Saturday 25 June 2011

காதலிப்பவர்களை எந்த பகுதிக்குள் சேர்ப்பது?

எனக்கு நீண்ட நாட்களாக இருக்கின்ற சந்தேகம். கல்யானம் முடித்தவர்கள் கல்யாணம் முடிக்காதவர்கள் என்று இரண்டு பிரிவு இருக்கின்றது. இதில் காதலித்துக் கொண்டிருப்பவர்களை எந்தபகுதிக்குள் அடக்குவது.

ஊரில் விழையாட்டுப் போட்டிகள்  நடைபெறும்போது கயிறு இழுத்தல் போட்டிகள் இடம்பெறும். திருமணமான ஆண்களுக்கும் திருமணமாகாத ஆண்களுக்கும் போட்டி நடைபெறும்.

 இதில் காதலித்திருப்பவர்கள். காதலித்து திருமணம் நடைபெறாமல் காதலி வீட்டுக்கு போய் வருபவர்கள். (என்னைப் போன்றவர்கள் :) )  எந்த அணியில் சேர்வது என்பதுதான் பிரச்சினை.

கயிறு இழுத்தல் போட்டியின்போது இவர்களை எந்த பகுதிக்குள் சேர்ப்பது என்று பிரச்சினைகள் வருவதுண்டு.  போட்டியை இரத்து செய்த சம்பவங்களும் இதனால் இடம்பெற்றிருக்கின்றன.

காதலிப்பவர்கள் திருமணமாகாத அணியில் சேர்ந்து விடுவார்கள். திருமணமான அணியினர் அவர்களை திருமணமாகாத அணியில் சேர விடமாட்டார்கள். இதில் காதலிப்பவர்கள் காதலி வீட்டுக்கு போய் வருபவர்கள் இருப்பர். ஆனால் திருமணமாகி இருக்காது.

இவர்களை எந்த பகுதிக்குள் சேர்ப்பது....

பட உதவி -: கூகிள்

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

12 comments: on "காதலிப்பவர்களை எந்த பகுதிக்குள் சேர்ப்பது?"

Unknown said...

யோவ்....பேசிக்கலி என்ன பிரச்சனை??
நம்மள மாதிரி யூத்த பார்த்தா பொறாமையா இருக்கா??
ஹிஹி என்ன செய்யுறது பாஸ்...
இப்போ உங்களுக்கு நாப்பத்தஞ்சு வயசு...எல்லாம் கடந்து போச்சு!!

Admin said...

//மைந்தன் சிவா கூறியது...

யோவ்....பேசிக்கலி என்ன பிரச்சனை??
நம்மள மாதிரி யூத்த பார்த்தா பொறாமையா இருக்கா??
ஹிஹி என்ன செய்யுறது பாஸ்...
இப்போ உங்களுக்கு நாப்பத்தஞ்சு வயசு...எல்லாம் கடந்து போச்சு!!//

உங்களைப் போண்ற காதலிக்கிறவங்கள எந்த பகுதிக்குள் அடக்குவது என்பதுதான் பிரச்சினை..

நீங்க யூத்தா? அப்போ எங்க அப்பப்பாவும் யூத்துதான்.

நான் இப்பதான் சின்னப் பையன்.

உங்க மகனின் வயது இப்பதான் எனக்கு... :)

Mahan.Thamesh said...

நண்பா நல்ல சந்தேகம் தான் உங்களுக்கு ,

Admin said...

//Mahan.Thamesh கூறியது...

நண்பா நல்ல சந்தேகம் தான் உங்களுக்கு //

பார்த்திங்களா எப்படியெல்லாம் சந்தேகம் வருதென்று..

கூடல் பாலா said...

இது சர்வதேச அளவில் ஒரு மிகப்பெரிய பிரச்சினை?!

Admin said...

//koodal bala கூறியது...

இது சர்வதேச அளவில் ஒரு மிகப்பெரிய பிரச்சினை?!//

அப்படியா எனக்கு இன்றுதான் தெரியும்..

Admin said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

ரைட்டு..//

ரைட்டு நண்பா..

சுதா SJ said...

ஹா ஹா
நல்ல கவலை உங்களுக்கு பாஸ்,
நியாயமான கவலைதான்

Admin said...

//துஷ்யந்தன் கூறியது...

ஹா ஹா
நல்ல கவலை உங்களுக்கு பாஸ்,
நியாயமான கவலைதான்//

உங்களை எந்த வகைக்குள் சேர்ப்பது என்பதுதான் என் கவலை....

அமுதா கிருஷ்ணா said...

ஸ்ஸ் அப்பா கண்ணை கட்டுதே..

Post a Comment