சந்ருவின் பக்கம்

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு
  • Posts RSS
  • Comments RSS
சந்ருவின் பக்கம் உங்களை அன்போடு அழைக்கிறது.

வியாழன், 5 நவம்பர், 2009

எல்லோராலும் அவதானிக்கப்படும் இலங்கைப் பதிவர்கள்

Author: சந்ரு | Posted at: 10:26 am | Filed Under: இருக்கிறம், இலங்கை, பதிவுலகம் |
கடந்த இரண்டாம் திகதி இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வலைப்பதிவர்களுக்கும், அச்சு, இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்குமிடயிலான சந்திப்பினைப் பற்றி பலரும் பதிவிட்டுவிட்டார்கள் நான் இன்றுதான் மட்டக்களப்புக்கு வந்து சேர்ந்திருக்கின்றேன்.



இன்று விவாதத்துக்குள்ளாகி இருக்கின்ற இந்தச் சந்திப்பானது, பதிவர் சந்திப்பு அல்ல இருக்கிறம் சஞ்சிகை ஏற்பாடு செய்திருக்கின்ற பதிவர்களுக்கும் அச்சு இலத்திரனியல் ஊடகவியலாலருக்குமிடயிலா சந்திப்பு என்றுதான் வந்தி தெளிவாகப் பதிவிட்டு இருந்தார். நானும் அவ்வாறே பதிவிட்டிருக்கின்றேன். பலரும் புரிந்துகொண்ட விதம் வேறாகிவிட்டது.



வந்தி என்னோடு தொலைபேசியில் பேசும்போது இது ஒரு ஒன்றுகூடலாகத்தான் அமைய இருக்கின்றது என்ற விபரங்களையும் சொல்லி இருந்தார்.

இருந்தாலும் எனக்கு எதிர்பார்ப்புக்கள் அதிகமாகவே இருந்தன. காரணம் நான் எமது முதலாவது வலைப்பதிவர் சந்திப்புக்கு போகாததுதான். நான் இதுவரை சந்திக்காத எனது வலையுலக நண்பர்களை சந்திக்கப்போகின்றேனே என்ற சந்தோசம் ஒரு பக்கம்.

எப்போ அந்த 3 மணி வருதில்லையே என்ற எதிர்பார்ப்புவேறு. அடிக்கடி வந்தி, மற்றும் சதிஷ் இருவருக்கும் தொலைபேசியில் அழைப்பெடுத்து எத்தனை மணிக்கு வருகிறீர்கள் என்று கேட்டுக்கொள்வேன். நான் இரண்டு மணிக்கு முன்னரே போய்விட்டேன். நான்தான் முதலில் சென்ற வலைப்பதிவர் என்று நினைக்கின்றேன்.

ஒருசில பதிவர்கள் வர ஆரம்பித்துவிட்டனர். அப்போது ஒரு பதிவரிடம் நீங்கள்தானே யோகா என்று கேட்டேன். அவர் நான் இல்லை என்று பக்கத்திலே இருந்தவரைக் காட்டினார். யோகாவின் புகைப்படத்துக்கும் நேரில் பார்ப்பதுக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தமைதான் காரணம். யோகா மட்டுமல்ல என்னும் இருக்கிறார்கள் பலர்.

என்னை நான் அறிமுகப்படுத்தியபோது அவனா நீ, நீயா அவன் என்ற கேள்விக்குறிகள், ஆச்சரியக் குறிகள் என்று வர ஆரம்பித்துவிட்டன.

பதிவுகளைப் பார்த்து ஒவ்வொருவரும் எப்படி, எப்படி இருப்பார்கள் என்று நான் கற்பனை பண்ணி இருந்ததற்கும் நேரில் பார்த்தபோது அந்தப் பதிவுக்கு சொந்தக்காரர் இவரா என்று ஆச்சரியப்பட வைத்தது.


நான் எப்போதும் வந்தி என்றுதான் சொல்வேன். இப்போ வந்தி அண்ணா என்று சொல்ல நினைத்திருக்கின்றேன். எல்லோரும் வந்தியை (............) என்று சொல்வார்கள் நான் அப்படிச் சொல்லமாட்டேன். கனககோபி வயசில தம்பிதான் ஆனா உருவத்தைப் பார்த்தா தாத்தா என்று சொல்ல தோன்றுது. சுபாங்கன் எல்லோருக்கும் தம்பியாக இருக்கலாம்.

