Sunday 3 July 2011

புலிகள் பயங்கரவாதிகளா? தீவிரவாதிகளா?

எனக்குள் சில சந்தேகங்கள் நீட்ட காலமாக இருக்கின்றன. பயங்கரவாதி தீவிரவாதி எனும் இரு சொற்களையும் நான் அறிந்த நாள் முதல் இந்த சந்தேகங்கள் இருந்து வருகின்றன.


குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்று பல நாடுகள் முத்திரை குத்தியிருக்கின்றன. என் சந்தேகங்கள் இதுதான்.


பயங்கரவாதம் என்பது என்ன தீவிரவாதம் என்பது என்ன இந்த இரண்டு சொற்பதங்களையும் புலிகளுக்கு பயன்படுத்தலாமா? தீவிரவாதிகள் தீவிரவாத கும்பல் என்றெல்லாம் பேசுகின்றனர்.

தீவிரவாதம் எனும் சொற்பதத்தை மோசமான ஒரு  சொற்பதமாக இங்கே பயன்படுத்தப்படுகின்றது. தீவிரவாதிகள் மிக மோசமானவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர்.

என்னைப் பொறுத்தவரை தீவிரவாதி என்பவன் தான் கொண்ட கொள்கையில் தீவிரமாக இருப்பவன் தீவிரவாதி. அவனது கொள்ளைகள் நல்லவையாக இருக்கலாம். அல்லது தீயவையாக இருக்கலாம்.

புலிகள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தீவிரமாகப் போராடியவர்கள்.  புலிகளுக்கு தீவிரவாதிகள் என்று சொல்வதில் தவறில்லை. ஒரு இனத்தின் உரிமைக்காக போராடியவர்களை இங்கே தீவிரவாதிகள் என்று சொல்லும்போது தவறானவர்களாகவே கருதுகின்றனர்.


 நல்ல கொள்கைகளுக்காக தீவிரமாக செயற்படுபவர்களையும் இங்கே தவறானவர்களாகவே பயங்கரமானவர்களாகவே கருதுகின்றனர். 

 தீவிரவாதம் என்பது என்ன? பயங்கரவாதம் என்பது என்ன?

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

25 comments: on "புலிகள் பயங்கரவாதிகளா? தீவிரவாதிகளா?"

Mohamed Faaique said...

திவிரவாதிகள் என்று சொல்லப் படிபவர்கள் எல்லோருமேஎ ஒரு இனத்துக்காக சமுதாயதுக்காக போராடுபவர்கள்தான்... அந்த போராட்டம் எப்படி பட்டது என்பதை வைத்துத்தான் முத்திரை குத்தப் படுகிறது... எனவே, புலிகளை தீவிரவாதிகள் , பயங்கரவாதிகள் என்பதில் குழப்பமில்லை.....
கடசி கட்டத்தில் தங்களை காத்துக் கொள்ள, சொந்த மக்களை கேடயமாக பாவித்த ஒரே இயக்கம் புலிகள்தான்....

Anonymous said...

ethu ellaam

Anonymous said...

தாம் கொண்ட செயலில் தீவிர ஈடுபாடோடு செய்பவர்கள் தீவிரவாதிகள் ...

ஹேமா said...

சந்ரு...தீவிரவாதம்,பயங்கரவாதம் பார்க்கும் அல்லது பாதிக்கப்படும் விதத்திலும் மாறுபடுகிறது.நம் நிலைமையும் அதேதான் !

Admin said...

//Mohamed Faaique கூறியது...

திவிரவாதிகள் என்று சொல்லப் படிபவர்கள் எல்லோருமேஎ ஒரு இனத்துக்காக சமுதாயதுக்காக போராடுபவர்கள்தான்... அந்த போராட்டம் எப்படி பட்டது என்பதை வைத்துத்தான் முத்திரை குத்தப் படுகிறது... எனவே, புலிகளை தீவிரவாதிகள் , பயங்கரவாதிகள் என்பதில் குழப்பமில்லை.....
கடசி கட்டத்தில் தங்களை காத்துக் கொள்ள, சொந்த மக்களை கேடயமாக பாவித்த ஒரே இயக்கம் புலிகள்தான்....//

சிந்திக்க வேண்டும்... உங்கள் கருத்து தொடர்பில் நிறையவே எழுத வேண்டும் அதனை பின்னர் ஒரு பதிவாகத் தருகிறேன்..

வருகைக்கும் கருத்துக்களுக்குகம் நன்றிகள்.

