Thursday, 6 May 2010

மக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கம் - சந்திரகாந்தன்

கடந்த 01.05.2010 மேதினமன்று மட்டக்களப்பு பேருந்து தரிப்பிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரை .

தமிழர் பிரதிநிதித்துவத்தின் இருப்பை தக்க வைக்கவே நாம் தேர்தலில் தனித்த போட்டியிட்டோம்.கிழக்கு மாகண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்.

இம் மாநகரத்தில் பேருந்து நிலைய கல் நாட்டும் விழாவிற்கு தலைமை தாங்கி நடாத்துகின்ற மட்டக்களப்பு மாவட்ட மேயர் சிவகீத்தா பிரபாகரன் அவர்களுக்கும், இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைத்து மதப் பெரியார்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களான கௌரவத்திற்குரிய துரைரெட்ணம், கிருஸ்னாணந்தராஜா, பூ.பிரசாந்தன், மாசிலாமணி ஐயா அவர்களுக்கும், மாநகர சபை அரசியல் உறுப்பினர்களுக்கும், அரசாங்க அதிபருக்கும், பிரதேச செயலாளருக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்கும், ஊடகவியலாளர்களுக்கும், ஏனைய பிரமுகர்களுக்கும், கட்டட ஒப்பந்த காரர்க்கும் அனைவருக்கும் வணக்கம்.

இந்த அடிக்கல் நாட்டப்பட்டிருக்கும் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இது பாட்டாளி புரம் என்பதனாலும், இன்று பாட்டாளி தினம் என்பதனாலும் இந்த முக்கியத்தவம் வாய்ந்த நாளில் பஸ் பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கின்ற மகிழ்ச்சியான செய்தியோடு இந்த மட்டக்களப்பு மாநகரிலே பல்வேறு தரப்பட்ட அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் இவ்வேளையிலே, இன்று மட்டக்களப்பிலே பேருந்து நிலையம் மிக அழகாக, ஏனைய மாகாணத்திலிருக்கும் பஸ் பேருந்து நிலையத்தை ஒத்த பேருந்து தரிப்பிடம் ஒன்றை இங்கு எதிர்வரும் பத்தாம் மாதம் திறந்து வைக்கப்படும் என்ற நம்பிக்கை. அந்த காட்சியை நாமும் கண்டு கழிப்போம் என்ற சந்தோசமான நாளிலே இங்கு அமர்ந்திருக்கும் மட்டக்களப்பு வாழ் பெருமக்கள் ஒருவிடயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாங்கள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றால் அக்குழந்தையை அழகுபடுத்த வேண்டும், படிப்பிக்க வேண்டும் என்றெல்லாம் இருப்போம். அதே போன்றுதான் இந்த மட்டக்களப்பு மாவட்டம் மீன் மகள், வாவி மகள் என்று பேர் வாங்கிய இம் மாவட்டம் ஒரு அழகான மாவட்டமாக வரவேண்டும் எனறு பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றது. உண்மையிலே இது ஒரு அழகான மாநகரம். ஏதிர்காலத்தில் இதன் எழிச்சியோடு இதன் அடையாளங்களை காப்பாற்றிக்கொண்டு அழகு பெற வேண்டும் என்ற பெரு முயற்சி எனக்கு மாத்திரம் அல்ல அனைவருக்கும் இருக்கின்றது அதன் வெளிப்பாட்டு தன்மை மிகக் குறைவாக இருக்கின்றது என்பது அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

அந்த அடிப்படையில் கடந்த காலங்களில் முடிந்த அனைத்து பணிகளையும் செய்வதற்கு முன்வரவேண்டும். இந்த பேருந்து நிலையம் என்பது முன்னரும் அடிக்கல் நாட்டி கட்டப்பட்டிருந்தது. நான் நினைக்கின்றேன் 1979ம் ஆண்டு ராஜம் செல்வநாயகம் இருந்த காலப்பகுதியிலே இப்பொழுது அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற அமைச்சரான தயா என்கின்ற அவர்களால் அடிக்கல் நாட்டி கட்டப்பட்டதாக கதை கூறுகின்றது. இருந்தும் அந்த நேரத்திலே இருந்த பணவசதிக்கும், அந்த நேரத்தில் இருந்த தொழில் வசதிக்கும் ஏற்றவாறு அமைத்திருக்கின்றார்கள். அவர்கள் அந்த நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டம் அழகு பெற வேண்டும் என்ற முயற்சிக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும். தற்போது இருக்கின்ற நவீன உலகத்தில் எங்களது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதில் இந்த திட்டம் மிக நீண்ட காலமாக இந்த மட்டக்களப்பை நலன் விரும்பிகள் ஊடாகவும், மக்கள் ஊடாகவும் இதைச் செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்தது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதிகளிலே நாங்கள் நிச்சயமாக செய்து கொடுக்க வேண்டும் என்று முயற்சி எடுத்த பொழுது இதனை மாகாண கட்டிட பொறியியலாளர் வேல்மாணிக்கம் மூலம் இதனை படமாக்கி இருந்தோம்.

படங்களை வரைந்த பின் அதற்குரிய பணத்தினை பெற்றுக் கொள்ள மிக சிரமமாக இருந்தது. மாகாண சபையிலும், மாநகர சபையிலும் பணம் இல்லாத காரணத்தினால் இங்கு இயங்கிக் கொண்டிருந்த வடக்கு கிழக்கு கரையோர அபிவிரத்தி திட்டத்திற்குள் உள்வாங்கிய பொழுது இத்திட்டம் முடிவடையும் காலப்பகுதியில் இருப்பதால் இதனை எடுக்க முடியாது என்று கூறியிருந்தார்கள். இருந்தாலும் இது ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதி என்பதனால் இதனை ஜனாதிபதியின் சகோதரரான பசில் ராஜபக்ஸவிடம் கூறியிருந்தபோது இதை உடனடியாக செய்து தருவேன் என கூறினார்.

இத்திட்டம் முடிந்தாலும் விசேட நிதியின் மூலம் இதனை செய்து தருவதாக கூறிவிட்டு, 10 நிமிடம் கழித்து எனக்கு போன் பண்னி P.னு குறூஸ் அவர்களை பேசச் சொல்லி இருந்தார். நான் குறூஸ் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் மன்னார் மாவட்டத்திலே இருப்பதாக கூறியிருந்தார். நான் அவரிடம் கூறியிருந்தேன், பசில் ராஜபக்ஸ உடனடியாக பேச சொல்லியிருக்கிறார். கட்டிடம் சம்மந்தமாக பேச இருக்கிறார். மட்டக்களப்பு மாநகரம் சம்மந்தமாக 08 கோடி ரூபாய் கட்டடம் சம்மந்தமாக பேசுவார் அதை செய்துகொடுக்க அனுமதியை பெற்றுக்கொள்ளுங்கள் என கேட்டிருந்தேன் அவர் பேசியதன் அடிப்படையில் அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

நாம் பசில் ராஜபக்ஸவிற்கு நன்றி கூற வேண்டும் இங்கு பிறக்காமல் இருந்தாலும் மட்டக்களப்பு மாநகரம் அழகாக வரவேண்டும் இங்கும் மீனினங்கள் மிக அழகான தங்கநகைகளிட்டு அழகான சேலைகளோடும் இருக்கவேண்டும் என்ற ஒரு அர்ப்பணிப்போடு செயற்படுகின்ற பணிப்பாளர் குரூஸ் அவர்களுக்கும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் சாமித்தம்பி ஐயா அவர்களுக்கும் மிக நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன் எனினும் இந்ததிட்டம் அமுலாகி இருக்கின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் இது முழுமை பெற்று அனைவரும் எதிர்பார்த்த கட்டிடமாக பத்தாம் மாதம் திறப்பதற்கு வழிவகை செய்யவேண்டிய பொறுப்பு எமது ஒப்பந்தகாரரான மட்டக்களப்பு அழகுபெற நினைக்கின்ற ஒப்பந்தகாரரான ஆஞ்சநேயர் ஐயாவே காரணம் என நினைக்கின்றேன் நாங்கள் பலதரப்பட்ட அபிவிருத்தி முயற்சி எடுத்திருந்தாலும் எமது மக்கள் எதிர்பார்த்த அளவு அபிவிருத்திப்பணிகள் நடக்கவில்லை என்பதை உரைக்க முடிகின்றது மாநகரசபை உறுப்பினர்கள் மிக அக்கறை எடுக்கவேண்டும் நான் இரவு கொழும்பிலிருந்து வந்தபோது ஓட்டமாவடி பாலம் தாண்ட எல்லாப்பகுதிகளிலும் மின்விளக்கு எரிந்துகொண்டிருந்தது.

மட்டக்களப்பிற்குள் வந்ததும் அரசடி கோவில் தாண்டியதும் எந்தவித மின்குமிழ்களும் இல்லை. இந்தபாதையில் மாத்திரம் ஐந்தாறு மின்குமிழ்கள் இருந்தது இதையெல்லாம் நடைமுறைப்படுத்த உள்நாட்டு உதவியோ வெளிநாட்டு உதவியோ அல்லது மாகாணசபை உதவியோ தேவையில்லை இங்கிருக்கின்ற மாநகரசபையே இங்கிருந்து எடுக்கின்ற வரிப்பணத்தில் செய்யமுடியும.; இதற்கு வேறு பணம் தேவையில்லை. இங்கிருக்கின்ற மாநகரசபையை இயக்குபவரும் வர்த்தகர்களும் இப்பகுதியை வெளிச்சமுள்ள பகுதியாக ஆக்கலாம். இந்த சிறிய விடயத்தை கூட செய்யமுடியாமல் இருப்பதை விட்டு மனவருத்தம் அடைகிறோம். இங்கு வேலை செய்கின்றவர்கள் ஆகக்குறைந்தது ஒருமாத சம்பளத்தை கொடுத்தாவது ஒரு பத்து மில்லியன் ரூபாவில் இந்த மட்டக்களப்பு மாநகரத்தை மின்குமிழ் ப+ட்டி அழகபடுத்தலாம் என நினைக்கின்றேன.; இருந்தாலும் தேர்தல் காலத்தில் எனது சம்பளத்தை எமது பிரதிமேயர் ஜோர்ஜ்பிள்ளை அவர்களிடம் கொடுத்திருந்தேன் அவர் அந்த பணத்தில்தான் இப்பாதையில மின்விளக்கு எரிந்ததாக கூறியிருந்தார் நான் இதை குற்றம் கூறுவதாக கூறவில்லை.

அனைவரும் அபிவிருத்தி, அபிவிருத்தி என்ற கூறுவோம் செய்யக்கூடிய விடயத்தை நாம் செய்வதில்லை எங்கிருந்தோ வரும் பிரச்சினைகளையும் யாரையாவது பிரச்சினைக்கு இழுப்பதையும் விட்டுவிட்டு நடைமுறை சாத்தியமான எங்களது பகுதியை துப்பரவாக அழகாக வைத்து கொள்ளக்கூடிய எங்களால் முடிந்த முயற்சிகளில் இறங்கவேண்டும். இங்கு வந்திருக்கின்றவர்கள் புத்திஜீவிகளும் மாவட்டத்தை வடிவமைக்கக்கூடியவர்களும் எதிர்காலத்தில் அபிவிருத்தி சார்ந்த , அரசியல் ரீதியான வழிகளில் இட்டுசெல்லக்கூடியவர்களும் என்ற வகையில் பேசுகின்றேன். இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு சந்தோசப்படுகின்றேன். இங்கு எடுத்துக்கொண்டால் இதுவும் பாட்டாளிபுரம் என்று கூறுவார்கள்.

இந்த பாட்டாளிபுரம் என்பது பாட்டாளி வர்க்கத்தினர் கடந்தகாலங்களில் இந்த பேரூந்து நிலையம் அமைப்பதற்கு முன்னர்கூட பாட்டாளி வர்க்கத்தினர் உழைத்து கழைத்து இந்தப்பகுதியில்தான் வந்து மது அருந்துவதாக, நிகழ்ச்சிகள் நடத்துவதாக கூறுவார்கள் இந்த பாட்டாளி தினம் என்பது அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட தினமாக இருந்தாலும் அதற்கு உலகளவில் விடுமுறை கொடுக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றது. தொழிலாளர்கள் 18 மணித்தியாலமாக வேலை வாங்கப்படுவதாகவும், அதனை 8 மணித்தியாலமாக குறைத்து போராட்டம் நடத்தப்பட்டு அதில் உயிர்நீத்தவர்களுக்காக அர்ப்பணிப்புடன் மடிந்தவர்கள் வெற்றியீட்டியதன் காரணமாக கொண்டாடப்படுகின்றது.

இது அப்போது அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றம் இப்போது இங்கே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை கொண்டாடாவிட்டாலும் பத்திரிகை அல்லது இந்த சந்தர்ப்பத்தில் பேச வாய்ப்பு கிடைத்திருக்கின்றது

எமது பகுதியில் இருக்கும் தொழிலாளர் பிரச்சினைகள் வருமானம் குறைந்தவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் இந்த தொழிலாளர் தினத்தை மறக்கமுடியாத நாளாக நான் பார்க்கிறேன் எனது தனிப்பட்ட வாழ்விலே 1993ம் ஆண்டு தொழிலாளர் தினத்தன்று என்னால் மறக்கமுடியாது நான் முதல் தடவையாக விடுதலை போராட்டத்தில் இருந்தபொழுது யாழ்ப்பாணதத்pற்கு சென்றிருந்தேன் 1993ம் ஆண்டு இத்தினத்திலே புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திக்க வாய்ப்புக் கிடைத்திருந்தது. ஆகையால் அந்த நாளை மறக்கமுடியாது. அந்தநாளில் முக்கிய தளபதியாக இருந்து இன்று இங்கு முரண்பட்ட அரசியலும் செய்துகொண்டிருக்கும் முரளிதரன் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றிருந்தது. அதுமட்டுமல்ல அன்றுதான் எமது முன்னாள் ஜனாதிபதியாக இருந்த பிறேமதாஸ அவர்களும் கரும்புலிகளால் வெடித்து கொல்லப்பட்ட தினம் என்ற அடிப்படையிலே எங்களது தனிப்பட்ட வாழ்வில் மறக்கமுடியாத நாளாக பார்க்கின்றேன் அந்தவகையில் இந்தகட்டடமும் என்னால் கல் நட்டப்பட்டு நினைவில் அழியாத நாளாக பார்க்கின்றேன்.