பல நண்பர்களை நேரில் சந்தித்து பேசிய சந்தோசம். மற்றும்படி எல்லோருமே நடந்தவிடயங்களை பதிவிட்டு விவாதித்தும் விட்டனர் நானும் அவற்றை பேசுவது பொருத்தமற்றது.

இந்த ஒனறுகூடலின்போதும், அதன் பின்னரும் இடம்பெறுகின்ற கருத்து மோதல்களின் பின்னர் எனக்குள் எழுந்த சந்தேகங்களை உங்களிடம் முன்வைக்கின்றேன்.

ஊடகவியலாலர்களையும், வலைப்பதிவர்களையும் இணைக்கும் ஒரு சந்திப்பாக சிலர் குறிப்பிடுகின்றனர். ஊடகவியலாளர்கள் வேறு வலைப்பதிவர்கள்வேறா? (பல வலைப்பதிவர்கள் ஊடகவியலாளர்கள் என்பது வேறு விடயம்) வலைப்பதிவர்கள் ஊடகவியலாளர்களுக்குள் அடக்கமுடியாதா?


நாம் அச்சு, இலத்திரனியல் ஊடகமென்று சொல்கின்றோம். இணையம், ஊடகம் இல்லையா? வலைப்பதிவு ஊடகமில்லையா? நாம் ஏன் வலைப்பதிவர்களை ஊடகங்களிலிருந்து தனியாக்க நினைக்கின்றோம். இங்கே ஊடகம் என்பதன் வரையறை என்ன?

இன்று இலங்கை வலைப்பதிவர்களை இலங்கையில் மட்டுமல்ல பலரும் கவனித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது இந்த ஒன்றுகூடல்மூலம் புலனாகின்றது எமது ஒவ்வொரு நகர்வுகளையும் பலர் கவனித்துக்கொண்டிருக்கின்றனர்.

விரைவிலே எமது இரண்டாவது பதிவர் சந்திப்பு இடம்பெறவேண்டும் என்பதே எனது அவா எப்போ, எங்கே அடுத்த சந்திப்பு என்பதே பலரது கேள்வியும். என்னைப் பொறுத்தவரை அதிகமான பதிவர்கள் கொழும்பிலே இருப்பதால் கொழும்பிலே ஏற்பாடு செய்வது நல்லது. நான் எங்கே ஏற்பாடு செய்தாலும் வருவதற்கும் தயார்.

சில நண்பர்கள் அடுத்த சந்திப்புக்கான நடவடிக்கையிலே இறங்கியிருப்பதாக அறியமுடிகின்றது அவர்களோடு கைகோர்ப்போம்.

15 கருத்துரைகள்:

தங்க முகுந்தன் on 5 நவம்பர், 2009 12:37 pm சொன்னது…

ஊருக்கப் போய் உடனடியாகவே பதிவு போட்டுவிட்டீரே! வாழ்த்துக்கள்! இன்றுதான் இந்துவைப் பார்த்தேன்! அதற்கும் தனியாக பின்னர் கருத்துச் சொல்கிறேன்!

தங்க முகுந்தன் on 5 நவம்பர், 2009 1:05 pm சொன்னது…

இப்போது - இணையத்தில் எழுதுபவர்கள் எழுத்தாளர்களா? - என்ற கட்டுரையை தமிழ் வெளியில் - கண்டு படித்தேன். உங்களுக்கும் இது உதவியாக இருக்கும்! விரும்பினால் பாருங்கள் - http://www.aganazhigai.com/2009/11/blog-post.html

வேந்தன் on 5 நவம்பர், 2009 1:10 pm சொன்னது…

இரண்டாவது சந்திப்பு பலத்த எதிர் பார்ப்பை ஏற்ப்படுத்தி இருக்கு, சிறப்பாக நடக்க முன் கூட்டிய வாழ்த்துக்கள்.

சுசி on 5 நவம்பர், 2009 1:31 pm சொன்னது…

சந்திப்பு சிறப்பாக நடந்தமைக்கு வாழ்த்துக்கள் (விவாதங்களை பின்வைப்போமே)

படங்கள் போட்டிருக்கலாம் :)))

அடுத்த சந்திப்பில் கவனம் எடுங்கள்.

கனககோபி on 5 நவம்பர், 2009 5:57 pm சொன்னது…

என்னைத் தாத்தா என்று அழைத்தமைக்காக Blue cross இல் சீ சீ... மனித உரிமை நிறுவகத்தில் முறையிடப் போகிறேன்...
என்னப் பாத்தா 10 வயசுப்பிள்ளை உணர்வு வரேலயா?

