Showing posts with label பாடல்கள். Show all posts
Showing posts with label பாடல்கள். Show all posts

Saturday, 25 June 2011

உரிமை இழந்தோம் உடமை இழந்தோம் உணர்வை இழக்கலாமா?

நான் பழைய பாடல்களை இரசிப்பவன். (என் வயதை அந்தப்பாடல்களோடு ஒப்பிட வேண்டாம் நான் இப்பதான் சின்னப் பையன்.) அதிலும் குறிப்பாக தத்துவப்பாடல்கள் என்றால் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பேன்.


நான் பணியாற்றிய வானொலியில் 4, 5 வருடங்கள் தொடர்ந்து பழைய பாடல் நிகழ்ச்சியினை செய்தேன். வாரம் ஒரு நாள் தத்துவப்பாடல்களை ஒலிபரப்புவேன்.  அந்த நிகழ்ச்சி அதிக நேயர்கள் கேட்கும் நிகழ்ச்சியாக நல்ல வரவேற்புக்கிடைத்தது.


அப்போது நான் நிகழ்ச்சிகளிலே அதிகம் ஒலிபரப்பிய பாடல்கள் சிலவற்றை உங்களுக்காகத் தருகின்றேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கின்றேன்.


என் மனநிலை சரியில்லையென்றால் இப்பாடல்களைக் கேட்பேன். மனதுக்கு நிம்மதியாக இருக்கும்.















read more...

Saturday, 29 August 2009

கேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.

இந்துக்களின் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதத்தின் மகிமையினை கூறும் இறுவட்டு ஒன்றினை எமது கலைஞர்களின் பங்களிப்போடு வெளியிட்டு இருந்தேன்.
பாடல்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தன. அப்பாடல்கள் நீங்களும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

கதைச் சுருக்கம்
திருக்கைலாச மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளையிலே. தேவர்களும், முனிவர்களும் அங்கு சென்று இருவரையும் சுற்றி வந்து வணங்கினர். அந்த வேளையிலே அங்கு வந்த பிரிங்கி முனிவர விகடக் கூத்தொன்றை ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்த பின்னர். உமாதேவியை விலக்கி விட்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கினர். உமாதேவியை அலட்சியம் செய்த முனிவரின் உடலிலிருந்த சக்தியை உமாதேவி எடுத்துக் கொண்டதனால் பிரிங்கி முனிவர் சபையிலே சோர்ந்து வீழ்ந்தார்.

சிவபெருமான் பிருங்கி முனிவரிடம் தடி ஒன்றைக் கொடுத்து அதனை ஊன்று கோலாகக் கொண்டு நடந்து செல்வதற்கு அனுக்கிரகம் செய்தார். இதனால் ஆத்திரமும் அவதானமும் அடைந்த உமாதேவி சிவபெருமானிடம் கோபித்துக் கொண்டு பூவுலகுக்கு வந்தார்.

ஒரு வில்வ மரத்தடியில் உமாதேவி வீற்றிருந்தார். உமாதேவியின் வருகையால் அந்த வனம் புதுப்பொலிவு பெற்றது. அந்த வனத்திலே வசித்த கௌதம முனிவர் திடிரென ஏற்பட்ட மாற்றத்துக்கான மாற்றத்துக்கான காரணத்தை அறிய முற்பட்டபோது. உமாதேவியைக் கண்டு நடந்த சங்கதிகளை அறிந்து கொண்டார்.

புரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமி தொடக்கி இப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரையுள்ள கேதரேசுரர் விரத மகிமை பற்றியும் அதனை அனுஷ்டிக்கும் முறைமை பற்றியும் விளக்கமாகக் கூற அம்மை விரதம் நோற்று அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகினார்.
பதிவிறக்கங்கள்...
read more...