Tuesday 20 April 2010

திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப் பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி?

திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப்பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி ? என்று  பல நண்பர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கான ஆலோசனைகள் மீண்டும் இடுகையாக வருகிறது...

1. மனைவியை அடிக்கடி அழகுக்கலை நிலையத்துக்கு அனுப்பவேண்டும்.

2. மனைவி பாட்டியானாலும் நாகரிக ஆடைகளை எப்பொழுதும் அணியவேண்டும். உதாரணமாக தொடை மற்றும் ஏனைய கண்ணுக்குகுளிர்ச்சியைத் தரக்கூடிய, உடற்பாகங்களை வேளிக்காட்டக்கூடிய ஆடைகளை அணிய வேண்டும்.

3. நீங்கள் அதிகம் விரும்பி ரசிக்கின்ற நடிகை நடித்து புதிதாக வெளிவருகின்ற படங்களிலே அந்த நடிகை எப்படி கவர்ச்சி காட்டி நடித்திருக்கின்றாரோ அதேபோல் உங்கள் மனைவியையும் கவர்ச்சியாக உடை மற்றும் ஏனைய நாகரிகச் செயற்பாடுகளிலும் ஈடுபடச் செய்தல்.

4. அடிக்கடி உங்கள் கணனிக்கு மாற்றுகின்ற வோல் பேபர்களில் அந்த நடிகைகள் எப்படி இருக்கிறார்களோ அதேபோல் உங்கள் மனைவியையும் போட்டோ எடுத்து உங்கள் கணனிக்கு இந்த போட்டோக்களை மாற்றிக்கொள்ளலாம்.

5. பாட்டிமாரை (அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை) நண்பிகளாக வைத்துக்கொள்வதோடு அடிக்கடி அவர்களைச் சந்தித்து பல மணி நேரம் பொழுதைக்கழிக்க வேண்டும். (எந்த ஒரு இளம் நண்பிகளும் இருக்கக்கூடாது.)

6. தன்னைவிட இருபது வயது குறைந்த பெண்ணை திருமனை செய்யலாம்.(மனைவியை நீங்கள் எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கலாம் மனைவி உங்களைவிட வேறு ஒருவரைப் பார்த்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல)

7. நடிகைகளைப்பற்றி பேசுகின்ற அல்லது நடிகைகளின் அந்தமாதிரிப்படங்களின் களஞ்சியமாக இருக்கின்ற வலைப்பதிவுகளுக்கு போவதைத் தவிர்த்து நல்ல வலைப்பதிவுகளுக்கு அடிக்கடி போய் வரலாம்.

8. தினமும் பின்னேரங்களில்  பெண்கள் அதிகமாக நடமாடும் Majestic City , போன்ற இடங்களுக்கு சென்று பெண்களோடு சேட்டை செய்வதனைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வேண்டுமானால் முதியோர் இல்லங்களுக்குப் போய் வரலாம்.

9. உங்கள் அலுவலகத்தில் இளம் பெண்கள் ஆண்களைப்போல் ஆடை அணியவேண்டும்என்ற கொள்கையினைக்கொண்டு வரலாம். (இதன் மூலம் பெண்களை பார்ப்பதனால் உங்களுக்கு வரும் பெண்கள் மீதான மோகத்தினைத் தவிர்த்துக் கொள்ளலாம்.)

10. மனைவிமீது வெறுப்பு வரும்போது வேறொரு மனைவியை மாற்றிக்கொள்ளலாம். (இதனால் மனைவிமீது வெறுப்பின்றி புது மனைவியோடு சந்தோசமாக இருக்கலாம் இங்கு எத்தனை மனைவி என்பது முக்கியமானதல்ல மனைவியோடு சந்தோசமாக இருப்பதே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது.)

இதனைக் கடைப்பிடித்தால் பெண்கள் மீதான உங்கள் மோகம் குறைவடைந்து உங்கள் மனைவிமீது அதிகம் அன்பு, ஆசை வரும்.

இது போன்ற ஆலோசனைகள் தேவைப்படுவோர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
தொடர்ந்து நண்பர்களுக்கான ஆலோசனைகள் வரும்...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

6 comments: on "திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப் பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி?"

SShathiesh-சதீஷ். said...

//1. மனைவியை அடிக்கடி அழகுக்கலை நிலையத்துக்கு அனுப்பவேண்டும்//

ஏனையா பேயை பாத்து பயந்திட்டிங்களா? இல்லை உங்கள் கவிதைகளுக்கு சொந்தக்காரியைதான் சொன்னேன்.

//தன்னைவிட இருபது வயது குறைந்த பெண்ணை திருமனை செய்யலாம்.(மனைவியை நீங்கள் எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கலாம் மனைவி உங்களைவிட வேறு ஒருவரைப் பார்த்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல)
//

என்னது பார்த்திட்டாங்களா?

// நடிகைகளைப்பற்றி பேசுகின்ற அல்லது நடிகைகளின் அந்தமாதிரிப்படங்களின் களஞ்சியமாக இருக்கின்ற வலைப்பதிவுகளுக்கு போவதைத் தவிர்த்து நல்ல வலைப்பதிவுகளுக்கு அடிக்கடி போய் வரலாம்.
//

அப்போ உங்கள் பக்கம் வரக்கூடாது....

//மனைவிமீது வெறுப்பு வரும்போது வேறொரு மனைவியை மாற்றிக்கொள்ளலாம். (இதனால் மனைவிமீது வெறுப்பின்றி புது மனைவியோடு சந்தோசமாக இருக்கலாம் இங்கு எத்தனை மனைவி என்பது முக்கியமானதல்ல மனைவியோடு சந்தோசமாக இருப்பதே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது.//

ஆசையை பாரு....

நகைச்சுவையாக இருந்தாலும் சில விடயங்களை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். காமப்பதிவர் சந்ரு வாழ்க

ஹேமா said...

அடக் கடவுளே...சந்ரு வர வர சமூகசேவை மும்மரமா நடக்குதுபோல.கவனமா இருந்துகொள்ளுங்கோ.ஆரிட்டயாச்சும் வாங்கிக் கட்டப்போறியள்.எண்டாலும் நல்ல விஷயங்கள்தான் எங்கட பொடிப்பிள்ளையளுக்கு !

ஆதிரை said...

//.சந்ரு வர வர சமூகசேவை மும்மரமா நடக்குதுபோல//

சமூகசேவை அமைச்சர் வாழ்க

பனித்துளி சங்கர் said...

///////திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப் பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி? /////////

ஏலே மக்கா குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்கப் பாக்குறியால .

malarvizhi said...

அட கடவுளே ! வேடிக்கைதான், சந்த்ரு.

Unknown said...

vithyaasamaagavum irukku villangamaavum irukku

Post a Comment