Tuesday 3 July 2012

குடித்துவிட்டு கும்மாளமிடும் தமிழ் பெண்கள்



மேலே இருக்கின்ற படத்தினை மூஞ்சிப் புத்தகத்தில் ஒரு நண்பர் இணைத்திருந்தார். பலரும் பெண்களை குற்றம்சாட்டி கருத்திட்டிருந்தனர். பெண்கள் மது அருந்துதல் தவறா? எனக்குள் பல சந்தேகங்கள். பொதுவாகவே மது அருந்துவது தவறுதான் என்னிடமும் இல்லை. மது அருந்துபவர்களை மது அருந்துவதை தடுப்பதே என் எண்ணம்.

ஆனாலும் இப் படத்திற்கு போடப்பட்டிருக்கின்ற கருத்துக்களை வைத்தே இப்பதிவினை எழுதுகின்றேன். பெண்களை குட்டிச் சுவராக்க எங்களில் சில சமூகங்கள் நினைப்பதுண்டு. பெண்களை இரண்டாம் பட்சமாகவும் ஆண்களை முன்னிலைப்படுத்தியும் வருவதுண்டு. ஆண்கள் எதனைச் செய்தாலும் வீரனாகப் பார்க்கும் சமூகம் பெண்கள் எதனைச் செய்தாலும் தவறாக தூற்றுகின்றனர்.

ஒரு ஆணிண் மனைவி இறந்தால் மறு கணமே அவனுக்கு மறுமணம் செய்து வைக்க நினைக்கும் சமூகம் பெண்ணை மட்டும் மறுமணம் செய்ய விடுவதில்லை. விதவை எனும் மகுடம் சூட்டி வேடிக்கை பார்க்கின்றது. இவ்வாறு பல விடயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆண்களும் பெண்களும் சரிசமம் என்று சொல்லும் நாம் ஏன் பெண்களை வேறு படுத்தி பார்ப்பதுண்டு. பெண்களுக்கும் ஆசா பாசங்கள் இருக்கத்தானே செய்யும். பெண்கள் மட்டும் தமது ஆசாபாசங்களை ஏன் துறக்க வேண்டும். இந்தப் பெண்கள் மது அருந்துகிறார்கள் இது தவறா? ஒட்டு மொத்தத்தில் மது அருந்துவது தவறுதான் ஆனால் பெண்கள் மது அருந்துவதனை தவறு என்று ஒரு பக்க சார்பாக வாதிடுவது தவறு என நினைக்கினி்றேன்.

பெண்களுக்கும் கலாசார பண்பாடுகள் இருக்கின்றன என்று சொல்ல வருகின்றீர்களா? ஏன் ஆண்களுக்கு இல்லையா? குடித்துவிட்டு சமூகத்தை சீரழித்து தமது கலாசார பண்பாடுகளை காற்றில் பறக்கவிட்ட குடிகார ஆண்களே அதிகம். மானத்தைக்கூட காற்றில் பறக்கவிட்டு நிர்வாணமாக வீடுவந்த குடிகாரர்கள் எத்தனைபேர்.

ஆனால் குடித்தாலும் இவ்வாறான நடவடிக்கைகள் குறைவு. சந்தர்ப்ப சூழ்நிலைகளில் குடிக்கலாம் ஆனால் குடியே வாழ்க்கை என்று இருப்பவர்கள் பலர் ஆண்களே. பெண்கள் குடிப்பதற்கு அவர்களின் சமூகமே காரணம். இன்று எத்தனை குடும்பங்கள் பிள்ளை, குட்டி குடும்பத்தோடு குடித்து கும்மாளமிடுகின்றனர்.

ஒட்டுமொத்தத்தில் குடிப்பது தவறுதான் என்றாலும் பெண்கள் குடித்தால் பெரிதா தவறென்று குற்றம்சாட்டுவது சரியா?

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl