Saturday 22 October 2011

கிழக்கு மக்கள் எப்போதும் கையேந்தும் நிலையிலேயே இருக்கவேண்டும் என்பதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் விருப்பம்

அண்மையில் ஓர் பத்திரிகையிலே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் அறிக்கை அரசனுமான அரியனேந்திரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார், அவுஸ்ரேலியாவிலே இருக்கின்ற வடமாகாண மக்கள் ஒன்றியம் ஒன்று கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்ற பல செயற்பாடுகளைச் செய்திருக்கின்றார்கள் என்று. அதுவும் வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழ பிரதேசம் என்பதனாலே தான் அவர்கள் தொடர்ந்து எமது மாகாணத்திற்கு உதவி செய்து கொண்டிருக்கின்றார்கள்.  எனவே நாம் வடக்கு கிழக்கை பிரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலே குறிப்பிட்டுள்ள அவுஸ்ரேலியாவில் உள்ள ஓர் வடமாகாண அமைப்பு வழங்கிய நிதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓர் பாராட்டுவிழாவில் கலந்து கொள்ளும் போதுதான் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ஏன் இவர்களுக்கு கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட பல அமைப்புக்கள் இன்னமும் வெளிநாட்டிலிருந்து கொண்டு பல்வேறு உதவிகளை எமது மாவட்டத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஏதாவது கொடுத்தால் கணக்கு கேட்டுவிடுவார்கள் என்ற பயம்.
நல்ல ஒரு உதாரணம் கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது எமது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் லண்டனுக்குச் சென்று எமது மாவட்டத்திலே பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு நிவாரணநிதி  சேகரித்தார்;.  மிகவும் பெரியதொரு தொகைப்பணத்தை அங்குள்ள எமது மாகாண மக்கள் சேர்த்துக் கொடுத்திருந்தார்கள். ஆனால் அதற்கு எந்தவொரு கணக்கறிக்கையும் இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லையாம்.
இதனால்   அப்பணங்களை சேகரித்து அனுப்பிய அந்த அமைப்பின் தலைவர் ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறார்.  கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற ஒரு முக்கிய அரசியல் பிரமுகருக்கு, அதற்கு அந்த அரசியல் பிரமுகர் குறித்த அந்த ஈமெயிலுக்கு பதிலளிக்கையில் இதனை  நான் விசாரனை செய்யமுடியாது. வெளியில் இதுபற்றி நான் மக்களுக்கு தெரியப்படுத்தினால் அது அரசியல் பழிவாங்கல், பொய்ப்பிரச்சாரம் என்று கூறுவார்கள்.  எனவே பாவம் அந்த உதவி செய்த மனிதர். அவர் சாதாரணமானவர் அல்ல அவர் ஒரு டாக்டர்;, தற்போது மனம் நொந்து போய் இருக்கின்றார்.
இவ்வாறான செயற்பாடுகளினால் எமது மாகாணத்தவர்கள் எமது மாவட்டத்திற்கு செய்கின்ற உதவிகளும் இல்லாமல் போகின்றது. இத்தனை சாகசங்களையும் புரிந்த அந்த ஆசாமி வேறுயாருமல்ல நெற்றியில் பட்டையும் களுத்தில் உருத்திராக்கக் கொட்டையும் அணியும் அந்த ஆசாமிதான். இந்த ஆசாமியால் கையூட்டு செய்யப்பட்ட தொகை சுமார் 3கோடிரூபாய் ஆகும்.
எனவே தொடர்ந்து எமது மாவட்ட மக்களை கையேந்துகின்ற சமூகமாகவே வைத்திருக்க விரும்புகின்ற இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு மட்டக்களப்பான் என்ற வகையில் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். அதாவது தற்போது எமது மாவட்ட மக்கள் தங்களது பொருளாதாரத்தை தாங்களே ஈட்டி சுயகௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். மீண்டும் மீண்டும் யாரையோ நம்பி இருக்கவேண்டிய தேவயில்லை.
அவர்கள் தங்களது மாவட்டத்திலே இருக்கின்ற வளங்களை பூரண பயன்பாடுள்ளதாக மாற்றி முழுமையான உற்பத்தியினைப் பெற்று பொருளாதாரத்தை உயர்த்தி வாழ்வாதாரத்தில் மேலோங்க முயற்சிப்பார்கள். நீங்கள்தான் தேவையற்ற பசப்பு வர்த்தைகளை கூறி மீண்டும் மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டாம் என்பது எனது தயவான வேண்டுகோள். நான் சிந்திப்பது உன்மையான விடையம் இதை நீங்கள் ஏன் சிந்திக்க வில்லை? மிகவும் கவலையாக உள்ளது. எமது மாவட்ட மக்களை நினைத்தால்.
தொடரும்………….

 நன்றிகள் மீன்மகள் 

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கிழக்கு மக்கள் எப்போதும் கையேந்தும் நிலையிலேயே இருக்கவேண்டும் என்பதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் விருப்பம்"

Post a Comment