Thursday 5 April 2012

சுவாமி விவேகானந்தரின் கை கால்கள் உடைக்கப்பட்ட வரலாறு தொடருமா?



கடந்த ஒரிரு மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு ஆரையம்பதி - காத்தான்குடி எல்லைப்பிரதேசத்தில் ஆரையம்பதி பிரதான வீதியில் சுவாமி விபுலானந்தருடைய சிலை வைக்கப்பட்டது. சிலை வைக்கப்பட்டு ஒருசில மணித்தியாலங்களில் இனம் தெரியாதோரால் உடைக்கப்பட்டது.

சிலை உடைக்கப்பட்டு சில தினங்களில் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். 

இப்பொழுது மீண்டும் புதிய சிலை ஒன்று அதே இடத்தில் வைக்கப்படுகின்றது. மீண்டும் இச் சிலை உடைக்கப்படமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது. சுவாமி விவேகானந்தருடைய சிலை உடைப்பு என்பது மிகவும் பாரதூரமான செயல் மட்டுமல்ல சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டிய ஒரு செயலாகும். 

இச் சிலை உடைப்பானது தமிழ் முஸ்லிம் சமூகத்தினரிடையே பாரிய இன விரிசலை ஏற்படுத்தக்கூடிய ஒரு செயலாகும். உலகமே போற்றும் ஒரு மகானின் சிலையை உடைத்தமை இரு சமூகங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்த முயற்சித்தமை. என்று குறித்த நபர்மீது பல குற்றங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் அப்படிப்பட்ட ஒருவரை பிணையில் விடுதலை செய்வது சரியா?

இச் சிலை உடைப்பிலே தொடர்பு பட்டவருக்கு தண்டனை வழங்காமல் பிணையில் விட்டமையானது. இன்னும் பலரை இச் செயலை செய்துவிட்டு தப்பிக் கொள்ளலாம் என்று எண்ணத்தோற்றப்பாட்டை தோற்றுவிக்கலாம்.

அது ஒரு புறமிருக்க முஸ்லிம்களின்  இஸ்லாம் சார்ந்த ஒரு சின்னம் இவ்வாறு உடைக்கப்பட்டிருந்தால் அல்லது ஒரு புத்தர்சிலை இவ்வாறு உடைக்கப்பட்டிருந்தால். எந்தளவிற்கு பிரச்சினையாகி இருக்கும். குறித்த நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பாரா?

உடைக்கப்பட்ட சிலை







Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சுவாமி விவேகானந்தரின் கை கால்கள் உடைக்கப்பட்ட வரலாறு தொடருமா?"

Post a Comment