Friday 24 July 2009

நம் தமிழினம் இன்று............


சதைக் குவியலான தமிழினம்
சாதிகெட்டு நாதியற்று - இன்று
நயவஞ்சகர்கள் காலடியில்
கால் கஞ்சிக் கோப்பைக்கு
கையேந்திக் காணும் காட்சி
கண்னீரை நெருப்புத் துளியாக
உதிர்க்கின்றதே...


பெற்ற பிள்ளை எங்கே?
உற்ற அன்னை எங்கே?
பூமி தொடாத குழந்தையின்
ரீங்கார ஒலி எங்கே?
எதை எடுப்பது, யாரைத் தேடுவது..
போகும் திசை எங்கே?
கதறி அழ கஸ்ரப்படும் உடம்பு
கண்ணீரே வற்றி வறண்ட கண்கள்
காணும் போது இதயமே வெடிக்குதே...

தன் கால் பட்ட
இடமெல்லாம் தொட்டுத் தொட்டு
கொடிகட்டிப் பார்க்கும் இடமெல்லாம்
வந்தாரை வாழ வைத்து
தமிழ் மன்னர்கள் வாழ்ந்த இடமல்லவா....

உரித்த பழம்போல்
உதிரம் சொட்டச் சொட்ட
உடல்கள் - பிறந்த
குழந்தைக்கும் பால்
பொட்டிக்கு பதில்
பருத்த மருந்துக் கட்டு
தள்ளாடும் வயதிலும்
தலையில் குடும்பச் சுமை
பார்க்கும்போது தமிழ்
உதிரம் துடிக்குதே....

உழைத்து, உண்டு
ஓடி, ஆடிப், பாடி
கண்சொட்ட அன்னை
மடியில் படுத்துறங்கி
ஒட்டி உறவாடி
தான் வளர்த்த
மரம்,செடி, கொடியோடு கதைபேசி
வாழ்ந்த இடமல்லவோ - இன்று
போன காலமும் கண்ணீர் வடிக்கும்
சுடுகாட்டையும் விட
மோசமான எம் இடத்தைக் கண்டு...

அடியோடு வெட்டினாலும்
ஆலமரம் ஆட்டம் காணாது
அங்கே ஓர் இடத்தில்
அதன் விழுதாக ஓங்காரமாய்
ஓங்கி வளரும் தமிழினம்....
(இதுவும் நண்பர் தயாவின் கவிதைதான்)

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

16 comments: on "நம் தமிழினம் இன்று............"

ஹேமா said...

மனதின் உரத்தோடு ஒரு கவிதை.
எழுதிய தயாவுக்கும் பதிவிட்ட சந்ருவுக்கும் நன்றி.தயா இன்னும் எழுதுங்கள்.

Admin said...

//ஹேமா கூறியது...
மனதின் உரத்தோடு ஒரு கவிதை.
எழுதிய தயாவுக்கும் பதிவிட்ட சந்ருவுக்கும் நன்றி.தயா இன்னும் எழுதுங்கள்.//

ஹேமா இன்னும் எழுதலாம் இங்கே போடா முடியாது. இதிலே கூட பல வரிகளை நான் நீக்கிவிட்டேன்... காலம் அப்படி...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஹேமா...

கும்மாச்சி said...

மட்டகளப்பு சந்துரு உங்கள் மக்களின் வேதனை விரைவில் தீர எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறோம்.

நேசமித்ரன் said...

ஏன் போட முடியாது என் தளம் வாசிப்பவர் நீங்கள்
உங்களுக்குத் தெரியாத நண்பா..
கவிதை அருமை..!

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்ன செய்ய .. எம்மால் அனுதாபப்படத்தான் முடியும் இப்போது..

புரட்சிகர தமிழ்தேசியன் said...

