Thursday 5 January 2012

பதிவர்களே ஜாக்கிரதை பிரதேசவாதத்தை தூண்டும் பதிவர்கள் வலையில் சிக்க வேண்டாம்.


தற்போது சில நாட்களாக பதிவுலகில் பேசப்படுகின்ற ஒரு விடயம். பிரதேசவாதத்தை தூண்டும் பதிவர்கள், தமிழ் முஸ்லிம் உறவை சீர் குலைக்க நினைக்கும் பதிவர்கள். பிரதேசவாதம் என்பது என்ன? பிரதேசவாதம் என்பதன் வரையறை என்ன? இலக்கணம் என்ன? 

நான் பிரதேசவாதம் பேசுகின்றேன் என்று இலங்கை தமிழ் வலைப்பதிவர்கள் சில காலம் எனக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தனர். நான் பிரதேசவாதம் பேசுபவன் எனும் மாயையை தோற்றுவித்து என்னை பதிவுலகிலிருந்து விரட்டியடித்தவர்கள். புது வருடத்திலிருந்து பதிவெழுதலாம் என்று வந்தால் மீண்டும் என்னை நோக்கி போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர்.

சில விடயங்களை குறிப்பிட்டாகவேண்டும். அநீதிகளை யார் செய்தாலும் தட்டிக் கேட்கும் குணமுடையவன். மரணத்துக்கு மட்டும் பயப்படுபவனல்ல. ஒருவருடைய கருத்து முரண்பாடாக இருக்கலாம் மாற்றுக் கருத்தாக இருக்கலாம். முரண்பாடான கருத்தாக இருக்குமானால் சுட்டிக் காட்டினால் சரியானதாக இருக்கும் பட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பாண்மையும் என்னிடம் இருக்கின்றது. அதனைவிடுத்து பொய்களைச் சொல்கிறான் என்று பிரதேசவாதம் எனும் நஞ்சை ஊட்டி அவனை பழிவாங்க நினைப்பது தவறானது.

கடந்த காலங்களில் என் வலைப்பதிவில் நடந்தவை என்ன என்று பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அரசியல் சார்;ந்த தொடர் பதிவொன்றை எழுதினேன். அதில் கடந்தகால அரசியல் தலைவர்கள் விட்ட தவறுகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால் சிலர் பொய்களை எழுதுகிறேன் என்று போர்க்கொடி தூக்கினர். எது பிழை என்று சுட்டிக்காட்டச் சொன்னபோது எவரும் சுட்டிக் காட்டவில்லை. தொடர்ந்த பதிவுகளில் 24 க்கு மேற்பட்ட புத்தகங்களையும் கட்டுரைகளையும் ஆதாரமாக வெளியிட்டேன். இதுவரை நான் பொய்யாக எழுதிய விடயம் எது என்று சுட்டிக்காட்டவில்லை. பிரதேசவாதம் பேசுகின்றேன் என்று ஒரு மாயையை தோற்றுவித்தமைதான் மிச்சம். எனது தொடர் பதிவிற்கு கிழக்கைச் சேர்ந்தவர்களைவிட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகமானவர்கள் ஆதரவு தந்தார்கள். இது பழைய கதை

இன்று மீண்டும் பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் பிரதேசவாதம் தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் முயற்சியில் பதிவர்கள். சிங்கள பேரினவாதத்திற்கும் கருணா பிள்ளையான் போன்றோருக்கு விலைபோன பதிவர்கள் எனும் விடயங்கள்.

இவ்வாறான கதைகள் வரக் காரணம் என்ன? நான் புது வருடத்தில் மீண்டும் பதிவுலகிற்கு வந்து கிழக்கு மாகாணத்திலே முஸ்லிம்களால் தமிழர்களுக்கு எதிராக செய்யப்படுகின்ற பல அராஜகங்களை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தேன். கிழே கொடுக்கப்படும் பதிவுகளை பார்க்கவும்.

http://shanthru.blogspot.com/2011/12/blog-post_14.html

http://shanthru.blogspot.com/2011/12/blog-post_20.html

http://shanthru.blogspot.com/2011/12/blog-post_31.html

கிழக்கு மாகாணத்திலே தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்களால் அரங்கேற்றப்படுகின்ற கொடுமைகளை ஆதாரங்களுடன் வெளியிட்டேன். கிழக்கு முஸ்லிம்களால் தமிழர்களுக்கு செய்யப்படுகின்ற கொடுமைகள் வெளிவருவதில்லை. காரணம் கிழக்கிலே இவற்றை வெளியிடக்கூடிய ஊடகங்கள் இல்லை. வலைப்பதிவர்கள் இல்லை. அதற்காக எனது சமூகம் அடக்கி ஒடுக்கப்படும்போது என்னாலும் மௌனித்துக் கொண்டு இருக்க முடியாது.

