Wednesday 22 June 2011

காம லீலைகள் அரங்கேறும் களம்



இணையத்தினைப் பொறுத்தவரை நல்ல பல விடயங்களுக்காக பயன்பட்டாலும் தீயபல விடயங்களும் இடம்பெறாமலும் இல்லை. இது ஒவ்வொருவரும் இணையத்தினைப் பயன் படுத்தும் நோக்கத்தினைப் பொறுத்தது.

 இன்று சமூகத்தளங்களின் பயன்பாடு அதிகரித்தவிட்ட இந்த நிலையில். நல்ல பல விடயங்கள் இந்த சமூகத்தளங்கள் மூலமாக நடந்தேறி இருக்கின்றன. பல நல்ல நட்புக்கள் கிடைத்திருக்கின்றன. பல திருமணங்கள் நடந்திருக்கின்றன. பல குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன.

இது ஒரு புறமிருக்க நல்ல விடயங்களுக்கு இந்த சமூகத்தளங்களை பயன்படுத்துவோர் ஒரு புறமிருக்க இன்னொரு புறத்தில் பல காம லீலைகள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன.

இந்த சமூக இணையத்தளங்களில் சிலர் தமது காம வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளும் ஒரு தளமாக பயன் படுத்திக் கொள்கின்றனர். இதில் சாதாரண ஒரு மனிதனில் இருந்து பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் மக்கள் மத்தியிலே நன்மதிப்பைப் பெற்றவர்களும் இல்லாமல் இல்லை.

இந்த சமூகத்தளங்களிலே அரட்டைகளில் ஈடுபடுபவர்கள் தமது காம வேட்கைகளை தீர்த்துக் கொள்ள குரல் வீடியோ அரட்டைகளை நாடுகின்றனர்.

ஒரு நண்பியை இணைத்துக் கொண்டால் அவரோடு சில நாட்கள் சாதாரணமாக உரையாடுவதும் பின்னர் அவர்களை தம் வசப்படத்தி வீடியோ மற்றும் குரல் அரட்டைகளை செய்து வருகின்றனர்.

அதனோடு பலர் நின்று விடுவதில்லை நேரடியாகக்கூட அவர்கள் சந்தித்து தமது காமத்தை தீர்த்துக் கொள்கின்றனர்.

காம உணர்ச்சி என்பது அனைவருக்கும் இருக்கின்றது அவற்றை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பலர் கட்டுப்படுத்த முடியாமல் வரம்பு மீறுபவர்களும் இருக்கின்றனர்.

பெண்களைப் பொறுத்தவரை கட்டுப்படுத்தும் தன்மை அதிகம் என்று நினைக்கின்றேன். இணைய அரட்டையிலே நண்பர்களாக இருக்கின்ற ஒரு ஆணும் பெண்ணும்  பேசுக்கொள்கின்றபோது அந்த அண் பெண்ணிடம் செக்ஸ் கதைகளை கதைக்க முற்படும்போது. அந்தப் பெண் நல்ல நடத்தை உள்ள ஒரு பெண்ணாக இருப்பினும் சந்தர்ப்ப சூழ்நிலையில் அவளும் அதற்கு சம்மதிக்கின்றாள்.

அரட்டையிலே அவள் இருக்கின்ற சூழ்நிலையைப் பொறுத்து அது அமைகின்றது. எப்படிப்பட்ட ஒருவராக இருந்தாலும் ஆசை என்பது வந்துதானாகும். நல்ல நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றபோது நண்பர் கேட்கின்றபோது மறுத்துக் கொள்ள முடியாமல் சம்மதித்தவர்களும் இல்லாமல் இல்லை.

நானும் பல சமூகத்தளங்களிலே பெண் பெயரிலே இருக்கின்றேன். ஏன் என்று கேட்கின்றிங்களா? புலனாய்வு வேலைகள் செய்வதென்றால் நமக்கு றொம்ப பிடிக்குமே அதுதான்.

பல முக்கியமானவர்களை நண்பர்களாக இணைத்திருக்கின்றேன். சமூகத்துக்கு நலலதைச் செய்கின்றேன். நல்லதை எழுதுகின்றேன். என்று சொல்பவர்கள் பலர் என்னுடன் (பெண் பெயருடைய என்னுடன்) நண்பர்களாக இருக்கின்றனர்.

அவர்களா இவர்கள் என்று பல தடவை நான் யோசித்ததுண்டு. அவர்கள் மீதிருந்த நல்லலெண்ணம் இல்லாமல் போய்விட்டது. உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி என்பது போன்று இருக்கின்றது அவர்களின் செயல்.

சில வேளைகளில் அவர்கள் பற்றிய விடயங்களை வெளியிடலாம் என்று நினைப்பதுண்டு.

அரட்டைக்கென்று இருக்கின்ற சில இணையத்தளங்களிலே நான் அவ்வப்போது வலம் வருவதுண்டு அதுவும் பெண் பெயரிலே. அங்கே நடை பெறுகின்ற விடயங்களை அறியவேண்டும் என்பதற்காக. அந்த அரட்டை இணையத்தளங்களிலே செக்ஸ் அரட்டைக்கு மட்டுமே அதிகமானவர்கள் வருகின்றனர்.