எங்கோ இருந்து பிரச்சினைகளுக்கு எடுக்கப்பட்ட முடிவுகள் யாருக்காகவோ எங்கோ எடுக்கப்பட்ட முடிவுக்கு கொண்டாட்டம் நடாத்துவதும் எங்களது பிரச்சினைகளை முடிப்பதற்கு முடிவுகளை எடுக்காத சமூகமாக இருப்பதை எங்களால் அவதானிக்கமுடிகின்றது. குறிப்பாக நாங்கள் கடந்த தேர்தலிலே கொண்டாட்ட நாளாக கொள்ளலாம் என்ற அடிப்படையில் மாகாணத்தை வலுப்படுத்தவும் ஆளுமைப்படுத்த மாகாணசபைக்கு ஆணை தாருங்கள் என்று பொதுமக்களிடம் ஆணை கேட்டு நின்றோம் நீங்கள் மாறாக எங்களுக்கு வாக்களிக்காமல் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து மீண்டும் எமது மக்களை பிழையான வழிக்கு இட்டுச்செல்லக்கூடிய வாய்ப்பினை நீங்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றீர்கள்.

அதற்கான விளைவையும் வாக்களித்த மக்கள் அனுபவிக்க போகின்றீர்கள் காரணம் என்னவென்றால் மத்தியில் அமைந்திருக்கின்ற அரசாங்கம் மிகப்பலமான அரசாங்கமாக அமைந்திருக்கின்றது ஏனென்றால் தமிழர்கள் தமிழ்த்தேசியம் பேசினார்கள் சிங்களவர்ககள் சிங்கள தேசியம் பேசினார்கள் இதன்காரணமாக சிங்களவர்கள் அனைவரும் அவர்களுக்கு வாக்களித்து இருக்கின்றார்கள் முக்கியமான விடயங்களை அவர்கள் அமுல்படுத்தபோகின்றார்கள். ஒரு உதாரணத்தை உங்களுக்கு நான் சுட்டி காட்டவேண்டும்.

கடந்தமுறை உள்ள+ராட்சி மறுசீரமைப்பு சட்டமூலம் கிழக்குமாகாணசபைக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது இந்த வட்டார முறையை கொண்டுவருவதற்கும் சிறுபான்மை மக்கள் சிறிதாக பிரிந்து வாழ்கின்ற பகுதிகளில் வட்டாரமாக பிரிந்து சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு கொண்டுவரப்பட்ட சட்டமூலமாகும். இதை கிழக்குமாகாணசபை திருப்பி அனுப்பியிருந்தது மீண்டும் அந்த சட்டமூலத்தை அமுலாக்கி தாருங்கள் என்று என்னிடம் கேட்டிருந்தார்கள் கடந்த ஒன்பதாம் திகதிக்கு முன்னர் இருந்த முதலமைச்சர் வேறு இப்பொழுது இருக்கின்ற முதலமைச்சர் வேறு என்பதை நான் மட்டக்களப்பான் என்ற வகையில் நான் கூறியே ஆகவேண்டும்.

அன்று நான் திருப்பி அனுப்பிய மகஜரை இன்று அமுலாக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன். இதன் காரணமாக வட்டாரமுறை கொண்டுவரப்பபடும் பின்னர் தேர்தல் மாற்றங்கள் கொண்டுவரப்படும் அதன் பின்னர் இன்னும் கணிசமான மாற்றங்கள் கொண்டுவரப்படும். இதை எதிர்ப்பதற்கு எமது மக்கள் எம்மை வலு இல்லாதவர்களாக தள்ளி அனுப்பியிருக்கின்றார்கள் இது வேதனைக்குரிய விடயம் இங்கு வாக்களித்து 14 பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிவைத்திருக்கின்றார்கள் இவர்கள் கூறிய வடக்கு கிழக்கு இணைக்கமுடியுமா? இணைத்து தருவார்களா? இதைத்தான் இவர்கள் 50 வருடகாலமாக பெற்றுத்தந்திருக்கின்றார்கள்.

என்னத்தை கிழித்திருக்கின்றார்கள்? எதையுமே அவர்கள் செய்யவில்லை. இதில் நீங்கள் மீண்டும் மீண்டும் பிழைகளை விட்டுவிட்டு எமது சமூகத்தின் தலைவிதிகளை கையில் இருக்கின்ற விடயங்களைக் கூட இழக்கின்ற சமூகமாக ஆகப்போகின்ற எமது மக்கள்தான் இதற்கு பொறுப்புக்களையும் எடுத்துக்கொள்ளவேண்டும். கடந்தகாலத்தில் நீங்கள் அளித்த வாக்குகளுக்காக பணி செய்யவேண்டிய மாகாணத்தை பாதுகாத்து கொடுக்கவேண்டிய பொறுப்பு மாத்திரம் எனக்களித்திருக்கின்றது.

அதற்காக நான் பணி செய்வேன் ஏனென்றால் காலம் காலமாக இந்த விடுதலைப்போராட்டம் வளரவேண்டும் தனித்தமிழீழம் எங்களுக்கு தேவையென்று சொல்லிவிட்டு 1976ம் ஆண்டு அமிர்தலிங்கம் அவர்கள் இரத்தத்தை கீறி பொட்டுவைத்து பிரகடனத்தை செய்துவிட்டு 1977ம் ஆண்டு எதிர்க்கட்சியில் அமர்ந்து சபாநாயகருக்கு முன்னால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாங்கள் வாழ்வோம் என சத்தியப்பிரமாணம் எடுத்தவர்கள் இன்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வுகளை பேசுவோம் என்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வோம் என்றால் எமது மாகாணம் வலுப்பெற வேண்டும் எமது சமூகம் வளம்பெற வேண்டும் என்றுதான் ஒரு அரசியல்வாதி சிந்திக்கவேண்டும்

அன்று மாற்றுக்கருத்ததுக்களை வேறு வீராப்பு கதைகளையும் பேசிக்கொண்டு இன்னமும் செல்லமுடியாது எனினும் அவர்களை பேசிக்குற்றமில்லை இன்னமம் கடந்தகால வரலாறுகள் தெரியாமல் அவர்கள் மீண்டும் தேர்தலில் வாக்கெடுக்கவும் அவர்களின் ஆசனங்களை வைத்துக்கொண்டிருப்பதற்காகவும் அவர்கள் அரசியலுக்கு வந்தவர்கள் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும் மாறாக நாங்கள் அப்படியல்ல அடுத்தமுறை ஆட்சிக்கு வரவேண்டும் உழைத்துவிட்டு நாங்கள் கொழும்பில் வீடு வாங்கவேண்டும் என்ற கட்சியுமில்லை.


உயிர்கொடுக்கவேண்டும் என்ற மாற்று அரசியலுக்காகவும் கிழக்குமாகாணத்தில் ஒரு ஜனநாயத்தை கொண்டுவரவேண்டும் என்பதற்காக நாங்கள் அரசியலுக்கு வந்தவர்கள் என்பது அந்த உண்மையை விளங்கிகொள்ளவில்லை என்ற கவலை எங்களுக்குள் புதைந்திருக்கின்றது கடந்தகால தேர்தலில் ஏன் நீங்கள் அரசாங்கத்தோடு சேரவில்லை என்று கேட்டிருந்தார்கள் நாங்கள் அரசாங்கத்தோடு வெற்றிலை சின்னத்தில் கேட்டிருந்தால் இந்த முதலமைச்சர் ஆசனத்தை பெற்றுக்கொண்டோம் இல்லையென்று கூறவில்லை இந்த தேர்தலில் வெற்றிலையில் கேட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை சிந்திக்கவேண்டும் மொத்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கும் மகிழ்ச்சியான விடயம் கொழும்பை பொறுத்தவரைக்கும்.

இந்த கிழக்குமாகாணசபை உருவாக்கப்பட்டு கட்டியெழுப்பட்ட சமூக நல்லுறவு சமூக இணக்கப்பாடெல்லாம் குலைந்திருக்கும் என்ற உண்மையை நீங்கள’; விளங்கிகொள்ளவேண்டும். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் கேட்டிருந்தால் மட்டக்களப்பில் ஒருகாலமும் நடக்காத நிகழ்வு நடந்திருக்கும் எங்களது வாக்கை வைத்து வந்திருக்கும் ஹிஸ்புல்லா அங்க அமீர் அலி ஏறாவூரில் அலிஸாகிர் மௌலானா வந்திருப்பார்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் பசீர் சேகுதாவூத் வந்திருப்பார் ஒருகாலத்திலும் நடக்காத நிகழ்வு நடந்து நான்கு முஸ்லிம் எம்பிக்கள் வந்திருப்பார்கள் எங்களுக்கும் எந்தவிதமான பிரச்சினையுமில்லை சமூகம் அடிபட்டிருக்கும் காரணம் என்ன நூறுவீத மக்களில் இருபத்தைந்துவீத முஸ்லிம்களும் எழுபத்தைந்துவீத தமிழர்களும் வாழ்கின்றார்கள்.

காலத்தால் நடக்காத தவறை இங்கு வந்திருக்கும் முதலமைச்சரோ தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளோ விடக்கூடாது என்பதற்காக நாங்கள் தனித்துவமாக நின்றோம் முஸ்லிம் வேறு அரசியல் வேற என்று கூறவில்லை இனத்துவேசம் பேசவில்லை உரிமையென்னும்போது ஒரு சமூக உரிமையை பாதுகாக்கும் விடயம் ஒரு அரசியல்வாதிக்குள்ளது. சமூகம் சார்ந்த அரசியல் செய்யும் ஒரு கட்சிக்கு இருக்கின்ற அடிப்படையில் அரசியல் செய்தோம் என்ற உண்மையை விளங்கிக்கொள்ளவேண்டும் கடந்தகாலத்தில் மட்டக்களப்பு மக்கள் பெரும்பிழை விட்டார்கள் யாழ்மக்கள் ஆளும் கட்சியில் மூன்றுபேரை அனுப்பியிருக்கின்றார்கள். பாராளுமன்றம் சென்று கூச்சலிடவும் ஆட்கள் அனுப்பியிருக்கின்றார்கள்.

கூச்சலிடுபவர்கள் கூச்சலிட்டுக்கொண்டு இருப்பார்கள் இங்க வந்திருக்கின்ற யோகேஸ்வரன் ஐயா என்ன செய்யப்போகின்றார் இங்கு வந்திருக்கின்ற அரியநேத்திரன் என்ன செய்யப்போகின்றார் கடந்தமுறை பாராளுமன்றம் வந்திருந்தார் இந்தமுறையும் வந்திருக்கின்றார் அவர் சாகும்வரை அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என நினைக்கின்றேன் ஆகையால் இங்கு சுயநிர்ணய உரிமையையோ வடக்கு கிழக்க இணைப்பையோ செய்து தரமுடியாது அரசாங்கம் அவர்களை கூப்பிட்டுபேச எந்தவிதமான அருகதையும் இல்லாதவர்கள் என்பதையும் நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.

கடந்தகாலங்களைப்போல் இன்னமும் சிங்கள பேரினவாதம் என்று பேசிப்பேசி இருக்கின்றவர்கள் பின்னால் இழுபட்டால் நாங்கள் இருக்கின்றோமா இல்லையோ என்று தெரியாது இருக்கின்றதையும் இழந்த சமூகமாக இருக்கின்றதையும் இல்லாமல் தொலைத்த சமூகமாக மீண்டும் மாவட்ட அட்சிமுறையை கொண்டு திணித்த சமூகமாக மாறுவீர்கள் என்ற உண்மையை சொல்லி எதிர்காலத்தில் நடந்த தவறுகளை மறந்து உண்மையான அரசியல் தெளிவுள்ள சமூகமாக மாறவேண்டும் அரசியல் ரீதியாக நீங்கள் சிந்திக்கவேண்டும் மாறாக எங்கிருந்தோ எழுகின்ற வடபகுதியை மாத்திரம் தலைமைத்துவங்களை வைத்துக்கொள்கின்ற பத்திரிகைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பின்னால் இழுபட்டு நீங்கள் அழியக்கூடாது. உங்களது பிரச்சினை உங்களது சமூகப்பிரச்சனை உங்களுக்கும் பிரச்சினை என்ற ஆழமான அரசியல்பார்வை உள்ள அரசியல் சமூகமாக மாறவேண்டும் என்று வண்மையாக கேட்டுக்கொண்டு இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்த அனைவருக்கும் நன்றிகூறி முடிக்கின்றேன் நன்றி வணக்கம் .
read more...

Tuesday, 27 April 2010

இருந்த இடத்திலிருந்து இலகுவாக அதிகம் சம்பாதிக்க சில வழிகள்.

இன்று பலரும் எப்படி இலகுவாக அதிகம் உழைக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்காகவே இலகுவாக இருந்த இடத்திலேயே இருந்து அதிகம் சம்பாதிக்கக் கூடிய சில வழிகளைத் தருகின்றேன். இது ஒரு நகைச்சுவைப் பதிவுபோல் இருந்தாலும் எல்லோரும் சிந்திக்க வேண்டிய பதிவு.

இதோ வழிகள்...

1. ஆசாமியாக மாறலாம்.....

இதன் மூலம் பல்வேறு வழிகள் மூலம் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம். எப்படி என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை இப்போ எல்லோருக்கும் தெரியும்தானே. பணம் சம்பாதிப்பது ஒருபுறமிருக்க ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் என்னை அனுபவி ராஜாண்ணு அனுப்பி வைத்தான் என்று நிறையவே அனுபவிக்கலாம்

2. வட்டிக்குக் கொடுக்கலாம்....

இன்று வட்டிக்குக் கொடுத்து உழைப்பது இருந்த இடத்திலிருந்த அதிகம் உழைக்கும் ஒரு தொழிலாகிவிட்டது. 100 க்கு 10 வீதம் மாதம் அறவிடுபவர்கள் ஒருபுறமிருக்க. வங்கிகள் வியாபார நிலையங்களுக்கு பக்கத்தில் இருக்கம் சிலர் அவசர பணத் தேவைகளுக்காக வட்டிக்குக் கொடுக்கின்றனர்.

ஒரு மணித்தியாலயத்துக்குள் அவர்களுக்கு பணத்தைக் கொடுக்க வேண்டும். வட்டியாக ஒரு இலட்சத்தக்கு இரண்டாயிரம் கொடுக்க வேண்டும்.

இது ஒரு புறமிருக்க சிலரோ ஏழைகளின் அவசரத் தேவைக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு அவர்களின் வீடு காணி போன்ற சொத்தக்களை அபகரிக்கின்றனர்.


