Wednesday 5 August 2009

இதெல்லாம் சரியா பிழையா...


ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா என்ற இடுகையின் தொடர் பதிவாக வந்த தமிழ் மொழியை வளர்ப்பது யார்... தமிழ் மொழியை கொலை செய்வது யார் எனும் இடுகை மூலம் பலரும் பலதரப்பட்ட நல்ல கருத்துக்களை பின்னூட்டமாக வழங்கி இருந்தனர் அந்தக் கருத்துரைகளும் பல தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகொளுக்கிணங்க ஒரு இடுகையாக வருகிறது...
வெ.இராதாகிருஷ்ணன் கூறியது...அற்புதமான கட்டுரை. எனது நாவலைப் பார்த்துவிட்டு நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கின்றன, இருந்தாலும் ஆங்கில வார்த்தைகள் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன என ஒருவர் குறிப்பிட்டார். தமிழ் நாவலில் ஆங்கிலம் கலப்பது என்பது சரி எனும் மனநிலைக்குத் தள்ளப்பட்டதால்தான் அப்படி ஒரு எண்ணம் அவருக்கு வந்திருக்க வேண்டும்.பொதுவாக எழுத வரும்போது எழுத்து இலக்கணம் அறிந்து எழுதுவது எழுத்துக்கு அழகைக் கூட்டித்தரும். ஆனால் எழுத்து இலக்கணம் படித்து எழுதும் அளவுக்கு என்னை இன்னமும் தயார்படுத்திக்கொள்ளவில்லை. ஆனால் இது ஒரு மனக்குறையாகவே இருக்கிறது. மேலும் வலைப்பூக்களில் எழுதப்படும் தமிழ் கண்டு வேதனைப்படத்தான் முடிகிறது. கொச்சையான வார்த்தைகளை இச்சையுடன் எழுதித் தீர்க்கிறார்கள். வசைபாடுவது என இருந்தாலும் தமிழில் அழகுடன் எழுதும்போது அவை முகச்சுளிப்புதனை உருவாக்குவதில்லை.தமிழை வளர்க்க வெகு சிலரே பாடுபடுகிறார்கள். எண்ணங்களை கொண்டுச் சேர்க்க அலங்கார மொழித் தேவையில்லை என்கிற நிலைக்கு மொழி சீர்குலைந்து போய்க்கொண்டிருக்கிறது.
முனைவர்.இரா.குணசீலன். கூறியது...நான் தமிழ் மொழி தவறாக உச்சரிப்பதனையும், ஆங்கில வார்த்தைகள் தேவையற்று அதிகம் பயன் படுத்துவதனையும் முற்றாக வெறுப்பவன். தமிழை தமிழாக பயன் படுத்த நினைப்பவன்/மிகவும் மகிழ்வாகவுள்ளது.

