Monday 10 January 2011

அவலங்களில் சிக்கித் தவிக்கும் மக்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே கடும் மழை பெய்துகொண்டிருக்கின்றது. அதனால் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கின்றது. பல மக்கள் இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களிலே தங்க வைக்கப் பட்டிருக்கின்றனர். 

மழை ஓய்வதாகத் தெரியவில்லை நானும் நிவாரணப் பணிகளிலே நண்பர்களோடு ஈடுபட்டிருக்கின்றேன். எனது களுதாவளைக் கிராமத்திலும் 2 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் உடனுக்குடன் நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டுக்கொண்டிருப்பதுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தனது விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றார். 

நேற்று முழுவதும் அவருடன் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களுக்கு சென்றிருந்தேன். மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றன. 

கழுதாவளை மகிழுர் முனை மற்றும் செட்டிபாளையத்தை சேர்ந்த மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்படுவதை படங்களில் காணலாம்.
 _mg_9019
_mg_9010
_mg_9018
_mg_9048

dsc00957
_mg_9184
_mg_9020

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 comments: on "அவலங்களில் சிக்கித் தவிக்கும் மக்கள்."

ம.தி.சுதா said...

தமிழனின் தலை எழுத்தாகி விட்டதே...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..

Post a Comment