Tuesday 12 January 2010

பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி சில ஆலோசனைகள்.


ஆண்களுக்குத்தான் அதிகமாக ஆலோசனைகள் வழங்குகிறேன் ஆனால் பெண்களுக்கும் நல்ல ஆலோசனை தரவேண்டும் என்று பல பெண்கள் வேண்டிக்கொண்டனர். சில நன்பிகளோ என்னோடு பேசுவதே இல்லை அவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

இன்று சில (பல) பெண்கள் ( பெண்கள் என்னை திட்டவேண்டாம் எல்லோரும் இல்லை என்று சொல்ல்கிறேன்). ஆண்களை ஏதோ ஒரு வகையில் தன் பின்னால் அலைய வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சில அப்பாவி ஆண்கள் நாய் போல் அலைந்து. கடைசியில் எல்லாம் இழந்து, எல்லாம் புரிந்து..... என்னவோ எல்லாம் நடக்குது...

சில பெண்கள் தங்கள் நண்பிகளிடம் கேட்டுக்கொள்வார்கள் "அடப்பாவி எப்படிடி இப்படி உன்னாலமட்டும் இப்படி ஆண்களை உன் பின்னால அலைய வைக்க முடியும் என்று" அது பெரிய வேலை இல்லை தங்களால் முடியவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

பெண்கள் ஆண்களை தன் பின்னால் அலைய வைப்பது எப்படி

01 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.

02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.

03 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக  இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை... அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.

04 .  நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள்.

05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.

06 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது  ஹாய்  மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள்.

07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள்.

08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று  கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.

09. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம்.

10 . இதுதான் முக்கியமானது....  எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

இது ஒரு  நகைச்சுவை பதிவு மட்டுமே....


சில தவிர்க்க முடியாத காரணங்களால் எனது வழமையான, சீரியசான பதிவுகளை நான் எழுதமாட்டேன். சில காலத்துக்கு அதிகமாக நகைசுவைப் பதிவுகளே வரும்.



சில காலமாக நான் நண்பர்கள் எவருக்கும் கருத்துரையிடுவதில்லை. ஆனாலும் அத்தனை பதிவுகளையும் பார்த்து வருகிறேன். விரைவில் கருத்துரைகளோடு சந்திப்பேன்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

37 comments: on "பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி சில ஆலோசனைகள்."

Mathuvathanan Mounasamy / cowboymathu said...
This comment has been removed by the author.
Mathuvathanan Mounasamy / cowboymathu said...

//ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.//

சேல கட்டிய பெண்ணை நம்பாதே. அதாவது சேல் அகட்டிய பெண்ணை நம்பாதே.
=============

//ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.//

வனிதையை பாராமே நல்லொழுக்கம் தீயொழுக்கம்
பார்த்து ஜொள்ளு விடல்

==================

//வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை... அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.//

சீறும் பாம்பை நம்பு,
சிரிக்கும் பெண்ணை நம்பாதே
=========================

//அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள். //

தையலோடு இணங்கேல்...

Hi சொல்ல No சொல்லு
========================
//நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள்//

அரைஞாணும் கச்சையும்தான் தமிழ் கலாசார உடை. இதை விட நவநாகரிக உடை என்னத்தை அப்பிடிக் காட்டப்போகுது.
=========================

//நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும்.//

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
===================

//பின்னர் சொல்கிறேன் என்று கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.//

மை விழியார் மனை அகல்
========================

//எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். //

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்.
இந்தப் பதிவின்படி பெண்கள் செய்தால், தங்கள் நண்பிகளை அறிமுகப்படுத்தினால் உங்களுக்கும் ஏதாவது கிடைக்கும் என்றதொடு நல்லெண்ணம்தானே உங்களை இதை எழுதத்தூண்டியது.. ஹீ ஹீ..

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

Nila Loganathan said...

நல்ல ஐடியாக்கள் தான், ஆனால் யார் யாரோ செய்யிறதை அப்பிடியே மாற்றி பெண்களுக்கானது என்று உல்டா பண்ணியிருக்கிற மாதிரி ஒரு பீலிங்.......ஹி ஹி
--------------
பி.கு:- மது அண்ணாவின் விளக்கங்கள் சூப்பர் !

Saboor Adem said...

ada paavi eppadiyellam engeda kandu pidikkai.....

ஹேமா said...

சந்ரு பெடியா....நடுநடுவில இப்பிடியெல்லாம் படிப்பு பாடம் எண்டு நடக்குதோ !

வால்பையன் said...

