Saturday 29 August 2009

கேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.

இந்துக்களின் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதத்தின் மகிமையினை கூறும் இறுவட்டு ஒன்றினை எமது கலைஞர்களின் பங்களிப்போடு வெளியிட்டு இருந்தேன்.
பாடல்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தன. அப்பாடல்கள் நீங்களும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

கதைச் சுருக்கம்
திருக்கைலாச மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளையிலே. தேவர்களும், முனிவர்களும் அங்கு சென்று இருவரையும் சுற்றி வந்து வணங்கினர். அந்த வேளையிலே அங்கு வந்த பிரிங்கி முனிவர விகடக் கூத்தொன்றை ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்த பின்னர். உமாதேவியை விலக்கி விட்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கினர். உமாதேவியை அலட்சியம் செய்த முனிவரின் உடலிலிருந்த சக்தியை உமாதேவி எடுத்துக் கொண்டதனால் பிரிங்கி முனிவர் சபையிலே சோர்ந்து வீழ்ந்தார்.

சிவபெருமான் பிருங்கி முனிவரிடம் தடி ஒன்றைக் கொடுத்து அதனை ஊன்று கோலாகக் கொண்டு நடந்து செல்வதற்கு அனுக்கிரகம் செய்தார். இதனால் ஆத்திரமும் அவதானமும் அடைந்த உமாதேவி சிவபெருமானிடம் கோபித்துக் கொண்டு பூவுலகுக்கு வந்தார்.

ஒரு வில்வ மரத்தடியில் உமாதேவி வீற்றிருந்தார். உமாதேவியின் வருகையால் அந்த வனம் புதுப்பொலிவு பெற்றது. அந்த வனத்திலே வசித்த கௌதம முனிவர் திடிரென ஏற்பட்ட மாற்றத்துக்கான மாற்றத்துக்கான காரணத்தை அறிய முற்பட்டபோது. உமாதேவியைக் கண்டு நடந்த சங்கதிகளை அறிந்து கொண்டார்.

புரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமி தொடக்கி இப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரையுள்ள கேதரேசுரர் விரத மகிமை பற்றியும் அதனை அனுஷ்டிக்கும் முறைமை பற்றியும் விளக்கமாகக் கூற அம்மை விரதம் நோற்று அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகினார்.
பதிவிறக்கங்கள்...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

11 comments: on "கேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்."

ttpian said...

மே மாதம் 15,16 தேதிகளில் கடவுள்கல் எங்கே போனார்கள்?

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்னங்க திடீர் கடவுள் பக்தி??

sakthi said...

நல்ல பகிர்வு

Menaga Sathia said...

நல்ல பகிர்வு!!

வால்பையன் said...

நடத்துங்க நடத்துங்க!

Admin said...

//ttpian கூறியது...
மே மாதம் 15,16 தேதிகளில் கடவுள்கல் எங்கே போனார்கள்?//


கடவுள் எங்கேயும் எதிலும் இருப்பார்.


வருகைக்கு நன்றிகள்

Admin said...

//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
என்னங்க திடீர் கடவுள் பக்தி??//



திடிரென்று இல்லை எப்போதும் கடவுள் பக்திதான்.

வருகைக்கு நன்றிகள்

Admin said...

//sakthi கூறியது...
நல்ல பகிர்வு//

வருகைக்கு நன்றிகள்

Admin said...

//Mrs.Menagasathia கூறியது...
நல்ல பகிர்வு!!//

வருகைக்கு நன்றிகள்

Admin said...

//வால்பையன் கூறியது...
நடத்துங்க நடத்துங்க!//



நடத்திக்கொண்டுதான் இருக்கின்றோம்

வருகைக்கு நன்றிகள்

வால்பையன் said...

//கடவுள் எங்கேயும் எதிலும் இருப்பார். //

அவரு கேட்டது மே 15/16 தேதியில்,
கடவுள் எங்கேயும், எதிலும் இருப்பார் என்றால் தயவுசெய்து இலங்கையில் நடக்கும் படுகொலைகளை பற்றி பேசாதீர்கள், ஏனென்றால் அந்த துப்பாக்கியிலும் உங்கள் கடவுள் பல்லிளித்து கொண்டு தான் இருப்பார்!

மூளை சலவை செய்வார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன், அப்படி செய்யப்பட்டவரை இப்போது தான் பார்க்கிறேன்!

Post a Comment