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...சில அறிவிப்பாளர்கள் இனிய தமிழை மறந்து அளவுக்கு அதிகமாக ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்துவது என். இவர்களுக்கு தமிழ் தெரியாதா. தமிழ் தெரியவில்லை என்றால் ஏன் தமிழ் அறிவிப்பாளராக வந்தார்கள். ஆங்கில அறிவிப்பாளராக போயிருக்கலாம்தானே. இவர்கள் விடுகின்ற தவறுகளும் ஓட்டு மொத்த அறிவிப்பாளர்களையும் பாதிக்கும் என்பதை இவர்கள் உணர்ந்து திருந்துவதே நல்லது (திருந்துவார்களா) /திருந்த வேண்டும்....எனது இவ்விடுகையைப் பார்த்தீர்களா?http://gunathamizh.blogspot.com/2009/04/blog-post_28.html
நேசமித்ரன் கூறியது...சந்த்ரு ஆக்க பூர்வமான கட்டுரை மிக மகிழ்வளிக்கிறது
வந்தியத்தேவன் கூறியது...// நான் மேலே குறிப்பிட்ட தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. போன்ற சொற்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் லோஷன் என்று சொன்னால் மிகையாகாது.//மன்னிக்கவும் லோஷன் அறிவிப்பாளராக வரமுன்னரே இந்தச் சொற்கள் பாவனைக்கு வந்துவிட்டன. வீணாக நல்லதொரு அறிவிப்பாளரின் பெயரைக் கெடுப்பதுபோல் இப்படி எழுதுகிறீர்கள். சிலவேளை லோஷனினால் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம்.
பழமைபேசி கூறியது...புலவர்கள் இடது கோடியிலும், ஊடக மற்றும் எழுத்தாளர்கள் வலது கோடியிலும் இருந்து கொண்டு சாமான்யனைத் தமிழிடமிருந்து பிரிக்கிறார்கள். தமிழா விழித்துக் கொள்!
வந்தியத்தேவன் கூறியது...சந்து காலத்தின் தேவைக்கேற்ற கட்டுரை பல இலத்திரனியல் ஊடகவியளாலர்கள் இன்றைக்கு வலைப்பதிவாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதன் தொடுப்பை அனுப்புங்கள். அதே நேரம் தமிழ் மொழிக்கு தாங்கள் தான் பலம் என்கின்ற நிறுவனம் நிச்சயம் தங்களை மாற்றாமாட்டார்கள். நிகழ்ச்சிகளுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்குமளவிற்க்கு அவர்களுக்கு மொழிமேல் வெறுப்பு. சிறந்த தமிழ்ப் பேச்சாளர்களைத் தேடுகின்றார்கள் அந்நிககழ்ச்சியின் பெயர் ஆங்கிலத்தில். நீங்கள் இன்னொரு ஊடகத்தில் வேலை செய்வதால் நேரடியாக ஊடகங்களின் பெயர்களை கூறுவதைத் தவிர்க்கின்றேன்.இன்னொரு ஜெயம்கொண்ட வானொலியில் இரவில் விளையாட்டுச் செய்திகளைத் தொகுத்துத்தருபவர் அவசரமாக அடுத்த வேலைக்கு போவதைப்போல மிகவும் அவசரமாக வாசிப்பார். முற்றுப்புள்ளி கால்ப்புள்ளி எதுவும் இல்லை. அதுமட்டுமல்ல சிலவேளைகளில் எழுவாய், பயனிலை கூட இருப்பதில்லை. இலங்கை அணி பற்றிச் சொல்லிக்கொண்டே இங்கிலாந்து அணியின் தகவல்களையும் சேர்த்துச் சொல்லி நேயர்களைக் குழப்புகின்றார்.
சந்ரு கூறியது...//வந்தியத்தேவன் கூறியது... // நான் மேலே குறிப்பிட்ட தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. போன்ற சொற்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் லோஷன் என்று சொன்னால் மிகையாகாது.//மன்னிக்கவும் லோஷன் அறிவிப்பாளராக வரமுன்னரே இந்தச் சொற்கள் பாவனைக்கு வந்துவிட்டன. வீணாக நல்லதொரு அறிவிப்பாளரின் பெயரைக் கெடுப்பதுபோல் இப்படி எழுதுகிறீர்கள். சிலவேளை லோஷனினால் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம்.//ஆரம்ப காலங்களிலே இந்த சொற்கள் பயன்பாட்டில் இருந்தாலும். அவற்றை ஊடகந்கலிலெ பயன் படுத்துவது மிக மிகக் குறைவாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். லோஷன் இதற்கு முதல் பணியாற்றிய உஉடகத்தில்தான் செய்தி அறிக்கைகளில் இந்த சொல்லை பயன்படுத்துவதை கட்டாயப்படுத்தி நடைமுறைப்படுத்தினார்கள் இதில் லோஷன் மட்டுமல்ல அந்த வானொலியின் ஒரு குழு மேற்கொண்டு இருந்தது. அவர்களால்தான் மக்கள் மத்தியில் பிரபல்யப் படுத்தப்பட்டது. அதற்கு முதல் ஊடகங்களிலே பயன் படுத்துவது அரிதாகவே இருந்தது. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...
LOSHAN கூறியது...நல்லதொரு கட்டுரை,, தமிழார்வமுள்ளதால் உங்கள் ஆதங்கம் எல்லாம் கொட்டி இருக்கிறீர்கள்..எனினும் மிகப்பெரிய தவறு ஒன்று விட்டுள்ளீர்கள்..நான் உங்களுக்கு ஏற்கெனவே தனிப்பட்ட மின்னஞ்சல் மூலமாக சொல்லி இருந்தேன்..நீங்கள் மேற்குறிப்பிட்ட தமிழ் கலை சொல் வடிவங்களை நான் அறிமுகப்படுத்தவில்லை..எனக்கு முன்னரே அவை பாவனையில் இருந்தன.. ஆனால் அதிகமாக செய்திகளில்.. எமது கூட்டு முயற்சியால்(செய்தி & நிகழ்ச்சிப் பிரிவு) மேலும் அவற்றை செய்திகளில் மட்டுமல்லாமல் நிகழ்ச்சிகளிலும் கொண்டு வந்தோம்..வந்தி சொல்லி இருப்பது மிகச் சரி..chandhru இவ்வாறான தகவல்கள் தரும்போது முன்னோடிகளை மறப்பது அவர்களை அவமதிப்pathu போலானதாகும்.நான் வெகுவிரைவில் இந்த ஊடகங்களில் தமிழ்ப் பிரயோகம் பற்றி எழுதியே ஆகவேண்டும் என்பது போல் இருக்கிறது.வந்தி, மற்ற வானொலிகள் பற்றி நான் விமர்சிப்பது முறையல்ல.. எனினும் எங்களைப் பொறுத்தவரை நேரப் பிரச்சினை ஒரு மிகப்பெரிய சிக்கல்.. முடியுமான கொஞ்ச நேரத்தில் கிடைக்கிற அத்தனை விளையாட்டுத் தகவல்களையும் கொடுக்க வேண்டுமென்பதிலேயே அந்த ஜெயம் கொண்ட எமது வானொலியின் அறிவிப்பாளருக்கு அவசரம்.எனினும் தொடர்ந்து நீங்கள் செவிமடுப்பது மகிழ்ச்சி..சந்துரு, இன்று எனக்கிருந்த அவசர வேலைகளின் மத்தியிலும் உங்கள் பதிவில் பிழை கண்டதாலேயே உடனடியாகப் பின்னூட்டமிட்டேன்.
வந்தியத்தேவன் கூறியது...//சந்ரு கூறியது...ஆரம்ப காலங்களிலே இந்த சொற்கள் பயன்பாட்டில் இருந்தாலும். அவற்றை ஊடகந்கலிலெ பயன் படுத்துவது மிக மிகக் குறைவாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். லோஷன் இதற்கு முதல் பணியாற்றிய உஉடகத்தில்தான் செய்தி அறிக்கைகளில் இந்த சொல்லை பயன்படுத்துவதை கட்டாயப்படுத்தி நடைமுறைப்படுத்தினார்கள் இதில் லோஷன் மட்டுமல்ல அந்த வானொலியின் ஒரு குழு மேற்கொண்டு இருந்தது. அவர்களால்தான் மக்கள் மத்தியில் பிரபல்யப் படுத்தப்பட்டது. அதற்கு முதல் ஊடகங்களிலே பயன் படுத்துவது அரிதாகவே இருந்தது.//யாழ்ப்பாணத்தில் நாம் சர்வசாதாரணமாக 90களின் ஆரம்பங்களில் இந்தச் சொற்களைப் பாவித்தோம். அப்போதுதான் பெரும்பாலான கடைகளின் பெயர்கூட தமிழில் மாறியிருந்தது. சுபாஷ் வெதுப்பகம், ஸ்ரீ மைதிலி நகைப்பூங்கா, மருதம் உந்துருளி நிலையம். லிங்கம் குளிர்களி நிலையம் என பல நிறுவனங்கள் தங்கள் பெயர்களை மாற்றினார்கள். சக்தியின் ஆரம்பகாலத்தில் திரு,எழில்வேந்தனும் லோஷனும் இணைந்து நடத்திய வணாக்கம் தாயகம் நிகழ்ச்சியில் ஆங்கிலவார்த்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள், ஊர் பெயர் காரணங்கள் போன்ற பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடத்தியபோது இந்தப்பெயர்களை அடிக்கடி பாவித்தார்கள். சிலவேளை வடக்குகிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேச மக்களுக்கு இவர்களினால் இந்தப்பெயர்கள் பரவலாக வெளிக்கொணரப்பட்டிருக்கலாம்.
சந்ரு கூறியது...நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே வந்தியத்தேவன் இன்று என்ன பேசுகின்றோம் என்று தெரியாமலே சில அறிவிப்பாளர்கள் பேசுவதை பார்த்திருக்கின்றோம். விளையாட்டு செய்திகளை வாசிக்கும் அறிவிப்பாளர்கள் சிலர் பிழை விடுவதற்குக் காரணன் என்னை பொறுத்தவரை அவர்கள் இன்னுமொரு அறிவிப்பாளர் விளையாட்டுச் செய்தி வாசிப்பதுபோல் தாங்களும் வாசிக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் அது விளையாட்டு செய்தியாக இல்லாமல் மற்றவரை தொந்தரவு செய்யும் செய்தியாக மாறுகிறது. இது எல்லா அறிவிப்பாளர்களும் விடு தவறு இல்லை. ஒரு சிலர் விடும் தவறுதான். ஆனால் அவர்களோ தங்களை விட வேறு எவரும் இல்லை என்று தலைக்கனம் பிடித்து நடப்பதனையும் நான் கண்டு கொள்ளாமல் இல்லை. உங்கள் தமிழ் பற்றை பாராட்டுகிறேன் நண்பரே. இவற்றை பார்த்தாவது திருந்துவார்களா இவர்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...
வந்தியத்தேவன் கூறியது...//வந்தி, மற்ற வானொலிகள் பற்றி நான் விமர்சிப்பது முறையல்ல.. எனினும் எங்களைப் பொறுத்தவரை நேரப் பிரச்சினை ஒரு மிகப்பெரிய சிக்கல்.. முடியுமான கொஞ்ச நேரத்தில் கிடைக்கிற அத்தனை விளையாட்டுத் தகவல்களையும் கொடுக்க வேண்டுமென்பதிலேயே அந்த ஜெயம் கொண்ட எமது வானொலியின் அறிவிப்பாளருக்கு அவசரம்.//லோஷன் அனைவருக்கும் நேரம் பிரச்சனைக்குரியது. பத்திரிகைகளில் விளையாட்டுச் செய்திகளைத் தேடிப்படிப்பது கஸ்டம். சகல பத்திரிகைகளிலும் அதற்கென பிரத்தியேக பக்கம் இருப்பினும் நேரம் கிடைக்காதவர்கள் தங்கள் மற்ற வேலைகளுடன் வானொலிகேட்டுக்கொண்டே என்னவும் செய்யலாம், இதுதான் வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் உள்ளவித்தியாசம். பெரும்பாலும் நான் பயணம் செய்யும் போது ஏதாவது ஒரு வானொலி பெரும்பாலும் ஜெயம் கொண்ட வானொலி கேட்பது வழக்கம். அப்படிக்கேட்கும் போது பல‌வேளைகளில் புதிய பல செய்திகளை விளையாட்டுப் பகுதியில் தருவார்கள். அந்த வானொலியில் அறிவிப்பாளர்கள் பலர் மூன்றெழுத்துபபெயர் கொண்டவர்களாக இருப்பதால் அவரின் பெயரை சூசகமாக குறிப்பிடமுடியாது. அவர்மட்டும் தான் பெரும்பாலும் அவசரகதியில் செய்திகளைத் தருபவர், ஏனையவர்கள் கொஞ்சம் ஆறுதலாகத் தான் செய்திகள் தருகின்றார்கள். சம்பந்தப்பட்டவர்கள் ஆவண செய்தார்கள் என்றால் என்னைப்போன்ற வானொலி நேயர்களுக்கு நல்ல செய்திகள் பல கிடைக்கும்.

