Wednesday 30 June 2010

உண்மைகளும் ஆதாரங்களும்.. அனைவருக்காகவும்...

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 25


இங்கே வர்ணமாக்கப் பட்டிருக்கின்ற பகுதிகளை சற்று கவனிக்கவும்.

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி -24
 இன பிரிவினை கருத்துக்களை அள்ளி வீசக்கூடிய பேச்சாளர்கள் இந்தியாவிலிருந்து வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் தமிழ் ஆராய்ச்சிக்காக நடாத்தப்பட வேண்டிய இம்மாநாடு பிரிவினைக்கு தூபமிடுவதாக அமைந்துவிட கூடாது என்பதில் அரசு கவனமாயிருப்பது இயல்பே.

இதன்காரணமாக தமிழ் நாட்டிலிருந்து வருகை தரவிருந்த உலக தமிழ் இளைஞர் பேரவை தலைவர் ஜனார்த்தனன் போன்ற பேச்சாளர்களுக்கு இலங்கையரசு வீஸா தரமறுத்திருந்தது. அவரை தனிதமிழீழ கோரிக்கையை தூண்டிவிட கூடிய உணர்ச்சிகரமான பேச்சாளராக அரசு கருதியதே அதற்கு காரணம். ஆனால் இந்த வீஸா மறுப்பும், மாநாட்டுக்கான தடைமுயற்சிகளும் அல்பிரட் துரையப்பாவின் தூண்டுதலின் பெயரிலேயே நடைபெறுவதாக அமிர்தலிங்கம் குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்த துரையப்பாவோ யாழ்பாண மேயர் எனும் வகையில் இந்த மாநாட்டுக்காக தன்னால் முடிந்த உதவிகளை செய்ய தான் தயாராகயிருப்பதாகவும் அறிக்கைவிட்டார். ஆனால் நீதிமன்றங்களில் குதர்க்கம் பேசி தேர்ச்சி பெற்ற அமிர்தலிங்கம் “யாரின் உதவியுமின்றி தன்னால் தனித்து மாநாட்டை நடாத்த முடியும் என மறுப்பறிக்கை விட்டார்.

அதற்கு பதிலிறுத்த துரையப்பா தனது உதவிகள் ஏற்றுகொள்ளபடாவிட்டாலும் தான் இதற்கு தடையாக இருக்க போவதில்லை என சொன்னார். “யார் தடைசெய்தாலும் மாநாடு நடந்தே தீரும்” என்று வேண்டாத விவாதங்களில் ஈடுபட்டார் அமிர்தலிங்கம். இதனுடாக மாநாட்டினை ஒட்டி மிக மோசமானதொரு பதட்ட சூழலினை தோற்றுவிக்க அவரே காரணமாயிருந்தார்.

இப்படியாக அரசாங்கத்தினது பல முட்டுக்கட்டைகளையும் பாரிய ஆபத்துக்களையும் வென்று தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படபோகிறது என்ற ஒரு மாய தோற்றத்தை வடக்கு, கிழக்கு மக்களிடம் ஏற்படுத்துவதில் அமிர்தலிங்கம் வெற்றி கண்டார்.

இறுதியாக இறைமையுள்ள ஒரு தேசமான இலங்கையரசின் சட்டதிட்டங்களை மீறி கள்ள தோணியில் ஜனார்தனன் போன்ற இந்திய பேச்சாளர்களை யாழ்பாணம் கொண்டுவந்து சேர்ப்பதில் அமிர்தலிங்கம் இறங்கினார்.

அதுமட்டுமன்றி உதவி அமைச்சர் சோமவீர சந்திரசிறீ, யாழ் மேயர் அல்பிரட்துரையப்பா போன்றோர் மீதான கொலை முயற்சிகளில் ஈடுபட்டமைக்காக இலங்கை பொலிசாரினால் தேடப்பட்டு வந்த சிவகுமாரன் போன்ற தமிழ் மாணவர் பேரவை இளைஞர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவை பட்டாளமும் இம்மாநாட்டில் முக்கியஸ்தர்களாக உலாவந்தனர்.

உண்மையில் தமிழ் ஆராய்ச்சி மாநாடுதான் நடத்தபட வேண்டுமாக இருந்திருந்திருந்தால் இவையெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இவைமட்டுமல்ல குழப்பங்களை ஏற்படுத்தும் வண்ணம் இன்னும் பல தேவையற்ற பொறுப்புகளை அமிர்தலிங்கம் போன்றோர் இந்த இளைஞர் பட்டாளத்திடம் வழங்கியிருநதனர்.

அதாவது விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த ஜனார்த்தனன் அவர்களை இலங்கை பொலிசார் கைதுசெய்யாமல் பாதுகாக்கும் பொறுப்பை பொலிசாரால் தேடப்பட்ட சிவகுமாரன் குழுவினரிடமே வழங்கியிருந்தமை நிலைமைகளை மேலும் சிக்கலாக்கியது.