3. அரசியல்வாதியாகலாம்......

இது அதிகம் சம்பாதிக்கின்ற ஒரு வழியாகும். பல வழிகளிலும் உழைக்க முடியும். ஒரு நிரந்தர கொள்கை இன்றி நமது சுகபோக வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொள்ளலாம். ஏழைகளுக்கு வருகின்ற உதவிகளைக்கூட நாம் சுருட்டிக் கொள்ளலாம்.

அரசியல்வாதியாகி எப்படி உழைக்கலாம் என்று ஒரு தொடர் பதிவே எழுதலாம். வேண்டுமானால் பின்னர் பட்டியலிடுகிறேன்.

மக்களுக்காகவே சேவை செய்து வாழ்கின்ற அரசியல்வாதிகளும் இல்லாமல் இல்லை.

4. உயரதிகாரியாகலாம்....

இதன் மூலம் நாம் கடமையாற்றும் நிறுவனத்திலே இருக்கின்ற வேலை வாய்ப்புக்களை பணக்கார வர்க்கத்தினருக்கு பெருந்தொகை பணத்தை வாங்கிவிட்ட வேலைவாய்ப்புக்களை வழங்கலாம். கஸ்ரப்பட்டு படித்து நல்ல முறையிலே தகுதியோடு இருப்பவர்களைப் பற்றி எமக்கு கவலையில்லை பணமே எமக்கு முக்கியம்.

அதனைவிட நமக்கு கீழே வேலை செய்கின்ற பெண்களை நமது தேவைகளுக்கும் பயன் படுத்திக் கொள்ளலாம். (எல்லா அதிகாரிகளும் அப்படியல்ல)

5. வியாபாரியாகலாம்....

நிறைய வழிகளில் உழைக்க முடியும். பட்டியலிடாமல் ஒரு உதாரணத்தை மட்டும் செல்கிறேன்.

ஒரு மரக்கறி வியாபாரியால் செய்யப் படும் கொடுமை இது. எனது கிராமம் ஒரு விவசாயக் கிராமம். ஒரு கிலோ வெண்டிக்காய்க்கு வியாபாரியால் விவசாயிக்கு 15 ரூபா வழங்கப் படுகிறது. ஆனால் அந்த வியாபாரி சந்தையில் ஒரு கிலோ 50 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றார்.

இரவு பகல் கஸ்ரப் பட்ட விவசாயிக்கு 15 ரூபா ஓரிரு மணித்தியாலத்துக்குள் வியாபாரிக்கு 35 ரூபா விவசாயிக்கு வரும் 15 ரூபாவில் உரம் நிரிறைத்தல் ஏனைய செலவுகள் போனால் 5 ரூபா கூட மிஞ்சப் போவதில்லை.

6. மந்திரவாதியாகலாம்.....

மந்திர மாய ஜாலங்கள் மூலம் நிறையவே சம்பாதிக்கலாம். சூனியம் மூலம் அதிகம் உழைத்தக் கொண்டிருக்கின்றனர். ஒருத்தருக்கு நான் சூனியம் செய்ய வேண்டும் என்றால் ஒரு மந்திர வாதியை பிடித்து செய்யலாம். மந்திரவாதியோ என்னிடம் ஒரு தொகைப் பணத்தை வாங்குவார்.

நான் கூனியம் செய்தவர் சூனியம் பலிக்க ஆரம்பித்ததும் உடனே அந்த மந்திரவாதியைத்தான் நாடுவார் சூனியம் எடுப்பதற்கு. மந்திரவாதி அவரிடம் ஒரு தொகைப் பணத்தை வாங்கிவிட்டு சூனியத்தை எடுத்து வீடுவார். மீண்டும் நான் சூனியம் செய்ய மந்திரவாதியிடம் செல்வேன் இப்படி ஒரு சக்கரமாக தொடரும்.


7. பிச்சைக்காரனாகலாம்...

இதன் மூலம் பல பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்துவதோடு உண்மையான பிச்சைக்காரர்களின் பிழைப்பையும் கெடுக்க முடியும.

இன்னும் பல வழிகளைச்சொல்லிக் கொண்டே போகலாம்...


இவை அனைத்தும் உண்மையாகவே நடக்கும் விடயங்கள்.... நாம் சிந்திக்கவேண்டிய விடயங்கள்.
read more...

Saturday, 24 April 2010

யாருக்காகக் காத்திருக்கிறேன்?...


காத்திருப்பின்
அருமை
இன்றுதான்
தெரிகிறது
உன்னோடு
வரும் - உன்
தோழி வரவில்லையே.....

உன்னோடு - இன்று
நான் பேசிய
ஒரு சில
நிமிடங்கள்- பல
வருடங்கள்
பேசியதுபோல்
வாழ்க்கையே
வெறுத்துவிட்டது - என்
அருகில் - உன்
தோழி இல்லை
என்பதனால்....

இனிமேலாவது -நீ
வரவில்லை
என்றாலும் - உன்
தோழியை
அனுப்பிவிடு
அவளுக்காக
காத்திருக்கிறேன்.....

*************************************

நேற்று - நீ
சொன்னாய் - என்
இதயம்
பிடித்திருக்கிறது
என்று - இன்றுதான்
புரிந்து கொண்டேன்
நேற்றைய
என் கவிதையின்
தலைப்பு
இதயம் என்று....
read more...

Friday, 23 April 2010

கருணா அம்மான் பிரதி அமைச்சராகிவிட்டார்.....

பிரதி அமைச்சர்கள் விபரம்

Salinda Dissanayake ==  PlantationIndustries Deputy Minister

Dilan Perera  ==  Public Administration and Home Affairs Deputy Minister

Susantha Puchinilame  ==Fisheries and Aquatic Resources Deputy Minister

Lakshman Yapa Abeywardena == Economic Development Deputy Minister

Chandrasiri Gajadeera ==  Finance and Planning Deputy Minister

Jagath Pushpakumara == Agriculture Deputy Minister

T.B. Ekanayaka  ==  Education Deputy Minister


Mahinda Amaraweera ==  Health Deputy Minister


Rohitha Abeygunawardena  == Ports and Aviation Deputy Minister


S.M. Chandrasena == Irrigation and Water Resources Management Deputy Minister


Gunaratne Weerakoon ==   National Heritage and Cultural Affairs Deputy Minister

Mervyn Silva == Mass Media and Information Deputy Minister

Pandu Bandaranaike == Indigenous Medicine Deputy Minister

Jayaratne Herath == Industry and Commerce Deputy Minister


Dayashritha Tissera ==  Ports and Aviation Deputy Minister

Duminda Dissanayaka ==  Posts and Telecommunication Deputy Minister


Ranjith Siyambalapititya == Economic Development Deputy Minister


Lasantha Alagiyawanna  == Construction, Engineering Services, Housing and Common Amenities Deputy Minister


Rohana Dissanayake == Transport Deputy Minister


H.R. Mithrapala ==  Livestock Development Deputy Minister


Nirmala Kotelawala == Highways Deputy Minister


Premalal Jayasekara ==  Power and Energy Deputy Minister


Geethanjana Gunawardena ==  External Affairs Deputy Minister


Vinayagamoorthy Muralitharan ==  Resettlement Deputy Minister


Indika Bandaranaike ==  Local Government and Provincial Councils Deputy Minister


Muthu Sivalingam ==  Economic Development Deputy Minister


Siripala Gamlath ==  Lands and Land Development Deputy Minister


W.B. Ekanayake  == Disaster Management Deputy Minister


Chandrasiri Suriyarachchi ==  Social Services Deputy Minister


Neomal Perera ==  Co-operative and Internal Trade Deputy Minister


Sarath Gunawardena  == State Resources and Enterprise Development Deputy Minister


Nandimithra Ekanayake ==  Higher Education Deputy Minister


Nirupama Rajapaksa ==  Water Supply and Drainage Deputy Minister


Lalith Dissanayaka == Technology and Research Deputy Minister


Sarana Gunawardena ==  Petroleum Industries Deputy Minister


Reginold Cooray  == Justice Deputy Minister


Vijithamuni Zoysa ==  Rehabilitation and Prison Reforms Deputy Minister
  M.L.A.M. Hisbullah ==  Child Development and Women’s Affairs Deputy Minister


Weerakumara Dissanayaka == Traditional Industries and Small Enterprise Development Deputy Minister
read more...

இலங்கையின் பதிய அமைச்சர்கள் விபரம்

இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தலை தொடந்து 37 அமைச்சரவை அமைச்சர்களும் 39 பிரதி அமைச்சரவை அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷ ==>> பாதுகாப்பு,நிதி,துறைமுக மற்றும் நெடுஞ்சாலைதுறை

மைத்திரிபால சிறிசேன ==>>> சுகாதார அமைச்சர்

ஜி.எல்.பீரிஸ் ==>> வெளிவிவகாரத்துறை அமைச்சர்

சுசில் பிரேம் ஜெயந்த ==>> பெற்றோல் மற்றும் கனியவளத்துறை அமைச்சர்

தினேஷ் குணவர்த்தன ==>>  நீர்பாசன மற்றும் வடிகால்துறை அமைச்சர்

ரிஷாத் பதியுதீன் ==>> தொழில் அபிவிருத்தி அமைச்சர்

ஏ.எல்.எம்.அதாவுல்லா ==>> உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சர்

சம்பிக்க ரணவக்க ==>> மின்சாரத்துறை அமைச்சர்

விமல் வீரவன்ஸ ==>> வீடமைப்புதிட்ட மற்றும் மக்கள் நலன்புரி அமைச்சு

சுமேத ஜெயசிங்க ==>> பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்

குமார வெல்ஹம ==>>  போக்குவரத்துத்துறை அமைச்சர்

மஹிந்தயாப்பா அபயவர்த்தன ==>> விவசாயத்துறை அமைச்சர்.

சி.பி.ரத்னாயக்க ==>> விளையாட்டுத்துறை அமைச்சர்.

ஜனக்க பண்டார தென்னக்கோன் ==>> நில மற்றும் நில அபிவிருத்தித்துறை அமைச்சர்

பீலிக்ஸ் பெரேரா ==>> சமூகவேவை மற்றும் சமூகநலத்துறை அமைச்சர்.

பஷில் ராஜபக்‌ஷ ==>> பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்.

பந்துல குணவர்த்தன ==>> கல்வி அமைச்சர்
ரட்ணசிறி விக்ரமநாயக்க ==>> அரச முகாமைத்துவ மற்றும் சீர்திருத்தல் அமைச்சு.
நிமல் சிறிபாலடி சில்வா ==>> நீர்பாசன மற்றும் வடிகால்துறை அமைச்சு.

ஏ.எச்.எம்.பௌசி ==>> அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்.

டளஸ் அழக பெரும ==>> இளைஞர் விவகார மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர்

டி.எம்.ஜெயரட்ன ==>> பௌத்த மற்றும் சமய விவகாரத்துறை அமைச்சர்

டி.இ.டபள்யூ.குணசேகர ==>> புணருதாரண மற்றும் சிறைச்சாலை அமைச்சர்

ரஜித சேனரத்ன ==>> மீன்பிடிவளத்துறை அமைச்சர்

அதவுத செனவிரத்ன ==>> நீதி அமைச்சர்

பியசேன ஹமஹே ==>> தேசிய வைத்திய அமைச்சர்

எஸ்.பி.நாவீன ==>> தேசிய மொழி அமைச்சர்

ஜோன்ஸ்டன் பெர்னாந்து ==>> கூட்டுறவு அமைச்சர்

காமினி லொக்குகே ==>> தொழிலாளர் உறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்

மில்ரோய் பெர்னாந்து ==>> மீள்குடியமர்வு அமைச்சர்

ஜீவன் குமாரதுங்க ==>> தபால் மற்றும் தொலைத்தொர்பு அமைச்சர்

பவித்ரா வன்னியாரச்சி ==>> தேசிய விழாக்கள் மற்றும் காலாச்சார அமைச்சர்

அநுரபிரிய தர்ஷன யாப்பா ==>> சுற்றுப்புரச்சூழல் அமைச்சர்

திஸ்ஸ ஹரலியத்த ==>> சமூக அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சர்

பி.தயாரத்ன ==>> வர்த்தக அபிவிருத்தி அமைச்சர்

டக்ளஸ் தேவானந்தா ==>>பாரம்பரிய தொழில்சார் மற்றும் சிறி உட்கட்டமைப்பு அமைச்சர்

டபள்யூ.டி.ஜே.செனவிரத்ன ==>>மக்கள் மற்றும் உறைவிட விவகார அமைச்சர்

மஹிந்த சமரசிங்க ==>> பயிர்ச்செய்கை அமைச்சர்
read more...

கண்களால் கைது செய்யப் பட்டேன்

ஏன் இந்தக்
கவிஞர்கள் எல்லாம்
பெண்களின் கண்களை
பற்றி பாடுகிறார் என்று
யோசித்த நாட்கள் பல
இன்று நானே - உன்
கண்களை பற்றி
கவிதை எழுதுகிறேன் - உன்
கண்களினால்தான் - நான்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

பெண்களின் கண்களில்
இத்தனை சக்தி
இருப்பதை இன்றுதான்
உணர்கிறேன்
உன்னை காதலிப்பதால்

இந்த உலகத்தில்கூட
ஒரு பெண்ணின்
கடைக்கண் பார்வை
பட்டு இருக்கிறது
போலும் இவ்வளவு
வேகமாக சுற்றுகின்றதே...

நான் நினைக்கிறேன்
இரவுகள் கூட
இருளாக இருப்பது - நீ
தூங்கி விடுவதால்
உன் பார்வை
படாததனால்தானோஎன்னவோ...

எனக்கு ஒருஆசை
இருக்கிறதுஉன்னை
பாலை வனத்துக்கு
அழைத்து செல்லவேண்டும்
பாலைவனம்கூட
பசுமையாகிவிடுமல்லவா...
read more...

Thursday, 22 April 2010

விதவையின் கண்ணீரில்

இன்று பெண் தலைமை தாங்கும் குடும்பம் அதிகமாக இருக்கின்றது. அதிலும் கிழக்கு மாகானத்திலேதான் பெண் தலைமை  தாங்கும் குடும்பம் அதிகமாக இருக்கின்றது. இதற்குக் முக்கிய காரணம் நாட்டில் நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தமேதான்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கணவனை இழந்த, விதவைகள் அதிகம் காணப்படும் ஒரு பிரதேசமாகும். யுத்தத்தின் மூலம் உயிரிழந்தவர்கள், காணாமல் போனோர், கடத்தப்பட்டோர், இனம் தெரியாதோரால் சுடப்பட்டவர் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

இந்த விதவைகளைப் பொறுத்தவரை. பல்வேறுபட்ட கஷ்டங்களை எதிர் நோக்கி  வருகின்றனர். அதிகமாக விதவைகளைப் பொறுத்தவரை பணக்கார வர்க்கத்தை செர்ந்தவர்களைவிட மிகவும் வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களே அதிகம்.

