Tuesday 14 February 2012

செக்ஸ்.. காமக்கடலில் மூழ்கியவர்களும் தமிழ்மணத்தின் அராஜகமும்


என்  வலைப்பதிவினை தமிழ்மணத்திலிருந்து நீக்குவதற்காக பாடுபட்ட கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முடியாத முதுகெலும்பில்லாத கோளைகளுக்கு நன்றிகள். கடந்த எட்டாம் திகதி என்னுடைய வலைப்பதிவு தமிழ் மணத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றது. எனக்கு தமிழ்மணம் குழுவினரால் அனுப்பப்பட்ட அனுப்பப்பட்ட மின்னஞ்சல் இதோ

Dear சந்ரு,
Your blog is Removed from listing by tamilmanam.net Administrator due to follwing reason,

http://www.shanthru.com/2012/02/blog-post_6315.html நீங்கள் இப்படியான படங்களுக்கு இணைப்புகளைக் கொடுத்துக்கொண்டிருந்தால் (அவற்றினைக் கண்டிப்பதாகச் சொல்லிக்கொண்டே), தமிழ்மணத்திலே இப்பதிவினை இணைத்திருப்பதிலே அர்த்தமில்லை. இப்பதிவு உடனடியாக நீக்கப்படுகின்றது. எங்கள் முடிவினைப் புரிந்துகொள்வீர்களென நம்புகிறோம். நன்றி

நிர்வாகி
www.tamilmanam.net.

அதற்கு நான் தமிழ்மணத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் இது

வணக்கம்...

தமிழ்மணம் முதன்மைத்திரட்டியாக இருப்பது வரவேற்கத்தக்கது. எனது சந்ருவின் பக்கம் www.shanthru.com பதிவில் ஆபாச படங்கள் இருப்பதனால் என் பதிவை நிக்கியமை வரவேற்கத்தக்கது. எனது வலைப்பதிவிற்கு அதிகமான வாசகர்கள் தமிழ் மணத்திலிருந்துதான் வருகின்றனர். எனது வளர்ச்சியில் தமிழ் மணத்தின் பங்கு மிகப்பெரியது. என்னை தமிழ் மணத்திலிருந்து நிக்கியமை பெரும் மனவேதனையை தருகின்றது.

நான் இதுவரை ஒருபோதும் இவ்வாறான படங்களை பகிர்ந்து கொள்ளவுமில்லை. என் பதிவுகளை பார்த்தால் புரியும். இந்தப்பதிவில் மட்டுமே படங்களை இணைத்தேன். அதனையும் நீக்கி இருக்கின்றேன். தொடர்ந்து நான் இவ்வாறான படங்களை பகிர்ந்து வந்திரந்தால் நிங்கள் நீக்கி இருக்கலாம்.

ஒரு பதிவில் மட்டும் இணைத்தமைக்கு இவ்வாறு செய்வது மனவேதனை தருகின்றது. என் பதிவுகள் சமூகம் சார்ந்த பதிவுகள். வெறுமனே மொக்கைப்பதிவுகள் இல்லை. இனிமேல் இவ்வாறான விடயங்கள் இடம்பெறாமல் தவிர்த்துக் கொள்கிறேன்.

என் வழலப்பதிவினை மீண்டும் தமிழ் மணத்தில் இணைத்துக் கொள்ள முடியுமா?

உங்களிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கின்றேன்.

நன்றி
என்றும் அன்புடன்
சந்ரு
 
இதுவரை தமிழ்மணம் பதில் அனுப்பவில்லை

அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட பதிவில் அரைகுறை ஆடைகளுடன் 3 படங்களை இணைத்து இருந்தேன் அதனை நீக்கும்படி அமல்ராஜ் கூறியதனால் 2 படங்களை உடனே நீக்கிவிட்டேன். தமிழ்மணம் குழுவினரின் இந்த முடிவு சரியானதா? இதற்கு முன்னர் நான் இவ்வாறான படங்களை இணைத்திருந்தால் பரவாயில்லை ஆனாலும் இப் பதிவில் படத்தினை நான் உடனே நீக்கியிருந்தேன். என்னுடைய பதிவுகள் வெறுமனே கில்மா பதிவுகளோ அல்லது மொக்கைப்பதிவுகளோ இல்ல.