சந்ரு கூறியது...மன்னிக்க வேண்டும் லோஷன் அண்ணா... அவசரத்தில் தவறு விட்டு விட்டேன். மக்கள் மத்தியிலே பிரபல்யப்படுத்திய பெருமை என்றே குறிப்பிட்டிருக்க வேண்டும்.

வந்தியத்தேவன் கூறியது...இதனைவிட இன்னொரு விடயம் சந்ரு பெரும்பாலான செய்தி வாசிப்பவர்கள்(குறிப்பாக தொலைக்காட்சிகளில்) நாட்டு நடப்புகள், வெளிநாட்டுத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் பெயர்களை கடித்துக் குதறுவார்கள். ஜெனீவாவை நாடென்ற மிகப்பெரிய பிரபலமும் நம் நாட்டில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கின்றார். இவர்களுக்கு செய்தியின் விடயம் முதலே தெரிந்திருந்தால் ஓரளவு சில இடங்களில் தவறு வந்தால் சமாளிக்கலாம். ஒருமுறை ஒரு தொலைக்காட்சியில் வீரேந்திர சேவாக்கை வீரேந்திர வெசாக் என வாசித்தார்கள். அந்த செய்திவாசிக்கும் காலம் வெசாக் காலம். இன்றைக்கும் அந்த செய்திவாசிப்பாளினி திரையில் வந்தால் வீட்டில் அவரை வெசாக் என்றே அழைப்போம். தவறுகள் பலருக்கும் ஏற்படும் ஆனால் சில தவறுகள் செய்தியின் அர்த்ததையே மாற்றிவிடும். ஒரு பிரபல எழுத்துஊடகத்தில் ஒருமுறை முன்னாள் ஜனாதிபதி அவர்கள் நாடு திரும்பியதை " ஜனாதிபதி சனியன் நாடு திரும்புகின்றார்" என செய்தியாக வெளியிட்டார்கள். சனியன்று என்பது றுவை அச்சுப்பேய் தின்று சனியனாகிவிட்டது. அதேபோல் பிரபல அமைச்சரின் 45 பிறந்தநாளை "அமைச்சருக்கு இன்று 45" எனவும் செய்தியிட்டார்கள்.
dharshini கூறியது...நான் 3,4 வருடங்களுக்கு முன்பெல்லாம் இலங்கை வானொலி அதிகமாக கேட்டுக்கொன்டிருப்பேன்.. அதன் முக்கிய காரனமே அழகான தமிழ் உச்சரிப்புகளே என்னை கவர்ந்தது. சரியாக சொன்னீர்கள் சந்ரு.
நிலாமதி கூறியது...தமிழ் மொழியின் பற்றுள்ள உங்களது ஆக்கம் மிக நன்று பிழைகளை பிழை என்றே தெரியாதவர்களும் இருக்கிறார்கள். காலபோக்கில் ஆங்கில உச்சரிப்பே தமிழாகி விடுகிறது . அது தமிழ் சொல் அல்ல என்றே தெரியாமல் இருக்கிறது. வானொலிகளில் உண்மை தமிழை புகுத்தும் உங்க நட்புகளுக்கு என் பாராட்டை தெரிவித்து விடுங்கள். மொழி வளர்ச்சி பெற்றால் தான் தமிழ் வளரும். தமிழை வளர்ப்போம் தமிழனாக் வாழ்வோம். தமிழ் வாழ்க .