இவர்களேதான் தனது குடும்பத்தை தலைமை தாங்கி வழி நடத்துவதோடு. உழைத்து தனது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் சொல்லொண்ணா துயரங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

அதிகமான விதவைகளுக்கு நிரந்தர வருமானம் என்பது இல்லை. கூலித் தொழில் செய்து வந்தாலும் குடும்ப செலவை கவனிப்பதா தனது பிள்ளைகளைப் படிப்பிப்பதா என்ற பிரச்சினை இருக்கின்றது.

நன்றாக படிக்கின்ற பல பிள்ளைகள் படிக்க வசதியின்றி படிப்பை இடை நடுவில் கைவிட்டிருக்கின்றார்கள். ஆனாலும் சிலர் இரவு பகல் உழைத்து பல நாள் பட்டினி இருந்து தமது பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டு வருகின்றனர். இது எல்லா தாயாலும் முடியாத  காரியமே.

கஸ்ரப் பட்டு தனது பிள்ளைகளை படிப்பித்து நல்ல ஒரு நிலைக்கு கொண்டு வந்தால் வேளை வாய்ப்பு இல்லை வேளை பெறுவதென்றால். படிப்புக்கோ, பட்டத்துக்கோ முன்னுரிமை இல்லை. பணமுள்ளவனுக்கும், பணத்துக்குமே முன்னுரிமை கொடுக்கப் படுகின்றது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

இவர்கல் வாழ்க்கையில் விடிவு கிடைக்க வேண்டும். இவர்கள் சந்தோசப் படுகின்ற  நாட்கள் மிக மிகக் குறை வென்றுதான் சொல்ல வேண்டும். இவர்களுக்காக அரசாங்கம் பல திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் ஒவ்வொரு பொறுப்புள்ள அதிகாரியும் இவர்கள் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.

நானும் பத்து வயது முதல் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் பல்வேறு கஸ்ரங்களுக்கு மத்தியில் வாழ்ந்தவன் என்பதனால் ஒவ்வொரு தாயின் வேதனையையுன் அறிந்தவன்.
read more...

Wednesday, 21 April 2010

பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி சில ஆலோசனைகள்.

ஆண்களுக்குத்தான் அதிகமாக ஆலோசனைகள் வழங்குகிறேன் ஆனால் பெண்களுக்கும் நல்ல ஆலோசனை தரவேண்டும் என்று பல பெண்கள் வேண்டிக்கொண்டனர். சில நன்பிகளோ என்னோடு பேசுவதே இல்லை அவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

இன்று சில (பல) பெண்கள் ( பெண்கள் என்னை திட்டவேண்டாம் எல்லோரும் இல்லை என்று சொல்ல்கிறேன்). ஆண்களை ஏதோ ஒரு வகையில் தன் பின்னால் அலைய வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சில அப்பாவி ஆண்கள் நாய் போல் அலைந்து. கடைசியில் எல்லாம் இழந்து, எல்லாம் புரிந்து..... என்னவோ எல்லாம் நடக்குது...

சில பெண்கள் தங்கள் நண்பிகளிடம் கேட்டுக்கொள்வார்கள் "அடப்பாவி எப்படிடி இப்படி உன்னாலமட்டும் இப்படி ஆண்களை உன் பின்னால அலைய வைக்க முடியும் என்று" அது பெரிய வேலை இல்லை தங்களால் முடியவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

பெண்கள் ஆண்களை தன் பின்னால் அலைய வைப்பது எப்படி

01 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.

02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.

03 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை... அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.

04 . நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள்.

05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.

06 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது ஹாய் மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள்.

07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள்.

08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.

09. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம்.

10 . இதுதான் முக்கியமானது.... எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
read more...

Tuesday, 20 April 2010

திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப் பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி?

திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப்பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி ? என்று  பல நண்பர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கான ஆலோசனைகள் மீண்டும் இடுகையாக வருகிறது...

1. மனைவியை அடிக்கடி அழகுக்கலை நிலையத்துக்கு அனுப்பவேண்டும்.

2. மனைவி பாட்டியானாலும் நாகரிக ஆடைகளை எப்பொழுதும் அணியவேண்டும். உதாரணமாக தொடை மற்றும் ஏனைய கண்ணுக்குகுளிர்ச்சியைத் தரக்கூடிய, உடற்பாகங்களை வேளிக்காட்டக்கூடிய ஆடைகளை அணிய வேண்டும்.

3. நீங்கள் அதிகம் விரும்பி ரசிக்கின்ற நடிகை நடித்து புதிதாக வெளிவருகின்ற படங்களிலே அந்த நடிகை எப்படி கவர்ச்சி காட்டி நடித்திருக்கின்றாரோ அதேபோல் உங்கள் மனைவியையும் கவர்ச்சியாக உடை மற்றும் ஏனைய நாகரிகச் செயற்பாடுகளிலும் ஈடுபடச் செய்தல்.

4. அடிக்கடி உங்கள் கணனிக்கு மாற்றுகின்ற வோல் பேபர்களில் அந்த நடிகைகள் எப்படி இருக்கிறார்களோ அதேபோல் உங்கள் மனைவியையும் போட்டோ எடுத்து உங்கள் கணனிக்கு இந்த போட்டோக்களை மாற்றிக்கொள்ளலாம்.

5. பாட்டிமாரை (அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை) நண்பிகளாக வைத்துக்கொள்வதோடு அடிக்கடி அவர்களைச் சந்தித்து பல மணி நேரம் பொழுதைக்கழிக்க வேண்டும். (எந்த ஒரு இளம் நண்பிகளும் இருக்கக்கூடாது.)

6. தன்னைவிட இருபது வயது குறைந்த பெண்ணை திருமனை செய்யலாம்.(மனைவியை நீங்கள் எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கலாம் மனைவி உங்களைவிட வேறு ஒருவரைப் பார்த்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல)

7. நடிகைகளைப்பற்றி பேசுகின்ற அல்லது நடிகைகளின் அந்தமாதிரிப்படங்களின் களஞ்சியமாக இருக்கின்ற வலைப்பதிவுகளுக்கு போவதைத் தவிர்த்து நல்ல வலைப்பதிவுகளுக்கு அடிக்கடி போய் வரலாம்.

8. தினமும் பின்னேரங்களில்  பெண்கள் அதிகமாக நடமாடும் Majestic City , போன்ற இடங்களுக்கு சென்று பெண்களோடு சேட்டை செய்வதனைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வேண்டுமானால் முதியோர் இல்லங்களுக்குப் போய் வரலாம்.

9. உங்கள் அலுவலகத்தில் இளம் பெண்கள் ஆண்களைப்போல் ஆடை அணியவேண்டும்என்ற கொள்கையினைக்கொண்டு வரலாம். (இதன் மூலம் பெண்களை பார்ப்பதனால் உங்களுக்கு வரும் பெண்கள் மீதான மோகத்தினைத் தவிர்த்துக் கொள்ளலாம்.)

10. மனைவிமீது வெறுப்பு வரும்போது வேறொரு மனைவியை மாற்றிக்கொள்ளலாம். (இதனால் மனைவிமீது வெறுப்பின்றி புது மனைவியோடு சந்தோசமாக இருக்கலாம் இங்கு எத்தனை மனைவி என்பது முக்கியமானதல்ல மனைவியோடு சந்தோசமாக இருப்பதே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது.)

இதனைக் கடைப்பிடித்தால் பெண்கள் மீதான உங்கள் மோகம் குறைவடைந்து உங்கள் மனைவிமீது அதிகம் அன்பு, ஆசை வரும்.

இது போன்ற ஆலோசனைகள் தேவைப்படுவோர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
தொடர்ந்து நண்பர்களுக்கான ஆலோசனைகள் வரும்...
read more...

Friday, 16 April 2010

இதயத் திருடி

என் விரல்களுக்கு

ஏற்பட்ட அவசரத்தில்
தொலைபேசியில்
இலக்கங்களை
தவறாக
அழுத்தியதால் -என்
விரல்களை
திடடினேன் -அன்று
இன்று என்
விரல்களுக்கு -நன்றி
சொல்கிறேன் -அந்த
அழைப்பில்
கிடைத்தவள் - நீ
என்பதனால்
உன் முகம்
தெரியாதவன் -நான்
உன் அகம்
தெரிந்தவன் -நான்
உன்னோடு
பேசுவது -என்
தொலைபேசிக்கே
பொறாமை வந்துவிட்டது போல
அடிக்கடி இயங்க
மறுக்கின்றது.-அது
நினைக்கவில்லை
இப்போ -என்
இதயத்தில் -நீ
இருப்பதை.

இதயத் திருடி
read more...

Thursday, 15 April 2010

சிந்தனைச் சிதறல்கள்...

கற்பனை

என்றாலே - என்ன
என்று
தெரியாமல்
இருந்தேன் - இன்று
எனக்கு
கற்பனைகளே
அதிகமாகிவிட்டது
உன்னைப்பற்றி
மட்டுமே.....


*****************************

உறங்கிக்கிடந்த -என்
கற்பனைகளை
தட்டி எழுப்பி
சிறகடித்து
பறக்கவிட்டு
சின்னாபின்னமாய்
சிதறடித்தாய் -இன்று
என்னைப்பற்றி
சிந்திக்காமல்
இருப்பதேன்...
read more...

Wednesday, 14 April 2010

இதயம்

எனது ஆரம்பகாலக் கிறுக்கல்கள் மீண்டும்  இடுகையாக
என் இதயச்

சுமைகளை
இறக்கி வைக்க
நினைத்தேன் -அதுதான்
தந்துவிட்டேன் - என்
இதயத்தை
உன்னிடமே....

******************************

என் இதயம்

உன்னிடமே
இருக்கட்டும்
அதுதான்
பாதுகாப்பானது
தந்தால் - அதை
வேறு யாருக்காவது
கொடுத்து
விடுவேன்..... - அது
உன் தங்கையாகக்
கூட இருக்கலாம்

********************************

என்னிடம்

இருக்கும் - உன்
இதயம்
என்னோடு
சண்டை
செய்கிறது
உன்னிடம்
வருவதற்கு - என்
இதயம்
உன்னிடம்
இருப்பதனால்...
read more...

Saturday, 3 April 2010

மட்டக்களப்பில் பல இடங்களில் நவலோகா வைத்திய சாலையின் இலவச மருத்துவ முகாம்.

read more...

Friday, 2 April 2010

நான் ரெடி நீங்க ரெடியா? வாங்க பார்க்கலாம்

வலைப்பதிவுகளைப் பார்த்து வந்தபோது ஒரு  வலைப்பதிவில் இருந்த இடுகை  ஒன்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வந்தது.

இலங்கையிலே தேர்தல் பிரச்சாரங்கள் அதிகரித்திருக்கும் இந்த நிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தேர்தல் பிரசார மேடைகளிலே தமிழ் தேசிய கூட்டமைப்பினரால்தான் தமிழ் மக்கள்  இன்று படு குழியில் தள்ளப் பட்டிருக்கின்றார்கள் என்று குற்றம் சாட்டி வருகின்றார்.

ஆனால் மறு புறத்தில் தேர்தல் மேடைகளில் வீர வசனம் பேசிக்கொண்டிருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.

உங்கள் கருத்துக்களுக்காக அந்த பதிவை தருகிறேன்.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒவ்வொரு கட்சியும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அண்மையில் பெரிய கல்லாற்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று நடை பெற்றது. இதனை பெரிய கல்லாறு சங்கங்கள், மன்றங்கள், பொது அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன.

இப் பிரச்சாரக் கூட்டத்துக்கு கிழக்கு மாகான முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் . தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்ரர். கிழக்கு மாகான சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் சிவகுணம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர்கள் வீ. ஆர். மகேந்திரன், எஸ். ஆர். மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரிய கல்லாற்றை பிறப்பிடமாகக் கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா (நவம்) தமிழரசுக் கட்சியின் தலைமை வேட்பாளராகப் போட்டி இடுகின்றார் என்பது இங்கே குரிப்பிடப்படப் பட வேண்டிய விடயம் . இருந்த போதிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் இந்த பிரச்சாரக் கூட்டத்துக்கு பெருமக்ளவான பொது மக்கள் கலந்து கொண்டனர். குட்டமைப்பின் தலைமை வேட்பாளரது ஊரிலேயே கூட்டமைப்புக்கு ஆதரவு இல்லை என்பது இதன் முலம் அறியக் குடியதாக இருந்தது.

கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அக் கூட்டத்திலே ஆற்றிய உரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வீர வசனங்கள் பேசிப் பேசியே தமிழ் மக்களை உசுப்பேத்தி தாங்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு தமிழ் மக்களை ஏமாற்றி கிழக்கு மாகான அபிவிருத்தியிலே தடையாக இருக்கின்றவர்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைத்துவங்களே

இன்று தமிழர்களை படு குழியில் தள்ளியவர்களும் இந்த குட்டமைப்பினரே. மீண்டும் மக்களை ஏமாற்றி தாம் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக மக்களிடம் வீர வசனம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் மக்கள் இவர்களின் வார்த்தை ஜாலங்களை நம்பிவிடக் கூடாது. தமிழர்கள் அதிலும் கிழக்கு மாகான தமிழர்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய காலமிது.

இன்று கிழக்கு மாகாணத்திலே ஒரு தலைமை உருவாகி இருக்கின்றது. கிழக்கு மாகான சபை மூலம் எமது பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன எமது மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கிழக்கு மாகான மக்களின் நெருப்பிலே குளிர் காய நினைக்கும் வடக்குத் தலைமைகள் கிழக்கு மாகான சபையை ஏற்றுக் கொள்ளவில்லை கிழக்கு மாகான சபையினையும் இல்லாது ஒழிப்பதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று அதிகம் விதவைகளை, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகம் உள்ள மாவட்டம் மட்டக்களப்பு இந்த நிலை எதனால் வந்தது? இதற்கு யார் காரணம்? இதற்கு முழுக் காரணமுமே இந்த கூட்டமைப்பினரும் வடக்கு தலமைகளுமே.