Admin said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

ரைட்டு..//

வருகைக்கும் கருத்துக்களுக்குகம் நன்றிகள்.

Admin said...

//கந்தசாமி. கூறியது...

தாம் கொண்ட செயலில் தீவிர ஈடுபாடோடு செய்பவர்கள் தீவிரவாதிகள் ...//

ஆனாலும் தீவிரவாதி என்பதனை தவறான மோசமானவர்கள் என்றே பலரும் கருதுகின்றனர். அவர்கள் செயல் நல்லதாக இருப்பினும்.

வருகைக்கும் கருத்துக்களுக்குகம் நன்றிகள்.

Admin said...

//ஹேமா கூறியது...

சந்ரு...தீவிரவாதம்,பயங்கரவாதம் பார்க்கும் அல்லது பாதிக்கப்படும் விதத்திலும் மாறுபடுகிறது.நம் நிலைமையும் அதேதான் !//

ம்...

வருகைக்கும் கருத்துக்களுக்குகம் நன்றிகள்.

மாலதி said...

//புலிகள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தீவிரமாகப் போராடியவர்கள். புலிகளுக்கு தீவிரவாதிகள் என்று சொல்வதில் தவறில்லை. ஒரு இனத்தின் உரிமைக்காக போராடியவர்களை இங்கே தீவிரவாதிகள் என்று சொல்லும்போது தவறானவர்களாகவே கருதுகின்றனரvery nice

மாலதி said...

வணக்கம் உங்களின் எது தீவிரவாதம் என்பது திவிரவ்தம் என்பதை அரசு இயந்திரம் எப்படி பொய்யான குற்ற சத்துகள் கூறி மக்களிடம் அறியாமையை புகுத்தி போராளிகளை உண்மையில் கேவலப்படுத்துவதன் நோக்கம் உண்மையில் தேசிய இனங்களின் தன்னிலை தீர்வு உரிமை பெற்று விடக்கூடாது என்ற வீணான கருத்தியல மக்களிடம் சென்று சறவே தீவிரவாதம் என்பதை கட்டு கதைகளாக கட்டி வைதிருக்க்றது இந்த அரசுகள் அனால் இந்த பயலுக எப்படி சக போரவனுவளோ தெரியலை தோழரே .

கவி அழகன் said...

வெள்ளை தோல் செய்தால் சனநாயகம் கருப்புதோல் செய்தால் தீவிரவாதம் பயங்கரவாதம்

Anonymous said...

புலிகள் திவிரவாதிகளே இறுதி நேரத்தில் தனதுமக்களை கேடயாமாக பயன் படுத்தியது என்பது தவறு உலகமே அந்தமக்களை கைவிட்டுவிட்டது ஆகவே தவறு செய்தது உலகமே இப்போது இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டபின் போர்க்குற்றவிசாரணை என்று நாடகமhடுகிறார்கள் புலிகள் இருக்கும்போது இரு தரப்பையும் விசாரித்து தீர்ப்பு வழங்கியிருக்கலாம் இப்போது ஒருதரப்பை மட்டும் விசாரிப்பதில் பயன்ஏது

மர்மயோகி said...

தன கொள்கையில் தீவிரமாக இருப்பவன் தீவிரவாதிதான்..
ஆனால் சொந்த இன தலைவர்களை கொல்பவன் பயங்கரவாதி
இந்தியாவிடம் உதவிப்பிச்சை எடுத்து, பின்பு இந்தியாவுக்கே துரோகம் செய்பவன் துரோகி
அகதியாக இருப்பது இங்கே..
பிச்சை எடுப்பது இங்கே..
வழிப்பறி, கொலை கொள்ளை, திருட்டு, பயங்கரவாதம் புரிவது இங்கே..
இவர்கள் தேச விரோதிகள்..
பயங்கரவாதிகள்..இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் லேட்டஸ்ட் தமிழ்பற்று வியாபாரிகளான தேச துரோகிகளும் பயங்கரவாதிகள்தான்..தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்..

ad said...

- இந்தியாவிடம் பிச்சை எடுத்து இந்தியாவுக்கு துரோகம் செய்தது துரோகியா? ஹலோ.....
தாங்கள் காங்க்ரஸ் ஆதரவாளனோ???

