Saturday 30 May 2009

இலங்கையில் தொடரும் அடாவடிகளும் அட்டூழியங்களும்...

இன்று இலங்கையில் அதிகம் மலிந்து இருப்பது கொலை, களவு, ஆட்கடத்தல், சிறுவர் இல்லங்கள், அகதி முகாம்கள். இப்படி கெட்டவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம் இவைகளை பார்க்கும் பொது ஏன் இலங்கையில் பிறந்தோம் என்றாகி விட்டது. அதுவும் என் தமிழனாய் பிறந்தோம் இன்று நினைக்க தோன்று கின்றது...

அண்மைய நாட்களில் நடந்த சில சம்பவங்களை இந்த பதிவினுடாக தருகின்றேன்.

சித்திரை மாதம் என்றாலே தமிழர்கள் வாழ்வில் வசந்த காலம்தான் இலங்கையில் அது இல்லை இன்று நினைக்கின்றேன். விடயத்துக்கு வருகிறேன். சித்திரைமாதம் என்றதும தமிழர்களது கலாச்சார நிகழ்ச்சிகள் விளையாட்டு விழாக்கள் என்பன நடப்பது அனைவரும் அறிந்தது. கிராமங்கள் என்றால் சொல்லவே தேவை இல்லை. ஒரே குதுக்கலாம்தான்.

நானும் கிராமப்புறத்தை சேர்ந்தவன்தான். கிராமிய கலை கலாச்சாரங்கலொடு பின்னிப்பினைந்தவன்.ஈடுபாடு அதிகம் என்று சொல்லலாம்.

எனது கிராமத்தில் ஒரு விளையாட்டு விழாவிற்கு எனக்கும் அழைப்பு வந்திருந்தது.அந்த விளையாட்டு விழா மிக பிரமாண்டமான முறையில் அன்றைய தினத்துக்கு முன் தினமே விளையாட்டு மைதானம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இத்தநைக்கும் காரணம் அது ஒரு விளையாட்டு விழா மட்டுமன்றி ஒரு கலாச்சார விழாவிம் கூட. அது ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் பல கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்குபற்ற இருந்தார்கள்.

நானும் கலை நிகழ்வு நடை பெறுவதற்கு முதல் நாளே சென்று துரிதமான ஏற்பாடுகள் நடை பெறுவதை பார்த்தவன். மிக அழகாக பார்வையாளர்கள் இருந்து பார்ப்பத்தட்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

கலை நிகழ்வு இடம்பெறும் தினம் சென்றேன். முதல் நாளில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் எதுவும் இல்லை. அனைத்தும் அலங்கோலமாக அடித்து நொறுக்கப்பட்டு இருந்தன.

அங்கெ நின்றவர்களிடம் விசாரித்தேன். பலரும் பல தரப்பட்ட கருத்துக்களை சொன்னார்கள்.

இத்தனைக்கும் முதல் ஒன்றை சொல்லவேண்டும் நிகழ்வு நடைபெற இருந்த விளையாட்டு மைதானம் கிராமத்துக்கு சொந்தமல்ல பிரதேச சபைக்கு சொந்தமானது. இந்த நிகழ்வில் பல கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கு பெறுகின்றார்கள்...

அங்கெ நின்றவர்கள் சொன்ன கருத்துக்கள்......

கிராமத்தின் தலைவருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை....
கிராமத்தில் உள்ள விளையாட்டு கழகத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை...
கிராமத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை...
இதனால்தான் யாரோ இப்படி இரவோடு இரவாக செய்து இருக்கிறார்கள்... என்று சொன்னார்கள் எனக்கு சிரிப்புத்தான் வந்தது..

பொது விளையாட்டு மைதானத்தில் பிரதேச சபையிடம் அனுமதி பெற்று நடைபெறும் விழாவுக்கு கட்டாயம் கிராமத்தின் தலைவருக்கோ விளையாட்டு கழகத்துக்கோ அழைப்பிதழ் கொடுக்க வேண்டியது அவசியமா. எதை முடிவெடுக்க வேண்டியது ஏற்பாட்டாளர்கள் அல்லவா.

இத்தநைக்கும் முன் இந்த அரச சார்பற்ற நிறுவனம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லாவிதமான வசதிகளுடன் வீடுகளை அமைத்துக்கொடுத்த ஒரு நிறுவனமாகும் பல சமுக செயற்பாடுகளில் ஈடுபடும் ஒரு நிறுவனம்...

இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான செயலால் அந்த விழா இடம்பெறவில்லை அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். இப்படி காட்டுமிராண்டித்தனமான வேலை செய்பவர்கள் இருக்கத்தான் வேண்டுமா.

நேற்று நடந்த ஒரு சம்பவம்...

ஒரு கிராமம் அங்கே ஒரு சாதாரண குடும்பம் தாய் தந்தை வயது போய் விட்டது இதனால் மகள் ஒரு சிறு கடை வைத்து நடாத்தி அன்றாட வாழ்க்கையை நடாத்திக்கொண்டு இருக்கிறார்.

இந்த கடையில் சுதந்திரமாக ஆயுதங்களுடன் நடமாடி மக்களை விரட்டும் சிலர் தொலைபேசி அட்டைகளை கடனுக்கு வாங்குவதுண்டு பல ஆயிரம் ரூபாய்கள் அவர்கள் கொடுக்கவேண்டி இருக்கிறது நேற்று கடனுக்கு கேட்டபொழுது அந்த பெண் கடனுக்கு இல்லை. ஏற்கனவே நீங்கள் நிறைய காசு தர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

அவர் கடனுக்கு இல்லை என்று சொன்னதனால் அவருக்கு கிடைத்த தண்டனை அவர் 1 ம திகதிக்குமுன் கடையை முட வேண்டும்

இது எந்த விதத்தில் ஞாயம் அவர் கடன் வாங்கி கடை வைத்து நடத்துகின்றார். இந்த கடயினால்தான் தமது அன்றாட வாழ்க்கை போகிறது.
அவர் தட்கொலை செயும் அளவில் இருக்கிறார். இந்த அடாவடித்தனங்களை கேட்க யாரும் இல்லையா....


Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "இலங்கையில் தொடரும் அடாவடிகளும் அட்டூழியங்களும்..."

gayathri said...

இலங்கையில் தொடரும் அடாவடிகளும் அட்டூழியங்களும்..."

ithu eppa than mudiumo

Admin said...

//இலங்கையில் தொடரும் அடாவடிகளும் அட்டூழியங்களும்..."

ithu eppa than mudiumo//

பொறுத்திருந்து பார்ப்போம் என்னதான் நடக்குது என்று.....

நன்றி காயத்ரி உங்கள் வருகைக்கு....

தொடருங்கள்...

Post a Comment