Monday 16 November 2009

காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள்...

யாரும் என்னை திட்ட நினைத்திடாதிங்க இது ஒரு நகைச்சுவைப் பதிவு.


இப்போது சில வலையுலக நண்பர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனை பற்றி இந்த பதிவுல தரலாம் என்று இருக்கிறன்.


என்ன நம்ம பிரபல பதிவர் ஒருவருக்கு விரைவில் திருமணம் என்று லோஷன் அண்ணா ஒரு பதிவு போட்டதுமே நம்ம இளம் சிங்கங்கள் உசாராகிட்டாங்க. நாங்களும் கல்யாணம் முடிக்கணும் இன்று ஒரு சிலர் அவங்களின்ர அம்மா அப்பாவ கஷ்டப்படுத்திக்கொண்டு இருப்பதாக பதிவர் கோபியால் நடாத்தப்படும் பம்மாத்து FM வானொலியில செய்தி போனது.


சரி என்று நிலமைய ஆராஞ்சி பார்த்தா பல பதிவர்கள் பல சிக்கல்களை எதிர் நோக்குவதை அறிய முடிந்தது. என்ன ஒரு காதலி காதலனோடு எப்பவும் அன்பா இருக்கணும் என்றால் , காதலிக்கு காதலன் மீது பிடிக்கும் விடயங்கள் என்ன என்று அறிய முடியாதிருப்பதாகவும், தான் விரைவிலே காதலில் விழக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் நண்பர் கோபி சொன்னார். சொன்னதோடு மட்டுமல்லாமல். காதலிகளுக்கு காதலன் மீது என்ன விடயங்கள் பிடிக்கும் என்று ஒரு ஆய்வு செய்து தரும்படி கேட்டுக்கொண்டார்.


அவரின் பரிதாபம் தாங்க முடியாமல் சுபாங்கன் தலைமையிலே எமது குழு ஆராச்சிகளை மேற்கொண்டது. ஆராச்சியின் முடிவுகளின்படி. காதலன் மீது காதலிகளுக்கு என்ன விடயங்கள் பிடிக்கும் என்ற விபரங்கள் இதோ.

1. காதலி எங்கே போகின்றார், வருகின்றார் என்ற விடயங்களை காதலியிடம் கேட்கக்கூடாது. நீங்கள் அதிகம் வெளியில் செல்லக்கூடாது.


2. நீங்கள் அதிக நேரம் எவருடனும் தொலை பேசியில் உரையாடக்கஊடாது. ஆனால் காதலி யாருடனும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கதைக்கலாம். நீங்கள் கண்டுகொள்ளக்கூடாது.

3. நீங்கள் உங்கள் பெண் நண்பிகளோடு காதலி இருக்கும்போது கதைப்பதனை தவிர்த்துக்கொள்ளுங்கள். அல்லது முற்றாக நண்பிகளை மறந்து விடுங்கள். உங்கள் காதலி அவரது நண்பர்களோடு பழகுவதற்கு இடமளியுங்கள்.


4. உங்கள் காதலி அழகில்லை என்றாலும் உன்னைப்போல் அழகி உலகிலில்லை என்று புகழ்ந்து பேசுங்கள்.


5. நீங்கள் காதலிக்க ஆரம்பித்ததும் ஆடம்பரங்களை தவிருங்கள். நீங்கள் அழகாக இருந்தால் ஏனைய பெண்கள் உங்களை அபகரித்து விடுவார்கள் என்ற எண்ணம் உங்கள் காதலிக்கு இருக்கும். நீங்கள் ஆடம்பரமாக இருந்தால் உங்களை நோட்டம்விட ஆரம்பித்து விடுவார். சந்தேகப்பட்டு விடக்கஊடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது.


6.உங்கள் காதலிக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ எல்லாவற்றையும். உங்களிடம் பணமில்லை என்றாலும் எங்காவது கடன் பட்டாவது வாங்கிக் கொடுங்கள். ஆனால் உங்களிடம் பணம் இல்லை என்பதனைக் காட்டிக்கொள்ளவேண்டாம்.


7. அதிகமாக இளம் பெண்கள் இருக்கின்ற இடங்களுக்கு போவதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அல்லது காதலிக்குத் தெரியாமல் போய் வாருங்கள்.


