Friday 16 April 2010

இதயத் திருடி

என் விரல்களுக்கு

ஏற்பட்ட அவசரத்தில்
தொலைபேசியில்
இலக்கங்களை
தவறாக
அழுத்தியதால் -என்
விரல்களை
திடடினேன் -அன்று
இன்று என்
விரல்களுக்கு -நன்றி
சொல்கிறேன் -அந்த
அழைப்பில்
கிடைத்தவள் - நீ
என்பதனால்
உன் முகம்
தெரியாதவன் -நான்
உன் அகம்
தெரிந்தவன் -நான்
உன்னோடு
பேசுவது -என்
தொலைபேசிக்கே
பொறாமை வந்துவிட்டது போல
அடிக்கடி இயங்க
மறுக்கின்றது.-அது
நினைக்கவில்லை
இப்போ -என்
இதயத்தில் -நீ
இருப்பதை.

இதயத் திருடி

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "இதயத் திருடி"

SShathiesh-சதீஷ். said...

என்னமோ நடக்கிறது மர்மமாய் இருக்கிறது.....

கலா said...

வந்திரிச்சா?வந்திரிச்சா?
சந்ருவுக்கு காதல் வந்திரிச்சா?
பொடிப் பையா....சமாளிக்கத்
தையிரியமும் வேணும் அது
வந்திரிச்சா????

எதேச்யான காதல் வரிகள்
நன்றாக இருக்கின்றது.
ஆமா !! இது ஒன்றும்
அனுபவமில்லையே!?

ஹேமா said...

சந்ரு...நல்ல சுகமா இருக்கீங்க போல.அதனால சுகம் கேக்கேல்ல.காதல் கவிதை....அசத்தல்.

ஸ்ரீராம். said...

யார் அந்த தேவதை..?

Post a Comment