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் எனும் நூலினை எழுதிய புஸ்பராசா அவர்கள் தனது நூலில் 96 ஆம் பக்கத்தில் இந்தவிடயங்களை ஒப்புக்கொண்டுள்ளார். “மாநாட்டுக்கு உலகத் தமிழ் இளைஞர் பேரவையின் தலைவர் ஜனார்த்தனன் வந்த செய்தியை அமிர்தலிங்கம் மூலம் அறிந்துகொண்டேன்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றில் வைத்து ஜனார்தனனை சந்தித்தேன். ஜனார்த்தனனது பாதுகாப்பு ஏற்பாடுகளை சிவகுமாரனே செய்தார்” என்கிறார் அவர். இவையெல்லாம் தமிழை ஆராட்சி செய்வதற்கோ அன்றி தமிழுக்கு தொண்டு செய்வதற்தோ தமிழை வளர்ப்பதற்கோ செய்யப்பட்டதல்ல. மாறாக எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றி தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு அமிர்தலிங்கத்தின் செயற்பாடுகள் பங்களித்தன.

வரலாற்றின் மனிதன் என்கின்ற அ.அமிர்தலிங்கம் அவர்களது பவளவிழா மலரில் இச்சம்பவம் குறித்து ஜனார்த்தனன் பின்வருமாறு விபரிக்கின்றார்.

“செய்தித்தாள்களில் நான் உரையாற்றுவேன் என அறிவிப்பு. காலை ஊர்வலத்தை தொடங்கிவைத்து பேசியபோதே என்னை கைது செய்ய பொலிசார் முயற்சிசெய்ய, அவரிடம் அமரர் நவரத்தினம் பேச்சுக்கொடுத்து இடைமறிக்க, தலைமறைவானேன். மாலை வீரசிங்கம் மண்டபத்தில் மக்கள் வெள்ளம் நிறைந்துவிட்டதால் வெளியே அமைக்கப்பட்ட திடீர் மேடையை அடைந்தேன். காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ‘உம்மைக் கைது செய்து கொழும்பு நாலாவது மாடிக்கு அழைத்துசெல்லும் உத்தரவிது.’ எனக்காட்ட பேசிவிட்டுத்தான் வருவேன், பேசாது இங்கிருந்து போக தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என நான் மறுக்க வேறுவளியின்றி கூட்டத்தைக் கலைத்து அங்கேயோர் ‘ஜாலியன் வாலாபாக்’ நடத்த காவல்துறையினர் முடிவுசெயது அகன்றனர். அலையைக் கிழித்துவரும் கலம்போல் அமிர்வந்தார்.
கரகொலி விண்ணைப்பிளக்க கையில் இருந்த மாலையை எனக்கு அணிவிக்க அதை அவருக்கு நான் திரும்ப மாலையிட அந்த மணமேடை – பின்னர் 12 உயிர்களை தியாகவடிவில் காணும் அவலம் ஏற்பட்டது.”

இந்த வாக்குமூலங்கள் ஊடாக நாட்டின் சட்டத்தை காக்கும் கடமையில் ஈடுபட்ட பொலிசார் ஆத்திரமூட்டப்பட்டு சிவகுமாரன், ஜனார்த்தனன் போன்றோரை கைதுசெய்யும் முயற்சியில் வான்நோக்கி சுடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

 இதனை “அமிர்தலிங்கம் சகாப்தம்” எனும் நூலை எழுதிய கதிர் பாலசுந்தரம் அவர்கள் பின்வருமாறு விபரிக்கின்றார்.

“1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆராட்சிமாநாடு நடந்தது. உலகமெங்கும் இருந்து அறிஞர்கள் வந்திருந்தனர். மக்கள் வெள்ளம் அலைபுரண்டது. யாரோ ஒரு இந்தியர் பேசப்பேவதாக பொய்க்கதை பரவியது. திடீரென வந்த பொலிசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். குண்டாம்தடிகளால் மக்களை அடித்தனா. ரைபிள்களால் சுட்டனர். மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து 9 பேர் பலியாகினார்கள்.”

நடந்த உண்மைகளை இதற்குமேல் இன்றைய பரம்பரை புரிந்து கொள்ள வேண்டும். இவையனைத்தும் தாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக மகாநாடு நடந்ததாகவே தமிழர் விடுதலைக் கூட்டணி கணக்குப் போட்டிருக்க வேண்டும். ஏனெனில் 10-01-74 இல் நடந்த இந்த 9 பேரினுடைய இறப்பும் சிங்களப் பேரினவாத அரசின் தமிழ் படுகொலை என்று பிரச்சாரப் படுத்தி தேர்தலில் களம்மிறங்க அமிர்தலிங்கத்துக்கும் அவர் சார்ந்த கூட்டணியினருக்கும் நல்ல வாய்ப்பபை ஏற்படுத்திக்கொடுத்தது.