8. உங்கள் காதலி பலர் மத்தியிலே இருக்கும்போது உங்கள் காதலியைப் பற்றி அவர்களிடம் புகழ்ந்து பேசுங்கள். (காதலி இல்லாத நேரங்களில் திட்டித்தீர்க்கலாம்)


9.நீங்கள் இதற்கு மூன்னர் வேறு யாரையும் காதலித்திருந்தாலும் உங்கள் காதலியிடம் எனக்கு பெண்களைப் பார்க்கவே பிடிக்காது ஆனால் உன்னை எப்பவும் பார்த்துக் கொண்டே இருக்கணும்போல இருக்கு என்பது போன்ற வசனங்களை அடிக்கடி பேசுங்கள்.



10. இதுதான் முக்கியமான விதி முதலில் ஒரு பெண்ணை காதலிக்கவேண்டும்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

46 comments: on "காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள்..."

Unknown said...

நானா முதலாவது?

Unknown said...

//சிலர் அவங்களின்ர அம்மா அப்பாவ கஷ்டப்படுத்திக்கொண்டு இருப்பதாக பதிவர் கோபியால் நடாத்தப்படும் பம்மாத்து FM வானொலியில செய்தி போனது.//

ஓம் ஓம்...
சூரியமான வானொலியில வியாழ மாற்றத்தால என்ன நடக்குமெண்டு செய்தி போனதாம்... அந்தச் செய்தி போகேக்க என்ர வானொலியில உந்தச் செய்தி போகக் கூடாதா?
உதில கஷ்ரப்படுத்திறாக்களில நீங்கள் தான் முதலிடம் எண்டும் சொன்னாங்கள்... கேட்டியளோ செய்திய?


//விரைவிலே காதலில் விழக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் நண்பர் கோபி சொன்னார் //

ஏனப்பா இந்தக் கொலைவெறி...
நல்லாத் தானே போய்க்கொண்டிருந்தது?

மற்றும்படி நீங்கள் போட்ட 10 ஆலோசனைகளையும் நான் வாழ்க்கையில ஒருக்காலும் செய்யமாட்டன்...
(அதால தானா எண்டு உள்குத்து வச்சுக் கேட்டா அழுதிருவன்... :( )

நகைச்சுவைப் பதிவுகளையும் போட ஆரம்பித்திருக்கும் உங்களை வாழ்த்துகிறேன்...

யோ வொய்ஸ் (யோகா) said...

நல்லாதான் யோசிக்கிறீங்க. அனுபவமா சந்ரு?

யோ வொய்ஸ் (யோகா) said...

யாராவது கும்மிக்கு வருவதென்றால் வரலாம்,....

நான் ரெடி

Unknown said...

//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
யாராவது கும்மிக்கு வருவதென்றால் வரலாம்,....

நான் ரெடி //

போதும்.... இண்டைக்கு போதும்...
முடியல....
பஞ்சியா இருக்கு.......

Admin said...

//கனககோபி கூறியது...
நானா முதலாவது?//


நீங்களேதான்

//ஓம் ஓம்...
சூரியமான வானொலியில வியாழ மாற்றத்தால என்ன நடக்குமெண்டு செய்தி போனதாம்... அந்தச் செய்தி போகேக்க என்ர வானொலியில உந்தச் செய்தி போகக் கூடாதா?
உதில கஷ்ரப்படுத்திறாக்களில நீங்கள் தான் முதலிடம் எண்டும் சொன்னாங்கள்... கேட்டியளோ செய்திய?//

அது எல்லாம் சகஜமப்பா கண்டுக்கப்போடாது..

//ஏனப்பா இந்தக் கொலைவெறி...
நல்லாத் தானே போய்க்கொண்டிருந்தது?//

நீங்கள்தான் வேறு திசை நோக்கிப் போவதாக அறிந்தேன்

//மற்றும்படி நீங்கள் போட்ட 10 ஆலோசனைகளையும் நான் வாழ்க்கையில ஒருக்காலும் செய்யமாட்டன்...
(அதால தானா எண்டு உள்குத்து வச்சுக் கேட்டா அழுதிருவன்... :( )//

நீங்க இதனைவிட நல்ல விடயங்கள் வைத்திருக்கிங்க போல

//நகைச்சுவைப் பதிவுகளையும் போட ஆரம்பித்திருக்கும் உங்களை வாழ்த்துகிறேன்...//

போடலாம் மனசும் மக்களும் விடுவதாய் இல்லை

Admin said...

//யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…
நல்லாதான் யோசிக்கிறீங்க. அனுபவமா சந்ரு?//


அனுபவம்தான். எனக்கல்ல நிறையப்பேருக்கு

Admin said...

//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
யாராவது கும்மிக்கு வருவதென்றால் வரலாம்,....

நான் ரெடி//


ஏனையா இந்தக் கொலை வெறி

Admin said...

//கனககோபி கூறியது...
//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
யாராவது கும்மிக்கு வருவதென்றால் வரலாம்,....

நான் ரெடி //

போதும்.... இண்டைக்கு போதும்...
முடியல....
பஞ்சியா இருக்கு.......//

நல்ல பிள்ளை என்பதை நிருபித்துவிட்டாய் கோபி

Kala said...

காதலி காதலன்மீது {மிது}
யாரு.__யாரும்
என்னை-----என்னைத்
நினைத்திடாதிங்க---------நினைத்திடாதீங்க
தரலாம்இன்று----தரலாம் என்று

தயவுசெய்து பார்வையிடுங்கள்.

Unknown said...

//நீங்கள்தான் வேறு திசை நோக்கிப் போவதாக அறிந்தேன் //

எனக்குத் தெரிங்சது நேர்த்திசை தான்...
ஒரே திசைதான்...


//நீங்க இதனைவிட நல்ல விடயங்கள் வைத்திருக்கிங்க போல //

அப்பிடி எண்டில்ல...
உதுக்குப் பேர் உண்மையான காதலில்ல எண்டு சொல்லவந்தன்...

நீங்கள் நகைச்சுவைக்காகப் போட்டிருந்தாலும், அந்த நகைச்சுவையை இரசித்திருந்தாலும் ஏதோ நான் செய்யாததெல்லாத்தையும் சொல்ற மாதிரியே இருக்கு...
(குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குது... ஹி ஹி...)

பதிவுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்...

Subankan said...

இது சுபாங்கன் தலைமையிலான குழு ஆராய்ந்து சொல்ல எழுதின மாதிரித் தெரியவில்லை, அனுபவத்தில் எழுதின மாதிரித்தான் தெரியுது

Menaga Sathia said...

//இது சுபாங்கன் தலைமையிலான குழு ஆராய்ந்து சொல்ல எழுதின மாதிரித் தெரியவில்லை, அனுபவத்தில் எழுதின மாதிரித்தான் தெரியுது//ரீப்பிட்ட்

Admin said...

//Kala கூறியது...
காதலி காதலன்மீது {மிது}
யாரு.__யாரும்
என்னை-----என்னைத்
நினைத்திடாதிங்க---------நினைத்திடாதீங்க
தரலாம்இன்று----தரலாம் என்று

தயவுசெய்து பார்வையிடுங்கள்.//

அவசரம் யாரை விட்டது. திருத்திவிட்டேன்.

Admin said...

///// கனககோபி கூறியது...
//நீங்கள்தான் வேறு திசை நோக்கிப் போவதாக அறிந்தேன் //

எனக்குத் தெரிங்சது நேர்த்திசை தான்...
ஒரே திசைதான்...////

அது எங்களுக்கு தெரியும்தானே உங்க நேர்த்திசை எது என்று


////நீங்க இதனைவிட நல்ல விடயங்கள் வைத்திருக்கிங்க போல //

அப்பிடி எண்டில்ல...
உதுக்குப் பேர் உண்மையான காதலில்ல எண்டு சொல்லவந்தன்...

நீங்கள் நகைச்சுவைக்காகப் போட்டிருந்தாலும், அந்த நகைச்சுவையை இரசித்திருந்தாலும் ஏதோ நான் செய்யாததெல்லாத்தையும் சொல்ற மாதிரியே இருக்கு...
(குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குது... ஹி ஹி...)

பதிவுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.../////

எங்கேயோ உதைக்கிறமாதிரி இருக்குதே. எல்லாம் நல்லபடி நடக்கட்டும்

Admin said...

//Subankan கூறியது...
இது சுபாங்கன் தலைமையிலான குழு ஆராய்ந்து சொல்ல எழுதின மாதிரித் தெரியவில்லை, அனுபவத்தில் எழுதின மாதிரித்தான் தெரியுது//


என்ன சுபாங்கன் உங்க அனுபவத்தை பதிவிட சொல்லிவிட்டு இப்போ இப்படி சொல்றிங்க.

