Thursday 20 May 2010

யாழ்தேவியின் கடிதமும் என் பதிலும்

யாழ்தேவி திரட்டி தொடர்பாக நான் இரண்டு இடுகைகளை இட்டிருந்தேன். அவற்றுக்கு விளக்கமளித்து யாழ்தேவி நிர்வாகத்திடமிருந்து சற்று நேரத்துக்கு முன்னர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருக்கின்றது அந்த மின்னஞ்சலையும் எனது விளக்கத்தையும் தருகிறேன்.

வணக்கம் சந்ரு….

யாழ்தேவி இணையம் தொடர்பாக தங்களுடைய குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களை அண்மைக்காலத்தில் காணக் கிடைத்தது. மகிழ்ச்சி.

யாழ்தேவியில் தாங்கள் நட்சத்திரமாக அறிவிக்கப்பட்டு குறைந்தது 4 மாதங்களாவது சென்றிருக்கும். ஆனால், இன்னும் தங்களை தினக்குரல் பத்திரிகையில் அறிமுகப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை தாங்கள், பதிவர்கள் உள்ளிட்ட பலரிடமும் முன்வைத்துள்ளீர்கள். அது தொடர்பில் நாங்கள் அறிவோம்.

யாழ்தேவியில் நட்சத்திரமாக அறிமுகமாகும் பதிவர் அடுத்த வாரம் தினக்குரல் பத்திரிகையில் அறிமுகப்படுத்தப்படுகிறார். அதற்கு அந்த நட்சத்திரப்பதிவர் நட்சத்திர வாரத்திலேயே ( முடிவடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அதாவது குறைந்தது சனிக்கிழமைக்கு முன்) தங்களுடைய விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுது தான் தினக்குரல் பத்திரிகை ஆசிரிய பீடத்துக்கு நட்சத்திரத்தின் விபரங்களை அனுப்ப முடியும். (தினக்குரல் பத்திரிகைக்கு குறைந்தது 6 நாட்களுக்கு முன்னர் விபரங்களை அனுப்ப வேண்டும்). இவைதான் நட்சத்திர வாரத்தில் கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறை.

தாங்கள் நட்சத்திரமாக அறிவிக்கப்பட்டதும் விபரங்களையும், படத்தினையும் அனுப்புமாறு கோரியிருந்தோம். ஆனால், நீங்கள் அனுப்பவில்லை. அதுதவிரவும், பதிவர் சந்திப்பொன்றில் தங்களை நேரில் சந்தித்த நான் (புருஜோத்தமன் தங்கமயில்) விபரங்களை சீக்கிரத்திலேயே அனுப்புமாறு கோரியிருந்தேன். அப்பொழுதும் நாட்கள் சில கடந்து விட்ட நிலையிலேயே தங்களுடைய விபரங்களை அனுப்பியிருந்தீர்கள். அப்பொழுது தினக்குரல் பத்திரிகைக்கு நட்சத்திரத்தின் விபரங்களை அனுப்பவேண்டிய காலக்கெடு முடிந்து விட்டது. அதனாலேயே, யாழ்தேவியில் ஆரம்ப காலத்தில் நட்சத்திரமாக இருந்த பதிவர் ஒருவர் அறிமுகப்படுத்தப்பட்டார்.

தற்பொழுதும், சில நட்சத்திர பதிவர்கள் விபரங்களை காலம் தாழ்த்தி அனுப்புவதால் பழைய நட்சத்திரங்களை தினக்குரலில் அறிமுகப்படுத்தி வருகிறோம். அவர்கள் தினக்குரலில் அறிமுகமாகியிருக்கவில்லை. அவை, ஒரு கிரமத்திலேயே நடைபெறுகிறது. அப்படியே தங்களுடைய விபரங்களும் எம்முடைய சேமிப்பில் இருக்கிறது. காலக் கிரமத்தில் தாங்களும் அறிமுகப்படுத்தப்படுவீர்கள். நீங்கள் யாழ்தேவியில் இணைத்தாலும், இணைக்காவிட்டாலும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் அது நடக்கும்.

அத்துடன், தங்களுடைய பதிவுகளை இணைக்க முடியவில்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்பில் சில தொழிநுட்ப காரணங்கள் இருக்கலாம். அது தொடர்கில் எங்களுக்கு நீங்கள் எந்த தருணத்திலும் அறியத்தரவில்லை. அதாவது, யாழ்தேவி இணையத்தில் பக்க வடிவமைப்பு எமது வடிவமைப்பாளர்களினால் மீளமைக்கப்பட்டது. அதனால், பல பதிவர்களின் பதிவுகளை இணைக்க முடியாமல் இருந்தது. அவர்கள் எமக்கு அறிவுறுத்தியதன் பெயரில் அது திருத்தப்பட்டது. தங்களுடைய பதிவுகளை இணைக்க முடியவில்லை என்று தாங்கள் யாழ்தேவிக்கு அறிவிக்கவேயில்லை. (ஆனால், யாழ்தேவியில் நீங்கள் தற்போது பதிவுகளை இணைப்பதில்லை என்று சிலரிடம் கூறிய விடயமும் எம் காதுகளுக்கு கிடைத்தது. அது தொடர்பில் நாங்கள் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில், சில முறையற்ற வார்த்தை மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு நாங்கள் பதிலளிப்பதில்லை.)