உண்மைச் சம்பவங்களை வெளியிட்டிருக்கின்றேன். தமிழ் முஸ்லிம் பிரச்சினையை ஏற்படுத்த நினைக்கின்றேன் என்று சொல்பவர்களிடம் ஒரு கேள்வி மட்டக்களப்பில் இடம்பெற்ற சம்பவங்கள்போல் உங்கள் அக்கா தங்கைகளுக்கு இடம்பெற்றிருந்தால் சும்மா இருப்பீர்களா? எமது சமூகத்தில் இடம்பெறுகி;ற பிரச்சினைகளை வெளிப்படுத்தக்கூட உரிமை இல்லையா? 

இதனை புதாகரமாக்கி பதிவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்க சில இணையத்தளங்களும் வலைப்பதிவர்களும் முயற்சி செய்து வருகின்றனர். அவர்கள் பிரதேசவாதம் எனும் நஞ்சை ஊட்டி மோதவிட நினைக்கின்றனர். முன்னர் எனக்கு பிரதேசவாதம் பேசுபவன் என்று சேறு பூசப்பட்டதன் காரணமாக பிரதேசவாதத்தை கையிலெடுக்க நினைக்கின்றனர்.
இதில் சிந்திக்கவும் இணையத்தளம் பதிவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றது. சில பதிவர்கள் சிங்கள பேரினவாதத்திற்கும் கருணாவிற்கும் விலை போய்விட்டதாகவும்  பிரதேசவாதத்திற்கு துணைபோவதாகவும் தமிழ் முஸ்லிம் மோதலை ஏற்படுத்துவும் முயற்சி செய்வதாகவும் எழுதி இருக்கின்றனர். 

சிந்திக்கவும் இணையத்தள நிர்வாகிகள் எந்தெந்தப் பதிவர்கள் சிங்களப் பேரினவாதிகளிடமும் கருணாவிடமும் எவ்வளவு எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்பதனை வெளியிட முடியுமா? தமிழ் முஸ்லிம் உறவை சீரழிக்க நினைக்கின்றனர் என்று குறிப்பிட்டிருக்கும் சிந்திக்கவும் இணையத்தள நிர்வாகிகள் கிழக்கின் உண்மை நிலைகளை அறிந்தார்களா? கிழக்கில் இடம்பெறும் பிரச்சினைகள் தொடர்பாக எப்போதாவது ஏதாவது எழுதி இருக்கின்றார்களா? ஒன்றை மட்டும் சொல்கிறேன் சிந்திக்கவும் இணையத்தள நிர்வாகிகள் தமது அக்கா தங்கை தனைவி மக்களை முஸ்லிம்களுக்கு கூட்டிக் கொடத்துவிட்டு முஸ்லிம்களுக்கு வக்காளத்து வாங்குங்கள் முஸ்லிம்களினால் கிழக்கு மக்களுக்கு செய்யப்படும் கொடுமைகளை மூடி மறையுங்கள்.

நான் பிரதேசவாதம் பற்றிப் பேசுகின்றேன். முஸ்லிம்களுக்கு எதிராக எழுதுகின்றேன் என்று சொல்பவர்களிடம் சொல்கின்றேன். நான் எவர் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பவன் அநீதிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர நினைப்பவன். எனது கடந்தகால பதிவுகளைப் பாருங்கள். கருணாவிற்கு எதிராக பல பதிவுகள் எழுதி இருக்கின்றேன். கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு எதிராக எழுதி இருக்கின்றேன். இலங்கை அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக பல பதிவுகளை எழுதி இருக்கின்றேன்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கையிலிருந்து அதிக பதிவுகளை இட்டவன் நான். முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கலைஞருக்கு ஒரு கடிதம் எனும் தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன் அப்பதிவு என்னை பல சிக்கல்களில் மாட்டியிருந்தது. அப்பதிவை புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்கள் பல வெளியிட்டிருந்தன. அதன் காரணமாக பல உயிரச்சுறுத்தல்கள்கூட வந்திருந்தன். பல பதிவர்கள் அப்பதிவை நீக்கும்படி கூறியும் நான் நீக்கவில்லை. நான் பிரதேசவாதம் பேசுகின்றேன் என்று சொல்கின்ற ஒரு பதிவர்கூட அப் பதிவை நீக்கும்படி சொல்லி இருந்தார். ஆனாலும் நான் இதுவரை நீக்கவில்லை.