சந்திப்புப் பற்றி நான் விரிவாகப் பதிவட்டுவிட்டு நிறைய இடங்களில் பின்னூட்டம் இட்டுக் களைத்துவிட்டேன்....

உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சியே...

யோ வாய்ஸ் (யோகா) on 5 நவம்பர், 2009 6:50 pm சொன்னது…

கடகட வென எழுதும் சந்ரு, நேரில் பேச கொஞ்சம் சுச்ச சுபாவம் உள்ளவரென தெரிந்து கொண்டேன். உங்களை கதைக்க வைக்க சுபாங்கனும், கோபியும் ரொம்ப பிரயத்தனப்பட்டார்கள் என நினைக்கிறேன்.

எனக்கு சந்திப்பில் கிட்டிய ஏமாற்றத்தை ஒதுக்கிவிட்டு உங்களில் பலரது முகம் காண கிடைத்த மகிழ்ச்சியோடு வந்து சேர்ந்தேன்..

SShathiesh on 5 நவம்பர், 2009 8:13 pm சொன்னது…

நிச்சயமாக உங்களை பார்த்து நான் அவனா நீங்கள் என நினைத்தேன். என் கற்பனையில் இருந்த நீங்கள் வேறு ஒருமாதிரி இதுதான் சந்த்ரு என அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டேன். அப்பாடா lol

Subankan on 5 நவம்பர், 2009 10:00 pm சொன்னது…

உங்களைப் பார்த்ததும் நம்ப முடியவில்லைத்தான். உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. இப்படிக்கு அன்புத் தம்பி

ஆ.ஞானசேகரன் on 5 நவம்பர், 2009 11:51 pm சொன்னது…

பகிர்வுக்கு நன்றி நண்பா

ilangan on 6 நவம்பர், 2009 3:12 am சொன்னது…

சரியாச் சொன்னீங்க தாத்தா மேட்டர்.
இன்றிலிருந்து தாத்தா என அன்போடு பதிவர் கோபி அழைக்கப்படுவார்.
இதை பச்சிளம் பாலகர் சங்கத்துக்கும் பகிரங்கமாக அறிவிக்கிறோம்.
ஒருவேளை கோபி சங்கத்திலிருந்து நீக்கப்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு.ஃ

தியாவின் பேனா on 6 நவம்பர், 2009 3:32 am சொன்னது…

சரியாச் சொன்னீங்க

ஜெஸ்வந்தி on 6 நவம்பர், 2009 3:59 am சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

Dr.எம்.கே.முருகானந்தன் on 6 நவம்பர், 2009 3:59 am சொன்னது…

பதிவிற்கு நன்றி

ஸ்ரீராம். on 6 நவம்பர், 2009 6:37 pm சொன்னது…

அன்பானவர்கள் சந்திப்பில் அனுபவங்கள் வளர்ந்து நட்பு மலர்ந்து மேலும் மேலும் அனுபவ மலர்கள் பூக்கட்டும்.

கனககோபி on 7 நவம்பர், 2009 2:35 am சொன்னது…

// ilangan கூறியது...
சரியாச் சொன்னீங்க தாத்தா மேட்டர்.
இன்றிலிருந்து தாத்தா என அன்போடு பதிவர் கோபி அழைக்கப்படுவார்.
இதை பச்சிளம் பாலகர் சங்கத்துக்கும் பகிரங்கமாக அறிவிக்கிறோம்.
ஒருவேளை கோபி சங்கத்திலிருந்து நீக்கப்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. //

எனக்கெதிராக ஒரு குழுவே கிளம்பியிருக்கிறதே....

என் சங்கத்திலிருந்து என்னை விலக்குவதா?
ஒரே நகைச்சுவை போங்கள்.....

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)
Related Posts with Thumbnails
Blogger Widget:Page Navigation

என்னைப் பற்றி

எனது புகைப்படம்
யோகராஜா சந்திரகுமார்
பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் சமூகத்துக்கு ஏதாவது செய்யத்துடிப்பவன்.
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