யாழ்தேவி இணையம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்பிலிருந்த சந்ரூ என்கிற பதிவர், தன்னுடைய அறிமுகம் தினக்குரலில் ஏன் வரவில்லை என்று எங்களிடம் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சலினூடாகவே கேட்டிருக்கலாம். அதுதானே சிறந்த பண்பு. அதை விடுத்து எங்களின் மீது நியாயமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.

யாழ்தேவி இணையம் தொடர்ந்தும் தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுக்கும். விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் எம்மை வளப்படுத்த உதவினால் அதனை நாங்கள் உள்வாங்கத் தயாராகவே இருக்கிறோம்.

(கடந்த இரு வாரங்களாக ஒரு பதிவரே நட்சத்திரமாக அறிவிக்கப்பட்டதற்கு யாழ்தேவியின் சில மேம்படுத்தல் வேலைகளே காரணமாக இருந்தது. அது, யாழ்தேவியின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியபீடம் கலந்தாலோசித்து எடுத்த முடிவே)

அரசியல் சமூக இலக்குகளை நோக்கி பயணிக்கிற பதிவர்களையும் யாழ்தேவி தொடர்ந்தும் இணைத்து வருகிறது. ஒவ்வொரு தனி நபரின் அரசியல் மற்றும் சமூக விருப்பு வெறுப்புக்களில் யாழ்தேவி தலையிடுவதில்லை.

(இந்தக் கடிதத்தை தங்களுடைய வலைப்பக்கத்தில் வெளியிட கோருகிறோம். தங்களுடன் உரையாடுவதற்காக அலைபேசியில் அழைத்தபோதும் அது சாத்தியமாகவில்லை)

நன்றி,

புருஜோத்தமன் தங்கமயில்.
யாழ்தேவி இணையம்.

--
PURUJOTHTHAMAN THANGAMAYL (PRAVEEN)
Editor,
WWW.YAALDEVI.COM
+94773236285

நான் நட்சத்திரமாக அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும் இன்னும் தினக்குரலில் பிரசுரிக்கப்படாமைக்கான காரணம் நான் எனது விபரங்களை காலம் தாழ்த்தி அனுப்பியதாக சொல்லப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக என்னுடைய பதிவுகளிலே சொல்லி இருக்கின்றேன்.

நான் நட்சத்திரமாக தெரிவு செய்யப்படும் நாளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னரே நான் நட்சத்திரமாக தெரிவு செய்யப்படுகிறேன் என்று மின்னஞ்சல் அனுப்பப் பட்டிருக்கின்றது. அந்தக் காலப்பகுதி நான் பதிவேளுதுவதிளிருந்து விலகி இருந்த காலம் ஏன் மின்னஞ்சல்களையும் பார்வையிட முடியாத நிலையில் இருந்தேன்.

நான் நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்ட விடயம் எனக்கு தெரியாது. நான் நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்ட அன்று காலையில் தங்க முகுந்தன் தொலைபேசியில் அழைத்து நட்சத்திரமானதுக்கு வாழ்த்த்துக்கள் என்றபோதுதான் விபரங்களை தங்க முகுந்தனிடமிருந்து அறிந்து கொண்டேன்.

நான் அந்தக் காலப்பகுதியில் வேறு இடத்தில் இருந்ததால் பதிவிட முடியாத நிலையில் இருந்தேன். பதிவர்களைப் பொறுத்தவரை பதிவு இடுதலோ   முழு நேரத் தொழிலல்ல. எப்பொழுதும் வலைப் பதிவோடு இருக்கப்போவதில்லை. பல நாட்களுக்கு இணையப் பக்கமோ, வலைப்பதிவு பக்கமோ வரமுடியாத நிலை இருக்கும்.

நட்சத்திரமாக தெரிவு செய்யப்படுகின்ற பதிவருக்கு ஒரு வாரத்துக்கு முன்னரோ அதற்கு முன்னரோ தெரியப்படுத்த வேண்டும் என்று யாழ்தேவி நிரவாகத்திடம் கேட்டு பல பதிவர்கள் ஆரம்ப நாட்களிலே பதிவிட்டிருக்கின்றனர்.

ஓரிரு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கின்றபோது பதிவர்கள் தங்களை ஆயத்தப் படுத்துவதிலே பல சிக்கல்கள் இருக்கின்றன. பதிவர்கள் முழுநேர தொழிலாக பதிவிடுதலை  செய்யவில்லை.