சந்ரு கூறியது...நான் இந்த இடத்திலே சில விடயங்களை குறிப்பிட்டாக வேண்டும் தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. போன்ற சொற்களை அறிமுகப் படுத்திய பெருமை லோஷனையும் அவரது குழுவினையும் சாரும் என்று குறிப்பிட்டிருந்தேன். வந்தி குறிப்பிட்டது போல் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலே ஆரம்ப காலங்களில் இந்தச் சொற்கள் பாவனையில் இருந்தது உண்மையே. காலப்போக்கில் நாகரீகம் என்ற போர்வையில் இந்த சொற்கள் மறக்கப்பட்டு வந்தது என்பது உண்மையே. இச் சொற்களை பாவிப்பது மிகவும் அரிதாக இருந்த வேளை இச் சொற்களை மீண்டும் பாவனைக்கு கொண்டுவர வேண்டும் என்று லோஷன் இதற்கு முன்னர் பணியாற்றிய வானொலி நிலையத்தின் ஒரு குழுவினரின் முயற்சியின் பயனாக அந்த வானொலியின் செய்திகளில் இந்த சொற்கள் பயன்படுத்துவது வழக்கத்திற்கு வந்தது. மக்களின் பயன் பாட்டில் இருந்து மருவி வந்த இந்த சொற்களை மீண்டும் மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தியவர்களுள் லோஷனும் அவர்களது ஒரு குழுவினரும் என்பது மறுக்கமுடியாது. நேற்று லோஷன் அண்ணா எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தனது பெயரை குறிப்பிட வேண்டாம் என்று சொல்லி இருந்தார். என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

வந்தியத்தேவன் கூறியது...சந்ரு உங்களுக்கான சில பதில்கள் இந்தப் பதிவில் இருக்கின்றது. http://enularalkal.blogspot.com/2009/07/blog-post_29.html

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...//தமிழ் மொழியை வளர்ப்பது யார்? தமிழ் மொழியை கொலை செய்வது யார்?..//மற்ற மொழி கற்றவர் கூட கற்க ஆசைப்படும் தமிழ் மொழியை கொலை செய்வது தமிழர்களான நாமே !!!

வால்பையன் கூறியது...//விடயத்துக்கு//இது விஷயம்!சரி வடமொழி எழுத்து வேணாம்!விசயம்னு சொல்லலாமே!ஏன் விடயம்!அப்போ விஷத்தை விடம்னு சொல்லுவிங்களா?(நன்றி:ஆதிமூலகிருஷ்ணன்)
பெயரில்லா கூறியது...//வால்பையன் சொன்னது…//விடயத்துக்கு//அப்போ விஷத்தை விடம்னு சொல்லுவிங்களா?//வால்ப்பையன் அவர்களே விஷத்துக்கு விடம் என்ற தமிழ்ப் பெயர் இருப்பது தங்களுக்குத் தெரியாதா? ஆலகாலவிசமுண்ட சிவனை விடமுண்ட கண்டன் என்பார்கள். என்ன செய்வது ஆங்கிலத்திலே தவழ்ந்து ஆங்கிலேயர்கள் போல வாழ நினைக்கின்ற வான்கோழிகளுக்கு எங்கள் தமிழ் சிரிப்பாகத் தான் இருக்கும்.

வால்பையன் கூறியது...//ஆங்கிலத்திலே தவழ்ந்து ஆங்கிலேயர்கள் போல வாழ நினைக்கின்ற வான்கோழிகளுக்கு எங்கள் தமிழ் சிரிப்பாகத் தான் இருக்கும்.//நான் ஊமையா பொறந்துருக்க வேண்டியது தெரியாத்தனமா பேசறா மாதிரி பொறந்துட்டேன்!மத்தபடி எனக்கு தெரிந்ததெல்லாம் தமிழ்,தமில்,தமிள்,டமில் மட்டுமே!

Maximum India கூறியது...தமிழ் மொழி மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையையும் அன்பையும் பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. உங்களைப் போன்றவர்கள் பல்லாயிரம் காலம் கட்டிக் காத்த நமது தமிழ் இன்னும் பல ஆயிரம் ஆண்டு காலம் வாழும் என்பது திண்ணம். சமீபத்தில் ஒரு பன்னாட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஒரு இலங்கை தமிழ் பெண்ணை சந்தித்தேன். அவருடைய தமிழை கேட்க ஆனந்தமாக இருந்தது. அவரை திரும்பத் திரும்ப தமிழில் உரையாட சொல்லி அமுதெனும் தமிழை புசித்தேன். தமிழை இன்று தூய்மை மாறாமல் வைத்திருப்பதில் பெரிய பங்கு இலங்கைத் தமிழர்களுக்குத்தான் உரியது என்று நினைக்கிறேன்.இன்னும் பல நல்ல பதிவுகள் இட வாழ்த்துக்கள்.அதே சமயம், பாரதி சொன்ன படி, பல நுண்ணிய கலைகள் இன்று உலகம் முழுக்க உருவாகிக் கொண்டே வருகின்றன. அந்த கலைகளை தமிழர்கள் கற்க வேண்டும். அந்த கலைகள் உருவாகி உள்ள மொழிகளை மதிக்க வேண்டும், அந்த மொழிகளை கற்க வேண்டும் மற்றும் அவற்றிலுள்ள நல்ல கருத்துக்களை தமிழுக்கு கொண்டு வந்து தமிழை இன்னும் வளமாக்க வேண்டும். வளமாகும் தமிழ் மூலம் தமிழரின் வாழ்வும் வளமாக வேண்டும். தமிழைப் போலவே தமிழர் நல்வாழ்வின் மீதும் அக்கறை கொண்ட எனது இந்த கருத்துக்களில் எந்த ஒரு மாறுதலும் இல்லை. நன்றி.