மாற்றுக் கருத்துடையோர்களை கொலை செய்யக் காரணமாக இருந்தவர்களும் இவர்களே. தமிழ் வீரம் பேசிப் பேசியே மட்டக்களப்பு மக்களை பலிக்கடாவாக்கும் இந்த கூட்டமைப்பினர் வடக்கு மக்களுக்காக மட்டுமே குரல் கொடுக்கின்றனர். மட்டக்களப்பு மக்கள் குடும்பம், குடும்பமாக சுடப் படுகின்றபோது குரல் கொடுத்தார்களா?

கிழக்கிலே ஒரு தலைமைத்துவம் உருவாக வேண்டும் புறக்கணிக்கப்படும் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்று நாம் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து வந்த போது வன்னிப் புலிகளால் படைஎடுக்கப்பட்டு எமது இளைஞர்கள் பலர் கொலை செய்யப் பட்டபோது கொலைகளை நிறுத்தி இருக்கலாம்தானே.

தமிழர்களை படு குழியில் தள்ளியவர்கள் இந்த கூட்டமைப்பினரும் வன்னித் தலமைகளுமே. மீண்டும் மட்டக்களப்பு மக்களை பலிக்கடாவாக்கும் முயற்சியிலே கூட்டமைப்பின் தலைமை வேட்பாளரும் அவரோடு சார்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய காலமிது என்று பேசியதோடு தமிழர்களை படுகுழியில் தள்ளி தமிழர்களின் அழிவுக்கு காரணமானவர்கள் இந்த கூட்டமைப்பினரே இதை இல்லை என்று மறுப்பார்களானால் மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு தலைமை வேட்பாளர் தன்னுடன் நேரடியான பகிரங்க விவாதத்துக்கு வந்து தாங்கள் தமிழர்களின் அழிவுக்கு காரணம் இல்லை என்று சொல்லட்டும் என்று சவால் விடுத்தார்.
read more...

Saturday, 27 March 2010

தமிழர்கள் மஹிந்தவின் கரங்களை பலப்படுத்துவார்களா?

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பதிலே பல சக்திகள் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கு சில தமிழர்களும் துணை போகின்றார்கள் என்பதுதான் கவலைக்குரிய விடயம்.

அன்றுதொட்டு இன்றுவரை சிங்கள பேரினவாத அரசுகள் மாறி, மாறி தமிழர்களின் எதிர்காலத்தையும், அரசியல் சக்தியையும் இல்லாதொழிக்க பல சதித் திட்டங்களை தீட்டி வருகின்றன.

இந்தத் தேர்தலிலே தமிழர்களின் அரசியல் எதிர் காலத்தை இல்லாதொழிக்க உச்ச கட்ட சதித் திட்டங்களை தீட்டி வருகின்றன. தமிழர்களின் அரசியல் எதிர் காலத்தை இல்லாதொழிக்க தமிலர்கழலே பயன்படுத்தப்படுவது வேதனைக்குரிய விடயமே. பணத்துக்கும், சுகபோகங்களுக்காக  தமிழர்கள் தமிழினத்தை விற்பது வேதனைக்குரிய விடயமாகும்.

தமிழர்களின் வாக்குகளை வேட்டையாடி தமிழர் பிரதிநிதித்துவத்தையும், தமிழரின் அரசியல் பலத்தையும் இல்லாதொழிக்க பேரினவாத அரசு தனது கட்சியிலே தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்தி இருப்பதோடு பல சுயேட்சைக் குழுக்களையும் களமிறக்கி இருக்கின்றது.

இந்த வேட்பாளர்கள் சொல்கின்றனர் அரசோடு சேர்ந்தால்தான் அபிவிருத்திகளை செய்ய வேண்டும் என்று. அரசோடு சேர்ந்தால்தான் அபிவிருத்திகளை செய்ய முடியுமா? தமிழர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பதன் மூலம் அரசோடு பேரம் பேசி பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கலாம்தானே.

அது ஒரு புறமிருக்க இந்த மகிந்தவின் அரசு தமிழர்களை இல்லாதொழிக்கின்றது. புலிகளே தமிழர்களின் ஏக பிரதி நிதிகள் என்று வீர வசனம் பேசியவர்கள் எல்லாம் இன்று மகிந்தவே சிறந்த தலைவர் என்று வால்ப்பிடிக்கின்றனர். இவர்களின் கொள்கைதான் என்ன? இன்று ஒரு கொள்கை நாளை ஒரு கொள்கையா? நாளுக்கொரு கொள்கை மாற்றும் இவர்களால் தமிழர்களுக்கு என்னதான் செய்ய முடியும். தமிழினத்தை விற்று தாம் சுகபோக வாழ்க்கை வாழ்வதைத் தவிர.

கிழக்கு மாகாணம் வன்னித் தலைமையினால் புறக்கணிக்கப்படுகின்றது. கிழக்கு மக்களுக்கு தனியே ஒரு தலைமைத்துவம் வேண்டும் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்று புலிகளில் இருந்து பிரிந்து வந்தவர் என்ன செய்கிறார். அவர் புலிகளில் இருந்து பிரிந்து வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றுகின்றாரா? கிழக்கு மாகாண மக்களுக்காக ஒரு தனித்துவக் கட்சியை ஆரம்பித்தார?

இன்று இந்த அரசாங்கத்தின் கட்சியிலே போட்டியிடுபவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப் பட்டாலும் அவர்களால் தன்னிட்சயாக செயற்பட முடியுமா? அரசின் பொம்மைகளாக அரசு சொல்வதற்கு தலையாட்டவேண்டியவர்கலாகத்தான் இருக்க வேண்டும். மீறி செயற்பட்டால் பதவிகள் பறிக்கப்படும் என்பது எல்லோரும் அறிந்த விடயமே.

தமிழர்கள் சிந்தித்து செயற்படவேண்டிய காலமிது. பேரினவாதக் கட்சிகளுக்கு தமிழினத்தை விற்காமல் தமிழர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதிலே ஒவ்வொரு தமிழர்களும் உறுதியாக இருக்கவேண்டும்.
read more...

Friday, 26 March 2010

பிள்ளையான் தமிழ் மக்களுக்காக என்ன செய்யப்போகிறார்

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் காலமிது. தமிழர்களின் அரசியல் பலத்தை இல்லாதொழிக்க பல சதித்திட்டங்கள் நடந்து வருகின்றன என்பது பலரும் அறிந்த விடயம்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை 17 கட்சிகளும், 28 சுயேட்சைக் குழுக்களுமாக 360 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கின்றனர். 5 பாராளுமன்ற கதிரைகளுக்காக 360 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் தமிழர்கள் சிந்தித்து சேட்பட வில்லை எனில்  தமிழர்களின் அரசியல் எதிர் காலம் கேள்விக்குறியாகிவிடும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே பல தமிழ் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (T .M .V .P ) கட்சியானது கிழக்கு மாகாண சபையினை தன் வசம் வைத்திருப்பதோடு. பல்வேறு பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மூலமும் அவர்களின் அண்மைக்கால செயற்பாடுகள் மூலமும் மக்கள் மத்தியிலே   செல்வாக்கு மிக்க கட்சியாக இருக்கின்றது.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான இக் கட்சியினர் தமிழீழ  விடுதலைப் புலிகளிலிருந்து கருணா அம்மான் விலகி தனியாக வந்தபோது இவர்களும்  பிள்ளயானோடு சேர்ந்து வந்தவர்கள்தான் ஆனாலும் கருணா அம்மானின் சில நடவடிக்கைகள் காரணமாக பிள்ளையான் தலைமையிலே தனித்து ஒரு கட்சியாக செயற்பட்டு வருவதோடு கட்சியிலே பல கல்விமான்களையும் பல துறை சார்ந்தவர்களையும் இணைத்திருப்பதோடு இத் தேர்தலிலும் பல துறை சார்ந்தவர்களை களமிறக்கி இருக்கின்றனர்.

இத் தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்திலே 2 பாராளுமன்ற உறுப்பினர்களை இக் கட்சியிலே பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த காலங்களிலே கிழக்கு மாகாண சபை மூலமாக பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களை செய்து வருகின்றனர். ஆனாலும் ஏனைய தமிழ் கட்சிகள் கிழக்கு மாகாண சபையினை ஏற்றுக்கொள்ளவில்லை.

கடந்த 30 ௦ வருட ஆயுதப் போராட்டாத்தத்தின் மூலம் நான் எதனையும் பெறவில்லை. விலை மதிக்க முடியாத உயிர்களையும், உடமைகளையும் இழந்து அனாதைகளானதுதான் மிச்சம்.

இன்று தமிழனுக்கு கிடைத்திருக்கின்ற மாகாண சபை மூலமாக நாம் தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முயற்சி செய்யவேண்டுமேதவிர கிடைத்தவற்றையும் கை நழுவ விடக் கூடாது.  கடந்த காலங்களில் நாம் செய்த தவறு இதுதான் கிடைத்தவைகளை வைத்து இன்னும் பலவற்றை பெற்றிருக்க முடியும்.

இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளானது கிழக்கு மாகாண சபை மூலம் பல திட்டங்களை செய்து வருகின்ற இதே வேளை பாராளுமன்றத்திலே தமது உறுப்பினர்கள் 2 , 3  பேரை அனுப்புகின்றபோது இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடிவதோடு கிழக்கு மாகாண சபையினையும் பலப்படுத்த முடியும் என்று சொல்கின்றார்கள். இதுதான் சாத்தியமான விடயமும் கூட.

கிழக்கு மாகாண சபையைப் பொறுத்தவரை இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்ற ரீதியில் சிறுவர்களின் கல்வியிலே அக்கறை கொண்டு பல்வேறுபட்ட செயத்திட்டன்களை நடைமுறைப் படுத்தி வருகின்றது. பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலையில் சேர்க்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்திலே   சிறுவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது நல்ல விடயமாகும்.

எமது கல்வி அபிவிருத்தி சங்கமானது பல பிரச்சினைகளை  எதிர் நோக்கியபோது பல இலட்சம் பெறுமதியான பொருட்களை வழங்கியதோடு தொடர்ந்தும் பல உதவிகளை செய்வதாக உத்தரவாதம் வழங்கப் பட்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகமாக இருக்கின்றன. இவர்கள் தொடர்பிலும் அதிக அக்கறை செலுத்தி வருவதோடு இவர்களை மையப்படுத்தி பல செயத்திட்டன்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இக் கட்சியானது கிழக்கு மாகாணத்தை மட்டு பிரதி பலிப்பதாக இல்லாமல் அனைத்து தமிழ் மக்களுக்கும் உரித்தான ஒரு கட்சியாகும். அதனால்தான் வடக்கு கிழக்கு உட்பட தமிழ் பிரதேசங்கள் அனைத்திலும் தமது வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதோடு. எதிர் வரும் காலங்களில் வட பகுதி மக்களுட்பட அனைத்து தமிழ் மக்களுக்காகவும் சேவையாற்றக் காத்திருப்பதாக  அண்மையில் களுவாஞ்சிகுடியில்  நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது அக் கட்சியின் செயலாளர் குறிப்பிடார்.

அன்று தொட்டு இன்றுவரை சில தமிழ் கட்சிகளும், அரசியல்வாதிகளும் மாகாண சபையினை ஏற்றுக்கொள்ளவில்லை சம்பந்தன் அவர்கள் கிழக்கு மாகாண சபை என்று ஒன்று இல்லை என்றே சொல்லி இருக்கின்றார்.

இவர்கள் கிழக்கு மாகாண சபையை ஏன் வெறுக்கின்றனர். கிடைப்பதனை வைத்துக்கொண்டு மேலதிகமாக பெறுவதற்கு முயற்சிகளை மேற்  கொள்ளாது தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தி இன்றி இருக்கத்தான் வேண்டுமா? நாம் வீர வசனம் பேசிப்பேசியே செத்து மடிவதைத் தவிர வேறு வழி  இல்லையா?

கிழக்கு மாகாண சபையை வேருப்பவர்களிடம் கேட்கின்றேன் ஏன் கிழக்கு மாகாண சபையை வேருக்கின்றிர்கள்? கிழக்கு மாகாண சபை மூலம் தமிழர்கள் சிறிதேனும் அனுபவிக்கின்ற உரிமைகளை அனுபவிக்க வேண்டாமா
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பாராளுமன்றத்தேர்தல் விஞ்ஞாபனம்- 2010

அதிகாரமிக்க மாகாணசபையை கட்டியெழுப்புவோம்.

மாகாண சபையைப் பலப்படுத்தி, 13 ஆவது திருத்தச்சட்ட அரசியல் அதிகாரத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்காகவும் அழிவடைந்த தேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்குமான மக்கள் ஆணையைக் கோரல்.சித்திரைமாதம் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்; கட்சியானது தனது கட்சி; சின்னமான படகுச் சின்னத்தில் தனித்துக் களமிறங்கியுள்ளது.
தமிழ்பேசும் மக்களின் குறுகியகால, நீண்டகால நோக்கிலான அபிவிருத்தி, அரசியல் அபிலாசைகளின் நிமி;த்தம் இன்றைய காலத்தின் தேவையினை உணர்ந்து தூரநோக்குப் பார்வையுடன் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இத்தீர்க்கமான முடிவானது தேர்தல் கால குறுந்தீர்மானம் அல்லாமல் கிழக்கு மாகாணத்தின் தனித்துவம், அதன் இருப்பு, ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வு, நீண்டகால நோக்கிலான தொடர்ச்சியான அபிவிருத்தி போன்றவற்றின்பால் அதிக கரிசனை கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டதொரு தீர்மானமாக உள்ளது.
 
ஒரு பொறுப்புமிக்க மக்கள் கட்சி என்ற நிலையிலிருந்து சற்றும் பிசகாமல் கடந்த கால அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டத் தலைமைகளின் தவறுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற அனுபவங்களையும் கருத்திற்கொண்டே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் அனைத்துமட்ட உறுப்பினர்கள், தமிழ்பேசும் மக்களின் அபிலாசைகளில் அக்கறை கொண்டவர்கள், புத்திஜீவிகள், புலம்பெயர்வாழ் சகோதரர்கள், சர்வதேச சமூகம் போன்றவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும் தனித்துக் களமிறங்கும் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. எமது பரந்துபட்ட மக்களின் அரசியல் அபிலாசைகளின் பிரதிபலிப்புகளிலிருந்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக உறுதித்தன்மை இன்னும் வலுவாக இருக்கின்றது.
 