தப்பா நினைக்காதிங்க, படு கேவலமா இருக்கு! இறுதியில் நகைச்சுவைன்னு போட்டாலும் இது முழுக்க முழுக்க ஆண்களை எப்போதும் பெண்களின் பார்வைக்கு ஏங்கும் பூச்சி மாதிரி சித்தரிக்கும் பதிவு!

மத்தவங்களுக்கு கோவம் ஏன் வரலைன்னு தெரியல, எனக்கு வருது!

Anonymous said...

பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் சமூகத்துக்கு ஏதாவது
செய்யத்துடிக்கிறீங்க..
at last..

Prathap Kumar S. said...

இவ்வளவு சீரியஸயான மேட்டரைப்போட்டுட்டு நகைச்சுவையா... ?
முடில.. இதெல்லாம் இப்பவுள்ள பொண்ணுங்க பண்றதுதானே... புதுசா ஏதாச்சம் இருக்கம்னு பார்த்தேன்...

Sinthu said...

ஏன் அண்ணா இப்படி ஆகிட்டீங்க? ஆண்கள் சவகாசமே வேண்டாம் எண்டா இப்படி எல்லாம் போட்டிருக்கிறீங்களே........

Anonymous said...

என்ன நடந்தது சந்ருண்ணா. நீங்களுமா... எல்லாம் உந்த போண்டி அண்ணாவுடன் சேர்ந்ததால் வந்த வினை.. அவனை டிவோஸ் பண்ணுங்கோ...

என்னென்னவோ நடக்குது... இந்த சந்ருண்ணாவை காப்பாத்து ஞானப்பண்டிதா...

பி.கு: G-Force படம் பாருங்கோ.. அதில் அந்த பெண் கினிபிக் சொல்லுவதைப் போல் நடந்தாலே போதும்.. ஆண்களை லோ லோ என்டு அலைய வைக்க...

வால்பையன் said...

//G-Force படம் பாருங்கோ.. அதில் அந்த பெண் கினிபிக் சொல்லுவதைப் போல் நடந்தாலே போதும்.. ஆண்களை லோ லோ என்டு அலைய வைக்க... //

நான் திட்டிகிட்டு இருக்கேன், நீங்க வந்து டிப்ஸ் கொடுக்குறிங்களா அம்மணி!

Anonymous said...

//வால்பையன் கூறியது...
//G-Force படம் பாருங்கோ.. அதில் அந்த பெண் கினிபிக் சொல்லுவதைப் போல் நடந்தாலே போதும்.. ஆண்களை லோ லோ என்டு அலைய வைக்க... //

நான் திட்டிகிட்டு இருக்கேன், நீங்க வந்து டிப்ஸ் கொடுக்குறிங்களா அம்மணி! //

விடுங்க வால்பையன் சார்....
இப்பிடித்தான் கொசுத்தொல்லைகள்....

Admin said...

//மதுவதனன் மௌ. / cowboymathu கூறியது...//

இப்படி எல்லாம் இருக்கிறதோ.. நல்லா இருக்கிறதே..

Anonymous said...

//நான் திட்டிகிட்டு இருக்கேன், நீங்க வந்து டிப்ஸ் கொடுக்குறிங்களா அம்மணி!//

he he. Just be cool.

Admin said...

//தர்ஷாயணீ லோகநாதன். கூறியது...
நல்ல ஐடியாக்கள் தான், ஆனால் யார் யாரோ செய்யிறதை அப்பிடியே மாற்றி பெண்களுக்கானது என்று உல்டா பண்ணியிருக்கிற மாதிரி ஒரு பீலிங்.......ஹி ஹி
--------------
பி.கு:- மது அண்ணாவின் விளக்கங்கள் சூப்பர் !//

யாரோ அல்ல நிலா சிலர் இப்படித்தான் செய்கிறார்கள்....

Admin said...

//Saboor Adem கூறியது...
ada paavi eppadiyellam engeda kandu pidikkai.....//

இது எல்லாம் ஒரு கண்டு பிடிப்பு?.. அப்போ கண்டு பிடிப்புக்களை என்ன என்று சொல்விர்கள்..

Anonymous said...

FUCK OFF LOOSU.. I think I should not waste talking to Loosu Like u.

Admin said...

//ஹேமா கூறியது...
சந்ரு பெடியா....நடுநடுவில இப்பிடியெல்லாம் படிப்பு பாடம் எண்டு நடக்குதோ !//

நடக்குது... நடக்குது...

Ramesh said...

