Sunday 4 July 2010

அசினும் நானும்



இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பில் அண்மையில் இலங்கையில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழவை தழிழ் திரையுலகம் புறக்கணித்திருந்தது. தமிழ் நடிகர், நடிகைகளும் விழாவை புறக்கணித்தனர்.


இந்நிலையில் தெலுங்கில் வெற்றி பெற்ற ‘ரெடி’ படம் இந்தியில் தயாரிக்கப் படுகிறது . இதில் சல்மான்கான் ஜோடியாக அசின் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இலங்கையில் நடந்து வருகிறது.

தமிழ் திரையுலகத்தின் தடையை மீறி இலங்கைக்கு ஷூட்டிங் சென்ற நடிகை அசின் இலங்கையில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ‘நான் அரசியல்வாதி இல்லை, கிரிக்கெட் வீரர்கள் போகும்போது ஷூட்டிங்கில் பங்கேற்க நான் செல்வதில் தவறு இல்லை’ என்று அசின் பேட்டியளித்திருக்கின்றார்.


தமிழ் திரையுலகினர் இலங்கை செல்லக்கூடாது என்று தடை விதித்திருப்பது உண்மைதான். இந்த முடிவு தனிப்பட்ட ரீதியில் யாரும் எடுத்ததல்ல. தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், பெப்சி உள்ளிட்ட எல்லா அமைப்புகளும் சேர்ந்து எடுத்த முடிவுதான். அசினின் இந்த பேட்டி தமிழ் திரையுலகத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் 11 ம் திகதி இடம் பெற இருக்கின்ற தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவடைந்ததும் திரையுலக கூட்டமைப்பு கூடி அசினுக்கு தடை விதிப்பது பற்றி முடிவு செய்யப்படும். என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி கூறியிருக்கின்றார்.

இது இவ்வாறிருக்க தமிழ் திரையுலகத்தினர் இவ்வாறுதான் தொடர்ந்து இருக்கப் போகின்றனரா? இனிவரும் காலங்களில் தமிழ் திரைப்படங்களை இலங்கையில் திரையிடாமல் இருப்பார்களா? இனிமேல் இலங்கையில் நடைபெறுகின்ற எந்தவொரு விழாக்களிலும் கலந்துகொள்ளமாட்டார்களா?

கடந்த காலங்களில் இந்திய திரைப்படத் துறையினர் பங்குபற்றிய பல நிகள்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில்கூட இசை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. அப்போது ஏன் மெளனம் சாதித்தனர். யாழ்ப்பாண மக்கள் பல்வேறு கஸ்ரங்களுக்க மத்தியிலே வாழ்ந்து வருகின்றனர் இவ்வாறான இசை நிகழ்ச்சிகள் தேவையற்றது என்று அன்று அந்த நிகழ்ச்சிகளை புறக்கணித்திருக்கலாம்தானே.

இனிவரும் காலங்களிலே எல்லாவற்றையும் புறக்கணிக்கத்தான் போகிறார்களா? இந்தியாவிலுருந்து இலங்கைக்கு அல்லத தமிழர்களுக்கு வருகின்ற உதவிகளையும் தடை செய்யப்போகின்றார்களா? இந்திய சர்வதேச திரைப்பட விழாவினை ஏதோ ஒரு காரணத்துக்காக புறக்கணித்தாலும். அடுத்தடுத்து எல்லாவற்றையும் புறக்கணிக்க வேண்டுமா? தொடர்ந்து எல்லாவற்றையும் புறக்கணிக்கத்தான் போகிறார்களா? இனிமேல் திரைப்படங்களை இலங்கையில் திரையிடமாட்டார்களா? இலங்கையில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமாட்டார்களா?

மறுபுறத்தில் இலங்கையில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவினை இந்திய திரையுலகம் புறக்கணித்ததையும் இத்திரைப்பட விழாவுக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்ட ஊடகங்களிடம் ஒன்று கேட்கின்றேன். இத்திரைப்பட வழாவுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலே இந்திய திரையுலகம் சார்ந்தோரைக் கொண்டு இசை நிகழ்ச்சிகள் நடாத்தப் பட்டபோது ஏன் மெளனம் சாதித்தனர்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அசினும் நானும்"

Post a Comment