மீனவர்களை எடுத்து கொள்ளுங்கள்.இதுவரை சற்றொப்ப 410 தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தமிழ் இனப்படுகொலை தொடர்கிறது. இந்தியக் கப்பற்படையோ இந்திய அரசோ சிங்களக் கப்பற்படைக்கு எதிராக மறுநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே ஏன்
பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் இந்தி யத் தோட்டாக்கள், தமிழகத் தமிழனை சுட்டுக் கொல்லும் சிங்களவனை நோக்கி ஒரு முறையாவது பாய்ந்திருக்கிறதா ஏன் தமிழாகளிடம் இந்த பாகுபாடு சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது. ஈழத் தமிழர்கள்பால் இந்திய ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் அணுகுமுறையும் பகைமை நஞ்சு சார்ந்ததுதான்இந்திராகாந்தி ஆட்சிக் காலமானாலும், அவர் தந்தையார் நேருவின் ஆட்சிக் காலமானாலும், இந்திராவின் மகன், மருமகள், பேரன் ஆட்சிக் காலமானாலும், வாஜ்பாயி ஆட்சிக் காலமானாலும் இந்திய ஆளும் வர்க்கத்தினர் தமிழகத் தமிழர்களை சந்தேகப் பட்டியலில் வைத்துக் கண்காணிப்பதிலும், தமிழர்களைப் பகைவர்களாகக் கருதுவதிலும் மாற்றமில்லை. ஈழத் தமிழர்களையும் அதே அளவுகோல் கொண்டுதான் பார்க்கிறார்கள்இந்த பாகுபாட்டைத் தான் இந்தி ய தேசியம் என்கிறோம். தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.அதாவது ஏனைய பொருளாதார வளங்களுக்கே தமிழரும் தமிழ்நாடும் தேவை படுகிறாரகள்.ஆக இங்கு தமிழ்நாட்டில கட்சி நடத்தும் அனைவருக்கும் தெரியும் நாங்கள் எச்சில் இலைதான் என.
தமிழ் இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் தமிழகத்தின் அனைத்து தேர்தல் அரசியல் கட்சிகளும் தில்லி ஏகாதிபத்தியத்தின் கைகூலிகள்தான் எனவும், தில்லி ஏகாதிபத்தியத்தின் கூட்டுக் கொள்ளையர்கள் தான் எனவும் தற்போதைய சமூக நிகழ்வுகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த இந்தி யத் தேசியத்தில் இருந்து கொண்டு, தமிழருக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை தேர்தல் அரசியல் கட்சிகளை தமிழ் மக்கள் இனங்காண வேண்டும். மாற்றத்திற்கு வழி தமிழ்த் தேசியமே என்பதை உணர வேண்டும். இந்தி யத் தேசியம் பேசி இனியும் ஏமாந்து விடக் கூடாது. தமிழர்களே நன்றாக யோசித்து பாருங்கள். எங்கோ வடநாட்டில் இருக்கும் பனியாவின் மகன் மகளுக்கெல்லாம் முடி சூட்டு விழா நடத்தும் கங்காணிக் கட்சியில் இருந்து கொண்டு எம் தமிழினத்திற்கு துரோகம் இழைக்காதீர். என்னை கேட்டால் இந்த இழவு பிடித்த இந்தி தேசியமே தேவை இல்லை ..தமிழன் சூடு சொரணையோடு வாழ தனிதமிழ்நாடே தீர்வு நானும் என்னால் முடிந்த அளவு பிரச்சாரத்தினை ஆரம்பித்துவிட்டேன்..வீர தமிழினத்திற்கு தலாய்லாமா போன்று இன்னும் 50,60 வருடங்கள் போராடவேண்டிய அவசியம் இல்லை என்பதே எனது கருத்தாகும் ..நமக்கு அறிவியல் ,ரசாயன.அணுகுண்டு போன்ற அறிவு தேவை ஏற்படுகிறது. எவனும் இங்கு இப்போது ஏசு போன்று ஒரு கன்னத்தில் அறைந்தால். என்று திரிவதில்லை வலிந்தவன் வாழ்வான் இதுவே உலக கோட்பாடு எனவே நாமும் நமது பிள்ளைகளுக்கு அணு ஆயுத வல்லமையை ஊட்டுவோம்.. எதிர்ப்பவன் எவனாக இருந்தாலும் அவன் தலையில் அது கட்டாயம் வெடிக்கட்டும்

சிநேகிதன் அக்பர் said...

கூடிய விரைவில் நல்ல நிலையை அடைய அனைவரும் பிரார்த்திப்போம்.

Admin said...

//கும்மாச்சி கூறியது...
மட்டகளப்பு சந்துரு உங்கள் மக்களின் வேதனை விரைவில் தீர எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறோம்.//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கும்மாச்சி...

Admin said...

//நேசமித்ரன் கூறியது...
ஏன் போட முடியாது என் தளம் வாசிப்பவர் நீங்கள்
உங்களுக்குத் தெரியாத நண்பா..
கவிதை அருமை..!//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நேசமித்ரன்..

Admin said...

//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
என்ன செய்ய .. எம்மால் அனுதாபப்படத்தான் முடியும் இப்போது..//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

Admin said...

