Saturday 20 June 2009

தயாவின் உள்ளக் கீறல்கள்....

இந்தப்பதிவிநூடாக எனது நண்பரும் இளம் கவிஞருமாகிய அன்பு நண்பர் தயவினுடைய கவிதைகள் சிலவற்றை தர நினைக்கின்றேன்.

இவரைப்பற்றி சொல்வதென்றால் ஒரு இளம் கலைஞர் இவரது கவிதைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்து பலரது பாராட்டும் பெற்றது இவரது கவிதைகள் அனைவரையும் கவர்ந்தவை என்பது குறிப்ப்பிடத்தக்கது. விரைவில் இவரது பாடல்கள் அடங்கிய இறுவட்டு ஒன்று வெளிவர இருக்கின்றது.

இவரது கவிதைகள் எனது வலைப்பதிவிலும் அடிக்கடி உங்கலையும் மகிழ்விக்க இருக்கின்றது காத்திருங்கள்...

நட்பு

புல் நுனியில்பூத்த
பூவாய் - நம்நட்பு
மறைந்தாலும்துடிக்கும்
உன்இதயத்தில்
எந்தபூவையும் -ஒரு
ஓரத்தில் வைத்துக்கொள்....

குடை

வேணும் என்பதைமறைப்பதற்கும்
வேண்டாம்என்பதைக்காட்டுவதட்கும்
இறைவன் கொடுத்தகொடை
இந்த குடை...

செருப்பு

கெட்டவற்றை
தன்னுள்
அடக்கிக்கொண்ட
தன்னிகரில்லா
தலைவன்....


என்னவள்

கண்ணாடி
முன்னின்று
என்னவளை
காட்டு என்றால் _
என் முன்னாடி
உன் ஹார்ட்டை (hart)
காட்டு என்கிறது....?


குருவான குரல்

குயில்கள்
அனைத்தையும்
அழித்து ஒரு
குரல் செய்தேன்
அதுஉன்னைப்போல்
ஊமையாக இருப்பதேன்....


பாவ ஜென்மம்

முன் ஜென்மம்
உன் வீட்டில்
நாயாக இருந்தேனோ
என்னவெனில்
இப்போதும்உன்
பின்னே அலைகிறேன்...


Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தயாவின் உள்ளக் கீறல்கள்...."

Post a Comment