இதுவரை வந்தவை

  • ▼  2009 (140)
    • ►  December (10)
      • சந்தோசத்தில் வேட்டைக்காரன் விஜய்
      • வேட்டைக்காரன் வேட்டையாடுவானா? வேட்டையாடப்படுவானா?
      • நம்மவர்கள் சந்தோசத்தில்
      • இலங்கை பதிவர்கள் சிலர் தலை மறைவு. தேடுகிறது பதிவுல...
      • என்னடா உலகமிது
      • வேட்டைக்காரனுக்கான எதிர்ப்பலைகளும். மறக்க முடியாத ...
      • இணைய அரட்டையில் இப்படியும் நடக்கிறது
      • தமிழ் மொழி தமிழ் மொழியாகவே இருக்கிறதா?.
      • இப்படியும் சில ஆசிரியர்கள்...
      • பேச்சுத் தமிழுக்கு இனிமை சேர்க்கும் "கா"
    • ▼  November (19)
      • என்னைக் கதை சொல்ல சொன்னால்....
      • இன்றைய சிறுவர்களின் கல்வி நிலைதான் என்ன?
      • நமக்காக நாம். மீண்டும் சந்திப்போம்.
      • இவர் பின்னால் ஒரு கூட்டமே இருக்கு
      • இப்படியெல்லாம் நடக்கிறது..
      • திருந்துவார்களா இவர்கள்
      • தமிழ் மொழியை கொலை செய்து வளர்ந்து வரும் தமிழ் சினி...
      • மகிந்த ராஜபக்ஷ அவர்களும் ஆயிரம் ரூபாவும்
      • வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில்
      • காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனை...
      • இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்
      • நாளைய தீர்ப்பு முதல் வேட்டைக்காரன் வரை... இளைய தள...
      • கேள்விக்கென்ன பதில்
      • இப்படியும் பேசலாம்
      • இவர்கள்தான் அவர்கள்
      • கொம்பு முளைத்த பதிவர்கள் யார்?
      • தமிழர்களாலேயே பறிபோகும் தமிழர் உரிமைகள்
      • நீங்கள் எந்த உலகத்தில் இருந்தீர்கள் - கலைஞருக்கு ஒ...
      • எல்லோராலும் அவதானிக்கப்படும் இலங்கைப் பதிவர்கள்
    • ►  October (11)
      • எங்கள் சந்திப்பு நேரடி ஒலி, ஒளிபரப்பு.... பார்க்க ...
      • எவரும் மறந்திடவேண்டாம்.
      • இலங்கையின் தமிழ் ஊடகங்களும் வலைப்பதிவர்களும்.
      • கிராமியத் தெய்வ வழிபாடும் மூட நம்பிக்கைகளும்
      • அந்தரங்கம் என்றால் என்ன?
      • மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்
      • தொல்லை தரும் தொலைபேசிக் கலாச்சாரம்...
      • சரியா? தவறா? ஒண்ணுமே புரியல்ல
      • கிழக்கை நேசிக்கும் ஊடகங்கள்.
      • கிழக்கிலங்கையில் சுதந்திரம் பெற்ற அரசியல்வாதிகள்
      • நாளைய தலைவர்களின் இன்றைய நிலை..
    • ►  September (18)
      • எவனோ ஒருவன் உங்களில் ஒருவனாய்.
      • உன் காதலுக்காய் பகவானாகிறேன்
      • மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துகின்றார்களா?
      • நானும் அரசியலுக்கு வரப்போகின்றேன்.
      • கேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிற...
      • திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப் பார்த்தபடி அலுப்ப...
      • இதுவும் பெண்ணடிமைத் தனமல்லவா?
      • மட்டக்களப்பில் நடப்பதென்ன...
      • என்னவென்று சொல்வேன்...
      • இலங்கை அனானிகள் சந்திப்பு இன்று பல முக்கிய விடயங்க...
    • ►  August (23)
    • ►  July (38)
    • ►  June (14)
    • ►  May (7)