நான் கேட்கிறேன்-
உங்கள் குடும்பம் வறுமையில் இருக்கும்போது உங்களுக்கு உதவி வழங்கும் ஒருவர் வந்து, உங்கள் வீட்டில் புகுந்து,உங்கள் கண் முன்னால் தங்கையையோ அக்காவையோ கற்பழித்து,உங்கள் அம்மாவையும் அப்பாவையும் கொன்று,உங்கள் அண்ணாவையோ தம்பியையோ சித்திரவதைசெய்து,உங்களை தனக்கு அடிமையாக சேவகம் புரியும்படி சொன்னால்... அத்தனையையும் பார்த்துக்கொண்டு நீங்கள்-ஐயா எங்களுக்கு உதவி செய்தவரல்லவா-என்று நினைத்தபடி ஐயாவுடன் அன்புக்கரம் கோர்ப்பீர்களா? அல்லது மானம் ரோசம் உள்ள கௌரவமான மனிதனாக எதிர்த்து நிற்பீர்களா?

Anonymous said...

ஆனால் சொந்த இன தலைவர்களை கொல்பவன் பயங்கரவாதி
இந்தியாவிடம் உதவிப்பிச்சை எடுத்து, பின்பு இந்தியாவுக்கே துரோகம் செய்பவன் துரோகி
அகதியாக இருப்பது இங்கே..
பிச்சை எடுப்பது இங்கே..
வழிப்பறி, கொலை கொள்ளை, திருட்டு, பயங்கரவாதம் புரிவது இங்கே..
இவர்கள் தேச விரோதிகள்.."

கொஞ்சம் சொல்லமுடியுமா மர்ம யோகி.யார் வழிப்பறி, கொலை கொள்ளை, திருட்டு, பயங்கரவாதம் புரிகிறார்கள் என்று?கதைக்கும் போது யோசிக்க வேண்டும்.இந்தியா என்ன உதவி செய்தது?கத்தரிக்காய் உதவியா?மானம் கெட்ட இந்திய ராணுவம் எங்கள் பெண்களின் கற்பை சூறையாடியதும்,ஆண்,பெண் குழந்தை,முதியோர் என்ற பேதம் இல்லாமல் மிகவும் அநாகரிகமாக கொலை செய்ததும் தான் நீங்கள் செய்த உதவியோ?

மர்ம யோகி?நீயெல்லாம் தமிழனும் இல்லை!மனிதனும் இல்லை!

VILVA SHARES said...

விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்பதை நிரூபிக்க பல ஆதாரங்கள் உள்ளது, அகிம்சை முறையில் விடுதலைப் போராட்டத்தில் எடுப்பட்ட செல்வா அவர்களை கொலை செய்த ஒரே உதாரணம் போதும் இவர்கள் தீவிரவாதிகள் என்பதற்கு. எனக்கு தெரிந்து இலங்கை நண்பர்கள் பலர் விடுதலைப்புலிகளுக்கு பயந்து தங்கள் வாரிசுகளை மலேசியா, கனடா போன்ற நாடுகளில் கண்ணீருடன் படிக்கவைக்க அனுப்பியது பற்றி மிகநீண்ட கதை எழுதலாம்.

மேலும் தற்பொழுது விடுதலைப்புலிகள் பற்றி பேசி நேரத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு இலங்கையில் உள்ள அப்பாவி மக்களை காப்பது பற்றி யோசிங்களேன். விடுதலைப்புலிகள் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் இந்நேரம் தமிழர்களுக்கு விடுதலை நிச்சயம் கிடைத்திருக்கும்.

ad said...

தாங்கள் சொல்வது உண்மை.விடுதலைப்புலிகள் இல்லாவிட்டால் தமிழ்மக்களுக்கு எப்பொழுதோ விடுதலை கிடைத்திருக்கும்.
எனக்குக்கூட விடுதலை கிடைத்துவிட்டது,என்னைப்போல இன்னும் எத்தனையோ பேருக்கு விடுதலை கிடைத்துவிட்டது-2009/05/18 க்கு பிறகு ஒரேயடியாக இலங்கையை விட்டே விடுதலை கிடைத்துவிட்டது.
இந்த விடுதலையை திருப்பிப் பறிப்பதும் கடினம்.அந்தலவுக்கு நிரந்தரமான உறுதியான விடுதலை.
இனி பிறந்த மண்ணையே பார்க்கமுடியாத விடுதலை.
விடுதலைப்புலிகள் அவ்வலவு காலமும் அங்கிருந்ததால்தான் பிறந்த மண்னைவிட்டு விடுதலை கிடைக்கவில்லை.
அவர்கள் இல்லையென்றால் எப்போதோ.. எம்மினத்துக்கு கொதிக்கின்ற தார் நிறைந்த தொட்டிக்குள்ளும்,துப்பாக்கிமுனைகளிலும்,கத்தி முனைகளிலும்,உலகத்தைவிட்டே விடுதலை கிடைத்திருக்கும்.
நண்பரே..
உங்கள் வசனங்களை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் இலங்கையர் அல்ல என்று எண்ணத்தோன்றுகிறது.அப்படி நீங்கள் இலங்கையர் அல்லவாயிருப்பினும் உங்களுக்கும் இலங்கைத் தமிழர் பிரச்சனை சிறிதேனும் தெரிந்திருக்கிறதென்றால்,உலகெங்கும் இந்தப்பிரச்சனை இன்று ஓங்கி ஒலிக்கிறதென்றால் அந்த அளவுக்கு இதை கொண்டு சென்ற குரல் யாருடையது என்று தெரியுமா உங்களுக்கு?

