Sunday 8 April 2012

மட்டுநகர் சிலை உடைப்புக்கும் சில அரசியல்வாதிகளி்ன் செயற்பாடுகளுக்கும் கிழக்கிலங்கை மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு கண்டனம்



மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு
People Organisation for Change (POC)
மட்டக்களப்பு நகரிலுள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலையும், சாரணியத்தின் தந்தை என போற்றப்படும் பேடன் பவுலின் சிலையும், கிழக்கிலங்கைக்கு புகழ்சேர்த்த சுவாமி விபுலானந்த அடிகளின் சிலையும், மட்டக்களப்பிற்கு புகழ் சேர்த்த மண்டூர் பெரியதம்பிப்புலவரின் சிலையும்   (06.04.2012) வெள்ளிக்கிழமை அதிகாலை விஷமிகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளைமையை நாம் வண்மையாகக் கண்டிக்கின்றோம்.

கிழக்கு மாகாண மக்கள் பல தசாப்தங்களின் பின்னர் நிம்மதிப்பெருமூச்சு விட்டு வாழ்ந்துவரும் காலம் இது. யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட கிழக்கு துரிதமாக வளர்ச்சி அடைந்துவரும் இவ்வேளையில் கிழக்கு மக்களின் நிம்மதியான வாழ்க்கையையும் கிழக்கின் துரித அபிவிருத்தியையும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு கும்பலின் செயற்பாடே இது.

இச்சிலை உடைப்பு விவகாரத்தினை அரசியலாக்க நினைக்கும் யோகேஸ்வரன் போன்றோரின் செயற்பாடுகளையும் நாம் வண்மையாகக் கண்டிக்கின்றோம். குற்றவாளிகளை பிடிப்பதற்குரிய முயற்சிகளை செய்வதனை விடுத்து. வெறுமனே பிள்ளையான் குழு செய்தது என்று மக்களை குளப்பி அரசியல் இலாபம் தேட முயலும் யோகேஸ்வரன் போன்றோர் மக்களை குளப்பி அரசியல் நடாத்தும் கைங்கரியங்களை விடுத்து மக்களுக்காக செயற்பட முன்வர வேண்டும்.

இச் சிலைகள் யார் உடைத்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விடயத்தை ஒருவர்மீது ஒருவர் குற்றம்சாட்டி அரசியல் நடாத்துவதை விடுத்து குற்றவாளிகளை பிடிப்பதற்கு அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும்.

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு
கிழக்கிலங்கை 

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மட்டுநகர் சிலை உடைப்புக்கும் சில அரசியல்வாதிகளி்ன் செயற்பாடுகளுக்கும் கிழக்கிலங்கை மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு கண்டனம்"

Post a Comment