Sunday 4 July 2010

இந்து சமயமும் மூட நம்பிக்கைகளும்


எனும் பதிவிலே நான் அதீத கடவுள் நம்பிக்கை கொண்டவன் என்றாலும் இவ்வாறன விடயங்களை நம்புவதில்லை என்று குறிப்பிட்டிருந்தேன்.  நான் இவ்வாறான விடயங்களை நம்பாததட்கு காரணம் இன்று பலர் தாம் பணம் உழைப்பதற்காக இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

சிலைகள் நிலத்தின் கீழிருந்து கண்டெடுக்கப்படலாம். அது எமது முன்னோர்கள் பயன்படுத்தியவைகளாக இருக்கலாம். அவை இன்று எமது கண்களில் பட்டிருக்கலாம். ஆனால் சிலர் இவற்றை வைத்து பணம் உழைக்க முற்படுகின்றனர்.
அதனாலேயே இன்று மக்கள் இவ்வாறான விடயங்களையோ, கடவுளையோ நம்புவதிலிருந்து விலகி  செல்கின்றனர்.

நாங்கள் சுனாமிக்கு முன்னர் கடற்கரைப் பிரதேசத்திலே இருந்தோம். இப்பொழுது வேறு இடத்துக்கு மாறி இருக்கின்றோம். இப்பொழுது இருக்கின்ற இடம் முன்னர் பாரிய பள்ளமும், மேடுமாக  இருந்தது. அவற்றை சம தரையாக்கி எடுத்திருக்கின்றோம்.

வீட்டிலேயே சிறு பையன் (மருமகன்) இருக்கிறான் அவன் தனது மோதிரத்தைக் தொலைத்துவிட்டான். அப்போது நிலத்திலே அம்மா தேடிக்கொண்டிருக்கும்போது. அம்மாவின் கையிலே வெண்கலத்தாலான பிள்ளையார் சிலை ஒன்று கிடைத்தது. அவற்றை இப்பொழுதும் எங்கள் வீட்டில் வைத்து வணங்கி வருகின்றோம். நாங்களும் நிலத்திலிருந்து சிலை வந்துவிட்டது என்று பெரிதுபடுத்தி இருந்தால் நிலை வேறு.

இன்று பல இடங்களிலே இவ்வாறான நிகழ்வுகள் சாதாரணமான ஒன்றாகிவிட்டது. பலர் இதை வைத்து உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இன்று நடக்கின்ற சில நிகழ்வுகளைப் பார்க்கின்றபோது எமது சமயம் செல்கின்ற பாதையை நினைத்து கவலைப் படுவதுண்டு.

கிராமங்களிலே சொல்வார்கள் தெய்வம் ஆடுதல் என்று. இன்று பல மனிதர்களை தெய்வம் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிரதாம். அல்லது தெய்வத்தை இவர்கள் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.

இப்போது அடிக்கடி ஏன் காதில் விழுகின்ற விடையன். அவர் தெய்வம் ஆடுகிறாராம், இவர் தெய்வம் ஆடுகிறாராம், அம்மன் பார்வையாகிவிட்டாராம், அம்மன் வாக்கு கொடுத்திருக்கிறாராம், சில நாட்கள் தெய்வம் ஆடப்படும் பின்னர் பார்த்தால் வீட்டருகே சோதிட நிலையம் என்று பெயர்ப்பலகை இருக்கும். சாஸ்த்திரம் சொல்லப்படும். இவ்வாறு பலர் உழைத்துக்கொண்டிருக்கின்றனர். கடவுள் பெயரை சொல்லி.

இவ்வாறான ஒரு சிலரின் நடவடிக்கைகளால்தான் இன்று கடவுள் நம்பிக்கை இல்லாமல் போகின்றது.  இவ்வாறு தெய்வம் ஆடுபவர்கள் தங்களை கடவுளாக காட்டிக் கொள்கின்றனர். அம்மன் சொல்கிறார் என்று தாங்களாகவே பல கதைகளை சொல்கிறார்கள்.

இவர்கள் கடவுளைவிட மேலானவர்களாகிவிட்டார்களா?  கடவுளோடு பேசுகின்ற நிலையில் இருக்கின்றார்களா?  சரி அப்படியானால் ஏன் கடவுள் இவர்களிடம் சொல்லவேண்டும்? கடவுள் நேரடியாக வந்து சொல்லலாம்தானே.

இது ஒரு புறமிருக்க பலர் இவர்களை நம்பி சாஸ்த்திரம் (சோதிடம்)  பார்க்கப்போகிறோம் என்று அலைந்து திரிவதுதான் கவலைப்படவேண்டிய விடயம்.
இவர்களெல்லாம் திருந்துவார்களா?

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இந்து சமயமும் மூட நம்பிக்கைகளும்"

Post a Comment