இப்படியும் பார்க்கலாம்

  • அந்தரங்கம் (1)
  • அனானிகள் (2)
  • அனுபவம் (2)
  • அரசியல் (4)
  • அரட்டை (1)
  • ஆசிரியர்கள் (1)
  • ஆரம்பம் (1)
  • இணையம் (2)
  • இந்து (2)
  • இருக்கிறம் (4)
  • இலங்கை (51)
  • ஊடகங்கள் (1)
  • ஊடகம் (9)
  • ஏமாற்று (2)
  • கடவுள் (4)
  • கடிதம் (1)
  • கண்டுபிடிப்பு (1)
  • கலாசாரம் (3)
  • கலாசாரம். (1)
  • கலாசாரம். கலைவிழா (1)
  • கலாச்சாரம் (3)
  • கலை (7)
  • கலைகள் (2)
  • கலைஞர் (1)
  • கலைஞர்கள் (5)
  • கல்யாணம் (1)
  • கல்லூரி (1)
  • கல்வி (4)
  • களுதாவளை (1)
  • கவிதை (19)
  • கவிதைகள் (2)
  • காதல் (2)
  • கிராமம் (4)
  • கிழக்கு (2)
  • கெளரி விரதம் (1)
  • சதீஸ் (1)
  • சந்திப்பு (7)
  • சமயம் (7)
  • சாகித்திய விருது (1)
  • சாமியார்கள் (1)
  • சிந்தனை (1)
  • சினிமா (5)
  • சிறுவர்கள் (8)
  • சிறுவர்த்தினம் (1)
  • செய்திகள் (3)
  • தமிழர் (1)
  • தமிழர்கள் (2)
  • தமிழ் (2)
  • தமிழ் இலங்கை (1)
  • தமிழ் மொழி (2)
  • தமிழ்மொழி (11)
  • திருட்டு (1)
  • தேவதை (1)
  • தொடர் பதிவு (1)
  • தொடர்பதிவு (4)
  • தொலைக்காட்சி (1)
  • தொலைபேசி (1)
  • தொழினுட்பம் (3)
  • நகைச்சுவை (3)
  • நண்பர்கள் (5)
  • நாகரீகம் (1)
  • நாணயம் (1)
  • நினைவுகள் (1)
  • பகவான் (1)
  • படங்கள் (7)
  • பணம் (1)
  • பதிவர் (3)
  • பதிவர் சந்திப்பு (4)
  • பதிவர்கள் (1)
  • பதிவர்சந்திப்பு (1)
  • பதிவுலகம் (11)
  • பழமொழி (1)
  • பாடல்கள் (1)
  • பார்வைகள் (11)
  • பிறந்தநாள் (1)
  • புல்லட் (1)
  • பெண் (1)
  • பெண்கள் (4)
  • பெண்ணடிமை (1)
  • பேச்சுத்தமிழ் (2)
  • பேச்சுத்தமிழ் | (1)
  • மட்டக்களப்பு. (1)
  • மதம் (1)
  • மலையகம் (1)
  • மிருகங்கள் (1)
  • மூட நம்பிக்கை (2)
  • மேல்நாடு (1)
  • மொக்கை (4)
  • லோஷன் (2)
  • வந்தி (1)
  • வலைப்பதிவர் (4)
  • வலைப்பதிவு (1)
  • வலையுலகம் (1)
  • வானொலி. கே.எஸ்.ராஜா (1)
  • விஜய் (4)
  • விரதம் (1)
  • விருது (5)
  • விவாதம் (3)
  • வேட்டைக்காரன் (2)
  • வேட்டைக்காரன். (1)

நண்பர்களாகலாம்

Yokarajah Shanthru

Create Your Badge
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.?????10 .com ]
இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு

உங்களோடு இவர்களும்


free counter

எங்கிருந்து வந்தவர்கள்

free counters

வந்து சென்றவர்கள்

free counter
web counter

எனது ஏனைய பதிவுகள்

  • இந்து
    பேசாத பிள்ளைகளை பேச வைப்பவர்
    3 வாரங்களுக்கு முன்
  • வண்ணங்கள்
    உலகமென்றால் இப்படியெல்லாம் இருக்கும்
    5 வாரங்களுக்கு முன்
  • இலங்கை தமிழ் வலைப்பதிவர்கள்
    வெளிநாடுகளில் இருந்து பதிவிடும் இலங்கைப் பதிவர்களுக்கு...
    3 மாதங்களுக்கு முன்
  • சொந்தங்கள்
    வெளிநாடுகளில் இருந்து பதிவிடும் இலங்கைப் பதிவர்களுக்கு...
    3 மாதங்களுக்கு முன்