நான் சமூகத்தின் பிரச்சினைகளை எழுதி வருகின்றேன். சரி இந்தப்பதிவில் தவறான படங்களை இணைத்துவிட்டேன் இதற்கு முன்னர் நான் ஒருபோதும் இவ்வாறான படங்களை பதிவிட்டதில்லை. தமிழ்மணம் குழுவினர் என்ன செய்திருக்க வேண்டும். எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கலாம் அப்படத்தினை நீக்கும்படி.

தமிழ்மணம் நிர்வாகிகளிடம் கேட்கின்றேன் தமிழ்மணத்தில் இணைக்கப்படுகின்ற பதிவுகள் அனைத்தும் தமிழ்மணத்தின் கட்டுப்பாடுகள் கொள்கைகள் விதிகளுக்கு அமைவாகவா இணைக்கப்படுகின்றன. தமிழ்மணத்தில் இணைக்கப்படுகின்ற ஏனைய பதிவுகளில் ஒருவரை தாக்கி எழுதப்படவில்லையா? ஒரு கட்சி சார்ந்து எழுதப்படவில்லையா? செக்ஸ் காமம்பற்றி எழுதப்படவில்லையா? இவ்வாறான படங்கள் இணைக்கப்படவில்லையா?

ஒரு தடவை படங்களை இணைத்தேன் என்பதற்காக என் பதிவை நீக்கியிருக்கும் உங்கள் மனிதாபிமானம் எங்கே போனது. ஒருசிலர் எனக்கும் எனது பதிவுகளுக்கும் எதிராக என்னை தமிழ் மணத்திலிருந்து என் பதிவை நீக்கும்படி மின்னஞ்சல் அனுப்பினால் அதனை நீக்குவது மனிதாபிமானமல்ல. உங்களுக்கும் மூளை இருக்கின்றது என் பதிவுகளைப் பார்த்து நீங்கள் முடிவெடுக்க கற்றுக் கொள்ளுங்கள். என் பதிவுகளில் இதற்கு முன்னர் இவ்வாறான படங்கள் போடப்பட்டதா? இப் பதிவின் கருப்பொருள் படம் என்பவற்றை புரிந்து கொள்ளுங்கள்.

தமிழ்மணம் குழுவினரின் அண்மைக்கால செயற்பாடுகள் அவர்கள் நாகரிகமற்றவர்கள் என்பதனை வெளிக்காட்டுகின்றது. ஒருவர் செக்ஸ் காமம் பாலியல் பற்றி பேசக்கூடாதா எழுதக்கூடாதா? செக்ஸ் பாலியல் காமம்பற்றி எழுதினாலே பொங்கி எழுபவர்களே உங்களிடம் ஒரு கேள்வி உங்களிடம் காமம் இல்லையா நீங்கள் செக்ஸ் உணர்வு அற்றவர்களா? இன்று பாலியல் கல்வியே போதிக்கப்படும் காலத்தில் செக்ஸ் காமம் பாலியல் என்று எழுதியதற்காக போர்க்கொடி தூக்கும் நீங்கள்  வெளி உலகிற்கு வாருங்கள்.

எனது பதிவை தமிழ்மணத்திலிருந்து நீக்குவதற்காக பாடுபட்டவர்களிடம் சொல்கிறேன் என்னை தமிழ்மணத்திலிருந்து நீக்கியதனால் என் எழுத்துக்களை உங்களால் தடை செய்ய முடியாது. உங்களது இவ்வாறான செயற்பாடுகள் என்னை இன்னும் உச்சத்திற்கே கொண்டு செல்லும்.


செக்ஸ் காமம் பாலியல் ஒரு உணர்வு சார்ந்தது அதனை பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பதனாலும் தவறாக பார்ப்பதனாலும் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. நம்மை நாம் சுயபரிசோதனை செய்துகொண்டு நல்லவர்களாக வாழந்தாலே போதும். எழுதுவதும் பேசுவதும் தவறில்லை.

செக்ஸ் காமம் பாலியல் தொடர்பாக எழுதினாலே போர்க்கொடி தூக்குபவர்களே நீங்கள் சொல்லங்கள் உங்களுக்கு செக்ஸ் உணர்வும் இல்லை காமமும் இல்லயைா?



 

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "செக்ஸ்.. காமக்கடலில் மூழ்கியவர்களும் தமிழ்மணத்தின் அராஜகமும்"

Post a Comment