கண் நடை புன்னகை
அரட்டை குறை ஆடை
நட்புக்களங்கம்
பதில் தாமதம்
கேள்விகளுக்கு
அலை மோதல்
இது உங்க காதலன் விளம்பரமா??
அவள் வருவாளா???
ம்ம் சந்ரு கலக்குற.... உனக்கு பக்கத்தில நிக்கும்போதே missed call எல்லாம் பாத்தேன் ஆனா இன்னும் யாரெண்டு சொல்லல்ல ஆனா நான் கண்டுபிடிச்சிட்டன்

Admin said...

//வால்பையன் கூறியது...
தப்பா நினைக்காதிங்க, படு கேவலமா இருக்கு! இறுதியில் நகைச்சுவைன்னு போட்டாலும் இது முழுக்க முழுக்க ஆண்களை எப்போதும் பெண்களின் பார்வைக்கு ஏங்கும் பூச்சி மாதிரி சித்தரிக்கும் பதிவு!

மத்தவங்களுக்கு கோவம் ஏன் வரலைன்னு தெரியல, எனக்கு வருது!//

இப்பதிவு எல்லாப் பெண்களையும் நான் சுட்டிக்காட்டவுமில்லை, எல்லா ஆண்களையும் நான் சுட்டிக்காட்டவுமில்லை. நகை சுவையாகவேதான் பதிவிட்டேன். ஆனாலும் இப்படி நடக்கவில்லையா? இப்படிப்பட்ட பெண்கள் சிலர் இருக்கின்றார்கள். என் பெண்களுக்குப் பின்னால் நாய்போல் அலையும் ஆண்கள் இல்லையா? சிலர் இருக்கின்றார்கள். சிலர் என்று சுட்டிக்காட்டி இருக்கின்றேன். நகைசுவையாக பதிவிட்டாலும் உண்மையான விடயங்களும்தான்.

ஆண்களை கேவலப் படுத்துவதாக சொன்னால் எத்தனை பேர் பெண்களை கேவலப் படுத்தி எழுதுகின்றோம். ஒரு பெண் செய்யும் தவறை எல்லாப் பெண் மீதும் சுமத்துகிறோம். இது சரியானதா.

சினிமாவிலே எவ்வளவு கேவலமாக சித்திரிக்கின்றனர். இப்படி பெண்களை கேவலப் படுத்துவது ஆண்களே. எத்தனை பாடல்கள் பெண்களை கேவலப் படுத்தி வந்திருக்கின்றது.

உதாரணமாக பொம்பளைங்க காதலைத்தான் நம்பி விடாதே... ஒரு பெண் ஏமாற்றிவிட்டாள் என்றால் மொத்தத்தில் எல்லா பெண்களையும் குற்றம் சொல்கின்றோம். பெண்களை கேவலப் படுத்தும் ஆண்கள் திருந்தலாம்தானே.

மொத்தத்தில் ஒரு சிலரால் இவ்வாறான நடவடிக்கைகள் மேட்கொள்ளப்படுகின்றன அதனை நகை சுவை பதிவாக இட்டிருக்கிறேன். ஒரு சிலர் என்ற சுட்டிக்காட்டளுடன்.

Admin said...

//பெயரில்லா கூறியது...
பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் சமூகத்துக்கு ஏதாவது
செய்யத்துடிக்கிறீங்க..
at last..//

நான் சமுகத்துக்கு என்ன செய்கிறேன் என்பது என்னை சார்ந்த சமுகத்துக்கு தெரியும்.

Admin said...

//நாஞ்சில் பிரதாப் கூறியது...
இவ்வளவு சீரியஸயான மேட்டரைப்போட்டுட்டு நகைச்சுவையா... ?
முடில.. இதெல்லாம் இப்பவுள்ள பொண்ணுங்க பண்றதுதானே... புதுசா ஏதாச்சம் இருக்கம்னு பார்த்தேன்...//

சில உண்மைகளை நகை சுவையாக சொல்ல நினைத்தேன்.

Admin said...

//Sinthu கூறியது...
ஏன் அண்ணா இப்படி ஆகிட்டீங்க? ஆண்கள் சவகாசமே வேண்டாம் எண்டா இப்படி எல்லாம் போட்டிருக்கிறீங்களே........//

நான் இருந்ததுபோல்தான் இருக்கிறேன் சிந்து... என் ஆண்களை இப்படி வெறுக்கிரிங்க... ஆண்கள் ரொம்ப நல்லவங்க..

Admin said...

//முகிலினி கூறியது...
என்ன நடந்தது சந்ருண்ணா. நீங்களுமா... எல்லாம் உந்த போண்டி அண்ணாவுடன் சேர்ந்ததால் வந்த வினை.. அவனை டிவோஸ் பண்ணுங்கோ...//

ஒன்றுமே நடக்கவில்லை சகோதரி... அறிந்தவை தெரிந்தவை நகை சுவை எனும் பெயரில்... அவன் நல்ல பிள்ளை அவனை விடுவோம்...