ஜெட்லி கூறியது...நண்பர் சந்துரு,உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் வழிமொழிகிறேன்.ஆனால் நீங்கள் சொல்வது போல் சில அறிவிப்பாளர்கள் தமிழ் மொழியை கொலை செய்வது உண்மை மற்றும் ஆங்கில மொழியை பின்பற்றுவதும் உண்மை......அவர்களாகவே திருந்த வேண்டும் அல்லது அவர்களின் மேல் அதிகாரிகள் முயற்சி செய்ய வேண்டும்.அவர்களுக்கு தேவை பணம்,,,,, அவ்வளவே......

sakthi கூறியது...தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி..அழகுத்தமிழ்

sakthi கூறியது...அருமையான கட்டுரை

அக்பர் கூறியது...நல்லதொரு கட்டுரை சந்ரு,மொழியை வளர்ப்பதிலும் , தேய்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அதிகம் உண்டு.

Ravee (இரவீ ) கூறியது...நல்ல பதிவு... வாழ்த்துக்கள்.

jothi கூறியது...சந்ரூ இந்த மாதிரி ஒரு கட்டுரை படிக்கிறதே சந்தோசமாய் இருக்கிறது,.. காரணம் சுத்த தமிழில் எழுத நிறைய வார்த்தைகள் தெரியவில்லை. ஒரு நல்ல பதிவை தந்தமைக்கு

அத்திவெட்டி ஜோதிபாரதி கூறியது...நிறைய தகவல்களைக் கொண்ட நல்ல கட்டுரை சந்துரு.

ஆ.ஞானசேகரன் கூறியது...//ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை. தமிழை வளர்ப்பதிலே பல ஊடகவியலாளர்கள் பாடுபட்டிருக்கின்றார்கள். அதன் பயனாகவே இன்று இந்தச் சொற்கள் மக்களால் பயன்படுத்தப் படுகின்றன.//உண்மைதான் நண்பா.. இன்னும் வேற்று மொழி சொற்களை களைய வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை. அப்படிபட்டி சேவையை ஊடகங்களால் மட்டுமே செய்ய முடியும் அதற்கு அரசின் பரிந்துரைகளும் அவசியம்.என்னுடைய இடுகை இந்த அளவிற்கு தாக்கம் ஏற்படுத்துள்ளது மிக்க மகிழ்ச்சியே. இதுவும் ஒரு நல்ல நோக்கம் என்பதே இதன் சிறப்பு... பாராட்டுகள் நண்பா..

KABEER ANBAN கூறியது...தங்களது கவலை நியாமானதே. தமிழை வளர்க்காமல் போனாலும் தொலைக்காமல் இருந்தால் அதுவே பெரும் சேவை. :)இதே கருத்தில் எனது பழைய கட்டுரை ஒன்றை முள்ளால் எடு என்ற தலைப்பில் காணலாம்///தமிழை கொலை செய்வதில்லை சில அறிவிப்பாளர்கள் இருக்கின்றார்கள் ///'கொலை செய்வதென்றே’ என்று வந்திருக்க வேண்டுமோ ? வாழ்த்துக்கள்

சூர்யா ௧ண்ணன் கூறியது...நல்லதொரு கட்டுரை சந்ரு,//மொழியை வளர்ப்பதிலும் , தேய்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அதிகம் உண்டு.//தமிழார்வமுள்ள நம் பதிவர்கள் உள்ள வரையில்,மெல்லத் தமிழ் இனி சாகாதுவெல்லத் தமிழ் இனி வெல்லும்.

