Tuesday 14 February 2012

உங்களாலும் முடியும்தானே?





என் முயற்சி வீண் போகவில்லை என்று நினைக்கிறேன். உடனடியாக இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய மாணவனுக்கு கனடாவில் இருக்கும் ஒரு நண்பர் 25000 இலங்கை ரூபாவினை கொடுத்திருக்கின்றார். அம்மாணவனின் உயிரைக்காப்பாற்ற அனைவரும் முன்வாருங்கள். பணம் வழங்கிய நண்பர் தனது விபரங்களை வெளியிட வேண்டாம் என்று சொன்னதனால் அவரது விபரங்களை நான் வெளியிடவில்லை. அந்த நண்பருக்கு என் நன்றிகள்

முன்னைய பதிவு

வலைப்பதிவு எழுதும் நாம் எழுத்துக்களுடன் நின்று விடாது சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். சில பதிவர்கள் இதனைச் செய்து வருகின்றனர். நானும் சமூக சேவை செய்து வருபவன் எனும் வகையில் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். 

 தற்போது உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவனுக்கு இருதய நோய் இருக்கின்றது. உடனடியாக இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றார். உடனடியாக சத்திரசிகிச்சை செய்யாவிட்டால் உயிராபத்து ஏற்படும் நிலையில் இருக்கின்றார். இருதய சத்திர சிகிச்சைக்காக இலங்கை ரூபா ஐந்து இலடசத்திற்குமேல் செலவாகும்.


ஆனாலும் அம்மாணவனின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருக்கின்றது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் இவரின் உயிரைக் காக்க உதவி செய்யுங்கள். இவர் மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்தவர் பெயர் இராஜேந்திரம் நிமல்ராஜ் மட்களுதாவளை மகா வித்தியாலயத்தில் உயர்தரம் படிக்கின்றார். மாணவனின் உயிரைக்காக்க உதவ நினைப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் நேரடியாக குறித்த மாணவனுடன் தொடர்புபடுத்தி விடுகிறேன்.

எனது மின்னஞ்சல் :-shanthruslbc@gmail.com
 தொலைபேசி இலக்கம் : - 0094778548295






சில நண்பர்கள் உதவுவதாக தெரிவித்தனர் அவர்கள் விரைவு படுத்துமாறு கேட்டுக்கொள்கினறேன். பதிவிட்ட நண்பர்களுக்கும் நன்றிகள். அத்துடன் மதிசுதா அவர்கள் பதிவிட்டதுடன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவருக்கு நன்றிகள் அவரின் நடவடிக்கைகளை துரிதப்படுத்தமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். எனது இந்தப் பதிவினைப் பார்த்து பதிவர்கள் என்மிது கோபப்பட்டால் அது என்னை ஒன்றும் செய்யப் போவதில்லை. குறித்த மாணவன் தன் நிலை தொடர்பாக நேற்று என்னிடம் மிகவும் கவலையுடன் கூறியபோது என்னை அறியாமலே என் கண்ணில் கண்ணீர் வந்தது. 

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "உங்களாலும் முடியும்தானே?"

Post a Comment