Friday 19 June 2009

இன்றைய இளைஐர்கள் போகிற போக்கில்...

இன்று நவின தொழினுட்ப வளர்த்சியினால் உலகம் சுருங்கிவிட்டது எனலாம்.நவின உலகுக்கு நாமும் மாறவேண்டி இருக்கின்றது. நவின உலகத்திற்கு ஏற்றாற்போல் மாறவேண்டும் என்பதற்காக மனம் போகிற போக்கிலும் கால் போற போக்கிலும் போக முடயுமா?....

இந்த நாகரிக உலகில் பெஷன் என்பது அனைவராலும் முணுமுணுக்கப்படும் ஒன்று. எதற்கு எடுத்தாலும் இதுதான் பெஷன் என்பார்கள். நவ நாகரிகத்துக்கு ஏற்றாற்போல் மாறவேண்டும் என்பதுக்காக பெஷன் என்று சொல்லும் எல்லா விடயங்களும் ஏற்றுக்கொள்ளத்தான் முடயுமா.

இந்த பெஷன் என்கின்ற நாகரிக மோகம் பலரை பாழாக்கிக்கொண்டு இருக்கின்றது. இந்த நாகரிக மோகத்தில் அதிகம் சிரளிக்கப்படுபவர்கள் இளைஜர்கள் என்றுதான் சொல்லலாம். இன்றைய இளைஜர்கள் நாகரிக மோகத்தால் தங்களது வாழ்க்கையை பாளாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். (நீங்க என்ன திட்டுறது புரியுது நம்ம யுவதிக்களும்தான் அவங்களுக்கு வேற பதிவு இருக்குங்க.)

நாகரிகம் என்கின்ற போர்வையில் இன்றைய இளைஜர்கள் மேல்நாட்டு நாகரிக மோகம் கொண்டு பல போதைப்பொருளுக்கு அடிமையாகி தாங்கள் மட்டுமல்ல சமுகததையும் சீரழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
மதுபானம் சிகரெட் கஞ்சா என்னும் பலவற்றுக்கு அடிமையாகி இருக்கின்றார்கள். இளையர்கள் மட்டுமல்ல பாடசாலை செல்லும் சிறுவர்களும் இதட்கு அடிமையாகிவிட்டதுதான் கவலைக்குரிய விடயம்.
எது எப்படி இருப்பினும் இவர்கள் மதுவுக்கு அடிமயாததனால் குடிக்கவும் குடித்தபின்னும் நடக்கும் திருவிழாக்களை பார்ப்போம்.

இவர்கள் குடித்தபின்னும் என்ன பாடு படுத்துகிறார்கள் தினமும் சாப்பிடுரான்களோ இல்லையோ குடித்துவிடுவாங்க அதுவும் சொந்த காசில் குடிப்பது குறைவு என்னைப்போல் அப்பாவிங்க மாடடுவாங்க (உண்மைதான் நான் நல்லவன் நம்புங்க) யாரை பிடிப்பது காசு பறிக்க என்று இருப்பாங்க சிலர மாலை 6 மணிக்கு பிறகு நல்ல நிலையில் இருக்கமாட்டார்கள். குடித்துவிட்டு எங்களை தூங்க விடுறாங்களா இல்லையே.

இன்னுமொரு நாகரிகம் இருக்கிறது என்ன ஒரு சின்ன விடயம் நடந்தாலும் பார்ட்டி போடவேண்டும். கல்யாணம் கட்டினால், குழந்தை பிறந்தால், குழந்தைக்கு பெயர் வைத்தால், வெளியூர் போனால், பரிட்சையில் சித்தி பெற்றால், ..........இன்னும் இருக்குங்க ஏன் யாராவது மரணமடைந்தால் அவரது உறவினர் பார்ட்டி போடா வேண்டும். என்ன பார்ட்டி என்று கேட்காதிங்க தண்ணி பார்ட்டிதான்.
இவர்களது இந்த செயல்களை பார்த்து மற்ற சிறுவர்களும் இவர்கள் பாதையில் செல்கின்றார்கள். இன்று சிகரெட் பிடிப்பதும் ஒரு நாகரிகமாக மாறிவிட்டது இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அனைத்தையும் சிந்தித்து நல்ல பழக்க வழக்கங்களை நல்ல சமுகத்தை சிரளிக்காத நாகரிகத்துக்கு இன்றைய இளயர்கள் மாறுவது நல்லதே.


Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "இன்றைய இளைஐர்கள் போகிற போக்கில்..."

Anonymous said...

இளைஞர்கள்?

Admin said...

உங்கள் வருகைக்கு நன்றி புகழினி.
தொடருங்கள்
இன்றைய இளைஞர்கள்???????? கேள்விக்குறிதான் திருந்துவார்களா????????????????

Post a Comment