ஆ.ஞானசேகரன் கூறியது...ஊடகங்கள் மூலம் பல கலைச்சொற்கள் மக்களை சென்றுள்ளதை நான் ஒப்புக்கொள்கின்றென். அதே சமயம் தமிழில் கலந்துள்ள வடமொழி சொல், ஆங்கிலம், மேலும் பக்கத்து மாநில மொழி சொற்கள் கலந்துள்ளது. ஏன் இலங்கை தமிழில் சிங்களம் கலந்தும் இருக்கு என்பதும் உண்மைதான். இவற்றை எல்லாம் தனி ஒரு மனிதனால் திட்டம் போட்டி மாற்றம் கொண்டு வரமுடியாத காரியம். ஆனால் ஊடகங்களால் அப்படிப்பட்ட மாற்றத்தை எழிதாக கொண்டு வர முடியும் என்பதுதான் என் எண்ணங்கள். அதை ஏன் செய்யக்கூடாது? அரசும் ஏன் பரிந்துரை செய்யக்கூடாது? என்ற கேள்விகள்தான்.. ஒரு சில ஊடகங்கள் அப்படிபட்ட சேவைகளை செய்வது, உங்களை போன்றவர்கள் செய்வதும் பாராட்டக்கூடியது. அதே சமயம் போதிய அளவிற்கு எல்லா ஊடகங்களும் செய்ய மறுக்கப்படுகின்றதுதான் வேதனை...நல்ல இடுகை நண்பா பாராட்டுகள்
Suresh Kumar கூறியது...அருமையான இடுகை எதுவுமே நடைமுறையில் இருந்தால் சில நாட்கள் கடினமாக இருக்கலாம் பின்னர் பழகி விடும் . தமிழ் வார்த்தைகளை ஏட்டிலே வைப்பதை விட நடை முறையில் கொண்டு வந்தால் தான் அனைவரும் அறிய முடியும் . அது ஊடகங்களால் மட்டும் தான் முடியும் . இதை போன்ற விழிப்புணர்வு இடுகைகள் பல எழுதி ஊடக்னகளுக்கு அறிவுறுத்துவோம்
அ.மு.செய்யது கூறியது...அதிரடி பதிவு...விவாதங்களை வேடிக்கை பார்த்து விட்டு வருகிறேன்.
RAD MADHAV கூறியது...நல்ல இடுகை நண்பா பாராட்டுகள்.....
பெயரில்லா கூறியது...சந்ரு இதைப் பற்றிப் பேசப்பேச பேசிக்கொண்டும்,எழுத எழுத எழுதிக்கொண்டும் இருக்கலாம் முடிவு கிடையாது.இந்த இடுகையை பார்தாவதுதிருந்தினால் நன்று.சுட்டிக் காட்டுவதில்தவறில்லை தொடருங்கள்.ரி.கே
S.A. நவாஸுதீன் கூறியது...அ.மு.செய்யது சொன்னது…அதிரடி பதிவு...விவாதங்களை வேடிக்கை பார்த்து விட்டு வருகிறேன்.நானும்
இளைய அப்துல்லாஹ் கூறியது...உண்மையில் ஐரோப்பாவில் இருக்கும் தமிழ் ஊடகங்கள் நல்ல தமிழில் உரையாடுகின்றன. இலங்கை தமிழ் பத்திரிகைககள் நல்ல மொழி வளத்தை இன்னும் பாதுகாக்கின்றன. தமிழக இலத்திரனியல் ஊடகங்களை விட்டு விடுவோம். மக்கள் தொ காட்சி நல்லது. ஊடகங்கள்தான் மொழிக்கு ஆதாரம்உங்கள் கருத்து மிக்க நல்லது
Mrs.Faizakader கூறியது...உங்களுக்கு தமிழ்மொழி மீது இருக்கும் அன்பையும் அக்கறையையும் பார்க்கும் போது வியப்பாக உள்ளது. மிகவும் அருமையான கட்டுரை.
ஜெகநாதன் கூறியது...அன்பு சந்ரு,சீரிய முயற்சி. வாழ்த்துக்கள்! நான் நினைப்பது, 1. மொழி மற்ற மொழிகளோடு இணக்கமாக இருப்பது அதன் வளர்ச்சியைக் குறிக்கும்2. பேச்சுத் தமிழில் மொழிக்கலப்பை பாவேந்தர் பாரதிதாசன் ஆதரித்திருக்கிறார்!!3. இலத்திரனியல் என்றால் என்ன? இந்த வார்த்தையின் வயது என்ன? இந்தமாதிரி அருஞ்சொற்பொருள்களின் அகராதி எங்கு கிடைக்கும்? இணையத்தில் ஓசியில் கிடைக்குமா? (​மெர்ஸலாகிறது-க்கு இணையத்தில விளக்கம், அர்த்தம் கிடைக்குது)3.5. தங்கள் கருத்துக்கு மாற்றாகவோ, இல்லை மனதைப் புண்படுத்துவதாகவோ இருப்பின் இதற்கு மேல் படிக்காதீங்க! எனக்கு மொழித் தூய்மையை விட சந்ருவின் அன்புதான் முக்கியம்.4. //மொழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது// ​நல்ல கருத்து. ஆனால், ஊடகம் இந்த அளவுகோலில் செயல்பட்டால் ​மொழியறிவு இருக்கும் தொழிலறிவு வளராது. (flightக்கு தமிழ் வார்த்தை இருக்கு, cockpit, fins, rudder, propeller. kinetic velocity, aerofoil, போன்ற தொழில் நுட்பங்களுக்கு புதுசாத்தான் உருவாக்கணும் - அதிலேயும் ஒரே அர்த்ததுக்கு பல பிரயோகங்கள் வர வாய்ப்புள்ளது) ஊடகங்கள் என்பதைவிட கல்விமுறை என்பதே மொழிச்செழுமைக்கு முக்கியமானது ​5. யெஸ். மொழிப்பாதுகாப்பு என்று யாரும் மந்திரித்துவிட்டால், நம்பிடாதீங்க சந்ரு. மொழி யாராலும் பாதுகாக்கபட வேண்டியதில்லை. ​செழுமைப்படுத்தப்பட வேண்டியது. 5.1. ஸாரி. எனக்கு அவ்வளவா சுத்தத் தமிழ்ல எழுதத் தெரியாது - வராது.5.2. இதுமாதிரியான தமிழ்ல எழுதுனா படிக்கிறது ஈஸியா இருக்கும்னு நினைக்கிறேன்5.3. ஒரு வார்த்தைய கொடுத்து இது அக்மார்க் தமிழ் வார்த்தைதான் தரப்பரிசோதனை ​செய்யவும் தெரியாது.5.4. சந்திப்பிழைகளை(ச்?)) சந்திக்கிறேன் - இதுக்கும் இணையத்தில தேடுறேன் - தெரிந்தால் சொல்லவும்5.5. சீரியஸ் இடுகையில லந்து பண்றான்னு நினைக்காதீங்க, இப்பவும் சந்ருவின் அன்புதான் முக்கியம்னு சொல்லிக்கிறேன்.. ​தொடரப் போறீங்களா!!?(.....)(இங்கு பின்னூட்டம் ​போடாமல் இதன் முந்திய இடுகையில் போட்டுவிட்டேன்)