//siruthaai கூறியது...
மீனவர்களை எடுத்து கொள்ளுங்கள்.இதுவரை சற்றொப்ப 410 தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தமிழ் இனப்படுகொலை தொடர்கிறது. இந்தியக் கப்பற்படையோ இந்திய அரசோ சிங்களக் கப்பற்படைக்கு எதிராக மறுநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே ஏன்
பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் இந்தி யத் தோட்டாக்கள், தமிழகத் தமிழனை சுட்டுக் கொல்லும் சிங்களவனை நோக்கி ஒரு முறையாவது பாய்ந்திருக்கிறதா ஏன் தமிழாகளிடம் இந்த பாகுபாடு சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது. ஈழத் தமிழர்கள்பால் இந்திய ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் அணுகுமுறையும் பகைமை நஞ்சு சார்ந்ததுதான்இந்திராகாந்தி ஆட்சிக் காலமானாலும், அவர் தந்தையார் நேருவின் ஆட்சிக் காலமானாலும், இந்திராவின் மகன், மருமகள், பேரன் ஆட்சிக் காலமானாலும், வாஜ்பாயி ஆட்சிக் காலமானாலும் இந்திய ஆளும் வர்க்கத்தினர் தமிழகத் தமிழர்களை சந்தேகப் பட்டியலில் வைத்துக் கண்காணிப்பதிலும், தமிழர்களைப் பகைவர்களாகக் கருதுவதிலும் மாற்றமில்லை. ஈழத் தமிழர்களையும் அதே அளவுகோல் கொண்டுதான் பார்க்கிறார்கள்இந்த பாகுபாட்டைத் தான் இந்தி ய தேசியம் என்கிறோம். தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.அதாவது ஏனைய பொருளாதார வளங்களுக்கே தமிழரும் தமிழ்நாடும் தேவை படுகிறாரகள்.ஆக இங்கு தமிழ்நாட்டில கட்சி நடத்தும் அனைவருக்கும் தெரியும் நாங்கள் எச்சில் இலைதான் என.
தமிழ் இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் தமிழகத்தின் அனைத்து தேர்தல் அரசியல் கட்சிகளும் தில்லி ஏகாதிபத்தியத்தின் கைகூலிகள்தான் எனவும், தில்லி ஏகாதிபத்தியத்தின் கூட்டுக் கொள்ளையர்கள் தான் எனவும் தற்போதைய சமூக நிகழ்வுகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த இந்தி யத் தேசியத்தில் இருந்து கொண்டு, தமிழருக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை தேர்தல் அரசியல் கட்சிகளை தமிழ் மக்கள் இனங்காண வேண்டும். மாற்றத்திற்கு வழி தமிழ்த் தேசியமே என்பதை உணர வேண்டும். இந்தி யத் தேசியம் பேசி இனியும் ஏமாந்து விடக் கூடாது. தமிழர்களே நன்றாக யோசித்து பாருங்கள். எங்கோ வடநாட்டில் இருக்கும் பனியாவின் மகன் மகளுக்கெல்லாம் முடி சூட்டு விழா நடத்தும் கங்காணிக் கட்சியில் இருந்து கொண்டு எம் தமிழினத்திற்கு துரோகம் இழைக்காதீர். என்னை கேட்டால் இந்த இழவு பிடித்த இந்தி தேசியமே தேவை இல்லை ..தமிழன் சூடு சொரணையோடு வாழ தனிதமிழ்நாடே தீர்வு நானும் என்னால் முடிந்த அளவு பிரச்சாரத்தினை ஆரம்பித்துவிட்டேன்..வீர தமிழினத்திற்கு தலாய்லாமா போன்று இன்னும் 50,60 வருடங்கள் போராடவேண்டிய அவசியம் இல்லை என்பதே எனது கருத்தாகும் ..நமக்கு அறிவியல் ,ரசாயன.அணுகுண்டு போன்ற அறிவு தேவை ஏற்படுகிறது. எவனும் இங்கு இப்போது ஏசு போன்று ஒரு கன்னத்தில் அறைந்தால். என்று திரிவதில்லை வலிந்தவன் வாழ்வான் இதுவே உலக கோட்பாடு எனவே நாமும் நமது பிள்ளைகளுக்கு அணு ஆயுத வல்லமையை ஊட்டுவோம்.. எதிர்ப்பவன் எவனாக இருந்தாலும் அவன் தலையில் அது கட்டாயம் வெடிக்கட்டும்//



வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

Admin said...

///அக்பர் கூறியது...
கூடிய விரைவில் நல்ல நிலையை அடைய அனைவரும் பிரார்த்திப்போம்.//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அக்பர்...

அ.மு.செய்யது said...

உதட்டில் புன்னகை புதைத்தோம்

உயிரை உடம்புக்குள் புதைத்தோம்

வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்...

நேரிலிருந்து பார்த்தவர்களின் மனநிலையை வலியுடன் கொணர்ந்திருக்கிறீர்கள் சந்ரு.

Admin said...

//அ.மு.செய்யது கூறியது...
உதட்டில் புன்னகை புதைத்தோம்

உயிரை உடம்புக்குள் புதைத்தோம்

வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்...

நேரிலிருந்து பார்த்தவர்களின் மனநிலையை வலியுடன் கொணர்ந்திருக்கிறீர்கள் சந்ரு.//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அ.மு.செய்யது...

Subankan said...

:-(((

எதையும் சொல்லும் நிலையில் நான் இல்லை, அப்படி இருந்தது கவிதை. ஒருமுறை தட்டிப் பார்த்துவிட்டது.

Admin said...

// Subankan கூறியது...
:-(((

எதையும் சொல்லும் நிலையில் நான் இல்லை, அப்படி இருந்தது கவிதை. ஒருமுறை தட்டிப் பார்த்துவிட்டது.//


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சுபாங்கன்....

Post a Comment