சுசி said...

அனுபவம் சூப்பர்....

Admin said...

//Mrs.Menagasathia கூறியது...
//இது சுபாங்கன் தலைமையிலான குழு ஆராய்ந்து சொல்ல எழுதின மாதிரித் தெரியவில்லை, அனுபவத்தில் எழுதின மாதிரித்தான் தெரியுது//ரீப்பிட்ட்//


அட.. நீங்களுமா?.... நான் சொல்வதெல்லாம் உண்மை நான் சொல்வதைத்தவிர வேறெதுவுமில்லை...

Admin said...

//சுசி கூறியது...
அனுபவம் சூப்பர்....//


அடப் பாவிகளா..... என்ன ஒரு வழி பண்ற எண்டே எல்லோரும் கிளம்பிட்டிங்களா? கடவுளே என்னைக் காப்பாற்று...

ஸ்ரீராம். said...

//"இதுதான் முக்கியமான விதி முதலில் ஒரு பெண்ணை காதலிக்கவேண்டும்"//

சமைக்க ஆரம்பிக்குமுன் Stove பற்ற வைக்க வேண்டும் என்பது போல...

Thenammai Lakshmanan said...

//10. இதுதான் முக்கியமான விதி முதலில் ஒரு பெண்ணை காதலிக்கவேண்டும்.//:-)))

NICE CHANDRU

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

என்னாச்சு சந்ரு?

Anonymous said...

யேசுவே..Hello yo voice, pls come to subankan's messenger... we need ppl there..

வந்தியத்தேவன் said...

காதல் கசக்குதையா வர வர காதல் கசக்குதையா

Admin said...

//வந்தியத்தேவன் கூறியது...
காதல் கசக்குதையா வர வர காதல் கசக்குதையா//


இப்பவே கசக்கிறதா எங்க வயசுக்காரங்களுக்கு இனிக்கிறது..

Admin said...

//ஸ்ரீராம். கூறியது...
//"இதுதான் முக்கியமான விதி முதலில் ஒரு பெண்ணை காதலிக்கவேண்டும்"//

சமைக்க ஆரம்பிக்குமுன் Stove பற்ற வைக்க வேண்டும் என்பது போல...//


அதேதான்
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

வந்தியத்தேவன் said...

காதல் கசக்குதையா வர வர காதல் கசக்குதையா

Admin said...

//thenammailakshmanan கூறியது...
//10. இதுதான் முக்கியமான விதி முதலில் ஒரு பெண்ணை காதலிக்கவேண்டும்.//:-)))

NICE CHANDRU//


அப்படிப்போடு...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//ஜெஸ்வந்தி கூறியது...
என்னாச்சு சந்ரு?//


என் நண்பர்களுக்கு காதல் வந்துவிட்டது...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//Mukilini கூறியது...
யேசுவே..Hello yo voice, pls come to subankan's messenger... we need ppl there..//


ஆஹா...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Unknown said...

//வந்தியத்தேவன் கூறியது...
காதல் கசக்குதையா வர வர காதல் கசக்குதையா //

சீச்சீ... அந்தப் பழம் புளிக்கும்....

Admin said...

//கனககோபி கூறியது...
//வந்தியத்தேவன் கூறியது...
காதல் கசக்குதையா வர வர காதல் கசக்குதையா //

சீச்சீ... அந்தப் பழம் புளிக்கும்....//


அப்பாடா இங்கேயும் வந்தாட்சா.. உண்மையாகவே நீங்கள் காதலிப்பவர்தான் கோபி....

கவி அழகன் said...

நல்ல தமாசு

Anonymous said...

A small appreciation... http://the-nutty-s.blogspot.com/2009/11/blog-post_16.html

ஹேமா said...

சந்ரு முதலில் உங்கள் பதிவின் திசை மாறியிருக்கிறது.எப்போதும் ஊடகம் எங்கள் அரசியல் என்றில்லாமல்.
சந்தோஷம்.மனதை நாங்களும் கொஞ்சம் மாற்றித் திருப்பினாலதான் ...முடியும்.

சந்ரு நல்ல ஆலோசனைகள்தான்.
உங்களைப்போல எல்லாருக்கும் உதவும்.

இவ்வளவையும் திருப்பிப் போட்டு உங்களைக் கலாய்க்க கனநேரம் ஆகாது கண்டியளோ !