அந்த இணையத்தளங்களில் பெண் பெயரில் சென்றதுமே அங்கே அரட்டையில் இருக்கின்ற எல்லோரும் எங்களுடன் அரட்டைக்கு வருவார்கள் எவரும் நல்ல விடயம் பேசமாட்டார்கள். அவர்கள் போடுகின்ற முதல் வசனம் செக்ஸ் பேச முடியுமா? என்னை பார்க்கப் போறிங்களா? உங்களைப் பார்க்கலாமா?

இந்த அரட்டை இணையத்தளங்களிலே பல ஆண்களும் பெண்களும் செக்ஸ் அரட்டை செய்வதற்கென்றே வருகின்றனர்.

எப்படியெல்லாம் சமூகம் சீரழிகின்றது. சீரளிக்கப்படகின்றது. சமூகத்தை திருத்தவதாக. சமூகத்துக்காக செயற்படுவதாக இருந்து திரைமறைவில் காம லீலைகளில் ஈடுபடுபவர்களே திருந்துங்கள். எமது சமூகம் சீரழிகிறது.

நீ நல்லவனா என்று கேட்க வேண்டாம்.

எம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்வோம் 


இதனையும் பார்க்கலாம்.

இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

17 comments: on "காம லீலைகள் அரங்கேறும் களம்"

Mathuran said...

நல்லதொரு விடயத்தை பற்றி அலசியுள்ளீர்கள்..

இன்று என் பதிவில்
தலயா? தளபதியா? மோதிப்பாத்திரலாமா?

Mathuran said...

//அரட்டைக்கென்று இருக்கின்ற சில இணையத்தளங்களிலே நான் அவ்வப்போது வலம் வருவதுண்டு அதுவும் பெண் பெயரிலே.///

இந்த கட்டுரைக்காக கடுமையாக உழைத்திருக்கிறீர்கள் போலுள்ளது

ஸ்ரீராம். said...

உண்மைதான்...

Anonymous said...

நாசமாப் போச்சு !!! நாடு உருப்பட்ட மாதிரி தான் .. இதுக் குறித்த விழிப்புணர்வு பதிவுக்கு மிக்க நன்றிகள் சகோ.

Unknown said...

உண்மை உண்மை..நீங்கள் சொவது உண்மை..
நானும் இவ்வாறு ஆராச்சி செய்திருக்கிறேன்..
சமூகத்தில் இன்னொரு பக்கமும் இருக்கிறது!

Anonymous said...

அதனோடு பலர் நின்று விடுவதில்லை நேரடியாகக்கூட அவர்கள் சந்தித்து தமது காமத்தை தீர்த்துக் கொள்கின்றனர். //ம்ம் இவ்வாறு பல சம்பவங்களும் நடந்துள்ளது ...

Anonymous said...

நல்ல பதிவு பாஸ்......

நிரூபன் said...

எம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்வதற்கேற்ற ஒரு பதிவினைத் தந்திருக்கிறீங்க.

நீங்க சொல்வது போல நானும் ஒரு சில இடங்களில் பெண் பெயரில் புலனாய்வு செய்திருக்கிறேன்.

ஹி....ஹி...

மாணவன் said...

எம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்வோம்...

well said...

Admin said...

//மதுரன் கூறியது...

நல்லதொரு விடயத்தை பற்றி அலசியுள்ளீர்கள்..

இந்த கட்டுரைக்காக கடுமையாக உழைத்திருக்கிறீர்கள் போலுள்ளது//

ம் நிறையவே புலனாய்வு வேலைகளைச் செய்திருக்கின்றேன்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//ஸ்ரீராம். கூறியது...

உண்மைதான்...//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//இக்பால் செல்வன் கூறியது...

நாசமாப் போச்சு !!! நாடு உருப்பட்ட மாதிரி தான் .. இதுக் குறித்த விழிப்புணர்வு பதிவுக்கு மிக்க நன்றிகள் சகோ.//

நாடு மட்டுமல்ல..சமூகமே உருப்பட்டமாதிரித்தான்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//மைந்தன் சிவா கூறியது...

உண்மை உண்மை..நீங்கள் சொவது உண்மை..
நானும் இவ்வாறு ஆராச்சி செய்திருக்கிறேன்..
சமூகத்தில் இன்னொரு பக்கமும் இருக்கிறது!//

நீங்களுமா? அப்போ பதிவர்கள் எல்லோரும் நல்ல ஆராட்சி செய்கின்றனர்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//கந்தசாமி. கூறியது...

அதனோடு பலர் நின்று விடுவதில்லை நேரடியாகக்கூட அவர்கள் சந்தித்து தமது காமத்தை தீர்த்துக் கொள்கின்றனர். //ம்ம் இவ்வாறு பல சம்பவங்களும் நடந்துள்ளது ...//

நமக்கு தெரிந்து பல.. தெரியாமலும் பல...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

// நல்ல பதிவு பாஸ்......

23 ஜூன், 2011 12:10 am
நீக்கு
பிளாகர் நிரூபன் கூறியது...

எம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்வதற்கேற்ற ஒரு பதிவினைத் தந்திருக்கிறீங்க.

நீங்க சொல்வது போல நானும் ஒரு சில இடங்களில் பெண் பெயரில் புலனாய்வு செய்திருக்கிறேன்.

ஹி....ஹி...//

அப்போ பதிவர்கள் பலர் புலனாய்வாளர்களாகவும். ஆராட்சியாளர்களாகவும் இருக்கின்றனர்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//மாணவன் கூறியது...

எம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்வோம்...

well said...//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Jeyamaran said...

Kalakkuringa Shanthru........
Migavum nalla pathivu........

HiFrieds Network

Post a Comment