Wednesday 25 January 2012

கிழக்கில் தொடரும் தமிழர்கள் மீதான முஸ்லிம்களின் அடாவடித்தனங்கள்

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கறுவாக்கேணி கொண்டயன்கேணி கிராமங்களில் காணப்படுகின்ற அரச காணிகளில் எந்த ஒரு முன்னறிவித்தலும் இன்றி சட்டபூர்வமற்ற முறையில் காணிகளில் அத்துமீறி குடியேறிவரும் முஸ்லிம்களால் (23.01.2012) பெரும் பதற்ற நிலை உருவானது.
இதனை தடுக்கும் முகமாக பொலிசாரினதும் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஆகியோரின் அனுமதியுடனும் பொதுமக்களின் துணையுடன் அங்கு நாட்டிவைக்கப்பட்டிருந்த வேலிகள் அகற்றப்பட்டதுடன், அங்கு உருவான முரண்பாடுகள் சுமுக நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுமுக நிலைக்கு கொண்டுவரப்பட்ட பின்பும் மீண்டும் பிரதேச செயலாளர் பொலிசாரின் கட்டுப்பாட்டையும் மீறி அங்கு அத்து மீறி முஸ்லிம்கள் காணிகளை அபரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதனால் ஒரு பதற்ற நிலை காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ் அத்து மீறல் நடவடிக்கை  பொலிசாரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு சட்டநடவடிக்கைக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கிழக்கில் தொடரும் தமிழர்கள் மீதான முஸ்லிம்களின் அடாவடித்தனங்கள்"

Post a Comment