jagadeesh said...

விடுதலைப் புலிகள் தீவரவாதிகள் தான், அதுல உங்களுக்கு 1% கூட சந்தேகம் வேண்டாம்.

Anonymous said...

"மேலும் தற்பொழுது விடுதலைப்புலிகள் பற்றி பேசி நேரத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு இலங்கையில் உள்ள அப்பாவி மக்களை காப்பது பற்றி யோசிங்களேன்"

ஓமோம்,அப்பாவி மக்கள் சாகும் போது காத்துக் கிழிச்சீங்க! உங்களைப் போன்ற அரை வேக்காடுகளுக்கு இலங்கைப் பிரச்சனையைப் பற்றி என்னவாவது தெரியுமா?ரஜினிக்கு எப்படி பால் ஊத்துவது என்று தெரியும்.உங்களை எல்லாம் தமிழன் என்று சொல்ல முடியாது.

முயல் பிடிக்கிற நாயை முகத்தைப் பார்த்தா தெரியும்.உங்களைப் பார்க்கும் போது தெரிகின்றது.
ஆப்பாவி மக்களை காப்பாற்றுவது பற்றி யோசிக்கிறாராம்.

Anonymous said...

இந்தியா நூறு வீதம் துரோகி.அதில் பூச்சியம் சதவீதம் கூட சந்தேகம் வேண்டாம்.

Anonymous said...

இலங்கையில் தமிழர் போராட்டம், தமிழருக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியிலும், அகிம்சை வழியிலுமே ஆரம்பமானது. 1977ம் ஆண்டில் மக்களே “தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தமிழீழம்” என வாக்களித்தவர்கள். இந்த வாக்கெடுப்பு ஜனநாயக ரீதியில் அமைந்தது. அதனை ஏற்றுக்கொள்ளாத இலங்கை இனவாத அரசு தனது பாசிச நடவடிக்கைகளால் தமிழரின் கோரிக்கைகளை நசுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனை எதிர்த்து தமிழர் தந்தை செல்வா தலைமையில் போராடினர். அந்தப் போராட்டம் அகிம்சை வழியிலேயே தொடர்ந்தது.

அந்த அகிம்சைவழிப் போராட்டம் எவ்வாறு ஆயுதப் போராட்டம் ஆனது என்பதை ஆய்வுசெய்து பார்த்தீர்களானால் தெரியும் யார் பயங்கரவாதி என்று.

அக்காலக்கட்டத்தில் இந்திய – ரசுயாவுடன் 20 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருந்தது. இலங்கையோ இந்தியாவுக்கும் ரசுயாவுக்கும் எதிரான அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டிருந்தது. இது அயல்நாடான இந்தியாவுக்கு அச்சுருத்தலாக அமைந்தது. இதனை எதிர்கொள்ள இந்தியா இலங்கையை மிரட்டி பணியவைக்கும் கைங்கரியத்தை நரித்தந்திர வழியில் முயன்றது. அதற்கு இலங்கையில் தமிழரால் மேற்கொள்ளப்பட்டு வந்த அகிம்சைப் போராட்டத்தை, ஆயுதப்போராட்டமாக மாற்றி அப்பாவி இளைஞர்களின் கையில் ஆயுதத்தைக் கொடுத்து, இலங்கை அரசுக்கு எதிராக தூண்டிவிட்டது. அதற்காக ஆயுதங்களையும், ஆயுதப் பயிற்சிகளையும் கூட வழங்கியது. இவையெல்லாம் தமிழரின் நலனுக்காக அல்ல. இந்தியாவின் குறிகோள் இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுதான். இவ்வாறு இலங்கையில் தமிழ் இளைஞர்களின் கையில் ஆயுதங்களை வழங்கி தமது தென்னாசிய பிராந்திய நலன்சார்ந்த காய்நகர்த்தல்களை செய்தது இந்தியா தான். இதுவே பயங்காரவாத நடவடிக்கையாகும்.