வலைப்பதிவுலகில் அதிக உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில் எழுதும் பதிவர் நானாகத்தான் இருக்கும். பல உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில்  சில மாதங்கள் மறைந்திருந்து எழுதிய காலகட்டங்களும் இருக்கின்றன்.

நான் என்பாட்டுக்கு எழுதிக்கொண்டிருக்கலாம் என்று நினைத்தால் அனானிகள் விடுவதாக இல்லை. துப்பாக்கிக்கு மிரளாத நான் உங்கள் அனானி பின்னூட்டங்களுக்கு மிரளப் போவதில்லை. உங்கள் பின்னூட்டங்கள் என் எழுத்தின் வேகத்தை அதிகரிக்கும். தலையில் துப்பாக்கி வைத்தாலும் உண்மைகளை எழுதிக்கொண்டே இருப்பேன்.

மற்றுமொரு விடயம் பதிவுலகில் எனக்கும் மருதமூரானுக்கும் யாழ்தேவி திரட்டி விடயத்தில் கருத்து முரண்பாடு இருந்தது. வலைப்பதிவிலும் நான் தாறுமாறாக எழுதி இருந்தேன். ஆனாலும் நட்பு விடயத்தில் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துணர்வுடனும் நண்பர்களாகவும் இருக்கின்றோம். இது பலருக்குத் தெரியாது. எப்பொழுது இருவரையும் மீண்டும் மோதவிடலாம் என்றும் சிலர் நினைக்கலாம். ஆனாலும் நாம் நண்பர்களாகவே இருப்போம்.

இந்த இடத்தில் மருதமூரான் பற்றிய விடயம் ஏன் வருகின்றது என்று கேட்கின்றீர்களா? அண்மையில் நண்பர் நிருபனுடைய பதிவொன்றில் இலங்கையில் இருந்து சமூகம் சார்ந்து பதிவுகளை இடும் ஒரு பதிவர் உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி எனும் வகையில் சமூகத் தளம் ஒன்றில் பெண்களுடன் செக்ஸ் ரீதியான அரட்டை அடித்த ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றது என்று குறிப்பிட்டிருந்தேன்.

மருதமூரான் சமூகம் சார்ந்து எழுதுபவர். இதனை வைத்து என்னையும் மருதமூரானையும் மீண்டும் மோதவிட சில நினைத்திருக்கின்றனர். நான் பின்னூட்டமிட்டதும் நண்பர் மருதமூரான் என்னுடன் தொலைபேசியில் பேசினார். நான் மருதமூரானைத்தான் குறிப்பிட்டிருப்பதாக சிலர் நினைப்பதாக கூறினார். பலருடயை மின்னஞ்சல்கள் ஹக் பண்ணப்பட்டன தனது மின்னஞ்சலும் ஹக் பண்ணப்பட்ட விடயத்தையும் குறிப்பிட்டார். (எனது மின்னஞ்சலும் ஹக் பண்ணப்பட்டு பல பெண்களுக்கு செக்ஸ் படங்கள் அனுப்பப்பட்ட வரலாறுகளும் உண்டு ஹக் பண்ணப்பட்ட மின்னஞ்சலை இன்னும் என்னால் மீளப்பெற முடியவில்லை வேறு ஒருவர் பயன்படத்திக் கொண்டிருக்கின்றார்)

மருதமூரான் நல்ல ஒரு நண்பர் அவர்பற்றி இதுவரை நான் தவறாக எந்தஒரு விடயத்தையும் அறியவில்லை. நான் குறிப்பிட்ட பதிவர் தொடர்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றேன். அவரின் நடவடிக்கைகளை வைத்தே அவரின் மறு முகத்தை வெளியிடுவதா இல்லையா என்பதனை தீர்மானிக்க முடியும். 






Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

5 comments: on "பதிவர்களே ஜாக்கிரதை பிரதேசவாதத்தை தூண்டும் பதிவர்கள் வலையில் சிக்க வேண்டாம்."

Hotlinksin.com said...

நண்பரே உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் முத்திரை பதிக்கின்றன. உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.

K said...

வணக்கம் சந்துரு!

என்ன இது? இப்படி வருந்தலாமா? உங்கள் மீது அபாண்டமாகக் குற்றம் சொல்பவர்களை வெறுப்பேத்தும் கலையை நீங்கள் இன்னமும் கற்கவில்லையா?

உங்களைக் கருணா குழு என்று சொன்னால், உடனே ஃபீல் பண்ணி, வருந்தக் கூடாது சந்துரு! என்ன பன்ணணும் தெரியுமா? “ கருணா பற்றி பாராட்டி ஒரு பதிவு எழுதி வெளியிடணும்”

ஹி ஹி ஹி உங்களைக் குறை சொன்னவர்களுக்கு முகத்தில் அறைந்தது போல இருக்கும்! பிள்ளையான் குழு என்று சொல்கிறார்களா? நீங்கள் பிள்ளையானைப் புகழ்ந்து ஒரு பதிவு போட வேண்டும்!

இவர்களை இப்படித்தான் வெறுப்பேத்த வேண்டும்!

என்னைப் புலிப்பினாமி என்றார்கள்! நான் கலங்கவில்லை! உடனே தேசியத்தலைவர் பற்றி நாலைந்து பதிவுகள் போட்டு, “ ஆமா நான் புலிப் பினாமிதான்! அதுக்கு என்ன இப்போ?” என்று கேட்டேன்! குற்றம் சாட்டியவர்கள் பொத்திக்கொண்டு இருந்துவிட்டார்கள்!

அப்புறம் யாரோ புரட்சிக்காரன்னு ப்ளாக் எழுத அது நான் தான்னு எல்லோரும் சொன்னாங்க! ஹா ஹா ஹா நான் என்ன செய்தேன் தெரியுமா, வேணுமென்றே அந்தப் புரட்சிக்காரன் ப்ளாக் சென்று “ அண்ணே சூப்பருன்னே! கலக்கிட்டீங்க!” என்று எழுதினேன்!

அப்புறம் என்ன குற்றம்சாட்டியவர்கள் படாத பாடு பட்டார்கள்! நமக்கு ஜாலிதான்!

சந்துரு! நீங்கள் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்! மட்டக்களப்புப் புதினங்களை செய்திகளை நீங்கள் தான் எழுத வேண்டும்! அப்புறம் என்ன அமெரிக்காவில் இருந்து ஒபாமாவா வந்து எழுதுவார் இல்லையே?

ஆகவே பிரதேசவாதம் என்று குரைப்பவர்களின் பேச்சை நிறுத்திவிட்டு, நீங்கள் உங்கள் பணியினைத் தொடர்ந்து செய்யுங்கள்! சிலரைக் கணக்கெடுக்க வேண்டாம்!

Admin said...

ஐடியாமணி அண்ணே இனிமேல் உங்களைத்தான் நானும் பின்பற்ற இருக்கின்றேன்

Anonymous said...

பிரதேசவாதத்தை தீர்ப்பதற்கான பாதையை இஸ்லாமிய பதிவர்கள் காட்டுகிறர்கள் எல்லோரும் அரேபியர்களாக மதம் மாறி அரபு பெயர்களை வைத்து கொள்ளுங்கள் பின்பு எல்லா பிரதேசமும் அரபு பிரதேசம். பிரதேசவாதத்திற்க்கு வாய்பேயில்லை

ம.தி.சுதா said...

/////கருணா குழு என்று சொன்னால், உடனே ஃபீல் பண்ணி, வருந்தக் கூடாது சந்துரு! ////

சந்துரு இதே தான் என் நிலைப்பாடும்... இராவணன் சபையில் தான் விபீசணனும், துரியோததன் சபையில் கர்னனும் இருந்தார்கள்...

எங்கிருக்கிறோம் எப்படியிருக்கிறோம் என்பது முக்கியமல்ல எதைச் செய்கிறோம் என்பது தான் முக்கியம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாழ்பட்டுப் போன யாழ் மருத்துவத்துறை (சில நெருடும் உண்மைகள்)

Post a Comment