Saturday 24 April 2010

யாருக்காகக் காத்திருக்கிறேன்?...


காத்திருப்பின்
அருமை
இன்றுதான்
தெரிகிறது
உன்னோடு
வரும் - உன்
தோழி வரவில்லையே.....

உன்னோடு - இன்று
நான் பேசிய
ஒரு சில
நிமிடங்கள்- பல
வருடங்கள்
பேசியதுபோல்
வாழ்க்கையே
வெறுத்துவிட்டது - என்
அருகில் - உன்
தோழி இல்லை
என்பதனால்....

இனிமேலாவது -நீ
வரவில்லை
என்றாலும் - உன்
தோழியை
அனுப்பிவிடு
அவளுக்காக
காத்திருக்கிறேன்.....

*************************************

நேற்று - நீ
சொன்னாய் - என்
இதயம்
பிடித்திருக்கிறது
என்று - இன்றுதான்
புரிந்து கொண்டேன்
நேற்றைய
என் கவிதையின்
தலைப்பு
இதயம் என்று....

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

6 comments: on "யாருக்காகக் காத்திருக்கிறேன்?..."

முனைவர் இரா.குணசீலன் said...

நான் எதிர்பாராத காத்திருத்தல்..

Anonymous said...

இதயமே இல்லாத காத்திருப்பு முந்தைய கவிதைக்கு தலைப்பு வைத்தது இதயமென்று....

ஹேமா said...

நேற்று நல்லாத்தானே காதல் இருந்தது.சந்ரு...போற போக்குச் சரில்லையடா மோனே !

Ramesh said...

அண்ணே உன்ன நடக்குதுன்னு சொல்லுங்கோ ... சொல்லாத எதுவும் செல்லாது.. ஹிஹிஹி

ஸ்ரீராம். said...

என்ன ஊடலா..?

கலா said...

இனிமேலாவது -நீ
வரவில்லை
என்றாலும் - உன்
தோழியை
அனுப்பிவிடு
அவளுக்காக
காத்திருக்கிறேன்.....\\\\\\

உங்கள்{சிலர்} வர்க்கத்தினர்
இப்படித்தானென கவிதையில்
வேறு... காட்ட வேண்டுமா?
காதலுக்கு மதிப்பேயில்லையப்பா!!
=======

இன்றுதான்
புரிந்து கொண்டேன்\\\\
இப்பவாவது நாங்கள்
கற்பூரமென்றும்....

நீங்கள் எரிய முற்பட்டு விட்டுவிட்டு
பின்னெரியும் மின் விளக்கைப் போலென...

Post a Comment