அன்புடன்
பஸ்பன்

Anonymous said...

பகுதி 2
இந்தியாவின் இவ்வாறான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எல்லா இயக்கங்களுமே விலைபோனது. ஒரு இயக்கம் மட்டுமே இந்தியாவின் நரிதந்திரத்தை புரிந்து ஏற்க மறுத்தது. அது புலிகள் இயக்கம். அதனால் இந்தியா புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கத் தொடங்கியது. இதனை இந்தியாவின் அருந்ததி ராய் முதல் அரசியல் அவதானிகள் வரை நன்கு அறிவர். இலங்கைக்கு சமாதானம் மேற்கொள்ள என்று அனுப்பிய IPKF நடவடிக்கையைத் தொடர்ந்து ராஜிவ்-ஜே ஆர் ஒப்பந்தத்துடன் இலங்கை இந்தியாவுக்கு அடிபணிந்தது. இலங்கை இந்தியாவுக்கு அடிப்பணிய வேண்டும் என்றே இலங்கையில் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதம் வழங்கி, அகிம்சைப் போராட்டத்தை ஆயுதப்போராட்டம் ஆக்கிய, பயங்காரவாத இந்தியாவுக்கு தற்போது புலிகள் ஒரு தேவையில்லாத இயக்கமாகத் தோன்றியது. எனவே புலிகளை இந்தியப் படைகள் இலங்கை அரசிடமே கையளிக்கும் (நரி தந்திர) நடவடிக்கையில் இறங்கியது. அதனால் எழுந்ததே இந்திய-புலிகள் போர். இவ்வாறான இந்தியாவின் அரசியல் சுத்து மாத்துகளுக்கும், தமிழர் தரப்பை ஏமாற்றி IPKFபை அனுப்பு அப்பாவி மக்களை கொன்றொலித்த இந்தியாவின் பயங்கரவாத நடவடிக்கைகளின் பதிலடியே ராஜிவுக்கான மரணத் தண்டனை.

பஸ்பன்

Anonymous said...

பகுதி 3
தற்போதும் ராஜிவ் காந்தியின் மரணம் குறித்து பேசுவோர், இந்தியாவின் நரித்தந்திரங்களை, அதன் அயல்தேசங்களில் விதைத்துவரும் பயங்கரவாதங்களைப் பற்றி பேசுவதில்லை. உலகில் பயங்கரவாதத்தை அதன் அயல் தேசங்களில் விதைக்கும் ஒரு நாடு என்றால் அது இந்தியா தான். இந்தியா எப்போழுதுமே நேர்மையாக நடந்துக்கொண்டது கிடையாது. அதன் அரசியல் நகர்வுகளை நரிதந்திர வழியிலேயே நடாத்தி வருகின்றது. அதன் வளர்ச்சிக்கு எந்த ஒரு இனத்தை வேண்டுமானாலும் காவுகொடுக்கத் தயாராக உள்ளது. இன்று பலியானது இலங்கைத் தமிழர். நாளை தமிழகத் தமிழரையும் இந்தியா காவுக்கொடுக்க முன்வரும். இதனை அதன் அயல் தேசங்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே இந்தியா எனும் பயங்கரவாதத்தை தென்னாசியப் பிராந்தியத்தில் இருந்து அழித்து ஒழிக்க முடியும். இதனை சீனா போன்ற நாடுகள் உன்னிப்பாக கண்காணித்தே வருகின்றன. காலம் யார் பயங்கரவாதி என்பதை விரைவில் எடுத்துரைக்கும். காத்திருப்போம்! விழித்திருப்போம்!!

பஸ்பன்

a.jeyakumar said...

புலிகள் பயங்கரமான படு மோசமான மன்னிக்க முடியாத பயங்கரவாதிகள்தான் எந்த தமிழ் மகளின் விடியலுக்காக ஆயுதம் ஏந்தினார்களோ அந்தத் தமிழ் மகளுக்கு எதிராக ஆயுத அடக்குமுறை புலிகளின் தாகம் தமிழ் மக்களின் இரத்த தாக்கமாக மாறியது தமிழனை தமிழனே டயர் போட்டு எரித்து சாதனை படைத்த படு மோசமான பயங்கரவாதிகள்

Post a Comment