கிழக்கு மாகாணத்தில் இருந்து இந்த தமிழ் ஆராட்சி மாநாட்டுக்காக தமிழர்விடுதலைக் கூட்டணியின் ஏற்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட வாகன சேவையினூடு யாழ்ப்பாணம் சென்ற கட்சி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் யாருமே இந்த படுகொலையின் பின்னணியில் இருந்த சூட்சுமங்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அமிர்தலிங்கத்துக்கும் அல்பிரட் துரையப்பாவுக்கும் இடையே இருந்த அதிகாரப் போட்டி சண்டைகள் குறித்து அவர்கள் ஏதும் அறிந்திருக்கவில்லை. இந்த சூழ்நிலையிலையே தம் கண்முன்னே நடைபெற்றிருந்த கொலைகளை திட்டமிட்ட சிங்களப் பொலிசாரின் படுகொலையே என நம்பினர். வெடிச்சத்தங்களும் மகாநாட்டில் ஏற்பட்ட குழப்பமும் கொலை செய்யப்பட்ட 9 உடல்கள் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி இறக்கப்பட்டமையும் தம் கண்ணெதிரே நடந்தேறியமையால் இப்படுகொலையானது சிங்கள அரசின் திட்டமிட்ட படுகொலையென்றே அவர்களை நம்பவைத்தது.

தப்பிப் பிழைத்து கிழக்கு மாகாணத்துக்கு வந்த சேர்ந்த அவர்கள் தாம் கொண்டுவந்த செய்திகளை அங்கே பரப்பினர். “கண்ணால் கண்டதும் பொய்” என்பதை அவ்வேளை கிழக்கிலங்கை மக்களிடத்தில் காலம் ஒருதரம் நிரூபணமாக்கிச் சென்றது.

இந்த தமிழாராட்சி மாநாட்டு அனர்த்தங்களுக்கு பின்பு நடந்த முக்கியமாதொரு சம்பவம் வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கு வன்முறை மீதான விருப்பத்தை மென்மேலும் அதிகரிக்க ஏதுவாக்கிற்று பொன் சிவகுமாரன் யாழ்பாணத்தில் நடந்த இருவேறு குண்டுத்தாக்குதல் கொலை முயற்சிகளுக்காக ஏற்கனவே தேடப்பட்டு வந்தவர் என்பதை மேலே கண்டோம்.

1974 ஆம் ஆண்டு ஆனி மாதம் 5 ஆம் திகதி கோப்பாய் வங்கியயொன்றில் பொதுமக்களின் நகைகளை கொள்ளையிட முயற்சிக்கையில் வங்கி ஊழியர்களாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பாலும் பொலிசாரால் வளைத்துப் பிடிக்கப்பட்டார். அக்கைதின் போது “சயனைட்” எனும் விசமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

இந்த தற்கொலை தமிழர்விடுதலைக் கூட்டணியினரால் பரபரப்பாக்கப்பட்டு வீரச்சாவாக வர்ணிக்கப்பட்டது. அதனூடாக ஒருவித கீரோயிச மனப்பாங்கின் மீதான பற்றுதலை இளைஞர்களுக்கு ஊட்டிவிடுவதில் கூட்டணிப் பேச்சாளர்கள் வெற்றியடைந்தனர்.

அஞ்சலிக் கூட்டங்களின் போது பொதுமக்களையும் மாணவர்களையும் அணிதிரட்டிய த.வி.கூட்டணியினரும் அவர்களது கிளையினரான தமிழ் இளைஞர் பேரவையினரும் இப்படி ஆயிரம் ஆயிரம் சிவகுமாரன்கள் உருவாக வேண்டும் என்று வன்முறைக்கு வித்திட்டனர்.

மறுபுறம் இதுபோன்ற பல நிகழ்வுகளில் முக்கிய பேச்சாளராகிய அமிர்தலிங்கம் தன்னைத்தானே தமிழீழத்தின் தளபதியாக வரித்துக்கொண்டதன் ஊடாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை தனக்கானதாக மென்மேலும் உறுதி செய்து கொண்டார்.

தொடரும்…

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 comments: on "உண்மைகளும் ஆதாரங்களும்.. அனைவருக்காகவும்..."

சசிகுமார் said...

நல்ல பகிர்வு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Admin said...

//சசிகுமார் கூறியது...
நல்ல பகிர்வு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்துதுக்களுக்கும் நன்றிகள் நண்பா

Sabarinathan Arthanari said...

விளக்கங்களுக்கு நன்றிங்க

Post a Comment