//என்னென்னவோ நடக்குது... இந்த சந்ருண்ணாவை காப்பாத்து ஞானப்பண்டிதா...//

நீங்களாவது காப்பாத்துங்கோ...

//பி.கு: G-Force படம் பாருங்கோ.. அதில் அந்த பெண் கினிபிக் சொல்லுவதைப் போல் நடந்தாலே போதும்.. ஆண்களை லோ லோ என்டு அலைய வைக்க...//

இதைப் பார்த்துத்தான் சில பொண்ணுங்க இப்படியோ? ...

உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன் எங்கே போனிர்கள் உங்கள் தொடர்பு விபரங்களே என்னிடம் இல்லாமல் போய்விட்டது. உங்களை தேடிக்கொண்டிருந்தேன்.

Admin said...

//Loosu கூறியது...
//வால்பையன் கூறியது...
//G-Force படம் பாருங்கோ.. அதில் அந்த பெண் கினிபிக் சொல்லுவதைப் போல் நடந்தாலே போதும்.. ஆண்களை லோ லோ என்டு அலைய வைக்க... //

நான் திட்டிகிட்டு இருக்கேன், நீங்க வந்து டிப்ஸ் கொடுக்குறிங்களா அம்மணி! //

விடுங்க வால்பையன் சார்....
இப்பிடித்தான் கொசுத்தொல்லைகள்....//

பரவாயில்லையே பெயருக்கேத்த மாதிரியே பேசுறிங்க...

Admin said...

//றமேஸ்-Ramesh கூறியது...
கண் நடை புன்னகை
அரட்டை குறை ஆடை
நட்புக்களங்கம்
பதில் தாமதம்
கேள்விகளுக்கு
அலை மோதல்
இது உங்க காதலன் விளம்பரமா??//

இருக்கலாம்

//அவள் வருவாளா???//

அவள் மட்டுமல்ல எவளும் வருவதாக இல்லை...


//ம்ம் சந்ரு கலக்குற.... உனக்கு பக்கத்தில நிக்கும்போதே missed call எல்லாம் பாத்தேன் ஆனா இன்னும் யாரெண்டு சொல்லல்ல ஆனா நான் கண்டுபிடிச்சிட்டன்//

அது எல்லாம் அன்புத்தொல்லை தரும் missed calls ... நானும் அவளைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் யாரென்று எனக்கும் சொல்லுங்கள்.

Anonymous said...

அப்படி எல்லாம் போண்டியை விட்டுவிட முடியாது சந்ருண்ணா :) :) :).. அவனுக்கும் எனக்கும் ஆளையால் கொழுவாட்டி அன்டைக்கு நித்திரையே வராது. அவனை அறிந்தது ஒரு வரம்.. யார் என்ன சொன்னாலும் அந்த குண்டு பூசணி என்னோட கதைக்கிறதை நிப்பாட்டுவதில்லை.. நானும் அவனுடன் கொழுவாமல் விடுவதில்லை...

மற்றது.. நான் இஞ்ச தான் இருக்கிறன்.. நீங்களுகள் தான் இடையே காணாமல் போட்டியள். மேலும், இனிய பொங்கல் வாழ்த்துக்கள். மெயில் போடுறன்... மீண்டும் சந்திப்போம்..

Admin said...

@. முகிலினி ===>>>

நான் நகைசுவை பதிவு எழுத ஆசை வந்ததே புல்லட்டின் பதிவு பார்த்துத்தான். ஏன் நகைசுவை பதிவுகளின் குரு புள்ளட்தானே. புல்லட்டை விட்டு விடலாமா அவரை வம்புக்கு இழுக்காமல் விடலாமே என்று நகை சுவையாக சொன்னேன்.

உங்களோடு தொடர்பு கொள்ள முடியவில்லை. உங்கள் மின்னஞ்சலை தவற விட்டுவிட்டேன்

வந்தியத்தேவன் said...

எப்படி இருந்த சந்ரு இப்படி ஆகிவிட்டார். இவற்றில் பல உண்மையானவை

புல்லட் said...

சந்ரு .. இதில் உண்மையும் இருப்பதால் சிலருக்கு கோபம் வந்துவிட்டது.... ஏனெனில் ஒரு குறித்த வயதில் இத்தகைய ஒரு குணம் ஆணகளுக்கு இருப்பதுடன் அதனால் பரீட்சைகளில் தோல்வி மனம் ஒருமுகப்படுத்முடியாமை என அல்லலுற்ற பல நண்பர்களை தெரியும்.. உப்படி பெண்கள் செய்வது ஒரு பாவம் என்பதை அவர்கள் உணர்வதில்லை.. :-)

மற்றும்படி நீங்கள் கடைசியில் நகைச்சுவை என்று போட்டதுதான் நகைச்சுவை என நான் நினைக்கிறேன்.. :P

கலா said...