தனித்துப் போட்டியிடும் இத் தேர்தல்; பயணத்தினூடாக தமிழ்பேசும் சமூகத்தின் சார்பாக எமது கட்சியானது அடைய எத்தனிக்கும் தொலைநோக்குத் திட்டத்தினை விரிவாக தெளிவுபடுத்தும் எண்ணப்பாங்கில் இவ்; ஆவணம் வரையப்படுகின்றது.சுதந்திர இலங்கையின் ஆறு தசாப்தங்களுக்கு மேற்பட்ட வரலாற்றில் இந்நாட்டின் சிறுபான்மைச் சமூகமான தமிழ்பேசும் சமூகமானது தனக்குரிய அரசியல் உரிமைகளுக்காக பல்வேறுபட்ட போராட்ட யுக்திகளை மேற்கொள்ள உந்தப்பட்டது.

முதல் மூன்று தசாப்தங்களில் அரசியல் ரீதியான போராட்டமும், அடுத்த மூன்று தசாப்தங்கள் ஆயுதப் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டன.ஆனால் எந்தவொரு வழிமுறையும் உரிய இலக்கினை எய்தாமல் தோல்வி கண்டுள்ளன. இப்போராட்டங்களுக்காக தமிழ் சமூகமானது மீளப்பெறமுடியாத பெரும் விலைகளை செலுத்த நேரிட்டது.
 
அத்தோடு தொடர்ச்சியாக உயிரிழப்புக்கள், அகதிவாழ்க்கை, இளைஞர்கள், சிறுவர்களின் எதிர்காலங்களை வீணாக்கியமை, ஒட்டுமொத்த சமூகத்தின் சமூக உட்கட்டமைப்புகள் சீர்குலைந்தமை போன்ற பாரிய இழப்புக்களை உரிய இலக்கினை எய்தாமல் முடிவுறுத்தப்பட்டது. இப்போராட்டங்களின் காரணமாக அபிவிருத்தியின்மை, பாதுகாப்பின்மை, அச்சமான வாழ்வு என்பன பலமடங்கு அதிகரித்து மிகவும் நலிவடைந்தொரு சமூகமாகவும், அரசியல் ரீதியில் உறுதியான தலைமைகள் இல்லாத ஒரு சமூகமாகவும் மாறியுள்ளது.
 
அரசியல் ரீதியான போராட்டம் எமது சமூகத்துக்கு ஏற்படுத்திய தாக்கங்களை விட ஆயுத ரீதியிலான போராட்டம் மிகப்பெரும் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தி சமூக இருப்பினையும் ஆட்டம் காணச் செய்துள்ளது. ஆயுதப்போராட்டமானது தோல்வியில் முடிவுறுத்தப்பட்டபோதும், அதனால் சமூகத்துக்கேற்பட்ட தாக்கம், பின்னடைவுகள் என்பனவற்றிலிருந்து மீண்டெழுவதற்கு தமிழ் சமூகமானது அர்ப்பணிப்பு, தியாகம், தூரநோக்குப்பார்வை, தனித்துவம்காக்கும் ஒரு உறுதியான அரசியல் தலைமையின் பின்னால் தனது பயணத்தை தொடர்வது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.50% க்கு 50%, சமஷ்டி, தனிநாடு ,உள்ளக சுயாட்சி என்று காலத்துக்குக் காலம் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைக்கான இறுதி இலக்கின் வடிவம் மாற்றப்பட்டு, அதற்கான மாறுபட்ட போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு இறுதியில் இவை எதுவுமே கிடைக்கப்பெறாமல் பேரினவாத சக்திகளினாலும், தமிழ் அரசியல் தலைமைகளின் தவறான அணுகுமுறைகளினாலும்; தமிழ் பேசும் சமூகமானது அரசியல் அநாதைகளாக மாறநேர்ந்துள்ளது .
 
இவ்வாறான இழப்புக்கள், அழிவுகள், வலிகள், ஏமாற்றங்கள் போன்றவற்றிலிருந்து கிடைக்கப்பெற்ற கசப்பான அனுபவங்களை கருத்திற் கொண்டு நாம் முன்னேறவேண்டியுள்ளது. மிகமுக்கியமான வரலாற்றுத் தருணங்களில் அறிவு ரீதியான அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளாமல், உணர்ச்சி வயமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
 
 
இந்த தவறான வழிகாட்டல்கள் இனிமேலும் தொடரக் கூடாது என்பதையிட்டு நாம் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். எனவேதான் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது இன்றைய காலத்தின் தேவையை உணர்ந்து யதார்த்தப+ர்வமானதும், நடைமுறையிற் சாத்தியமானதுமான அரசியல் தீர்வு பற்றி தெளிவான பார்வையைக் கொண்டுள்ளது.
 
வரலாற்றில் எப்போதும் இல்லாத சவால்கள் நிறைந்த இக்காலத்தில் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அரசியல் யாப்பினூடாக வரையப்பட்டு தமிழ்மக்களுக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் குறைந்தபட்ச உரிமை மாகாண சபை முறைமையாகும்.

 
இம்மாகாணசபை முறைமையை தொடர்ந்து பேணிப்பாதுகாப்பதும் ஜனநாயக வழிமுறைகள் ஊடாக அதனை வலுப்படுத்துவதும் அவசியமானதொன்றாகும். 13 ஆவது அரசியல் திருத்தத்தினூடாக வழங்கப்பட்டுள்ள குறைந்தபட்ச அதிகாரங்கள் மட்டுமே தமிழ் மக்களின் நிறைவான இறுதியான அரசியல் உரிமை அல்ல. என்றபோதிலும் இத்தனை வருட போராட்டங்களுக்குப்பின் கிடைக்கப்பெற்றிருக்கும் இவ்அரசியல் அடிப்படை உரிமையினைத் தளமாகக் கொண்டு, அதனைப்பயன்படுத்தி அதனூடாக தமிழ்பேசும் மக்களின் ப+ரணப்படுத்தப்பட்ட அரசியல் அபிலாசைகளையும் அபிவிருத்திகளையும் எய்தமுடியும் என்ற, தீர்மானத்திற்கு நாம் வந்துள்ளோம்.
 
அதனடிப்படையில் அதிகாரமிக்க மாகாணசபைக்கான மக்கள் ஆணையைக் கோருமுகமாகவே தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இப்பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்கியுள்ளது.60 வருடகால அரசியல், ஆயுத ரீதியான போராட்டம் ஏற்படுத்திய பாரிய திருப்பங்களைக் கடந்த நிலையில், அனைத்து இழப்புகளுக்கும் ஈடாக தமிழ்பேசும் மக்களுக்கு கிடைத்துள்ள யாப்புரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள தீர்வு மாகாணசபை முறைமை மட்டுமேயாகும்.

1987 ஆம் ஆண்டு இந்திய அரசின் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைமுறைமைக்கு 20 வருடங்கள் கடந்து விட்டபோதிலும் இப்போது இரண்டு வருடங்களாகத்தான் கிழக்கு மாகாண மக்களினால் இம்மாகாண சபை அனுபவிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் அதிகளவு எதிர்பார்ப்புக்களும், ஏக்கங்;களும் உள்ள சமூகத்தின் தேவைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில்தான் மாகாணசபை நிர்வாகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
 
கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை விரைவில் வடமாகாணத்திலும் ஏற்படுத்தப்படவேண்டும்.இம்மாகாணசபைகளுக்கென கொண்டுவரப்பட்ட 13 ஆவது சட்டத்திருத்தத்தினூடான அரசியலதிகாரங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும். இதனூடாக கிழக்கு, வடக்கு போன்ற மாகாணங்கள் தமிழ்பேசும் மக்களின் உறுதியான அரசியல் தீர்வுக்கும், அபிவிருத்திக்குமாக கரம் கோர்த்து செயற்பட வேண்டும்.

இவ் இலக்கினை எய்தவேண்டுமானால் மாகாணசபையின் அதிகாரங்களை வழங்கக்கோரும் கட்சியின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்திலும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.கடந்த கால தமிழ் சமூகத்தின் அரசியல் வரலாற்றில் கசப்பான அனுபவங்கள் எமக்குக் கற்றுத்தரும் முக்கிய பாடம் யாதெனில், கிடைத்த சந்தர்ப்பங்களைத் தவறவிட்டமையும், காலத்தின் தேவையுணர்ந்து செயற்படாமையும், நடைமுறையிற் சாத்தியமான அரசியல் இலக்குகளை வகுக்காமையுமாகும்.

ஆயுதப்போராட்டம் தோல்வியில் முடிவுற்றபோதிலும், அரசியல் ரீதியில் பலவீனமாகஉள்ள நிலையிலும், தேசிய, சர்வதேச, அரசியல் எதிர்பார்ப்புகளுக்கேற்ப நம்பிக்கையினைக் கட்டியெழுப்பவேண்டிய பாரியபணி பொறுப்புமிக்க அரசியற் கட்சிக்குண்டு.எமது மக்களின் விருப்புவெறுப்பிற்கேற்ப மக்கள் பொறுப்பினை உணர்ந்து செயற்படுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது, மாகாணத்தை அடிப்படை அலகாகக் கொண்ட அதிகாரப்பகிர்வுக்கான அரசியல் நகர்வுகளை ஏலவே ஆரம்பித்து, அதன் ஒரு முக்கிய திருப்பமாக இப்பாராளுமன்றப் பொதுத்தேர்தலை எதிர் கொள்கின்றது.

 
அந்தவகையில் கிழக்கு மாகாணசபையில் பொறுப்புமிக்க ஆளுங்கட்சியாக இருக்கின்ற தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது, மாகாணசபையினை அரசியல் அதிகாரங்களுடாகப் பலப்படுத்தி, அதிலிருந்து தமிழ்பேசும் சமூகத்தின் முழுமை பெற்ற அரசியல் உரிமைகளையும், அபிவிருத்திகளையும் பெற்றுக் கொள்வதற்காகவும் தனித்துவமான தனது அடையாளத்தை தொடர்ந்தும் பேணவும் மக்கள் ஆணையைக் கேட்கின்றது.

 
கடந்த காலங்களில் அரசியல் ரீதியான, காலத்தின் தேவைக்கேற்ப அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலை சந்தித்த தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது இன்றைய காலத்தின் தேவையுணர்ந்து தனித்து போட்டியிடுகின்றது. புதிதாகப் பொறுப்பேற்கும் அரசாங்கத்திடமிருந்து கிழக்கு மாகாணசபைக்குரிய முழுமையான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வலுவானதொரு பேரம் பேசும் சக்தியாக தன்னை இனம் காட்டமுனைகிறது. தமிழ் சமூகத்தின் பலமான அரசியல் அடையாளமாக விளங்குகின்ற இக்கட்சியின் தனித்துவம் தொடர்ந்தும் பேணப்படுவதற்காகவும் அதிகாரமிக்க மாகாணசபையினைக் கட்டியெழுப்பவும் இப்பாராளுமன்றத் தேர்தலினூடாக மக்கள் ஆணையை கோருகின்றோம்.

 
இந்த ஆணையினை வழங்கவேண்டியது எமது பிரஜைகள் ஒவ்வொரவரதும் வரலாற்றுக் கடமையாகும்.சமுதாய பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் எமது மக்களின் சமூக பொருளாதார கல்வி கலாசார மற்றும் சமூக மேம்பாட்டு விடயங்கள் அனைத்திலும் அபிவிருத்தி காணவேண்டும் என்கின்ற இலக்கை மையமாகக் கொண்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது பொதுத்தேர்தலுக்கு முகம் கொடுத்துள்ளது.

 
பாரம்பரிய கலை கலாசார பண்பாடுகளையும் தொன்மைமிக்க வரலாற்றையும் கொண்ட எமது சமூகம் இன்று தனது வரலாற்று அடையாளங்களைத் தொலைத்த நிலையில் காணப்படுகின்றமை வேதனைக்குரிய விடயமாகும். இந்த நிலைமையிலிருந்து மீண்டெழுவதற்கு நாம் கல்வித்துறையில் மிகப்பெரிய பாய்ச்சல் ஒன்றை ஏற்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.
 
 
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது கடந்த மாகாணசபைத் தேர்தலில கலவித்துறையையும் அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னிறுத்தி களமிறஙகியது.நடந்து முடிந்த யுத்தமானது எமது சமூகத்தின் கல்விவளத்தைப் பெருமளவில் சூறையாடியுள்ளது. பௌதீக வளங்கள் அழிவடைந்துள்ள நிலையிலும் அச்சமான சூழ்நிலையிலும். கல்வியைத் தொடர்வதில் எமது சமூகம் பல சவால்களை எதிர் கொண்டது. ஆனால் மாகாணசபை பொறுப்பேற்கப்பட்டதன் பின்பு முதலமைச்சர் கல்வித்துறையின்பால் காட்டிய அதீத ஈடுபாடு காரணமாக இன்று கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையில் அபரிதமான முன்னேற்றம் காணப்படுகின்றது.

பல சவால்களுக்கு மத்தியிலே இந்த வளர்ச்சி எய்தப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினது பிரதிநிதித்துவங்கள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் இன்னும் அதிகளவிலான அபிவிருத்திகளை கல்வித்துறையிலே எய்தமுடியும்.இதே போன்று கிழக்கு மாகாணத்திலுள்ள இன்னொரு பிரதான சவால் கணவனை இழந்த பெண்களும், பெண் தலைமைக் குடும்பங்களுமாகும். யுத்தம் இயற்கை அனர்த்தம் என்பன காரணமாக சுமார் 32000 க்கு மேற்பட்ட கணவனை இழந்த பெண்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ளனர். இவர்களுக்கான அடிப்படை வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை ஒரு முக்கிய இலக்காகக் கொண்டு கிழக்கு மாகாணசபையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் செயலாற்றி வருகின்றது.
 
 
அவ்வகையில் எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து எமது மக்களினதும் பிரதேசத்தினதும் மேம்பாட்டுக்கான பல அபிவிருத்திக்கான முன்னெடுப்புக்கள் செயற்படுத்தப்படவுள்ளன. பெண்கள்பாராளுமன்றப் பொதுத்தேர்தலின் பின்பு மாகாணசபை ஊடாக கணவனை இழந்த பெண்களுக்கான விசேட வாழ்வாதார மற்றும் கொடுப்பனவுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
 
வறுமை கோட்டின்கீழ் வாழ்வோர்
• வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுகn;கன வழங்கப்படும் ஊக்கத்தொகையான (பிச்சைச் சம்பளம்) ரூபா 100 இனை ரூபா 1000 ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.முதியோர், மற்றும் விசேட தேவைக்குட்பட்டோர்.

