Monday 6 February 2012

இலங்கையின் சகல பாகங்களிலும் புலி ஆதரவாளர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை பெயர்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன

இலங்கையில் நாடு பூராகவும் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டள்ளது. அதில்  தாய்நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற வகையிலும், நாட்டின் அபிவிருத்தியை மந்தமடையச் செய்கின்ற வகையிலும் செயற்படுகின்ற புலிகளுக்கும் அவர்களின் உள்நாட்டு , வெளிநாட்டு ஆதரவாளர்களுக்குமான மரணதண்டனையை நிறைவேற்றப்போவதாக நாம் இலங்கையர் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அது இறுதி எச்சரிக்கை என தெரிவித்து நாடுபூராகவும் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் கடந்த காலத்தில் நாட்டுக்கு எதிராக செயற்பட்ட பலருக்கு தமது படையணி மரண தண்டனையை வழங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் இதோ..


நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டமைப்பு

புலி ஆதரவாளர்களே உங்களுக்கு இறுதி எச்சரிக்கை


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்களை இறுதியாக எச்சரிக்கின்றோம்

இலங்கை மண்ணில் மாணவர் போராட்டம் மக்கள் போராட்டம் ஊடகப்போர் மக்கள் எழுச்சி என்ற பெயரில் பயங்கரவாதிகளுடன் இணைந்து நாசகார வேலைகளில் ஈடுபட்ட

தமிழ் மாணவர் ஒன்றிய உறுப்பினர்களான நிலக்சன், குணேந்திரன் மக்கள் படை உறுப்பினர்கள் (ஜனா, அனுதீபன், ரஜீவன், நிதன்) மதகுருக்கள் நாடாளுமன்ன உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் (ரஜீவன்) ஆகியோருக்கு எம்மால் மரண தணடனைகள் வழங்கப்பட்டன 

2009 ஆம் ஆண்டில் விடுதலைப் விடுதலைப் புலிகளும் அவர்களின் முட்டாள்தனமான ஈழ விடுதலைப் போராட்டமும் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டு இன்று ஐக்கிய இலங்கைக்குள்இரண்டாம் இனமாக வாழ தமிழர்கள் முற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இவ்வேளையில் யாழ் பல்கலைக்கழகம் மற்றும்பாடசாலைகளில் பயங்கரவாதத்தை தூண்டுவது மற்றும் புலம்பெயர் நாடுகளில் இலங்கை அரசுக்கு எதிராக செயற்படுபவர்களை நாங்கள் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம்.

இணையத்தளங்களில் இலங்கை அரசு சம்மந்தமாக பொய்ப்பிரசாரம் செய்வது முகப்புத்தகங்களில், டுவிட்டர்,சமூக வலைத்தளங்களில்இலங்கை அரசுக்கு எதிராக எழுதுவது, இலங்கையின் கெளரவ அமைச்சர்கள் மீதும் அவதூறு ஏற்படும் வகையில் போராட்டம் மற்றும் வழக்குகளைப் போட்டு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மீது அவதூறு எற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவரையும் இறுதியாக எச்சரிக்கின்றோம்.

குறிப்பாக - தினகரன் திவாகரன், கிரிசாந், திவாகரன் மற்றும் குருபரன் (யாழ்ப்பாணம்) அருளினியன், கஜேந்திரகுமார், குமரன் தேனுகாந்தன் (இந்தியா) தனம், கண்ணன், றஞ்சன், அங்கஜன்,சந்துரு (லண்டன்) சிவகுரு, ஆறுமுகம், நிசாந்தன் (கனடா), செல்வம், ரவி, சாச ராசன், தனு (பிரான்ஸ்)போன்றவர்களையும் இவர்களுடன் இணைந்து செயற்படம் புலி ஆதரவாளர்களையும் கடுமையாக எச்சரிக்கின்றோம். உங்களுக்குரிய தண்டனை மரண தண்டனை என்பதனை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்மபுகின்றோம்.

இனப்பிரச்சினை முடிவிற்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் ஐக்கிய இலங்கைக்குள் இரண்டாம் இனமாக தமிழர்கள் வாழ முற்பட்டு வருகின்றார்கள். மீண்டும் ஈழ விடுதலை என்ற பெயரில் பலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்படம் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த தமிழினத்தின் அழிவிற்கு வித்திடும் என்றும் எச்சரிக்கின்றோம்

நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டமைப்பு 
நாம் இலங்கையர் பாதுகாப்பு படை


Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 comments: on "இலங்கையின் சகல பாகங்களிலும் புலி ஆதரவாளர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை பெயர்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன"

Admin said...

எதிர்வாக்கு(ஓட்டு)??????????...

Post a Comment