ஜெகநாதன் கூறியது...6. மொழிப்​பெயர்ப்புகளால கூட மொழி​செழுமையாகும்னு நினைக்கிறேன். என்னை தமிழிலில் ஆர்வமா இலக்கியத்தைப் படிக்கத் தூண்டியது, காமிக்ஸ் புத்தகங்கள் அப்புறம் ரஷ்ய இலக்கியங்கள். 6.5 காமிக்ஸ்ல டெக்ஸ்வில்லர், ஹுப்ஹுப்ஹீரே, நவ்ஜோ, பிஸ்டல் பின் ரஷ்ய இலக்கியத்தில வர்ற கெழாக்குகள், வோட்கா, இனியாக்​போன்ற பதங்களும் ​பொருள்களும் பிற​மொழிக்கலப்புதானே? ஆனா இதை தவிர்த்து இந்த இலக்கியத்தை அணுக சாத்தியமான்னு தெரியலே. 7. ​மொழிக்கலப்புன்னா ஏன் இங்கிலீஷை மட்டும் நினைக்கிறோம்? சாவி (திறவுகோல்தான்) ஒரு டச்சு வார்த்தைன்னு கேள்விப்பட்டிருக்கேன்8. நான் பொறியியல்... வேணாம் மெக்கானிக்கல் இன்ஜினீரிங் படிச்சிருக்கேன். இன்னும் ​மேற்படிப்பெல்லாம் படிக்க வேண்டியிருக்கு. முனைவர் பட்டம் வரைக்கும் கூட ​போகலாம்! இதுவரைக்கும் டிப்ளமோ தாண்டி தமிழ் பாடபுத்தகத்தில வந்ததில்ல (அந்த தமிழுக்கு இங்கிலீஷையே படிச்சுக்கலாம்) இந்த மாதிரி டெக்னிக்கல் படிப்புக்கு நான் இங்கிலீஷைதான் கட்டிண்டு அழணும். அப்படி தமிழ்ல இன்ஜினியரிங் பி. ஹெச்டி பண்ண வழியிருக்கா சொல்லுங்க?8.1. எனக்கு(ம்) ழ,ல,ள உச்சரிப்பெல்லாம் சுத்தமா வராது. ​8.2. ல - பிரச்சினையில்ல8.3. குவாட்டர் மாதிரி அடிச்சிருந்தேன்னா ழ நழ்ழாவே வரும்8.4. ள - யாராச்சும் பாடம் எடுத்தா உண்டு8.5. எழுதும் போது எந்த பிரச்சினையும் இல்லை9. நான் உன்னைய இங்கிலீஷ் படிக்க வேணாம்னு சொல்லலியேன்னு கேக்கறீங்கதானே? இப்படி பிற​மொழியில் பலவருஷம் படிச்சு, கேட்டு, எழுதிக்கிட்டு இருந்தா அந்த மொழி​யோட தாக்கம் தாய்மொழியிலும் வரத்தானே செய்யும்? இங்க யார அல்லது எத குத்தம் சொல்றது?
ஜெகநாதன் கூறியது...10. மொழி​பெயர்க்கிறவங்க ஏன் தொழில்நுட்பம் பக்கம் அதிக கவனம் எடுக்கிறதில்ல? நான் ஒரேயொரு ரஷ்ய மொழிப்​பெயர்ப்பு அறிவியல் புத்தகம் படிச்சிருக்கேன் (ரிலேட்டிவிட்டி பத்தி லெந்தாவு எழுதினது)10.1. இந்த மொழிப் பெயர்ப்பு ஆளுகளுக்கு ஒரு ஆணியக் கூட சுத்தியல் வச்சு அடிக்கத் ​தெரியாது. அப்புறம் எப்படி டெக்னிகல் பக்கம் வருவாங்க?10.2. அதுக்கு தொழில்நுட்ப வல்லுநர்கள், மொழியியல் ஆய்வாளர்கள் என ஒரு sync up ​வேணும். எப்ப / எப்படி சாத்தியப்படும்னு தெரியலே (நடந்திருந்தால் தெரியப்படுத்துக)10.3. சைனாக்காரங்க நல்ல​வேளையா இங்கிலீஷ் இப்பத்தான் ஒழுங்கா கத்து, வாய் வழியா பேச டிரை பண்றாங்க. இத ஒரு நூற்றாண்டு முன்னாடியே செஞ்சிருந்தாங்கன்னா, ITல அவங்க நம்பர்.1 ஆயிருப்பாங்க. கம்ப்யூட்டர் இந்தியாவில இப்படிப் பரவியிருக்காது. நம்ம கருத்துக்களை போற​போக்கில இடுகையா போட சான்ஸே இருந்திருக்காது. வேணா எழுதி ஏதாவது பத்திரிக்கைக்கு போஸ்ட் பண்ணிட்டு நகத்தை கடிச்சிட்டு உக்காந்திருக்கலாம்.10.4. பிற​மொழிக்கலப்பில்லாம எழுதறதும் பேசறதும் ஒரு வித்தையா எடுத்துச் செய்ய ஆரம்பிச்சவங்க நிறைய பேரு இலக்கியத்தில காணாம போயிருக்காங்க (பேரெல்லாம் தெரியாது - அந்தளவுக்கு காணாம போயிருக்காங்க..!)10.5. எப்படிச் சொல்றேன்னா, வாசகனுக்கு இணக்கமான நடையில எழுதறவங்கதான் நிலைத்து நிற்கிறார்கள் (சுஜாதா எனக்குத் தெரிஞ்சு ஒரு ஆங்கில வார்த்தை கூட இல்லாமா ஒரு கதை எழுதியிருக்காரு, என்ன பேரு சொல்லுங்க பாப்பம்? கி.ரா எழுத்து அப்படியே வட்டாரம் + பிற மொழிக்கலப்பு இருக்கு.. ஆனா இதைத் தவிர்த்திட்டு அந்த இலக்கியத்தை எழுத முடியுமா?)10.6. மொழி​ஒரு சாதனம். நல்ல இலக்கியம்தான் ஒரு மொழியை மேம்படுத்தும். 10.6.1. தயவுசெஞ்சு வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வராதீங்க - ஏன்னா என் கருத்து சுதந்திரம் இந்த பயத்தாலேயே பாதிக்கப்படுது (அ) பாதி செத்திடுது!10.7. ஒரு வார்த்தையோட மூலம் என்னன்னு தேடிக்கிட்டு போனா.. வரலாறு, கல்வெட்டு, ​போர்-படையெடுப்பு, பிராகிருதி மொழி, பாலி, சமஸ்கிருதம், சரஸ்வதி ஆறுன்னு தாறுமாறா ஓடி எங்கியோ போயி நிக்க வேண்டியதா போயிடும்10.8. ஆவணம், படிப்பு, ஆய்வு, சுயஅர்ப்பணிப்பு, தீவிரம், களப்பணி, பல்துறை அறிவு - இந்த மாதிரி எந்த கூறுகளும் இல்லாம தமிழ் பாதுகாப்பு - தூய்மைன்னு பேசறவங்க (10.6.1க்கு போயிட்டு வந்து தொடரவும்) தான் தமிழ் மொழியின் பேராபத்து. மொழிய வச்சு அரசியல் பண்றவங்கள நாமதான் அடையாளம் தெரிஞ்சுக்கணும்.10.9. ஒரு மொழிக்கு மொழிக்கொலைங்கிறது பிற​மொழிக்கலப்பால வராது (அ. முத்துலிங்கம் எழுதின ஒரு கதை உயிர்மையில் வந்தது. படிச்சுப்பாருங்க) பிற மொழி பற்றிய அறிவு இல்லைங்கிறதுதான் தற்கொலைக்கு சமம்.10.10. கடைசியா (அப்பாடா..!) ஒரு குட்டிக்கதை: ஒருத்தன் குளக்கரை பக்கமா புதையல் இருக்குன்னு தெரிஞ்சு பூமியத் தோண்ட ஆரம்பிச்சானாம்.