttram.com/

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் சந்ரு

பட்டாம்பூச்சி விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

ஸ்ரீ.... said...

சந்ரு,

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....

Admin said...

நன்றி நிலவன்.. ஆதரவு கிடைக்கும்.

Admin said...

//பிரியமுடன்.........வசந்த் கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு

பட்டாம்பூச்சி விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்//


வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி வசந்த்

Admin said...

//ஸ்ரீ.... கூறியது...
சந்ரு,

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....//


வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்ரீ....

jothi said...

வாழ்த்துக்கள் சந்ரு

மேலும் மேலும் நல்ல படைப்புகளை வழங்குக,..

Admin said...

//Vinitha Jaya Seelan கூறியது...
VaazhltthukkaL//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி Vinitha Jaya Seelan

Admin said...

//jothi கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு

மேலும் மேலும் நல்ல படைப்புகளை வழங்குக,..//


நல்ல படைப்புக்களை வழங்க வேண்டு என்பதே எனது விருப்பமும்
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி jothi

Anonymous said...

குணசீலர் பதித்துவிட்ட
பட்டாம்பூச்சியை
பதிவர்க்கு பகிர்ந்ததில்_உன்
எண்ணம் பால் வண்ணம்_நீ
மனங்களில் வண்ணத்துப்பூச்சியாய்
பறப்பது திண்ணம்.

வழங்கியவர்க்கு நன்றி
பெற்றவர்க்கு வாழ்த்து
பெற்றுக்
கொடுத்தவர்க்கு நன்றி
பெறபட்டவர்களுக்கும்
வாழ்த்துகள்.

ரி.கே

Admin said...

//பெயரில்லா கூறியது...
குணசீலர் பதித்துவிட்ட
பட்டாம்பூச்சியை
பதிவர்க்கு பகிர்ந்ததில்_உன்
எண்ணம் பால் வண்ணம்_நீ
மனங்களில் வண்ணத்துப்பூச்சியாய்
பறப்பது திண்ணம்.

வழங்கியவர்க்கு நன்றி
பெற்றவர்க்கு வாழ்த்து
பெற்றுக்
கொடுத்தவர்க்கு நன்றி
பெறபட்டவர்களுக்கும்
வாழ்த்துகள்.

ரி.கே//


கவி வரிகளிலே வாழ்த்துக்களை தெரிவித்த உங்களுக்கு என் நன்றிகள் ரி.கே....
தொடருங்கள்...

அ.மு.செய்யது said...

வாழ்த்துகள் சந்ரு...

விருது பெற்றமைக்கும் உங்களிடமிருந்து வாங்கியவர்களுக்கும் !!

Admin said...

//அ.மு.செய்யது கூறியது...
வாழ்த்துகள் சந்ரு...

விருது பெற்றமைக்கும் உங்களிடமிருந்து வாங்கியவர்களுக்கும் !!//


வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அ.மு.செய்யது

Subankan said...

வாழ்த்துக்கள் அண்ணா, மேலும் உங்களிடமிருந்து விருது வாங்குவதில் மிக்க மகிழ்ச்சி, நன்றி.

Admin said...

//Subankan கூறியது...
வாழ்த்துக்கள் அண்ணா, மேலும் உங்களிடமிருந்து விருது வாங்குவதில் மிக்க மகிழ்ச்சி, நன்றி.//

நன்றி சுபாங்கன் உங்கள் வாழ்த்துக்களுக்கு. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

Admin said...

//ஆப்பு கூறியது...
சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!//


ஆஹா.. அவனா நீ...

Menaga Sathia said...

வாழ்த்துக்கள் சந்ரு மற்றும் விருது பெற்றவர்களுக்கும்..

Admin said...

//Mrs.Menagasathia கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு மற்றும் விருது பெற்றவர்களுக்கும்..//


வருகைக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றிகள் Mrs.Menagasathia

ஹேமா said...

சந்ரு,மிக்க மிக்க நன்றி.மனம் நிறைந்த சந்தோஷம்.இன்னும் விருது கொடுத்த உங்களுக்கும் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Admin said...

//ஹேமா கூறியது...
சந்ரு,மிக்க மிக்க நன்றி.மனம் நிறைந்த சந்தோஷம்.இன்னும் விருது கொடுத்த உங்களுக்கும் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.//


வருகைக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி ஹேமா

சப்ராஸ் அபூ பக்கர் said...

வாழ்த்துக்கள் சந்ரு.... இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்....

தொடருங்கள் உங்கள் பயணத்தை......

Admin said...

//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு.... இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்....

தொடருங்கள் உங்கள் பயணத்தை......//



உங்கள் எதிர்பார்ப்பு வீண் போகாது என்று நினைக்கிறேன்.....
உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி. சப்ராஸ்

sshathiesh said...

உங்கள் விருதுக்கு மிக மிக நன்றிகள். பதிவுலகில் எனக்கு கிடைத்த முதல் விருது இதுவே. அதேநேரம் விருது பெற்ற மற்றவர்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//sshathiesh கூறியது...
உங்கள் விருதுக்கு மிக மிக நன்றிகள். பதிவுலகில் எனக்கு கிடைத்த முதல் விருது இதுவே. அதேநேரம் விருது பெற்ற மற்றவர்களுக்கும் நன்றிகள்.//


வருகைக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி sshathiesh

முனைவர் இரா.குணசீலன் said...

மிக்க மகிழ்ச்சி சந்ரு....
விருது பெற்ற நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்களைத தெரிவித்துக் கொள்கிறேன்.........

முனைவர் இரா.குணசீலன் said...

புதிய பதிவர்களைத் தங்கள் வழி அறிந்து கொண்டேன் ....
மகிழ்ச்சி......

Admin said...

//முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
மிக்க மகிழ்ச்சி சந்ரு....
விருது பெற்ற நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்களைத தெரிவித்துக் கொள்கிறேன்.........//


உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி முனைவர்.இரா.குணசீலன்

Admin said...

//முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
புதிய பதிவர்களைத் தங்கள் வழி அறிந்து கொண்டேன் ....
மகிழ்ச்சி......//


தங்களின் தமிழ் பணி தொடர என் வாழ்த்துக்கள்...

சுசி said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சந்ரு.எனக்கு பதிவுலகில் முதல் விருதை வழங்கிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். விருது பெற்ற சக பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

Admin said...

//சுசி கூறியது...
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சந்ரு.எனக்கு பதிவுலகில் முதல் விருதை வழங்கிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். விருது பெற்ற சக பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்//



உங்கள் கருத்துக்களுக்கும்,வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும் நன்றி சுசி

கானா பிரபா said...
This comment has been removed by the author.
கானா பிரபா said...

பட்டாம்பூச்சி சரியான தேர்வுகளாக அமைந்தது வாழ்த்துகக்ள்,

Post a Comment