நட்சத்திரமாக நான் அறிவிக்கப்பட்ட காலத்தில் பல நாட்கள் நான் கொழும்பிலே இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது அதனால் என்னால் உடனடியாக என்னைப் பற்றிய விபரங்களை அனுப்ப முடியவில்லை.  என்னால் இணையப் பக்கமே வர முடியாமல் இருந்தபோது நான் நட்சத்திரப் பதிவராக அறிவிக்கப்பட்டதை ஓரிரு வாரத்துக்கு முன்னர் தெரியப் படுத்தாதது தவறா? பல மாதங்கள் கடந்தும் ஏன் இன்னும் தினக்குரலில் பிரசுரிக்கவில்லை?

யாழ்தேவியில் பதிவுகளை இணைக்க முடியாமைக்கு காரணம் சில மேம் படுத்தல்களால் பல பதிவர்கள் இணைத்துக் கொள்வதிலே சிக்கல் இருப்பதாக மின்னஞ்சலிலே சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விடயங்களை பதிவர்களுக்கு தெரியப் படுத்தி இருக்கலாம்தானே. யாழ்தேவி தொடர்பிலே அந்த பதிவர்கள் சந்தேகப்படவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

//(ஆனால், யாழ்தேவியில் நீங்கள் தற்போது பதிவுகளை இணைப்பதில்லை என்று சிலரிடம் கூறிய விடயமும் எம் காதுகளுக்கு கிடைத்தது. அது தொடர்பில் நாங்கள் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில், சில முறையற்ற வார்த்தை மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு நாங்கள் பதிலளிப்பதில்லை.) //

நான் எங்கேயும் எந்தப் பதிவரிடமும் முறையற்ற வார்த்தைப் பிரயோகத்தை மேட்கொள்ளவில்லை. நான் யாழ்தேவி தொடர்பிலே எவரிடமும் தவறாக கதைத்ததில்லை. எனக்கு தவறாக படுகின்றவைகளை பதிவிடுவேன். அதை விடுத்து எவரிடமும் பேசவேண்டிய அவசியமும் எனக்கில்லை.

சில பதிவர்கள் ஏன் யாழ்தேவியில் இணைப்பதில்லை என்று கேட்டபோது. நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை தினக்குரலில் பிரசுரிக்கவில்லை அதனால் நான் இணைப்பதில்லை என்று மட்டுமே சொல்லி இருக்கின்றேன். அதனைவிடுத்து தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை எங்கே பயன் படுத்தினேன் என்று சொல்லுங்கள். எந்த விடயத்துக்கும் தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை பயன் படுத்துவதில்லை.

நான் எனது முந்திய பதிவிலே சொல்லி இருந்தேன் ஏன் இரண்டு வாரங்கள் ஒருவர் நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்று பல பதிவர்கள் இதுவரை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்படாமல் இருக்கும்போது ஏன் ஒருவர் இரு வாரங்கள் நட்சத்திர பதிவராக இருக்க வேண்டும் இன்னொருவருக்கு இடம் கொடுக்கலாமே என்றுதான் சொல்லி இருக்கின்றேன். உங்கள் நிரவாகத்தின் முடிவுகளில் நான் தலையிட முடியாது.

முதலாவது பதிவர் சந்திப்புக்கு பின்னர் யாழ்தேவி தொடர்பாகா யாழ்தேவிக்கு எதிராக எழுதிய பதிவுகளுக்கு யாழ்தேவிக்கு அதரவாக கருத்துரையிட்டவர்களில் நானும் ஆனாலும் இலங்கைப் பதிவர்களின் திரட்டி என்று சொல்லிக்கொண்டு இலங்கைப் பதிவர்களை புறக்கணிப்பதை பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிட முடியாது. நானும் ஒரு இலங்கைப் பதிவர் என்ற ரீதியில். இலங்கைப் பதிவர்கள் எனும்போது இலங்கையில் இருக்கின்ற அத்தனை பதிவர்களையும்தான்  குறிக்கும்.

எனது பதிவுகளை யாழ்தேவியில்  இணைக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. இருந்தாலும் இலங்கை தமிழ் பதிவர்களின் திரட்டி என்று சொல்லிக்கொண்டு சில இலங்கைப் பதிவர்களை புறக்கணிக்கப் படுவதனையும் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. நானும் ஒரு இலங்கைப் பதிவர் என்ற ரீதியில்.

இன்று காலை 08 .21 க்கு யாழ்தேவி நிர்வாகத்திடமிருந்து ஒரு  அழைப்பு வந்தது அந்த நிலையில் எனக்கு தொலைபேசியை பதிலளிக்க முடியாத நிலையில் இருந்தேன். அழைப்பு வரும்போது யாழ்தேவியின் தொலைபேசி அழைப்பு என்பது தெரியாது எப்போது அவர்களின் மின்னஞ்சல் முலம்தான் அறிந்தேன்.

யாழ்தேவி தொடர்பாக நான் இட்ட இடுகைகள்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 comments: on "யாழ்தேவியின் கடிதமும் என் பதிலும்"

Anonymous said...

யாழ்தேவி அமைச்சர் டக்களசின் உதவியுடன் இயங்கும் திரட்டி அதில் எப்படி பிள்ளையானின் வலக்கரமான தங்களை இணைப்பார்கள்.

Post a Comment