Tuesday 11 January 2011

தொடர் அவலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்கள்

பெரியநீலாவணையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மூவரில் ஒருவரை காணவில்லை

bildeஅம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவனை கடற்பரப்பில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை மீன்பிடிக்கச் சென்ற மூவரில் ஒருவர் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

பெரியநீலாவனை, நாதன் ஸ்டேர்ஸ் வீதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு மீன்பிடி தொழிலுக்குச் சென்றுள்ளார்.

எனினும் இவர்கள் சென்ற படகு இடையில் விபத்துக்குள்ளானதையடுத்து கடற்கரையிலிருந்து மற்றுமொரு படகில் சென்ற சிலர் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் படகில் இருந்த இருவரை மாத்திரம் காப்பாற்ற முடிந்ததாகவும், ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

56 வயதுடைய முருகபிள்ளை நவராஜா என்பவரே அலையில் அடித்துச் செல்லப்பட்டவராவார். அவருடைய சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

கிழக்கு பல்கலைக்கழகம் ஒரு வாரகாலத்துக்கு மூடப்படும்.

image356விடுதியில் தங்கியுள்ள ஒருதொகுதி மாணவர்கள் தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர். ஏனைய மாணவர்களையும் அவர்களது வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இம்மாதம் 12ஆம் திகதி நடைபெறவிருந்த பல்கலைக்கழக கலாசார விழா காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விமல்ராஜ் தெரிவித்தார்.

இதேவேளை பதில் உபவேந்தர், மாணவர்கள் சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தொடர்ந்தும் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விமல்ராஜ் மேலும் தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு


நிவாரணப் பணிகள் முதலமைச்சரினால் முன்னெடுப்பு


எப்போதும் இல்லாதவாறு மட்டக்களப்பு மாவட்டத்திலே தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுகின்ற பணிகள் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் வெகுவாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டதோடு அவர்களுக்கான முதற்கட்ட நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
உணவு சமைத்து வழங்குவதற்காக அரிசி சீனி மற்றும் பருப்பு போன்ற பொருட்களை முதற்கட்டமாக வழங்கி வருகின்றார். இன்று சித்தாண்டிஇ வாழைச்சேனை. கோம்மாதுறை, செங்கலடி, வந்தாறுமூலை, கல்குடா இபுதுக்குடியிருப்பு, பேத்தாழைஇகிண்ணையடி, கறுவாக்கேணி போன்ற இடங்களில் முகபாம்களில் தங்கியிருக்கின்ற மக்களுக்கு வழங்கி வைத்தார். குழந்தைகளுக்கான பிஸ்கட்டும் முதல்வர் சந்திரகாந்தன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்ளப்பிற்கான போக்கு வரத்து தடைப்பட்டிருந்த பொதிலும் படகில் சென்று மக்களுக்கான நிவாரணப் பணியில் முதல்வர் சந்திரகாந்தன் ஈடுபட்டமை விசேட அம்சமாகும்.
நான்கு பக்கமும் நீரினால் சூழப்பட்டு எந்தவொரு போக்குவரத்து தெர்ர்புகளும் அற்று இருக்கின்ற வாழைச்சேனை நாசுவன் தீவு மக்களுக்கு சமைத்த உணவினை தொடர்ந்து வழங்குவதற்கு முதல்வர் சந்திரகாந்தன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாh.

image4661
image419
image475
image473


தொடரும் வெள்ள அபாயம் தொடர்பாக நாளை மட்டு கச்சேரியில் அவசர கூட்டம் இடம்பெற இருக்கிறது.  

நன்றி மீன்மகள்

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தொடர் அவலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்கள்"

Post a Comment