Kala said...

ஹேமா அவர்கள்தான் ஏமாற்றுவது,
நடிப்பது {ஆண்கள்தான்} என்று அப்பட்டமாகத்
தெரிகிறதே!
பாவம்!காதலிகளே!! கவனம்.

Admin said...

//கவிக்கிழவன் சொன்னது…
நல்ல தமாசு//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//Mukilini சொன்னது…
A small appreciation... http://the-nutty-s.blogspot.com/2009/11/blog-post_16.html//


என்ன ஒரு கும்மியையே பதிவாக்கிட்டிங்களே.... நன்றி.... நன்றி..... நன்றி... நன்றி.....

Nathanjagk said...

பாயிண்ட் நம்பர் 10ல் நிக்கறீங்க சந்ரு!!
இந்த மாதிரி 10 என்ன 1000 ஆலோசனை ​சொன்னாலும் பிரியற​ஜோடிகளை என்ன செய்ய?

Admin said...

//ஹேமா கூறியது...
சந்ரு முதலில் உங்கள் பதிவின் திசை மாறியிருக்கிறது.எப்போதும் ஊடகம் எங்கள் அரசியல் என்றில்லாமல்.
சந்தோஷம்.மனதை நாங்களும் கொஞ்சம் மாற்றித் திருப்பினாலதான் ...முடியும்.

சந்ரு நல்ல ஆலோசனைகள்தான்.
உங்களைப்போல எல்லாருக்கும் உதவும்.

இவ்வளவையும் திருப்பிப் போட்டு உங்களைக் கலாய்க்க கனநேரம் ஆகாது கண்டியளோ !//

அடிக்கடி இப்படி நகைசுவை பதிவுகளையும் கொடுப்போமே என்ற எண்ணம்தான்.
நான் இப்பதான் பாலகன் எனக்கு இந்த ஆலோசனைகள் எல்லாம் தேவை இல்லைதானே.
நீங்களுமா என்னை கலாய்க்கப்போறிங்க எல்லோரும் ஒன்றாகத்தான் முடிவு பண்ணிடிங்க...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//Kala கூறியது...
ஹேமா அவர்கள்தான் ஏமாற்றுவது,
நடிப்பது {ஆண்கள்தான்} என்று அப்பட்டமாகத்
தெரிகிறதே!
பாவம்!காதலிகளே!! கவனம்.///


பெண்களால்தான் ஆண்கள் அதிகமாக எமற்றப்படுவதாக அறிந்தேன். ஆனால் எனக்கு அனுபவமில்லை....... ஆண்களே உசாராகிடுங்க....

Admin said...

//ஜெகநாதன் சொன்னது…
பாயிண்ட் நம்பர் 10ல் நிக்கறீங்க //
பாயிண்ட் நம்பர் 11 ல் நான் இப்போ இருக்கிறேன். நான் பாலகன்....

//சந்ரு!!
இந்த மாதிரி 10 என்ன 1000 ஆலோசனை ​சொன்னாலும் பிரியற​ஜோடிகளை என்ன செய்ய?//

நான் காதலைப் பற்றி பேசுகிறேன். இது காதலில்லையே....
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Anonymous said...

எனதருமை கும்மியடிக்கும் கட்சித் தொண்டர்களே... புல்லட் போண்டி கணக்க உங்கள் கட்சிக்காரர் ஒருவரைப் பற்றி கதைக்கிறார்... கொஞ்சம் கும்முங்கோவன்.. பெண் பாவம் பொல்லாதது.. சொல்லிப்போட்டன்...

Sorry for spamming :-(

புல்லட் said...

நல்ல அட்வைசுகள்.. எனக்கொரு சந்தேகம்.. உவர் இருக்கும் ப.பா சங்கம் பச்சிளம் பாலகர் சங்கமா இல்லை பல்லுப்போய் பாடையிலேறுவோர் சங்கமா? இருக்கும் காமவியல் முதிர்ச்சியை பார்த்தால் லட்டர் போலதான் கிடக்கு..

புல்லட் said...

அது சரி எங்கட வந்தியியிண்ட காதலை யார்றா கசக்கினது? பிச்சு புடுவேன் பிச்சு..

ஆ.ஞானசேகரன் said...

நல்லாதான் யோசிக்கிரீங்க

Post a Comment