​தோண்டுனான் ​தோண்டுனான் தோண்டிக்கிட்டே இருந்தானாம். அவன் பண்ணுனது பரவலா தோண்டாம ஒரே குழியையே ஆழமா தோண்டிக்கிட்டு இருந்ததுதான். கடைசிலே பாத்தா குழிதான் ஆழமாச்சு. புதையல் கிடைக்கலே. தோண்டுனது போதும்டா மேலே ஏறலாம்னு பாத்தா ​ரொம்ப ஆழமாயிருக்கு. கத்தி கத்தி பாத்தான். பாவம் யாருக்குமே கேக்கலே.
வந்தியத்தேவன் கூறியது...//. //மொழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது// ​நல்ல கருத்து. ஆனால், ஊடகம் இந்த அளவுகோலில் செயல்பட்டால் ​மொழியறிவு இருக்கும் தொழிலறிவு வளராது. (flightக்கு தமிழ் வார்த்தை இருக்கு, cockpit, fins, rudder, propeller. kinetic velocity, aerofoil, போன்ற தொழில் நுட்பங்களுக்கு புதுசாத்தான் உருவாக்கணும் ‍ //ஜெகநாதன் எங்கள் நாட்டிலை கணிதம் இரசாயணவியல் பெளதீகவியல் எல்லாம் தமிழில் தான் படித்தோம். நீங்கள் மேலே கூறிய வார்த்தைகளுக்கான தமிழ் எம்மிடம் இருக்கின்றது. தேடிப்பிடித்துதான் தரவேண்டும்.
சந்ரு கூறியது...ஜெகநாதன் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் முதலில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.. நான் இந்த இடுகையோடு
இந்த விடயத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம் என்று நினைத்திருந்தேன். பலரும் பல்வேறு பட்ட கருத்துக்களை முன்வைத்துக்கொண்டு இருக்கின்றனர். இன்னும் சில விடயங்களை என்னால் தெளிவு படுத்தப்பட வேண்டி இருக்கின்றது. ஆகவே நான் எனது அடுத்த பதிவில் இது தொடர்பான சில விடயங்களை தெளிவு படுத்துகின்றேன்.
என்.கே.அஷோக்பரன் கூறியது...நல்ல கட்டுரை. நானும் இதைப் பற்றி நிறையக் கவலைப்பட்டிருக்கின்றேன். எல்லாவற்றிலும் கொடுமை என்ன தெரியுமா? தமிழில் 10வீதம் ஆங்கிலம் கலந்தால் பரவாயில்லை ஆனால் இவர்கள் பேச்சில் ஆங்கிலத்தில் 10வீதம் தமிழல்லவா கலந்திருக்கிறது....இந்தப் பதிவைப் படித்தீர்களா? நேரமிருந்தால் படித்துப்பாருங்கள் - http://nkashokbharan.blogspot.com/2009/07/blog-post_07.html
சந்ரு கூறியது...//என்.கே.அஷோக்பரன் கூறியது... நல்ல கட்டுரை. நானும் இதைப் பற்றி நிறையக் கவலைப்பட்டிருக்கின்றேன். எல்லாவற்றிலும் கொடுமை என்ன தெரியுமா? தமிழில் 10வீதம் ஆங்கிலம் கலந்தால் பரவாயில்லை ஆனால் இவர்கள் பேச்சில் ஆங்கிலத்தில் 10வீதம் தமிழல்லவா கலந்திருக்கிறது....இந்தப் பதிவைப் படித்தீர்களா? நேரமிருந்தால் படித்துப்பாருங்கள் - http://nkashokbharan.blogspot.com/2009/07/blog-post_07.html//இப்பொழுதுதான் பார்த்தேன் நண்பரே உங்கள் ஆதங்கமும் இதேதான். உரியவர்கள் திருந்தினால் சரிதான்.அல்லது தமிழ் மொழிக் கொலையினை நிறுத்தினால் சரிதான்.
நண்பர் ஜெகநாதனுக்குரிய பதில்கள் தமிழ் மொழி தமிழ் மொழியாகவே இருக்கிறதா... எனும் இடுகையிலே இருக்கிறது....

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

5 comments: on "இதெல்லாம் சரியா பிழையா..."

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி சந்ரு

தொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம்

மட்டக்களப்பிலிருந்து.....

துபாய் ராஜா said...

தொடரட்டும் தொடர்பான பதிவுகள்.

வாழ்த்துக்கள்.

Admin said...

// பிரியமுடன்.........வசந்த் கூறியது...
நன்றி சந்ரு

தொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம்

மட்டக்களப்பிலிருந்து.....//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா

Admin said...

//ஆ.ஞானசேகரன் கூறியது...
வாழ்த்துகள்//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா

Admin said...

//துபாய் ராஜா கூறியது...
தொடரட்டும் தொடர்பான பதிவுகள்.

வாழ்த்துக்கள்.//

விரைவில் தொடரும் காத்திருங்கள்...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா

Post a Comment