• முதியோர் உள ஆற்றுப்படுத்தல் நிலயங்களை பிரதேசங்கள் தோறும் ஆரம்பிக்கபபடும்.

• விசேட தேவைக்குட்பட்டோருக்கான அரச கொடுப்பனவுகளை உருவாக்குவதற்கும் அதிகரிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளல்.
• முதியோர் பராமரிப்புக்கான மாற்றுத் திட்டங்களை முதியோர் சங்கங்களினூடாக கண்டறிதலும் நடைமுறைப்படுத்தலும்.

 
ஆரம்பக்கல்வி
• கிராமப்புறங்களில் பெருமளவில் காணப்படும் பாடசாலை மாணவர்களின் இடைவிலகலுக்கான காரணங்களை கண்டறிந்து அவர்களை மீளவும் பாடசாலைக் கல்வியைத் தொடர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சிறுவர் பாதுகாப்பு

• பராயமடையாத சிறுவர்களை வேலைக்கமர்த்துதலுக்கெதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அவை முற்றாக தடைசெய்யப்படும். அத்தோடு அவர்களது கல்விநடவடிக்கைகள் தொடர வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும்.

பட்டதாரிகள்

• வேலையற்ற பட்டதாரிகளுக்குப் பொருத்தமான வேலை வாய்ப்புக்கள் வழங்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இளைஞர் யுவதிகள்

• படித்த இளைஞர் யுவதிகளுக்கு பொருத்தமான வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பதுடன், அவர்களுக்கு சில விசேட துறைகளில் பயிற்சிகளை வழங்குவதனூடாக இவர்களது தொழிநுட்ப அறிவை மேம்படுத்தலும் சுயதொழிலுக்கான வழிகாட்டலும் நடைமுறைப்படுத்தப்படும்.

கிராமிய அபிவிருத்தி


• கிராமப்புறங்கள் மற்றும் அபிவிருத்தி குன்றிய எல்லைக்கிராமங்கள் போன்றவற்றில் வாழும் மக்களுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக நிறைவேற்ற ஆவன செய்யப்படும்.

கிராமியப் பொருளாதாரம்
• கிராமிய ரீதியில் அப்பிரதேசத்துக்கென தனித்துவமானதும் மற்றும் அப்பிரதேசங்களில் விளையக்கூடியதுமான பயிர்ச்செய்கைகளை இனங்கண்டு அவற்றை ஊக்குவித்தலும் அவ்வுற்பத்தியில் அப்பிரதேசத்தினை தன்னிறைவடையச்செய்தலுக்குமான திட்டங்கள் அமுல்படுத்தப்படும்

புனர்வாழ்வு
• உயர்பாதுகாப்பு வலயத்துள் தள்ளப்பட்ட பயிர்செய்கைக் காணிகள் மற்றும் தனியார் உடைமைகளை மக்களுக்கு மீளவும் கையளிப்புச் செய்வதற்கு ஏற்பான பிரேரணைகளைப் பாராளுமன்றத்தில் முன்வைத்து, நிவாரணம் பெறவும் அவற்றினை எமது மக்கள் மீளக் கையேற்கவும் நடவடிக்கை எடுத்தல்.
கல்விமேம்பாடு

• கிராமப்புற மற்றும் நகர்ப்புற பாடசாலைகளின் அடிப்படைத்தேவைகள் பூர்த்திசெய்யப்படும். உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
மீன்பிடி

• மீன்பிடித்தடைகள் நீக்குவதற்கு உச்சபட்ச நடவடிக்கைகள் எடுப்பதோடு, கடல் மற்றும் நன்னீர் மீன்பிடி துறைகளை நவீனமயப்படுத்தவும் சந்தைப்படுத்தல் வாய்ப்புக்களை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விவசாயம்

• விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றவற்pல் முன்னணி மாகாணமாக திகழும் வகையில் பிரமாண்டமான விவசாயப்பண்ணைகள் நவீPனமுறையில் உருவாக்கப்படும்.
சுகாதாரம்
• கிராமிய வைத்தியசாலைகளைப் புனரமைத்தலும் தரமுயர்த்தலும்,

கலை, கலாசாரம்
• எமது பாரம்பரிய கலைகலாசாரங்களை பேணுவதும், நவீன உலகின் புதிய கலை கலாசாரங்களை எமது சமூக யதார்த்தத்திற்கேற்ப உள்வாங்கவும் நடவடிக்கை எடுத்தல். இதற்காக உலக கலாசார மையம் ஒன்று கிழக்கு மாகாணத்தின் மையமான மட்டக்களப்பில் நிறுவப்படும்.

• முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் 100 அடி உயர முழுஉருவச்சிலை ஒன்றை மீன்பாடும் மட்டக்களப்பு வாவியில் நிறுவுதல்.

• முதுமையுற்ற கலைஞர்களுக்கு மாதாந்த ஓய்வூதிய திட்டம் ஒன்று உருவாக்கப்படும்.

நகர்ப்புறத்தொழிலாளர்கள்

• தனியார் பேருந்துக்கள், ஆட்டோக்கள், தெருவோர வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் மற்றும் கூலித்தொழிலாளர்களுக்குமான ஓய்வூதியத்திட்டம் ஒன்றை உருவாக்குதல்.

பண்பாடு

• இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வரலாற்று பொக்கிசங்களை சேகரித்து, ஆவணப்படுத்த கிழக்கு மாகாணத்தில் ஒரு நூதனசாலையை அமைத்தல்.

கைதிகள் விடுதலை

• பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் விடுதலை தொடர்பாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
விளையாட்டுத்துறை

• பாடசாலை விளையாட்டுக்கழகங்கள், இளைஞர் கழகங்கள் ஊடாக விளையாட்டுத்துறையினை நிதி நிர்வாக ரீதியாக விருத்தி செய்து புதிய யுத்திகளுடாக தேசிய சர்வதேச மட்டங்களிலான பங்குபற்றலுக்கும் வெற்றியீட்டலுக்குமான வழி சமைத்தல்.

உல்லாசத்துறை

• உள்நாட்டு, சர்வதேச உல்லாச பயணிகளை கவரும் அளவிற்கு அடையாளம் காணப்பட்ட உல்லாச பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.


வர்த்தகத்துறை

• சிறிய, நடுத்தர வர்த்தக துறையை ஆரம்பிப்பதற்கும், விருத்தி செய்வதற்குமான மானியம் மற்றும் இலகு கடன் வசதிகளை ஏற்படுத்தப்படும்.

இலங்கையின் அனைத்து தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் கிழக்கு மாகாண சபையை ஏற்றுக் கொள்கின்றனரா? ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் காரணம் என்ன?
read more...

Thursday, 25 March 2010

சாமியார்களும், மாமியார்களும்

இன்று போலி சாமியார்களின் லீலைகள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கின்றன. இவர்கள் கடவுளின் பெயரில் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்திக்கொண்டு வருகின்றனர்.

நான் பல தடவை மனிதக் கடவுளர்களை கடவுளாக மதிப்பதை மக்கள் நிறுத்த வேண்டும் மூட நம்பிக்கைகளை கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறேன். நாம் ஏன் மனிதர்களை வணங்க வேண்டும். இந்து சமயம்தான் சொல்கின்றது ஆதியும் அந்தமும் இல்லாதவன்தான் இறைவன் என்று அப்படி இருக்கும்போது மனிதனை நாம் ஏன் வணங்க வேண்டும் என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.

இன்று கடவுளை வணங்குபவர்களைவிட மனிதக் கடவுளர்களை வணங்குபவர்களின் தொகை அதிகமாகிக் கொண்டு வருகின்றது. இப்படியே போனால் எதிர் காலத்தில் உண்மையான கடவுளை எவருமே வணங்கமாட்டார்கள் போலாகிவிட்டது. 

போலி சாமியார்களின் சுத்துமாத்துக்கள், லீலைகள் காரணமாக இன்று மக்கள் மத்தியிலே கடவுள் மீது இருக்கின்ற நம்பிக்கை இல்லாமல் போகின்றது. இந்து சமயத்தைப் பொறுத்தவரை மனித கடவுள்கள் (சாமியார்கள்) தேவை இல்லை இந்து சமயம் மக்களை நல்வழிப் படுத்துகின்றது.

நாம் மனிதர்களை ஏன் கடவுளாக வணங்க வேண்டும். இவர்கள் கடவுளை மீறிய ஒரு சக்தியா இல்லையே. மக்கள் சிந்திக்க வேண்டும். இந்து சமயம் சார்ந்த அமைப்புக்கள் இதிலே தலையிட வேண்டும். இந்து சமயத்தைப் பொறுத்தவரை மனிதக் கடவுளர்கள் தேவை இல்லை.

இந்த ஆசாமிகளின் மந்திர மாய, தந்திர காம லீலைகளில் நடிகைகள், பிரபலங்கள் மட்டுமல்ல சாதாரண மக்களும் வசப்படுத்தப்படுகின்றனர். ஆனால் சாதாரண மக்கள் பற்றிய தகவல்கள் வெளிவருவதில்லை.


இந்த ஆசாமிகளின் மாய வலையில் பல மக்கள் சிக்கித்தவிக்கின்றனர் என்பதுதான் உண்மை. இந்த ஆசாமிகளிளிருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் அத்தனை சாமியார்களும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் இவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் இல்லை.

இந்து அமைப்புக்கள் இதிலே கவனம் செலுத்த வேண்டும். ஒன்று மட்டும் கேட்கின்றேன் இந்து அமைப்புக்களிடம் நான் சாமியாராக வேண்டும் என்றால் எனக்கு என்ன தகுதி இருக்க வேண்டும்? நானும் சாமியாராகப் போகிறேன்.
read more...

Tuesday, 23 March 2010

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலில் விலை போகும் தமிழர்கள்

இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் சூடு பிடித்திருக்கும் காலமிது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ம் திகதி இடம்பெற இருக்கின்ற இந்த பாராளுமன்றத் தேர்தலிலே. தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை
இந்தத் தேர்தலிலே தமிழர்கள் சிந்தித்து செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். சிங்கள பேரினவாத அரசும், தீய சக்திகளும் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சிக்கு சில கேள்விக்குறியாக்கும் முயற்சியிலே பல தீய சக்திகள் சதித்திட்டங்களை தீட்டி வருகின்றன.

தமிழர்களே அவர்களின் அடிவருடிகளாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.


இந்தத் தேர்தலை பொறுத்தவரை மட்டக்களப்பு மாவட்டத்திலே பல தமிழ் கட்சிகளும் , சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இந்த தமிழ் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் ஏன் இவ்வாறு பிரிந்து தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கின்றார்கள் என்று பார்க்கும்போது. அங்கே தமிலர்களுக்கேதிராக பல சதித்திட்டங்கள் இருப்பது புலனாகின்றது
 
தொடர்ந்து பார்க்க....
read more...

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலில் விலை போகும் தமிழர்கள்

இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல்  சூடு  பிடித்திருக்கும்  காலமிது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ம் திகதி இடம்பெற இருக்கின்ற இந்த பாராளுமன்றத் தேர்தலிலே.   தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சியிலே பல தீய சக்திகள்  சதித்திட்டங்களை தீட்டி வருகின்றன.

இந்தத் தேர்தலிலே   தமிழர்கள் சிந்தித்து செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். சிங்கள பேரினவாத அரசும், தீய சக்திகளும் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சிக்கு சில தமிழர்களே அவர்களின் அடிவருடிகளாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

இந்தத் தேர்தலை பொறுத்தவரை மட்டக்களப்பு மாவட்டத்திலே பல தமிழ் கட்சிகளும் , சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.   இந்த தமிழ் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் ஏன் இவ்வாறு பிரிந்து தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கின்றார்கள் என்று பார்க்கும்போது. அங்கே தமிழர்களுக்கெதிராக பல சதித்திட்டங்கள்  இருப்பது புலனாகின்றது.

பேரினவாதக் கட்சிகளும், ஏனைய சில தீய சக்திகளும் தமிழர்களின் வாக்குகளை சிதறடிப்பதன் மூலம் தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநித்தித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு முயற்சி செய்து வருகின்றார்கள். இங்கே பணம் கொடுத்து சில தமிழ் வேட்பாளர்கள் வாங்கப்பட்டிருக்கின்றனர். பணத்துக்கும், சுகபோக வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு இவர்கள் தமிழினத்தையே விற்கவும் துணிந்து விட்டனர்.


 சிங்கள பேரினவாதக் கட்சிகளிலே பல தமிழர்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் சிலர் அரசியலுக்கு புதியவர்கள். ஆனாலும் தமிழர் உரிமைகளை  வென்றெடுக்கப் போகின்றோம். நாங்கள் தமிழர்கள், தமிழர்களுக்காக குரல் கொடுக்கப்போகின்றோம் என்றெல்லாம் வீர வசனம் பேசியவர்கள்.  இன்று எங்கே போனது இந்த வீர வசனங்கள். இவர்கள் தமிழ் பற்றாளர்கள் என்றால் ஒரு தமிழ் கட்சியிலே போட்டியிட்டிருக்கலாமே.

அன்று தமிழ் தேசிய  கூட்டமைப்பிலே இருந்து கொண்டு புலிகள்தான் தமிழர்களின் ஏக பிரதி நிதிகள் என்றும், இந்த அரசாங்கம் தமிழர்களை கொலை செய்கின்றது, என்றெல்லாம் அரசாங்கத்துக்கு எதிராகப் பேசியவர்கள் இன்று பேரினவாதக் கட்சியிலே போட்டியிடுகின்றனர். இவர்களின் நோக்கம்தான் என்ன? தமிழர்களை முட்டாள்கள் என்று நினைத்துவிட்டார்களா? இவர்களுக்கு இன்று ஒரு கொள்கை நாளை ஒரு கொள்கை. இப்படிப்பட்டவர்கள் மக்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள்?

கடந்த பாராளுமன்றத் தேர்தலிலே 22 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலிலே கோட்டை விட்டுவிடும் போலிருக்கிறது.  இவர்களால் நிறுத்தப் பட்டிருக்கின்ற வேட்பாளர்களுக்கு மக்கள் மத்தியிலே செல்வாக்கு இருக்கின்றதா என்று பார்த்தால் கேள்விக்குறியே. அது ஒரு புறமிருக்க இவர்கள் தமிழர்களுக்காக என்ன செய்தார்கள்? அன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் முள்ளி வாய்க்காலிலே கொலை செய்யப்பட்டபோது ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராயினமா செய்தாரா? தமிழர்களுக்காக குரல் கொடுத்தாரா? வெளி நாடுகளிலே சுகபோக வாழ்க்கைதான் வாழ்ந்தார்கள்.