\\\01 . ஆண்களைக் காணும்போது

கடைக்கண்
பார்வை பார்த்துவிட்டு ஒரு
புன்னகை செய்தால் போதும்\\\\

உடனே ஓஓஓ அதுவா??? என நினைக்கத்
தோணும் ஆணுக்கு .

\\\\02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள்
அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி
நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற
ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க
வருவதுபோல் பாவனை செயுங்கள்.\\\\

சமயம் பார்த்து அலகாய் தூக்கிப்
போய் விடுவார்கள் அப்புறம்.......????

கலா said...

\\\\03 . அடிக்கடி வாகனங்களில் பயணம்
செய்பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில்
வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு
தடவை பார்த்து சிறிய புன்னகை...
அவ்வளவுதான் உங்களை
பின்தொடர்வோர்
அதிகமாகிவிடுவார்கள்.\\\\\

புன்னகைக்கே மதிப்பில்லாமல்
போய்விடும்.

\\\04 . நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா?
அப்படியாயின் ஆண் அரட்டை
நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi )
சொன்னால்போதும் உங்களை
ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள். \\\\

தேவதையாய் நினைக்க மாட்டார்கள்
தேடி வருவதை..... எப்படி
நினைப்பார்கள்????

கலா said...

\\\\. நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து
நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு
பவனி வாருங்கள் உங்கள் பின்னால்
நாயும் அலையும்.\\\\\\

பைத்தியங்கள் தான் பாதையெல்லாம்!!!
அப்புறம் மனநல மருத்துவமனையில்
இடமில்லை!!


|||\\\06 . எப்பவும் உங்கள் கையில்
கைத்தொலைபேசி இருக்கட்டும்.
ஆண்கள் உங்கள் .........|||||


பெண்ணின் மதிப்பே தொலைபேசியில்
தானா!!!???பார்பவர்களுக்கெல்லாம்
கொடுத்தால் ,,,,

கலா said...

\\\07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது
நெருக்கமாக காதலிப்பதுபோல்
பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும்
இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை .....\\\\

இதுதான் கலியுக காலமா???
அழிவு நிட்சயம்!!


\\\08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி
உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம்,
கேட்கலாம் அப்போது முடியாது
என்று சொல்லவேண்டாம். பின்னர்.....\\\


என்ன!! அழகான முயற்சி...
அப்புறம் வீதியெல்லாம்
தேவதாசும்...நானும் ஒரு
ஜாதிதானடி..........என்ற
பாடல்தான்!!

கலா said...

\\\09. உங்களோடு சில பெண் நண்பிகளை

வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள்
உங்கள் கதை.......\\\


ஆனைக்கும் அடி சறுக்கும்!!???
வேஷம் கலைந்தால்!!??


\\\10 . இதுதான் முக்கியமானது....
எங்களைப் போன்றவர்களிடம் இது
மாத்திரமல்ல எதனை செய்தாலும்
நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம்.
ஆனால் பெண்களைத்தான் எங்கள்
பின்னால் அலைய வைப்போம்.
எங்களைப் போன்றவர்களிடம் உங்கள்
வேலையே காட்டி நேரத்தை
வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள்
அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். \\\

அனுபவத்தையெல்லாம் கொட்டி விட்டு
அள்ள நினைக்கலாமா???

இது நான் அப்படிப் பட்டவர்தான் எனச்
சொல்லும் விளம்பரம்.{இலாபம் கிடைக்குமா?}
தவம் செய்த யோகியே...மயங்கிவிட்டார்
பெண்ணிடம் . இந்த..பொடிப் பையன்
சந்ரு எம்மாத்திரம்????

தமிழ். சரவணன் said...

//சில அப்பாவி ஆண்கள் நாய் போல் அலைந்து. கடைசியில் எல்லாம் இழந்து, எல்லாம் புரிந்து..... என்னவோ எல்லாம் நடக்குது...//

ஆமாம் ஐயா! மனைவியின்(??) வரதட்சணை கொடுமை பொய்வழக்கில் அனைவரும் சிறைசென்று கோர்ட்டு, கேஸ் போலீஸ் என்ற நாய்போல் அலைந்து கொண்டிருக்பவன்...

ஆ.ஞானசேகரன் said...

//ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.//

இது ஞாயமே இல்லைங்க சந்துரு


வணக்கம் நண்பா>>.

Post a Comment