இங்கேயும் போகலாம்

  • ஐந்தறைப்பெட்டி
    வேட்டைக்காரன் தோற்றுவிட்டால்?
    1 மணிநேரம் முன்பு
  • LOSHAN - லோஷன்
    யுவராஜ் - வடை போச்சே.. சங்கா - நான் ரெடி
    1 மணிநேரம் முன்பு
  • சிந்தனை சிறகினிலே
    தொடங்கிடுங்கள்
    3 மணி நேரத்திற்கு முன்
  • பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா
    * கோடீஸ்வர வர்த்தகரான ராஜ் ராஜரட்ணத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
    4 மணி நேரத்திற்கு முன்
  • SShathiesh
    வேட்டைக்காரன் வென்றுவிட்டால்?
    4 மணி நேரத்திற்கு முன்
  • திருத்தமிழ்
    இந்திய இந்தியனும் மலேசிய இந்தியனும்
    17 மணி நேரத்திற்கு முன்
  • ஈழத்து முற்றம்
    ஒதிய மரத்தால விழுந்தவன்
    22 மணி நேரத்திற்கு முன்
  • நிலா அது வானத்து மேல!
    என்னோடு பேச வா ...
    1 நாளுக்கு முன்
  • எழுத்தோசை
    நானும் வீராங்கனை தான்
    1 நாளுக்கு முன்
  • என் உளறல்கள்
    ஹாட் அண்ட் சவர் சூப் 16-12-2009
    1 நாளுக்கு முன்
  • பிரியமுடன்......வசந்த்
    வரன் கடை...!
    1 நாளுக்கு முன்
  • கடலேறி
    வேட்டைக்காரன் புறக்கணிப்பு - நண்பனுக்கு கடிதம்
    1 நாளுக்கு முன்
  • SASHIGA
    தேங்காய் கட்லெட்
    1 நாளுக்கு முன்
  • Random Harvest
    பாவம் புல்லட்... விட்டுவிடுங்கள்....
    2 நாட்களுக்கு முன்
  • கண்டதும் சுட்டதும்
    கண்ணால் கண்டதை விட...
    2 நாட்களுக்கு முன்
  • யாவரும் நலம்
    திசம்பர் 10.
    2 நாட்களுக்கு முன்
  • க.கோபி கிருஷ்ணா.
    இலங்கைப் பதிவர்களின் நட்புமிகு சந்திப்பு...
    3 நாட்களுக்கு முன்
  • அன்புடன் அருணா
    ரெண்டாவதாக.....
    3 நாட்களுக்கு முன்
  • Unchal
    Miles to go before I sleep
    3 நாட்களுக்கு முன்
  • புல்லட்டின் *டுமீல்*
    வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த இரண்டாவது இலங்கைப்பதிவர் சந்திப்பு
    3 நாட்களுக்கு முன்
  • அம்மா அப்பா
    நீ! ஒரு நாயகன் 2 (புகைப்படங்கள்)
    5 நாட்களுக்கு முன்
  • நா
    பதிவர் சந்திப்பிற்கு முன் கங்கோன் பற்றி அறிதல்
    5 நாட்களுக்கு முன்
  • றேடியோஸ்பதி
    ரஜினி 60 - சிறப்பு "பா"மாலை
    5 நாட்களுக்கு முன்
  • வானம் வெளித்த பின்னும்...
    தொட்டுச் சென்றது ஒரு குடை...
    6 நாட்களுக்கு முன்
  • கிருத்தியம்
    ஐயப்பன் பஜனைப் பாடல்கள் (தொடர்ச்சி)
    6 நாட்களுக்கு முன்
  • கவிக் கிழவன்
    காதலியின் ஏக்கம்
    1 வாரத்திற்கு முன்பு
  • ஹாய் நலமா?
    புளக்கிங் சில சிந்தனைகளும் அனுபவங்களும்
    2 வாரங்களுக்கு முன்
  • ஆங்கிலம் - Learn English grammar through Tamil
    ஆங்கிலம் - இரண்டாம் ஆண்டு நிறைவு
    2 வாரங்களுக்கு முன்
  • உறு பசி
    இரண்டு கவிதைகள் .....
    2 வாரங்களுக்கு முன்
  • அருண் பிரசாத்
    மும்பைத் தாக்குதலுக்கு ஒரு வயசு!
    3 வாரங்களுக்கு முன்
  • யோ வொய்ஸ்
    அகதமாபாத் டெஸ்ட் போட்டி சதியா?
    3 வாரங்களுக்கு முன்
  • "விழியும் செவியும்"
    "அது " போல வருமா?...
    1 மாதத்துக்கு முன்
  • ”டொன்” லீ யின் பதுங்குகுழி
    தமிழ் பாட்டுப் பாடும் சிங்கை சீன மாணவர்
    1 மாதத்துக்கு முன்
  • சிந்து
    hostel இலிருந்து பார்
    2 மாதங்களுக்கு முன்
  • திருமன்றில்
    "திருமன்றில்" வணக்கமும் வரவேற்பும்
    1 வருடம் முன்பு
 

சந்ருவின் பக்கம் Copyright © 2009 WoodMag is Designed by Ipietoon for Free Blogger Template