இது ஒரு புறமிருக்க அரசியலிலே இன்னொரு சக்தியாக இன்று உருவெடுத்திருக்கின்றது சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)  தலைமையிலான கட்சியினர்.  இவர்களைப் பொறுத்தவரை பாராளுமன்றத் தேர்தலுக்கு புதியவர்களாக இருந்தாலும் கிழக்கு மாகாண சபையை தன் வசம் வைத்திருப்பதோடு கிழக்கு மாகாண சபையின் மூலம் பல அபிவிருத்தி திட்டங்களை செய்து  மக்கள் மத்தியிலே இவர்களுக்கு வரவேற்பு இருக்கின்றது.

இவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மானோடு பிரிந்து வந்தாலும் சில காரணங்களினால் கருணா அம்மானிடமிருந்து பிரிந்து தனி ஒரு தமிழ் கட்சியாக இன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்திருக்கின்றனர். இவர்களால் இந்தத் தேர்தலிலே களமிறக்கப் பட்டிருக்கின்றவர்கள் மக்கள் மத்தியிலே செல்வாக்குள்ள பல துறை சார்ந்தவர்களாக இருக்கின்றனர். இத் தேர்தலிலே   தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (T.M.V.P) கட்சியும் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒரு பலம் பொருந்திய கட்சியாக இருக்கின்றது.

அடுத்து பார்க்கின்றபோது தமிழர் விடுதலைக் கூட்டணியும் மட்டக்களப்பு மாவட்டத்திலே இத்தேர்தலிலே களமிறங்கி இருக்கின்றது. இக் கட்சியின் அண்மைக்கால செயற்பாடுகள் காரணமாகவோ என்னவோ மக்கள் மத்தியிலே வரவேற்பு குறைந்திருப்பது போன்று தெரிகின்றது.

தேர்தல் தினம் நெருங்க, நெருங்க தேர்தல் பிரச்சாரங்களும் அதிகரித்த வண்ணமிருப்பதோடு.  ஒரே கட்சியின் வெட்பாளர்களுக்குள்ளே அதிக விருப்பு வாக்குகளை யார் பெறுவது என்பதிலே பலத்த போட்டி நிலவுகின்றது. இதன் காரணமாக ஒரே கட்சியின் வேட்பாளர்கள் தங்களுக்குள்ளே முட்டி மோதிக் கொள்கின்றனர்.  தங்களுக்குள்ளே முட்டி மோதிக்கொள்ளும் இவர்களால் தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியுமா?

இத் தருணத்திலே தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
read more...

Monday, 22 March 2010

தமிழினத்தை விற்றும் தேர்தலில் போட்டியிடலாம்

சில நாட்களாக தவிர்க்க முடியாத காரணங்களாக வலைப்பதிவுப் பக்கம் வர முடியவில்லை. மீண்டும் உங்களோடு இணைந்து கொள்வதில் மகிழ்சி.

இலங்கைத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய காலகட்டமிது. எதிர் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலிலே தமிழர்களின் வாக்குகளை வேட்டையாடி தமிழர்களின் ஒற்றுமையை, தமிழர்களின் பலத்தை இல்லாதொழிக்க பல சக்திகள் பல சதித்திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கின்றனர்.

அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை பல அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் இந்தத் தேர்தலிலே களமிறங்கி இருப்பதோடு மக்களை குழப்பமடைய வைத்திருக்கின்றனர். தாங்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக தமிழினத்தை விற்கத் துணிந்திருக்கின்றனர். தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய காலமிது.

எனது பதிவுகளில் சமகால அரசியல் சார்ந்த பல பதிவுகளைத் தர இருக்கின்றேன்.  இன்னும் ஒரு சில நிமிடங்களில் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பின் கல நிலவரம் பற்றிய ஒரு பார்வை உங்களை வந்து சேரும்.

read more...

Saturday, 13 February 2010

காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா....




காதலர் தினத்தைக் கொண்டாடும் அனைத்து காதலர்களுக்கும் முன் கூட்டிய காதலர்தின வாழ்த்த்துக்கள்.

என்ன நானும் காதலர் தினத்தை கொண்டாட முடியவில்லையே என்ற கவலைதான். அடுத்த காதலர் தினத்தையாவது கொண்டாட உரியவங்க  பச்சைக்  கொடி காட்டுவார்களா?

எனது நண்பி காதலர் தினத்துக்காக எனக்கு காதலர் தின வாழ்த்தோடு அனுப்பிய அனுப்பிய ஒரு மின்னஞ்சல் பதிவாக வருகிறது.

காதலிக்கும் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்.

காதலிக்கும் என்றால் காதலியையோ அல்லது காதலரையோ மட்டுமல்ல...

நமது பெற்றோரை, சகோதர சகோதரிகளை, நண்பர்களை, உற்றார் உறவினர்களை, மனைவியை, பிள்ளைகளை, இந்த சமுதாயத்தை என நம்முடன் இருப்பவர்களை காதலிக்கும் காதலர்கள் அனைவருக்கும் இந்த வாழ்த்து சேரும்.

காதல் என்பது... நாம் பார்த்து பழகிய ஒரு நபர் நமக்கு ஏற்றவர், அவரது குணம், நடவடிக்கை, பழக்க வழக்கங்கள் நமக்கு பிடித்து அவர் இல்லாத வாழ்க்கை வெறுமை என்பதை உணர்ந்து அவரை நேசிக்கும் அந்த நொடியில் இருந்துதான் ஆரம்பமாகிறது.

காதல் பிறந்தாகிவிட்டது. அப்புறம் என்ன நமக்கு நாமே பேசி, அவரைப் பற்றியே சதா சிந்தித்து, நண்பர்களிடம் அவரைப் பற்றி மட்டுமேப் பேசி, அவரது சிந்தனையில் இருந்து விலகியிருந்த நாட்களை வாழாத நாட்களில் சேர்ப்பது வரையிலான படும் அவஸ்தை இருக்கிறதே... அவ்வளவு அருமையானதாகும்.

நமக்கிருக்கும் இதே சிந்தனை அந்தப் பக்கத்தில் இருந்தாலும் சரி... இல்லாததுபோல் நடித்தாலும் சரி.... நமது காதல் பாடல் இனிமையாக காதுகளில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் எந்த அலைவரிசை மாற்றினாலும்.

பின்னர் ஒருநாள் நமக்கே அசாதாரண துணிச்சல் வந்து நமது விருப்பத்தை தெரிவித்து அங்கு சில நாட்களில் தவிப்பில் விட்டு பின்னர் சம்மதத்தை சொல்லி நம்மைத் தொலைத்த நாள் இருக்கிறதே அப்பப்பா அந்த நாள்தான் நமது மறுஜென்மத்தின் பிறந்த நாளாகவே கருதப்படும்.

அன்றில் இருந்து ஆரம்பமாகிறது நமது காதல் லீலைகள். ஒருவருக்கொருவர் பிடித்தவற்றைப் பேசித் தீர்க்க போதாத நாளில் ஊர் சுற்றுவதும், நண்பர்களுடன் அறிமுக அரட்டையும் முடிந்து ஒரு வழியாக நமது அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு வர ஒரு சில மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகலாம்.

பின்னர்தான் ஆரம்பிக்கிறது பிரச்சினை, பணி நிமித்தமாக நேரம் தவறுதல், குடும்ப பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது, சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் என வெடிக்கிறது எரிமலை.

இந்த எரிமலை குழம்புகளில் சிக்கி சாம்பலான எத்தனையோ காதல் ஜோடிகளும் உண்டு.

இத்தனையும் தாண்டி நின்று போராடி காதல் வாழ்க்கையில் வெற்றி பெற்று திருமண பந்தத்திற்குள் நுழைந்தால் அங்கும் புயல், சூறாவளி என்று சீற்றங்களை சந்திக்க வேண்டி வரும்.

காதலிக்கும்போது நாம் ரசித்து ரசித்து ஓய்ந்தவை எல்லாம் தற்போது சகித்துக் கொள்ளக் கூட முடியாதவைகளாக உருமாறும். இவையெல்லாம் எல்லோர் வாழ்விலும் நடப்பவையே...

இதைத் தவிர்க்க... நாம் காதலிக்கும் நபரை நமக்கேற்றவராக மாற்றும் எண்ணத்தை கைவிட்டு, அவரை அவராகவே நாம் காதலிக்கும் வகையில் நாம்தான் மாற வேண்டும்.

அவரது சொந்தங்களையும், பந்தங்களையும் தன்னுடையதாக நினைக்க வேண்டும் என்பதெல்லாம் கூட வேண்டாம், நம்முடையதாக நினைத்தாலே போதும்.

காதலிக்கும்போதே நமது இயல்பான குணங்களை வெளிப்படுத்தி, இயல்பான முறையில் பழகுதல் நல்லது.

எந்தச் செயலை செய்யும் முன்பும் பரஸ்பரம் மனம்விட்டுப் பேசிக் கொள்வதும், மற்றவர் அவரது கருத்தை வெளிப்படையாக வெளியிடுவதும் நமது காதலின் நீண்ட ஆயுளுக்கு நல்லது.

எந்த ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதனை தாங்களாகவே சரி செய்து கொள்ளும் பக்குவம் வேண்டும். 3வது நபரின் தலையீடு எப்போதும் சரிபடாது.

அவர் நமக்கானவர்... அவர் செய்யும் எந்த தவறையும் திருத்திக் கொள்ளும் உரிமை அவருக்கு உண்டு, அதனை மன்னிக்கும் கடமை நமக்கும் நிச்சயம் உண்டு என்று நினைத்துப் பாருங்களேன். பிரச்சினையே இல்லை.

நண்பர்களுக்குள் மன்னிக்கவும், நன்றி கூறவும் வாய்ப்பில்லை என்பதுபோல் காதலர்களும் அவர் செய்தது தவறு என்ற எண்ணத்தைக் கைவிட்டு, நாம் செய்தது தவறு என்று ஒற்றுமை உணர்வை ஓங்க விடுங்கள். போதும் நீங்கள் தான் அடுத்த வரலாறு படைக்கும் காதலர்களாக இருப்பீர்கள்.

எப்போதும் நாம் காதலித்துக் கொண்டேதான் இருக்கிறோம். அதுபோல் காதலர்களாகவே வாழ்ந்து காட்டுவோம்.

அழகான பெண்ணைப் பார்த்தால் இதயப் பகுதிகளில் காதல் வலியை உணர முடியும் !!

காதல் என்பது அழகான கனவு.

காதல் இதயத்தில் இருந்து வர வேண்டும். கண்களில் இருந்து அல்ல.

நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்.

காதல் என்பது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை வரும் சலுகை.

இதயத்திற்கு ரத்தமாகவும், உடலுக்கு தண்ணீராகவும் இருப்பது காதல்.

காதலோ, நட்போ எதிலும் உண்மையாக இருந்தால்....வாழ்க்கையில் வெற்றி தான்...
read more...

Thursday, 11 February 2010

IP Address போன்ற தகவல்களை வலைப்பதிவிலேயே பெற்றுக் கொள்ள

எமது வலைப்பதிவுக்கு வருபவர்களின் IP Address போன்ற பல்வேறுபட்ட முக்கிய தகவல்களை பெற்றுக்கொள்ள எல்லோரும் விரும்புவோம்.

IP Address போன்ற பல்வேறுபட்ட முக்கிய தகவல்களை எமது வலைப்பதிவிலேயே நேரடியாக பெற்றுக்கொள்ளக்கூடிய வழியைத்தருகிறேன். நீங்களும் பயன் பெறுங்கள்.

கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்ற தகவல்களை நேரடியாக உங்கள் வலைப்பதிவில் பெற முடியும்.


1 . உங்கள் வலைப்பதிவில் dashboard--> layout- ->Page Elements செல்லுங்கள்.
2 . 'Add a Gadget'. சொடுக்கவும்
3 . 'HTML/Javascript' ல் இங்கே சென்று அங்கே தரப்பட்டுள்ள கோடுகளை copy பண்ணி past பண்ணுங்கள்

மேலே படத்தில் காட்டப்பட்டுள்ள விடயங்களை உங்கள் வலைப்பதிவில் அறிந்து கொள்வதோடு அப்படத்தில் Get more information என்பதனை click   பண்ணும்போது  கீழே படத்தில் உள்ளது போன்று அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

read more...

வலைப்பதிவில் விண்டோஸ் மீடியா பிளேயரில் வீடியோக்களை இணைத்தல்

நான் வலைப்பதிவு எழுதுவதில்லை என்று முடிவெடுத்ததக்கான காரணத்தை பல நண்பர்கள் கேட்டிருந்தனர். சில தவிர்க்க முடியாத குடும்ப சூழ்நிலை காரணமாக நான் உடனடியாக வெளிநாடு போக முடிவெடுத்தேன். அதனால்தான் நான் வலைப்பதிவை கை விட்டேன்.


நண்பர்கள் பலர் கேட்டார்கள் யாராலும் அச்சுறுத்தப்பட்டேனா என்று. அச்சுறுத்தல் இருந்தது. ஆனாலும்  பயப்படப் போபவனல்ல  நான்.

என் விட்டில் நான் வெளிநாடு போவதை எவரும் விரும்பாததால் வெளிநாடு போவதில்லை என்று முடிவை மாற்றிவிட்டேன்.

அவ்வப்போது என் பதிவுகள் வரலாம். அடிக்கடி சில தொழிநுட்பப் பதிவுகளை தர வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது. நான் தேடிப்பெற்ற விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்.

வலைப்பதிவில். விண்டோஸ் மீடியா பிளேயரில் வீடியோக்களை இணைத்தல்.
 
1 . உங்கள் வலைப்பதிவில் dashboard--> layout- ->Page Elements  செல்லுங்கள்.
 2 .  'Add a Gadget'. சொடுக்கவும்
3 . 'HTML/Javascript'  ல் இங்கே சென்று அங்கே தரப்பட்டுள்ள  கோடுகளை copy பண்ணி past  பண்ணுங்கள்

அக்கோடுகளில் YOUR-VIDEO-FILE-LINK எனும் இடத்தில் உங்கள் வீடியோ இணைப்பை (video link)  கொடுங்கள்

read more...