Saturday 2 June 2012

தமிழீழ ஆதரவாளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக போர்க்கொடி

தமிழீழமே எமது மூச்சு என்றிருந்த தமிழரசுக் கட்சியினரின் அண்மைக்கால செயற்பாடுகள் மற்றும் தமிழரசுக் கட்சியினரின் 14வது தேசிய மாநாடு என்பன தமிழீழ ஆதரவாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன. இவ்விடயம் குறித்த செய்தியினை அப்படியே தருகிறேன்.


விடுதலைப் புலிகளையும், போராட்டத்தையும் களங்கப்படுத்திய தமிழரசுக் கட்சியின் மாநாடு!

"விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியும் மறைவும் எமக்கு உணர்த்தி நிற்பது என்னவெனில் - எவ்வளவுதான் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் எவ்வளவுதான் தர்மத்தின் பாற்பட்டதாக இருந்தாலும் தமிழர்கள் இந்தத் தீவில் வன்முறை அரசியல் செய்வது நடைமுறைச் சாத்தியமானதாக என்றைக்குமே இருக்கப் போவதில்லை என்பதாகும், அத்தோடு இராணுவ பலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உலக ஓட்டத்திற்கு ஒத்திசைவு இல்லாத அரசியல் கோட்பாட்டின் ஊடாகக் கட்டி எழுப்பப்படும் எந்த ஒரு போராட்டமும் நின்று நிலைக் காது என்பதுமாகும். இவ்வாறு தனது மாநாட்டு கொள்கை விளக்க உரையில் தெரிவித்துள்ளார்". சம்மந்தர் அவர்கள் அவர் மேலும் தெரிவிக்கையில்...

"தத்தமது தேச நலன்களை மட்டுமே மையப்படுத்தி உலக ஒழுங்கை வகுத்துச் செல்லும் உலகப் பெரும் சக்திகளின் சூட்சுமங்களைப் புரிந்து அதற்கேற்ப மட்டுமே நாங்கள் இனி காய்களை நகர்த்திச் செல்ல வேண்டும் என்பதுதான் - கடந்த 60 ஆண்டு காலப் போராட்டம் குறிப்பாக கடந்த 30 ஆண்டு கால வன்முறை வடிவிலான ஆயுதப் போராட்டம் எமக்குக் கற்பித்துச் சென்றிருக்கும் வரலாற்றுப் பாடம். என்று தனது உரையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வன்முறை கலந்த போராட்டம்" என்று விமர்சித்துள்ளார் தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்மந்தன். விடுதலைப் புலிகள் தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்..



"நீண்ட ஆயுதப் போராட்டமும், அது நடத்தப்பட்ட விதமும் - எமது மக்களுக்கு இழப்பையும் அழிவையும் களைப்பையும் சலிப் பையும் ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் போர் முடிந்ததன் பின்னான நிகழ்வுகள் எமது மக்களுக்கு விரக்தியையும் சினத்தையும் சீற்றத்தையுமே கொடுத்தபடி உள்ளன என்பதை இந்த உலகம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்".


"விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியும் மறைவும் எமக்கு உணர்த்தி நிற்பது என்னவெனில் - எவ்வளவுதான் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் எவ்வளவுதான் தர்மத்தின் பாற்பட்டதாக இருந்தாலும் தமிழர்கள் இந்தத் தீவில் வன்முறை அரசியல் செய்வது நடைமுறைச் சாத்தியமானதாக என்றைக்குமே இருக்கப் போவதில்லை என்பதாகும், அத்தோடு இராணுவ பலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உலக ஓட்டத்திற்கு ஒத்திசைவு இல்லாத அரசியல் கோட்பாட்டின் ஊடாகக் கட்டி எழுப்பப்படும் எந்த ஒரு போராட்டமும் நின்று நிலைக் காது என்பதுமாகும். அந்த வகையில் தான் - அனைத்துலகப் பரிமாணங்களுடன் பிறந்திருக்கின்ற தற்போதைய புதிய சூழலில் அந்தச் சூழலுக்கு ஏற்ற வகையான நெகிழ்வுத் தன்மைகளுடன் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடனும் பக்கபலத்துடனும் எமது உரிமைப் போராட்டத்தை நகர்த்திச் செல்லும் புதிய வழிமுறைகளை நாம் கையாளத் தொடங்கியுள்ளோம்". என்று தனது பாணியில் சர்வாதிகாரிபோல் தெரிவித்துள்ளார்.



