Wednesday 24 June 2009

களுதாவளைப்பதிக்கு வாருங்கள் கவலைகள் மறக்கலாம்...


இப்பொழுது கிழக்கிலங்கையிலே வரலாற்றுப்பிரசித்தி பெற்ற ஆலயமாக மூர்த்தி தலம் தீர்த்தம் என்று முச்சிறப்புக்களும் ஒருங்கே அமையப்பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிளைளயார் ஆலய வருடாந்த அலங்கார உச்சவம் மிக விமர்சையாக இடம் பெற்றுக்கொண்டு இருக்கின்றது .

கடந்த 20 ம திகதி ஆரம்பமான திருவிழா எதிர்வரும் 29 .6 .2009 ஆனி உத்தர நட்சத்திரத்தில் தீர்த்த உற்சவத்துடன் இனிதே நிறைவுபெற இருக்கின்றது.


இந்த ஆலயத்தை பெறுத்தவரை பன்னெடுங்கால வரலாற்றை கொண்டுள்ளதோடு தம்மை நாடி வருவோர்க்கெல்லாம் வாரி வழங்கும் வள்ளலாகவும் இருக்கின்றார். இந்த ஆலயத்தின் வரலாற்றினை களுதேவாலயக் கல்வெட்டு விளக்கமாக சொல்கின்றது. இந்த ஆலயத்திலே தானாக தோன்றிய சுயம்புலிங்கம் கருவறையுள்ளே இருக்கிறது சுயம்புலிங்கமாக இருந்தாலும் விநாயகராக மக்கள் வழிபடுகின்றனர்.

இந்த ஆலயத்துக்கு நாள் தோறும் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இன, மத பேதமின்றி வருகை தந்து கொண்டு இருக்கின்றனர். மக்கள் வைக்கின்ற நேர்கடன்களை நிவர்த்தி செயும் பொருட்டு அதிகமான மக்கள் வருகை தருவது வழக்கம். பக்தர்கள் நேர்கடன் வைத்ததும் உடனடியாக தீத்து வைப்பவர் என்ற நம்பிக்கை மக்களுக்குண்டு அதுதான் உன்மையும்கூட.

வாய் பேசாத பிள்ளைகளை பேச வைக்கின்ற பெருமை படைத்தவர் இந்த பிள்ளையார். அதே போல் பல அற்புதங்கள் நிறைந்த ஆலயமாகவும் இந்த ஆலயம் இருக்கின்றது.

திருவிழாக்காலங்களில் சமய சம்மந்தமான பல கலை நிகழ்வுகள் இடம் பெறுவதோடு பிரதேசமே விழாக்கோலம் பூண்டிருக்கின்றது. இந்த ஆலயத்தை பற்றிய பாடல்கள் அடங்கிய பல பாடல் தொகுப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தஆலயத்திலே மாம்பழத்திருவிழா இடம் பெறுவது சிறப்பு அம்சமாகும் இந்த தொகுப்புக்கள் பார்ப்பதுக்கு என்று அதிகமான பக்தர்கள் வருவார்கள்.

இந்த ஆலயத்தை பற்றி கலாபூசணம் ஆறுமுகம் அரசரெத்தினத்தின் நவரசக் கதம்ப மாலை எனும் புத்தகத்திலிருந்து சில பாடல் வரிகளை தருகின்றேன்.

களுதாவளைப்பதிக்கு வாருங்கள்....


களுதாவளைப் பதிக்கு வாருங்கள் - உங்கள்
கவலைகளை கணபதியின் காதில் கூறுங்கள்
தொளுபவர்க்கும் அழுபவர்க்கும் வினைகள் நீக்குகிறார் - இங்கு
சுயம்புலிங்கராய் அமர்ந்து அருள் பொழிகிறார்

பிள்ளையாரை நம்பி வாருங்கள் - அவர்
பிள்ளையாகி மகிழ்ச்சி ஊட்டுவார்
துள்ளி ஓடும் எலியில் ஏறுவார் - அவர்
வள்ளலாகி வாரி வழங்குவார்.

கணங்களுக்கு நாதனாக அமர்ந்து இருப்பவர் - தன்னை
வணங்குவோர்க்கு வாழ்க்கையினை வசதி ஆக்குவார்
இணங்குவோர்க்கு நலன்கள் நாட்டுவார் - தன்னை
பிணங்குவோர்க்கு பிணிகள் காட்டுவார்.

கரத்தை நீட்டி கருணை கேளுங்கள் - ஐந்து
கரத்தை நீட்டி உரத்தை ஊட்டுவார்
சிரத்தையோடு சிரத்தைத தாழ்த்துங்கள் - கேட்கும்
வரத்தை தந்து பரத்தை காட்டுவார்

பெனையாக கொம்பை நாட்டினார் - எம்
ஊனை உருக்கும் திருமுறை எமக்கு காட்டினார்
ஆணையாககாட்டி ஓடினார்கள் - குற
வள்ளிமானை வேலன் கையில் ஊட்டினார்.
மேலதிக விபரங்களுக்கு இங்கு கிளிக் பண்ணுங்கள்...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

6 comments: on "களுதாவளைப்பதிக்கு வாருங்கள் கவலைகள் மறக்கலாம்..."

என்ன கொடும சார் said...

கந்துல - இராணுவ யானையின் கதை

http://eksaar.blogspot.com/2009/06/blog-post_24.html

Prapa said...

திருவிழாசிறப்புடன் நடந்தேற பிரார்த்திக்கிறோம் எமது குடும்பம் சார்பாக

Admin said...

உங்கள் வருகைக்கு நன்றி பிரபா தொடருங்கள்....

Admin said...

நம்ம வாரி வழங்கும் வள்ளலைப்பற்றி உங்களிடம் சொல்ல வேண்டுமா உங்கலிட்குத்தான் தேரியுமே...

கிள்ளிக்கொடுத்தாலும் அள்ளித்தருபவனல்லவா

Sinthu said...

சந்தர்ப்பம் கிடைத்தால் வராமலா போயிடுவோம்..

Admin said...

உங்கள் வருகைக்கு நன்றி சிந்து....


நிட்சயமாக எல்லோரும் வந்து தரிசிக்க வேண்டிய இடமல்லவா சிந்து...

ஏழை குரல் கேட்டவுடன் ஓடி வருவான் -அது
எது குறையானாலும் நீக்க வருவான்.....

Post a Comment