"எவ்விதமாக ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் எமது கட்சிக்கு வரலாறு ஓர் அரசியல் பிறப்பைத் தந்ததோ அதே விதமாகவே பத்தாண்டுகளுக்கு முன்னர் எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் இருந்த அன்றைய காலச் சூழலுக்கு இசைவாக வரலாறு எமது கட்சிக்கு ஒரு புதிய அரசியற் பாத்திரத்தையும் தந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற குடையின் கீழ் கொள்கை ரீதியாக ஒன்றிணைந்த தமிழ் அரசியல் கட்சிகளைத் தலைமையேற்று வழி நடத்தும் பாத்திரமே அது. அந்தத் தலைமைப் பாத்திரம் என்பது கூட எமது கட்சியின் வரலாறு பாரம்பரியம் தனித்துவம் என்பவற்றின் அடிப்படையிலிருந்துதான் வந்தது. அந்தப் புதிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியே இன்றுவரை விளங்கி வருகின்றது, அவ்வாறே அது என்றும் விளங்கி வரும்".  என்றும் சம்மந்தர் தெரிவித்துள்ளார்.


"ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான தற்போதைய சூழலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆகிய நாம்தான் தமிழ் மக்களின் முதன் மைப் பிரதிநிதிகள். முற்றுமுழுதான சிறீலங்காப் படை மயமாக்கத்தின் கீழ் சிறீலங்கா அரசாங்கத்தின் முழுமையான ஆளுகையின் கீழ் பலவிதமான அழுத்தங்களுக்கு மத்தியிலும் - துணிவுடனும் உறுதியு டனும் தெளிவுடனும் - வாக்களித்த தமிழ் மக்களால் சுதந்திரமாகத் தேந்தெடுக்கப்பட்ட தனிப் பெரும் கட்சி எமது கட்சி. அந்த வகையில் இப்போது - நாம்தான் தமிழர்களின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகள். எவ்விதமான ஆயுதப் பின்னணிகளும் அற்ற - வன்முறைப் போராட்ட வடிவங்களை என்றைக்கும் நிராகரித்த - நீண்ட ஜனநாயகப் பண்பு களைத் தன்னகத்தே கொண்ட - நடைமுறைச் சாத்தியமான தீர்வுத் திட்டங்களையே எப்போதும் முன்வைத்த - இலங்கைத் தமிழரசுக் கட்சியான எமக்குத்தான்; - அதிகூடிய இராஜீய அங்கீகாரமும் அனைத்துலக சமூகத்தால் வழங்கப்படுகின்றது. இந்த இராஜீய அங்கீகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஏற்புடையதாகவும் உரித்துடையதாகவும் கூட பரிணமித்துள்ளது". என்றும் சம்மந்தர் தனதுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவை.


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு விட்டதாகவும், ஒரு தோற்றப்பாட்டை உருவாக முனைகிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாத இடத்தில் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித் துவப்படுத்தும் நோக்கில் இவர்களில் செயற்பாடுகள் நகர்வதை அவதானிக்க முடிகிறது. தமிழர்களின் ஒன்றுபட்ட சக்தியாக உருவாக்கப்பட்டு தமிழர்கள் அனைவராலும் பெரும் நம்பிக்கையுடன் வரவேற்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பேசுபொருளாக வைத்துக்கொண்டு, தமிழரசுக் கட்சியை வளர்க்கவே இவர்கள் முனைகின்ற விடையம் சம்மந்தர் அவர்களின் மாநாட்டு உரையின் ஊடாக தெளிவாக அம்பலமாகியுள்ளது.


இவரின் உரையினை ஆராய்ந்து பார்க்கும் பொழுது தமிழரசுக் கட்சியின் தலைமைகளும் இந்தியாவுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்க துனைபோயிருப்பார்களா? என்றும் சந்தேகம் கொள்ளவும் வைக்கிறது.


இவர்களின் இந்த திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூடமைப்புக்கான தலைமைப் பதவி சுழற்சி முறையில் தெரிவு செய்யப்பட வேண்டும். அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பகாலத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து, பின்னர் சம்மந்தர் குழுவினால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைக்கப்பட வேண்டும். இவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பதின் ஊடாக சம்மந்தர் அவர்கள் தான் ஒரு தமிழ்த் தேசியப் பற்றாளன் என்பதையும், தானொரு ஜனநாயகவாதி என்பதையும் நிரூபிக்க வேண்டும்.


ஐயா பெரியவர்களே! இன்றைய சூழலில் அனைவரும் ஒவ்வெரு கருத்துக்களுடன் தமிழர்களுக்கான தீர்வாக சிங்களம் போடுவதை பெற்றுக்கொள்ள முனைகிறார்கள். அந்தவகையில்தான் ஐயா சம்மந்தர் அவர்களும் "அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு" என்றும், "ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஉரிமை"என்றும் கூறிக்கொண்டு 40 ஆயிரத்திற்கும் அதிகமான மாவீரர்களின் மாபெரும் தியாகங்களின் ஊடாக கண்ணியமான முறையில் தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளுடன் கட்டி வளர்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தமிழரசுக் கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு ஒன்றில் மனச்சாட்சியின்றி திட்டமிட்ட வகையில் களங்கப்படுத்தியுள்ளார்.

நன்றிகள் - இணையம்

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தமிழீழ ஆதரவாளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக போர்க்கொடி"

Post a Comment